ஒவ்வொருவரும் பெறவேண்டிய பேறுகள் நான்கு என்பது ஒருவகைக் கோட்பாடு. அறம், பொருள், இன்பம், வீடு என்பன அந்த நான்கு பேறுகள். இவற்றுள் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பேறுகளைப் பெற்றுத் துய்க்கும் வழிகள் பற்றித் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் தெரிவிக்கிறது. வீடுபேறு நெறி பற்றித் தெரிவிக்கும் தனிநூல் ஔவையின் குறள். இந்நூலை திருமூலரின் திருமந்திரத்தின் சுருக்கம் எனக் கூறுவர். சைவ சமயக் கருத்துக்களைக் கொண்டது. திருக்குறளைப் போலவே இந்த நூலும் மூன்று பால்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பத்துப் பாடல்கள் கொண்ட 31 அதிகாரங்கள் இதில் உள்ளன. இதற்கு அவ்வையார் குறள் என்றும் பெயர் உண்டு.
திருக்குறள் கூறும் தவம், துறவு முதலானவை மக்கள் வாழ்வியலோடு தொடர்புடையவை, ஔவை குறள் கூறும் தவம் தன்னலம் பேணுவது ஆகும்.
1. வீட்டுனெறிப்பால்
1.மோட்சம் செல்லும் வழி - ஞானக் குறள்
| ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத் தோதிய நூலின் பயன். | 1 |
| பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந் தரமாறிற் றோன்றும் பிறப்பு. | 2 |
| ஓசை பரிசமுருவஞ் சுவை நாற்ற மாசை படுத்து மளறு. | 3 |
| தருமம் பொருள் காமம்வீடெனு நான்கு முருவத்தா லாய பயன். | 4 |
| நிலமைந்து நீர் நான்கு நீடங்கி மூன்றே யுலவை யிறண்டொன் றுவிண். | 5 |
| மாயன் பிரமனு ருத்திரன் மகேசனோ டாயுஞ்சிவ மூர்த்தி யைந்து. | 6 |
| மாலய னங்கி யிரவிமதி யுமையோ டேலும் திகழ்சத்தி யாறு. | 7 |
| தொக்குதிரத் தோடூன் மூளைநிண மென்பு சுக்கிலந் தாதுக்க ளேழு. | 8 |
| மண்ணோடு நீரங்கி மதுயொடு காற்றிரவி விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு. | 9 |
| இவையெல் லாங்கூடி யுடம்பாய வொன்றி னவையெல்லா மானது விந்து. | 10 |
2. உடம்பின் பயன் - ஞானக் குறள்
| உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா முடம்பினி லுத்தமனைக் காண். | 11 |
| உணர்வாவ வெல்லா முடம்பின் பயனே யுணர்க உணர்வு டையார். | 12 |
| ஒருபய னாவ துடம்பின் பயனே தருபயனாஞ் சங்கரனைச் சார். | 13 |
| பிறப்பினாற் பெற்ற பயனாவ தெல்லாந் துறப்பதாந் தூநெறிக்கட் சென்று. | 14 |
| உடம்பினா லன்றி யுணர்வுதா னில்லை யுடம்பினா லுன்னிய தேயாம். | 15 |
| மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால் ஈசனைக் காட்டு முடம்பு. | 16 |
| ஓசை யுணர்வுக ளெல்லாந் தருவிக்கும் நேசத்தா லாய வுடம்பு. | 17 |
| உயிர்க்குறுதி யெல்லா முடம்பின் பயனே அயிர்ப்பின்றி யாதியை நாடு. | 18 |
| உடம்பினாற் பெற்ற பயனாவ வெல்லாம் திடம்பட வீசனைத் தேடு. | 19 |
| அன்னத்தா லாய உடம்பின் பயனெல்லா முன்னோனைக் காட்டி விடும். | 20 |
3. உள்ளுடம்பின் (சூக்கும சரீரம்) நிலைமை - ஞானக் குறள்
| கற்கலாங் கேட்கலாங் கண்ணாரக் காணலா முற்றுடம்பா லாய வுணர்வு. | 21 |
| வெள்ளிபொன் மேனிய தொக்கும் வினையுடைய வுள்ளுடம்பி னாய வொளி. | 22 |
| சென்றுண்டு வந்து திரிதரு முள்ளுடம்பு என்றுங் கெடாத திது. | 23 |
| வருபய னுண்டு மகிழ்ந்துடனா நிற்கு மொருபயனைக் காட்டு முடம்பு. | 24 |
| அல்லற் பிறப்பை யகற்றுவிக்கு மாய்ந்தாய தொல்லை யுடம்பின் றொடர்பு. | 25 |
| நல்வினையுந் தீவினையு முண்டு திரிதருஞ் செய்வினைக்கும் வித்தா முடம்பு. | 26 |
| உள்ளுடம்பின் வாழ்வன வொன்பது மேழைக் கள்ள வுடம்பாகி விடும். | 27 |
| பொய்க்கெல்லாம் பாசனமா யுள்ளதற் கோர்வித்தாகு மெய்க்குள்ளா மாய வுடம்பு. | 28 |
