திருமூலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமூலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருமந்திரம் - சிறப்பும் வரலாறு

திருமூலதேவநாயனாரின் திருமந்திரமாலை, திருமந்திரம் என்ற பெயரால் வழங்கப்படும். இந்நூல் சைவத் திருமுறைகளுள் பத்தாவதாக இடம் பெற்றுள்ளது. தமிழ் மொழியில் பெருஞ்சிறப்புக்கு உரிய முதன்மையான நூல்களைத் தொகுத்து உரைக்கும் ஒரு பழம்பாடல் உள்ளது. அதில் திருமந்திரமும் இணைக்கப் பெற்றிருப்பது இதன் சிறப்பிற்குச் சான்று கூறி நிற்கிறது. சைவ ஆகமங்களின் சாரமாகத் திகழும் இந்நூலை, தமிழில் எழுந்த சைவசமயஞ் சார்ந்த ஒரு கலைக்களஞ்சியம் என்றே கூறலாம்.

திருமந்திரம் ஒன்பது உட்பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு பிரிவும் ஒரு ‘தந்திரம்’ எனக் குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பது தந்திரங்களும், ஆகமங்கள் ஒன்பதின் சாரமாக அமைந்துள்ளன. ஆகமங்கள் 28, அவற்றுள் ஒன்பதின் சாரமாக 9 தந்திரங்கள் அமைந்துள்ளன. அந்த ஆகமங்கள் வருமாறு: காரணம், காமிகம், வீரம், சிந்தம், வாதுளம், வியாமளம், காலோத்தரம், சுப்பிரம், மகுடம் என்பன.


தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம்

சுந்தரன் ஆகமச் சொன்மொழிந் தானே

என்ற சிறப்புப் பாயிரப்பகுதி இதனை உறுதி செய்கிறது. இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டுள்ளது.


திருமூலர் – வரலாறு:


திருமூலர் வரலாறு குறித்தும் பாயிரப் பகுதியில் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருமூலர் பெரியபுராண நாயன்மார் வரிசையிலும் இடம் பெற்றுள்ளார். இவர் வரலாற்றைப் பெரிய புராணமும் எடுத்துரைக்கிறது. வடநாட்டிலிருந்து தென்னாடு வந்த முனிவர் ஒருவர் மாடு மேய்க்கும் ஓர் இளைஞன் உடலில் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து மூலன் எனப் பெயர் பெற்றார். திருவாவடு துறையில் யோகத்தில் பலகாலம் இருந்து இத்திரு மந்திரமாலையை  உலகுக்கு வழங்கினார்.  திருமூலரே,


என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே..(திருமந்திரம் : 81)  என்று குறிப்பிட்டிருப்பது கருதத்தக்கது. தமிழில் ஆகமங்களின் சாரங்களைத் தொகுத்தளிப்பதே அவர் வருகையின் நோக்கம் என்பது உறுதியாகிறது.


யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.... (திருமந்திரம் : 147)  என்ற அரிய தொடர் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.


விநாயகர் காப்பு


திருமந்திரத்தின் முதல் தந்திரம் முதல் ஒன்பதாவது தந்திரம் வரையிலான ஒவ்வொரு தந்திரமும் ஒவ்வொரு சமய உண்மையை நுட்பமுற எடுத்துரைப் பனவாக அமைந்துள்ளன. முன்னதாக அமைந்துள்ள பாயிரத்தில் கடவுள் வாழ்த்து, வேத ஆகமங்களின் சிறப்பு, திருமூலர் வரலாறு முதலியன விரித்துரைக்கப் பெற்றுள்ளன. இந்நூல் விநாயகர் காப்பு ஒன்றுடன் தொடங்குகின்றது.


ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே.....(திருமந்திரம் விநாயகர் காப்பு)


(இந்து = சந்திரன், எயிற்றன் = கொம்பினையுடையவன், நந்தி மகன் = விநாயகன், ஞானக்கொழுந்து = அறிவே வடிவானவன்) என்பது திருமந்திரத்தின் காப்புச் செய்யுள். கடவுள் வாழ்த்துப் பகுதியில் சிவபெருமானின் பெருமை பேசும் 50 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.


தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்

ஆயினும் ஈசன் அருள்அறி வார்இல்லை

சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்

தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.......(திருமந்திரம் : 8)


(வெய்யன் = வெப்பம் மிக்கவன், தண்ணியன் = குளிர்ச்சியானவன். அணியன் =அடியவர்க்கு நெருக்கமானவன்) சிவனின் மேலான கருணைத் திறத்தைச் சுட்டிக்காட்டுகிறது. எனினும் மக்கள் அவன் கருணையை முழுவதும் உணர்ந்து வழிபட்டு வாழ்வு பெற்றிலர் என்ற திருமூலரின் மன வருத்தம் இப்பாடலில் பதிவாகியுள்ளது. 

==============================================

வேத ஆகமச் சிறப்பு:
வேதம், ஆகமம் என்ற இரண்டு நூல்களைப் பற்றியும் திருமூலர் குறிப்பிடுகிறார். இரண்டுமே இறைவனிடமிருந்து வந்தவை: வேதம் பொது; ஆகமம் சிறப்பு என்பதும் அவர் கருத்து. ஆகமம் என்ற சொல்லுக்கு ‘வந்தது’ என்பது பொருள். இச்சொல், சிவபெருமானிடமிருந்து இந்நூல்கள் வந்தன என்பதைக் குறிக்கிறது. ஆகமம் என்ற சொல்லை மற்றொரு விதமாகவும் பிரித்துப் பொருள் காண்கிறார்கள். ஆ என்பது பாசம்; க என்பது பசு; ம என்பது பதி. எனவே இம்மூன்றையும் ஆகமம் கூறுகிறது.

திருமந்திரம்தந்திரங்களும் உள்ளீட்டுச் செய்திகளும்:

தந்திரங்களின் உள்ளீட்டுச் செய்திகள்
தந்திர வரிசை
உள்ளீடு
ஒன்று
உபதேசம்,  யாக்கை நிலையாமைகொல்லாமை
கல்விகள்ளுண்ணாமை
இரண்டு
சிவனின் எட்டுவகை வீரச் செயல்கள்
ஐந்தொழில்கள்சிவனையும்குருவையும்
நிந்திப்பதால் வரும் துன்பங்கள்
மூன்று
யோகக் கலைகள்அஷ்டமாசித்திகள்
நான்கு
திரு அம்பலச் சக்கரம்நவகுண்டம்வயிரவ மந்திரம்
ஐந்து
இறைவனை அடைவதற்கு உரிய நூல் நெறிகள்:
சரியைகிரியையோகம்ஞானம்சத்தி நிபாதம்
ஆறு
குருதரிசனப் பயன்திருநீற்றின் சிறப்புதுறவு நிலை
ஏழு
ஆறு ஆதாரங்கள்சிவபூசைகுருபூசைசமாதி அமைத்து வழிபடும் முறைஉயிர் இலக்கணம்
எட்டு
பக்திநிலைமுக்திநிலை
ஒன்பது
நுண்பொருள் விளக்கம் (சூனியசம்பாஷணை)

திருமந்திரம் - அரிய தொடர்கள்: 

திருமந்திரம் சைவ சமயத்திற்கு மட்டும் உரிய ஒரு சமய நூலாக அமையாதுஉலக மக்களுக்கெல்லாம் அறத்தையும்ஆன்ம ஈடேற்றத்தையும்மருத்துவக் கூறுகளையும் எடுத்துரைக்கும் பொது நூலாக அமைந்துள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அரிய பாடல் பகுதிகள் திருமந்திரத்தின் சிறப்புக்குக் கட்டியம் கூறி நிற்பன. 

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்.... பாடல் -2104

சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை... பாடல்: 5

ஆர்க்கும் இடுமின்: அவர்இவர் என்னன்மின்....பாடல்: 250

ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்...பாடல்: 534

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்....
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே...பாடல்: 724

குருவே சிவம்எனக் கூறினன் நந்தி...பாடல்: 1581
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்..பாடல்: 1726  
(நந்தி இங்கே சிவபெருமானைக் குறிக்கும்ஆக்கை - உடல்)  இவைபோன்ற நூற்றுக்கணக்கான அரிய தொடர்கள் திருமந்திரத்துள் இடம்பெற்றுள்ளன.

அன்பே சிவம்:
 
திருமந்திரம் ஆகமத்தின் சாரமாக அமைந்திருந்தாலும் அனைவரும் உணரும் எளிமையும்இனிமையும் உடைய பாடல்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அன்பே சிவம்’ என்ற தொடரைப் பலரும் அறிவர். மனிதர்கள் ஏனைய மனிதர்கள்பால் செலுத்தும் அன்பில்தான் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலகத்தில் தோன்றிய கடவுள் சார்புடைய மதங்களும்கடவுள் மறுப்புச் சமயங்களும் கூட அன்பினைப் பெரிதும் போற்றியே உரைக்கின்றன. திருவள்ளுவர் முதலிய அறநூலாசிரியர்களும் அன்பின் சிறப்பையும்இன்றியமையாமையையும் எடுத்துரைத்துள்ளனர். 

சைவர்களின் இறைவன் சிவன். அவன் யார்அவன் இயல்பு எத்தகையது என்ற வினாக்களுக்குத் திருமூலர் தரும் விடை ஆழ்ந்த பொருட்சிறப்புடையது. அன்புதான் எங்கள் சிவன். சிவம் வேறு அன்பு வேறு என்பார் அறியாமை மிக்கவர்கள். இரண்டும் ஒன்றே என்று உணரும் உணர்வில் இறைமைப் பேறு வாய்க்கும்.
அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே...(திருமந்திரம்: 270)

என்பது அன்பின் சிறப்புரைக்கும் அரிய பாடல்.


மரமும் யானையும்:

உலகம் வேறுஇறைவன் வேறானவன் என்று கருதும் கருத்து சமய நம்பிக்கை உடையவர்களிடமும் உள்ளது. குழந்தை மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையைக் கண்டு யானை! யானை’ என்று அஞ்சித் தாயிடம் தஞ்சம் அடைகிறது. தாயோ இது யானை இல்லை மரம் என்று கூறிக் குழந்தையின் அச்சம் நீக்குகிறாள் என்றால் குழந்தை கண்டது யானையாமரமாஎன்ற ஐயம் எழுகிறது. 

யானையாகக் கண்ட குழந்தைக்கு மரம் என்பது புலப்படவில்லைமரம் என்ற தெளிவு பெற்ற தாய்க்கு யானை புலப்படவில்லை. இவற்றைப் போல் உலகத்தையும்உலகப் பொருள்களையும் இறைவனாகவே காண்பார்க்கு அவை புலப்படுவதில்லை. உலகமாகவே காண்பார்க்கு இறைமை புலனாவதில்லை. இவ்வழகிய உண்மையைத் திருமந்திரம் மிக அழகிய கவிதை ஒன்றில் வைத்து விளக்குகிறது.
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே...(திருமந்திரம்: 2290)

இக்கருத்தையொட்டியே நாயைக்கண்டால் கல்லைக் காணோம்கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழி எழுந்தது. எளிய இனிய எடுத்துக்காட்டுகளால் அமைந்துள்ள இத்தகு கவிதைகள் திருமந்திரத்தில் நிறைவாக இடம் பெற்றுள்ளன.


மனிதநேயப் பரிவு:
 
சைவம் மனித நேயத்தை வற்புறுத்தும் ஓர் அன்பு நெறி. சிற்றுயிர்கள் இடத்தும் கருணை காட்டவேண்டும் என்று அது வற்புறுத்துகின்றது. இறைவன் உலகத்தையும்,     நுகர் பொருள்களையும் உயிர்கள் பெற்று இன்புறுவதற்கே படைத்தளித்தான். உயிர்களிடமிருந்து இறைவன் அன்பு ஒன்றைத் தவிர வேறு யாது ஒன்றும் பெற விரும்புவதில்லை. ஆனால் சமயவாதிகள்சடங்கு நெறியில் பற்றுக் கொண்டு நின்றுமனிதனின் பசிக்கு உணவிட விரும்பாது இறைவனுக்குப் படையலிட்டு மகிழ்கின்றனர். இறைவன் மனிதன் அளிக்கும் உணவையும்படையலையும் உண்டு மகிழ்கின்றானா என்றால் இல்லை. இறைவன் கவனத்திலும் கணக்கிலும் அவனுக்குப் படைக்கப்படும் படையல் இடம் பெறுவதில்லை. அவன் கணக்கில் இடம்பெற விரும்பினால் பசித்திருப்போருக்கு உணவு அளியுங்கள். அதுவே அவனைச் சென்றடையும் அரிய பெருநெறி என்று காட்டுகிறார் திருமூலர்.
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே...(திருமந்திரம்: 1857)

(படமாடக் கோயில் = இறைவன் உருவத்தை ஓவியமாக எழுதி வைத்துள்ள இடம்பகவன் = இறைவன்நடமாடக் கோயில் நம்பர் = நடமாடும் கோயிலாகிய மனிதர்கள்ஆமே = போய்ச் சேரும்) அது என்ன நம்பர்க்கு’ என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழுகிறது; ‘நம்பர்’ என்ற சொல் நம்மவர்எம்மைப்போன்ற மனிதர்கள்’ என்ற பொருள் தரும். மனிதரின் உள்ளத்தில் இறைவன் குடி கொண்டுள்ளான். எனவே மனிதர்கள் இறைவனின் நடமாடும் கோயில்கள்நடமாடும் கோயில்களாகிய நம் போன்ற மனிதர்க்கு ஒன்று கொடுப்பது இறைவனுக்குக் கொடுப்பதற்கு ஒப்பாகும். 
 

வாழ்வியல் உண்மைகள்:

இறைவனைச் சென்று அடைதற்கு உரிய எளிய வழி குருவை வழிபடுதலால் கிட்டும். பிறன் மனை நோக்காத பேராண்மையை ஆடவர் பெறல் வேண்டும். காக்கை தன் இனத்தைக் கூவி அழைத்துக் கலந்து உண்பது போல்சக மனிதர் களோடு கலந்து உண்ணல் வேண்டத்தக்கதுகற்றவர்களுக்கு மட்டுமே பேரின்பம் வாய்க்கும். கேள்விச் செல்வமே மனிதர்களுக்கு உற்றதுணை. மிகுந்த காமமும் கள்ளுண்டலும் கீழோர் என்று அடையாளம் காட்டும். 

விரும்பியவாறு ஆண் அல்லது பெண் குழந்தை பெற்றுக் கொள்வதற்குரிய மூச்சுப்பயிற்சி முறை, (வியப்பாக உள்ளதா? திருமந்திரம் பாடலில் இவ்விவரம் தரப்பட்டுள்ளது: பாடல் எண்-482) குழந்தைகள் குருடாய், ஊமையாய், முடமாய்ப் பிறப்பதற்குரிய காரண விளக்கம், திருக்கோயில் வழிபாட்டின் இன்றியமை யாமை முதலான பல அரிய செய்திகளை வழங்கும் களஞ்சியமாகத் திருமந்திரம் அமைந்துள்ளது.

திருமூலரின் திருமந்திரம் - பாயிரம்

237 பதிகங்கள், 3000 பாடல்கள் : பொழிப்புரை : முனைவர் சி.அருனைவடிவேல் முதலியார்.

பாயிரம்: பாடல்கள் 39  


பாயிரம் : பாடல் எண் : 1

கடவுள் வாழ்த்து


ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்

நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து

வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்

சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.


பொழிப்புரை :  ஒருபொருளாய் உள்ளவன் முதற்கடவுளே; வேறில்லை. அவனது அருள், `அறக்கருணை, மறக்கருணை` என இரண்டாய் இருக்கும். அவ் அருள்காரணமாக அவன், `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூன்று நிலைகளில் நிற்பான். நின்று, `அறம், பொருள், இன்பம், வீடு` என்னும் உறுதிப் பொருள் நான்கனையும் தானே உணர்ந்து உலகிற்கு உணர்த்தினான். செவிமுதலிய ஐம்பொறிகளின் வழி நுகரப்படும் ஓசை முதலிய ஐம்புலன்களின் மேல் எழுகின்ற ஐந்து அவாவினையும் வென்றான். `மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை` என்னும் ஆறு அத்துவாக்களாக விரிந்தான். `பிரம லோகம், விட்டு ணுலோகம், உருத்திர லோகம், மகேசுர லோகம், சதாசிவ லோகம், சத்தி லோகம், சிவ லோகம்` என்னும் ஏழுலகங்களுக்கும் மேற்சென்று தானேயாய் இருந்தான். அவனை, நெஞ்சே, நீ அறிந்து அடை.

****************************************************

பாடல் எண் : 2

நுதலிய பொருள்


போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை

நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை

மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்

கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.


பொழிப்புரை :  மலமாசகன்ற தூய உயிரிடத்து நிலைபெற்று விளங்கும் தூயவனும், உலகம் முழுவதற்கும் நலந் தருபவளாகிய அம்மைக்குக் கணவனும், தென்திசைக்குத் தலைவனாம் கூற்றுவனை உதைத்தவனும் ஆகிய சிவபெருமானது பெருமையை யான் துதிமுறையால் கூறுவேன்!

****************************************************

பாடல் எண் : 3

நூற் சிறப்பு


ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்

நக்கன்என் றேத்திடும் நம்பனை நாள்தொறும்

பக்கம்நின் றார்அறி யாத பரமனைப்

புக்குநின் றுன்னியான் போற்றுகின் றேனே.


பொழிப்புரை :  எண்ணில்லாத தேவர்களில் ஒருவனாய் அவர் களோடொப்ப நிற்பவனும், அவ்வாறு நிற்பினும் அவர் அனை வராலும் என்றும் வணங்கப்படுபவனும், தன்னை அடைந்தவர் களாலும் தன் தன்மை முழுதும் அறியப்படாத மேலானவனும், ஆகிய சிவபெருமானது பெருமையை யான் அவனுள் அடங்கிநின்று உணர்ந்து துதிக்கின்றேன்.

****************************************************

பாடல் எண் : 4

அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்

புகலிடத் தென்மெய்யைப் போதவிட் டானைப்

பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி

இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.


பொழிப்புரை :  மண்ணுலகத்தவராகிய மக்கட்கும், விண்ணுலகத்தவராகிய தேவர்கட்கும் முதலாய் நிற்பவனும், வந்த இடத்திலே எனது உடம்பை விழச்செய்தவனும் ஆகிய சிவபெருமானை நான் பகலும், இரவும் வணங்கியும், துதித்தும் மயக்கத்தைச் செய்யும் இவ்வுலகத்திற்றானே மயக்கமின்றி இருக்கின்றேன்.

****************************************************

பாடல் எண் : 5


பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற

தற்பரன் கற்பனை யாகும் சராசரத்

தற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்

நற்பத மும்அளித் தான்எங்கள் நந்தியே.

 

பொழிப்புரை :  எங்கள் நந்தி பெருமான், ஆனேறு, மான், மழு என்பவற்றை விடாது கொண்டுள்ள சீகண்ட பரமேசுரனது உபதேசப் பொருளாகிய பொருட் பெற்றியாம் மறைபொருளையும் எனக்கு விளக்கி, தமது ஞானத்தைத் தரும் திருவடிகளையும் அடியேனது தலைமேல் சூட்டியருளினார்.

****************************************************

பாடல் எண் : 6


நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர்

என்றிவர் என்னோ டெண்மரு மாமே.

 

பொழிப்புரை :  நந்திபெருமானது அருளைப்பெற்ற ஆசிரியன்மார் யாவர் என்று ஆராயுமிடத்து, அவரோடு ஒத்த நால்வரும், சிவயோக முனிவரும், தில்லை அம்பலத்தை வணங்கிய பதஞ்சலி, வியாக்கிர பாதரும் என்ற இவர் என்னொடுகூட எண்மருமாவர் என்பதாம்.

****************************************************

பாடல் எண் : 7


நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றேன்

நந்தி அருளாலே மூலனை நாடினேன்

நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்

நந்தி வழிகாட்ட நான்இருந் தேனே.

 

பொழிப்புரை :  நந்தி பெருமானது அருளால் நான், ஆசிரியன் எனப் பெயர் பெற்றேன். பின்பு மூலன் உடலைப் பற்றுக்கோடாகக் கொண்டேன். அவரது அருள் இவ்வுலகில், நேரே எதனைச் செய்யும்? ஒன்றையும் செய்யாது. அதனால், அவரது அருள் வழியை உலகிற்கு உணர்த்த நான் இங்கிருக்கின்றேன்.

****************************************************

பாடல் எண் : 8


மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்

இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்

கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோ

டிந்த எழுவரும் என்வழி யாமே.


பொழிப்புரை :  எனது நூலாகிய இத்திருமந்திரத்தைப் பெற்று வழி வழியாக உணர்த்த இருப்பவர், மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், தறிபோன்ற உருவத்துடன் யோகத்தில் இருக்கும் காலாக்கினி, கஞ்சமலையன் என்னும் எழுவருமாவர். இவரே என்வழியினர்.

****************************************************

பாடல் எண் : 9


நால்வரும் நாலு திசைக்கொன்றும் நாதர்கள்

நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு

நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென

நால்வரும் தேவராய் நாதரா னார்களே.

 

பொழிப்புரை :  நந்தி பெருமானுக்கு மாணாக்கராகிய எண்மருள், நந்திகள் எனப்பட்ட நால்வரும் எல்லா உலகங்கட்கும் பொருந்திய ஆசிரியர்களாய், அறம் முதலாக நால்வகைப்பட்டுப் பற்பல வகையாக விரிந்த உறுதிப்பொருள் அனைத்தையும் உணர்ந்து, நான் பெற்ற பேற்றினை உலகம் பெறுவதாக என்னும் பேரருள் உடையராய், அதனால் சிவகணத்துள்ளே ஆசிரியராயினர்.

****************************************************

பாடல் எண் : 10


மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்

ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்

செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்

கழிந்த பெருமையைக் காட்டகி லானே.

 

பொழிப்புரை :  பிறப்பு இறப்புகள் இல்லாத பெருமையை உடைய முக்கட் கடவுள் தனது எல்லையில்லாத பெருமையைப் பிறர்க்குக் காட்டமாட்டானாயினும், அதனை அவன் ஆசான் மூர்த்தி வாயிலாகக் காட்டியது மேற்குறித்த நால்வரோடு, சிவயோக மாமுனி முதலிய மூவர்க்குமேயாம்.

****************************************************

பாடல் எண் : 11

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்

செழுந்தண் நியமங்கள் செய்மின் என் றண்ணல்

கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே

அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.


பொழிப்புரை :  தன்னைவிட்டு இமையளவும் பிரிய விரும்பாத நந்திகள் நால்வர்க்கும் சிவபெருமான் எதிர்ப்படத்தோன்றி, உலகம் அழிகின்ற ஊழிக் காலத்திலும் நீங்கள் நம்மை வழிபட்டிருப்பீராக என்று அருள்புரிந்தான்.

****************************************************

பாடல் எண் : 12

நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு

புத்தியி னுள்ளே புகப்பெய்து போற்றிசெய்

நந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்

சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே.


பொழிப்புரை : என் ஆசிரியராகிய நந்தி பெருமானது இரு திருவடிகளையும் என் சென்னியிலும், சிந்தையிலும் கொண்டு, வாயினாலும் துதித்து, அவ்வாற்றானே சிவபெருமானது திருவருட் பெருமையை இடைவிடாது சிந்தித்து உணர்ந்து, அங்ஙனம் உணர்ந்த வாற்றால், சிவாகமப் பொருளைக் கூறத் தொடங்கினேன்.

****************************************************

பாடல் எண் : 13

செப்பும் சிவாகமம் என்னுமப் பேர்பெற்றும்

அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்

தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்

ஒப்பில்ஒரு கோடி யுகமிருந் தேனே.


பொழிப்புரை : உயர்த்துச் சொல்லப்படுகின்ற `சிவாகமம் என்னும் பெயரையுடைய நூலைப் பெற்ற பின்பும், அவற்றின் பொருளை உள்ளவாறு உணர்த்துகின்ற நந்தி பெருமானது ஆணை வழி, அழிவில்லாத தில்லையம்பலத்தை அடைந்து அங்குச் சிவபெருமான் செய்யும் ஒப்பற்ற நடனத்தைக் கண்டு மீண்டபின், உடம்போடிருக்க உடன்படாத நிலையிலே பலகாலம் உடம்போடு இருந்தேன்.

****************************************************

பாடல் எண் : 14

இருந்தஅக் காரணம் கேள்இந் திரனே

பொருந்திய செல்வப் புவனா பதியாம்

அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன்

பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.


பொழிப்புரை :  இந்திரனே, உடன்பாடின்றியும் நான் அவ்வாறு நெடுநாள் உடம்போடிருந்த காரணத்தைக் கூறுகின்றேன்; கேள். எல்லா உலகங்கட்கும் தலைவியாம் அருந்தவ மாகிய செல்வியை அடியேன் அன்பினால் விரும்பி உடன் நின்று பணிந்து வந்தேன்.

****************************************************

பாடல் எண் : 15

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்

மிதாசனி யாதிருந் தேன்நின்ற காலம்

இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி

உதாசனி யாதுட னேஉணர்ந் தோமால்.


பொழிப்புரை : இறப்புத் தோன்றாதவனாய் இருந்து வாழ்ந்த அக்காலம் முழுதும் உலகத்தில் விருப்பம் தோன்றாது மனஒடுக்கம் உடையவனாயே இருந்தேன். அவ்வாறிருக்கும் பொழுது, சிவபெருமானது ஐந்தொழில்நிலை, பொருட்பெற்றி, தமிழ்மொழி, வேதம் என்னும் இவைகளைப் புறக்கணியாது விருப்பத்துடன் கற்று உணர்ந்தேன்.

****************************************************

பாடல் எண் : 16

மாலாங்க னேஇங் கியான்வந்த காரணம்

நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு

மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்

சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.  


பொழிப்புரை :  மாலாங்கனே, திருக்கயிலையை விட்டு இத்தமிழ்நாட்டிற்கு நான் வந்தகாரணம் கேள். சிவபெருமான் முதற்கண் உமை அம்மைக்கு முதல் நூலாகச் சொல்லிய சிவாகமத்தின் பொருளைச் சொல்லுதற்காகவே வந்தேன்.

****************************************************

பாடல் எண் : 17

நேரிழை யாவாள் நிரதி சயானந்தப்

பேருடை யாள்என் பிறப்பறுத் தாண்டவள்

சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை

சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.


பொழிப்புரை : `உமையம்மை` என்று சொல்லப்படுபவள் வரம்பில் இன்பமாகின்ற பெருமையை உடையவள். அவள் எனது பிறப்பை அறுத்து வீடு தந்து என்னை ஆட்கொண்டவள்; மிக்க புகழை உடையவள்; சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவாவடுதுறையாகிய இச்சிறந்த திருத்தலத்தைத் தனதாக உடையவள். அவள் திருவடி நிழலில் இதுபொழுது இருக்கின்றேன்.

****************************************************

பாடல் எண் : 18

சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்

சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை

சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்

சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.


பொழிப்புரை :  சீருடையாள் பதம் சேர்ந்தமையால் அவளை ஒருபாகத்தில் உடைய சிவனையும் சேர்ந்திருக்கின்றேன். இத் திருவாவடுதுறை அவளுடையது மட்டுமன்று; அவனுடையதுந்தான். இங்குச் சிவஞானத் திருவின்கீழ் அவனது திருப்பெயர் பலவற்றையும் ஓதித் துதித்துக் கொண்டிருக்கின்றேன்.

****************************************************

பாடல் எண் : 19

இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி

இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே

இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே

இருந்தேன்என் நந்தி இணையடிக் கீழே.


பொழிப்புரை :  இங்கும் இவ்வுடம்பிலே பல்லாண்டுகள் இருந்தேன். அங்ஙனம் இருந்த காலம் முழுவதும் சிவஞானப் பேரொளியில்தான் இருந்தேன். அது தேவராலும் வணங்கப்படும் எங்கள் நந்தி பெருமானது திருவடி நிழலேயன்றி வேறில்லை.

****************************************************

பாடல் எண் : 20

பின்னைநின் றென்னே பிறவி பெறுவது

முன்னைநன் றாக முயல்தவம் செய்திலர்

என்னைநன் றாக இறைவன் படைத்தனன்

தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.


பொழிப்புரை :  முற்பிறப்பில் நன்கு முயல்கின்ற தவத்தைச் செய்யாதவர், பின்னை நற்பிறவியைப் பெறுதல் எவ்வாறு கூடும்! கூடாது. ஆகவே நான்செய்த தவம் காரணமாக இறைவன் என்னைத் தன்னைத் தமிழ்மொழியால் நன்றாகப் பாடும் வண்ணம் செவ்விய முறையால் படைத்தான்.

**************************************************


பாடல் எண் : 21

ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு

ஊனமில் ஒன்பது கோடி யுகந்தன்னுள்

ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து

நானும் இருந்தேன்நற் போதியின் கீழே.

பொழிப்புரை : பொழிப்புரை எழுதவில்லை


****************************************************

பாடல் எண் : 22

செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்

வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்

பல்கின்ற தேவர் அசுரர் நரர்தம்பால்

ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.


பொழிப்புரை : பொழிப்புரை எழுதவில்லை

****************************************************

பாடல் எண் : 23

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்

உத்தம மாகவே ஓதிய வேதத்தின்

ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி

அத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே.


பொழிப்புரை : மக்களுடைய உள்ளத்தில் சிறந்து நிற்கின்ற நூல்கள் பலவற்றிலும் தலையானதாகச் சொல்லப்படுகின்ற வேதத்தைச் சொல்லுதற்கு ஏற்ற உடம்பையும், உள்ளக்கருத்தையும் எனக்கு இங்கு இறைவன் அளித்தது, தனது அருள் காரணமாகவாம்.

****************************************************

பாடல் எண் : 24

நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்

வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்

ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம்

தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.


பொழிப்புரை :  பரவெளியைப் பற்றிநிற்கின்ற வேதப்பொருளை உள்ளவாறு உணர்ந்து சொன்னால் அதுவே, `உடம்பைப் பற்றி நிற்கின்ற உயிருணர்வில் நிலைத்துநிற்கும் மந்திரம்` எனப்படும். அம்மந்திரத்தை இடையறாது உணர உணரப் பேரின்பம் கிடைப்பதாம். அவ்வாற்றால் நான்பெற்ற இன்பத்தை, இவ்வுலகமும் பெறுவதாக.

****************************************************

பாடல் எண் : 25

பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்

சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி

மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை

உறைப்பொடுங் கூடிநின் றோதலு மாமே.


பொழிப்புரை : தேவர் பலரும், பிறப்பில்லாத முதல்வனும், `நந்தி` என்னும் பெயருடையவனும் ஆகிய சிவபெருமானைத் தூய்மையுடன் சென்று கைதொழுது இம் `மந்திரமாலை` நூலை மறவாது மனத்துட் கொள்வர். ஆகவே, நீவிரும் இதனை உறுதியாக நின்று ஓதுதல் வேண்டும்.

****************************************************

பாடல் எண் : 26


அங்கி மிகாமைவைத் தான்உடல் வைத்தான்

எங்கும் மிகாமைவைத் தான்உல கேழையும்

தங்கி மிகாமைவைத் தான்தமிழ்ச் சாத்திரம்

பொங்கி மிகாமைவைத் தான்பொருள் தானுமே.  


பொழிப்புரை :  உடம்பைப் படைத்த இறைவன், அதனுள் வேண்டும் அளவிற்கே நெருப்பை அமைத்துள்ளான். நிலவுலகைப் படைத்த அவன் அளவின்றி எங்கும் பரந்து கிடப்பப் படையாது, ஏழென்னும் அளவிற்படவே படைத்தான். அவ்வாறே தமிழ் நூல்களையும் கற்பாரின்றி வீணே கிடக்க வையாது, அளவாக வைத்தான். பொருளையும் அவற்றால் மிகைபடாது இன்றியமையாத அளவிலே புலப்பட வைத்தான்.

****************************************************

பாடல் எண் : 27

ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை

மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை

ஆயத்தை அச்சிவன் றன்னை அகோசர

வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.


பொழிப்புரை :இம்மூவாயிரம் பாட்டுக்களிலே, `அறியப்படும் பொருள், அறிவு, அறிபவன், அசுத்தமாயா காரியம், சுத்தமாயா காரியம், அனைத்திற்கும் மேலான பரம்பொருளாகிய சிவன் என்று சொல்லப்படுகின்ற வாக்கு மனங்கட்கு எட்டாத முதல்கள் ஆகிய அனைத்தின் இயல்பையும் முற்றக் கூறுவேன்.

****************************************************

பாடல் எண் : 28

விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி

அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி

துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து

வளப்பிற் கயிலை வழியில்வந் தேனே.


பொழிப்புரை :  இவை அனைத்தையும் விளக்கிச் சிவபெருமானது உபதேச முறையில் நின்று, `திருக்கயிலாய பரம்பரையில் வந்த ஆசிரியன்` என்னும் பேற்றைப் பெற்றவனாவேன்.

****************************************************

பாடல் எண் : 29

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்

நந்தி அருளாலே சதாசிவ னாயினேன்

நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்

நந்தி அருளாலே நான்இருந் தேனே.


பொழிப்புரை :  சிவபெருமானது திருவருளால் மூலனது உடலைப் பற்றி நின்றபின், அவனது திருவருளாலே ஆகமத்தைப் பாடும் நிலையை அடைந்தேன். அந்நிலையில் அவன் அருளால் நிட்டையும் பெற்றுச் சீவன் முத்தி நிலையில் பல்லாண்டுகள் இருக்கின்றேன்.

****************************************************

பாடல் எண் : 30

இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி

அருக்கிய மூலத்துள் அங்கே இருக்கும்

அருக்கனும் சோமனும் ஆரழல் வீச

உருக்கி யுரோமம் ஒளிவிடுந் தானே.


பொழிப்புரை :  பல்லாண்டுகள் ஓர் உடம்பிலே இருத்தல் கூடுமோ? உடம்பு தளர்ச்சியுற்று அழிந்தொழியாதோ எனில் மறைவிடமாகிய மூலாதாரத்துள், எழாது கிடக்கின்ற அரிய நெருப்பை, `சூரியகலை. சந்திரகலை` என்னும் இருகாற்றும் அடங்கி நின்று மூட்டி வளர்க்கும்படி இருந்தால், உடம்பு நெடுங்காலம் தளர்வின்றி இருக்கும்; உரோமமும் வெளிறாது கறுத்து அழகுற்று விளங்கும்.

***************************************************


பாடல் எண் : 31

பிதற்றுகின் றேன்என்றும் பேர்நந்தி தன்னை

இயற்றுவன் நெஞ்சத் திரவும் பகலும்

உயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை

இயற்றிகழ் சோதி இறைவனும் ஆமே.

 

பொழிப்புரை :  இவ்வாறிருக்கின்ற நிலையில் நான் இரவும் பகலும் சிவபிரானது பெயரையே பிதற்றுவேன். நெஞ்சில் நினைப்பேன்; காயத்தால் அவனை வழிபடுவேன். அதனால், விளக்க விளங்குகின்ற என் அறிவும், இயல்பாய் விளங்குகின்ற சிவனது அறிவேயாய்த் திகழும்.

 

****************************************************

பாடல் எண் : 32

ஆர்அறி வார்எங்கள் அண்ணல் பெருமையை

ஆர்அறி வார்அவ் வகலமும் நீளமும்

பேர்அறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்

வேர்அறி யாமை விளம்புகின் றேனே.


பொழிப்புரை : எங்கள் சிவபெருமானது திருவருளின் பெருமையை முற்ற உணர்வோர் யாவர்! அவனது பரப்பைத்தான் யாவர் உணரவல்லார்! சொல்லுக்கு அகப்படாத பேரறிவுப் பொருள் தன்னோடு ஒப்பது பிறிதொன்றில்லதாய் உளது. அதனது மெய்ந்நிலையை அறியாமலே நான் பலரும் அறியக்கூறத் தொடங்கினேன்.

****************************************************

பாடல் எண் : 33

பாடவல் லார்நெறி பாடஅறிகி லேன்

ஆடவல் லார்நெறி ஆடஅறிகி லேன்

நாடவல் லார்நெறி நாடஅறிகி லேன்

தேடவல் லார்நெறி தேடகில் லேனே..


பொழிப்புரை : இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுள் ஒன்றையும் நெறிப்பட அறிகிலேன். அளவை நூல் முறையால் ஆராயவும் வல்லனல்லேன். பேரன்பினால் இறைவனையே தேடி அலையும் நிலைமையும் இல்லேன்.

****************************************************

பாடல் எண் : 34

மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்

இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்

பின்னை உலகம் படைத்த பிரமனும்

உன்னும் அவனை உணரலும் ஆமே.


பொழிப்புரை :   தன்னை அறிகின்றவரது உள்ளத்தில் வீணையுள் இனிய இசை போல மெல்ல எழுகின்றவனும், உலகத்தைப் படைத்த பிரமனாலும் தியானிக்கப் படுகின்றவனும் ஆகிய இறைவனது பெருமையை, நிலைபெற்ற மெய்ந்நூல் வழியாகவும் சிறிது உணர்தல் கூடும்.

****************************************************

பாடல் எண் : 35

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை

முத்திக் கிருந்த முனிவருந் தேவரும்

ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்

பத்திமை யால்இப் பயன்அறி யாரே.


பொழிப்புரை :  மன்னிய வாய் மொழியாகிய சிவாகமங்கள், வீடு பேற்றை அடைவதற்கு விரும்பியிருந்த முனிவரும், தேவரும் கருத்தொருமை கொண்டு உலகப் பயன் விரும்பும் மக்களை விடுத்துத் தனி இடத்திலிருந்து வேண்டிக் கொண்ட அன்பு காரணமாக இறைவன் உண்மை ஞானத்தைக் கயிலைத் தாழ்வரைக்கண் இருந்து உணர்த்தியருளிய நூல்களாம். பக்குவம் இல்லாதோர் இவ்வுண்மையை அறிய மாட்டார்.

****************************************************

பாடல் எண் : 36

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்

ஞாலம் அறியவே நந்தி அருளது

காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்

ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே..  


பொழிப்புரை : மூலன் பாடிய மூவாயிரம் பாடலையுடைய இத்தமிழ் நூல் நந்தி பெருமானது அருள் உணர்த்திய பொருளை உடையதே. அதனால், நாள்தோறும் இதனைப் பொருளுணர்ந்து ஓதுவோர் முதற் கடவுளாகிய சிவபெருமானை அடைவர்.

****************************************************

பாடல் எண் : 37

வைத்த பரிசே வகைவகை நன்னூலின்

முத்தி முடிவிது மூவா யிரத்திலே

புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது

வைத்த சிறப்புத் தரும்இவை தானே..

 

பொழிப்புரை : பொழிப்புரை எழுதவில்லை. குறிப்புரை : இப்பாட்டுக்கள் பின்வந்தோர் செய்தவை. இவை முறையே `முத்தி சாதனமாகிய இந்நூற்கு முதற்கண் உள்ள இப் பாட்டுக்கள் பாயிரம்` என்பதும், `திருமூலரது முதல் மடத்தினின்றும் அவர் மாணாக்கர் எழுவரது கிளைமடங்கள் தோன்றின; அவை அனைத்திற்கும் நூல் இத்திருமந்திரம்; இஃது ஒன்பது தந்திரங்களையும் உடையது` என்பதும், `திருமூலர் மாணாக்கர் எழுவருள், `காலாக்கினி` என்பவரது மரபு, அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பரமானந்தர் போக தேவர், மூலர் என்னும் முறையில் தொடர்ந்து விளங்கிற்று` என்பதும் கூறுவன. இறுதிக்கண் சொல்லப்பட்ட `மூலர்` என்பவர்தம் மாணாக்கரே இப்பாட்டுக்களைச் செய்தார் போலும்! அல்லது முதல் இரண்டை முன்னவருள் சிலர் செய்திருத்தலும் கூடுவதே.

****************************************************

பாடல் எண் : 38

வந்த மடம்ஏழு மன்னும்சன் மார்க்கத்தின்

முந்தி உதிக்கின்ற மூலன் மடவரைத்

தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்

சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.


