காகபுசுண்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காகபுசுண்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

குறள் - காகபுசுண்டர்


1:

சின்மயத்தைப் போற்றிச் சிவராச யோகத்தில்

நன்மை பராபரத்தை நாடு



2:

அண்ட முடிமீதி லங்கிர விமதியைக்

கண்டுதரி சித்தல் கதி.



3:

வலமிடமாய் நின்ற மதிரவியை மாறி

விலகா தடியினிற்பின் வீடு.



4:

அறுபத்து நால்யோக மவ்வளவுந் தள்ளி

ஒருபொழுது முண்டுநிலை யோர்.



5:

உலகமே மாயமென வுன்மனதிற் கண்டு

நலமாக நாதனடி நம்பு



6:

சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத

அத்தனரு ளும்புசுண்டன் யான்.



7:

சொன்னே னறிந்து சுகமா யுலகோருக்

கெந்நாளும் வாழ்கவென்றே யான்.



8:

கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான்

மண் முதிர்பதயு மாறு.



9:

விண்டனே ஞானம் வெளியாக முப்பத்தி

ரண்டி லறிவீர் நலம்.



10:

நேத்திரத்தைக் காகம்போல் நிச்சய மாய்நிற்க

ஆத்துமத்தி லானந்த மாம்.



11:

உலகி லறிந்தோ ரொருநாளும் மாளார்

பல நினைவை விட்டுநீ பார்.



12:

கண்டோருஞ் சொல்லார் கருத்தாற் பெரியோரைத்

தொண்டுசெய்து பெற்ற சுகம்.



13:

ஆதியிற் சொன்னவிய ரண்ட மதையெடுத்து

மாதுசிவன் பூசைசெய்து வை.



14:

முப்பொருளைச் சுட்டு முழுதழுது நீறாக்கித்

தப்பாம லுண்டுநிலை சார்.



15:

யோகமுடன் கற்ப முரைத்தேனீ ரெட்டினில்

வேகமுடன் கண்டுணரு வீர்.



16:

வாசிமுனி மைந்தா மருவு பிரமத்தில்

மோசம்வா ராகுறள்முற் றும்.



 * காகபுசுண்டர் உபநிடதம்

 * காகபுசுண்டர் காவியம்

 * காகபுசுண்டர் குறள்