| வாயுவினா லாய வுடம்பின் பயனே யாயுவி னெல்லை யது. | 29 |
| ஒன்பது வாசலுமொக்க வடைத்தக்கா லன்பதி லொன்றா மரன். | 30 |
4. நாடி தாரணை - ஞானக் குறள்
| 3எழுபத் தீராயிர நாடி யவற்றுள் முழுபத்து நாடி முதல். | 31 |
| 3நரம்பெனு நாடியிவை யினுக்கெல்லா முரம்பெறு நாடியொன் றுண்டு. | 32 |
| 3உந்திமுதலா யுறுமுடிகீழ் மேலாய்ப் பந்தித்து நிற்கும் பரிந்து. | 33 |
| 3காலொடு கையி னடுவிடத் தாமரை நூல்போலு நாடி நுழைந்து. | 34 |
| 3ஆதித்தன்றன் கதிர்போல வந்நாடிகள் பேதித்துத் தாம்பரந்த வாறு. | 35 |
| 3மெய்யெல்லாமாகி நரம்போ டெலும்பிசைந்து பொய்யில்லை நாடிப் புணர்வு. | 36 |
| 3உந்திமுதலாகி யோங்காரத்துட் பொருளாய் நின்றது நாடி நிலை. | 37 |
| 3 நாடிகளூடு போய்ப் புக்க நலஞ்சுடர்தான் வீடு தருமாம் விரைந்து. | 38 |
| 3நாடி வழக்கமறிந்து செறிந்தடங்கி நீடொளி காண்ப தறிவு. | 39 |
| அறிந்தடங்கி நிற்குமந் நாடிகடோறுஞ் செறிந்தடங்கி நிற்குஞ் சிவம். | 40 |
5. வாயுதாரணை - ஞானக் குறள்
| மூலத்திற்றோன்றி முடிவிலிரு நான்காகிக் கால்வெளியிற் பன்னிரண்டாங் காண். | 41 |
| இடைபிங் கலைகளி ரேசக மாற்றி லடையு மரனா ரருள். | 42 |
| அங்குலியான் மூடிமுறையா லிரேசிக்கிற் பொங்குமாம் பூரகத்தி னுள். | 43 |
| எண்ணிலியூழி யுடம்பா யிரேசிக்கி லுண்ணிலமை பெற்ற துணர்வு. | 44 |
| மயிர்க்கால்வழி யெல்லா மாய்கின்றவாயு வுயிர்ப்பின்றி யுள்ளே பதி. | 45 |
| இரேசிப்பது போலப்பூரித்து நிற்கிற் றராசுமுனை நாக்கதுவே யாம். | 46 |
| கும்பகத்தினுள்ளே குறித்தரனைத் தானோக்கிற் றும்பிபோ னிற்குந் தொடர்ந்து. | 47 |
| இரேச கபூரக கும்பக மாற்றிற் றராசு போனிற்குந் தலை. | 48 |
| வாயு வழக்க மறிந்து செறிந் தடங்கி லாயுட் பெருக்க முண்டாம். | 49 |
| போகின்ற வாயு பொருந்திற் சிவமொக்குந் தாழ்கின்ற வாயு வடக்கு. | 50 |
6. அங்கிதாரணை - ஞானக் குறள்
| அந்தத்தி லங்கி யழல்போலத் தானோக்கிற் பந்தப் பிறப் பறுக்கலாம். | 51 |
| உள்ளும் புறம்பு மொருங்கக் கொழுவூரிற் கள்ள மல மறுக்கலாம். | 52 |
| எரியுங் கழல்போல வுள்ளுற நோக்கிற் கரியுங்கன லுருவ மாம். | 53 |
| உள்ளங்கி தன்னை ஒருங்கக் கொழுவூறில் வெள்ளங்கி தானாம் விரைந்து. | 54 |
| உந்தியி னுள்ளே யொருங்கச் சுடர்பாய்ச்சி லந்தி யழலுருவ மாம். | 55 |
| ஐயைந்து மாய வகத்துளெரி நோக்கிற் பொய்யைந்தும் போகும் புறம். | 56 |
| ஐம்பது மொன்றுமழல் போலத்தா னோக்கி லும்ப ரொளியாய் விடும். | 57 |
| தூண்டும் சுடரைத் துளங்காமற் றானோக்கில் வேண்டுங் குறை முடிக்கலாம். | 58 |
| உள்ளத்தாலங்கி யொருங்கக் கொழுவூறில் மெள்ளத்தான் வீடாம் விரைந்து. | 59 |
| ஒள்ளிதா யுள்ள சுடரை யுறநோக்கில் வெள்ளியா மாலை விளக்கு. | 60 |
7. அமுததாரணை - ஞானக் குறள்
| அண்ணாக்குத் தன்னையடைத் தங்கமிர் துண்ணில் விண்ணோர்க்கு வேந்தனு மாம். | 61 |
| ஈரெண் கலையி னிறைந்தவமிர் துண்ணில் பூரண மாகும் பொலிந்து. | 62 |
| ஓங்காரமான கலசத்தமிர் துண்ணில் போங்காலமில்லை புரிந்து. | 63 |
| ஆனகலசத் தமிர்தை யறிந்துண்ணில் போனகம் வேண்டாமற் போம். | 64 |
| ஊறுமமிர்தத்தை யுண்டியுறப் பார்க்கில் கூறும் பிறப்பறுக்க லாம். | 65 |
| ஞான வொளிவிளக்கா னல்லவமிர் துண்ணில் ஆன சிவ யோகி யாம். | 66 |
| மேலையமிர்தை விளங்காமற்றா னுண்ணில் காலனை வஞ்சிக்க லாம். | 67 |
| காலன லூக்கங் கலந்த வமிர்துண்ணில் ஞான மதுவா நயந்து. | 68 |
| எல்லையி லின்னமிர்த முண்டாங் கினிதிருக்கில் தொல்லை முதலொளியே யாம். | 69 |
