புறநானூறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புறநானூறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புறநானூறு - கடவுள் இலவே! - முரண்

சங்ககாலத்தில் கடவுள் என்பது இயற்கை வழிபாடே என்ற கருத்தை வலியுறுத்த இந்தப் பாடலை பலர் மேற்கோள் கட்டுவதுண்டு.

புறநானூறு - 335. கடவுள் இலவே! - மாங்குடி கிழார் (அ) மாங்குடி மருதனார் 

அடலருந் துப்பின் .. .. .. ..
.. .. .. .. குருந்தே முல்லை யென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே,
சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையொடு             5
இந்நான் கல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,                 10
கல்லே பரவின் அல்லது, .. .. .. .. .. .. .. ..
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

பொருளுரை: குருந்து [குறிஞ்சி], முல்லை. (மருதம், நெய்தல்) என்னும் நான்கு பூக்களைத் தவிர வேறு வாழ்வியல் திணையைக் குறிக்கும் பூக்கள் இல்லை. வரகு, தினை, கொள், அவரை என்னும் நான்கு அல்லாத வேறு உணவுப்பொருள் அந்த மூதில் குடிக்கு இல்லை. துடியன், பாணன், பறையன், கடம்பன் என்னும் நான்கு இனக் குடிமக்கள் அல்லது அந்த மூதில் மக்களுக்கு உறவினர் வேறு குடிமக்கள் இல்லை. இப்படி எல்லாம் நான்கு வகைப்பட்டதாக இருக்கும்போது அவர்களுக்குக் கடவுள் மட்டும் ஒன்றே. அந்த ஒன்றும் நடுகல். வாளேந்திப் போர்க்களம் சென்று பகையரசரின் களிற்றை வீழ்த்திவிட்டு மாண்டுபோனவனுக்கு நடப்பட்ட கல் அது. அதற்கு அவர்கள் பூவைப் போட்டுப் பூசை செய்வது போல நெல்லை ஒவ்வொன்றாகப் போட்டுப் பூசை செய்வர்.

பொதுவாக இறைவன் பற்றிய கருத்துக்கள் நூல்களுக்கு இடையே அலல்து சமையங்களுக்கு இடையே முரண் படும். ஒரே பாடலில் முரண்படுவதாக இந்த பொழிப்புரை சொல்கிறது.

கடவுள் ஒன்றே என்று கூறும் இந்த முழுமையாக கிடைக்கப் பெறாத பாடல், அந்த கடவுள் என்று நடுகல் என்றும் அதை விடுத்தால் வேறு கடவுள் இல்லை என்று கூறுகிறது என்பதாக பொழிப்புரை வழங்கப் பட்டுள்ளது.  

முரண்: கடவுள் ஒன்று என்ற பின் அது நாடு கல் என்று கூறுவது எப்படி பொருந்தும்? வாளேந்தி போரிட்டு மாண்டவன் ஒரே ஒருவன் தான் இருந்தானா? அவருக்கு நடப்பட்ட ஒரே ஒரு நடுகல் தான் இருந்ததா? 

இதை இப்படி புரிந்து கொள்வதா? அல்லது ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதா? 

மாங்குடி கிழார் கடவுள் இல்லவே இல்லை என்றும், அல்லது கல்தான் கடவுள் என்றும் கூறவில்லை. நெல்லை உதிர்க்கும் "கடவுளும் இலவே" என்கிறார். அதாவது வேறு ஒன்று கடவுளாக உள்ளது. அதோடு சேர்த்து நெல்லை உதிர்க்கும் இதையுமா கடவுள் என்கிறீர்; என்கிறார். (உம் விகுதி சிறப்பு.)