பொழிப்புரை : பொழிப்புரை எழுதவில்லை. குறிப்புரை : இப்பாட்டுக்கள் பின்வந்தோர் செய்தவை. இவை முறையே `முத்தி சாதனமாகிய இந்நூற்கு முதற்கண் உள்ள இப் பாட்டுக்கள் பாயிரம்` என்பதும், `திருமூலரது முதல் மடத்தினின்றும் அவர் மாணாக்கர் எழுவரது கிளைமடங்கள் தோன்றின; அவை அனைத்திற்கும் நூல் இத்திருமந்திரம்; இஃது ஒன்பது தந்திரங்களையும் உடையது` என்பதும், `திருமூலர் மாணாக்கர் எழுவருள், `காலாக்கினி` என்பவரது மரபு, அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பரமானந்தர் போக தேவர், மூலர் என்னும் முறையில் தொடர்ந்து விளங்கிற்று` என்பதும் கூறுவன. இறுதிக்கண் சொல்லப்பட்ட `மூலர்` என்பவர்தம் மாணாக்கரே இப்பாட்டுக்களைச் செய்தார் போலும்! அல்லது முதல் இரண்டை முன்னவருள் சிலர் செய்திருத்தலும் கூடுவதே. 

****************************************************

பாடல் எண் : 39

கலந்தருள் காலாங்கர் தம்பால் அகோரர்

நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்

புலங்கொள் பரமானந் தர்போக தேவர்

நிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே.


பொழிப்புரை :   பொழிப்புரை எழுதவில்லை. குறிப்புரை : இப்பாட்டுக்கள் பின்வந்தோர் செய்தவை. இவை முறையே `முத்தி சாதனமாகிய இந்நூற்கு முதற்கண் உள்ள இப்பாட்டுக்கள் பாயிரம்` என்பதும், `திருமூலரது முதல் மடத்தினின்றும் அவர் மாணாக்கர் எழுவரது கிளைமடங்கள் தோன்றின; அவை அனைத்திற்கும் நூல் இத்திருமந்திரம்; இஃது ஒன்பது தந்திரங்களையும் உடையது` என்பதும், `திருமூலர் மாணாக்கர் எழுவருள், `காலாக்கினி` என்பவரது மரபு, அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பரமானந்தர் போகதேவர், மூலர் என்னும் முறையில் தொடர்ந்து விளங்கிற்று` என்பதும் கூறுவன. இறுதிக்கண் சொல்லப்பட்ட `மூலர்` என்பவர்தம் மாணாக்கரே இப்பாட்டுக்களைச் செய்தார் போலும்! அல்லது முதல் இரண்டை முன்னவருள் சிலர் செய்திருத்தலும் கூடுவதே.

****************************************************

திருமூலர் திருமந்திரம்

பாயிரம்

கடவுள் வாழ்த்து

1 ஒன்று அவன் தானே, இரண்டு அவன் இன் அருள்,
நின்றனன் மூன்றின் உள், நான்கு உணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன், ஏழ் உம்பர்ச்
சென்றனன், தான் இருந்தான் உணர்ந்து எட்டே.

2 போற்றி இசைத்து இன் உயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கும் நல்ல மாதுக்கு நாதனை
மேல் திசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனாம்
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே.

3 ஒக்க நின்றானை உலப்பு இலி தேவர்கள்
நக்கன் என்று ஏத்திடு நாதனை நாள் தொறும்
பக்க நின்றார் அறியாத பரமனைப்
புக்கு நின்று உன்னி யான் போற்றி செய்வேனே.

4 சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்து அன்று பொன் ஒளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

5 அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை
அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே.

6 முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னை அப்பா எனில் அப்பனும் ஆய் உளன்
பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத் தானே.

7 தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை
சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.

8 பொன்னால் புரிந்திட்ட பொன் சடை என்னப்
பின்னால் பிறங்க இருந்தவன் பேர் நந்தி
என்னால் தொழப் படும் எம் இறை மற்று அவன்
தன்னால் தொழப் படுவார் இல்லை தானே.

9 அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்
இயலும் பெரும் தெய்வம் யாதும் ஒன்று இல்லை
முயலும் முயலில் முடிவும் மற்று ஆங்கே
பெயலும் மழை முகில் பேர் நந்தி தானே.

10 பிதற்றுகின்றேன் என்றும் பேர் நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கு ஒளி வண்ணன் எம்மானை
இயல் திகழ் சோதி இறைவனும் ஆமே.

11 கண் நுதலான் ஒரு காதலின் நிற்கவும்
எண் இலிதேவர் இறந்தார் எனப்பலர்
மண் உறுவார்களும் வான் உறுவார்களும்
அண்ணல் இவன் என்று அறிய கிலார்களே.

12 மண் அளந்தான் மலரோன் முதல் தேவர்கள்
எண் அளந்து இன்ன நினைக்கிலார் ஈசனை
விண் அளந்தான் தன்னை மேல் அளந்தார் இல்லை
கண் அளந்து எங்கும் கடந்து நின்றானே.

13 கடந்து நின்றான் கமலம் மலர் ஆதி
கடந்து நின்றான் கடல்வண்ணன் எம் மாயன்
கடந்து நின்றான் அவர்க்கு அப்புறம் ஈசன்
கடந்து நின்றான் எங்கும் கண்டு நின்றானே.

14 ஆதியும் ஆய் அரனாய் உடல் உள் நின்ற
வேதியும் ஆய் விரிந்து ஆர்த்து இருந்தான் அருள்
சோதியும் ஆய்ச் சுருங்காதது ஓர் தன்மையுள்
நீதியும் ஆய் நித்தம் ஆகி நின்றானே.

15 கோது குலாவிய கொன்றைக் குழல் சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவிக் குணம் பயில்வாரே.

16 காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்
ஆயம் கத்தூரி அது மிகும் அவ்வழி
தேசம் கலந்து ஒரு தேவன் என்று எண்ணினும்
ஈசன் உறவுக்கு எதிர் இல்லை தானே.

17 அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறை தவ நோக்கி
அதுபதி ஆதரித்து ஆக்கம் அது ஆக்கின்
இதுபதி கொள் என்ற எம் பெருமானே.

18 இதுபதி ஏலம் கமழ் பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூது அறிவாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி ஆக அமருகின்றானே.

19 முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறன் நெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்ற மலையது தானே.

20 மன்னிய வாய்மொழியாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலும் ஆமே.

21 வானப் பெரும் கொண்டல் மால் அயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்த எம்
கோனைப் புகழுமின் கூடலும் ஆமே.

22 மனத்தில் எழுகின்ற மாய நல் நாடன்
நினைத்தது அறிவன் எனில் தான் நினைக்கிலர்
எனக்கு இறை அன்பு இலன் என்பர் இறைவன்
பிழைக்க நின்றார் பக்கம் பேணி நின்றானே.

23 வல்லவன் வன்னிக்கு இறை இடை வாரணம்
நில் எயன நிற்பித்த நீதியுள் ஈசனை
இல் என வேண்டா இறையவர் தம் முதல்
அல்லும் பகலும் அருளு கின்றானே.

24 போற்றி இசைத்தும் புகழ்ந்தும் புனிதன் தன்னடி
தேற்றுமின் என்றும் சிவன் அடிக்கே செல்வம்
ஆற்றியது என்று மயல் உற்ற சிந்தையை
மாற்றி நின்றார் வழி மன்னி நின்றானே.

25 பிறப்பு இலி பிஞ்ஞகன் பேர் அருளாளன்
இறப்பு இலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பு இலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பு இலி மாயா விருத்தமும் ஆமே.

26 தொடர்ந்து நின்றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்து நின்றான் பரி பாரகம் முற்றும்
கடந்து நின்றான் கமலம் மலர் மேலே
உடந்து இருந்தான் அடிப் புண்ணியம் ஆமே.

27 சந்தி எனத் தக்க தாமரை வாள் முகத்து
அந்தம் இல் ஈசன் அருள் நமக்கே என்று
நந்தியை நாளும் வணங்கப் படும் அவர்
புந்தியின் உள்ளே புகுந்து நின்றானே.

28 இணங்கி நின்றான் எங்கும் ஆகி நின்றானும்
பிணங்கி நின்றான் பின் முன்னாகி நின்றானும்
உணங்கி நின்றான் அமரா பதி நாதன்
வணங்கி நின்றார்க்கே வழித்துணை ஆமே.

29 காண நில்லாய் அடியேற்கு உறவு ஆர் உளர்
நாண நில்லேன் உன்னை நான் தழுவிக் கொளக்
கோண நில்லாத குணத்து அடியார் மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்து நின்றானே.

30 வான் நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தான் நின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்
ஆன் நின்று அழைக்கும் அதுபோல் என் நந்தியை
நான் நின்று அழைப்பது ஞானம் கருதியே.

31 மண் அகத்தான் ஒக்கும் வான் அகத்தான் ஒக்கும்
விண் அகத்தான் ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்
பண் அகத்து இன் இசை பாடல் உற்றானுக்கே
கண் அகத்தே நின்று காதலித் தேனே.

32 தேவர் பிரான் நம்பிரான் திசை பத்தையும்
மேவு பிரான் விரி நீர் உலகு ஏழையும்
தாவும் பிரான் தன்மை தான் அறிவார் இல்லை
பாவு பிரான் அருள் பாடலும் ஆமே.

33 பதி பல ஆயது பண்டு இவ் உலகம்
விதி பல செய்து ஒன்று மெய்ம்மை உணரார்
துதி பல தோத்திரம் சொல்ல வல்லாரும்
மதி இலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே.

34 சாந்து கமழும் கவரியின் கந்தம் போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந் நெறி
ஆர்ந்த சுடர் அன்ன ஆயிரம் நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின்றேனே.

35 ஆற்று கிலா வழியாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேல்திசைக்கும் கிழக்குத் திசை எட்டொடு
மாற்றுவன் அப்படி ஆட்டவும் ஆமே.

36 அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பு இலி வள்ளலை ஊழி முதல்வனை
எப் பரிசு ஆயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப் பரிசு ஈசன் அருள் பெறலாமே.

37 நானும் நின்று ஏத்துவன் நாள் தொறும் நந்தியைத்
தானும் நின்றான் தழல் தான் ஒக்கும் மேனியன்
வானில் நின்றார் மதிபோல் உடல் உள் உவந்து
ஊனில் நின்று ஆங்கே உயிர்க்கின்ற ஆறே.

38 பிதற்று ஒழியேன் பெரியான் அரியானைப்
பிதற்று ஒழியேன் பிறவா உருவானைப்
பிதற்று ஒழியேன் எங்கள் பேர் நந்தி தன்னைப்
பிதற்று ஒழியேன் பெருமைத்தவன் யானே.

39 வாழ்த்த வல்லார் மனத்து உள் உறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம் பெருமான் என்று இறைஞ்சியும்
ஆத்தம் செய்து ஈசன் அருள் பெறலாமே.

40 குறைந்து அடைந்து ஈசன் குரை கழல் நாடும்
நிறைந்து அடை செம் பொனின் நேர் ஒளி ஒக்கும்
மறைஞ் சடம் செய்யாது வாழ்த்த வல்லார்க்குப்
புறம் சடம் செய்வான் புகுந்து நின்றானே.

41 சினம் செய்த நஞ்சு உண்ட தேவர் பிரானைப்
புனம் செய்த நெஞ்சு இடை போற்ற வல்லார்க்குக்
கனம் செய்த வாள் நுதல் பாகனும் அங்கே
இனம் செய்த மான்போல் இணங்கி நின்றானே.

42 போய் அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயகன் நான் முடி செய்ததுவே நல்கு
மாயகம் சூழ்ந்து வர வல்லார் ஆகிலும்
வேய் அன தோளிக்கு வேந்து ஒன்றும்தானே.

43 அரன் அடி சொல்லி அரற்றி அழுது
பரன் அடி நாடியே பாவிப்ப நாளும்
உரன் அடி செய்து அங்கு ஒதுங்க வல்லார்க்கு
நிரன் அடி செய்து நிறைந்து நின்றானே.

44 போற்றி என்பார் அமரர் புனிதன் அடி
போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி
போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி
போற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே.

45 விதிவழி அல்லது இவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவன் ஆமே.

46 அந்தி வண்ணா அரனே சிவனே என்று
சிந்தை செய் வண்ணம் திருந்து அடியார் தொழ
முந்தி வண்ணா முதல்வா பரனே என்று
வந்து இவ்வண்ணன் எம் மனம் புகுந்தானே.

47 மனை உள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவு உள் இருந்தவர் நேசத்து உள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்து அது போல
நினையாதவர்க்கு இல்லை நின் இன்பம் தானே.

48 அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கு என்று மேவி நின்றேனே.

49 பரை பசு பாசத்து நாதனை உள்ளி
உரை பசு பாசத்து ஒருங்க வல்லார்க்குத்
திரை பசு பாவச் செழும் கடல் நீந்திக்
கரை பசு பாசம் கடந்து எய்தலாமே.

50 சூடுவன் நெஞ்சு இடை வைப்பன் பிரான் என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்து நின்று
ஆடுவன் ஆடி அமரர் பிரான் என்று
நாடுவன் யான் இன்று அறிவது தானே.

2. மும் மூர்த்திகளின் முறைமை


1 அளவு இல் இளமையும் அந்தமும் ஈறும்
அளவு இயல் காலமும் நாலும் உணரில்
தளர்வு இலன் சங்கரன் தன் அடியார் சொல்
அளவு இல் பெருமை அரி அயற்கு ஆமே.

2 ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர் மிசையானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்று எனார்
பேதித்து உலகம் பிணங்கு கின்றார்களே.

3 ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம்
பீசம் உலகில் பெரும் தெய்வம் ஆனது
ஈசன் அது இது என்பார் நினைப்பு இலார்
தூசு பிடித்தவர் தூர் அறிந்தார் களே.

4 சிவன் முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவை முதல் ஆறு இரண்டு ஒன்றோடு ஒன்று ஆகும்
அவை முதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவை முதல் சங்கரன் தன் பெயர் தானே.

5 பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால் நமக்கு அன்னியம் இல்லை
நயனங்கள் மூன்று உடை நந்தி தமர் ஆம்
வயனம் பெறுவீர் அவ் வானவராலே.

6 ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பால் ஒத்த மேனி பணிந்து அடியேன் தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்பு நீ
ஞாலத்து நம் அடி நல்கிடு என்றானே.

7 வானவர் என்றும் மனிதர் இவர் என்றும்
தேன் அமர் கொன்றைச் சிவன் அருள் அல்லது
தான் அமர்ந்து ஓரும் தனித் தெய்வம் மற்று இல்லை
ஊன் அமர்ந்தோரை உணர்வது தானே.

8 சோதித்த பேர் ஒளி மூன்று ஐந்து என நின்ற
ஆதிக் கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன் என்று
பேதித்து அவரைப் பிதற்றுகின்றாரே.

9 பரத்திலே ஒன்றாய் உள்ளாய்ப் புறம் ஆகி
வரத்தினுள் மாயவனாய் அயன் ஆகித்
தரத்தினுள் தான் பல தன்மையன் ஆகிக்
கரத்தினுள் நின்று கழிவு செய்தானே.

10 தான் ஒரு கூறு சதாசிவன் எம் இறை
வான் ஒரு கூறு மருவியும் அங்கு உளான்
கோன் ஒரு கூறு உடல் உள் நின்று உயிர்க்கின்ற
தான் ஒரு கூறு சலம் அயன் ஆமே.

3. வேதச் சிறப்பு 


1 வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள தர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளம் உற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே.
 
2 வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதன் உரைத்தானும் மெய்ப் பொருள் காட்டவே.
 
3 இருக்கு உருவாம் எழில் வேதத்தின் உள்ளே
உருக்கு உணர் வாய் உணர் வேதத்துள் ஓங்கி
வெருக்கு உருவாகிய வேதியர் சொல்லும்
கருக்கு உருவாய் நின்ற கண்ணனும் ஆமே.
   
4 இருக்கில் இருக்கும் எண் இலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆர் அழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடும் தானே.
 
5 திரு நெறி ஆவது சித்த சித்து அன்றிப்
பெரு நெறி ஆய பிரானை நினைந்து
குரு நெறி ஆம் சிவமா நெறி கூடும்
ஒரு நெறி ஒன்று ஆக வேதாந்தம் ஓதுமே.
   
6 ஆறு அங்கமாய் வரு மாமறை ஓதியைக்
கூறு அங்கம் ஆகக் குணம் பயில்வார் இல்லை
வேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம்
பேறு அங்கம் ஆகப் பெருக்கு கின்றாரே.

 
7 பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதம் இல்லாதவர்
ஈட்டும் இடம் சென்று இகலல் உற்றாரே.

4. ஆகமச் சிறப்பு


1 அஞ்சன மேனி அரிவை ஓர் பாகத்தன்
அஞ்சொடு இருபத்து மூன்று உள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சா முகத்தில் அரும் பொருள் கேட்டதே.

2 அண்ணல் அருளால் அருளும் சிவா ஆகமம்
எண்ணில் இருபத்து எண் கோடி நூறு ஆயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணி நின்ற அப் பொருள் ஏத்துவன் யானே.

3 அண்ணல் அருளால் அருளும் திவ்யா கமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்க அரிது
எண்ணில் எழுபது கோடி நூறு ஆயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.

4 பரனாய்ப் பரா பரம் காட்டி உலகில்
அரனாய்ச் சிவ தன்மம் தானே சொல் காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே.

5 சிவம் ஆம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவ மால் பிரமீசர் தம்மில் தாம் பெற்ற
நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே.

6 பெற்ற நல் ஆகமம் காரணம் காமிகம்
உற்ற நல் வீரம் உயர் சித்தம் வாதுளம்
மற்று அவ் வியாமளம் ஆகும்கால் ஓத்தரந்து
உற்ற நல் சுப்பிரம் சொல்லு மகுடமே.

7 ஆகமம் ஒன்பான் அதில் ஆன நால் ஏழு
மேகம் இல் நால் ஏழு முப்பேதம் உற்று உடன்
வேகம் இல் வேதாந்த சித்தாந்த மெய்ம்மை ஒன்று
ஆக முடிந்த அரும் சுத்த சைவமே.

5. அந்தணர் ஒழுக்கம்


1 அந்தணர் ஆவோர் அறு தொழில் பூண்டு உளோர்
செந்தழல் ஓம்பி முப்போதும் நியமம் செய்
நம்தவ நல் கருமத்து நின்று ஆங்கு இட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கு அறுப்போர்களே.

2 காயத்திரியே கருது சாவித்திரி
ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி
நேயத் தேர் ஏறி நினைவு உற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே.

3 பெருநெறி ஆன பிரணவம் ஓர்ந்து
குரு நெறியால் உரை கூடி நால் வேதத்து
இரு நெறி ஆன கிரியை இருந்து
சொருபம் அது ஆனோர் துகள் இல் பார்ப்பாரே.

4 சத்தியமும் தவம் தான் அவன் ஆதலும்
எய்த் தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்கள் உண்டாய் உணர்வு உற்றுப்
பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே.

5 வேத அந்தம் கேட்க விரும்பிய வேதியர்
வேத அந்தம் கேட்டும் தம் வேட்கை ஒழிந்திலர்
வேத அந்தம் ஆவது வேட்கை ஒழிந்து இடம்
வேத அந்தம் கேட்டவர் வேட்கை விட்டாரே.

6 நூலும் சிகையும் நுவலில் பிரமமோ
நூல் அது கார்ப் பாச நுண்சிகை கேசம் ஆம்
நூல் அது வேதாந்தம் நுண் சிகை ஞானம் ஆம்
நூல் உடை அந்தணர் காணும் நுவலிலே.

7 சத்தியம் இன்றித் தனி ஞானம் தான் இன்றி
ஒத்த விடையம் விட்டோரும் உணர்வு இன்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை இன்றிப்
பித்து ஏறும் மூடர் பிராமணர் தாம் அன்றே.

8 திருநெறி ஆகிய சித்த சித்து இன்றிக்
குருநெறி யாலே குருபதம் சேர்ந்து
கரும நியம் ஆதி கை விட்டுக் காணும்
துரிய சமதி ஆம் தூய் மறை யோர்க்கே.

9 மறையோர் அவரே மறைவர் ஆனால்
மறையோர் தம் வேத அந்த வாய்மையில் தூய்மை
குறையோர் தன் மற்று உள்ள கோலாகலம் என்று
அறிவோர் மறை தெரிந்த அந்தணர் ஆமே.

10 அம் தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தை செய் அந்தணர் சேரும் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்று ஆகும்
அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே.


6. ஆகுதி வேட்டல்


1 வசை இல் விழுப் பொருள் வானும் நிலனும்
திசையும் திசை பெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேத முதல் ஆம்
அசை இலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.

2 ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போ கதி நாடிப் புறம் கொடுத்து உண்ணுவர்
தாம் விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாம் அறிவாலே தலைப் பட்ட வாறே.

3 அணை துணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணை துணை வைத்து அதன் உள் பொருள் ஆன
இணை துணை யாமத்து இயங்கும் பொழுது
துணை அணை ஆயது ஓர் தூய் நெறியாமே.

4 தானே விடும் பற்று இரண்டும் தரித்திட
யானே விடப் படும் ஏது ஒன்றை நாடாது
பூ மேவு நான் முகன் புண்ணிய போகனாய்
ஓ மேவும் ஓர் ஆகுதி அவி உண்ணவே.

5 நெய் நின்று எரியும் நெடும் சுடரே சென்று
மை நின்று எரியும் வகை அறிவார் கட்கு
மை நின்று அவிழ் தருமத்தின் ஆம் என்றும்
செய் நின்ற செல்வம் தீ யதுவாமே.

6 பாழி அகலும் எரியும் திரிபோல் இட்டு
ஊழி அகலும் உறுவினை நோய் பல
வாழி செய்து அங்கி உதிக்க அவை விழும்
வீழி செய்து அங்கி வினை சுடும் ஆமே.

7 பெரும் செல்வம் கேடு என்று முன்னே படைத்த
வரும் செல்வம் தந்த தலைவனை நாடும்
வரும் செல்வத்து இன்பம் வர இருந்து எண்ணி
அரும் செல்வத்து ஆகுதி வேட்க நின்றாரே.

8 ஒண் சுடரானை உலப்பு இலி நாதனை
ஒண் சுடர் ஆகி என் உள்ளத்து இருக்கின்ற
கண் சுடரோன் உலகு ஏழும் கடந்த அத்
தண் சுடர் ஓமத் தலைவனும் ஆமே.

9 ஓமத்துள் அங்கியின் உள் உளன் எம் இறை
ஈமத்துள் அங்கி இரதம் கொள்வான் உளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக் கடல்
கோமத்துள் அங்கி குரை கடல் தானே.

10 அங்கி நிறுத்தும் அரும் தவர் ஆரத்து
அங்கி இருக்கும் வகை அருள் செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழ் அது ஆமே.

7. அரசாட்சி முறை


1 கல்லா அரசனும் காலனும் நேர் ஒப்பர்
கல்லா அரசனில் காலன் மிக நல்லன்
கல்லா அரசன் அறம் ஓரான் கொல் என்பான்
நல்லாரைக் காலன் நணுக நில்லானே.

2 நாள் தோறும் மன்னவன் நாட்டில் தவ நெறி
நாள் தோறும் நாடி அவன் நெறி நாடான் ஏல்
நாள் தோறும் நாடு கெடுமூட நண்ணும் ஆல்
நாள் தோறும் செல்வம் நரபதி குன்றுமே.

3 வேட நெறிநில்லார் வேடம் பூண்டு என்பயன்
வேட நெறி நிற்போர் வேடம் மெய் வேடமே
வேட நெறி நில்லார் தம்மை விறல் வேந்தன்
வேட நெறி செய்தால் வீடு அது ஆமே.

4 மூடம் கெடாதோர் சிகை நூல் முதல் கொள்ளில்
வாடும் புவியும் பெரு வாழ்வு மன்னனும்
பீடு ஒன்று இலன் ஆகும் ஆதலால் பேர்த்து உணர்ந்து
ஆடம் பர நூல் சிகை அறுத்தால் நன்றே.

5 ஞானம் இலாதார் சடை சிகை நூல் நண்ணி
ஞானிகள் போல நடிக் கின்றவர் தம்மை
ஞானி களாலே நரபதி சோதித்து
ஞான் உண்டு ஆக்குதல் நலம் ஆகும் நாட்டிற்கே.

6 ஆவையும் பாவையும் மற்ற அறவோரையும்
தேவர்கள் போற்றும் திரு வேடத்தாரையும்
காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே.

7 திறம் தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அற நெறியே ஆற்றல் வேண்டும்
சிறந்த நீர் ஞாலம் செய் தொழில் யாவையும்
அறைந்திடில் வேந்தனுக்கு ஆறில் ஒன்று ஆமே.

8 வேந்தன் உலகை மிக நன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழியாய் நிற்பர்
பேர்ந்து இவ் உலகைப் பிறர் கொள்ளத் தாம் கொள்ளப்
பாய்ந்த புலி அன்ன பாவகத் தானே.

9 கால் கொண்டு கட்டிக் கனல் கொண்டு மேல் ஏற்றிப்
பால் கொண்டு சோமன் முகம் பற்றி உண்ணாதோர்
மால் கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல் கொண்டு தண்டம் செய் வேந்தன்கடனே.

10 தம் தம் சமயத் தகுதி நில்லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்நெறி
எத் தண்டமும் செய்யும் அம்மை இல் இம்மைக்கே
மெய்த் தண்டம் செய்வது அவ் வேந்தன் கடனே.

8. வானச் சிறப்பு


1 அமுது ஊறும் மா மழை நீர் அதனாலே
அமுது ஊறும் பல் மரம் பார் மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுது ஊறும் காஞ்சிரை ஆங்கு அது ஆமே.

2 வரை இடை நின்று இழி வான் நீர் அருவி
உரை இல்லை உள்ளத்து அகத்து நின்று ஊறு
நுரை இல்லை மாசு இல்லை நுண்ணிய தெண்ணீர்க்
கரை இல்லை எந்தை கழுமணி யாறே.

9. அறம் செய்வான் திறம்

1 ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன் மின்
பார்த்து இருந்து உண்மின் பழம்பொருள் போற்றன் மின்
வேட்கை உடையீர் விரைந்து ஒல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினே.
 
1 தாம் அறிவார் அண்ணல் தாள் பணிவார் அவர்
தாம் அறிவார் அறம் தாங்கி நின்றார் அவர்
தாம் அறிவார் சில தத்துவர் ஆவர்கள்
தாம் அறிவார்க்குத் தமர்பரன் ஆமே.
 
2 யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை
யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே.
 
3 அற்று நின்றார் உண்ணும் ஊணே அறன் என்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்றுநின்று ஆங்கு ஒரு கூவல் குளத்தினில்
பற்றி வந்து உண்ணும் பயன் அறியாரே.
 
4 அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமும் செய்யீர்
விழித்து இருந்து என் செய்வீர் வெம்மை பரந்து
விழக் கவன்று என் செய்வீர் ஏழை நெஞ்சீரே.
 
5 தன்னை அறியாது தான் அல என்னாது இங்கு
இன்மை அறியாது இளையர் என்று ஓராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வரு முன்னம்
தன்மையின் நல்ல தவம் செய்யும் நீரே.
 
6 துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறிந்தான் அறியும் அளவு அறிவாரே.
 
7 தான் தவம் செய்வதாம் செய் தவத்து அவ்வழி
மான் தெய்வம் ஆக மதிக்கும் மனிதர் காள்
ஊன் தெய்வம் ஆக உயிர்க்கின்ற பல் உயிர்
நான் தெய்வம் என்று நமன் வருவானே.
 
8 திளைக்கும் வினைக் கடல் தீருறு தோணி
இளைப்பினை நீக்கும் இரு வழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அக்கேடு இல் புகழோன்
விளைக்கும் தவம் அறம் மேல் துணை ஆமே.
 
9 பற்று அதுவாய் நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அற நெறிக்கு அல்லது
உற்று உங்களால் ஒன்றும் ஈந்த அதுவே துணை
மற்று அண்ணல் வைத்த வழி கொள்ளும் ஆறே.
   

10. அறம் செயான் திறம்

1 எட்டிப் பழுத்த இரும் கனி வீழ்ந்தன
ஒட்டிய நல் அறம் செய்யாதவர் செல்வம்
வட்டி கொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன் அறியாரே.
 
2 ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளும் குறுகிப்
பிழிந்தன போலத் தம் பேர் இடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம் அறியாரே.
 
3 அறம் அறியார் அண்ணல் பாதம் நினையும்
திறம் அறியார் சிவலோக நகர்க்குப்
புறம் அறியார் பலர் பொய்ம் மொழிகேட்டு
மறம் அறிவார் பகை மன்னி நின்றாரே.
 
4 இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்
தருமம் செய்யாதவர் தம் பாலது ஆகும்
உரும் இடி நாகம் உரோணி கழலை
தருமம் செய்வார் பக்கல் தாழ கிலாவே.
 
5 பரவப் படுவான் பரமனை ஏத்தார்
இரவலர்க்கு ஈதலை ஆயினும் ஈயார்
கரகத்தால் நீராட்டிக் காவை வளர்க்கார்
நரகத்தில் நிற்றிரோ நாள் எஞ்சினீரே.
 
6 வழி நடப்பார் இன்றி வானோர் உலகம்
கழி நடப்பார் நடந்து ஆர் கருப்பாரும்
அழி நடக்கும் வினை மாசு அற ஓட்டிட
வழி நடக்கும் அளவு வீழ்ந்து ஒழிந்தாரே.
 
7 கனிந்தவர் ஈசன் கழல் அடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கம் அது ஆள்வர்
மலிந்தவர் மாளும் துணையும் ஒன்று இன்றி
மெலிந்த சினத்தின் உள் வீழ்ந்து ஒழிந்தாரே.
 
8 இன்பம் இடர் என்று இரண்டு உற வைத்தது
முன்பு அவர் செய்கையினாலே முடிந்தது
இன்பம் அது கண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பு இலார் சிந்தை அறம் அறியாரே.
 
9 கெடுவதும் ஆவதும் கேடு இல் புகழோன்
நடுவு அல்ல செய்து இன்ப நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவது செய்யில் பசு அது ஆமே.
 
10 செல்வம் கருதிச் சிலர் பலர் வாழ்வு எனும்
புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்
இல்லம் கருதி இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கு எய்த வில் குறி ஆமே.
   

11. அவையடக்கம்

1 ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை
ஆர் அறிவார் இந்த அகலமும் நீளமும்
பேர் அறியாத பெரும் சுடர் ஒன்றதின்
வேர் அறியாமை விளம்பு கின்றேனே.
 
2 பாடவல்லார் நெறிபாட அறிகிலேன்
ஆடவல்லார் நெறி ஆட அறிகிலேன்
நாடவல்லார் நெறி நாட அறிகிலேன்
தேடவல்லார் நெறி தேட கில்லேன்.

தற்சிறப்புப் பாயிரம்

1. குரு பாரம்பரியம்


1 நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.
 
2 நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.
 
3 நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.
 
4 மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என் வழி யாமே.
 
5 மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழும்சுடர் மூன்று ஒளி ஆகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்ட கிலானே.
 
6 தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்
ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்
பத்திமையால் இப்பயன் அறியாரே.
 
2. திருமூலர் வரலாறு
1நந்தி இணை அடி யான் தலை மேல் கொண்டு
புந்தியின் உள்ளே புகப் பெய்து போற்றிசெய்து
அந்திமதி புனை அரன் அடி நாள்தொறும்
சிந்தை செய்து ஆகமம் செப்பல் உற்றேனே.
  
2செப்பும் சிவாகமம் என்னும் அப்பேர் பெற்றும்
அப்படி நல்கும் அருள் நந்திதாள் பெற்றுத்
தப்பு இலா மன்றில் தனிக் கூத்துக் கண்ட பின்
ஒப்பு இல் எழுகோடி யுகம் இருந்தேனே.
  
3இருந்த அக் காரணம் கேள் இந்திரனே
பொருந்திய செல்வப் புவனா பதி ஆம்
அருந்தவச் செல்வியைச் சேவித்து அடியேன்
பரிந்து உடன் வந்தனன் பத்தியினாலே.
  
4மாலாங்கனே இங்கு யான் வந்த காரணம்
நீலாங்க மேனியாள் நேரிழையாள் ஒடு
மூலாங்கம் ஆக மொழிந்த திருக் கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே.
  
5நேரிழை ஆவாள் நிரதிச ஆனந்தப்
பேர் உடையாள் என் பிறப்பு அறுத்து ஆண்டவள்
சீர் உடையாள் சிவன் ஆவடு தண் துறை
சீர் உடையாள் பதம் சேர்ந்து இருந்தேனே.
  
6சேர்ந்து இருந்தேன் சிவ மங்கை தன் பங்கனைச்
சேர்ந்து இருந்தேன் சிவன் ஆவடு தண் துறை
சேர்ந்து இருந்தேன் சிவ போதியின் நீழலில்
சேர்ந்து இருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே.
  
7அகல் இடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப்
புகல் இடத்து எம்மெய்யைப் போத விட்டானைப்
பகல் இடத்தும் இரவும் பணிந்து ஏத்தி
இகல் இடத்தே இருள் நீங்கி நின்றேனே.
  
8இருந்தேன் இக் காயத்தே எண் இலி கோடி
இருந்தேன் இராப் பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என் நந்தி இணை அடிக் கீழே.
  
9ஞானத் தலைவிதன் நந்தி நகர் புக்கு
ஊனம் இல் ஒன்பது கோடி உகம் தனுள்
ஞானப் பால் ஆட்டி நாதனை அர்ச்சித்து
யானும் இருந்தேன் நல் போதியின் கீழே.
  
10செல்கின்ற ஆறு அறி சிவ முனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கு ஓர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர் நரர் தம்பால்
ஒல்கின்ற வான் வழி ஊடு வந்தேனே.
  
11சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தமம் ஆகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள் நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே.
  
12நேர்ந்திடு மூல சரியை நெறி இது என்று
ஆய்ந்திடும் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடும் கந்துரு கேண்மின்கள் பூதலத்து
ஓர்ந்திடுஞ் சுத்த சைவத்து உயிர் அதே.
  
13யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான் பற்றி நின்ற மறைப் பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர் உறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே.
  
14பிறப்பு இலி நாதனைப் பேர் நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்று கை கூப்பி
மறப்பு இலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப் பொடும் கூடி நின்று ஓதலும் ஆமே.
  
15சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனியாது இருந்தேன் நின்ற காலம்
இதாசனியாது இருந்தேன் மன நீங்கி
உதாசனியாது உடனே உணர்ந்தேமால்.
  
16அங்கி மிகாமை வைத்தான் உடல் வைத்தான்
எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும்
தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமை வைத்தான் பொருள் தானுமே.
  
17பண்டிதர் ஆவார் பதினெடடுப் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அறம் சொன்ன வாறே.
  
18பின்னை நின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல் தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யுமாறே.
  
20பெற்றமும் மானும் மழுவும் பிறிவு அற்ற
தற்பரன் கற்பனை ஆகும் சராசரத்து
அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற் பதமும் அளித்தான் எங்கள் நந்தியே.
  
21ஞேயத்தை ஞானத்தை ஞா துருவத்தினை
மாயத்தை மா மாயை தன்னில் வரும் பரை
ஆயத்தை அச்சிவன் தன்னை யகோசர
வீயத்தை முற்றும் விளக்கி இட்டேனே.
  
22விளக்கிப் பரம் ஆகும் மெய்ஞ் ஞானச் சோதி
அளப்பு இல் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கு அறும் ஆனந்தக் கூத்தன் சொல் போந்து
வளப்பு இல் கயிலை வழியில் வந்தேனே.
  
23நந்தி அருளாலே மூலனை நாடிப் பின்
நந்தி அருளாலே சதா சிவன் ஆயினேன்
நந்தி அருளால் மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நான் இருந்தேனே.
 

முதல் தந்திரம்

1. உபதேசம்

1விண்ணின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்கொண்டு
தண் நின்ற தாளைத் தலைக் காவல் முன் வைத்து
உள் நின்று உருக்கி ஓர் ஒப்பு இலா ஆனந்தக்
கண் நின்று காட்டிக் களிம்பு அறுத்தானே.
  
2களிம்பு அறுத்தான் எங்கள் கண்நுதல் நந்தி
களிம்பு அறுத்தான் அருள் கண் விழிப் பித்துக்
களிம்பு அணுகாத கதிர் ஒளி காட்டிப்
பளிங்கில் பவளம் பதித்தான் பதியே.
  
3பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி
பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம்
பதி அணுகில் பசு பாசம் நில்லாவே.
  
4வேயின் எழும் கனல் போலே இம் மெய் எனும்
கோயிலில் இருந்து குடி கொண்ட கோன் நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயா என்னும்
தோயம் அதாய் எழும் சூரியன் ஆமே.
  
5சூரிய காந்தமும் சூழ் பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ் பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல்
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.
  
6மலம் களைந்தாம் என மாற்றி அருளித்
தலம் களைந்தான் நல் சதா சிவம் ஆன
புலம் களைந்தான் அப் பொதுவின் உள் நந்தி
நலம் களைந்தான் உள் நயந்தான் அறிந்தே.
  
7அறி ஐம்புலனுடன் நான்றது ஆகி
நெறி அறியாது உற்ற நீர் ஆழம் போல
அறிவறி உள்ளே அழிந்தது போலக்
குறி அறிவிப்பான் குருபரன் ஆமே.
  
8ஆ மேவுபால் நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனி மன்றில் தன்னம் தனி நித்தம்
தீ மேவு பல் கரணங்களுள் உற்றன
தாம் ஏழ்பிறப்பு எரி சார்ந்தவித்தாமே.
  
9வித்தைக் கெடுத்து வியாக் கிரத்தே மிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கு அற
ஒத்துப் புலன் உயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட்டு இருப்பர் சிவயோகியார்களே.
  
10சிவ யோகம் ஆவது சித்த சித்து என்று
தவ யோகத்து உள்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகம் சாராது அவன் பதி போக
நவ யோக நந்தி நமக்கு அளித்தானே.
  
11அளித்தான் உலகு எங்கும் தான் ஆன உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடும் திருத்தாள்
அளித்தான் பேர் இன்பத்து அருள் வெளிதானே.
  
12வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கியவாறும்
ஒளியில் ஒளி போய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவ சித்தர் தாமே.
  
13சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்
சத்தமும் சத்த முடிவும் தம்முள் கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள் பர
முத்தர் தம் முத்தி முதல் முப்பத்து ஆறே.
  
14முப்பதும் ஆறும் படி முத்தி ஏணியாய்
ஒப்பு இலா ஆனந்தத்து உள் ஒளிபுக்குச்
செப்ப அரிய சிவம் கண்டு தான் தெளிந்து
அப்பரிசு ஆக அமர்ந்து இருந்தாரே.
  
15இருந்தார் சிவம் ஆகி எங்கும் தாம் ஆகி
இருந்தார் சிவன் செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக் காலத்து இயல்பைக் குறித்து அங்கு
இருந்தார் இழவு வந்து எய்திய சோம்பே.
  
16சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்
சோம்பர் கண்டு ஆரச் சுருதிக் கண்தூக்கமே.
  
17தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் சிவ யோகமும் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் சிவ போகமும் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் நிலை சொல்வது எவ்வாறே.
  
18எவ்வாறு காண்பான் அறிவு தனக்கு எல்லை
அவ்வாறு அருள் செய்வான் ஆதி அரன் தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்
செவ்வானில் செய்ய செழும் சுடர் மாணிக்கம்.
  
19மாணிக்கத்து உள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத்து உள்ளே மரகத மாடமாய்
ஆணிப் பொன் மன்றினில் ஆடும் திருக் கூடத்தைப்
பேணித் தொழுது என்ன பேறு பெற்றாரே.
  
20பெற்றார் உலகில் பிரியாப் பெரு நெறி
பெற்றார் உலகில் பிறவாப் பெரும் பயன்
பெற்றார் அம் மன்றில் பிரியாப் பெரும் பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.
  
21பெருமை சிறுமை அறிந்து எம்பிரான் போல்
அருமை எளிமை அறிந்து அறிவார் ஆர்
ஒருமையுள் ஆமைபோல் உள் ஐந்து அடக்கி
இருமையும் கேட்டு இருந்தார் புரை அற்றே.
  
22புரை அற்ற பாலின் உள் நெய் கலந்தாற் போல்
திரை அற்ற சிந்தை நல் ஆரியன் செப்பும்
உரை அற்று உணர்வோர் உடம்பு இங்கு ஒழிந்தால்
கரை அற்ற சோதி கலந்த அசத்தமே.
  