| நிலாமண்டபத்தி னிறைந்த வமிர்துண்ணில் உலாவலா மந்தரத்தின் மேல். | 70 |
8. அர்ச்சனை - ஞானக் குறள்
| மண்டலங்கள் மூன்று மருவவுட நிறுத்தி அண்டரனை யர்ச்சிக்கு மாறு. | 71 |
| ஆசனத்தைக் கட்டியரன் றன்னை யர்ச்சித்து பூசனைசெய் துள்ளே புணர். | 72 |
| உள்ளமே பீடமுணர்வே சிவலிங்கத் தெள்ளிய ரர்ச்சிக்கு மாறு. | 73 |
| ஆதாரத்துள்ளே யறிந்து சிவனுருவைப் பேதமற வர்ச்சிக்கு மாறு. | 74 |
| பூரித்திருந்து புணர்ந்து சிவனுருவைப் பாரித்தங் கர்ச்சிக்கு மாறு. | 75 |
| விளக்குறு சிந்தையான் மெய்ப்பொருளைக் கண்டு துளக்கற வர்ச்சிக்கு மாறு. | 76 |
| பிண்டதினுள்ளே பேரா திறைவனைக் கண்டுதா னர்ச்சிக்கு மாறு. | 77 |
| மந்திரங்களெல்லா மயங்காம லுண்ணினைந்து முந்தரனை யர்ச்சிக்கு மாறு. | 78 |
| பேராக்கருத்தினாற் பிண்டத்தி னுண்ணினைந் தாராதனை செய்யு மாறு. | 79 |
| உள்ளத்தினுள்ளே யுறப்பார்த்தங் கொண் சுடரை மெள்ளத்தா னர்ச்சிக்கு மாறு. | 80 |
9. உள்ளுணர்வு - ஞானக் குறள்
| எண்ணிலியூழி தவஞ் செய்திங் கீசனை உண்ணிலைமை பெற்ற துணர்வு. | 81 |
| பல்லூழி காலம் பயின்றனை யர்ச்சித்து நல்லுணர்வு பெற்ற நலம். | 82 |
| எண்ணற்கரிய வருந்தவத்தா லன்றே நண்ணப் படுமுணர்வு தான். | 83 |
| முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால் பின்னைப் பெறுமுணர்வு தான். | 84 |
| காயக்கிலேச முணர்ந்த பயனன்றே ஓயா வுணர்வு பெறல். | 85 |
| பண்டைப்பிறவிப் பயனாந் தவத்தினால் கண்டங் குணர்வு பெறல். | 86 |
| பேராத் தவத்தின் பயனாம் பிறப்பின்மை ஆராய்ந் துணர்வு பெறின். | 87 |
| ஞானத்தாலாய வுடம்பின் பயனன்றே மோனத்தா லாய வுணர்வு. | 88 |
| ஆதியோடொன்று மறிவைப் பெறுவதுதான் நீதியாற் செய்த தவம். | 89 |
| காடு மலையுங் கருதித்தவஞ் செய்தால் கூடு முணர்வின் பயன். | 90 |
10. பத்தியுடைமை - ஞானக் குறள்
| பத்தியா லுள்ளே பரிந்தரனைத் தானோக்கில் முத்திக்கு மூலமது. | 91 |
| பாடியு மாடியும் பல்காலும் நேசித்துத் தேடுஞ் சிவ சிந்தையால். | 92 |
| அன்பா லழுது மலறியு மாள்வானை யென்புருகி யுள்ளே நினை. | 93 |
| பூசனை செய்து புகழ்ந்து மனங்கூர்ந்து நேசத்தா லீசனைத் தேடு. | 94 |
| கண்ணா லுறப்பார்த்துக் காதலாற் றானோக்கில் உண்ணுமே யீச னொளி. | 95 |
| நல்லானப் பூசித்து நாதனென வுருகில் நில்லதோ வீச னிலை. | 96 |
| அடியார்க் கடியராயன் புருகித் தம்முள் படியொன்றிப் பார்த்துக் கொளல். | 97 |
| ஈச னெனக்கருதி யெல்லா வுயிர்களையும் நேசத்தால் நீ நினைந்துகொள | 98 |
| மெய்ம்மயிர் கூரவிருப்புற்று வேர்த்தெழுந்து பொய்ம்மையி லீசனைப் போற்று. | 99 |
| செறிந்தறிந்து நாடிச் செவ்விதா யுள்ளே அறிந்தரனை யாய்ந்து கொளல். | 100 |
11. அருள் பெறுதல் - ஞானக் குறள்
| அருளினா லன்றி யகத்தறி வில்லை அருளின் மலமறுக்க லாம். | 101 |
| இருளைக் கடிந்தின் றிறைவ னருளால் தெருளும் சிவசிந்தை யால். | 102 |
| வாய்மையாற் பொய்யா மனத்தினால் மாசற்ற தூய்மையா மீச னருள். | 103 |
| ஒவ்வகத்து ணின்ற சிவனருள் பெற்றக்கால் அவ்வகத்து ளானந்த மாம். | 104 |
| உன்னுங் கரும முடிக்கலா மொள்ளிதாய் மன்னுமருள் பெற்றக் கால். | 105 |
| எல்லாப் பொருளு முடிக்கலா மீசன்றன் தொல்லையருள் பெற்றக் கால். | 106 |
| சிந்தையு ணின்ற சிவனருள் பெற்றக்கால் பந்தமாம் பாச மறும். | 107 |
| மாசற்ற கொள்கை மதிபோலத்தான் றோன்றும் ஈசனருள் பெற்றக் கால். | 108 |
| ஆவாவென் றோதியருள் பெற்றார்க் கல்லாது தாவாதோ ஞான ஒளி. | 109 |
| ஓவாச் சிவனருள் பெற்றா லுரையின்றித் தாவாத வின்பந் தரும். | 110 |
2. திருவருட்பால்
12. நினைப்புறுதல் - ஞானக் குறள்
| கருத்துறப் பார்த்துக் கலங்காம லுள்ளத் திருத்திச் சிவனை நினை. | 111 |
| குண்டலியி னுள்ளே குறித்தரனைச் சிந்தித்து மண்டலங்கள் மேலாகப் பார். | 112 |
| ஓர்மின்கள் சிந்தையி லொன்றச் சிவன்றன்னைப் பார்மின் பழம்பொரு ளேயாம். | 113 |
| சிக்கெனத் தேர்ந்துகொள் சிந்தையி லீசனை மிக்க மலத்தை விடு. | 114 |
| அறமின்கள் சிந்தையி லாதாரத் தைச்சேர்ந் துறுமின்க ளும்முளே யோர்ந்து. | 115 |
| நித்தம் நினைத்திரங்கி நின்மலனையொன்றுவிக்கில் முற்றுமவ னொளியே யாம். | 116 |
| ஓசை யுணர்ந்தங்கே யுணர்வைப் பெறும்பரிசால் ஈசன் கருத்தா யிரு. | 117 |
| இராப் பகலன்றி யிருசுடர்ச் சிந்திக்கில் பராபரத்தோ டொன்றலு மாம். | 118 |
| மிக்க மனத்தால் மிகநினந்து சிந்திக்கில் ஒக்க சிவனுருவ மாம். | 119 |
| வேண்டுவோர் வேண்டும் வகைதான் விரிந்தெங்கும் காண்டற் கரிதாஞ் சிவம். | 120 |
13. தெரிந்து தெளிதல் - ஞானக் குறள்
| தேறித் தெளிமின் சிவமென்றே யுள்ளுணர்வில் கூறிய பல்குணமு மாம். | 121 |
| உண்டில்லை யென்று முணர்வை யறிந்தக்கால் கண்டில்லை யாகுஞ் சிவம். | 122 |
| ஒருவர்க் கொருவனே யாகுமுயிர்க் கெல்லாம் ஒருவனே பல்குணமு மாம். | 123 |
| எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த பல்லோர்க்கு முண்டோ பவம். | 124 |
| ஆயுமிரவியு மொன்றே யனைத் துயிர்க்கும் ஆயுங்கா லொன்றே சிவம். | 125 |
| ஓவாத தொன்றே பலவா முயிர்க்கெல்லாந் தேவான தென்றே தெளி. | 126 |
| தம்மை யறியாதார் தாமறிவோ மென்பதென் செம்மையா லீசன் றிறம். | 127 |
| எல்லா வுலகத் திருந்தாலு மேத்துவார்கள் நல்லுலக நாத னடி. | 128 |
| உலகத்திற் பட்ட உயிர்க்கெல்லா மீசன் நிலவுபோ னிற்கும் நிறைந்து. | 129 |
| உலகத்தில் மன்னு முயிர்க்கெல்லா மீசன் அலகிறந்த வாதியே யாம். | 130 |
14. கலை ஞானம் - ஞானக் குறள்
| 3சத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோ னூடுருவில் முத்திக்கு மூல மது. | 131 |
| 3அயனங்கொள் சந்திரனா லாதித்த னொன்றில் நயனமா முத்திக்கு வீடு. | 132 |
| 3அஞ்சாலு மாயா தறம்பொரு ளின்பமுந் துஞ்சாதவர் துறக்கு மாறு. | 133 |
| 3ஈசனோ டொன்றி விசையாப் பொருளில்லை தேசவிளக் கொளியே யாம். | 134 |
| 3தாஞ்செய் வினையெல்லாந் தன்மையற வுணரில் காஞ்சனமே யாகுங் கருத்து. | 135 |
| 3கூடகமான குறியெழுத்தைத் தானறியில் வீடக மாகும் விரைந்து. | 136 |
| 3வீடக மாக விழைந்தொல்லை வேண்டுமேல் கூடகத்திற் சோதியோ டொன்று. | 137 |
| 3பூரித்து நின்ற சிவனைப் புணரவே பாரித்த தாகுங் கருத்து. | 138 |
| 3இரேசக மாற்றி யிடையறாதே நிற்கில் பூரிப்ப துள்ளே சிவம். | 139 |
| சிந்தையில் நின்ற நிலைவிசும்பிற் சாக்கிரமாம் சந்திரனிற் றோன்று முணர்வு. | 140 |
15.உருவொன்றி நிற்றல் - ஞானக் குறள்
| எள்ளகத் தெண்ணெ யிருந்ததனை யொக்குமே உள்ளகத் தீச னொளி. | 141 |
| பாலின்க ணெய்போற் பரந்தெங்கு நிற்குமே நூலின்க ணீச னுழைந்து. | 142 |
| கரும்பினிற் கட்டியுங் காய்பாலி னெய்யும் இரும்புண்ட நீரு மியல்பு. | 143 |
| பழத்தி னிரதம்போற் பரந்தெங்கு நிற்கு மழுத்தினா லீச னிலை. | 144 |
| தனுவொடு தோன்றுமே தானெல்லா மாகி யணுவதுவாய் நிற்கு மது. | 145 |
| வித்து முளைபோல் விரிந்தெங்கு நிற்குமே ஒத்துளே நிற்கு முணர்வு. | 146 |
| அச்ச மாங்கார மகத்தடக்கி னாற்பின்னை நிச்சயமா மீச னிலை. | 147 |