23சத்தம் முதல் ஐந்தும் தன் வழித் தான் சாரில்
சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறு உண்டோ
சுத்த வெளியில் சுடரில் சுடர் சேரும்
அத்தம் இது குறித்து ஆண்டு கொள் அப்பிலே.
  
24அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பு எனப் பேர் பெற்று உருச் செய்த அவுரு
அப்பினில் கூடியது ஒன்று ஆகுமாறு போல்
செப்பினில் சீவன் சிவத்துள் அடங்குமே.
  
25அடங்கும் பேர் அண்டத்து அணு அண்டம் சென்று அங்கு
இடம் கொண்டது இல்லை இது அன்றி வேறு உண்டோ
கடம் தொறும் நின்ற உயிர் கரைகாணில்
திடம் பெற நின்றான் திருவடி தானே.
  
26திருவடியே சிவம் ஆவது தேரில்
திருவடியே சிவலோகம் சிந்திக்கில்
திருவடியே செல் கதி அது செப்பில்
திருவடியே தஞ்சம் உள் தெளிவார்க்கே.
  
27தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.
  
28தானே புலன் ஐந்தும் தன்வசம் ஆயிடும்
தானே புலன் ஐந்தும் தன்வசம் போயிடும்
தானே புலன் ஐந்தும் தன்னில் மடைமாறும்
தானே தனித்து எம்பிரான் தனைச் சந்தித்தே.
  
29சந்திப்பது நந்தி தன் திருத்தாள் இணை
சிந்திப்பது நந்தி செய்ய திருமேனி
வந்திப்பது நந்தி நாமம் என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்தி பொன் போதமே.
  
30போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தியைப்
போதம் தனில் வைத்துப் புண்ணியர் ஆயினார்
நாதன் நடத்தால் நயனம் களிகூர
வேதம் துதித்திடப் போய் அடைந்தார் விண்ணே.
  

2. யாக்கை நிலையாமை

1மண் ஒன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண் என்று இருந்தது தீவினை சேர்ந்தது
விண் நின்று நீர் வீழின் மீண்டும் மண் ஆனால் போல்
எண் இன்றி மாந்தர் இறக்கின்ற வாறே.
  
2பண்டம் பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின் செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநடவாதே.
  
3ஊர் எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரிரை நீக்கிப் பிணம் என்று பேர் இட்டுச்
சூரை அம் காட்டு இடைக் கொண்டு போய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார் களே.
  
4காலும் இரண்டு முகட்டு அலக் கென்று உள
பாலுள் பரும் கழி முப்பத்து இரண்டு உள
மேல் உள கூரை பிரியும் பிரிந்தால் முன்
போல் உயிர் மீளப் புக அறியாதே.
  
5சீக்கை விளைந்தது செய்வினை முட்டு இற்ற
ஆக்கை பிரிந்த அலகு பழுத்தது
மூக்கினில் கைவைத்து மூடு இட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக்குப் பலி காட்டிய வாறே.
  
6அடப் பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக் கொடியா ரொடு மந்தணம் கொண்டார்
இடப் பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்து ஒழிந்தாரே.
  
7மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகை பெற்று ஏறினான்
மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்
சென்றத்தா என்னத் திரிந்திலன் தானே.
  
8வாசந்தி பேசி மணம் புணர்ந்த அப்பதி
நேசம் தெவிட்டி நினைப்பு ஒழிவார் பின்னை
ஆ சந்தி மேல் வைத்து அமைய அழுதிட்டுப்
பாசம் தீ சுட்டுப் பலி அட்டினார்களே.
  
9கைவிட்டு நாடிக் கருத்து அழிந்து அச்சற
நெய் அட்டிச் சோறு உண்ணும் ஐவரும் போயினார்
மை இட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய் விட்டுப் போக விடை கொள்ளும் ஆறே.
  
10பந்தல் பிரிந்தது பண்டாரம் கட்டு அற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
துன்புறு காலம் துரிசுவர மேல் மேல்
அன்பு உடையார்கள் அழுது அகன்றார் களே.
  
11நாட்டுக்கு நாயகன் நம் ஊர்த் தலைமகன்
காட்டுச் சிவிகை ஒன்று ஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறை கொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.
  
12முப்பதும் முப்பதும் முப்பத்து அறுவரும்
செப்ப மதிள் உடைக் கோயிலுள் வாழ்பவர்
செப்ப மதிள் உடைக் கோயில் சிதைந்த பின்
ஒப்ப அனைவரும் ஓட்டு எடுத்தார் களே.
  
13மது ஊர் குழலியும் மாடும் மனையும்
இது ஊர் ஒழிய இதணம் அது ஏறிப்
பொது ஊர் புறம் சுடு காடு அது நோக்கி
மது ஊர வாங்கியே வைத்து அகன்றார்களே.
  
14வைச்ச அகல் உற்றது கண்டு மனிதர்கள்
அச்ச அகலாது என நாடும் அரும்பொருள்
பிச்சது வாய்ப்பின் தொடர் உறு மற்றவர்
எச்ச அகலா நின்று இளைக்கின்ற வாறே.
  
15ஆர்த்து எழும் சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த் துறைக் காலே ஒழிவர் ஒழிந்த பின்
வேர்த் தலை போக்கி விறகு இட்டு எரிமூட்டி
நீர்த் தலை மூழ்குவர் நீதி இலோரே.
  
16வளத்து இடை முற்றத் தோர் மா நிலம் முற்றும்
குளத்தின் மண் கொண்டு குயவன் வனைந்தான்
குடம் உடைந்தால் அவை ஓடு என்று வைப்பர்
உடல் உடைந்தால் இறைப் போதும் வையாரே.
  
17ஐந்து தலைப் பறி ஆறு சடை உள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேல் அறியோமே.
  
18அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலைப் பெய்து கூழ் அட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அறைக் கீரை வித்து உண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக்காரே.
  
19மேலும் முகடு இல்லை கீழும் வடிம்பு இல்லை
காலும் இரண்டு முகட்டு அலக் கொன்று உண்டு
ஓலையான் மேய்ந்தவர் ஊடு வரியாமை
வேலையான் மேய்ந்தது ஓர் வெள்ளித் தளிகையே.
  
20கூடம் கிடந்தது கோலங்கள் இங்கு இல்லை
ஆடும் இலையமும் அற்றது அறுதலும்
பாடுகின்றார் சிலர் பண்ணில் அழுத்தி இட்டுத்
தேடிய தீயினில் தீய வைத்தார்களே.
  
21முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
இட்டது தான் இலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார் மணம் பன்னிரண்டு ஆண்டினில்
கெட்டது எழு பதில் கேடு அறியீரே.
  
22இடிஞ்சி இல் இருக்க விளக்கு எரி கொண்டான்
முடிஞ்சது அறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சி இருளாவது அறியா உலகம்
படிஞ்சு கிடந்தது பதைக்கின்ற வாறே.
  
23மடல் விரி கொன்றையான் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவம் தொழாமல்
இடர் படர்ந்து ஏழா நரகில் கிடப்பர்
குடர் பட வெம் தமர் கூப்பிடும் ஆறே.
  
24குடையும் குதிரையும் கொற்ற வாளும் கொண்டு
இடையும் அக்காலம் இருந்து நடுவே
புடையும் மனிதனார் போகும் அப்போதே
அடையும் இடம் வலம் ஆர் உயிர் ஆமே.
  
25காக்கை கவரில் என் கண்டார் பழிக்கில் என்
பால் துளி பெய்யில் என் பல்லோர் பழிச்சில் என்
தோல் பையுள் நின்று தொழில் அறச் செய்து ஊட்டும்
கூத்தன் புறப்பட்டுப் போன இக் கூட்டையே.
  

3. செல்வம் நிலையாமை

1அருளும் அரசனும் ஆனையும் தேரும்
பொருளும் பிறர் கொள்ளப் போவதன் முன்னம்
தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்
மருளும் பினையவன் மாதவம் அன்றே.
  
2இயக்கு உறுதிங்கள் இருள் பிழம்பு ஒக்கும்
துயக்கு உறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கு அற நாடுமின் வானவர் கோனைப்
பெயல் கொண்டல் போலப் பெரும் செல்வம் ஆமே.
  
3தன்னது சாயை தனக்கு உதவாது கண்டு
என்னது மாடு என்று இருப்பார்கள் ஏழைகள்
உன் உயிர் போம் உடல் ஒக்கப் பிறந்தது
கண் அது கண் ஒளி கண்டு கொளீரே.
  
4ஈட்டிய தேன் பூ மணம் கண்டு இரதமும்
கூட்டிக் கொணர்ந்து ஒரு கொம்பு இடை வைத்திடும்
ஓட்டித் துரந்திட்டது வலியார் கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.
  
5தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன் மின்
ஆற்றுப் பெருக்கில் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்து உங்கள் செல்வத்தைக்
கூற்றன் வரும் கால் குதிக்கலும் ஆமே.
  
6மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர் மிசைச் செல்லும் கலம் போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கும் ஓர் வீடு பேறு ஆகச்
சிமிழ் ஒன்று வைத்தமை தேர்ந்து அறியாரே.
  
7வாழ்வும் மனைவியும் மக்கள் உடன் பிறந்
தாரும் அளவேது எமக்கு என்பர் ஒண்பொருள்
மேவும் அதனை விரவு செய்வார் கட்குக்
கூவும் துணை ஒன்று கூடலும் ஆமே.
  
8வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கு இலை
பூட்டும் தறி ஒன்று போம் வழி ஒன்பது
நாட்டிய தாய் தமர் வந்து வணங்கிப் பின்
காட்டிக் கொடுத்தவர் கை விட்ட வாறே.
  
9உடம் பொடு உயிரிடை விட்டோடும் போது
அடும் பரிசு ஒன்று இல்லை அண்ணலை எண்ணும்
விடும் பரிசு ஆய்நின்ற மெய்ந் நமன் தூதர்
சுடும் பரிசத்தையும் சூழ்கிலாரே.
  

4. இளமை நிலையாமை

1கிழக்கு எழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே
விழக் கண்டும் தேறார் விழி இலா மாந்தர்
குழக் கன்று மூத்து எருதாய்ச் சில நாளில்
விழக் கண்டும் தேறார் வியன் உலகோரே.
  
2ஆண்டு பலவும் கழிந்தன அப்பனைப்
பூண்டு கொண்டாரும் புகுந்து அறிவார் இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடர் அறியாரே.
  
3தேய்ந்து அற்று ஒழிந்த இளமை கடை முறை
ஆய்ந்து அற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்து அற்ற கங்கைப் படர் சடை நந்தியை
ஓர்ந்து உற்றுக் கொள்ளும் உயிர் உள்ள போதே.
  
4விரும்புவர் முன் என்னை மெல் இயல் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக் கொண்ட நீர் போல்
அரும்பு ஒத்த மென் முலை ஆய் இழையார்க்குக்
கரும்பு ஒத்துக் காஞ்சிரங் காயும் ஒத்தேனே.
  
5பாலன் இளையன் விருத்தன் என நின்ற
காலம் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம் கடந்து அண்டம் ஊடு அறுத்தான் அடி
மேலும் கிடந்து விரும்புவன் யானே.
  
6காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்
சாலும் அவ் ஈசன் சலவியன் ஆகிலும்
ஏல நினைப்பவர்க்கு இன்பம் செய்தானே.
  
8கண்ணதும் காய் கதி ரோனும் உலகினை
உள் நின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண் உறுவாரையும் வினை உறுவாரையும்
எண் உறும் முப்பதில் ஈர்ந்து ஒழிந்தாரே.
  
9
எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவது அறியாமல்
எய்திய நாளில் இருந்து கண்டேனே.
  

5. உயிர் நிலையாமை

1தழைக் கின்ற செம் தளிர்த் தண் மலர்க் கொம்பில்
இழைக் கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பு இன்றி எம்பெருமான் அடி ஏத்தார்
அழைக்கின்ற போது அறியார் அவர் தாமே.
  
2ஐவர்க்கு ஒரு செய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச் செய்யைக் காத்து வருவார்கள்
ஐவர்க்கும் நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச் செய்யைக் காவல் விட்டாரே.
  
3மத்தளி ஒன்று உள தாளம் இரண்டு உள
அத்துள்ளே வாழும் அரசரும் அஞ்சு உள்ள
அத்துள்ளே வாழும் அரசனும் அங்கு உளன்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.
  
4வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத்து உள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகு அறியாதவர்
தாங்க வல்லார் உயிர் தாம் அறியாரே.
  
5சென்று உணர்வான் திசை பத்தும் திவாகரன்
அன்று உணர்வால் அளக்கின்றது அறிகிலர்
நின்று உணரார் இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்று உணர்வாரில் புணர்க்கின்ற மாயமே.
  
6மாறு திருத்தி வரம்பு இட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிது உணர்ந்தார் இலை
கூறும் கருமயிர் வெண்மயிர் ஆவது
ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டு எனும் நீரே.
  
7துடுப்பு இடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பு இடு மூன்றிற்கும் அஞ்சு எரிகொள்ளி
அடுத்து எரியாமல் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேல் சென்றனவே.
  
8இன்புறு வண்டு இங்கு இனமலர் மேல் போய்
உண்பது வாச மது போல் உயிர் நிலை
இன்பு உற நாடி நினைக்கிலும் மூன்று ஒளி
கண்புற நின்ற கருத்துள் நில்லானே.
  
9ஆம் விதி நாடி அறம் செய்மின் அந்நிலம்
போம் விதி நாடிப் புனிதனைப் போற்று மின்
நாம் விதி வேண்டும் அது என் சொலின் மானிடர்
ஆம் விதி பெற்ற அருமை வல்லார்க்கே.
  
10அவ்வியம் பேசி அறம் கெட நில்லன்மின்
வெவ்வியன் ஆகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்வியன் ஆகிச் சிறந்து உண்ணும் போது ஒரு
தவ்விக் கொடு உண்மின் தலைப் பட்ட போதே.


6. கொல்லாமை

1பற்று ஆய நல்குரு பூசைக்கும் பல்மலர்
மற்று ஓர் அணுக்களைக் கொல்லாமை ஒண் மலர்
நற்றார் நடுக்கு அற்ற தீபமும் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே.
  
2கொல்லிடு குத்து என்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக் கயிற்றால் கட்டிச்
செல்லிடு நில் என்று தீவாய் நரகு இடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.
  

7.புலால் மறுத்தல்

1பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன் தன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே.
  
2கொலையே களவுகள் காமம் பொய் கூறல்
மலைவான பாதகம் ஆம் அவை நீக்கித்
தலை ஆம் சிவன் அடி சார்ந்து இன்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவை ஞான ஆனந்தத்து இருத்தலே.
  
3கொன்றிலாரைக் கொலச் சொலிக் கூறினார்
தின்றிலாரைத் தினச் சொலித் தெண்டித்தார்
பன்றியாப் படியில் பிறந்து ஏழ் நரகு
ஒன்றிவார் அரன் ஆணையிது உண்மையே.
  

8. பிறன் மனை நயவாமை

1ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறும் காளையர்
காய்ச்ச பலாவின் கனி உண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடர் உற்ற வாறே.
  
2திருத்தி வளர்த்த ஓர் தேமாங் கனியை
அருத்தம் என்று எண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தம் இலாத புளிமாங் கொம்பு ஏறிக்
கருத்து அறியாதவர் கால் அற்றவாறே.
  
3பொருள் கொண்ட கண்டனும் போதகை யாளும்
இருள் கொண்ட மின்வெளி கொண்டு நின்றோரும்
மருள் கொண்டு மாதர் மயல் உறு வார்கள்
மருள் கொண்ட சிந்தையை மாற்ற கில்லாரே.
  

9. மகளிர் இழிவு

1இலை நல ஆயினும் எட்டி பழுத்தால்
குலை நலவாம் கனி கொண்டு உணல் ஆகா
முலை நலம் கொண்டு முறுவல் செய்வார் மேல்
விலகுறு நெஞ்சினை வெய்து கொள்ளீரே.
  
2மனை புகுவார்கள் மனைவியை நாடில்
சுனை புகு நீர் போல் சுழித்து உடன் வாங்கும்
கனவு அது போலக் கசிந்து எழும் இன்பம்
நனவு அது போலவும் நாட ஒண்ணாதே.
  
3இயல் உறும் வாழ்க்கை இளம் பிடி மாதர்
புயன் உறப் புல்லிப் புணர்ந்தவர் எய்தும்
மயல் உறும் வானவர் சார் இது என்பார்
அயல் உறப் பேசி அகன்று ஒழிந்தாரே.
  
4வையகத்தே மடவா ரொடும் கூடி என்
மெய் அகத்தோர் உளம் வைத்த விதி அது
கையகத்தே கரும்பு ஆலையின் சாறுகொள்
மெய்யகத்தே பெறும் வேம்பு அதுவாமே.
  
5கோழை ஒழுக்கம் குளம் மூடு பாசியில்
ஆழ நடுவார் அளப்பு உறுவார்களைத்
தாழத் துடக்கித் தடுக்க இல்லா விடில்
பூழை நுழைந்தவர் போகின்ற வாறே.
  

10. நல்குரவு

1புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப் பட்டார்களும் அன்பு இலர் ஆனார்
கொடை இல்லை கோள் இல்லை கொண்டாட்டம் இல்லை
நடை இல்லை நாட்டில் இயங்கு கின்றார் கட்கே.
  
2பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருது என்று
அக்குழி தூர்க்கும் அரும் பண்டம் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கு அற்ற போதே.
  
3கல்குழி தூரக் கனகமும் தேடுவர்
அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கு அற்றவாறே.
  
4தொடர்ந்து எழு சுற்றம் வினையினும் தீய
கடந்தோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்து ஒரு காலத்து உணர் விளக்கு ஏற்றித்
தொடர்ந்து நின்று அவ்வழி தூர்க்கலும் ஆமே.
  
5அறுத்தன ஆறினும் ஆன் இனம் மேவி
அறுத்தனர் ஐவரும் எண் இலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்று அல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டி நின்றானே.
  

11. அன்புடைமை

1அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவு இலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே.
  
2பொன்னைக் கடந்து இலங்கும் புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம் பிறை
துன்னிக் கிடந்த சுடு பொடி ஆடிக்குப்
பின்னிக் கிடந்தது என் பேர் அன்பு தானே.
  
3என்பே விறகா இறைச்சி அறுத்து இட்டுப்
பொன் போல் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி
என் போல் மணியினை எய்த ஒண்ணாதே.
  
4ஆர்வம் உடையவர் காண்பார் அரன் தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணை அடி
பாரம் உடையவர் காண்பார் பவம் தன்னைக்
கோர நெறிகொடு கொங்கு புக்காரே.
  
5என் அன்பு உருக்கி இறைவனை ஏத்துமின்
முன் அன்பு உருக்கி முதல்வனை நாடுமின்
பின் அன்பு உருக்கி பெரும் தகை நந்தியும்
தன் அன்பு எனக்கே தலை நின்ற வாறே.
  
6தான் ஒரு காலம் சயம்பு என்று ஏத்தினும்
வான் ஒரு காலம் வழித்துணை ஆய் நிற்கும்
தேன் ஒரு பால் திகழ் கொன்றை அணி சிவன்
தான் ஒரு வண்ணம் என் அன்பில் நின்றானே.
  
7முன் படைத்து இன்பம் படைத்த முதல் இடை
அன்பு அடைத்து எம் பெருமானை அறிகிலார்
வன்பு அடைத்து இந்த அகல் இடம் வாழ்வினில்
அன்பு அடைத்தான் தன் அகல் இடத் தானே.
  
8கருத்து உறு செம் பொன் செய் காய் கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும்
அருத்தியுள் ஈசனை ஆர் அருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.
  
9நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசு அறிந்தேயும் மனிதர்கள்
இச்சை உளே வைப்பர் எந்தைபிரான் என்று
நச்சியே அண்ணலை நாடு கிலாரே.
  
10அன்பின் உள்ளான் புறத்தான் உடலாய் உளான்
முன் பின் உள்ளான் முனிவர்க்கும் பிரான் அவன்
அன்பின் உள் ஆகி அமரும் அரும் பொருள்
அன்பின் உள்ளார்க்கே அணை துணை ஆமே.
  

12. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

1இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்து அருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்து அன்பு செய்து அருள் கூரவல்லார்க்கு
மகிழ்ந்து அன்பு செய்யும் அருள் அதுவாமே.
  
2இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில் பல என்னினும்
அன்பில் கலவி செய்து ஆதிப் பிரான் வைத்த
முன்பு இப் பிறவி முடிவது தானே.
  
3அன்பு உறு சிந்தையின் மேல் எழும் அவ் ஒளி
இன்பு உறு கண்ணியொடு ஏற்க இசைந்தன
துன்பு உறு கண்ணி ஐந்து ஆடும் துடக்கு அற்று
நண்பு உறு சிந்தையை நாடுமின் நீரே.
  
4புணர்ச்சியுள் ஆயிழை மேல் அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லாருக்கு
உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அது இது ஆமே.
  
5உற்று நின்றாரொடு அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றும் தெரிந்து அறிவார் இல்லை
பத்திமையாலே பணிந்து அடியார் தொழ
முத்தி கொடுத்து அவர் முன்பு நின்றானே.
  
6கண்டேன் கமழ் தரு கொன்றையினான் அடி
கண்டேன் கரி உரியான் தன் கழல் இணை
கண்டேன் கமல மலர் உறைவான் அடி
கண்டேன் கழல் அது என் அன்பினுள் யானே.
  
7நம்பனை நானா விதப் பொருள் ஆகும் என்று
உம்பரில் வானவர் ஓதும் தலைவனை
இன்பனை இன்பத்து இடை நின்று இரதிக்கும்
அன்பனை யாரும் அறிய கிலாரே.
  
8முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம் அறிவோம் என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலான் நந்தி
அன்பில் அவனை அறிய கிலாரே.
  
9ஈசன் அறியும் இராப் பகலும் தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவு செய்வார்களைத்
தேசு உற்று அறிந்து செயல் அற்று இருந்திடில்
ஈசன் வந்து எம் இடை ஈட்டி நின்றானே.
  
10விட்டுப் பிடிப்பது என் மே தகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும் என் ஆர் உயிராய் நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே.
  

13. கல்வி

1குறிப்பு அறிந்தேன் உடல் உயிர் அது கூடிச்
செறிப்பு அறிந்தேன் மிகு தேவர் பிரானை
மறிப்பு அறியாது வந்து உள்ளம் புகுந்தான்
கறிப்பு அறியா மிகும் கல்வி கற்றேனே.
  
2கற்று அறிவாளர் கருதிய காலத்துக்
கற்று அறிவாளர் கருத்தில் ஓர் கண் உண்டு
கற்று அறிவாளர் கருதி செய்யும்
கற்று அறி காட்டக் கயல் உள ஆக்குமே.
  
3நிற்கின்ற போதே நிலை உடையான் கழல்
கற்கின்ற செய்மின் கழிந்து அறும் பாவங்கள்
சொல் குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்று ஒன்று இலாத மணி விளக்கு ஆமே.
  
4கல்வி உடையார் கழிந்து ஓடிப் போகின்றார்
பல்லி உடையார் பாம்பு அரிந்து உண்கின்றார்
எல்லியும் காலையும் ஏத்தும் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமும் ஆமே.
  
5துணை அதுவாய் வரும் தூய நல் சோதி
துணை அதுவாய் வரும் தூய நல் சொல் ஆம்
துணை அதுவாய் வரும் தூய நல் கந்தம்
துணை அதுவாய் வரும் தூய நல் கல்வியே.
  
6நூல் ஒன்று பற்றி நுனி ஏற மாட்டாதார்
பால் ஒன்று பற்றினால் பண்பின் பயன் கெடும்
கோல் ஒன்று பற்றினால் கூடா பறவைகள்
மால் ஒன்று பற்றி மயங்குகின்றார்களே.
  
7ஆய்ந்து கொள்வார்க்கு அரன் வெளிப்படும்
தோய்ந்த நெருப்பு அது தூய் மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்ட வல்லார் கட்கு
வாய்ந்த மனம் மல்கு நூல் ஏணி ஆமே.
  
8வழித்துணையாய் மருந்தாய் இருந்தார் முன்
கழித்துணையாய் கற்று இலாதவர் சிந்தை
ஒழித் துணை யாம் உம்பராய் உலகு ஏழும்
வழித்துணை ஆம் பெரும் தன்மை வல்லானே.
  
9பற்று அது பற்றில் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள் பெறில்
கிற்ற விரகில் கிளர் ஒளி வானவர்
கற்றவர் பேர் இன்பம் உற்று நின்றாரே.
  
10கடல் உடையான் மலையான் ஐந்து பூதத்து
உடல் உடையான் பல ஊழிதொறு ஊழி
அடல் விடை யேறும் அமரர்கள் நாதன்
இடம் உடையார் நெஞ்சத்தில் இருந்தானே.
  

14. கேள்வி கேட்டு அமைதல்

1அறம் கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறம் கேட்டும் வானவர் மந்திரம் கேட்டும்
புறம் கேட்டும் பொன் மேனி எம் ஈசன்
திறம் கேட்டும் பெற்ற சிவ கதி தானே.
  
2தேவர் பிரான் தனைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்த பின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே.
  
3மாயன் பணி கேட்பது மா நந்தி வேண்டின்
அயன் பணி கேட்பது அரன் பணியால் ஏ
சிவன் பணி கேட்பவர் தேவரும் ஆவர்
பயன் பணி கேட்பது பற்று அதுவாமே.
  
4பெருமான் இவன் என்று பேசி இருக்கும்
திருமானிடர் பின்னைத் தேவரும் ஆவர்
வரு மாதவர்க்கு மகிழ்ந்து அருள் செய்யும்
அருமாதவத்து எங்கள் ஆதிப் பிரானே.
  
5ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி இருந்து பிதற்றி மகிழ்வு எய்தி
நேசமும் ஆகும் நிகழ் ஒளியாய் நின்று
வாச மலர்க் கந்தம் மன்னி நின்றானே.
  
6விழுப்பமும் கேள்வியும் மெய் நின்ற ஞானத்து
ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விடாவிடில் வானவர் கோனும்
இழுக்கு இன்றி எண் இலி காலம் அது ஆமே.
  
7சிறியார் மணல் சோற்றில் தேக்கு இடுமாப் போல்
செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில்
குறியாதது ஒன்றைக் குறியாதார் தம்மை
அறியாது இருந்தார் அவர் ஆவர் அன்றே.
  
8உறு துணை ஆவது உயிரும் உடம்பும்
உறு துணை ஆவது உலகு உறு கேள்வி
செறி துணை ஆவது சிவன் அடிச் சிந்தை
பெறு துணை கேட்கில் பிறப்பு இல்லை தானே.
  
9புகழ நின்றார்க்கும் புராணன் எம் ஈசன்
இகழ நின்றார்க்கும் இடும்பைக்கு இடமாம்
மகிழ நின்று ஆதியை ஓதி உணராக்
கழிய நின்றார்க்கு ஒரு கல் பசுவாமே.
  
10வைத்து உணர்ந்தான் மனத்தோடும் வாய் பேசி
ஒத்து உணர்ந்தான் உரு ஒன்றோடு ஒன்று ஒவ்வாது
அச்சு உழன்று ஆணி கலங்கினும் ஆதியை
நச்சு உணர்ந்தார்க்கே நணுகலும் ஆமே.
  

15. கல்லாமை

1கல்லாதவரும் கருத்து அறி காட்சியை
வல்லார் எனில் அருள் கண்ணான் மதித்து உளோர்
கல்லாதார் உண்மை பற்றா நிற்பர் கற்றோரும்
கல்லாதார் இன்பம் காணு கிலாரே.
 
2வல்லார்கள் என்றும் வழி ஒன்றி வாழ்கின்றார்
அல்லாதவர்கள் அறிவுபல என்பார்
எல்லா இடத்தும் உளன் எங்கள்தம் இறை
கல்லாதவர்கள் கலப்பு அறியாரே.
 
3நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலை என்று உணர்வீர்காள்
எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காண ஒண்ணாதே.
 
4கில்லேன் வினை துயர் ஆக்கும் மயல் ஆனேன்
கல்லேன் அரன் நெறி அறியாத் தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தின் உள்
கல்லேன் கழிய நின்று ஆட வல்லேனே.
 
5நில்லாது சீவன் நிலை அன்று என எண்ணி
வல்லார் அறத்தும் தத்துவத்து உளும் ஆயினோர்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத் துயர் போகம் செய்வாரே.
 
6விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்து அங்கு இருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்து நின்று
எண்ணி எழுதி இளைத்து விட்டாரே.
 
7கணக்கு அறிந்தார்க்கு அன்றிக் காண ஒண்ணாது
கணக்கு அறிந்தார்க்கு அன்றிக்கை கூடா காட்சி
கணக்கு அறிந்து உண்மையைக் கண்டு அண்ட நிற்கும்
கணக்கு அறிந்தார் கல்வி கற்று அறிந்தாரே.
 
8கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர் சொல் கேட்கக் கடன் அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்து அறியாரே.
 
9கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசு அறார் மூடர்கள்
மற்றும் பல திசை காணார் மதி இலோர்
கற்று அன்பில் நிற்போர் கணக்கு அறிந்தார்களே.
 
10ஆதிப் பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெரும் தெய்வம்
ஓதி உணர வல்லோம் என்பர் உள் நின்ற
சோதி நடத்தும் தொடர் அறியாரே.
 

16. நடுவு நிலைமை

1நடுவு நின்றார்க்கு அன்றி ஞானமும் இல்லை
நடுவு நின்றார்க்கு நரகமும் இல்லை
நடுவு நின்றார் நல்ல தேவரும் ஆவர்
நடுவு நின்றார் வழி யானும் நின்றேனே.
  
2நடுவு நின்றான் நல்ல கார் முகில் வண்ணன்
நடுவு நின்றான் நல்ல நால் மறை ஓதி
நடுவு நின்றார் சிலர் ஞானிகள் ஆவோர்
நடுவு நின்றார் நல்ல நம்பனும் ஆமே.
  
3நடுவு நின்றார் சிலர் ஞானிகள் ஆவர்
நடுவு நின்றார் சிலர் தேவரும் ஆவர்
நடுவு நின்றார் சிலர் நம்பனும் ஆவர்
நடுவு நின்றாரொடு யானும் நின்றேனே.
  
4தோன்றிய எல்லாம் துடைப்பன் அவன் அன்றி
ஏன்று நின்றார் என்றும் ஈசன் இணை அடி
மூன்று நின்றார் முதல்வன் திரு நாமத்தை
நான்று நின்றார் நடு ஆகி நின்றாரே.
  

17. கள்ளுண்ணாமை

1கழுநீர்ப் பசுப் பெறில் கயம் தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத் தம் காயம் சுருக்கும்
முழுநீர்க் கள் உண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன் தன் சிவ ஆனந்தத் தேறலே.
  
2சித்தம் உருக்கிச் சிவம் ஆம் சமாதியில்
ஒத்த சிவ ஆனந்தத்து ஓவாத தேறலைச்
சுத்த மது உண்ணச் சுவ ஆனந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க் காலே.
  
3காமமும் கள்ளும் கலதி கட்கே ஆகும்
மா மலமும் சமயத்துள் மயல் உறும்
போ மதி ஆகும் புனிதன் இணை அடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வு உண்டே.
  
4வாமத்தோர் தாமும் மது உண்டு மாள்பவர்
காமத்தோர் காமக் கள் உண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள் ஒளிக்கு உள்ளே உணர்வார்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே.
  
5உள் உண்மை ஓரார் உணரார் பசு பாசம்
வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வு உறார்
தெள் உண்மை ஞானச் சிவயோகம் சேர் உறார்
கள் உண்ணும் மாந்தர் கருத்து அறியாரே.
  
6மயக்கும் சமய மலம் மன்னு மூடர்
மயக்கும் மது உண்ணும் மா மூடர் தேரார்
மயக்கு உறு மா மாயையை மாயையின் வீடு
மயக்கில் தெளியின் மயக்கு உறும் அன்றே.
  
7மயங்கும் தியங்கும் கள் வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார் தம் இன்பமே எய்தி
முயங்கும் நயம் கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடை அறா ஆனந்தம் எய்துமே.
  
8இராப் பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கு அற ஆனந்தத் தேறல் பருகார்
இராப் பகல் அற்ற இறை அடி இன்பத்து
இராப் பகல் மாயை இரண்டு இடத்தேனே.
  
9சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள் உண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவ ஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞான ஆனந்தத்தில் சார்தலே.
  
10சத்தன் அருள் தரில் சத்தி அருள் உண்டாம்
சத்தி அருள் தரில் சத்தன் அருள் உண்டாம்
சத்தி சிவம் ஆம் இரண்டும் தன் உள் வைக்கச்
சத்தியம் எண் சித்தித் தன்மையும் ஆமே.
  
11தத்துவம் நீக்கி மருள் நீக்கித் தான் ஆகிப்
பொய்த்தவம் நீக்கி மெய்ப் போகத்துள் போகியே
மெய்த்த சகம் உண்டு விட்டுப் பரானந்தச்
சித்தி அது ஆக்கும் சிவ ஆனந்தத் தேறலே.
  
12யோகிகள் கால் கட்டி ஒண் மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண் சித்தி
மோகியர் கள் உண்டு மூடராய் மோகம் உற்று
ஆகும் மதத்தால் அறிவு அழிந்தாரே.
  

இரண்டாம் தந்திரம்

1. அகத்தியம்

1நடுவு நில்லாது இவ் உலகம் சரிந்து
கெடு கின்றது எம் பெருமான் என்ன ஈசன்
நடு உள அங்கி அகத்திய நீ போய்
முடுகிய வையத்து முன்னிர் என்றானே.
  
2அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயம் செய் மேல் பால் அவனொடு
மங்கி உதயம் செய் வடபால் தவமுனி
எங்கும் வளம் கொள் இலங்கு ஒளிதானே.

2. பதிவலியில் வீரட்டம் எட்டு

1கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம்
வருத்தம் செய்தான் என்றும் வானவர் வேண்டக்
குருத்து உயர் சூலம் கைக் கொண்டு கொன்றானே.
  
2கொலையில் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தான் அங்கி இட்டு
நிலை உலகுக்கு இவன் வேண்டும் என்று எண்ணித்
தலையை அரிந்திட்டுச் சந்தி செய்தானே.
  
3எங்கும் பரந்தும் இரு நிலம் தாங்கியும்
தங்கும் படித் தவன் தாள் உணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன் தலை முன் அற
அங்கு அச்சுதனை உதிரம் கொண்டானே.
  
4எங்கும் கலந்தும் என் உள்ளத்து எழுகின்ற
அங்க முதல்வன் அருமறை ஓதிபால்
பொங்கும் சலந்தரன் போர் செய்ய நீர்மையின்
அங்கு விரல் குறித்து ஆழி செய்தானே.
  
5அப்பணி செம்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பார்கள் மூடர்கள்
முப்புரம் ஆவது மும் மலக் காரியம்
அப்புரம் எய்தமை யார் அறிவாரே.
  
6முத் தீக் கொளுவி முழங்கு எரி வேள்வியுள்
அத்தி உரி அரன் ஆவது அறிகிலர்
சத்தி கருதிய தாம் பல தேவரும்
அத்தீயின் உள் எழுந்தன்று கொலையே.
  
7மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேல் உற நோக்கி முன்
கால் உற்றுக் காலனைக் காய்ந்து அங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே.
  
8இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி இலிங்க வழியது போக்கித்
திருந்திய காமன் செயல் அழித்து அம்கண்
அரும்தவ யோகம் கொறுக்கை அமர்ந்ததே.
  

3. இலிங்க புராணம்

1அடி சேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
முடி சேர் மலை மகனார் மகள் ஆகித்
திடமார் தவம் செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்தி செய்தாளே.
  
2திரிகின்ற முப்புரம் செற்ற பிரானை
அரியன் என்று எண்ணி அயர் உற வேண்டா
பரி உடை யாளர்க்குப் பொய் அலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசு அறிவானே.
  
3ஆழி வலம் கொண்டு அயன் மால் இருவரும்
ஊழி வலம் செய்ய ஒண் சுடர் ஆதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற்கு அவ்வழி
வாழி பிரமற்கும் வாள் கொடுத்தானே.
  
4தாங்கி இருபது தோளும் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பு இல் பெருவலி
ஆங்கு நெரித்து அமரா என்று அழைத்த பின்
நீங்கா அருள் செய்தான் நின் மலன் தானே.
  
5உறுவது அறி தண்டி ஒண் மணல் கூட்டி
அறுவகை ஆன் ஐந்தும் ஆட்டத் தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறு மழுவால் வெட்டி மாலை பெற்றானே.
  
6ஓடி வந்து எல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ் சென்று
நாடி இறைவா நம என்று கும்பிட
ஈடு இல் புகழோன் எழுக என்றானே.
  

4. தக்கன் வேள்வி

1தந்தை பிரான் வெகுண்டான் தக்கன் வேள்வியை
வெம் தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறை கெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினம் செய்த போதே.
  
2சந்தி செயக் கண்டு எழுகின்ற அரிதானும்
எந்தை இவன் அல்ல யாமே உலகினில்
பந்தம் செய் பாசத்து வீழ்ந்து தவம் செய்ய
அந்தம் இலானும் அருள் புரிந்தானே.
  
3அப்பரிசே அயனார் பதி வேள்வியுள்
அப்பரிசே அங்கி அதிசயம் ஆகிலும்
அப்பரிசே அது நீர்மையை உள் கலந்து
அப்பரிசே சிவன் ஆலிக் கின்றானே.
  
4அப்பரிசே அயன் மால் முதல் தேவர்கள்
அப்பரிசே அவர் ஆகிய காரணம்
அப்பரிசு அங்கி உள நாளும் உள்ளிட்டு
அப்பரிசு ஆகி அலர்ந்து இருந்தானே.
  
5அலர்ந்து இருந்தான் என்று அமரர் துதிப்பக்
குலம்தரும் கீழ் அங்கி கோள் உற நோக்கிச்
சிவந்த பரம் இது சென்று கதுவ
உவந்த பெருவழி ஓடி வந்தானே.
  
6அரி பிரமன் தக்கன் அருக்கன் உடனே
வருமதி வாலை வன்னி நல் இந்திரன்
சிர முக நாசி சிறந்த கை தோள் தான்
அரன் அருள் இன்றி அழிந்த நல்லோரே.
  
7செவி மந்திரம் சொல்லும் செய் தவத் தேவர்
அவி மந்திரத்தின் அடுக்களை கோலிச்
செவி மந்திரம் செய்து தாம் உற நோக்கும்
குவி மந்திரம் கொல் கொடியது ஆமே.
  
8நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்து அருள் செய்க என
வில்லால் புரத்தை விளங்கு எரி கோத்தவன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.
  
9தெளிந்தார் கலங்கினும் நீ கலங்காதே
அளித்து ஆங்கு அடைவது எம் ஆதிப் பிரானை
விளிந்தான் அது தக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங்கு அருள் செய்த தூய் மொழியானே.
  

5. பிரளயம்

1கருவரை மூடிக் கலந்து எழும் வெள்ளத்து
இருவரும் கோ என்று இகல இறைவன்
ஒருவனும் நீர் உற ஓங்கு ஒளி ஆகி
அருவரையாய் நின்று அருள்புரிந்தானே.
  
2அலை கடல் ஊடு அறுத்து அண்டத்து வானோர்
தலைவன் எனும் பெயர் தான் தலை மேல் கொண்டு
உலகார் அழல் கண்டு உள் விழாது ஓடி
அலை வாயில் வீழாமல் அஞ்சல் என்றானே.
  
3தண் கடல் விட்டது அமரரும் தேவரும்
எண் கடல் சூழ் எம்பிரான் என்று இறைஞ்சுவர்
விண் கடல் செய்தவர் மேல் எழுந்து அப்புறம்
கண் கடல் செய்யும் கருத்து அறியாரே.
  
4சமைக்க வல்லானைச் சயம்பு என்று ஏத்தி
அமைக்க வல்லார் இவ் உலகத்து உளாரே
திகைத் தெண் நீரில் கடல் ஒலி ஓசை
மிகைக் கொள அங்கி மிகாமை வைத்தானே.
  
5பண்பழி செய் வழி பாடு சென்று அப்புறம்
கண் பழியாத கமலத்து இருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச் சென்று அச்சிரம்
விண் பழியாத விருத்தி கொண்டானே.
  