| மோட்டினீர் நாற்ற முளைமுட்டை போலுமே வீட்டுளே நிற்கு மியல்பு. | 148 |
| நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலனாய் நிற்கும் அனைத்துயிர்க்குந் தானா மவன். | 149 |
| ஓசையி நுள்ளே யுதிக்கின்ற தொன்றுண்டு வாசமலர் நாற்றம்போல் வந்து. | 150 |
16. முத்தி காண்டல் - ஞானக் குறள்
| மனத்தோ டுறுபுத்தி யாங்காரஞ் சித்தம் அனைத்தினு மில்லை யது. | 151 |
| வாக்குங் கருத்து மயங்குஞ் சமயங்கள் ஆக்கிய நூலினு மில். | 152 |
| உருவ மொன்றில்லை யுணர்வில்லை யோதும் அருவமுந் தானதுவே யாம். | 153 |
| தனக்கோ ருருவில்லை தானெங்கு மாகி மனத்தகமாய் நிற்கு மது. | 154 |
| பெண்ணா ணலியென்னும் போரொன் றிலதாகி விண்ணாகி நிற்கும் வியப்பு. | 155 |
| அனைத்துருவ மாய வறிவை யகலில் தினைத்துணையு மில்லை சிவம். | 156 |
| துணிமுகத் துக்காதி யாத்துன் னறிவின்றி அணிதா ரிரண்டு விரல். | 157 |
| மயிர்முனை யிற்பாதி மனத்தறி வுண்டேல் அயிர்ப்புண் டங்காதி நிலை. | 158 |
| தற்பர மான சதாசிவத்தோ டொன்றில் உற்றறி வில்லை யுயிர்க்கு. | 159 |
| உறக்க முணர்வு பசிகெடப் பட்டால் பிறக்கவும் வேண்டா பிறப்பு. | 160 |
17. உருபாதீதம் - ஞானக் குறள்
| கருவின்றி வீடாங் கருத்துற வேண்டில் உருவின்றி நிற்கு முணர்வு. | 161 |
| பிறத்த லொன்றின்றிப் பிறவாமை வேண்டில் அறுத்துருவ மாற்றி யிரு. | 162 |
| உருவங்க ளெல்லா மறுத்தற மாற்றில் கருவேது மில்லை தனக்கு. | 163 |
| கறுப்பு வெளுப்பு சிவப்புறு பொன்பச்சை யறுத்துருவ மாற்றி யிரு. | 164 |
| அனைத்துருவ மெல்லா மறக்கெடுத்து நின்றால் பினைப்பிறப் பில்லையாம் வீடு. | 165 |
| நினைப்பு மறப்பற்று நிராகரித்து நின்றால் தனக்கொன்று மில்லை பிறப்பு. | 166 |
| குறித்துருவ மெல்லாங் குறைவின்றி மாற்றில் மறித்துப் பிறப்பில்லை வீடு. | 167 |
| பிதற்று முணர்வை யறுத்துப் பிரபஞ்ச விகற்ப முணர்வதே வீடு. | 168 |
| பிறப்பறுக்க வீடாம் பேருவமை யின்றி அறுத்துருவ மாற்றி யிரு. | 169 |
| ஓசை யுணர்வோ டுயிர்ப்பின்மை யற்றக்கால் பேசவும் வேண்டா பிறப்பு. | 170 |
18. பிறப்பறுதல் - ஞானக் குறள்
| தன்னை யறியு மறிவு தனைப்பெறில் பின்னைப் பிறப்பில்லை வீடு. | 171 |
| அறம்பாவ மாயு மறிவுதனைக் கண்டால் பிறந்துழல வேண்டா பெயர்ந்து. | 172 |
| சிவனுருவந் தானாய்ச் செறிந்தடங்கி நிற்கில் பவநாச மாகும் பரிந்து. | 173 |
| உறக்க முணர்வோ டுயிர்ப்பின்மை யற்றால் பிறப்பின்றி வீடாம் பரம். | 174 |
| நினைப்பு மறப்பு நெடும்பசியு மற்றால் அனைத்துலகும் வீடா மது. | 175 |
| உடம்பிரண்டுங் கெட்டா லுறுபய னொன்றுண்டு திடம்படு மீசன் றிறம். | 176 |
| தன்னை யறிந்து செறிந்தடங்கித் தானற்றால் பின்னைப் பிறப்பில்லை வீடு. | 177 |
| மருளன்றி மாசறுக்கின் மாதூ வெளியாய் இருளின்றி நிற்கு மிடம். | 178 |
| விகாரங்கெட மாற்றி மெய்யுணர்வு கண்டால் அகாரமாங் கண்டீ ரறிவு. | 179 |
| சிந்த யாங்காரஞ் செறிபுல னற்றக்கால் முந்தியே யாகுமாம் வீடு. | 180 |
19.தூயவொளி காண்டல் - ஞானக் குறள்
| தோன்றிய தெல்லாந் தொடக்கறுத்துத் தூய்வெளியாய்த் தோன்றியக் காற்றூய வொளி. | 181 |
| தெளிவாய தேசவிளக் கொளியைக் காணில் வெளியாய வீடதுவே யாம். | 182 |
| மின்போ லுருவ விளக்கொளிபோல் மேற்காணில் முன்போல மூலம் புகும். | 183 |
| பளிங்கு வலம்புரி பானிகர்த்த தாகில் துளங்கொளியாந் தூய நெறி. | 184 |
| சங்கு நிறம்போற் றவளவொளி காணில் அங்கையி னெல்லியே யாகும். | 185 |
| துளங்கிய தூண்டா விளக்கொளி காணில் விளங்கிய வீடாம் விரைந்து. | 186 |
| மின்மினி போன்ற விளக்காகத் தான்தோன்றில் அன்னப் பறவையே யாம். | 187 |
| உள்ளொளி தோன்றி லுணரி லருளொளி அவ்வொளி யாதி யொளி. | 188 |
| பரந்த விசும்பிற் பரந்த வொளிகாணில் பரம்பரமே யாய வொளி. | 189 |
| ஆதியொளியாகி யாள்வானுந் தானாகி ஆதி யவனுருவு மாம். | 190 |
20. சதாசிவம் - ஞானக் குறள்
| பத்துத் திசையும் பரந்த கடலுலகும் ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம். | 191 |
| விண்ணிறைந்து நின்று விளங்குஞ் சுடரொளிபோல் உண்ணிறைந்து நிற்குஞ் சிவம். | 192 |
| ஆகமுஞ் சீவனு மாசையுந் தானாகி ஏகமாய் நிற்குஞ் சிவம். | 193 |
| வாயுவாய் மன்னுயிராய் மற்றவற்றி னுட்பொருளாய் ஆயுமிடந் தானே சிவம். | 194 |
| எண்ணிறந்த யோனி பலவாய்ப் பரந்தெங்கும் உண்ணிறைந்து நிற்குஞ் சிவம். | 195 |
| ஒன்றேதா னூழி முதலாகிப் பல்லுயிர்க்கும் ஒன்றாகி நிற்குஞ் சிவம். | 196 |
| மூலமொன் றாகி முடிவொன்றா யெவ்வுயிர்க்கும் காலமாய் நிற்குஞ் சிவம். | 197 |
| மண்ணிற் பிறந்த வுயிர்க்கெல்லாந் தானாகி விண்ணகமே யாகுஞ் சிவம். | 198 |
| தோற்றமது வீடாகித் தொல்லைமுத லொன்றாகி ஏத்தவரு மீச னுளன். | 199 |
| நிற்கும் பொருளும் நடப்பனவுந் தானாகி உற்றெங்கும் நிற்குஞ் சிவம். | 200 |
21. குருவழி - ஞானக் குறள்
| தன்பா லறியுந் தவமுடையார் நெஞ்சகத்துள் அன்பா யிருக்கு மரன். | 201 |
| சிந்தை சிவமாகக் காண்பவர் சிந்தையில் சிந்தித் திருக்குஞ் சிவம். | 202 |
| குருவி னடிபணிந்து கூடுவ தல்லார்க் கருவமாய் நிற்குஞ் சிவம். | 203 |
| தலைப்பட்ட சற்குருவின் சந்நிதியி லல்லால் வலைப்பட்ட மானதுவே யாம். | 204 |
| நெறிப்பட்ட சற்குரு நேர்வழி காட்டில் பிரிவற் றிருக்குஞ் சிவம். | 205 |
| நல்லன நூல்பல கற்பினுங் காண்பரிதே எல்லையில் லாத சிவம். | 206 |
| நினைப்பு மறப்பு மில்லாதவர் நெஞ்சந் தனைப்பிரி யாது சிவம். | 207 |
| ஒன்றிலொன் றில்லாத மனமுடை யாருடல் என்றுமொன் றாது சிவம். | 208 |
| நாட்டமில் லாவிடம் நாட்ட மறிந்தபின் மீட்டு விடாது சிவம். | 209 |
| பஞ்சமா சத்த மறுப்பவர்க் கல்லாஅல் அஞ்சலென் னாது சிவம். | 210 |
22. அங்கியில் பஞ்சு - ஞானக் குறள்
| அங்கியிற் பஞ்சுபோ லாகாயத் தேநினையில் சங்கிக்க வேண்டாஞ் சிவம். | 211 |
| மெய்ப்பா லறியாத மூடர்த நெஞ்சத்தின் அப்பால தாகுஞ் சிவம். | 212 |
| நெஞ்சகத்து ணோக்கி நினைப்பவர்க் கல்லாஅல் அஞ்சலென் னாது சிவம். | 213 |
| பற்றிலா தொன்றினைப் பற்றினா லல்லது கற்றதனா லென்ன பயன். | 214 |
| தம்மை யறிவாரைத் தாமறிந்து கொண்டபின் தம்மை யறிவரோ தான். | 215 |
| அசபை யறிந்துள்ளே யழலெழ நோக்கில் இசையாது மண்ணிற் பிறப்பு. | 216 |
| இமையாத நாட்டத் திருந்துணர் வாருக் கமையாத வானந்த மாம். | 217 |
| துரியங் கடந்த சுடரொளியைக் கண்டால் மரணம் பிறப்பில்லை வீடு. | 218 |
| மதிபோ லுடம்பினை மாசற நோக்கில் விதிபோ யகல விடும். | 219 |
| சீவன் சிவலிங்க மாகத் தெளிந்தவர்தம் பாவ நசிக்கும் பரிந்து. | 220 |
23. மெய்யகம் - ஞானக் குறள்
| 2மெய்யகத்தி னுள்ளே விளங்குஞ் சுடர்நோக்கில் கையகத்தி னெல்லிக் கனி. | 221 |
| 2கரையற்ற செல்வத்தைக் காணுங் காலத்தில் உரையற் றிருப்ப துணர்வு. | 222 |
| 2உண்டு பசிதீர்ந் தார்போ லுடம்பெல்லாஅங் கண்டுகொள் காதல் மிகும். | 223 |
| 2உரைசெயு மோசை யுரைசெய் பவர்க்கு நரைதிரை யில்லை நமன். | 224 |
| 2தோன்றாத தூயவொளி தோன்றியக்கா லுன்னைத் தோன்றாமற் காப்ப தறிவு. | 225 |