6. சக்கரப் பேறு

1மால் போதகன் என்னும் வண்மைக்கு இங்கு ஆங்காரம்
கால் போதம் கையினோடு அந்தரச் சக்கரம்
மேல் போக வெள்ளி மலை அமரர்பதி
பார் போகம் ஏழும் படைத்து உடையானே.
  
2சக்கரம் பெற்று நல் தாமோதரன் தானும்
சக்கரம் தன்னைத் தரிக்க ஒண்ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்
தக்க நல் சத்தியைத் தான் கூறு செய்ததே.
  
3கூறதுவாகக் குறித்து நல் சக்கரம்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்
கூறது செய்து தரித்தனன் கோலமே.
  
4தக்கன் தன் வேள்வி தகர்த்த நல் வீரர்பால்
தக்கன் தன் வேள்வியில் தாமோதரன் தானும்
சக்கரம் தன்னைச் சசி முடிமேல் விட
அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே.
  

7. எலும்பும் கபாலமும்

1எலும்பும் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவர் ஆதி
எலும்பும் கபாலமும் ஏந்திலன் ஆகில்
எலும்பும் கபாலமும் இற்று மண் ஆமே.
  

8. அடிமுடி தேடல்

1பிரமனும் மாலும் பிரானே நான் என்னப்
பிரமன் மால் தங்கள் தம் பேதைமை யாலே
பரமன் அனலாய்ப் பரந்து முன் நிற்க
அரன் அடி தேடி அரற்று கின்றாரே.
  
2அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண்டு இலர் மீண்டும் பார் மிசைக் கூடி
அடிகண் டு இலேன் என்று அச்சுதன் சொல்ல
முடி கண்டேன் என்று அயன் பொய்மொழிந் தானே.
  
3ஆம் ஏழ் உலகு உற நின்ற எம் அண்ணலும்
தாம் ஏழ் உலகில் தழல் பிழம்பாய் நிற்கும்
வான் ஏழ் உலகு உறும் மா மணி கண்டனை
யானே அறிந்தேன் அவன் ஆண்மை யாலே.
  
4ஊனாய் உயிராய் உணர் அங்கியாய் முன்னம்
சேணாய் வான் ஓங்கித் திரு உருவாய் அண்டத்
தாணுவும் ஞாயிறும் தண் மதியும் கடந்து
தாண் முழுது அண்டமும் ஆகி நின்றானே.
  
5நின்றான் நில முழுது அண்டத்துள் நீளியன்
அன்றே அவன் வடிவு அஞ்சினர் ஆய்ந்தது
சென்றார் இருவர் திருமுடி மேல் செல
நன்று ஆம் கழல் அடி நாட ஒண்ணாதே.
  
6சேவடி ஏத்தும் செறிவுடை வானவர்
மூவடி தா என்றானும் முனிவரும்
பாவடியாலே பதம் செய் பிரமனும்
தாவடி இட்டுத் தலைப் பெய்தும் மாறே.
  
7தானக் கமலத்து இருந்த சதுமுகன்
தானக் கரும் கடல் ஊழித் தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர் போல் உணர்கின்ற
தானப் பெரும் பொருள் தன்மையது ஆமே.
  
8ஆலிங்கனம் செய்து எழுந்த பரஞ்சுடர்
மேல் இங்ஙன் வைத்தது ஓர் மெய்ந் நெறி முன் கண்டு
ஆலிங்கனம் செய்து உலகம் வலம் வரும்
கோலிங்கு அமைஞ்சருள் கூடலும் ஆமே.
  
9வாள் கொடுத்தானை வழிபட்ட தேவர்கள்
ஆள் கொடுத்து எம்போல் அரனை அறிகிலர்
ஆள் கொடுத்து இன்பம் கொடுத்துக் கோளாகத்
தாள் கொடுத்தான் அடி சார கிலாரே.
  
10ஊழி வலம் செய்து அங்கு ஓரும் ஒருவற்கு
வாழி சது முகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்தது தா என
ஊழிக் கதிரோன் ஒளியை வென்றானே.
  

9. படைத்தல்

1ஆதியோடு அந்தம் இலாத பரா பரம்
போதம் அது ஆகப் புணரும் பராபரை
சோதி அதனில் பரம் தோன்றத் தோன்றுமாம்
தீதுஇல் பரை அதன் பால் திகழ் நாதமே.
  
2நாதத்தில் விந்துவும் நாத விந்துக் களில்
தீது அற்று அகம்வந்த சிவன் சத்தி என்னவே
பேதித்து ஞானம் கிரியை பிறத்தலால்
வாதித்த விச்சையில் வந்து எழும் விந்துவே.
  
3இல்லது சத்தி இடம் தனில் உண்டாகிக்
கல் ஒளி போலக் கலந்து உள் இருந்திடும்
வல்லது ஆக வழி செய்த அப் பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.
  
4தூரத்தில் சோதி தொடர்ந்து ஒரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்து ஒரு விந்துவாய்
பாரச் சதா சிவம் பார் முதல் ஐந்துக்கும்
சார்வத்துச் சத்தி ஓர் சாத்தும் ஆனாமே.
  
5மானின் கண் வான் ஆகி வாயு வளர்ந்திடும்
கானின் கண் நீரும் கலந்து கடினமாய்த்
தேனின் கண் ஐந்தும் செறிந்து ஐந்து பூதமாய்ப்
பூவின் கண் நின்று பொருந்தும் புவனமே.
  
6புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப் பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப் பானும் பூமிசையான் ஆய்
புவனம் படைப்பான் அப்புண்ணியன் தானே.
  
7புண்ணியன் நந்தி பொருந்தி உலகு எங்கும்
தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியும்
கண் இயல் பாகக் கலவி முழுதும் ஆய்
மண் இயல் பாக மலர்ந்து எழு பூவிலே.
  
8நீர் அகத்து இன்பம் பிறக்கும் நெருப்பு இடை
காயத்தில் சோதி பிறக்கும் அக் காற்று இடை
ஓர் உடை நல் உயிர்ப் பாதம் ஒலி சத்தி
நீர் இடை மண்ணின் நிலைப் பிறப்பு ஆமே.
  
9உண்டு உலகு ஏழும் உமிழ்ந்தான் உடன் ஆகி
அண்டத்து அமரர் தலைவனும் ஆதியும்
கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும்
பண்டு இவ் உலகம் படைக்கும் பொருளே.
  
10ஓங்கு பெரும் கடல் உள் உறு வானொடும்
பாங்கர் கயிலைப் பராபரன் தானும்
வீங்கும் கமல மலர்மிசை மேல் அயன்
ஆங்கு உயிர் வைக்கும் அது உணர்ந்தானே.
  
11காரணன் அன்பில் கலந்து எங்கும் நின்றவன்
நாரணன் நின்ற நடு உடலாய் நிற்கும்
பாரணன் அன்பில் பதம் செய்யும் நான்முகன்
ஆரணமாய் உலகாய் அமர்ந்தானே.
  
12பயன் எளிது ஆம் பரு மா மணி செய்ய
நயன் எளிது ஆகிய நம்பன் ஒன்று உண்டு
அயன் ஒளியாய் இருந்து அங்கே படைக்கும்
பயன் எளிதாம் வயணம் தெளிந்தேனே.
  
13போக்கும் வரவும் புனிதன் அருள் புரிந்து
ஆக்கமும் சிந்தை அது ஆகின்ற காலத்து
மேக்கு மிக நின்ற எட்டுத் திசை யொடும்
தாக்கும் கலக்கும் தயா பரன் தானே.
  
14நின்று உயிர் ஆக்கும் நிமலன் என் ஆருயிர்
ஒன்று உயிர் ஆக்கும் அளவை உடல் உற
முன்துயர் ஆக்கும் உடற்கும் துணை அதா
நன்று உயிர்ப் பானே நடுவு நின்றானே.
  
15ஆகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன்
வேகின்ற செம் பொனின் மேல் அணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்து உடலாய் உளன்
ஆகின்ற தன்மை செய் ஆண் தகை யானே.
  
16ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன் பல ஆன
திரு ஒன்றில் செய்கை செகம் முற்றும் ஆமே.
  
17புகுந்து அறிவான் புவனா பதி அண்ணல்
புகுந்து அறிவான் புரி சக்கரத்து அண்ணல்
புகுந்து அறிவான் மலர் மேல் உறை புத்தேள்
புகுந்து அறியும் முடிக்கு ஆகி நின்றாரே.
  
18ஆணவச் சத்தியும் ஆம் அதில் ஐவரும்
காரிய காரண ஈசர் கடை முறை
பேணிய ஐந் தொழிலால் விந்துவில் பிறந்து
ஆணவம் நீங்காதவர் எனல் ஆகுமே.
  
19உற்ற முப்பால் ஒன்று மாயாள் உதய மா
மற்றைய மூன்று மாயோதயம் விந்து
பெற்றவன் நாதம் பரையில் பிறந்ததால்
துற்ற பரசிவன் தொல் விளையாட்டு இதே.
  
20ஆகாயம் ஆதி சதாசிவர் ஆதி என்
போகாத சத்தியுள் போந்து உடன் போந்தனர்
மாகாய ஈசன் அரன் மால் பிரமன் ஆம்
ஆகாயம் பூமி காண அளித்தலே.
  
21அளியார் முக்கோணம் வயிந்தவம் தன்னில்
அளியார் திரிபுரை ஆம் அவள் தானே
அளியார் சதா சிவம் ஆகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்து செய்வாளே.
  
22வார் அணி கொங்கை மனோன்மணி மங்கலி
காரணி காரியம் ஆகக் கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி போதாதி போதமும் ஆமே.
  
23நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்று அங்கு இயங்கும் அரன் திருமாலவன்
மன்றது செய்யும் மலர் மிசை மேல் அயன்
என்று இவர் ஆக இசைந்து இருந்தானே.
  
24ஒருவனுமே உலகு ஏழும் படைத்தான்
ஒருவனுமே உலகு ஏழும் அளித்தான்
ஒருவனுமே உலகு ஏழும் துடைத்தான்
ஒருவனுமே உலகோடு உயிர் தானே.
  
25செந்தாமரை வண்ணன் தீ வண்ணன் எம் இறை
மைந்தார் முகில் வண்ணன் மாயம் செய் பாசத்தும்
கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும்
அந்தார் பிறவி அறுத்து நின்றானே.
  
26தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர்
கூடும் பிறவிக் குணம் செய்த மா நந்தி
ஊடும் அவர் தமது உள்ளத்துள்ளே நின்று
நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே.
  
27ஓராய மே உலகு ஏழும் படைப்பதும்
ஓராய மே உலகு ஏழும் அளிப்பதும்
ஓராய மே உலகு ஏழும் துடைப்பதும்
ஓராய மே உலகோடு உயிர்தானே.
  
28நாதன் ஒருவனும் நல்ல இருவரும்
கோது குலத்தொடும் கூட்டிக் குழைத்தனர்
ஏதுபணி என்று இசையும் இருவருக்கு
ஆதி இவனே அருளுகின்றானே.
  
29அப்பரிசு எண்பத்து நான்கு நூறாயிரம்
மெய்ப் பரிசு எய்தி விரிந்து உயிராய் நிற்கும்
பொய்ப் பரிசு எய்திப் புகலும் மனிதர் கட்கு
இப்பரிசே இருள் மூடி நின்றானே.
  
30ஆதித்தன் சந்திரன் அங்கி எண் பாலர்கள்
போதித்த வான் ஒலி பொங்கிய நீர் புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே.
  

10. காத்தல்

1புகுந்து நின்றான் வெளியாய் இருள் ஆகிப்
புகுந்து நின்றான் புகழ் வாய் இகழ்வாகிப்
புகுந்து நின்றான் உடலாய் உயிராகிப்
புகுந்து நின்றான் புந்தி மன்னி நின்றானே.
  
2தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும்
தானே கடல் மலை ஆதியும் ஆய் நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே.
  
3உடலாய் உயிராய் உலகம் அது ஆகிக்
கடலாய்க் கார் முகில் நீர் பொழிவானாய்
இடையாய் உலப்பு இலி எங்கும் தான் ஆகி
அடையார் பெருவழி அண்ணல் நின்றானே.
  
4தான் ஒரு காலம் தனிச் சுடராய் நிற்கும்
தான் ஒரு கால் சண்ட மாருதமாய் நிற்கும்
தான் ஒரு காலம் தண் மழையாய் நிற்கும்
தான் ஒரு காலம் தண் மாயனும் ஆமே.
  
5அன்பும் அறிவும் அடக்கமுமாய் நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய் நிற்கும்
முன்புறு காலமும் ஊழியுமாய் நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்து நின்றானே.
  
6உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலும் குடமும் சிறுதூதை
மற்றும் அவனே வனைய வல்லானே.
  
7உள் உயிர்ப்பாய் உடல் ஆகி நின்றான் நந்தி
வெள் உயிராகும் வெளியாய் நிலம் கொளி
உள் உயிர்க்கும் உணர்வே உடல் உள் பரந்து
தள் உயிரா வண்ணம் தாங்கி நின்றானே.
  
8தாங்கரும் தன்மையும் தான் அவை பல் உயிர்
வாங்கிய காலத்து மற்றோர் பிறிது இல்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அவ்வழி
தாங்கி நின்றானும் அத் தாரணி தானே.
  
9அணுகினும் சேயவன் அங்கியில் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்து ஒன்று நல்கும்
பணிகினும் பார்மிசைப் பல் உயிராகித்
தணிகினும் மண்ணுடல் அண்ணல் செய்வானே.
  

11. அழித்தல்

1அங்கி செய்து ஈசன் அகல் இடம் சுட்டது
அங்கி செய்து ஈசன் அலை கடல் சுட்டது
அங்கி செய்து ஈசன் அசுரரைச் சுட்டது
அங்கி அவ் ஈசற்குக் கை அம்பு தானே.
  
2இலயங்கள் மூன்றினும் ஒன்று கல் பாந்த
நிலை அன்று அழிந்தமை நின்று உணர்ந்தேன் ஆல்
உலை தந்த மெல்லரி போலும் உலகம்
மலை தந்த மா நிலம் தான் வெந்ததுவே.
  
3பதம் செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதம் செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாம்
குதம் செய்யும் அங்கி கொளுவி ஆகாசம்
விதம் செய்யும் நெஞ்சில் வியப்பு இல்லை தானே.
  
4கொண்டல் வரை நின்று இழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி இருந்து எண் திரை ஆகி
ஒன்றின் பதம் செய்த ஓம் என்ற அப்புறக்
குண்டத்தின் மேல் அங்கி கோலிக் கொண்டானே.
  
5நித்த சங்காரம் உறக்கத்து நீள் மூடம்
வைத்த சங்காரமும் சாக்கிரா தீதம் ஆம்
சுத்த சங்காரம் தொழில் அற்ற கேவலம்
உய்த்த சங்காரம் பரன் அருள் உண்மையே.
  
6நித்த சங்காரம் இரண்டு உடல் நீவுதல்
வைத்த சங்காரமும் மாயா சங்காரம் ஆம்
சுத்த சங்காரம் மனாதீதம் தோயுறல்
உய்த்த சங்காரம் சிவன் அருள் உண்மையே.
  
7நித்த சங்காரம் கரு இடர் நீக்கினால்
ஒத்த சங்காரம் உடல் உயிர் நீவுதல்
சுத்த சங்காரம் அதீதத்துள் தோய் உறல்
உய்த்த சங்காரம் பரன் அருள் உண்மையே.
  
8நித்த சங்காரமும் நீடு இளைப் பாற்றலின்
வைத்த சங்காரமும் மன்னும் அனாதியில்
சுத்த சங்காரமும் தோயாப் பரன் அருள்
உய்த்த சங்காரமும் நாலாம் உதிக்கிலே.
  
9பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்
பாழாய் அடங்கினும் பண்டைப் பாழ் பாழ் ஆகா
வாழாச் சங்காரத்தின் மால் அயன் செய்தி ஆம்
பாழாம் பயிராய் அடங்கும் அப்பாழிலே.
  
10தீய வைத்து ஆர்மின்கள் சேரும் வினைதனை
மாய வைத்தான் வைத்தவன் பதி ஒன்று உண்டு
காயம் வைத்தான் கலந்து எங்கும் நினைப்பது ஓர்
ஆயம் வைத்தான் உணர் வார வைத்தானே.
  

12. மறைத்தல்

1உள்ளத்து ஒருவனை உள் உறு சோதியை
உள்ளம் விட்டு ஓர் அடி நீங்கா ஒருவனை
உள்ளமும் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உரு அறியாதே.
  
2இன்பப் பிறவி படைத்த இறைவனும்
துன்பம் செய் பாசத் துயருள் அடைத்தனன்
என்பில் கொளுவி இசைந்துறு தோற்றசை
முன்பில் கொளுவி முடி குவ தாமே.
  
3இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்து உடன் கூடி
இறையவன் செய்த இரும் பொறியாக்கை
மறையவன் வைத்த பரிசு அறியாதே.
  
4காண்கின்ற கண் ஒளி காதல் செய்து ஈசனை
ஆண் பெண் அலி உருவாய் நின்ற ஆதியை
ஊண் படு நா உடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண் படு பொய்கைச் செயல் அணையாரே.
  
5தெருளும் உலகிற்கும் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகை செய்யும் ஆதிப் பிரானும்
சுருளும் சுடர் உறு தூவெண் சுடரும்
இருளும் அற நின்ற இருட்டு அறையாமே.
  
6அரைக்கின்ற அருள் தரும் அங்கங்கள் ஓசை
க்கின்ற ஆசையும் ஒன்றொடு ஒன்று ஒவ்வாப்
பரக்கும் உருவமும் பாரகம் தானாய்க்
கரக்கின்றவை செய்த காண் தகையானே.
  
7ஒளித்து வைத்தேன் உள் உற உணர்ந்து ஈசனை
வெளிப்பட்டு நின்று அருள் செய்திடும் ஈண்டே
களிப்பொடும் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட்டு இறைஞ்சினும் வேட்சியும் ஆமே.
  
8ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன்
இருங்கரை மேல் இருந்து இன்புற நாடி
வருங்கரை ஓரா வகையினில் கங்கை
அருங் கரை பேணில் அழுக்கு அறலாமே.
  
9மண் ஒன்று தான் பல நல் கலம் ஆயிடும்
உள் நின்ற யோனி கட்கு எல்லாம் ஒருவனே
கண் ஒன்று தான் பல காணும் தனைக் காணா
அண்ணலும் இவ் வண்ணம் ஆகி நின்றானே.
  

13. அருளல்

1எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு
வட்டத் திரை அனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர் நிலை என்னும் இக் காயப்பை
கட்டி அவிழ்ப்பான் கண் நுதல் காணுமே.
  
2உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பம் கொள்வார்க்கு நமன் இல்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்
தச்சும் அவனே சமைக்க வல்லானே.
  
3குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
குசவன் மனத்து உற்றது எல்லாம் வனைவன்
குசவனைப் போல் எங்கள் கோன் நந்தி வேண்டில்
அசைவு இல் உலகம் அது இது ஆமே.
  
4விடை உடையான் விகிர்தன் மிகு பூதப்
படை உடையான் பரிசே உலகு ஆக்கும்
கொடை உடையான் குணம் எண் குணம் ஆகும்
சடை உடையான் சிந்தை சார்ந்து நின்றானே.
  
5உகந்து நின்றே படைத்தான் உலகு ஏழும்
உகந்து நின்றே படைத்தான் பல ஊழி
உகந்து நின்றே படைத்தான் ஐந்து பூதம்
உகந்து நின்றே உயிர் ஊன் படைத்தானே.
  
6படைத்து உடையான் பண்டு உலகங்கள் ஏழும்
படைத்து உடையான் பல தேவரை முன்னே
படைத்து உடையான் பல சீவரை முன்னே
படைத்து உடையான் பரம் ஆகி நின்றானே.
  
7ஆதி படைத்தனன் ஐம் பெரும் பூதம்
ஆதி படைத்தனன் ஆசு இல் பல் ஊழி
ஆதி படைத்தனன் எண் இலி தேவரை
ஆதி படைத்தவை தாங்கி நின்றானே.
  
8அகன்றான் அகல் இடம் ஏழும் ஒன்று ஆகி
இவன் தான் என நின்று எளியனும் அல்லன்
சிவன் தான் பலபல சீவனும் ஆகி
நவின்றான் உலகுஉறு நம்பனும் ஆமே.
  
9உள் நின்ற சோதி உற நின்ற ஓர் உடல்
விண் நின்ற அமரர் விரும்பும் விழுப்பொருள்
மண் நின்ற வானோர் புகழ் திருமேனியன்
கண் நின்ற மா மணி மா போதம் ஆமே.
  
10ஆரும் அறியாத அண்டத் திரு உருப்
பார் முதலாகப் பயிலும் கடத்திலே
நீரினில் பால் போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமல் காணும் சுகம் அறிந்தேனே.
  

14. கரு உற்பத்தி

1ஆக்குகின்றான் முன் பிரிந்த இருபத்து அஞ்சு
ஆக்குகின்றான் அவன் ஆதி எம் ஆர் உயிர்
ஆக்குகின்றான் கர்ப்பக் கோளகை உள்ளிருந்து
ஆக்குகின்றான் அவன் ஆவது அறிந்தே.
  
2அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறை கின்ற இன் உயிர் போந்து உற நாடிப்
பறிகின்ற பத்து எனும் பாரம் செய்தானே.
  
3இன்புறு காலத்து இருவர் முன் பூறிய
துன்புறு பாசத்து உயர்மனை வான் உளன்
பண்பு உறு காலமும் பார் மிசை வாழ்க்கையும்
அன்பு உறு காலத்து அமைத்து ஒழிந்தானே.
  
4கருவை ஒழிந்தவர் கண்ட நால் மூ ஏழ்
புருடன் உடலில் பொருந்து மற்று ஓரார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்த
துருவம் இரண்டு ஆக ஓடி விழுந்ததே.
  
5விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல் ஐந்தும் ஈர் ஐந்தொடு ஏறிப்
பொழிந்த புனல் பூதம் போற்றும் கரணம்
ஒழிந்த நுதல் உச்சி உள்ளே ஒளித்ததே.
  
6பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்
தாவி உலகில் தரிப்பித்த வாறு போல்
மேவிய சீவனில் மெல்ல நீள் வாயுவும்
கூவி அவிழும் குறிக்கொண்ட போதே.
  
7ஏற எதிர்க்கில் இறையவன் தான் ஆகும்
மாற எதிர்க்கில் அரியவன் தான் ஆகும்
நேர் ஒக்க வைக்கின் நிகர் போதத்தான் ஆகும்
பேர் ஒத்த மைந்தனும் பேர் அரசு ஆளுமே.
  
8ஏயம் கலந்த இருவர் தஞ்சாயத்துப்
பாயும் கருவும் உருவாம் எனப் பல
காயம் கலந்தது காணப் பதிந்த பின்
மாயம் கலந்த மனோலயம் ஆனதே.
  
9கர்ப்பத்துக்கே வலமாயாள் கிளை கூட்ட
நிற்கும் துரியமும் பேதித்து நினைவு எழ
வற்புறு காமியம் எட்டாதல் மாயே அம்
சொற்புறு தூய்மறை வாக்கின் ஆம் சொல்லே.
  
10என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச்
செம்பால் இறைச்சி திருத்த மனைசெய்து
இன்பால் உயிர் நிலை செய்த இறை ஓங்கும்
நன்பால் ஒருவனை நாடுகின்றேனே.
  
11பதம் செய்யும் பால் வண்ணன் மேனிப் பகலோன்
இதம் செய்யும் ஒத்து உடல் எங்கும் புகுந்து
குதம் செய்யும் அங்கியின் கோபம் தணிப்பான்
விதம் செய்யும் ஆறே விதித்து ஒழிந்தானே.
  
12ஒழிபல செய்யும் வினை உற்ற நாளே
வழி பல நீர் ஆடி வைத்து எழுவாங்கிப்
பழி பல செய்கின்ற பாசக் கருவைச்
சுழி பல வாங்கிச் சுடாமல் வைத்தானே.
  
13சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிரமத்தே தோன்றும் அவ் யோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எட்டும் எண் சாண் அது ஆகுமே.
  
14போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்
கோசத்துள் ஆங்கு கொணர்ந்த கொடைத் தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டு எட்டு மூன்று ஐந்து
மோகத்துள் ஆங்கு ஒரு முட்டை செய்தானே.
  
15பிண்டத்தில் உள் உறு பேதைப் புலன் ஐந்தும்
பிண்டத்தின் ஊடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள் உறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத்து அமர்ந்திடும் தானே.
  
16இலைப் பொறி ஏற்றி எனது உடல் ஈசன்
துலைப் பொறியில் கரு ஐந்துடன் ஆட்டி
நிலைப் பொறி முப்பது நீர்மை கொளுவி
உலைப் பொறி ஒன்பதில் ஒன்று செய்தானே.
  
17இன்பு உற்று இருவர் இசைவித்து வைத்த மண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே.
  
18அறியீர் உடம்பினில் ஆகிய வாறும்
பிறியீர் அதனில் பெருகும் குணங்கள்
செறியீர் அவற்றினுள் சித்திகள் இட்ட
தறிய ஈர் ஐந்தினுள் ஆனது பிண்டமே.
  
19உடல் வைத்த வாறும் உயிர் வைத்த வாறும்
மடை வைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம் வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடை வைத்த ஈசனைக் கை கலந்தேனே.
  
20கேட்டு நின்றேன் எங்கும் கேடு இல் பெரும் சுடர்
மூட்டுகின்றான் முதல் யோனி மயன் அவன்
கூட்டு கின்றான் குழம்பின் கருவை உரு
நீட்டி நின்று ஆகத்து நேர் பட்ட வாறே.
  
21பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபம் கலந்து பிறந்திடும்
நீர் இடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்து எட்டும் பற்றுமே.
  
22எட்டினுள் ஐந்தாகும் இந்திரியங்களும்
கட்டிய மூன்று கரணமும் ஆய்விடும்
ஒட்டிய பாச உணர்வு என்னும் காயப்பை
கட்டி அவிழ்த்திடும் கண் நுதல் காணுமே.
  
23கண் நுதல் நாமம் கலந்து உடம்பாய் இடைப்
பண் நுதல் செய்து பசு பாசம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண் முதலாக வகுத்து வைத்தானே.
  
24அருள் அல்லது இல்லை அரன் அவன் அன்றி
அருள் இல்லை ஆதலின் அவ் ஓர் உயிரைத்
தருகின்றபோது இருகைத் தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடும் தானே.
  
25வகுத்த பிறவியை மாது நல்லாளும்
தொகுத்து இருள் நீக்கிய சோதி அவனும்
பகுத்து உணர் ஆகிய பல் உயிர் எல்லாம்
வகுத்து உள்ளும் நின்றது ஓர் மாண்பு அதுவாமே.
  
26மாண்பு அது ஆக வளர்கின்ற வன்னியும்
காண்பது ஆண் பெண் அலி எனும் கற்பனை
பூண்பது மாதா பிதா வழி போலவே
ஆம் பதி செய்தான் அச்சோதி தன் ஆண்மையே.
  
27ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும்
பூண் இரண்டு ஒத்துப் பொருந்தில் அலி ஆகும்
தாண் மிகும் ஆகில் தரணி முழுது ஆளும்
பாணவம் மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.
  
28பாய்ந்த பின் அஞ்சு ஓடில் ஆயுளும் நூறு ஆகும்
பாய்ந்த பின்னால் ஓடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்து அறிந்து இவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே.
  
29பாய்கின்ற வாயுக் குறையில் குறள் ஆகும்
பாய்கின்ற வாயு விளைக்கின் முடம் ஆகும்
பாய்கின்ற வாயு நடுப்படில் கூன் ஆகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லை பார்க்கிலே.
  
30மாதா உதரம் மலம் மிகில் மந்தன் ஆம்
மாதா உதரம் சலம் மிகில் மூங்கை ஆம்
மாதா உதரம் இரண்டும் ஒக்கில் கண் இல்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.
  
31குழவியும் ஆண் ஆம் வலத்தது ஆகில்
குழவியும் பெண் ஆம் இடத்தது ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலி ஆகும் கொண்ட கால் ஒக்கிலே.
  
32கொண்ட நல் வாயு இருவர்க்கும் ஒத்து எழில்
கொண்ட குழவியும் கோமளம் ஆயிடும்
கொண்ட நல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல் வளையாட்கே.
  
33கோல் வளை உந்தியில் கொண்ட குழவியும்
தால் வளை உள்ளே தயங்கிய சோதி ஆம்
பால் வளர்ந்து உள்ளே பகலவன் பொன் உருப்
போல் வளர்ந்து உள்ளே பொருந்து உருவாமே.
  
34உருவம் வளர்ந்திடும் ஒண் திங்கள் பத்தில்
பருவம் அது ஆகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடும் மாயையினாலே
அருவம் அது ஆவது இங்கு ஆர் அறிவாரே.
  
35இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க்கு த்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்கு உளன்
கெட்டேன் இம் மாயையின் கீழ்மை எவ்வாறே.
  
36இன்புற நாடி இருவரும் சந்தித்துத்
துன்பு உறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின் முன் தோன்றிய
தொன்புற நாடி நின்று ஓதலும் ஆமே.
  
37குயில் குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்
அயிர்ப்பு இன்றிக் காக்கை வளர்க்கின்றது போல்
இயக்கு இல்லை போக்கு இல்லை ஏன் என்பது இல்லை
மயக்கத்தால் காக்கை வளர்கின்ற வாறே.
  
38முதல் கிழங்காய் முளையாய் அம் முளைப்பின்
அதல் புதலாய்ப் பலமாய் நின்று அளிக்கும்
அதற்கு அதுவாய் இன்பம் ஆவது போல்
அதற்கு அதுவாய் நிற்கும் ஆதிப்பிரானே.
  
39பரத்தில் கரைந்தது பதிந்த நல்காயம்
உருத் தரித்து இவ் உடல் ஓங்கிட வேண்டி
திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்கும் திரு அருளாலே.
  

15. மூவகைச் சீவ வர்க்கம்

1சக்தி சிவன் விளையாட்டால் உயிர் ஆக்கி
ஒத்த இருமாயா கூட்டத்து இடை பூட்டிச்
சுத்தம் அது ஆகும் துரியம் பிரிவித்துச்
சித்தம் புகுந்து சிவ மயம் ஆக்குமே.
  
2விஞ்ஞானர் நால்வரும் மெய்ப் பிரள யாகல் அத்
தஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரும் ஆகும் பதின்மராம்
விஞ்ஞானர் ஆதியர் வேற்றுமை தானே.
  
3விஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர்
தஞ் ஞானர் அட்டவித் தேசராம் சார்ந்து உளோர்
எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர்
மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டு நின்றாரே.
  
4இரண்டாவதில் முத்தி எய்துவர் அத்தனை
இரண்டாவது உள்ளே இருமல பெத்தர்
இரண்டாகும் நூற்று எட்டு ருத்திரர் என்பர்
முரண் சேர் சகலத்தர் மும்மலத்தாரே.
  
5பெத்தத்த சித்தொடு பேண் முகத்தச் சித்து அது
ஒத்திட்டு இரண்டிடை ஊடு உற்றார் சித்தும் ஆய்
மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்கத்து அமிழ்ந்து சகலத்து உளாரே.
  
6சிவம் ஆகி ஐவகைத் திண்மலம் செற்றோர்
அவம் ஆகார் சித்தர் முத் தாந் தத்து வாழ்வார்
பவம் ஆன தீர்வோர் பசு பாசம் அற்றோர்
நவம் ஆன தத்துவம் நாடிக் கண்டோரே.
  
7விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
விஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச் சகலத்தர் சகலராம்
விஞ்ஞானர் ஆதிகள் ஒன்பான் வேறு உயிர்களே.
  
8விஞ்ஞான கன்மத்தால் மெய் அகம் கூடிய
அஞ்ஞான கன்மத்தினால் சுவர் யோனி புக்கு
எஞ்ஞான மெய் தீண்டியே இடை இட்டுப் போய்
மெய்ஞ் ஞானர் ஆகிச் சிவம் மேவல் உண்மையே.
  
9ஆண வந்துற்ற வவித்தா நனவு அற்றோர்
காணிய விந்துவா நாத சகலாதி
ஆணவம் ஆதி அடைந்தோர் அவர் அன்றே
சேண் உயர் சத்தி சிவ தத்துவம் ஆமே.
  

16. பாத்திரம்

1திலம் அத்தனையே சிவ ஞானிக்கு ஈந்தால்
பல முத்தி சித்தி பரபோகமும் தரும்
நிலம் அத்தனை பொன்னை நின் மூடர்க்கு ஈந்தால்
பலமும் அற்றே பர போகமும் குன்றுமே.
  
2கண்டு இருந்து ஆர் உயிர் உண்டிடும் காலனைக்
கொண்டு இருந்து ஆர் உயிர் கொள்ளும் குணத்தனை
நன்று உணர்ந்தார்க்கு அருள் செய்திடும் நாதனைச்
சென்று உணர்ந்தார் சிலர் தேவரும் ஆமே.
  
3கை விட்டிலேன் கருவாகிய காலத்து
மெய் விட்டிலேன் விகிர்தன் அடி தேடுவன்
பொய் விட்டு நானே புரிசடையான் அடி
நெய் விட்டிலாத இடிஞ்சிலும் ஆமே.
  
4ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர் நந்தி காட்டத்துக் கண்டவன்
ஏவன செய்யும் இளம் கிளையோனே.
  

17. அபாத்திரம்

1கோல வறட்டைக் குனிந்து குளகு இட்டுப்
பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்து
காலம் கழிந்த பயிர் அது ஆகுமே.
  
2ஈவது யோக இயம நியமங்கள்
சார்வது அறிந்து அன்பு தங்கும் அவர்க்கு அன்றி
ஆவது அறிந்து அன்பு தங்காதவர்களுக்கு
ஈவ பெரும் பிழை என்று கொளீரே.
  
3ஆம் ஆறு அறியான் அதி பஞ்சபாதகன்
தோம் ஆறும் ஈசற்கும் தூய குரவற்கும்
காமாதி விட்டோர்க்கும் தரல் தந்து கற்பிப்போன்
போமா நரகில் புகான் போதம் கற்கவே.
  
4மண் மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் இவன் என்றே அஞ்சலி அத்தனாய்
எண்ணி இறைஞ்சா தார்க்கு ஈந்த இருவரும்
நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.
  

18. தீர்த்தம்

1உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்று ஆடார் வினை கெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனம் உடைக் கல்வி இலோரே.
  
2தளி அறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளி அறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
வளி அறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளி அறிவாளர் தம் சிந்தை உளானே.
  
3உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
கள்ளத்தினாரும் கலந்து அறிவார் இல்லை
வெள்ளத்தை நாடி விடும் அவர் தீவினைப்
பள்ளத்தில் இட்டது ஓர் பந்தர் உள்ளானே.
  
4அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்
செறிவான் உறை பதம் சென்று வலம் கொள்
மறியார் வளைக் கை வருபுனல் கங்கைப்
பொறியார் புனல் மூழ்கப் புண்ணியர் ஆமே.
  
5கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல்
உடல் உற்றுத் தேடுவார் தம்மை ஒப்பார் இலர்
திடம் உற்ற நந்தி திரு அருளால் சென்று
உடலில் புகுந்தமை ஒன்று அறியாரே.
  
6கலந்தது நீர் அது உடம்பில் கறுக்கும்
கலந்தது நீர் அது உடம்பில் சிவக்கும்
கலந்தது நீர் அது உடம்பில் வெளுக்கும்
கலந்தது நீர் நிலம் காற்று அதுவாமே.
  

19. திருக்கோயில்

1தாவர லிங்கம் பறித்து ஒன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலை கெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர் நந்தி கட்டு த்தானே.
  
2கட்டு வித்தார் மதில் கல்லொன்று வாங்கிடில்
வெட்டு விக்கும் அபிடேகத்து அரசரை
முட்டு விக்கும் முனி வேதியர் ஆயினும்
வெட்டு வித்தே விடும் விண்ணவன் ஆணையே.
  
3ஆற்ற அரு நோய் மிக்கு அவனி மழை இன்றிப்
போற்ற அரு மன்னரும் போர் வலி குன்றுவர்
கூற்று உதைத்தான் திருக் கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.
  
4முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்கு உள வாரி வளம் குன்றும்
கன்னம் களவு மிகுந்திடும் காசினி
என் அரு நந்தி எடுத்து த்தானே.
  
5பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே
சீர் கொண்ட நந்தி தெரிந்து த்தானே.
  

19. திருக்கோயில்

1தாவர லிங்கம் பறித்து ஒன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலை கெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர் நந்தி கட்டு த்தானே.
  
2கட்டு வித்தார் மதில் கல்லொன்று வாங்கிடில்
வெட்டு விக்கும் அபிடேகத்து அரசரை
முட்டு விக்கும் முனி வேதியர் ஆயினும்
வெட்டு வித்தே விடும் விண்ணவன் ஆணையே.
  
3ஆற்ற அரு நோய் மிக்கு அவனி மழை இன்றிப்
போற்ற அரு மன்னரும் போர் வலி குன்றுவர்
கூற்று உதைத்தான் திருக் கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.
  
4முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்கு உள வாரி வளம் குன்றும்
கன்னம் களவு மிகுந்திடும் காசினி
என் அரு நந்தி எடுத்து த்தானே.
  
5பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே
சீர் கொண்ட நந்தி தெரிந்து த்தானே.
  

20. அதோமுக தரிசனம்

1எம்பெருமான் இறைவா முறையோ என்று
வம்பு அவிழ் வானோர் அசுரன் வலி சொல்ல
அம் பவள மேனி அறுமுகன் போய் அவர்
தம் பகை கொல் என்ற தற்பரன் தானே.
  
2அண்ட மொடு எண்திசை தாங்கும் அதோ முகம்
கண்டம் கறுத்த கருத்து அறிவார் இல்லை
உண்டது நஞ்சு என்று ப்பர் உணர்வு இலோர்
வெண் தலை மாலை விரிசடை யோற்கே.
  
3செய்தான் அறியும் செழும் கடல் வட்டத்துப்
பொய்யே த்துப் புகழும் மனிதர்கள்
மெய்யே க்கில் விண்ணோர் தொழச் செய்வன்
மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே.
  
4நந்தி எழுந்து நடுஉற ஓங்கிய
செந்தீ கலந்து உள் சிவன் என நிற்கும்
முந்திக் கலந்து அங்கு உலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோ முகம் ஆமே.
  
5அதோ முகம் கீழ் அண்டம் ஆன புராணன்
அதோ முகத் தன்னொடும் எங்கும் முயலும்
சதோ முகத்து ஒண்மலர்க் கண்ணிப் பிரானும்
அதோ முகன் ஊழித் தலைவனும் ஆமே.
  
6அதோ முகம் மா மலர் ஆயது கேளும்
அதோ முகத்தால் ஒரு நூறாய் விரிந்து
அதோ முகம் ஆகிய அந்தம் இல் சத்தி
அதோ முகம் ஆகி அமர்ந்து இருந்தானே.
  

21. சிவநிந்தை

1தெளி உறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளி உறுவார் அமரா பதி நாடி
எளியன் என்று ஈசனை நீசர் இகழில்
கிளி ஒன்று பூஞையில் கீழ் அது ஆகுமே.
  
2முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்து அமுது ஊறிய ஆதிப் பிரானைத்
தளிந்தவர்க்கு அல்லது தாங்க ஒண்ணாதே.
  
3அப்பகை யாலே அசுரரும் தேவரும்
நல் பகை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகைஆகிலும் எய்தார் இறைவனைப்
பொய்ப் பகை செய்யினும் ஒன்று பத்து ஆமே.
  
4போகமும் மாதர் புலவி அது நினைந்து
ஆகமும் உள் கலந்து அங்கு உளன் ஆதலினால்
வேதியராயும் விகிர்தன் ஆம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்பு ஒழிவாரே.
  

22. குரு நிந்தை

1பெற்று இருந்தாரையும் பேணார் கயவர்கள்
உற்று இருந்தாரை உளைவன சொல்லுவர்
கற்று இருந்தார் வழி உற்று இருந்தார் அவர்
பெற்று இருந்தார் அன்றி யார் பெறும் பேறே.
  
2ஓர் எழுத்து ஒரு பொருள் உணரக் கூறிய
சீர் எழுத்தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்து அங்கு ஓர் உகம்
வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.
  
3பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தம் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டு ஒன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதா நந்தி ஆணையே.
  
4மந்திரம் ஓர் எழுத்து த்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறு உரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.
  
5ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மா மன்னர் பீடமும்
நாசம் அது ஆகுமே நந் நந்தி ஆணையே.
  
6சன்மார்க்க சற்குரு சந்நிதி பொய் வரின்
நன் மார்க்கமும் குன்றி ஞானமும் தங்காது
தொன் மார்க்கம் ஆய துறையும் மறந்திட்டு
பல் மார்க்கமும் கெட்டுப் பஞ்சமும் ஆமே.
  
7கைப்பட்ட மா மணி தான் இடை கைவிட்டு
மெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதி போன்றும்
கைப்பட்ட நெய் பால் தயிர் நிற்கத் தான் அறக்
கைப்பிட்டு உண்பான் போன்றும் கன்மி ஞானிக்கு ஒப்பே.
  

23. மகேசுர நிந்தை

1ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயம் ஏற்று உண்பவர்
ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர்
தாம் தாம் விழுவது தாழ் நரகு ஆகுமே.
  
2ஞானியை நிந்திப் பவனும் நலன் என்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
ஆன கொடுவினை தீர்வார் அவன் வயம்
போன பொழுதே புகும் சிவ போகமே.
  

24. பொறையுடைமை

1பற்றி நின்றார் நெஞ்சில் பல்லிதான் ஒன்று உண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்
தெற்றிக் கிடந்தது சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றாது ஒழிவது மாகமை ஆமே.
  
2ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்
சேனை வளைந்து திசை தொறும் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர் தம் ஆதியை
ஏனை விளைந்து அருள் எட்டலும் ஆமே.
  
3வல்வகை யாலும் மனையிலும் மன்றிலும்
பல்வகை யாலும் பயிற்றிப் பதம் செய்யும்
கொல்லையில் நின்று குதி கொள்ளும் கூத்தனுக்கு
எல்லை இல்லாத இலயம் உண்டாமே.
  

25. பெரியாரைத் துணைக்கோடல்

1ஓடவல்லார் தமரோடு நடா வுவன்
பாடவல்லார் ஒளி பார்மிசை வாழ்குவன்
தேட வல்லார்க்கு அருள் தேவர் பிரான் ஒடும்
கூட வல்லார் அடி கூடுவன் யானே.
  
2தாம் இடர்ப் பட்டுத் தளிர் போல் தயங்கினும்
மா மனத்து அங்கு அன்பு வைத்த நிலையாகும்
நீ இடர்ப் பட்டு இருந்து என் செய்வாய் நெஞ்சமே
போம் இடத்து என்னொடும் போது கண்டாயே.
  
3அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிலர் தத்துவத்தை
நெறிதான் மிக மிக நின்று அருள் செய்யும்
பெரியாருடன் கூடல் பேர் இன்பம் ஆமே.
  
4தார் சடையான் தன் தமராய் உலகினில்
போர் புகழான் எந்தை பொன்னடி சேருவார்
வாய் அடையா உள்ளம் தேவர்க்கு அருள் செய்யும்
கோ அடைந்து அந்நெறி கூடலும் ஆமே.
  
5உடையான் அடியார் அடியாருடன் போய்
படையார் அழல் மேனிப் பதி சென்று புக்கேன்
கடையார் நின்றவர் கண்டு அறிவிப்ப
உடையான் வருக என ஓலம் என்றாரே.
  
6அருமை வல்லான் கலை ஞானத்துள் தோன்றும்
பெருமை வல்லோன் பிறவிச் சுழி நீந்தும்
உரிமை வல்லோன் உணர்ந்து ஊழி இருக்கும்
இருமை வல்லாரோடு சேர்ந்தனன் யானே.
  

மூன்றாம் தந்திரம்

1. அட்டாங்க யோகம்

1 த்தன வல்கரி ஒன்று மூடிய
நிரைத்த இராசி நிரை முறை எண்ணிப்
பிரைச் சதம் எட்டும் பேசியே நந்தி
நிரைத்த இயமம் நியமம் செய்தானே.
  
2செய்த இயம நியமம் சமாதி சென்று
உய்யப் பராசத்தி உத்தர பூருவ
மெய்த கவச நியாசங்கள் முத்திரை
எய்த செய்வன் இந்நிலை தானே.
  
3அந்நெறி இந்நெறி என்னாது அட்டாங்கத்
தன் நெறி சென்று சமாதியிலே நின்மின்
நல் நெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம்
புல் நெறி யாகத்தில் போக்கு இல்லை ஆகுமே.
  
4இயம நியமமே எண் இலா ஆதனம்
நயம் உறு பிரணா யாமம் பிரத்தி ஆகாரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயம் உறும் அட்டாங்கம் ஆவது ஆமே.
  

2. இயமம்

1எழுந்து நீர் பெய்யினும் எட்டுத் திசையும்
செழும் தண் நியமங்கள் செய்மின் என்று அண்ணல்
கொழும் தண் பவளக் குளிர் சடை யோடே
அழுந்திய நால்வருக்கு அருள் புரிந்தானே.
  
2கொல்லான் பொய் கூறான் களவு இலான் எண் குணன்
நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்து உண்பான் மாசு இலான் கள் காமம்
இல்லான் நியமத்து இடையில் நின்றானே.
  

3. நியமம்

1ஆதியை வேதத்தின் அப் பொருளானைச்
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுள் மன்னும் பராசத்தியோடு உடன்
நீதி உணர்ந்து நியமத்தன் ஆமே.
  
2தூய்மை அருள் ஊண் சுருக்கம் பொறை செவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்று இவை
காமம் களவு கொலை எனக் காண்பவை
நேமி ஈர் ஐந்து நியமத்தன் ஆமே.
  
3தவம் செபம் சந்தோடம் ஆத்திகம் தானம்
சிவன் தன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகம் சிவபூசை ஒண் மதி சொல்லீர் ஐந்து
நிவம் பல செய்யின் நியமத்தன் ஆமே.
  

4. ஆதனம்

1பங்கயம் ஆதி பரந்த பல் ஆதனம்
அங்கு உளவாம் இரு நாலும் அவற்றின் உள்
செங்கு இல்லை ஆகச் சுவத்திகம் என மிகத்
தங்க இருப்பத் தலைவனும் ஆமே.
  
2ஓர் அணை அப்பதம் ஊருவின் மேல் ஏறி இட்டு
ஆர வலித்து அதன்மேல் வைத்து அழகுறச்
சீர் திகழ் கைகள் அதனைத் தன் மேல் வைக்கப்
பார் திகழ் பத்மாசனம் எனல் ஆமே.
  
3துரிசு இவ் வலக்காலைத் தோன்றவே மேல் வைத்து
அரிய முழந் தாளில் அம் கையை நீட்டி
உருசியொடும் உடல் செவ்வே இருத்திப்
பரிசு பெறும் அது பத்திர ஆசனமே.
  
4ஒக்க அடி இணை ஊருவில் ஏறிட்டு
முக்கி உடலை முழங் கை தனில் ஏற்றித்
தொக்க அறிந்து துளங்காது இருந்திடல்
குக்குட ஆசனம் கொள்ளலும் ஆமே.
  
5பாத முழந்தாளில் பாணிகளை நீட்டி
ஆதர வோடும் வாய் அங்காந்து அழகு உறக்
கோது இல் நயனம் கொடி மூக்கிலே உறச்
சீர் திகழ் சிங்காதனம் எனச் செப்புமே.
  
6பத்திரம் கோமுகம் பங்கயம் கேசரி
சொத்திரம் வீரம் சுகாதனம் ஓர் ஏழு
உத்தமம் ஆம் முது ஆசனம் எட்டு எட்டுப்
பத்தொடு நூறு பல ஆசனமே.
  

5. பிராணாயாமம்

1ஐவர்க்கு நாயகன் அவ் ஊர்த் தலைமகன்
உய்யக் கொண்டு ஏறும் குதிரை மற்று ஒன்று உண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாது போய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடும் தானே.
  
2ஆரியன் அல்லன் குதிரை இரண்டு உள
வீசிப் பிடிக்கும் விரகு அறிவார் இல்லை
கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.
  
3புள்ளினும் மிக்க புரவியை மேல் கொண்டால்
கள் உண்ண வேண்டாம் தானே களிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வு உடையோர்க்கே.
  
4பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்
பிராணன் இருக்கில் பிறப்பு இறப்பு இல்லை
பிராணன் மடைமாறிப் பேச்சு அறிவித்துப்
பிராணன் அடை பேறு பெற்று உண்டீர் நீரே.
  
5ஏறுதல் பூரகம் ஈர் எட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலு அதில்
ஊறுதல் முப்பத்து இரண்டு அதி ரேசகம்
மாறுதல் ஒன்றின் கண் வஞ்சகம் ஆமே.
  
6வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கு ஒத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திரு அருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனும் ஆமே.
  
7எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே அது செய்ய ஆக்கைக்கு அழிவு இல்லை
அங்கே பிடித்தது விட்டு அளவும் செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனும் ஆமே.
  
8ஏற்றி இரக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவார் இல்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறி அது ஆமே.
  
9மேல் கீழ் நடுப்பக்கம் மிக்கு உறப் பூரித்துப்
பால் ஆம் இரேசகத்தால் உள் பாவித்து
மால் ஆகி உந்தியுள் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டான் அருள் பெறலாமே.
  
10இட்டது அவ்வீடு இளகாது இரேசித்துப்
புட்டிப் படத் தச நாடியும் பூரித்துக்
கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து
நட்டம் இருக்க நமன் இல்லை தானே.
  
11புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரி சடையோனே.
  
12கூடம் எடுத்துக் குடி புக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளில் கோல அஞ்சு எழுத்து ஆமே.
  
13பன்னிரண்டு ஆனை பகல் இரவு உள்ளது
பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண்டு ஆனைக்குப் பகல் இரவு இல்லையே.
  

6. பிரத்தியாகாரம்

1கண்டுகண்டு உள்ளே கருத்து உற வாங்கிடில்
கொண்டு கொண்டு உள்ளே குணம் பல காணலாம்
பண்டு உகந்து எங்கும் பழமறை தேடியை
இன்று கண்டு இங்கே இருக்கலும் ஆமே.
  
2நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம்
தாபிக்கு மந்திரம் தன்னை அறிகிலர்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்
கூவிக் கொண்டு ஈசன் குடி இருந்தானே.
  
3மூலத்து இருவிரல் மேலுக்கு முன் நின்ற
பாலித்த யோனிக்கு இருவிரல் கீழ் நின்ற
கோலித்த குண்டலி உள் எழும் செம் சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரல் கீழதே.
  
4நாசிக்கு அதோ முகம் பன்னிரண்டு அங்குலம்
நீ சித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மா சித்த மா யோகம் வந்து தலைப் பெய்தும்
தேகத்துக்கு என்றும் சிதைவு இல்லை ஆமே.
  
5சோதி இரேகைச் சுடர் ஒளி தோன்றிடில்
கோது இல் பரானந்தம் என்றே குறிக் கொண்மின்
நேர்திகழ் கண்டத்தே நிலவு ஒளி எய்தினால்
ஓதுவது உன் உடல் உன் மத்தம் ஆமே.
  
6மூலத் துவாரத்தை ஒக்கரம் இட்டு இரு
மேலைத் துவாரத்தின் மேல் மனம் வைத்து இரு
வேல் ஒத்த கண்ணை வெளியில் விழித்து இரு
காலத்தை வெல்லும் கருத்து இது தானே.
  
7எரு இடும் வாசற்கு இருவிரல் மேலே
கரு இடும் வாசற்கு இருவிரல் கீழே
உரு இடும் சோதியை உள்க வல்லார்க்குக்
கரு இடும் சோதி கலந்து நின்றானே.
  
8ஒருக்கால் உபாதியை ஒண் சோதி தன்னைப்
பிரித்து உணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்து உணர்வு உன்னல் கரைதல் உள் நோக்கால்
பிரத்தி ஆகாரப் பெருமையை அது ஆமே.
  
9புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணம்
திறப்பட்டு நிச்சயம் சேர்ந்து உடன் நின்றால்
உறப்பட்டு நின்றது உள்ளமும் ஆங்கே
புறப்பட்டுப் போகான் பெரும் தகையானே.
  

7. தாரணை

1கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண்டு ஊடே வெளி உறத்தான் நோக்கிக்
காணாக் கண் கேளாச் செவி என்று இருப்பார்க்கு
வாழ்நாள் அடைக்கும் வழி அது ஆமே.
  
2மலையார் சிரத்து இடை வான் நீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி ஊடே
சிலையார் பொதுவில் திரு நடம் ஆடும்
தொலையாத ஆனந்தச் சோதி கண்டேனே.
  
3மேலை நிலத்தினாள் வேதகப் பெண் பிள்ளை
மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் பரா நந்தி ஆணையே.
  
4கடை வாசலைக் கட்டிக் காலை எழுப்பி
இடை வாசல் நோக்கி இனிது உள் இருத்தி
மடை வாயில் கொக்குப் போல் வந்தித்து இருப்பார்க்கு
உடையாமல் ஊழி இருக்கலும் ஆமே.
  
5கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிர் அது காலின் நெருக்கம்
கலந்த உயிர் அது கால் அது கட்டில்
கலந்த உயிர் உடல் காலமும் நிற்குமே.
  
6வாய் திறவாதார் மனத்தில் ஓர் மாடு உண்டு
வாய் திறப்பாரே வளி இட்டுப் பாய்ச்சுவர்
வாய் திறவாதார் மதி இட்டு மூட்டுவர்
கோய் திறவா விடில் கோழையும் ஆமே.
  
7வாழலும் ஆம் பலகாலும் மனத்து இடைப்
போழ்கின்ற வாயு புறம் படாப் பாய்ச்சு உறில்
ஏழு சாலேகம் இரண்டு பெருவாய்தல்
பாழி பெரியது ஓர் பள்ளி அறையே.
  
8நிரம்பிய ஈர் ஐந்தில் ஐந்து இவை போனால்
இரங்கி விழித்து இருந்து என் செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழி செய்குவார்க்குக்
குரங்கினைக் கொட்டை பொதியலும் ஆமே.
  
9முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னை வந்தவர்க்கு என்ன பிரமாணம்
முன்னுறு கோடி உறு கதி பேசிடில்
என்ன மாயம் இடி கரை நிற்குமே.
  
10அரித்த உடலை ஐம் பூதத்தில் வைத்துப்
பொருத்த ஐம்பூதம் சத்தாதியில் போந்து
தெரித்தமன் ஆதி சத்தாதியில் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே.
  

8. தியானம்

1வரும் ஆதி ஈர் எட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன் போகம் ஏவல்
உரு ஆய சத்தி பரத் தியான முன்னும்
குருவார் சிவத் தியானம் யோகத்தின் கூறே.
  
2கண்நாக்கு மூக்குச் செவி ஞானக் கூட்டத்துள்
பண்ணாக்கி நின்ற பழம் பொருள் ஒன்று உண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
புண்ணாக்கி நம்மை பிழைப்பித்த வாறே.
  
3ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி தன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்து ஆங்கு இருந்திடில்
விண்ணாறு வந்து வெளி கண்டிட ஓடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலும் ஆமே.
  
4ஒரு பொழுது உன்னார் உடலோடு உயிரை
ஒரு பொழுது உன்னார் உயிருள் சிவனை
ஒரு பொழுது உன்னார் சிவன் உறை சிந்தையை
ஒரு பொழுது உன்னார் சந்திரப் பூவே.
  
5மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி
அனைத்து விளக்கும் திரி ஒக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே.
  
6எண் ஆயிரத்து ஆண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டு அறிவார் இல்லை
உள் நாடி உள்ளே ஒளி உற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்து நின்றானே.
  
7நாட்டம் இரண்டும் நடு மூக்கில் வைத்திடில்
வாட்டம் இல்லை மனைக்கும் அழிவு இல்லை
ஓட்டமும் இல்லை உணர்வு இல்லை தான் இல்லை
தேட்டமும் இல்லை சிவன் அவன் ஆமே.
  
8நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்டு
உயர்வு எழா வாயுவை உள்ளே அடக்கித்
துயர் அற நாடியே தூங்க வல்லார்க்குப்
பயன் இது காயம் பயம் இல்லை தானே.
  
9மணி கடல் யானை வார் குழல் மேகம்
அணி வண்டு தும்பி வளை பேரிகை யாழ்
தணிந்து எழு நாதங்கள் தாம் இவை பத்தும்
பணிந்தவர்க்கு அல்லது பார்க்க ஒண்ணாதே.
  
10கடலொடு மேகம் களிறொடும் ஓசை
அட எழும் வீணை அண்டர் அண்டத்துச்
சுடர் மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடம் அறி யோகிக்கு அல்லால் தெரியாதே.
  
11ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்து துயராய் நிற்கும்
ஓசை அதன் மணம் போல விடுவது ஓர்
ஓசை ஆம் ஈசன் உணர வல்லார்க்கே.
  
12நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல் யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சு உண்ட கண்டனே.
  
13உதிக்கின்ற ஆறினும் உள் அங்கி ஐந்தும்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கு இருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக் கொன்றை ஈசன் கழல் சேரலாமே.
  
14பள்ளி அறையில் பகலே இருள் இல்லை
கொள்ளி அறையில் கொளுந்தாமல் காக்கலாம்
ஒள்ளிது அறியிலோர் ஓசனை நீள் இது
வெள்ளி அறையில் விடிவு இல்லை தானே.
  
15கொண்ட விரதம் குறையாமல் தான் ஒன்றித்
தண்டு உடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
பிண்டமும் ஊழி பிரியாது இருக்குமே.
  
16அவ் அவர் மண்டலம் ஆம் பரிசு ஒன்று உண்டு
அவ் அவர் மண்டலத்து அவ் அவர் தேவராம்
அவ் அவர் மண்டலம் அவ் அவர்க்கே வரில்
அவ் அவர் மண்டலம் மாயம் மற்றோர்க்கே.
  
17இளைக் கின்ற நெஞ்சத்து இருட்டு அறை உள்ளே
முளைக் கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப் பெரும் பாசம் துருவிடும் ஆகில்
இளைப்பு இன்றி மார்கழி ஏற்றம் அது ஆமே.
  
18முக்குண மூடற வாயுவை மூலத்தே
சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
தக்க வலம் இடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயர் நிலை வானவர் கோனே.
  
19நடல் இத்த நாபிக்கு நால் விரல் மேலே
மடல் இத்த வாணிக்கு இருவிரல் உள்ளே
கடலித்து இருந்து கருத வல்லார்கள்
சடலத் தலைவனைத் தாம் அறிந்தாரே.
  
20அறிவாய சத்து என்னு மாறா அகன்று
செறிவான மாயை சிதைத்து அருளாலே
பிரியாத பேர் அருள் ஆயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலை அறிந்தாரே.
  

9. சமாதி

1சமாதி யமாதியில் தான் செல்லக் கூடும்
சமாதி யமாதியில் தான் எட்டுச் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க்கு அன்றே
சமாதி யமாதி தலைப்படும் தானே.
  
2விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடில்
சந்தியில் ஆன சமாதியில் கூடிடும்
அந்தம் இலாத அறிவின் அரும் பொருள்
சுந்தரச் சோதியும் தோன்றிடும் தானே.
  
3மன் மனம் எங்கு உண்டு வாயுவும் அங்கு உண்டு
மன் மனம் எங்கு இல்லை வாயுவும் அங்கு இல்லை
மன் மனத்து உள்ளே மகிழ்ந்து இருப்பார்க்கு
மன் மனத்து உள்ளே மனோலயம் ஆமே.
  
4விண்டு அலர் கூபமும் விஞ்சத்து அடவியும்
கண்டு உணர்வாகக் கருதி இருப்பார்கள்
செண்டு வெளியில் செழும் கிரியத்து இடை
கொண்டு குதிரை குசை செறுத்தாரே.
  
5மூல நாடி முகட்டலகு உச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள்
மேலை வாசல் வெளியுறக் கண்ட பின்
காலன் வார்த்தை கனவிலும் இல்லையே.
  
6மண்டலம் ஐந்து வரைகளும் ஈர் ஆறு
கொண்டிட நிற்கும் குடிகளும் ஆறு எண்மர்
கண்டிட நிற்கும் கருத்து நடு ஆக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.
  
7பூட்டு ஒத்து மெய்யில் பொறிபட்ட வாயுவைத்
தேட்டு அற்ற அந்நிலம் சேரும்படி வைத்து
நாட்டத்தை மீட்டு நயனத்து இருப்பார்க்கு
தோட்டத்து மாம்பழம் தூங்கலும் ஆமே.
  
8உரு அறியும் பரிசு ஒன்று உண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந்து அமுது உண்டார்
அருவரை ஏறி அமுது உண்ண மாட்டார்
திருவரை ஆம் மனம் தீர்ந்து அற்றவாறே.
  
9நம்பனை ஆதியை நால் மறை ஓதியைச்
செம் பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை ஆக்கி அருத்தி ஒடுங்கிப் போய்க்
கொம்பு ஏறிக் கும்பிட்டுக் கூட்டம் இட்டாரே.
  
10மூலத்து மேல் அது முச்சதுரத்து
காலத் திசையில் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினில் நெற்றி நேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே.
  
11கற்பனை அற்றுக் கனல் வழியே சென்று
சிற்பனை எல்லாம் சிருட்டித்த பேர் ஒளிப்
பொற்பினை நாடிப் புணர் மதியோடு உற்றுத்
தற்பரம் ஆகத் தகும் தண் சமாதியே.
  
12தலைப்பட்டு இருந்திடத் தத்துவம் கூடும்
வலைப் பட்டு இருந்திடும் மாது நல்லாளும்
குலைப் பட்டு இருந்திடும் கோபம் அகலும்
துலைப் பட்டு இருந்திடும் தூங்க வல்லார்க்கே.
  
13சோதித் தனிச் சுடராய் நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனும் ஆகும் ஆல்
ஆதிப் பிரமன் பெரும் கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந்து அன்புறு வாரே.
  
14சமாதி செய்வார்க்குத் தகும் பல யோகம்
சமாதிகள் வேண்டாம் இறையுடன் ஏகில்
சமாதி தான் இல்லை தான் அவன் ஆகில்
சமாதியில் எட்டுஎட்டுச் சித்தியும் எய்துமே.
  

10. அட்டாங்க யோகப் பேறு
இயமம்

1போது உகந்து ஏறும் புரிசடையான் அடி
யாது உகந்தார் அமரா பதிக்கே செல்வர்
ஏது உகந்தான் இவன் என்று அருள் செய்திடும்
மாது உகந்து ஆடிடும் ஆல் விடையோனே.
  
நியமம்
2பற்றிப் பதத்து அன்பு வைத்துப் பரன்புகழ்
கற்று இருந்து ஆங்கே கருதும் அவர்கட்கு
முற்று எழுந்து ஆங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றும் சிவபதம் சேரலும் ஆமே.
  
ஆதனம்
3வருந்தித் தவம் செய்து வானவர் கோவாய்த்
திருந்து அமராபதிச் செல்வன் இவன் எனத்
தரும் தண் முழவம் குழலும் இயம்ப
இருந்து இன்பம் எய்துவர் ஈசன் அருளே.
  
பிராணாயாமம்
4செம் பொன் சிவகதி சென்று எய்தும் காலத்துக்
கும்பத்து அமரர் குழாம் வந்து எதிர் கொள்ள
எம் பொன் தலைவன் இவனாம் எனச் சொல்ல
இன்பக் கலவி இருக்கலும் ஆமே.
  
பிரத்தியாகாரம்
5சேர் உறு காலத்து இசை நின்ற தேவர்கள்
ஆர் இவன் என்ன அரனாம் இவன் என்ன
ஏர் உறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
கார் உரு கண்டனை மெய் கண்டவாறே.
  
தாரணை
6நல்வழி நாடி நமன் வழி மாற்றிடும்
சொல் வழியாளர் சுருங்காப் பெரும் கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்திசைப்
பல்வழி எய்தினும் பார்வழி ஆகுமே.
  
தியானம்
7தூங்க வல்லார்க்கும் துணை ஏழ் புவனமும்
வாங்க வல்லார்க்கும் வலிசெய்து நின்றிடும்
தேங்க வல்லார்க்கும் திளைக்கும் அமுதமும்
தாங்க வல்லார்க்கும் தன் இடம் ஆமே.
  
சமாதி
8காரியம் ஆன உபாதியைத் தான் கடந்து
ஆரிய காரணம் ஏழும் தன்பால் உற
ஆரிய காரணம் ஆய தவத்து இடைத்
தாரியல் தற்பரம் சேர்தல் சமாதியே.
  

11. அட்டமா சித்திபரகாயப் பிரவேசம்

1பணிந்து எண்திசையும் பரமனை நாடித்
துணிந்து எண் திசையும் தொழுது எம் பிரானை
அணிந்து எண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்து எண் திசை சென்று தாபித்த வாறே.
  
2பரிசு அறி வானவர் பண்பன் அடி எனத்
துரிசு அற நாடியே தூவெளி கண்டேன்
அரியது எனக்கு இல்லை அட்டமா சித்தி
பெரியது அருள் செய்து பிறப்பு அறுத்தானே.
  
3குரவன் அருளில் குறிவழி மூலன்
பரையின் மணம்மிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேர் எட்டாம் சித்தியே.
  
4காயாதி பூதம் கலை கால மாயையில்
ஆயாது அகல அறிவு ஒன்றன் அனாதியே
ஓயாப் பதி அதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலும் ஆமே.
  
5இருபதினாயிரத்து எண்ணூறு பேதம்
மருவிய கன்ம மாம் அந்த யோகம்
தரும் இவை காய உழைப்பு ஆகும் தானே
அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே.
  
6மதி தனில் ஈர் ஆறாய் மன்னும் கலையின்
உதயம் அது நால் ஒழிய ஓர் எட்டுப்
பதியும் ஈர் ஆறு ஆண்டு பற்று அறப் பார்க்கில்
திதமான ஈர் ஆறு சித்திகள் ஆமே.
  
7நாடும் பிணி ஆகும் நஞ்சனம் சூழ்ந்தக்கால்
நீடும் கலை கல்வி நீள் மேதை கூர் ஞானம்
பீடு ஒன்றினால் வாயாச் சித்தி பேதத்தின்
நீடும் துரம் கேட்டல் நீள் முடி ஈர் ஆறே.
  
8ஏழ் ஆனதில் சண்ட வாயுவின் வேகி ஆம்
தாழா நடை பல யோசனை சார்ந்திடும்
சூழான ஓர் எட்டில் தோன்றா நரைதிரை
தாழான ஒன் பதிற்றான் பர காயமே.
  
9ஈர் ஐந்தில் பூரித்துத் தியான உருத்திரன்
ஏர் ஒன்று பன் ஒன்றில் ஈர் ஆறாம் எண்சித்தி
சீர் ஒன்று மேல் ஏழ் கீழ் ஏழ் புவிச் சென்று
ஏர் ஒன்று வியாபியாய் நிற்றல் ஈர் ஆறே.
  
10தானே அனுவும் சகத்துத்தன் நொய்ம்மையும்
மானாக் கனமும் பரகாயத்து ஏகமும்
தான் ஆவதும் பரகாயம் சேர் தன்மையும்
ஆனாத உண்மையும் வியாபியும் ஆம் எட்டே.
  
11தாங்கிய தன்மையும் தான் அணுப் பல் உயிர்
வாங்கிய காலத்து மற்று ஓர் குறை இல்லை
ஆங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்துமிக்கு
ஓங்கி வர முத்தி முந்தியவாறே.
  
12முந்திய முந்நூற்று அறுபது காலமும்
வந்தது நாழிகை வான் முதலாய் இடச்
சிந்தை செயச் செய மண் முதல் தேர்ந்து அறிந்து
உந்தியுள் நின்று உதித்து எழும் ஆறே.
  
13சித்தம் திரிந்து சிவ மயம் ஆகிய
முத்தம் தெரிந்து உற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கு அற்றோர்
சித்தம் பரத்தில் திரு நடத்தோரே.
  
14ஒத்த இவ் ஒன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இவ் ஒன்பதின் மிக்க தனம் செயன்
ஒத்த இவ் ஒன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்ததே.
  
15இருக்கும் தனம் செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்று ஆய்
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்
இருக்கும் உடல் அது வீங்கி வெடித்ததே.
  
16வீங்கும் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமும் கூனும் முடம் அதாய்
வீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே.
  
17கண்ணில் வியாதி ரோகம் தனஞ் செயன்
கண்ணில் இவ் வாணிகள் காசம் அவன் அல்லன்
கண்ணினில் கூர்மன் கலந்திலன் ஆதலால்
கண்ணினில் சோதி கலந்ததும் இல்லையே.
  
18நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி அளவும் சுடர் விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்று அங்கு உணர்ந்து இருந்தாரே.
  
19ஒன்பது வாசல் உடையது ஓர் பிண்டத்துள்
ஒன்பது நாடி உடையது ஓர் இடம்
ஒன்பது நாடி ஒடுங்க வல்லார் கட்கு
ஒன்பது காட்சி இலை பல ஆமே.
  
20ஓங்கிய அங்கிக் கீழ் ஒண் சுழுனைச் செல்ல
வாங்கி இரவி மதி வழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழும் தரித்திட
ஆங்கு அது சொன்னோம் அருவழி யோர்க்கே.......
  
21தலைப் பட்ட வாறு அண்ணல் தையலை நாடி
வலைப் பட்ட பாசத்து வன் பிணை மான் போல்
துலைப் பட்ட நாடியைத் தூவழி செய்தால்
விலைக்கு உண்ண வைத்தது ஓர் வித்து அது ஆமே.
  
22ஓடிச் சென்று அங்கே ஒரு பொருள் கண்டவர்
நாடியின் உள் ஆக நாதம் எழுப்புவர்
தேடிச் சென்று அங்கே தேனை முகந்து உண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே.
  
23கட்டி இட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பது
மட்டு இட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
கட்டி இட்டு நின்று களம் கனி ஊடுபோய்ப்
பொட்டு இட்டு நின்று பூரணம் ஆனதே.
  
24பூரண சத்தி எழுமூன்று அறை ஆக
ஏர் அணி கன்னியர் எழு நூற்று அம் சாக்கினார்
நாரணன் நான்முகன் ஆதிய ஐவர்க்கும்
காரணம் ஆகிக் கலந்து விரிந்ததே.
  
25விரிந்து குவிந்து விளைந்த இம் மங்கை
கரந்து உள் எழுந்து கரந்து அங்கு இருக்கில்
பரந்து குவிந்தது பார் முதல் பூதம்
இரைந்து எழு வாயு இடத்தினில் ஒடுங்கே.
  
26இடையொடு பிங்கலை என்னும் இரண்டு
மடை படு வாயுவும் மாறியே நிற்கும்
தடை அவை ஆறு ஏழும் தண் சுடர் உள்ளே
மிடை வளர் மின் கொடி தன்னில் ஒடுங்கே.
  
27ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கு இருக்கில்
மடங்கி அடங்கிடும் வாயு அதன் உள்
மடங்கி மடங்கிடும் மன் உயிர் உள்ளே
நடம் கொண்ட கூத்தனும் நாடு கின்றானே.
  
28நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்
தேடி உடன் சென்று அத் திருவினைக் கைக் கொண்டு
பாடி உள் நின்ற பகைவரைக் கட்டி இட்டு
மாடி ஒரு கை மணி விளக்கு ஆனதே.
  
29அணு ஆதி சித்திகள் ஆனவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை
இணுகாத வேகார் பாகாயம் ஏவல்
அணு அத்தனை எங்கும் தான் ஆதல் என்று எட்டே.
  
30எட்டு ஆகிய சித்தி ஓர் எட்டி யோகத்தால்
கிட்டாப் பிராணனே செய்தால் கிடைத்திடும்
ஒட்டா நடு நாடி மூலத்தன் அல் பானு
விட்டான் மதி உண்ணவும் வரும் மேல் அதே.
  
31சித்திகள் எட்டு அன்றிச் சேர் எட்டியோகத்தால்
புத்திகள் ஆனவை எல்லாம் புலப்படும்
சித்திகள் எண் சித்தி தான் ஆம் திரிபுரை
சத்தி அருள் தரத் தான் உள ஆகுமே.
  
அணிமா
32எட்டு இவை தன்னோடு எழில் பரம் கை கூடப்
பட்டவர் சித்தர் பர லோகம் சேர்தலால்
இட்டம் அது உள்ளே இறுக்கல் பரகாட்சி
எட்டும் வரப்பு இடம் தான் நின்று எட்டுமே.
  
33மந்திரம் ஏறு மதி பானுவை மாற்றிக்
கந்தாய்க் குழியில் கசடு அற வல்லார்க்குத்
தந்து இன்றி நல் காமிய லோகம் சார்வாகும்
அந்த உலகம் அணிமாதி ஆமே.
  
34முடிந்திட்டு வைத்து முயங்கி ஓர் ஆண்டில்
அணிந்த அணிமாகை தான் ஆம் இவனும்
தணிந்த அப் பஞ்சினும் தான் ஒய்யது ஆகி
மெலிந்து அங்கு இருந்திடும் வெல்ல ஒண்ணாதே.
  
லகிமா
35ஆகின்ற அத் தனி நாயகி தன்னுடன்
போகின்ற தத்துவம் எங்கும் புகலது ஆய்ச்
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்றதை ஆண்டின் மால் அகு ஆகுமே.
  
36மால் அகு ஆகிய மாயனைக் கண்டபின்
தான் ஒளி ஆகித் தழைத்து அங்கு இருந்திடும்
பால் ஒளி ஆகிப் பரந்து எங்கும் நின்றது
மேல் ஒளி ஆகிய மெய்ப் பொருள் காணுமே.
  
மகிமா
37மெய்ப்பொருள் சொல்லிய மெல் இயலாள் உடன்
தன் பொருள் ஆகிய தத்துவம் கூடிடக்
கைப் பொருள் ஆகக் கலந்திடும் ஓர் ஆண்டின்
மைப் பொருள் ஆகும் மகிமா அது ஆகுமே.
  
38ஆகின்ற கால் ஒளி ஆவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவது இல்லை ஆம்
மேல் நின்ற காலம் வெளி உற நின்றன
தான் நின்ற காலங்கள் தன்வழி ஆகுமே.
  
39தன்வழி ஆகத் தழைத்திடும் ஞானமும்
தன் வழி ஆகத் தழைத்திடும் வையகம்
தன் வழி ஆகத் தழைத்த பொருள் எல்லாம்
தன் வழி தன் அருள் ஆகி நின்றானே.
  
பிராத்தி
40நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படை அவை எல்லாம்
கொண்டவை ஓர் ஆண்டு கூட இருந்திடில்
விண்டதுவே நல்ல பிராத்தி அது ஆகுமே.
  
கரிமா
41ஆகின்ற மின் ஒளி ஆவது கண்டபின்
பாகின்ற பூவில் பரப்பவை காணலாம்
ஏகின்ற காலம் வெளிஉற நின்றது
போகின்ற காலங்கள் போவதும் இல்லைஏ.
  
42போவது ஒன்று இல்லை வருவது தான் இல்லை
சாவது ஒன்று இல்லை தழைப்பது தான் இல்லை
தாமதம் இல்லை தமர் அகத்து இன் ஒளி
யாவதும் இல்லை அறிந்து கொள்வார்க்கே.
  
43அறிந்த பராசத்தி உள்ளே அமரில்
பறிந்தது பூதப் படை அவை எல்லாம்
குவிந்து அவை ஓர் ஆண்டு கூட இருக்கில்
விரிந்தது பரகயம் மேவலும் ஆமே.
  
பிராகாமியம்
44ஆன விளக்கு ஒளி ஆவது அறிகிலர்
மூல விளக்கு ஒளி முன்னே உடையவர்
கான விளக்கு ஒளி கண்டு கொள்வார் கட்கு
மேலை விளக்கு ஒளி வீடு எளிதா நின்றே.
  
ஈசத்துவம்
45நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படை அவை எல்லாம்
கொண்டவை ஓர் ஆண்டு கூடி இருந்திடில்
பண்டை அவ் ஈசன் தத்துவம் ஆகுமே.
  
46ஆகின்ற சந்திரன் தன் ஒளி ஆய் அவன்
ஆகின்ற சந்திரன் தட்பமும் ஆயிடும்
ஆகின்ற சந்திரன் தன் கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தான் அவன் ஆமே.
  
47தானே படைத்திட வல்லவன் ஆயிடும்
தானே அளித்திட வல்லவன் ஆயிடும்
தானே சங்காரத் தலைவனும் ஆயிடும்
தானே இவன் எனும் தன்மயன் ஆமே.
  
48தன்மை அது ஆகத் தழைத்த கலையின் உள்
பன்மை அது ஆகப் பரந்த ஐம் பூதத்தை
வன்மை அது ஆக மறித்திடில் ஓர் ஆண்டின்
மென்மை அது ஆகிய மெய்ப் பொருள் காணுமே.
  
வசித்துவம்
49மெய்ப் பொருள் ஆக விளைந்தது ஏது எனின்
நல் பொருள் ஆகிய நல்ல வசித்துவம்
கைப் பொருள் ஆகக் கலந்த உயிர்க்கு எல்லாம்
தன் பொருள் ஆகிய தன்மையன் ஆகுமே.
  
50தன்மை அது ஆகத் தழைத்த பகலவன்
மென்மை அது ஆகிய மெய்ப் பொருள் கண்டிடின்
பொன்மை அது ஆகப் புலன்களும் போயிட
நன்மை அது ஆகிய நல்கொடி காணுமே.
  
51நல் கொடி ஆகிய நாயகி தன்னுடன்
அக் கொடி ஆகம் அறிந்திடில் ஓராண்டு
பொன் கொடி ஆகிய புவனங்கள் போய்வரும்
கல் கொடி ஆகிய காமுகன் ஆமே.
  
52காமரு தத்துவம் ஆனது வந்தபின்
பூமரு கந்தம் புவனம் அது ஆயிடும்
மா மரு உன் இடை மெய்த் தடுமானன் ஆய்
நா மருவும் ஒளி நாயகம் ஆனதே.
  
53நாயகம் ஆகிய நல் ஒளி கண்டபின்
தாயகம் ஆகத் தழைத்து அங்கு இருந்திடும்
போய் அகம் ஆன புவனங்கள் கண்டபின்
பேய் அகம் ஆகிய பேர் ஒளி காணுமே.
  
54பேர் ஒளி ஆகிய பெரிய அவ் வேட்டையும்
பார் ஒளி ஆகப் பதைப்பு அறக் கண்டவன்
தார் ஒளி ஆகத் தரணி முழுதும் ஆம்
ஓர் ஒளி ஆகிய கால் ஒளி காணுமே.
  
55காலோடு உயிரும் கலக்கும் வகை சொல்லில்
கால் அது அக்கொடி நாயகி தன்னுடன்
கால் அது ஐஞ்ஞூற்று ஒரு பத்து மூன்றையும்
கால் அது வேண்டிக் கொண்ட இவ் ஆறே.
  
56ஆறது ஆகும் அமிர்தத் தலையின் உள்
ஆறது ஆயிர முந்நூற்று தொடைஞ்சு உள
ஆறது ஆயிரம் ஆகும் அருவழி
ஆறது ஆக வளர்ப்பது இரண்டே.
  
57இரண்டின் மேலே சதா சிவ நாயகி
இரண்டது கால் கொண்டு எழுவகை சொல்லில்
இரண்டது ஆயிரம் ஐம்பதோடு ஒன்றாய்த்
திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே.
  
58அஞ்சுடன் அஞ்சு முகம் உள நாயகி
அஞ்சுடன் அஞ்சு அது ஆயுதம் ஆவது
அஞ்சு அது அன்றி இரண்டு அது ஆயிரம்
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே.
  
59ஒன்று அது ஆகிய தத்துவ நாயகி
ஒன்று அது கால் கொண்டு ஊர்வகை சொல்லிடில்
ஒன்று அது வென்றி கொள் ஆயிரம் ஆயிரம்
ஒன்று அது காலம் எடுத்துளும் முன்னே.
  
60முன் எழும் அக் கலை நாயகி தன்னுடன்
முன் உறு வாயு முடிவகை சொல்லிடின்
முன் உறும் ஐம்பத்து ஒன்றுடன் அஞ்சும் ஆய்
முன் உறு வாயு முடி வகை ஆமே.
  