| 2வாக்கு மனமு மிறந்த பொருள்காணில் ஆக்கைக் கழிவில்லை யாம். | 226 |
| 2கண்ணகத்தே நின்று களிதருமே காணுங்கால் உன்னகத்தே நின்ற வொளி. | 227 |
| 2 ஆநந்த மான வருளை யறிந்தபின் தானந்த மாகு மவர்க்கு. | 228 |
| 2மறவாமற் காணும் வகையுணர் வாருக் கிறவா திருக்கலு மாம். | 229 |
| விண்ணிறைந்து நின்ற பொருளே யுடம்பதன் உண்ணிறைந்து நின்ற வொளி. | 230 |
24. கண்ணாடி - ஞானக் குறள்
| 3கண்ணாடி தன்னி லொளிபோ லுடம்பதனுள் உண்ணாடி நின்ற வொளி. | 231 |
| 3அஞ்சு புலனின் வழியறிந்தாற் பின்னைத் துஞ்சுவ தில்லை உடம்பு. | 232 |
| 3நாபி யகத்தே நலனுற நோக்கிடில் சாவது மில்லை யுடம்பு. | 233 |
| 3கண்டத் தளவிற் கடிய வொளிகாணில் அண்டத்த ராகு முடம்பு. | 234 |
| 3சந்திர னுள்ளே தழலுற நோக்கினால் அந்தர மாகு முடம்பு. | 235 |
| 3ஆர்க்குந் தெரியா வுருவந்தனை நோக்கில் பார்க்கும் பரமா மவன். | 236 |
| 3வண்ண மில்லாத வடிவை யறிந்தபின் விண்ணவ ராகு முடம்பு. | 237 |
| 3 நெற்றிக்கு நேரே நிறைந்த வொளிகாணில் முற்று மழியா துடம்பு. | 238 |
| 3மாதூ வெளியின் மனமொன்ற வைத்தபின் போதக மாகு முடம்பு. | 239 |
| சுத்தமோ டொன்றி மனமு மிறந்தக்கால் முற்று மழியா துடம்பு. | 240 |
25. சூனிய காலமறிதல் - ஞானக் குறள்
| நிரவி யழலுருவாய் நீண்ட வெளிகாணில் அரவணை யானாகு முடம்பு. | 241 |
| உருவந் தழலாக வுள்ளத்தே சென்று புருவத் திடையிருந்து பார். | 242 |
| புருவத் திடையிருந்து புண்ணியனைக் காணில் உருவற்று நிற்கு முடம்பு. | 243 |
| அகம்புறம் பேராப் பொருளை யறியில் உகம்பல காட்டும் உடம்பு. | 244 |
| ஆவிபாழ் போகா தடக்கி யிருந்தபின் ஓவிய மாகு முடம்பு. | 245 |
| அஞ்சு மடக்கி யறிவோ டிருந்தபின் துஞ்சுவ தில்லை யுடம்பு. | 246 |
| தீயாக வுள்ளே தெளிவுற நோக்கினால் மாயாது பின்னை யுடம்பு. | 247 |
| தானந்த மின்றித் தழலுற நோக்கிடில் ஆனந்த மாகு முடம்பு. | 248 |
| ஒழிவின்றி நின்ற பொருளை யுணரில் அழிவின்றி நிற்கு முடம்பு. | 249 |
| பற்றற்று நின்ற பழம்பொருளைச் சிந்திக்கில் முற்று மழியா துடம்பு. | 250 |
26. சிவயோக நிலை - ஞானக் குறள்
| அடிமிசை வாயு வடுத்தடுத் தேகி முடிமிசை யோடி முயல். | 251 |
| உண்ணாடி வாயு வதனையுட னிறப்பி விண்ணோடு மெள்ள விடு. | 252 |
| மெள்ள விரேசித்து மெய்விம்மிப் பூரித்துக் கொள்ளுமின் கும்பங் குறித்து. | 253 |
| இரேசக முப்பத் திரண்டது மாத்திரை பூரகம் பத்தாறு புகும். | 254 |
| கும்பக நாலோ டறுபது மாத்திரை தம்பித் திடுவது தான். | 255 |
| முன்ன மிரேசி முயலுபின் பூரகம் பின்னது கும்பம் பிடி. | 256 |
| ஈரைந் தெழுபத்தீ ராயிர நாடியுஞ் சேருமின் வாயுச் செயல். | 257 |
| வாசலீ ரைந்து மயங்கிய வாயுவை ஈசன்றன் வாசலி லேற்று. | 258 |
| தயாவினில் வாயு வலத்தி லியங்கில் தியான சமாதிகள் செய். | 259 |
| ஆதியா மூலமறிந் தஞ்செழுத் தினைப் பேதியா தோது பிணை. | 260 |
3. தன்பால்
27. ஞான நிலை - ஞானக் குறள்
| தற்புருட மாமுகந் தன்னிற் றனியிருந் துற்பன மஞ்சை யுரை. | 261 |
| தற்புருட மாமுகமேற் றாரகை தன்மேலே நிற்பது பேரொளி நில். | 262 |
| ஓதிய தற்புரு டத்தடி யொவ்வவே பேதியா தோது பிணை. | 263 |
| கொழுந்துறு வன்னி கொழுவுற வொவ்வில் எழுந்தா ரகையா மிது. | 264 |
| மறித்துக் கொளுவிடு வன்னி நடுவே குறித்துக் கொளுஞ்சீயைக் கூட்டு. | 265 |
| காலுந் தலையு மறிந்து கலந்திடில் சாலவும் நல்லது தான். | 266 |
| பொன்னொடு வெள்ளியி ரண்டும் பொருந்திடில் அன்னவன் றாளதுவே யாம். | 267 |
| நின்ற வெழுத்துட னில்லா வெழுத்தினை யொன்றுவிக் கிலொன் றேயுள. | 268 |
| பேசா வெழுத்துடன் பேசுமெழுத்துறில் ஆசான் பரநந்தி யாம். | 269 |
| அழியா வுயிரை யவனுடன் வைக்கில் பழியான தொன்றில்லை பார். | 270 |
28. ஞானம் பிரியாமை - ஞானக் குறள்
| பிறந்திட மாலிடம் பேரா திருப்பின் இறந்திடம் வன்னி யிடம். | 271 |
| சாகா திருந்த தலமே மவுனமது ஏகாந்த மாக விரு. | 272 |
| வெளியில் விளைந்த விளைவின் கனிதான் ஒளியி லொளியா யுறும். | 273 |
| மறவா நினையா மவுனத் திருக்கில் பிறவா ரிறவார் பினை. | 274 |
| குருவாம் பரநந்தி கூடல் குறித்தாங் கிருபோது நீங்கா திரு. | 275 |
| சுந்திரச் சோதி துலங்கு மிடமது மந்திரச் சக்கரமு மாம். | 276 |
| தூராதி தூரஞ் சொல்லத் தொலையாது பாராப் பராபரம் பார். | 277 |
| ஈரொளி யீதென் றிறைவ னுரைத்தனன் நீரொளி மீது நிலை. | 278 |
| அந்தமு மாதியு மில்லா வரும்பொருள் சுந்தர ஞானச் சுடர். | 279 |
| இதுமுத்தி சாதனமென் றேட்டில் வரைந்து பதிவைத் தனன்குரு பார். | 280 |
29. மெய்நெறி - ஞானக் குறள்
| செல்லல் நிகழல் வருங்கால மூன்றினையுஞ் சொல்லு மவுனத் தொழில். | 281 |
| பஞ்சிற் படுபொறி போலப் பரந்திருந்து துஞ்சாது ஞானச் சுடர். | 282 |
| இமைப்பிற் பரந்தங் கொடுங்கு மின்போல் நமக்குட் சிவன்செயல் நாடு. | 283 |
| குவித்து மனத்தைக் குவித்துள்ளே யோங்கில் செவித்துப் பெறுவ தெவன். | 284 |
| காலுந் தலையு மொன்றாகக் கலந்திடம் நாலா நிலையென நாடு. | 285 |
| மூல நிலமிசை மூன்றா நிலத்தினில் ஆல மருந்துஞ் சிவம். | 286 |
| எழுஞ்சுட ருச்சியின் மேன்மனம் வைக்கத் தொழிலொன் றிலாத சுடர். | 287 |
| அடைத்திட்ட வாசலின் மேன்மனம் வைத்துப் படைத்தவன் தன்னையே பார். | 288 |
| அறுபதொ டாறு வருட மிதனை உறுதிய தாக யுணர். | 289 |
| அட்டமா சித்தி யடையுமோ ராண்டினில் இட்ட மிதனைத் தெளி. | 290 |
30. துரிய தரிசனம் - ஞானக் குறள்
| வன்னிய தெட்டு மதியம் பதினாறு முன்னிய பன்னிரண்டு முள. | 291 |
| சூரியன் வன்னியொன் றாகிடிற் சோமனாம் பாருமி னீது பயன். | 292 |
| மதியொடு வன்னியொன் றாகவே வந்தால் கதிரவ னாமென்று காண். | 293 |
| மதிக்குட் கதிரவன் வந்தங் கொடுங்கில் உதிக்குமாம் பூரணைச் சொல். | 294 |
| தோற்றுங் கதிரவ னுண்மதி புக்கிடில் சாற்று மமாவாசை தான். | 295 |
| வன்னி கதிரவன் கூடிடி லத்தகை பின்னிவை யாகு மெலாம். | 296 |
| அமாவாசை பூரணை யாகு மவர்க்குச் சமனா முயிருடம்பு தான். | 297 |
| அண்டத் திலுமிந்த வாறென் றறிந்திடு பிண்டத் திலுமதுவே பேசு. | 298 |
| ஏறு மதிய மிறங்கிடி லுறங்கிடும் கூறுமப் பூரணை கொள். | 299 |
| உதிக்கு மதியமுங் கண்டங் குறங்கில் மதிக்கு மமாவாசை யாம். | 300 |
31. உயர்ஞான தரிசனம் - ஞானக் குறள்
| கொண்டிடு மண்டல மூன்றங்கி தன்னையிப் பிண்டமு மூழி பிரியா. | 301 |
| வெள்ளி புதனொடு திங்க ளிடமெனத் தள்ளுமின் கால சரம். | 302 |
| செவ்வாய் சனிநா யிறுவல மாகவே கொள்ளிலிவ் வாறிடரு மில். | 303 |
| வளர்பொன் னிடம்பிறைத் தேய்வு வலமாம் வளர்பிறை யென்றே மதி. | 304 |
| வலத்திற் சனிக்கே யிராப்பகல் வாயு செலுத்துபே ராது செயல். | 305 |
| இயங்கும் பகல்வலமி ராவிடம் வாயு தயங்குறல் நாடிக்குட் டான். | 306 |
| அரசறி யாம லவன்பே ருறைந்துத் தரைதனை யாண்ட சமன். | 307 |
| கல்லாத மூடர் திருவுருக் கொண்டிடச் செல்லாத தென்ன செயல். | 308 |
| திருவருட் பாலைத் தெரிந்து தெளியில் குருவிருப் பாமென்று கொள். | 309 |
| கற்கிலுங் கேட்கிலும் ஞானக் கருத்துற நிற்கில் பரமவை வீடு. | 310 |