61ஆய் வரும் அத்தனி நாயகி தன்னுடன்
ஆய் வரும் வாயு அளப்பது சொல்லிடில்
ஆய் வரும் ஐஞ்ஞூற்று முப்பதோடு ஒன்பது
மாய் வரு வாயு வளப்பு உள் இருந்தே.
  
62இருநிதி ஆகிய எந்தை இடத்து
இருநிதி வாயு இயங்கு நெறியில்
இருநூற்று முப்பத்து மூன்று உடன் அஞ்சாய்
இருநிதி வாயு இயங்கும் எழுத்தே.
  
63எழுகின்ற சோதியுள் நாயகி தன் பால்
எழுகின்ற வாயு இடம் அது சொல்லில்
எழுநூற்று இருபத்து ஒன்பான் அது நாலாய்
எழுந்து உடன் அங்கி இருந்தது இவ்வாறே.
  
64ஆறு அது கால் கொண்டு இரதம் விளைத்திடும்
ஏழ் அது கால் கொண்டு இரட்டி இறக்கிட
எட்டு அது கால் கொண்டிட வகை ஒத்தபின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே.
  
65சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவில்
சந்திரன் தானும் தலைப்படும் தன்மையைச்
சந்தியிலே கண்டு தான் ஆம் சக முகத்து
உந்திச் சமாதி யுடை ஒளியோகியே.
  
66அணங்கு அற்றம் ஆதல் அரும்சன நீவல்
வணங்கு உற்ற கல்விமா ஞானம் மிகுத்தல்
சுணங்கு உற்ற வாயர் சித்தி தூரம் கேட்டல்
நுணங்கு அற்று இரோதல் கால் வேகத்து நுந்தலே.
  
67மரணம் சரை விடல் வண்பர காயம்
இரணம் சேர் பூமி இறந்தோர்க்கு அளித்தல்
அரணன் திருஉற வாதன் மூ ஏழாங்
கரன் உறு கேள்வி கணக்கு அறிந்தேனே.
  
68ஓதம் ஒலிக்கும் உலகை வலம் வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயன் இல்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருந்த நகர் அறிவாரே.
  
69மூல முதல் வேதா மால் அரன் முன் நிற்கக்
கோலிய ஐம் முகன் கூறப் பரவிந்து
சாலப் பரநாதம் விந்துத் தனி நாதம்
பாலித்த சத்தி பரை பரன் பாதமே.
  
70ஆதார யோகத்து அதி தேவொடும் சென்று
மீது ஆன தற்பரை மேவும் பரன் ஒடு
மேதாதி ஈர் எண் கலை செல்லம் மீது ஒளி
ஓதா அசிந்த மீது ஆனந்த யோகமே.
  
71மதியமும் ஞாயிறும் வந்து உடன் கூடித்
துதி செய்பவர் அவர் தொல் வானவர்கள்
விதி அது செய்கின்ற மெய் அடியார்க்குப்
பதி அது காட்டும் பரமன் நின்றானே.
  
72கட்ட வல்லார்கள் கரந்து எங்கும் தான் ஆவர்
மட்டு அவிழ் தாமரை உள்ளே மணம் செய்து
பொட்டு எழக் குத்திப் பொறி எழத் தண்டு இட்டு
நட்டு அறிவார்க்கு நமன் இல்லை தானே.
  

12. கலைநிலை

1காதல் வழி செய்த கண் நுதல் அண்ணலைக்
காதல் வழி செய்து கண் உற நோக்கிடில்
காதல் வழி செய்து கங்கை வழிதரும்
காதல் வழி செய்து காக்கலும் ஆமே.
  
2காக்கலும் ஆகும் கரணங்கள் நான்கையும்
காக்கலும் ஆகும் கலை பதினாரையும்
காக்கலும் ஆகும் கலந்த நல் வாயுவும்
காக்கலும் ஆகும் கருத்து உற நில்லே.
  
3நிலை பெற நின்றது நேர்தரு வாயு
சிலை பெற நின்றது தீபமும் ஒத்து
கலை வழி நின்ற கலப்பை அறியில்
மலைவற ஆகும் வழி இது ஆமே.
  
4புடை ஒன்றி நின்றிடும் பூதப் பிரானை
மடை ஒன்றி நின்றிட வாய்த்த வழியும்
சடை ஒன்றி நின்ற அச் சங்கர நாதன்
விடை ஒன்றில் ஏறியே வீற்று இருந்தானே.
  
5இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
ஒருக்கின்ற வாயு ஒளி பெற நிற்கத்
தருக்கு ஒன்றி நின்றிடும் சாதகன் ஆமே.
  
6சாதகம் ஆன அத்தன்மையை நோக்கியே
மாதவம் ஆன வழிபாடு செய்திடும்
போதகம் ஆகப் புகல் உறப் பாய்ச்சினால்
வேதகம் ஆக விளைந்தது கிடக்குமே.
  
7கிடந்தது தானே கிளர் பயன் மூன்று
நடந்தது தானே உள் நாடியுள் நோக்கிப்
படர்ந்தது தானே பங்கயம் ஆகத்
தொடர்ந்தது தானே அச் சேதியுள் நின்றே.
  
8தானே எழுந்த அத் தத்துவ நாயகி
ஊனே வழி செய்து எம் உள்ளே இருந்திடும்
வானோர் உலகு ஈன்ற அம்மை மதித்திடத்
தேனே பருகிச் சிவ ஆலயம் ஆகுமே.
  
9திகழும் படியே செறிதரு வாயு
அழியும் படியை அறிகிலர் ஆரும்
அழியும் படியை அறிந்தபின் நந்தி
திகழ்கின்ற வாயுவைச் சேர்தலும் ஆமே.
  
10சோதனை தன்னில் துரிசறக் காணலாம்
நாதனும் நாயகி தன்னில் பிரியும் நாள்
சாதனம் ஆகும் குருவை வழிபட்டு
மாதனம் ஆக மதித்துக் கொள்ளீரே.
  
11ஈர் ஆறு கால் கொண்டு எழுந்த புரவியைப்
பேராமல் கட்டிப் பெரிது உண்ண வல்லீரேல்
நீர் ஆயிரமும் நிலம் ஆயிரத்து ஆண்டும்
பேராது காயம் பிரான் நந்தி ஆணையே.
  
12ஓசையில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும்
நாசியின் மூன்றும் நாவில் இரண்டும்
தேசியும் தேசனும் தன்னில் பிரியும் நாள்
மாசு அறு சோதி வகுத்து வைத்தானே.
  

13. காரியசித்தி உபாயம்

1உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.
  
2உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்பு உளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்பு கின்றேனே.
  
3சுழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியும்
கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்து
உழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு
அழற்றித் தவிர்ந்து உடல் அஞ்சனம் ஆமே.
  
4அஞ்சனம் போன்று உடலை அறு மந்தியில்
வஞ்சக வாத மறுமத் தியானத்தில்
செம் சிறு காலையில் செய்திடல் பித்து அறும்
நஞ்சு அறச் சொன்னோம் நரை திரை நாசமே.
  
5மூன்று மடக்கு உடைப் பாம்பு இரண்டு எட்டுள்
வேன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம்
நான்ற இம் முட்டை இரண்டையும் கட்டி இட்டு
ஊன்றி இருக்க உடம்பு அழியாதே.
  
6நூறும் அறுபதும் ஆறும் வலம் வர
நூறும் அறுபதும் ஆறும் இடம் வர
நூறும் அறுபதும் ஆறும் எதிர் இட
நூறும் அறுபதும் ஆறும் புகுவரே.
  
7சத்தியார் கோயில் இடம் வலம் சாதித்தான்
மத்தியானத் திலே வாத்தியம் கேட்கலாம்
தித் தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும்
சத்தியம் சொன்னோம் சதா நந்தி ஆணையே.
  
8திறத் திறம் விந்து திகழும் ஆகாரம்
உறப் பெறவே நினைந்து ஓதும் சகார
மறிப்பது மந்திர மன்னிய நாதம்
மறப் பெற யோகிக்கு அற நெறி ஆமே.
  
9உந்திச் சுழியின் உடன் நேர் பிராணனைச்
சிந்தித்து எழுப்பிச் சிவ மந்திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்
சிந்தித்து எழுப்பச் சிவன் அவன் ஆமே.
  
10மாறா மலக் குதம் தன் மேல் இரு விரல்
கூறா இலிங்கத்தின் கீழே குறிக் கொண்மின்
ஆறா உடம்பு இடை அண்ணலும் அங்கு உளன்
கூறா உபதேசம் கொண்டது காணுமே.
  
11நீல நிறன் உடை நேர் இழையா ளொடும்
சாலவும் புல்லிச் சதம் என்று இருப்பார்க்கு
ஞாலம் அறிய நரை திரை மாறிடும்
பாலனும் ஆவர் பரா நந்தி ஆணையே.
  
12அண்டம் சுருங்கில் அதற்கு ஓர் அழிவு இல்லை
பிண்டம் சுருங்கில் பிராணன் நிலை பெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பல உள
கண்டம் கறுத்த கபாலியும் ஆமே.
  
13பிண்டத்து உள் உற்ற பிழக் கடை வாசலை
அண்டத்து உள் உற்று அடுத்து அடுத்து ஏகிடில்
வண்டிச் சிக்கு மலர்க் குழல் மாதரார்
கண்டிச் சிக்கு நல் காயமும் ஆமே.
  
14சுழலும் பெரும் கூற்றுத் தொல்லை முன் சீறி
சுழலும் இரத்தத்து உள் அங்கி உள் ஈசன்
கழல் கொள் திருவடி காண்கு உறில் ஆங்கே
நிழல் உளுந்து எற்றுளும் நிற்றலும் ஆமே.
  
15நான் கண்ட வன்னியும் நாலு கலை ஏழும்
தான் கண்ட வாயுச் சரீரம் முழுதொடும்
ஊன் கண்டு கொண்ட உணர்வும் மருந்து ஆக
மான் கன்று நின்று வளர்கின்ற வாறே.
  
16ஆகும் சன வேத சத்தியை அன்பு உற
நீ கொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையை
பாகு படுத்திப் பல் கோடி களத்தினால்
ஊழ் கொண்ட மந்திரம் தன்னால் ஒடுங்கே.
  

14. கால சக்கரம்

1மதி வட்டம் ஆக வரை ஐந்து நாடி
இது விட்டு இங்கு ஈராறு அமர்ந்த அதனால்
பதி வட்டத்துள் நின்று பாலிக்குமாறு
மது விட்டுப் போம் ஆறு மாயல் உற்றேனே.
  
2உற்ற அறிவு ஐந்தும் உணர்ந்த அறிவு ஆறும் ஏழும்
கற்ற அறிவு எட்டும் கலந்த அறிவு ஒன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்றது அறியாது அழிகின்ற வாறே.
  
3அழிகின்ற ஆண்டு அவை ஐ ஐஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்று என்பது ஆகும்
கழிகின்ற கால் அறுபத்திரண்டு என்ப
எழுகின்ற ஈர் ஐம்பத்து எண் அற்று இருந்ததே.
  
4திருந்து தினம் அத் தினத்தினொடு நின்று
இருந்து அறி நாள் ஒன்று இரண்டு எட்டு மூன்று
பொருந்திய நாளொடு புக்கு அறிந்து ஓங்கி
வருந்துதல் இன்றி மனை புகல் ஆமே.
  
5மனை புகு வீரும் மகத்து இடை நாடி
என இருபத்து அஞ்சும் ஈர் ஆறு அதனால்
தனை அறிந்து ஏறட்டுத்தற் குறி ஆறு
வினை அறி ஆறு விளங்கிய நாலே.
  
6நாலும் கடந்தது நால்வரும் நால் ஐந்து
பாலம் கடந்தது பத்துப் பதினைந்து
கோலம் கடந்த குணத்து ஆண்டு மூ இரண்டு
ஆலம் கடந்தது ஒன்று ஆர் அறிவாரே.
  
7ஆறும் இருபதுக்கு ஐ அஞ்சு மூன்றுக்கும்
தேறும் இரண்டும் இருபத்தொடு ஆறு இவை
கூறு மதி ஒன்றினுக்கு இருபத்து ஏழு
வேறு பதி அம் கண் நாள் விதித்தானே.
  
8விதித்த இருபத்து எட்டொடு மூன்று அறையாகத்
தொகுத்து அறி முப்பத்து மூன்று தொகுமின்
பகுத்து அறி பத்து எட்டும் பாராதி கணால்
உதித்து அறி மூன்று இரண்டு ஒன்றின் முறையே.
  
9முறை முறை ஆய்ந்து முயன்றிலர் ஆகில்
இறை இறை யார்க்கும் இருக்க அரிது
மறை அது காரணம் மற்று ஒன்றும் இல்லை
பறை அறையாது பணிந்து முடியே.
  
10முடிந்தது அறியார் முயல்கின்ற மூர்க்கர்
இடிஞ்சில் இருக்க விளக்கு எரி கொண்டு
கடிந்தனன் மூளக் கதுவ வல்லார்க்கு
நடந்திடும் பாரினில் நண்ணலும் ஆமே.
  
11நண்ணு சிறு விரல் நாண் ஆக மூன்றுக்கும்
பின்னிய மார்பு இடைப் பேராமல் ஒத்திடும்
சென்னியின் மூன்றுக்கும் சேரவே நின்றிடும்
உன்னி உணர்ந்திடும் ஓவியம் தானே.
  
12ஓவியம் ஆன உணர்வை அறிமின்கள்
பாவிகள் இத்தின் பயன் அறிவார் இல்லை
தீவினையாம் உடன் மண்டலம் மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே.
  
13தண்டுடன் ஓடித் தலைப் பெய்த யோகிக்கு
மண்டலம் மூன்றும் மகிழ்ந்து உடல் ஒத்திடும்
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியப் பிணங்கு கின்றாரே.
  
14பிணங்கி அழிந்திடும் பேர் அது கேள் நீ
அணங்கு உடன் ஆதித்தன் ஆறு விரியின்
வணங்கு உடனே வந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக்கு ஆகச் சுழல்கின்ற வாறே.
  
15சுழல் கின்ற ஆறின் துணை மலர் காணான்
தழல் இடைப் புக்கிடும் தன் உள் இலாமல்
கழல் கண்டு போம் வழி காண வல்லார்க்குக்
குழல் வழி நின்றிடும் கூத்தனும் ஆமே.
  
16கூத்தன் குறியில் குணம் பல கண்டவர்
சாத்திரம் தன்னைத் தலைப் பெய்து நிற்பர்கள்
பார்த்துஇருந்து உள்ளே அனு போகம் நோக்கிடில்
ஆத்தனும் ஆகி அலர்ந்து இரும் ஒன்றே.
  
17ஒன்றில் வளர்ச்சி உலப்பு இலி கேள் இனி
நன்று என்று மூன்றுக்கு நாள் அது சென்றிடும்
சென்றிடும் முப்பதும் சேர இருந்திடில்
குன்று இடைப் பொன் திகழ் கூத்தனும் ஆமே.
  
18கூத்தவன் ஒன்றிடும் கூர்மை அறிந்து அங்கே
ஏத்துவர் பத்தினில் எண்திசை தோன்றிடப்
பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடில்
சாத்திடு நூறு தலைப் பெய்யலாமே.
  
19சாத்திடும் நூறு தலைப் பெய்து நின்றவர்
காத்து உடல் ஆயிரம் கட்டு உறக் காண்பர்கள்
சேர்த்து உடல் ஆயிரம் சேர இருந்தவர்
மூத்து உடன் கோடி உகம் அது ஆமே.
  
20உகம் கோடி கண்டும் ஒசிவற நின்று
அகம் கோடி கண்டு உள் அலறக் காண்பர்கள்
சிவம் கோடி விட்டுச் செறிய இருந்து அங்கு
உகம் கோடி கண்டு அங்கு உயர் உறுவாரே.
  
21உயர் உறுவார் உலகத்தொடும் கூடிப்
பயன் உறுவார் பலர் தாம் அறியாமல்
செயல் உறுவார் சிலர் சிந்தை இலாமல்
கயல் உறு கண்ணியைக் காண கிலாரே.
  
22காண இலாதார் கழிந்து ஓடிப் போவர்கள்
காண இலாதார் நயம் பேசி விடுவார்கள்
காண இலாதார் கழிந்த பொருள் எலாம்
காண இலாமல் கழிகின்ற வாறே.
  
23கழிகின்ற அப்பொருள் காண இலாதார்
கழிகின்ற அப் பொருள் காணலும் ஆகும்
கழிகின்ற உள்ளே கருத்து உற நோக்கில்
கழியாத அப்பொருள் காணலும் ஆமே.
  
24கண்ணன் பிறப்பு இலி காண் நந்தியாய் உள்ளே
எண்ணும் திசையுடன் ஏகாந்தன் ஆயிடும்
திண் என்று இருக்கும் சிவகதியாய் நிற்கும்
நண்ணும் பதம் இது நாட வல்லார் கட்கே.
  
25நாட வல்லார்க்கு நமன் இல்லை கேடு இல்லை
நாட வல்லார்கள் நரபதியாய் நிற்பர்
தேட வல்லார்கள் தெரிந்த பொருள் இது
கூட வல்லார் கட்குக் கூறலும் ஆமே.
  
26கூறும் பொருளில் தகார உகாரங்கள்
தேறும் பொருள் இது சிந்தை உள் நின்றிடக்
கூறும் மகாரம் குழல் வழி ஓடிட
ஆறும் அமர்ந்திடும் அண்ணலும் ஆமே.
  
27அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வார் களுக்கு
கண்ணல் அழிவு இன்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவன் இவன் ஆகுமே.
  
28அவன் இவன் ஆகும் பரிசு அறிவார் இல்லை
அவன் இவன் ஆகும் பரிசு அது கேள் நீ
அவன் இவன் ஓசை ஒளியின் உள் ஒன்றிடும்
அவன் இவன் வட்டம் அது ஆகி நின்றானே.
  
29வட்டங்கள் ஏழும் மலர்ந்திடும் உம் உளே
சிட்டன் இருப்பிடம் சேர அறிகிலீர்
ஒட்டி இருந்து உள் உபாயம் உணர்ந்திடக்
கட்டி இருப்பிடம் காணலும் ஆகுமே.
  
30காணலும் ஆகும் பிரமன் அரி என்று
காணலும் ஆகும் கறைக் கண்டன் ஈசனைக்
காணலும் ஆகும் சதா சிவ சத்தியும்
காணலும் ஆகும் கலந்து உடன் வைத்ததே.
  

15. ஆயுள் பரீட்சை

1வைத்த கை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்
உத்தமம் மிக்கிடில் ஓர் ஆறு திங்கள் ஆம்
அத்தம் மிகுத்து இட்டு இரட்டியது ஆயிடில்
நித்தல் உயிர்க்கு ஒரு திங்களில் ஓசையே.
  
2ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின் கண்
ஓசை இறந்தவர் ஈசனை உள் குவர்
ஓசை இறந்தவர் நெஞ்சின் உள் ஈசனும்
ஓசை உணர்ந்த உணர்வு இது ஆமே.
  
3ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்
நாமே உறைகின்ற நன்மை அளித்திடும்
பூ மேல் உறைகின்ற போதகம் வந்திடும்
தாமேல் உலகில் தலைவனும் ஆமே.
  
4தலைவனிடம் வலம் சாதிப்பார் இல்லை
தலைவனிடம் வலம் ஆயிடில் தையல்
தலைவனிடம் வலம் தன் வழி அஞ்சில்
தலைவனிடம் வலம் தன் வழி நூறே.
  
5ஏறிய வானில் எண்பது சென்றிடும்
தேறிய ஏழில் சிறக்கும் வகை எண்ணில்
ஆறு ஒரு பத்தாய் அமர்ந்த இரண்டையும்
தேறியே நின்று தெளி இவ் வகையே.
  
6இவ்வகை எட்டும் இடம் பெற ஓடிடில்
அவ் வகை ஐம்பதே என்ன அறியலாம்
செவ் வகை ஒன்பதும் சேரவே நின்றிடின்
மூவ் வகை ஆம் அது முப்பத்து மூன்றே.
  
7மும் மூன்றும் ஒன்றும் முடிவு உற நின்றிடில்
எண் மூன்றும் நாலும் இடவகையாய் நிற்கும்
ஐம் மூன்றும் ஓடி அகலவே நின்றிடில்
பன் மூன்றொடு ஈர் ஆறு பார்க்கலும் ஆமே.
  
8பார்க்கலும் ஆகும் பகல் முப்பதும் ஆகில்
ஆக்கலும் ஆகும் அவ்வாறு இரண்டு உள் இட்டுப்
போக்கலும் ஆகும் புகல் அற ஒன்று எனில்
தேக்கலும் ஆகும் திருந்திய பத்தே.
  
9ஏ இரு நாளும் இயல்பு உற ஓடிடில்
பாய் இரு நாளும் பகை அற நின்றிடும்
தேய் உற மூன்றும் திகழவே நின்றிடில்
ஆய் உரு ஆறு என்று அளக்கலும் ஆமே.
  
10அளக்கும் வகை நாலும் அவ்வழியே ஓடில்
விளக்கும் ஒரு நாலும் மெய்ப் பட நிற்கும்
துளக்கும் வகை ஐந்தும் தூய் நெறி ஓடில்
களக்கம் அற மூன்றில் காணலும் ஆமே.
  
11காணலும் ஆகும் கருதிய பத்து ஓடில்
காணலும் ஆகும் கலந்த இரண்டையும்
காணலும் ஆகும் கலப்பு அற மூ ஐந்தேல்
காணலும் ஆகும் கருத்து உற ஒன்றே.
  
12கருதும் இருபதில் காண ஆறு ஆகும்
கருதும் ஐ ஐந்தில் காண்பது மூன்று ஆம்
கருதும் இருபது உடன் ஆறு காணில்
கருதும் இரண்டு எனக் காட்டலும் ஆமே.
  
13காட்டலும் ஆகும் கலந்து இருபத்து ஏழில்
காட்டலும் ஆகும் கலந்து எழும் ஒன்று எனக்
காட்டலும் ஆகும் கலந்து இரு பத்து எட்டில்
காட்டலும் ஆகும் கலந்த ஈர் ஐந்தே.
  
14ஈர் ஐந்தும் ஐந்தும் இரு மூன்று எட்டுக்கும்
பார் அஞ்சி நின்ற பகை பத்து நாளாகும்
வாரம் செய்கின்ற வகை ஆறு அஞ்சாம் ஆகில்
ஓர் அஞ்சொடு ஒன்று என ஒன்று நாளே.
  
15ஒன்றிய நாள்கள் ஒரு முப்பத்து ஒன்று ஆகில்
கன்றிய நாளும் கருத்து உற மூன்று ஆகும்
சென்று உயிர் நால் எட்டும் சேரவே நின்றிடின்
மன்று இயல்பாகும் மனையில் இரண்டே.
  
16மனையில் ஒன்று ஆகும் மாதம் மும் மூன்றும்
சுனையில் ஒன்று ஆகத் தொனித்தனன் நந்தி
வினை அற ஓங்கி வெளிசெய்து நின்றால்
தனை உற நின்ற தலைவனும் ஆமே.
  
17ஆரும் அறியார் அளக்கின்ற வன்னியை
ஆரும் அறியார் அளக்கின்ற வாயுவை
ஆரும் அறியார் அழிகின்ற அப்பொருள்
ஆரும் அறியார் அறிவு அறிந்தேனே.
  
18அறிவது வாயுவொடு அடைந்து அறிவு ஆய
அறிவாவது தான் உலகு உயிர் அத்தின்
பிறிவு செய்யா வகை பேணி உள் நாடில்
செறிவது நின்று திகழும் அதுஏ.
  
19அது அருளும் மருள் ஆன உலகம்
பொது அருளும் புகழாளர்க்கு நாளும்
மது அருளும் மலர் மங்கையர் செல்வி
இது அருள் செய்யும் இறையவன் ஆமே.
  
20பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
குறிப்பது கூடிய கோலக் குரம்பைப்
பழப்பதி ஆவது பற்று அறும் பாசம்
அழப்படி செய்வார்க்கு அகலும் மதியே.
  

16. வாரசரம்

1வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதனிடம்
ஒள்ளிய மந்தன் இரவி செவ்வாய் வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறை இடம்
தெள்ளிய தேய் பிறை தான் வலம் ஆமே.
  
2வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதன் மூன்றும்
தள்ளி இடத்தே தயங்குமே யாம் ஆகில்
ஒள்ளிய காயத்துக்கு ஊனம் இலை என்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்து த்தானே.
  
3செவ்வாய் வியாழன் சனி ஞாயிறு என்னும்
இவ்வாறு அறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரிய விட்டு
அவ்வாறு அறிவார்க்கு அவ் ஆனந்தம் ஆமே.
  
4மாறி வரும் இருபான் மதி வெய்யவன்
ஏறி இழியும் இடைபிங்கலை இடை
ஊறும் உயிர் நடுவே உயிர் இருக்கு இரந்து
ஏறி அறிமின் தெரிந்து தெளிந்தே.
  
5உதித்து வலத்து இடம் போகின்ற போது
அதிர்த்து அஞ்சி ஓடுதல் ஆம் அகன்றாரும்
உதித்தது வே மிக ஓடிடும் ஆகில்
உதித்த இவ் ராசி உணர்ந்து கொள் உற்றே.
  
6நடுவு நில்லாமல் இடம் வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
இடுகின்ற வாறு சென்றின் பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன் உண்டு என்றானே.
  
7ஆயும் பொருளும் அணி மலர் மேல் அது
வாயு விதமும் பதினாறு உள வலி
போய மனத்தைப் பொருகின்ற ஆதாரம்
ஆயுவும் நாளும் முகூர்த்தமும் ஆமே.
  

17. வாசசூலம்

1வாரத்தில் சூலம் வரும் வழி கூறுங்கால்
நேர் ஒத்த திங்கள் சனி கிழக்கே ஆகும்
பார் ஒத்த சேய் புதன் உத்தரம் பானு நாள்
நேர் ஒத்த வெள்ளி குடக்கு ஆக நிற்குமே.
  
2தெக்கணம் ஆகும் வியாழத்துச் சேர் திசை
அக்கணி சூலமும் ஆம் இடம் பின் ஆகில்
துக்கமும் இல்லை வலம் முன்னே தோன்றிடின்
மிக்கது மேல் வினை மேல் மேல் விளையுமே.
  

18. கேசரி யோகம்

1கட்டக் கழன்று கீழ் நான்று வீழாமல்
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணை கோலி
விட்டத்தைப் பூட்டி மேல் பையைத் தாள் கோத்து
நட்டம் இருக்க நரன் இல்லை தானே.
  
2வண்ணான் ஒலிக்கும் சதுரப் பலகை மேல்
கண்ணாறு மோழை படாமல் கரை கட்டி
விண் ஆறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால்
அண்ணாந்து பார்க்க அழுக்கு அற்ற வாறே.
  
3இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
துதிக்கையால் உண்பார்க்குச் சேரவும் வேண்டாம்
உறக்கத்தை நீக்கி உணர வல்லார்கட்கு
இறக்கம் வேண்டாம் இருக்கலும் ஆமே.
  
4ஆய்ந்து செய்யில் அமுதம் நின்று ஊறிடும்
வாய்ந்து செய்யும் வருகின்ற காலத்து
நீந்து செய்யில் நிலா மண்டலம் அதாய்ப்
பாய்ந்து செய்தது பாலிக்கு மாறே.
  
5நாவின் நுனியை நடுவே சிவிறிடில்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்
சாவதும் இல்லை சத கோடி ஊனே.
  
6ஊன் ஊறல் பாயும் உயர் வரை உச்சி மேல்
வான் ஊறல் பாயும் வகை அறிவார் இல்லை
வான் ஊறல் வகை அறி வாளர்க்குத்
தேன் ஊறல் உண்டு தெளியலும் ஆமே.
  
7மேலை அண் நாவில் விரைந்து இருகால் இடில்
காலனும் இல்லை கதவும் திறந்திடும்
ஞாலம் அறிய நரை திரை மாறிடும்
பாலனும் ஆவான் பரா நந்தி ஆணையே.
  
8நந்தி முதல் ஆக நாம் மேலே ஏறிட்டுச்
சந்தித்து இருக்கில் தரணி முழுது ஆளும்
பந்தித்து இருக்கும் பகலோன் வெளியாகச்
சிந்தித்து இருப்பவர் தீவினையாளரே.
  
9தீவினை ஆடத் திகைத்து அங்கு இருந்தவர்
நாவினை நாடின் நமனுக்கு இடம் இல்லை
பாவினை நாடிப் பயன் அறக் கண்டவர்
தேவினை ஆடிய தீம் கரும்பு ஆமே.
  
10தீம் கரும்பு ஆகவே செய் தொழில் உள்ளவர்
ஆம் கரும்பு ஆக அடைய நாவு ஏறிட்டு
கோங் கரும்பு ஆகிய கோணை நிமிர்த்திட
ஊன் கரும்பு ஆகியே ஊன் நீர் வருமே.
  
11ஊன் நீர் வழியாக உள் நாவை ஏறிட்டுத்
தேன் நீர் பருகிச் சிவாய நம என்று
கான் நீர் வரும் வழி கங்கை தருவிக்கும்
வான் நீர் வரும் வழி வாய்ந்து அறிவீரே.
  
12வாய்ந்து அறிந்து உள்ளே வழிபாடு செய்தவர்
காய்ந்து அறிவு ஆகக் கருணை பொழிந்திடும்
பாய்ந்து அறிந்து உள்ளே படிக் கதவு ஒன்று இட்டுக்
கூய்ந்து அறிந்து உள் உறை கோயிலும் ஆமே.
  
13கோயிலின் உள்ளே குடி செய்து வாழ்பவர்
தாயினும் நல்லார் தரணி முழுதுக்கும்
காயினும் நல்லவர் காய்ந்தவர் தம் உளும்
தீயினும் தீயரத் தீவினை யாளர்க்கே.
  
14தீவினை யாளர் தம் சென்னியில் உள்ளவன்
பூவினை யாளர் தம் பொன் பதி ஆனவன்
பாவினை யாளர் தம் பாகவத்து உள்ளவன்
மாவினை யாளர் தம் மதியில் உள்ளானே.
  
15மதியின் எழும் கதிர் போலப் பதினாறாய்ப்
பதிமனை நூறு நூற்று இருபத்து நாலாய்க்
கதி மனை உள்ளே கணைகள் பரப்பி
எதிர் மலையாமல் இருந்தனன் தானே.
  
16இருந்தனள் சத்தியும் அக்கலை சூழ
இருந்தனள் கன்னியும் அந் நடு ஆக
இருந்தனள் மான் நேர் முக நிலவார
இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே.
  
17பொழிந்த இரு வெள்ளி பொன் மண் நடையில்
வழிந்து உள் இருந்தது வான் முதல் அங்கு
கழிந்து அது போகாமல் காக்க வல்லார்க்குக்
கொழுந்து அது ஆகும் குணம் அது தானே.
  
18குணம் அது ஆகிய கோமள வல்லி
மணம் அது ஆக மகிழ்ந்து அங்கு இருக்கில்
தனம் அது ஆகிய தத்துவ ஞானம்
இனம் அது ஆக இருந்தனன் தானே.
  
19இருந்த பிராணனும் உள்ளே எழும் ஆம்
பரிந்த இத் தண்டுடன் அண்டம் பரிய
விரிந்த அப் பூவுடன் மேல் எழ வைக்கின்
மலர்ந்தது மண்டலம் வாழலும் ஆமே.
  
20மண்டலத்து உள்ளே மன ஒட்டியாணத்தைக்
கண்டகத்து அங்கே கருதியே கீழ்க் கட்டிப்
பண்டகத்து உள்ளே பகலே ஒளி ஆகக்
குண்டலக் காதனும் கூத்து ஒழிந்தானே.
  
21ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமரும்
கழிகின்ற வாயுவும் காக்கலும் ஆகும்
வழிகின்ற காலத்து வட்டக் கழலைப்
பழிகின்ற காலத்துப் பை அகற்றீரே.
  
22பையினின் உள்ளே படிக் கதவு ஒன்று இடின்
மெய்யினின் உள்ளே விளக்கும் ஒளியது ஆம்
கையின் உள் வாயுக் கதித்து அங்கு எழுந்திடின்
மை அணி கோயில் மணி விளக்கு ஆமே.
  
23விளங்கிடும் வாயுவை மேல் எழ உன்னி
நலங்கிடும் கண்டத்து நாபியின் உள்ளே
வணங்கிடும் மண்டலம் வாய்த்திடக் கும்பிச்
சுணங்கிட நின்றவை சொல்லலும் ஆமே.
  
24சொல்லலும் ஆயிடும் ஆகத்து வாயுவும்
சொல்லலும் ஆகும் மண் நீர்க் கடினமும்
சொல்லலும் ஆகும் இவை அஞ்சும் கூடிடில்
சொல்லலும் ஆம் தூர தரிசனம் தானே.
  
25தூர தரிசனம் சொல்லுவான் காணலாம்
கார் ஆரும் கண்ணி கடை ஞானம் உட்பு எய்தி
ஏர் ஆரும் தீபத்து எழில் சிந்தை வைத்திடில்
பாரார் உலகம் பகன் முன்னது ஆமே.
  
26முன் எழு நாபிக்கு முந்நால் விரல் கீழே
பன் எழு வேதப் பகல் ஒளி உண்டு என்னும்
நன் எழு நாதத்து நல் தீபம் வைத்திடத்
தன் எழு கோயில் தலைவனும் ஆமே.
  

19. பரியங்கயோகம்

1பூசுவன எல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறும் குழல் மாலையும் சாத்திக்
காயக் குழலி கலவியொடும் கலந்து
தூசி துளை உறத் தூங்காது போகமே.
  
2போகத்தை உன்னவே போகாது வாயுவும்
மோகத்தை வெள்ளியும் மீளும் வியாழத்தில்
சூது ஒத்த மென் முலையாளும் நல் சூதனும்
தாதில் குழைந்து தலை கண்ட வாறே.
  
3கண்டனும் கண்டியும் காதல் செய் யோகத்து
மண்டலம் கொண்டு இருபாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற் கொண்டு வான் நீர் உருட்டிடத்
தண்டு ஒரு காலும் தளராது அங்கமே.
  
4அங்கப் புணர்ச்சியும் ஆகின்ற தத்துவம்
அங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமல் பரிகரித்துத் தம்மைத்
தங்கிக் கொடுக்கத் தலைவனும் ஆமே.
  
5தலைவனும் ஆயிடும் தன் வழி ஞானம்
தலைவனும் ஆயிடும் தன்வழி போகம்
தலைவனும் ஆயிடும் தன்வழி உள்ளே
தலைவனும் ஆயிடும் தன்வழி அஞ்சே.
  
6அஞ்சு கடிகை மேல் ஆறாம் கடிகையில்
துஞ்சுவது ஒன்றத் துணைவி துணைவன்பால்
நெஞ்சு நிறைந்தது வாய் கொளாது என்றது
பஞ்ச கடிகை பரியங்க யோகமே.
  
7பரி அங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரிய இவ் வியோகம் அடைந்தவர்க்கு அல்லது
சரிவளை முன் கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவற்கு ஒண்ணாதே.
  
8ஒண்ணாத யோகத்தை உற்றவர் ஆர் என்னில்
விண் ஆர்ந்த கங்கை விரிசடை வைத்தவன்
பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில்
எண்ணாம் என எண்ணி இருந்தான் இருந்ததே.
  
9ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும்
வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கும் ஆனந்தம்
வாய்ந்த குழலியோடு அடைந்து மலர்ந்திடச்
சோர்ந்தன சித்தமும் சோர்வு இல்லை வெள்ளிக்கே.
  
10வெள்ளி உருகிப் பொன்வழி ஓடாமே
கள்ளத் தட்டானார் கரி இட்டு மூடினார்
கொள்ளி பறியக் குழல் வழியே சென்று
வள்ளி உள் நாவில் அடக்கி வைத்தாரே.
  
11வைத்த இருவரும் தம்மின் மகிழ்ந்து உடன்
சித்தம் கலங்காது செய்கின்ற ஆனந்தம்
பத்து வகைக்கும் பதின் எண் கணத்துக்கும்
வித்தகன் ஆய் நிற்கும் வெம் கதிரோனே.
  
12வெம் கதிருக்கும் சனிக்கும் இடைநின்ற
நங்கையைப் புல்லிய நம்பிக்கு ஓர் ஆனந்தம்
தங்களில் பொன் இடை வெள்ளி தாழா முனம்
திங்களில் செவ்வாய் புதைந்து இருந்தாரே.
  
13திருத்திப் புதனைத் திருத்தல் செய்வார்க்குக்
கருத்து அழகாலே கலந்து அங்கு இருக்கில்
வருத்தமும் இல்லை ஆம் மங்கை பங்கற்கும்
துருத்தி உள் வெள்ளியும் சோராது எழுமே.
  
14எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்று இட்டால்
மெழுகு உருகும் பரி செய்திடும் மெய்யே
உழுகின்றது இல்லை ஒளியை அறிந்தபின்
விழுகின்ற தில்லை வெளி அறிவார்க்கே.
  
15வெளியை அறிந்து வெளியின் நடுவே
ஒளியை அறியின் உளி முறி ஆம் ஏ
தெளிவை அறிந்து செழும் நந்தியாலே
வெளியை அறிந்தனன் மேல் அறியேனே.
  
16மேல் ஆம் தலத்தில் விரிந்தவர் ஆர் எனின்
மால் ஆம் திசைமுகன் மா நந்தியாய் அவர்
நாலா நிலத்தின் நடு ஆன அப்பொருள்
மேலா த்தனர் மின் இடை யாளுக்கே.
  
17மின் இடையாளும் மின்னாளனும் கூட்டத்துப்
பொன் இடை வட்டத்தின் உள்ளே புகப் பெய்து
தன்னொடு தன்னைத் தலைப் பெய்ய வல்லார் ஏன்
மண் இடைப் பல் ஊழி வாழலும் ஆமே.
  
18வாங்கல் இறுதலை வாங்கலில் வாங்கிய
வீங்க வலிக்கும் விரகு அறிவார் இல்லை
வீங்க வலிக்கும் விரகு அறிவாளரும்
ஓங்கிய தன்னை உதம் பண்ணினாரே.
  
19உதம் அறிந்து அங்கே ஒரு சுழிப் பட்டால்
கதம் அறிந்து அங்கே கபாலம் கறுக்கும்
இதம் அறிந்து என்றும் இருப்பாள் ஒருத்தி
பதம் அறிந்து உம் உளே பார்க் கடிந்தாளே.
  
20பார் இல்லை நீர் இல்லை பங்கயம் ஒன்று உண்டு
தார் இல்லை வேர் இல்லை தாமரை பூத்தது
ஊர் இல்லை காணும் ஒளி அது ஒன்று உண்டு
கீழ் இல்லை மேல் இல்லை கேள்வி இல் பூவே.
  

20. அமுரிதாரணை

1உடலில் கிடந்த உறுதிக் குடிநீர்க்
கடலில் சிறு கிணறு ஏற்றம் இட்டால் ஒக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்
நடலைப் படாது உயிர் நாடலும் ஆமே.
  
2தெளிதரும் இந்தச் சிவ நீர் பருகில்
ஒளிதரும் ஓர் ஆண்டில் ஊனம் ஒன்று இல்லை
வளி உறும் எட்டின் மனமும் ஒடுங்கும்
களிதரும் காயம் கனகம் அது ஆமே.
  
3நூறு மிளகு நுகரும் சிவத்தின் நீர்
மாறும் இதற்கு மருந்து இல்லை மாந்தர்கள்
தேறில் இதனைத் தெளி உச்சி அப்பிடின்
மாறும் இதற்கு மறு மயிர் ஆமே.
  
4கரை அருகே நின்ற கானல் உவரி
வரை வரை என்பவர் மதி இலா மாந்தர்
நுரை திரை நீக்கி நுகர வல்லார்க்கு
நரை திரை மாறும் நமனும் அங்கு இல்லையே.
  
5அளக நல் நுதலாய் ஓர் அதிசயம்
களவு காயம் கலந்த இந் நீரிலே
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பு இடில்
இளகும் மேனி இருளும் கபாலமே.
  
6வீர மருந்து என்றும் விண்ணோர் மருந்து என்றும்
நாரி மருந்து என்றும் நந்தி அருள் செய்தான்
ஆதி மருந்து என்று அறிவார் அகல் இடம்
சோதி மருந்து இது சொல்ல ஒண்ணாதே.
  

21. சந்திர யோகம்

1எய்து மதிக்கலை சூக்கத்தில் ஏறியே
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்
எய்தும் கலை போல ஏறி இறங்கும் ஆந்து
உய்யது சூக்கத்து ஊலத்த காயமே.
  
2ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கி உள்
ஆகின்ற ஈர் எட்டொடு ஆறு இரண்டு ஈர் ஐந்துள்
ஏகின்ற அக்கலை எல்லாம் இடைவழி
ஆகின்ற யோகி அறிந்த அறிவே.
  
3ஆறாதது ஆம் கலை ஆதித்தன் சந்திரன்
நாறா நலம் கினார் ஞாலம் அங்கு அவர் கொளப்
பேறு ஆம் கலை முற்றும் பெருங்கால் ஈர் எட்டு
மாறாக் கதிர் கொள்ளும் மற்று அங்கி கூடவே.
  
4பத்தும் இரண்டும் பகலோன் உயர் கலை
பத்தினொடு ஆறும் உயர் கலை பால் மதி
ஒத்த நல் அங்கி அது எட்டு எட்டு உயர் கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்து கொள்வீரே.
  
5எட்டு எட்ட அனலின் கலை ஆகும் ஈர் ஆறுள்
சுட்டப் படும் கதிரோனுக்கும் சூழ் கலை
கட்டப் படும் ஈர் எட்டாம் மதிக் கலை
ஒட்டப் படா இவை ஒன்றோடு ஒன்றாவே.
  
6எட்டு எட்டும் ஈர் ஆறும் ஈர் எட்டும் தீக் கதிர்
சுட்டு இட்ட சோமனில் தோன்றும் கலை எனக்
கட்டப் படும் தாரகை கதிர் நாலு உள
கட்டி இட்ட தொண்ணூற்றொடு ஆறும் கால் ஆதியே.
  
7எல்லாக் கலையும் இடை பிங்கலை நடுச்
சொல்லா நடு நாடி ஊடே தொடர் மூலம்
செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்
நல்லோர் திருவடி நண்ணி நிற்பாரே.
  
8அங்கியில் சின்னக் கதிர் இரண்டு ஆட்டத்துத்
தங்கிய தாரகை ஆகும் சசி பானு
வங்கிய தாரகை ஆகும் பரை ஒளி
தங்கு நவ சக்கரம் ஆகும் தரணிக்கே.
  
9தரணி சலம் கனல் கால் தக்க வானம்
அரணிய பானு அரும் திங்கள் அங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவம் ஆகும் பெரு நெறி தானே.
  
10தாரகை மின்னும் சசி தேயும் பக்கத்துத்
தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத்
தாரகை பூவில் சகலத்தி யோனிகள்
தாரகைத் தாரகை தான் ஆம் சொரூபமே.
  
11முன் பதினைந்தின் முளைத்துப் பெருத்திடும்
முன் பதினைந்தில் பெருத்துச் சிறுத்திடும்
அப் பதினைஞ்சும் அறிவல்லார் கட்குச்
செப்ப அரியான் கழல் சேர்தலும் ஆமே.
  
12அங்கி எழுப்பி அரும் கதிர் ஊட்டத்துத்
தங்கும் சசியால் தாமம் ஐந்து ஐந்து ஆகிப்
பொங்கிய தாரகை ஆம் புலன் போக்கு அறத்
திங்கள் கதிர் அங்கி சேர்கின்ற யோகமே.
  
13ஒன்றிய ஈர் எண்கலையும் உடல் உற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீதர்கள்
கன்றிய காலன் கருத்து உழி வைத்த பின்
சென்று அதில் வீழ்வர் திகைப்பு ஒழியாரே.
  
14அங்கி மதி கூட ஆகும் கதிர் ஒளி
அங்கி கதிர் கூட ஆகும் மதி ஒளி
அங்கி சசி கதிர் கூட அத்தாரகை
தங்கிய அதுவே சகலமும் ஆமே.
  
15ஈர் ஆறு பெண்கலை எண் இரண்டு ஆண் கலை
பேராமல் புக்குப் பிடித்துக் கொடு வந்து
நேராகத் தோன்றும் நெருப்பு உறவே பெய்யில்
ஆராத ஆனந்தம் ஆனந்தம் ஆனதே.
  
16காணும் பரிதியின் காலை இடத்து இட்டு
மாணும் மதி அதன் காலை வலத்து இட்டு
பேணியே இவ்வாறு பிழையாமல் செய்வீர் ஏல்
ஆணி கலங்காது அவ் ஆயிரத்து ஆண்டே.
  
17பாலிக்கும் நெஞ்சம் பறை ஓசை ஒன்பதில்
ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்
மேலைக்கு முன்னே விளக்கு ஒளியாய் நிற்கும்
காலைக்குச் சங்கு கதிரவன் தானே.
  
18கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிரவன் உள்ளே பொழி மழை நிற்கும்
அதிரவன் அண்டப் புறம் சென்று அடர்ப்ப
எதிரவன் ஈசன் இடம் அது தானே.
  
19உந்திக் கமலத்து உதித்து எழும் சோதியை
அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிகிலர்
அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிந்த பின்
தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே.
  
20ஊதியம் ஏதும் அறியார் ப்பினும்
ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்
ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீர் ஏல்
வேதியன் அங்கே வெளிப்படும் தானே.
  
21பாம்பு மதியைத் தினல் உறும் பாம்பினைத்
தீங்கு கதிரையும் சோதித்தனல் உறும்
பாம்பு மதியும் பகை தீர்த்து உடன் கொளீஇ
நீங்கல் கொடானே நெடும் தகையானே.
  
22அயின்றது வீழ் அளவும் துயில் இன்றிப்
பயின்ற சசி வீழ் பொழுதில் துயின்று
நயம் தரு பூரணை உள்ள நடத்தி
வியம் தரு பூரணை மேவும் சசியே.
  
23சசி உதிக்கும் அளவும் துயில் இன்றிச்
சசி உதித்தானேல் தனது ஊண் அருந்திச்
சசி சரிக்கின்ற அளவும் துயிலாமல்
சசி சரிப்பின் கட்டன் கண் துயில் கொண்டதே.
  
24ஊழி பிரியாது இருக்கின்ற யோகிகள்
நாழிகை ஆக நமனை அளப்பர்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழ வல்லார் இச் சசி வன்னர் ஆமே.
  
25தண் மதி பானுச் சரி பூமியே சென்று
மண் மதி காலங்கள் மூன்றும் வழி கண்டு
வெண் மதி தோன்றிய நாளில் விளைந்தபின்
தண் மதி வீழ் அளவில் கணம் இன்றே.
  
26வளர்கின்ற ஆதித்தன் தன் கலை ஆறும்
தளர்கின்ற சந்திரன் தன் கலை ஆறும்
மலர்ந்து எழு பன்னிரண்டு அங்குலம் ஓடி
அலர்ந்து விழுந்தமை யார் அறிவாரே.
  
27ஆம் உயிர்த் தேய் மதி நாளே எனல் விந்து
போம் வழி எங்கணும் போகாது யோகிக்குக்
காமுற இன்மையில் கட்டு உண்ணும் மூலத்தில்
ஓ மதியத்து உள் விட்டு உணர்வாலே.
  
28வேறு உறச் செம் கதிர் மெய்க்கலை ஆறு ஓடும்
சூர் உற நான்கும் தொடர்ந்து உறவே நிற்கும்
ஈறிலி நன் கலை ஈர் ஐந் தொடே மதித்து
ஆறுள் கலையுள் அகலுவா வாமே.
  
29உணர் விந்து சோணி உறவினன் வீசும்
புணர் விந்து வீசும் கதிரில் குறையில்
உணர்வும் உடம்பும் உவை ஒக்க நிற்கில்
உணர்வும் உடம்பும் ஒரு கால் விடாவே.
  
30விடாத மனம் பவனத் தொடு மேவி
நடாவு சிவ சங்கின் நாதம் கொளுவிக்
கடா விடா ஐம் புலன் கட்டு உண்ணும் வீடு
படாதன இன்பம் பருகார் அமுதமே.
  
31அமுதப் புனல் வரு மாற்றம் கரைமேல்
குமிழிக் குள் சுடர் ஐந்தையும் கூட்டிச்
சமையத் தண் தோட்டித் தரிக்க வல்லார்க்கு
நமன் இல்லை நல் கலை நாள் இல்லை தானே.
  
32உண்ணீர் அமுதம் உறும் ஊறலைத் திறந்து
எண்ணீர் இணை அடித் தாமரைக்கே செலத்
தெண்ணீர் சமாதி அமர்ந்து தீரா நலம்
கண்ணால் தொடே சென்று கால் வழி மாறுமே.
  
33மாறு மதியும் மதித்து இரு மாறு இன்றித்
தாறு படாமல் தண்டோடே தலைப் படில்
ஊறு படாது உடல் வேண்டும் உபாயமும்
பாறு படா இன்பம் பார்மிசைப் பொங்குமே.
  
நான்காம் தந்திரம்

1. அசபை

1போற்று கின்றேன் புகழ்ந்தும் புகல் ஞானத்தைத்
தேற்று கின்றேன் சிந்தை நாயகன் சேவடி
சாற்று கின்றேன் அறையோ சிவ யோகத்தை
ஏற்று கின்றேன் நம்பிரான் ஓர் எழுத்தே.
உரை  
2ஓர் எழுத்தாலே உலகு எங்கும் தான் ஆகி
ஈர் எழுத்தாலே இசைந்து அங்கு இருவராய்
மூ எழுத்தாலே முளைக்கின்ற சோதியை
மா எழுத்தாலே மயக்கமே உற்றதுஏ.
உரை  
3தேவர் உறைகின்ற சிற்றம்பலம் என்றும்
தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும்
தேவர் உறைகின்ற திரு அம்பலம் என்றும்
தேவர் உறை கின்ற தென் பொது ஆமே.
உரை  
4ஆமே பொன் அம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக்கூத்து அனவரத தாண்டவம்
ஆமே பிரளயம் ஆகும் அத் தாண்டவம்
ஆமே சங்காரத்து அரும் தாண்டவங்களே.
உரை  
5தாண்டவம் ஆன தனி எழுத்து ஓர் எழுத்து
தாண்டவம் ஆனது அனுகிரகத் தொழில்
தாண்டவக் கூத்துத் தனி நின்ற தற்பரம்
தாண்டவக் கூத்துத் தமனியம் தானே.
உரை  
6தானே பரஞ்சுடர் தத்துவமாய் நிற்கும்
தானே அகார உகாரம் அதாய் நிற்கும்
தானே பரஞ் சுடர் தத்துவக் கூத்துக்குத்
தானே தனக்குத் தராதலம் தானே.
உரை  
7தராதல மூலைக்குத் தற்பர மா பரன்
தராதலம் வெப்பு நமசிவாய வாம்
தராதலம் சொல்லில் தான் வாசிய ஆகும்
தராதல யோகம் தயா வாசி ஆமே.
உரை  
8ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
ஆமே பரங்கள் அறியா இடம் என்ப
ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம்
ஆமே சிவகதி ஆனந்தம் ஆமே.
உரை  
9ஆனந்தம் மூன்றும் அறிவு இரண்டு ஒன்று ஆகும்
ஆனந்தம் சிவாய அறிவார் பலர் இல்லை
ஆனந்த மோடும் அறிய வல்லார் கட்கு
ஆனந்தக் கூத்தாய் அகப்படும் தானே.
உரை  
10படுவது இரண்டும் பலகலை வல்லார்
படுவது ஓங்காரம் பஞ்சாக் கரங்கள்
படுவது சங்காரத் தாண்டவப் பத்தி
படுவது கோணம் பரந்திடும் ஆறே.
உரை  
11வாறே சதாசிவ மாறு இலா ஆகமம்
வாறே சிவகதி வண்டு உறை புன்னையும்
வாறே திருக் கூத்து ஆகம வசனங்கள்
வாறே பொது ஆகும் மன்றின் அமலமே.
உரை  
12அமலம் பதி பசு பாசங்கள் ஆகமம்
அலமந்து இரோதாய் ஆகும் ஆனந்தம் ஆம்
அமலம் சொல் ஆணவ மாயை காமியம்
அலமந்து திருக்கூத்து அங்கு ஆமிடம் தானே.
உரை  
13தானே தனக்குத் தலைவியும் ஆய் நிற்கும்
தானே தனக்குத் தன் மலையாய் நிற்கும்
தானே தனக்குத் தன் மயம் ஆய் நிற்கும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.
உரை  
14தலைவனுமாய் நின்ற தற்பரக் கூத்தனைத்
தலைவனுமாய் நின்ற சற் பாத்திரத்தைத்
தலைவனுமாய் நின்ற தாது அவிழ் ஞானத்
தலைவனுமாய் நின்ற தாள் இணை தானே.
உரை  
15இணையார் திருவடி எட்டு எழுத்து ஆகும்
இணையார் கழல் இணை ஈர் அஞ்சது ஆகும்
இணையார் கழல் இணை ஐம்பத்து ஒன்று ஆகும்
இணையார் கழல் இணை ஏழாயிரமே.
உரை  
16ஏழாயிரம் ஆய் இருபதாய் முப்பதாய்
ஏழாயிரத்தும் எழுகோடி தான் ஆகி
ஏழாயிரத்து உயிர் எண் இலா மந்திரம்
ஏழாய் இரண்டாய் இருக்கின்ற வாறே.
உரை  
17இருக்கின்ற மந்திரம் ஏழாயிரம் ஆம்
இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை
இருக்கின்ற மந்திரம் சிவன் திருமேனி
இருக்கின்ற மந்திரம் இவ் வண்ணம் தானே.
உரை  
18தானே தனக்குத் தகு நட்டம் தான் ஆகும்
தானே அகார உகாரம் அதாய் நிற்கும்
தானே ரீங்காரத் தத்துவக் கூத்துக்குத்
தானே உலகில் தனி நடம் தானே.
உரை  
19நடம் இரண்டு ஒன்றே நளினம் அது ஆகும்
நடம் இரண்டு ஒன்றே நமன் செய்யும் கூத்து
நடம் இரண்டு ஒன்றே நகை செயா மந்திரம்
நடம் சிவலிங்கம் நலம் செம்பு பொன்னே.
உரை  
20செம்பு பொன் ஆகும் சிவாய நம என்னில்
செம்பு பொன் ஆகத் திரண்டது சிற்பரம்
செம்பு பொன் ஆகும் ஸ்ரீயும் கிரீயும் எனச்
செம்பு பொன் ஆன திரு அம்பலமே.
உரை  
21திரு அம்பலம் ஆகச் சீர்ச் சக்கரத்தைத்
திரு அம்பலம் ஆக ஈர் ஆறு கீறித்
திரு அம்பலம் ஆக இருபத்து அஞ்சு ஆக்கித்
திரு அம்பலம் ஆகச் செபிக்கின்ற ஆறே.
உரை  
22வாறே சிவாய நமச்சி வாய நம
வாறே செபிக்கில் வரும் பேர் பிறப்பு இல்லை
வாறே அருளால் வளர் கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வரும் செம்பு பொன்னே.
உரை  
23பொன் ஆன மந்திரம் புகலவும் ஒண்ணாது
பொன் ஆன மந்திரம் பொறிகிம் சுகத்து ஆகும்
பொன் ஆன மந்திரம் புகையுண்டு பூரிக்கில்
பொன் ஆகும் வல்லோர்க்கு உடம்பு பொன் பாதமே.
உரை  
24பொன் பாதம் காணலாம் புத்திரர் உண்டாகும்
பொன் பாதத்து ஆணையே செம்பு பொன் ஆயிடும்
பொன் பாதம் காணத் திருமேனி ஆயிடும்
பொன் பாத நல் நடம் சிந்தனை சொல்லுமே.
உரை  
25சொல்லும் ஒரு கூட்டில் புக்குச் சுகிக்கலாம்
நல்ல மடவார் நயந்துடனே வரும்
சொல்லினும் பாசச் சுடர் பாம்பு நீங்கிடும்
சொல்லும் திருக் கூத்தின் சூக்குமம் தானே.
உரை  
26சூக்குமம் எண்ணாயிரம் செபித்தாலும் மேல்
சூக்குமம் ஆன வழி இடைக் காணலாம்
சூக்குமம் ஆன வினையைக் கெடுக்கலாம்
சூக்குமம் ஆன சிவனது ஆனந்தமே.
உரை  
27ஆனந்தம் ஆனந்தம் ஒன்று என்று அறைந்திட
ஆனந்தம் ஆனந்தம் ஆ-ஈ-ஊ-ஏ-ஓம் என்று ஐந்திடம்
ஆனந்தம் ஆனந்தம் அஞ்சும் அது ஆயிடும்
ஆனந்தம் ஆனந்தம் அம்-ஹரீம்-அம்-க்ஷம்-ஆம் ஆகுமே.
உரை  
28மேனி இரண்டும் விலங்காமல் மேல் கொள்ள
மேனி இரண்டும் இகார விகாரியா
மேனி இரண்டும் ஊ-ஆ-ஈ-ஏ-ஓ என்னும்
மேனி இரண்டும் ஈ-ஓ-ஊ-ஆ-ஏ-கூத்து ஆமே.
உரை  
29கூத்தே சிவாய நம மசி வாயிடும்
கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம் சிவாய நம ஆயிடும்
கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம் சிவய நம ஆயிடும்
கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம் நமசிவாய கோள் ஒன்றும் ஆறே.
உரை  
30ஒன்று இரண்டு ஆடவோர் ஒன்று உடன் ஆட
ஒன்றினின் மூன்று ஆட ஓர் ஏழும் ஒத்து ஆட
ஒன்றினால் ஆட ஓர் ஒன்பதும் உடன் ஆட
மன்றினில் ஆடினான் மாணிக்கக் கூத்தே.
உரை  

2. திருவம்பலச் சக்கரம்

1இருந்த இவ் வட்டங்கள் ஈராறு ரேகை
இருந்த இரேகை மேல் ஈர் ஆறு இருத்தி
இருந்த மனைகளும் ஈர் ஆறு பத்து ஒன்று
இருந்த மனை ஒன்றில் எய்துவன் தானே.
உரை  
2தான் ஒன்றி வாழிடம் தன் எழுத்தே ஆகும்
தான் ஒன்று அந்நான்கும் தன் பேர் எழுத்து ஆகும்
தான் ஒன்று நால் கோணம் தன் ஐந்து எழுத்து ஆகும்
தான் ஒன்றிலே ஒன்று அவ் அரன் தானே.
உரை  
3அரகர என்ன அரியது ஒன்று இல்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும் பிறப்பு அன்றே.
உரை  
4எட்டு நிலை உள எம் கோன் இருப்பிடம்
எட்டினில் ஒன்றும் இரு மூன்றும் ஈர் ஏழும்
ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப்
பட்டது மந்திரம் பான் மொழி பாலே.
உரை  
5மட்டு அவிழ் தாமரை மாது நல்லா ளுடன்
ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்ட வல்லார் உயிர் காக்க வல்லாரே.
உரை  
6ஆலயம் ஆக அமர்ந்த பஞ் சாக்கரம்
ஆலயம் ஆக அமர்ந்த இத் தூலம் போய்
ஆலயம் ஆக அறிகின்ற சூக்குமம்
ஆலயம் ஆக அமர்ந்து இருந்தானே.
உரை  
7இருந்த இவ்வட்டம் இருமூன்று ரேகை
இருந்த அதன் உள் இரேகை ஐந்து ஆக
இருந்த அறைகள் இருபத்து ஐந்து ஆக
இருந்த அறை ஒன்றில் எய்தும் அகாரமே.
உரை  
8மகாரம் நடுவே வளைத்திடும் சத்தியை
ஓகாரம் வளைத்திட்டும் பிளந்து ஏற்றி
அகாரம் தலையாய் இரு கண் சிகாரம் ஆய்
நகார வகார நல் காலது நாடுமே.
உரை  
9நாடும் பிரணவ நடு இரு பக்கமும்
ஆடும் அவர் வாய் அமர்ந்து அங்கு நின்றது
நாடு நடுவுள் முக நமசிவாய
வாடும் சிவாய நம புற வட்டத்து ஆயதே.
உரை  
10ஆயும் சிவாய நம மசி வாய ந
வாயு நமசி வாய யநம சிவாய ந
வாயுமே வாய நமசி எனும் மந்திரம்
ஆயும் சிகாரம் தொட்ட அந்தத்து அடைவிலே.
உரை  
11அடைவினில் ஐம்பதும் ஐ ஐந்து அறையின்
அடையும் அறை ஒன்றுக்குக் கீழ் எழுத்து ஆக்கி
அடையும் மகாரத்தில் அந்தம் ஆம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்து ஐம் பத்து ஒன்றும் அமர்ந்ததே.
உரை  
12அமர்ந்த அரகர ஆம் புற வட்டம்
அமர்ந்த அரிகரி ஆம் அதன் உள் வட்டம்
அமர்ந்த அசபை ஆம் அதன் உள் வட்டம்
அமர்ந்த ரேகையும் ஆகின்ற சூலமே.
உரை  
13சூலத் தலையினில் தோற்றிடும் சத்தியும்
சூலத் தலையினில் சூழும் ஓங் காரத்தால்
சூலத்து இடை வெளி தோற்றிடும் அஞ்சு எழுத்து
ஆலப் பதிக்கும் அடைவது ஆமே.
உரை  
14அதுவாம் அகார இகார உகாரம்
அதுவாம் எகாரம் ஒகாரம் அது அஞ்சாம்
அது ஆகும் சக்கர வட்டம் மேல் வட்டம்
பொது ஆம் இடைவெளி பொங்கு நம் பேரே.
உரை  
15பேர் பெற்றது மூல மந்திரம் பின்னது
சோர் உற்ற சக்கர வட்டத்து உள் சந்தியின்
நேர் பெற்று இருந்திட நின்றது சக்கரம்
ஏர் பெற்று இருந்த இயல்பு இது ஆமே.
உரை  
16இயலும் இம் மந்திரம் எய்தும் வழியின்
செயலும் அறியத் தெளிவிக்கும் நாதன்
புயலும் புனலும் பொருந்து அங்கி மண் விண்
முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே.
உரை  
17ஆறு எட்டு எழுத்தின் மேல் ஆறும் பதினாலும்
ஏறு இட்ட அதன் மேல் விந்துவும் நாதமும்
சீறிட்டு நின்று சிவாய நம என்னக்
கூறிட்டு மும் மலம் கூப்பிட்டுப் போமே.
உரை  
18அண்ணல் இருப்பது அவளக் கரத்து உளே
பெண்ணின் நல்லாளும் பிரான் அக் கரத்து உளே
எண்ணி இருவர் இசைந்து அங்கு இருந்திடப்
புண்ணிய வாளர் பொருள் அறிவார்களே.
உரை  
19அவ்விட்டு வைத்து அங்கு அரவிட்டு மேல் வைத்து
இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம் அதாய் நிற்கும்
மவ்விட்டு மேலே வளி உறக் கண்ட பின்
தொம் இட்டு நின்ற சுடக் கொழுந்து ஆமே.
உரை  
20அவ் உண்டு சவ் உண்டு அனைத்தும் அங்கு உள்ளது
கவ் உண்டு நிற்கும் கருத்து அறிவார் இல்லை
கவ் உண்டு நிற்கும் கருத்து அறிவாளர்க்குச்
சவ் உண்டு சத்தி சதா சிவன் தானே.
உரை  
21அஞ்சு எழுத்தாலே அமர்ந்தனன் நந்தியும்
அஞ்சு எழுத்தாலே அமர்ந்த பஞ்சாக்கரம்
அஞ்சு எழுத்து ஆகிய வக்கர சக்கரம்
அஞ்சு எழுத்து உள்ளே அமர்ந்து இருந்தானே.
உரை  
22கூத்தனைக் காணும் குறிபல பேசிடில்
கூத்தன் எழுத்தின் முதல் எழுத்து ஓதினார்
கூத்தனொடு ஒன்றிய கொள்கைய ராய் நிற்பர்
கூத்தனைக் காணும் குறி அது ஆமே.
உரை  
23அத் திசைக்குள் நின்ற அனலை எழுப்பியே
அத் திசைக்குள் நின்ற நவ் எழுத்து ஓதினால்
அத் திசைக்குள் நின்ற அந்த மறையனை
அத் திசைக்குள் உறவு ஆக்கினன் தானே.
உரை  
24தானே அளித்திடும் தையலை நோக்கினால்
தானே அளித்திட்டு மேல் உற வைத்திடும்
தானே அளித்த மகாரத்தை ஓதிடத்
தானே அளித்தது ஓர் கல் ஒளி ஆகுமே.
உரை  
25கல் ஒளியே என நின்ற வட திசை
கல் ஒளியே என நின்றனன் இந்திரன்
கல் ஒளியே என நின்ற சிகாரத்தை
கல் ஒளியே எனக் காட்டி நின்றானே.
உரை  
26தானே எழுகுணம் தண் சுடராய் நிற்கும்
தானே எழுகுணம் வேதமும் ஆய் நிற்கும்
தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில்
தானே எழுந்த மறையவன் ஆமே.
உரை  
27மறையவன் ஆக மதித்த பிறவி
மறையவன் ஆக மதித்திடக் காண்பர்
மறையவன் அஞ்சு எழுத்து உள் நிற்கப் பெற்ற
மறையவன் அஞ்சு எழுத்தாம் அது ஆகுமே.
உரை  
28ஆகின்ற பாதமும் அந் நவாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரம் ஆம்
ஆகின்ற சீய் இரு தோள் வவ்வாய் கண்ட பின்
ஆகின்ற அச் சுடர் அவ் இயல்பு ஆமே.
உரை  
29அவ் இயல்பு ஆய இரு மூன்று எழுத்து ஐந்தையும்
செவ் இயல்பு ஆகச் சிறந்தனன் நந்தியும்
ஒவ் இயல்பு ஆக ஒளி உற நோக்கிடில்
பவ் இயல்பு ஆகப் பரந்து நின்றானே.
உரை  
30பரந்தது மந்திரம் பல் உயிர்க்கு எல்லாம்
வரம்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித்
துரந்திடு மந்திரம் சூழ்பகை போக
உரம் தரு மந்திரம் ஓம் என்று எழுப்பே.
உரை  
31ஓம் என்று எழுப்பித் தன் உத்தம நந்தியை
நாம் என்று எழுப்பி நடு எழு தீபத்தை
ஆம் என்று எழுப்பி அவ்வாறு அறிவார்கள்
மா மன்று கண்டு மகிழ்ந்து இருந்தாரே.
உரை  
32ஆகின்ற சக்கரத்து உள்ளே எழுத்து ஐந்தும்
பாகு ஒன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும்
ஆகின்ற ஐம்பத்து ஓர் எழுத்துள் நிற்கப்
பாகு ஒன்றி நிற்கும் பரா பரன் தானே.
உரை  
33பரம் ஆய அஞ்சு எழுத்துள் நடு ஆகப்
பரம் ஆய நவசிம பார்க்கில் மவய நசி
பரம் ஆய சிய நம ஆம் பரத்து ஓதில்
பரம் ஆய வாசி மய நம ஆய் நின்றே.
உரை  
34நின்ற எழுத்துக்கள் நேர் தரு பூதமும்
நின்ற எழுத்துக்கள் நேர் தரு வண்ணமும்
நின்ற எழுத்துக்கள் நேர் தர நின்றிடில்
நின்ற எழுத்து உள்ளும் நின்றனன் தானே.
உரை  
35நின்றது சக்கரம் நீளும் புவி எல்லாம்
மன்ற அதுவாய் நின்ற மாய நல் நாடனைக்
கன்று அது ஆகக் கறந்தனன் நந்தியும்
குன்று இடை நின்றிடும் கொள்கையன் ஆமே.
உரை  
36கொண்ட இச் சக்கரத்து உள்ளே குணம் பல
கொண்ட இச் சக்கரத்து உள்ளே குறி ஐந்தும்
கொண்ட இச் சக்கரம் கூத்தன் எழுத்து ஐந்தும்
கொண்ட இச் சக்கரத்து உள் நின்ற கூத்தே.
உரை  
37வெளியில் இரேகை இரேகையில் அத்தலை
சுளியில் உகாரம் ஆம் சுற்றிய வன்னி
நெளிதரு கால் கொம்பு நேர் விந்து நாதம்
தெளியும் பிரகாரம் சிவ மந்திரமே.
உரை  
38அகார உகார சிகார நடுவாய்
வகார மோடு ஆறும் வளியுடன் கூடிச்
சிகாரம் உடனே சிவன் சிந்தை செய்ய
ஒகார முதல்வன் உவந்து நின்றானே.
உரை  
39அற்ற இடத்தே அகாரம் அது ஆவது
உற்ற இடத்தே உறு பொருள் கண்டிடச்
செற்றம் அறுத்த செழும் சுடர் மெய்ப்பொருள்
குற்றம் அறுத்த பொன் போலும் குளிகையே.
உரை  
40அவ் என்ற போதினில் உவ் எழுத்து ஆலித்தால்
உவ் என்ற முத்தி உருகிக் கலந்திடும்
மவ் என்று என் உள்ளே வழி பட்ட நந்தியை
எவ் வணம் சொல்லுகேன் எந்தை இயற்கையே.
உரை  
41நீரில் எழுத்து இவ் உலகர் அறிவது
வானில் எழுத்து ஒன்று கண்டு அறிவார் இல்லை
யார் இவ் எழுத்தை அறிவார் அவர்கள்
ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே.
உரை  
42காலை நடுஉறக் காயத்தில் அக்கரம்
மாலை நடுஉற ஐம்பதும் ஆவன
மேலை நடுஉற வேதம் விளம்பிய
மூலம் நடு உற முத்தித் தானே.
உரை  
43நாவியின் கீழ் அது நல்ல எழுத்து ஒன்று
பாவிகளத்தின் பயன் அறிவார் இல்லை
ஓவியராலும் அறிய ஒண்ணாது அது
தேவியும் தானும் திகழ்ந்து இருந்தானே.
உரை  
44அவ்வொடு சவ் என்றது அரன் உற்ற மந்திரம்
அவ்வொடு சவ் என்றது ஆரும் அறிகிலர்
அவ்வொடு சவ் என்றது ஆரும் அறிந்த பின்
அவ்வொடு சவ்வும் அனாதியும் ஆமே.
உரை  
45மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
உந்தியின் உள்ளே உதயம் பண்ணா நிற்கும்
சந்தி செய்யா நிற்பர் தாம் அறிகிலர்
அந்தி தொழுது போய் ஆர்த்து அகன்றார்களே.
உரை  
46சேவிக்கும் மந்திரம் செல்லும் திசை பெற
ஆவிக்குள் மந்திரம் ஆதாரம் ஆவன
பூவுக்குள் மந்திரம் போக்கு அற நோக்கிடில்
ஆவிக்குள் மந்திரம் அங்குசம் ஆமே.
உரை  
47அருவினில் அம்பரம் அங்கு எழு நாதம்
பெருகு துடி இடை பேணிய விந்து
மருவி அகார சிகார நடுவாய்
உருவிட ஊறும் உறு மந்திரமே.
உரை  
48ஆறு எழுத்து ஓதும் அறிவார் அறிகிலார்
ஆறு எழுத்து ஒன்று ஆக ஓதி உணரார்கள்
வேறு எழுத்து இன்றி விளம்ப வல்லார்கட்கு
ஓர் எழுத்தாலே உயிர் பெறலாமே.
உரை  
49ஓதும் எழுத்தோடு உயிர்க் கலை மூ அஞ்சும்
ஆதி எழுத்து அவை ஐம்பதோடு ஒன்று என்பர்
சோதி எழுத்தினில் ஐ இரு மூன்று உள
நாத எழுத்து இட்டு நாடிக் கொள்ளீரே.
உரை  
50விந்துவிலும் சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் தலைவி பதினாறு கலை அதாய்க்
கந்தர வாகரம் கால் உடம்பு ஆயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்து ஒன்று ஆயதே.
உரை  
51ஐம்பது எழுத்தே அனைத்தும் வேதங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமம் களும்
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின்
ஐம்பது எழுத்தும் போய் அஞ்சு எழுத்து ஆமே.
உரை  
52அஞ்சு எழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்சு எழுத்தால் பல யோனி படைத்தனன்
அஞ்சு எழுத்தால் இவ் அகல் இடம் தாங்கினன்
அஞ்சு எழுத்தாலே அமர்ந்து நின்றானே.
உரை  
53வீழ்ந்து எழலாம் விகிர்தன் திருநாமத்தைச்
சோர்ந்து ஒழியாமல் தொடங்கும் ஒருவற்குச்
சார்ந்த வினைத் துயர் போகத் தலைவனும்
போந்திடும் என்னும் புரி சடையோனே.
உரை  
54உண்ணும் மருந்தும் உலப்பு இலி காலமும்
பண் உறு கேள்வியும் பாடலும் ஆய் நிற்கும்
விண் நின்று அமரர் விரும்பி அடி தொழ
எண் நின்று எழுத்து அஞ்சும் ஆகிநின்றானே.
உரை  
55ஐந்தின் பெருமையே அகல் இடம் ஆவதும்
ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும்
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்
ஐந்தின் வகை செயப் பாலனும் ஆமே.
உரை  
56வேர் எழுத்தாய் விண்ணாய் அப்புறமாய் நிற்கும்
நீர் எழுத்தாய் நிலம் தாங்கியும் அங்கு உளன்
சீர் எழுத்தாய் அங்கியாய் உயிராம் எழுத்து
ஓர் எழுத்து ஈசனும் ஒண் சுடர் ஆமே.
உரை  
57நால் ஆம் எழுத்து ஓசை ஞாலம் உருவது
நால் ஆம் எழுத்தின் உள் ஞாலம் அடங்கிற்று
நால் ஆம் எழுத்தே நவில வல்லார் கட்கு
நால் ஆம் எழுத்து அது நல் நெறி தானே.
உரை  
58பட்ட பரிசே பரம் அஞ்சு எழுத்து அதின்
இட்டம் அறிந்திட்டு இரவு பகல் வர
நட்டம் அது ஆடு நடுவே நிலயம் கொண்டு
அட்ட தேசப் பொருள் ஆகி நின்றாளே.
உரை  
59அகாரம் உயிரே உகாரம் பரமே
மகார மலமாய் வரு முப்பதத்தில்
சிகாரம் சிவம் ஆய் வகாரம் வடிவமாய்
அகாரம் உயிர் என்று அறையலும் ஆமே.
உரை  
60நகார மகார சிகார நடுவாய்
வகாரம் இரண்டும் வளியுடன் கூடி
ஒகார முதல் கொண்டு ஒருகால் உரைக்க
மகார முதல்வன் மனத்து அகத்தானே.
உரை  
61அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்சு எழுத்து அங்குசம் ஆவன
அஞ்சையும் கூடத் தடுக்க வல்லார் கட்கே
அஞ்சு ஆதி ஆதி அகம் புகல் ஆமே.
உரை  
62ஐந்து கலையில் அகராதி தன்னிலே
வந்த நகர் ஆதி மாற்றி மகர் ஆதி
நந்தியை மூலத்தே நாடிப் பரை யொடும்
சந்தி செய்வார்க்குச் சடங்கு இல்லை தானே.
உரை  
63மருவும் சிவாயமே மன்னும் உயிரும்
அருமந்த யோகமும் ஞானமும் ஆகும்
தெருள் வந்த சிவனார் சென்று இவற்றாலே
அருள் தங்கி அச் சிவம் ஆவது வீடே.
உரை  
64அஞ்சுக அஞ்சு எழுத்து உண்மை அறிந்தபின்
நெஞ்சு அகத்து உள்ளே நிறையும் பராபரம்
வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவு இல்லை
தஞ்சம் இது என்று சாற்றுகின்றேனே.
உரை  
65சிவாயவொடு அவ்வே தெளிந்து உளத்து ஓதச்
சிவாயவொடு அவ்வே சிவன் உரு ஆகும்
சிவாயவொடு அவ்வும் தெளிய வல்லார்கள்
சிவாயவொடு அவ்வே தெளிந்து இருந்தாரே
உரை  
66சிகார வகார யகாரம் உடனே
நகார மகார நடுஉற நாடி
ஒகாரம் உடனே ஒருகால் உரைக்க
மகார முதல்வன் மதித்து நின்றானே.
உரை  
67நம் முதல் ஓர் ஐந்தின் நாடும் கருமங்கள்
அம் முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை
சிம் முதல் உள்ளே தெளிய வல்லார் கட்குத்
தம் முதல் ஆகும் சதா சிவம் தானே.
உரை  
68நவமும் சிவமும் உயிர் பரம் ஆகும்
தவம் ஒன்று இலாதன தத்துவம் ஆகும்
சிவம் ஒன்றி ஆய்பவர் ஆதரவால் அச்
சிவம் என்பது ஆனாம் எனும் தெளி உற்றதே.
உரை  
69கூடிய எட்டும் இரண்டும் குவிந்து அறி
நாடிய நந்தியை ஞானத்து உள்ளே வைத்து
ஆடிய ஐவரும் அங்கு உறவு ஆவார்கள்
தேடி அதனைத் தெளிந்து அறியீரே.
உரை  
70எட்டும் இரண்டும் இனிது அறிகின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இரு மூன்று நான்கு எனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.
உரை  
71எட்டு வரையின் மேல் எட்டு வரை கீறி
இட்ட நடுவுள் இறைவன் எழுத்து ஒன்றில்
வட்டத்திலே அறை நாற்பத்து எட்டும் இட்டுச்
சிட்டம் அஞ்சு எழுத்தும் செபி சீக்கிரமே.
உரை  
72தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்
ஆன இம் மூவரோடு ஆற்றவர் ஆதிகள்
ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும்
சேனையும் செய் சிவ சக்கரத்தானே.
உரை  
73பட்டன மாதவம் ஆறும் பராபரம்
விட்டனர் தம்மை விகிர்தா நம என்பர்
எட்டனை ஆயினும் ஈசன் திறத்திறம்
ஒட்டுவன் பேசுவன் ஒன்று அறியேனே.
உரை  
74வித்து ஆம் செக மயம் ஆக வரை கீறி
நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப் பின்
உத்தாரம் பன்னிரண்டு ஆதி கலை தொகும்
பத்து ஆம் பிரம சடங்கு பார்த்து ஓதிடே.
உரை  
75கண்டு எழுந்தேன் கமலம் மலர் உள் இடை
கொண்டு ஒழிந்தேன் உடன் கூடிய காலத்துப்
பண்டு அழியாத பதிவழியே சென்று
நண் பழியாமே நம எனல் ஆமே.
உரை  
76புண்ணிய வானவர் பூ மழை தூவி நின்று
எண்ணுவர் அண்ணல் இணை அடி மந்திரம்
நண்ணுவர் நண்ணி நம என்று நாமத்தைக்
கண் என உன்னிக் கலந்து நின்றாரே.
உரை  
77ஆறு எழுத்து ஆவது ஆறு சமயங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலு என்பர்
சாவித்திரியில் தலை எழுத்து ஒன்று உள
பேதிக்க வல்லார் பிறவி அற்றார்களே.
உரை  
78எட்டினில் எட்டு அறை இட்டு ஓர் அறையிலே
கட்டிய ஒன்று எட்டாய்க் காண நிறை இட்டுச்
சுட்டி இவற்றைப் பிரணவம் சூழ்ந்திட்டு
மட்டும் உயிர்கட்கு உமாபதியான் உண்டே.
உரை  
79நம் முதல் அவ்வொடு நாவினர் ஆகியே
அம் முதல் ஆகிய எட்டு இடை உற்று இட்டு
உம் முதல் ஆகவே உண்பவர் உச்சி மேல்
உம் முதல் ஆயவன் உற்று நின்றானே.
உரை  
80நின்ற அரசு அம் பலகை மேல் நேர் ஆக
ஒன்றிட மவ்விட்டு ஓலையில் சாதகம்
துன்று எழுகையுள் பூசிச் சுடர் இடைத்து
அன்ற வெதுப்பு இடத் தம்பனம் காணுமே.
உரை  
81கரண விறளிப் பலகை யமன் திசை
மரணம் இட்டு எட்டின் மகார எழுத்து இட்டு
வரணம் இல் ஐங்காயம் பூசி அடுப்பு இடை
முரணில் புதைத்திட மோகனம் ஆகுமே.
உரை  
82ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில்
பங்கு படவே பலாசப் பலகையில்
ஆங்கு அரு மேட்டில் கடுப் பூசி விந்து விட்டு
ஓங்காரம் வைத்திடும் உச்சாடனத்துக்கே.
உரை  
83உச்சி அம் போதில் ஒளிவன்னி மூலையில்
பச் சோலையில் பஞ்ச காயத்தைப் பாரித்து
முச்சதுரத்தின் முது காட்டில் வைத்திட
வைச்சபின் மேலோர் மாரணம் வேண்டிலே.
உரை  
84ஏய்ந்த அரிதாரம் ஏட்டின் மேலே பூசி
ஏய்ந்த வகாரம் உகாரம் எழுத்து இட்டு
வாய்ந்தது ஓர் வில்லம் பலகை வசியத்துக்கு
ஏய்ந்தவைத்து எண் பதினாயிரம் வேண்டிலே.
உரை  
85எண்ணாக் கருடனை ஏட்டின் அகாரம் இட்டு
எண்ணாப் பொன் ஒளி எழுவெள்ளி பூசிடா
வெண் நாவல் பலகையில் இட்டு மேற்கே நோக்கி
எண்ணா எழுத்து எட்டாயிரம் வேண்டிலே.
உரை  

3. அருச்சனை

1அம்புயம் நீலம் கழுநீர் அணி நெய்தல்
வம்பு அவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.
உரை  
2சாங்கம் அது ஆகவே சந்தொடு சந்தனம்
தேம் கமழ் குங்குமம் கர்ப்பூரம் கார் அகில்
பாங்கு படப் பனி நீரால் குழைத்து வைத்து
ஆங்கே அணிந்து நீர் அர்ச்சியும் அன்பு ஒடே.
உரை  
3அன்புடனே நின்று அமுதம் ஏற்றியே
பொன் செய் விளக்கும் புகைதீபம் திசைதொறும்
துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால்
இன்டனே வந்து எய்திடும் முத்தியே.
உரை  
4எய்தி வழிப் படில் எய்தாதன இல்லை
எய்தி வழிப் படில் இந்திரன் செல்வம் முன்
எய்தி வழிப் படில் எண் சித்தி உண்டாகும்
எய்தி வழிப் படில் எய்திடும் முத்தியே.
உரை  
5நண்ணும் பிறதார நீத்தார் அவித்தார்
மண்ணிய நைவேத்தியம் அனு சந்தான
நண்ணிய பஞ்சாங்க நண்ணும் செபம் என்னும்
மன்னும் அன பவனத் தொடு வைகுமே.
உரை  
6வேண்டார்கள் கன்மம் விமலனுக்கு ஆட்பட்டோர்
வேண்டார்கள் கன்மம் அதில் இச்சை அற்ற பேர்
வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள்
வேண்டார்கள் கன்மம் மிகுதி ஓர் ஆய்ந்த அன்பே.
உரை  
7அறிவரும் ஞானத்து எவரும் அறியார்
பொறிவழி தேடிப் புலம்பு கின்றார்கள்
நெறி மனை உள்ளே நிலை பெற நோக்கில்
எறி மணி உள்ளே இருக்கலும் ஆமே.
உரை  
8இருளும் வெளியும் போல் இரண்டு ஆம் இதய
மருள் அறியாமையும் மன்னும் அறிவு
மருள் இவை விட்டு அறியாமை மயக்கும்
மருளும் சிதைத்தோர் அவர்கள் ஆம் அன்றே.
உரை  
9தானவன் ஆக அவனே தான் ஆயிட
ஆன இரண்டில் அறிவன் சிவம் ஆகப்
போனவன் அன்பு இது நால் ஆம் மரபுறத்
தானவன் ஆகும் ஓர் ஆதித்த தேவரே.
உரை  
10ஓங்கார உந்திக்கு கீழ் உற்றிடும் எந் நாளும்
நீங்கா வகாரமும் நீள் கண்டத்து ஆயிடும்
பாங்கார் நகாரம் பயில் நெற்றி உற்றிடும்
வீங்கு ஆகும் விந்துவும் நாதம் மேல் ஆகுமே.
உரை  
11நமவது ஆசனம் ஆன பசுவே
சிவமது சித்திச் சிவமாம் பதியே
நமஅற ஆதி நாடுவது அன்றாம்
சிவம் ஆகும் மா மோனம் சேர்தல் மெய் வீடே.
உரை  
12தெளி வரும் நாளில் சிவ அமுது ஊறும்
ஒளி வரு நாளில் ஓர் எட்டில் உகளும்
ஒளி வரும் அப் பதத்து ஓர் இரண்டு ஆகில்
வெளிதரு நாதன் வெளியாய் இருந்துஏ.
உரை  

4. நவகுண்டம்

1நவ குண்டம் ஆனவை நான் செய்யின்
நவ குண்டத்து உள் எழு நல் தீபம் தானும்
நவ குண்டத்து உள் எழு நன்மைகள் எல்லாம்
நவ குண்டம் ஆனவை நான் உரைப்பேனே.
உரை  
2உரைத்திடும் குண்டத்தின் உள்ளே முக்காலும்
நகைத்து எழு நால் கோண நன்மைகள் ஐந்தும்
பகைத்திடும் முப்புரம் பார் அங்கி யோடே
மிகைத்து எழு கண்டங்கள் மேல் அறியோமே.
உரை  
3மேல் அறிந்து உள்ளே வெளி செய்த அப்பொருள்
கால் அறிந்து உள்ளே கருத்து உற்ற செம் சுடர்
பார் அறிந்து அண்டம் சிறகு அற நின்றது
நான் அறிந்து உள்ளே நாடிக் கொண்டேனே.
உரை  
4கொண்ட இக் குண்டத்தின் உள் எழு சோதியாய்
அண்டங்கள் ஈர் ஏழும் ஆக்கி அழிக்கலாம்
பண்டை உள் வேதம் பரந்த பரப்பு எல்லாம்
இன்று சொல் நூலாய் எடுத்து உரைத்தேனே.
உரை  
5எடுத்த அக் குண்டத்து இடம் பதினாறில்
பதித்த கலைகளும் பாலித்து நிற்கும்
கதித்து அனல் உள் எழக் கண்டு கொள்வார்க்கே
கொதித்து எழும் வல்வினை கூட இலாவே.
உரை  
6கூட முக் கூடத்தின் உள் எழு குண்டத்துள்
ஆடிய ஐந்தும் அகம் புறம்பாய் நிற்கும்
பாடிய பன்னீர் இராசியும் அங்கு எழ
நாடிக் கொள்வார் கட்கு நல் சுடர் தானே.
உரை  
7நல் சுடர் ஆகும் சிர முக வட்டம் ஆம்
கைச்சுடர் ஆகும் கருத்து உற்ற கைகளில்
பைச் சுடர் மேனி பதைப்பு உற்று இலிங்கமும்
நல் சுடராய் எழு நல்லது என்றாளே.
உரை  
8நல்லது என்றாளே நமக்கு உற்ற நாயகம்
சொல் அது என்றாளே சுடர் முடி பாதம் ஆம்
மெல்ல நின்றாளை வினவ கில்லாதவர்
கல் அதன் தாளையும் கற்றும் இன்னாளே.
உரை  
9இன்னா இளம் பிறை மேவிய குண்டத்துச்
சொன்னால் இரண்டும் சுடர் நாகம் திக்கு எங்கும்
பன்னாலு நாகம் பரந்த பரம் சுடர்
என் ஆகத்து உள்ளே இடம் கொண்டவாறே.
உரை  
10இடம் கொண்ட பாதம் எழில் சுடர் ஏக
நடம் கொண்ட பாதங்கள் நண்ணீர் அதற்குச்
சகம் கொண்ட கை இரண்டு ஆறும் தழைப்ப
முகம் கொண்ட செம் சுடர் முக்கணனார்க்கே.
உரை  
11முக்கணன் தானே முழுச் சுடர் ஆயவன்
அக் கணன் தானே அகிலமும் உண்டவன்
திக் கணன் ஆகித் திகை எட்டும் கண்டவன்
எக் கணன் தானுக்கும் எந்தை பிரானே.
உரை  
12எந்தை பிரானுக்கு இரு மூன்று வட்டம் ஆய்த்
தந்தை தன் முன்னே சண்முகம் தோன்றலால்
கந்தன் சுவாமி கலந்து அங்கு இருத்தலான்
மைந்தன் இவன் என்று மாட்டிக் கொள்ளீரே.
உரை  
13மாட்டிய குண்டத்தின் உள் எழு வேதத்துள்
ஆட்டிய கால் ஒன்றும் இரண்டும் அலர்ந்திடும்
வாட்டிய கை இரண்டு ஒன்று பதைத்து எழ
நாட்டும் சுரர் இவர் நல் ஒளி தானே.
உரை  
14நல் ஒளியாக நடந்து உலகு எங்கும்
கல் ஒளியாகக் கலந்து உள் இருந்திடும்;
சொல் ஒளியாகத் தொடர்ந்த உயிர்க்கு எலாம்
கல் ஒளி கண் உளும் ஆகி நின்றானே.
உரை  
15நின்ற இக் குண்டம் நிலைஆறு கோணமாய்
பண்டையில் வட்டம் பதைத்து எழும் ஆறு ஆறும்
கொண்ட இத் தத்துவம் உள்ளே கலந்து எழ
விண் உளும் என்ன எடுக்கலும் ஆமே.
உரை  
16எடுக்கின்ற பாதங்கள் மூன்றது எழுத்தைக்
கடுத்த முகம் இரண்டு ஆறு கண்ணாகப்
படித்து எண்ணு நா எழு கொம்பு ஒரு நாலும்
அடுத்து எழு கண்ணான அந்தம் இலாற்கே.
உரை  
17அந்தம் இல்லானுக்கு அகல் இடம் தான் இல்லை
அந்தம் இல்லானை அளப்பவர் தாம் இல்லை
அந்தம் இல்லானுக்கு அடுத்த சொல் தான் இல்லை
அந்தம் இல்லானை அறிந்து கொள் பத்தே.
உரை  
18பத்து இட்டு அங்கு எட்டு இட்டு ஆறு இட்டு நால் இட்டு
மட்டு இட்ட குண்டம் மலர்ந்து எழு தாமரை
கட்டு இட்டு நின்று கலந்த மெய் ஆகமும்
பட்டு இட்டு நின்றது பார்ப்பதி பாலே.
உரை  
19பார்ப்பதி பாகன் பரந்தகை நால் அஞ்சு
கால் பதி பத்து முகம் பார்த்துக் கண்களும்
பூப் பதி பாதம் இரண்டு சுடர் முடி
நாற்பது சோத்திரம் நல் இருபத்து அஞ்சே.
உரை  
20அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐ ஐந்தும்
மஞ்சிட்ட குண்டம் மலர்ந்து அங்கு இருத்தலால்
பஞ்சிட்ட சோதி பரந்த பரம் சுடர்
கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே.
உரை  
21முத்தி நல் சோதி முழுச் சுடர் ஆயவன்
கற்று அற்று நின்றார் கருத்துள் இருந்திடும்
பற்று அற நாடிப் பரந்து ஒளி ஊடு போய்ச்
செற்று அற்று இருந்தவர் சேர்ந்து இருந்தாரே.
உரை  
22சேர்ந்த கலை அஞ்சும் சேரும் இக் குண்டமும்
ஆர்த்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்
பாய்ந்த ஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்
காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே.
உரை  
23மெய் கண்டம் ஆம் விரி நீர் உலகு ஏழையும்
உய் கண்டம் செய்த ஒருவனைச் சேருமின்
மெய் கண்ட ஞானம் திருந்திய தேவர்கள்
பொய் கண்டம் இல்லாப் பொருள் கலந்தாரே.
உரை  
24கலந்து இருபாதம் இருகரம் ஆகும்
மலர்ந்து இரு குண்டம் அகாரத்து ஓர் மூக்கு
மலர்ந்து எழு செம் முகம் மற்றைக் கண் நெற்றி
உணர்ந்து இரும் குஞ்சி அங்கு உத்தமனார்க்கே.
உரை  
25உத்தமன் சோதி உளன் ஒரு பாலன் ஆய்
மத்திமன் ஆகி மலர்ந்து அங்கு இருந்திடும்
பச்சி மதிக்கும் பரந்து குழிந்தன
சத்திமான் ஆகத் தழைத்த கொடியே.
உரை  
26கொடியாறு சென்று குலாவிய குண்டம்
அடி இரு கோணம் ஆய் அந்தமும் ஒக்கும்
படி ஏழ் உலகும் பரந்த சுடரை
மடியாது கண்டவர் மாதனம் ஆமே.
உரை  
27மாதனம் ஆக வளர்கின்ற வன்னியைச்
சாதனம் ஆகச் சமைந்த குரு என்று
போதனம் ஆகப் பொருந்த உலகு ஆளும்
பாதனம் ஆகப் பிரிந்தது பார்த்தே.
உரை  
28பார்த்த இடம் எங்கும் பரந்து எழு சோதியை
ஆத்தம் அது ஆகவே ஆய்ந்து அறிவார் இல்லை
காத்து உடல் உள்ளே கருதி இருந்தவர்
மூத்து உடல் கோடி உகம் கண்ட வாறே.
உரை  
29உகம் கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க
அகம் கண்ட யோகி உள் நாடி எழுப்பும்
பயம் கண்டு கொண்ட இப்பாய் கரு ஒப்பச்
சகம் கண்டு கொண்டது சாதனம் ஆமே.
உரை  
30சாதனை நாலு தழல் மூன்று வில்வயம்
வேதனை வட்டம் விளை ஆறு பூநிலை
போதனை போதஞ்சு பொற்கய வாரண
நாதனை நாடு நவகோடி தானே.
உரை  

5. சத்தி பேதம் - திரிபுரை சக்கரம்

1மா மாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓ மாயை உள் ஒளி ஓர் ஆறு கோடியில்
தாம் ஆன மந்திரம் சத்தி தன் மூர்த்திகள்
ஆம் ஆய அலவாம் திரிபுரை ஆங்கே.
உரை  
2திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப்
பரிபுரை நாரணி ஆம் பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மணி என்ன
வரு பலவாய் நிற்கும் மாமாது தானே.
உரை  
3தானா அமைந்த அம் முப்புரம் தன் இடைத்
தான் ஆன மூ உரு ஓர் உருத் தன்மையள்
தான் ஆன பொன் செம்மை வெண் நிறத்தாள் கல்வி
தான் ஆன போகமும் முத்தியும் நல்குமே.
உரை  
4நல்கும் திரிபுரை நாத நாதாந்தங்கள்
பல்கும் பரவிந்து பார் அண்டம் ஆனவை
நல்கும் பரை அபிராமி அகோசரி
புல்கும் அருளும் அப்போதம் தந்து ஆளும்.
உரை  
5தாள் அணி நூபுரம் செம்பட்டுத் தான் உடை
வார் அணி கொங்கை மலர்க் கன்னல் வாளி வில்
ஏர் அணி அங்குச பாசம் எழில் முடி
கார் அணி மா மணிக் குண்டலக் காதிக்கே.
உரை  
6குண்டலக் காதி கொலை வில் புருவத்தாள்
கொண்ட அரத்த நிறம் மன்னும் கோலத்தள்
கண்டிகை ஆரம் கதிர்முடி மா மதிச்
சண்டிகை நால் திசை தாங்கி நின்றாளே.
உரை  
7நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றல் இல் மோகினி மா திருக் குஞ்சிகை
நன்று அறி கண்டிகை நால்கால் கரீடணி
துன்றிய நல் சுத்த தாமரைச் சுத்தையே.
உரை  
8சுத்த அம் பாரத் தனத்தி சுகோதயள்
வத்துவ மாயாள் உமா சத்தி மா பரை
அத்தகை யாவும் அணோரணி தானும் ஆய்
வைத் தவக் கோலம் மதி அவள் ஆகுமே.
உரை  
9அவளை அறியா அமரரும் இல்லை
அவள் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை
அவள் அன்றி ஐவரால் ஆவது ஒன்று இல்லை
அவள் அன்றி ஊர் புகுமாறு அறியேனே.
உரை  
10அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவார் அரு உருவாம் அவள் என்பர்
அறிவார் கருமம் அவள் இச்சை என்பர்
அறிவார் பரனும் அவள் இடத்தானே.
உரை  
11தான் எங்கு உளன் அங்கு உளள் தையல் மா தேவி
ஊன் எங்கு உள அங்கு உளன் உயிர்க் காவலன்
வான் எங்கு உள அங்கு உளே வந்து அப்பால் ஆம்
கோன் எங்கும் நின்ற குறிபல பாரே.
உரை  
12பரா சத்தி மா சத்தி பல வகையாலும்
தரா சத்தியாய் நின்ற தன்மை உணராய்
உரா சத்தி ஊழிகள் தோறும் உடனே
புரா சத்தி புண்ணியம் ஆகிய போகமே.
உரை  
13போகம் செய் சத்தி புரி குழலா ளொடும்
பாகம் செய்து ஆங்கே பராசத்தியாய் நிற்கும்
ஆகம் செய்து ஆங்கே அடியவர் நாள் தொறும்
பாகம் செய் ஞானம் படர்கின்ற கொம்பே.
உரை  
14கொம்பு அனையாளை குவிமுலை மங்கையை
வம்பு அவிழ் கோதையை வானவர் நாடியைச்
செம் பவளத் திருமேனிச் சிறுமியை
நம்பி என் உள்ளே நயந்து வைத்தேனே.
உரை  
15வைத்த பொருளும் மரு உயிர்ப் பன்மையும்
பத்து முகமும் பரையும் பரா பரைச்
சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்
சத்தியும் வித்தைத் தலை அவள் ஆமே.
உரை  
16தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம் செயும் தூய்நெறித் தோகை
கலை பல வென்றிடும் கன்னி என் உள்ளம்
நிலை பெற இங்கே நிறைந்து நின்றாளே.
உரை  
17நின்றவள் நேர் இழை நீள் கலை யோடு உற
என்றன் அகம் படிந்து ஏழ் உலகும் தொழ
மன்றது ஒன்றி மனோன் மணி மங்கலி
ஒன்று எனோடு ஒன்றி நின்று ஒத்து அடைந்தாளே.
உரை  
18ஒத்து அடங்கும் கமலத்து இடை ஆயிழை
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
மத்து அடைகின்ற மனோன்மணி மங்கலி
சித்து அடைக்கும் வழி தேர்ந்து உணரார்களே.
உரை  
19உணர்ந்து உடனே நிற்கும் உள் ஒளி ஆகி
மணம் கமழ் பூங் குழலாள் மங்கையும் தானும்
புணர்ந்து உடனே நிற்கும் போதரும் காலைக்
கணிந்து எழுவார்க்குக் கதி அளிப்பாளே.
உரை  
20அளி ஒத்த பெண் பிள்ளை ஆனந்த சுந்தரி
புளி உறு புன் பழம் போல் உள்ளே நோக்கித்
தெளி உறு வித்துச் சிவகதி காட்டி
ஒளி உற வைத்து என்னை உய்ய உண்டாளே.
உரை  
21உண்டு இல்லை என்றது உருச் செய்து நின்றது
வண்டு இல்லை மன்றின் உள் மன்னி நிறைந்தது
கண்டிலர் காரண காரணி தம்மொடு
மண்டலம் மூன்று உற மன்னி நின்றாளே.
உரை  
22நின்றாள் அவன் தன் உடலும் உயிருமாய்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுள் புகுந்து உணர்வு ஆகியே
நின்றாள் பரம் சுடர் ஏடு அம் கையாளே.
உரை  
23ஏடு அம் கை நங்கை இறை எங்கள் முக் கண்ணி
வேடம் படிகம் விரும்பும் வெண் தாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னி வாய்த் தோத்திரம் சொல்லுமே.
உரை  
24தோத்திரம் செய்து தொழுது துணை அடி
வாய்த்திட ஏத்திவழிபடுமாறு இரும்பு
ஆர்த்திடும் அங்குச பாசம் பசும் கரும்பு
ஆர்த்திடும் பூம்பிள்ளை ஆகும் ஆம் ஆதிக்கே.
உரை  
25ஆதி விதமிகுத்து அண்ட அந்த மால் தங்கை
நீதி மலரின் மேல் நேர் இழை நாமத்தைப்
பாதியில் வைத்துப் பல்கால் பயில்விரேல்
சோதி மிகுத்து முக்காலமும் தோன்றுமே.
உரை  
26மேதாதி ஈர் எட்டும் ஆகிய மெல் இயல்
வேத ஆதி நூலின் விளங்கும் பரா பரை
ஆதாரம் ஆகியே ஆய்ந்த பரப்பினள்
நாதாதி நாதத்து நல்ல அருளாலே.
உரை  
27அருள் பெற்றவர் சொல்ல வாரீர் மனிதர்
பொருள் பெற்ற சிந்தைப் புவனா பதியார்
மருள் உற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருள் உற்ற சேவடி போற்றுவன் யானே.
உரை  
28ஆன வராக முகத்தி பதத்தினள்
ஈனவர் ஆகம் இடிக்கும் முசலத்தோடு
ஏனை உழுபடை ஏந்திய வெண் நகை
ஊனம் அற உணர்ந்தார் உளத்து ஓங்குமே.
உரை  
29ஓம் காரி என்பாள் அவள் ஒரு பெண் பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி ஆகியே ஐவரைப் பெற்றிட்டு
ரீங்காரத்து உள்ளே இனிது இருந்தாளே.
உரை  
30தானே தலைவி என நின்ற தற்பரை
தானே உயிர் வித்துத் தந்த பதினாலும்
வானோர் தலமும் மனமும் நல் புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே.
உரை  

6. வயிரவி மந்திரம்

1பன்னிரண்டு ஆம் கலை ஆதி வயிரவி
தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்துப்
பன்னிரண்டு ஆதியோடு அந்தம் பதினாலும்
சொல்நிலை சோடசம் அந்தம் என்று ஓதிடே.
உரை  
2அந்தம் பதினாலும் அதுவே வயிரவி
முந்து நடுவும் முடிவும் முதலாகச்
சிந்தைக் கமலத்து எழுகின்ற மாசத்தி
அந்தமும் ஆதியும் ஆகி நின்றாளே.
உரை  
3ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர்
போகின்ற பூதம் பொருந்து புராதரர்
சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப்
போகும் திரிபுரை புண்ணியத் தோரே.
உரை  
4புண்ணிய நந்தி புனிதன் திரு ஆகும்
எண்ணிய நாட்கள் இருபத்து ஏழ் சூழ்மதி
பண்ணிய வன்னி பகலோன் மதி ஈறு
திண்ணிய சிந்தை தன் தென்னனும் ஆமே.
உரை  
5தென்னன் திரு நந்தி சேவகன் தன்னொடும்
பொன் அம் கிரியில் பூதலம் போற்றிடும்
பன்னும் பரிபிடி அந்தம் பகவனோடு
உன்னும் திரிபுரை ஓதி நின்றானுக்கே.
உரை  
6ஓதிய நந்தி உணரும் திரு அருள்
நீதியில் வேத நெறிவந்து செய்யும்
போதம் இருபத்து எழுநாள் புணர்மதி
சோதி வயிரவி சூலம் வந்து ஆளுமே.
உரை  
7சூலம் கபாலம் கை ஏந்திய சூலிக்கு
நாலு அம் கரம் உள நாக பாச அங்குச
மால் அங்கு அயன் அறியாத வடிவுக்கு
மேல் அங்கம் ஆய் நின்ற மெல் இயலாளே.
உரை  
8மெல் இயல் வஞ்சி விடமி கலை ஞானி
சொல்லிய கிஞ்சுக நிறம் மன்னு சேய் இழை
கல் இயல் ஒப்பது காணும் திரு மேனி
பல் இயல் ஆடையும் பல் மணிதானே.
உரை  
9பல் மணி சந்திர கோடி திரு முடி
சொல்மணி குண்டலக் காதி உழைக் கண்ணி
நல் மணி சூரிய சோம நயனத்தாள்
பொன் மணி வன்னியும் பூரிக்கின்றாளே.
உரை  
10பூரித்த பூஇதழ் எட்டினுக்கு உள்ளே ஓர்
ஆரியத் தாள் உண்டு அங்கு எண்மர் கன்னியர்
பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும்
சாரித்துச் சத்தியைத் தாங்கள் கண்டாரே.
உரை  
11கண்ட சிலம்பு வளை சங்கு சக்கரம்
எண் திசை யோகி இறைவி பராசத்தி
அண்ட மொடு எண் திசை தாங்கும் அருள்செல்வி
புண்டரிகத்தின் உள் பூசனையாளே.
உரை  
12பூசனை கந்தம் புனைமலர் மா கோடி
யோசனை பஞ்சத்து ஒலி வந்து உரைசெய்யும்
வாசம் இலாத மணி மந்திர யோகம்
தேசம் திகழும் திரிபுரை காணே.
உரை  
13காணும் பல பல தெய்வங்கள் வெவ் வேறு
பூணும் பல பல பொன் போலத் தோற்றிடும்
பேணும் சிவனும் பிரமனும் மாயனும்
காணும் தலைவி நல் காரணி காணே.
உரை  
14காரணி மந்திரம் ஓதும் கமலத்துப்
பூரண கும்ப விரேசம் பொருந்திய
நாரணி நந்தி நடு அங்கு செய்த
ஆரண வேதநூல் அந்தமும் ஆமே.
உரை  
15அந்த நடு விரல் ஆதி சிறுவிரல்
வந்த வழி முறை மாறி செய்யும்
செம் தமிழ் ஆதி தெளிந்து வழிபடு
நந்தி இதனை நவம் உரைத்தானே.
உரை  
16உரைத்த நவ சத்தி ஒன்று முடிய
நிரைத்த விராசி நெடு முறை எண்ணிப்
பிரைச் சதம் எட்டு முன் பேசிய நந்தி
நிரைத்து நியதி நியமம் செய்தானே.
உரை  
17தாமக் குழலி தயைக் கண்ணி உள் நின்ற
ஏமத்து இருள் அற வீசும் இளங்கொடி
ஓமப் பெருஞ்சுடர் உள் எழு நுண்புகை
மேவித்து அமுதொடு மீண்டது காணே.
உரை  
18காணும் இருதய மந்திரமும் கண்டு
பேணு நமஎன்று பேசும் தலை மேலே
வேணு நடுவு மிக நின்ற ஆகுதி
பூணு நடு என்ற அந்தம் சிகையே.
உரை  
19சிகை நின்ற அந்தக் கவசம் கொண்டு ஆதி
பகை நின்ற அங்கத்தைப் பார் என்று மாறித்
தொகை நின்ற நேத்திர முத்திரை சூலம்
வகை நின்ற யோனி வருத்தலும் ஆமே.
உரை  
20வருத்தம் இரண்டும் சிறு விரல் மாறிப்
பொருத்தி அணிவிரல் சுட்டிப் பிடித்து
நெரித்து ஒன்ற வைத்து நெடிது நடுவே
பெருந்த விரல் இரண்டு உள் புக்குப் பேசே.
உரை  
21பேசிய மந்திரம் இகாரம் பிரித்து உரை
கூசம் இலாத சகாரத்தை முன் கொண்டு
வாசிப் பிராணன் உபதேச மாகைக்குக்
கூசிய விந்து உடன் கொண்டு கூவே.
உரை  
22கூவிய சீவன் பிராணன் முதல் ஆகப்
பாவிய ச உடன் பண்ணும் அகாரத்தை
மேவிய மாயை விரி சங்கு முத்திரை
தேவி நடுவுள் நிகழ்ந்து நின்றாளே.
உரை  
23நின்ற வயிரவி நீலி நிசா சரி
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச்
சென்று அருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்று அருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே.
உரை  
24சாற்றிய வேதம் சராசரம் ஐம் பூதம்
நால் திசை முக் கண்ணி நடும் இருள் வெளி
தோற்றும் உயிர்ப் பன்மை சோதி பராபரை
ஆற்றலொடு ஆய் நிற்கும் ஆதி முதல்வியே.
உரை  
25ஆதி வயிரவி கன்னித் துறை மன்னி
ஓதி உணரில் உடல் உயிர் ஈசன் ஆம்
பேதை உலகில் பிறவிகள் நாசம் ஆம்
ஓத உலவாத கோலம் ஒன்று ஆகுமே.
உரை  
26கோலக் குழலி குலாய புருவத்தள்
நீலக் குவளை மலர் அன்ன கண்ணினாள்
ஆலிக்கும் இன் அமுது ஆனந்த சுந்தரி
மேலைச் சிவத்தை வெளிப் படுத்தாளே.
உரை  
27வெளிப்படு வித்து விளை அறிவித்துத்
தெளிப் படுவித்து என் சிந்தையின் உள்ளே
களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி
ஒளிப் படுவித்து என்னை உய்யக் கொண்டாளே.
உரை  
28கொண்டனள் கோலம் கோடி அநேகங்கள்
கண்டனள் எண் எண் கலையின் கண் மாலைகள்
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும்
தண்டலை மேல் நின்ற தையல் நல்லாளே.
உரை  
29தையல் நல்லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப்
பைய நின்று ஏத்திப் பணிமின் பணிந்த பின்
வெய்ய பவம் இனி மேவ கிலாவே.
உரை  
30வேய் அன தோளி விரை உறு மெல் மலர்
ஏய குழலி இளம் பிறை ஏந்திழை
தூய சடை முடிச் சூலினி சுந்தரி
ஏய் எனது உள்ளத்து இனிது இருந்தாளே.
உரை  
31இனியது என் மூலை இருக்கும் குமரி
தனி ஒரு நாயகி தானே தலைவி
தனிப் படுவித்தனள் சார்வு படுத்து
நனிப் படுவித்து உள்ளம் நாடி நின்றாளே.
உரை  
32நாடிகள் மூன்று நடு எழு ஞாளத்துக்
கூடி இருந்த குமரி குலக் கன்னி
பாடகச் சீறடிப் பைம் பொன் சிலம்பு ஒலி
ஊடகம் மேவி உறங்கு கின்றாளே.
உரை  
33உறங்கும் அளவின் மனோன்மணி வந்து
கறங்கு வளைக்கைக் கழுத்து ஆரப் புல்லிப்
பிறங்கு ஒளித் தம்பலம் வாயில் உமிழந்திட்டு
‘உறங்கல் ஐயா’ என்று உபாயம் செய்தாளே.
உரை  
34உபாயம் அளிக்கும் ஒருத்தி என் உள்ளத்து
அபாயம் அறக்கெடுத்து அன்பு விளைத்து
சுவாவை விளக்கும் சுழி அகத்து உள்ளே
அவாவை அடக்கி வைத்து அஞ்சல் என்றாளே.
உரை  
35அம் சொல் மொழியாள் அரும்தவப் பெண்பிள்ளை
செம் சொல் மடமொழி சீர் உடைச் சேயிழை
தஞ்சம் என்று எண்ணித் தன் சேவடி போற்றுவார்க்கு
இன்சொல் அளிக்கும் இறைவி என்றாரே.
உரை  
36ஆர் உயிராயும் அரும் தவப் பெண் பிள்ளை
கார் இயல் கோதையள் காரணி நாரணி
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும்
கோரி என் உள்ளம் குலாவி நின்றாளே.
உரை  
37குலாவிய கோலக் குமரி என் உள்ளம்
நிலாவி இருந்து நெடுநாள் அணைந்தும்
உலாவி இருந்து உணர்ந்து உச்சியின் உள்ளே
கலாவி இருந்த கலைத் தலையாளே.
உரை  
38கலைத்தலை நெற்றி ஓர் கண் உடைக் கண்ணுள்
முலைத் தலை மங்கை முயங்கி இருக்கும்
சிலைத் தலை ஆய தெரிவினை நோக்கி
அலைத்த பூங் கொம்பினள் அங்கு இருந்தாளே.
உரை  
39இருந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவிப்
பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லித்
திருந்திய தாணுவில் சேர்த்து உடன் ஒன்றி
அரும் தவம் எய்தினள் ஆதியின் ஆளே.
உரை  
40ஆதி அனாதி அகாரணி காரணி
சோதிய சோதி சுகபர சுந்தரி
மாது சமாதி மனோன் மணி மங்கலி
ஓதி என் உள்ளத்து உடன் இயைந்தாளே.
உரை  
41இயைந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவி
நயந்தனள் அங்கே நம சிவ என்னும்
அயன் தனை யோரும் பதம் அது பற்றும்
பெயர்ந்தனள் மற்றும் பிதற்று அறுத்தாளே.
உரை  
42பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முத்தி அருளும் முதல்வி
கயல் திகழ் முக்கண்ணும் கம்பலைச் செவ்வாய்
முகத்து அருள் நோக்கமும் முன் உள்ளது ஆமே.
உரை  
43உள்ளத்து இதயத்து நெஞ்சத்து ஒரு மூன்றுள்
பிள்ளைத் தடம் உள்ளே பேசப் பிறந்தது
வள்ளல் திருவின் வயிற்றின் உள் மா மாயைக்
கள்ள ஒளியின் கருத்து ஆகும் கன்னியே.
உரை  
44கன்னியும் கன்னி அழிந்திலள் காதலி
துன்னி அம் ஐவரைப் பெற்றனள் தூய்மொழி
பன்னிய நல் நூல் பகவரும் அங்கு உள
என்னே இம் மாயை இருள் அது தானே.
உரை  
45இருள் அது சத்தி வெளியது எம் அண்ணல்
பொருள் அது புண்ணியர் போகத்துள் இன்பம்
தெருள் அது சிந்தையைத் தெய்வம் என்று எண்ணில்
அருள் அது செய்யும் எம் ஆதிப் பிரானே.
உரை  
46ஆதி அனாதியும் ஆய பராசத்தி
பாதிபரா பரை மேல் உறை பைந்தொடி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதும் என் உள்ளத்து உடன் முகிழ்த்தாளே.
உரை  
47ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை
ஆதியில் வேதமே யாம் என்று அறிகிலர்
சாதியும் பேதமும் தத்துவம் ஆய் நிற்பள்
ஆதி என்று ஓதினள் ஆவின் கிழத்தியே.
உரை  
48ஆவின் கிழத்தி நல் ஆவடு தண் துறை
நாவின் கிழத்தி நலம் புகழ்ந்து ஏத்திடும்
தேவின் கிழத்தி திரு ஆம் சிவ மங்கை
மேவும் கிழத்தி வினை கடிந்தாளே.
உரை  
49வினை கடிந்தார் உள்ளத்து உள் ஒளி மேவித்
தனை அடைந்தோர்க்கு எல்லாம் தத்துவமாய் நிற்பள்
எனை அடிமை கொண்ட ஏந்திழை ஈசன்
கணவனைக் காண அனாதியும் ஆமே.
உரை  
50ஆதி அனாதி அகாரணி காரணி
வேதம் அது ஆய்ந்தனள் வேதியர்க்காய் நின்ற
சோதி தனிச் சுடர் சொரூபம் ஆய் நிற்கும்
பாதி பராபரை பன்னிரண்டு ஆதியே.
உரை  

7. பூரண சத்தி

1அளந்தேன் அகல் இடத்து அந்தமும் ஈறும்
அளந்தேன் அகல் இடத்து ஆதிப் பிரானை
அளந்தேன் அகல் இடத்து ஆணொடு பெண்ணும்
அளந்தேன் அவன் அருள் ஆய்ந்து உணர்ந்தேனே.
உரை  
2உணர்ந்து இலர் ஈசனை ஊழி செய் சத்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன் அருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பகம் ஆமே.
உரை  
3கும்பக் களிறு ஐந்தும் கோலொடு பாகனும்
வம்பில் திகழும் மணிமுடி வண்ணனும்
இன்பக் கலவி இனிது உறை தையலும்
அன்பில் கலவி உள் ஆய் ஒழிந்தாரே.
உரை  
4இன்பக் கலவியில் இட்டு எழுகின்றது ஓர்
அன்பில் புக வல்லன் ஆம் எங்கள் அப்பனும்
துன்பக் குழம்பில் துயர் உறும் பாசத்துள்
என்பில் பராசத்தி என் அம்மை தானே.
உரை  
5என் அம்மை என் அப்பன் என்னும் செருக்கு அற்று
உன் அம்மை ஊழித் தலைவனும் அங்கு உளன்
மன் அம்மை ஆகி மருவி செய்யும்
பின் அம்மை ஆய் நின்ற பேர் நந்தி தானே.
உரை  
6தார் மேல் உறைகின்ற தண்மலர் நான் முகன்
பார் மேல் இருப்பது ஒரு நூறு தான் உள
பூ மேல் உறைகின்ற போது அகம் வந்தனள்
நா மேல் உறைகின்ற நாயகி ஆணையே.
உரை  
7ஆணையம் ஆய் அருந்தாது உள் இருந்தவர்
மாண் ஐயம் ஆய மனத்தை ஒருக்கிப் பின்
பாழ்நயம் ஆய பரத்தை அறிந்தபின்
தாள்நயம் ஆய அனாதனன் தானே.
உரை  
8தானே எழுந்த இத்தத்துவ நாயகி
வான் நேர் எழுந்து மதியை விளக்கினள்
தேன் நேர் எழுகின்ற தீபத்து ஒளியுடன்
மானே நடம் உடை மன்று அறியீரே.
உரை  
9அறிவு ஆன மாயையும் ஐம்புலக் கூட்டத்து
அறிவு ஆன மங்கை அருள் அது சேரில்
பிறியா அறிவு அறிவார் உளம் பேணும்
நெறி ஆய சித்தம் நினைந்து இருந்தாளே.
உரை  
10இரவும் பகலும் இலாத இடத்தே
குரவம் செய்கின்ற குழலியை நாடி
அரவம் செய்யாமல் அருளுடன் தூங்கப்
பருவம் செய்யாத ஓர் பாலனும் ஆமே.
உரை  
11பாலனும் ஆகும் பரா சத்தி தன்னொடு
மேல் அணுகா விந்து நாதங்கள் விட்டிட
மூலம் அது ஆம் எனும் முத்திக்கு நேர்படச்
சாலவும் ஆய் நின்ற தற் பரத்தாளே.
உரை  
12நின்ற பரா சத்தி நீள் பரன் தன்னொடு
நின்று அறி ஞானமும் இச்சையும் ஆய் நிற்கும்
நன்று அறியும் கிரியா சத்தி நண்ணவே
மன்றன் அவற்றுள் மருவிடும் தானே.
உரை  
13மரு ஒத்த மங்கையும் தானும் உடனே
உரு ஒத்து நின்றமை ஒன்றும் உணரார்
கரு ஒத்து நின்று கலங்கின போது
திரு ஒத்த சிந்தை வைத்து எந்தை நின்றானே.
உரை  
14சிந்தையின் உள்ளே திரியும் சிவ சத்தி
விந்துவும் நாதமும் ஆயே விரிந்தனள்
சந்திர பூமி சடாதரி சாத்தவி
அந்தம் ஒடு ஆதி அதாம் வண்ணத் தாளே.
உரை  
15ஆறி இருந்த அமுத பயோதரி
மாறி இருந்த வழி அறிவார் இல்லை
தேறி இருந்து நல்தீபத்து ஒளியுடன்
ஊறி இருந்தனள் உள் உடையார்க்கே.
உரை  
16உடையவன் அங்கி உருத்திர சோதி
விடை அவன் ஏறி விளங்கி இருக்கும்
கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்து
அடை அது ஆகிய சாதகர் தாமே.
உரை  
17தாம் மேல் உறைவிடம் மாறு இதழ் ஆனது
பார் மேல் இதழ் பதின் எட்டின் இருநூறு உள
பூ மேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள்
பார் மேல் உறைகின்ற பைந் தொடியாளே.
உரை  
18பைங்கொடியாளும் பரமன் இருந்திடத்
திண் கொடி ஆகத் திகழ் தரு சோதி ஆம்
விண் கொடி ஆகி விளங்கி வருதலால்
பெண் கொடி ஆக நடந்தது உலகே.
உரை  
19நடந்தது அம் மலர் நாலுடன் அஞ்சாய்
இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்ப்
படர்ந்தது தன் வழி பங்கயத்து உள்ளே
தொடர்ந்தது உள்வழி சோதி அடுத்தே.
உரை  
20அடுக்கும் தாமரை ஆதி இருப்பிடம்
எடுக்கும் தாமரை இல் அகத்து உள்ளது
மடுக்கும் தாமரை மத்தகத்தே செல
முடுக்கும் தாமரை முச் சதுரத்தே.
உரை  
21முச் சதுரத்தே எழுந்த முளைச் சுடர்
எச் சதுரத்தும் இடம் பெற ஓடிடக்
கைச் சதுரத்துக் கடந்து உள் ஒளிபெற
எச்சதுரத்தும் இருந்தனள் தானே.
உரை  
22இருந்தனள் தன் முகம் ஆறு ஒடு நால் ஆய்
பரந்தன வாயு திசை திசை தோறும்
குவிந்தன முத்தின் முக ஒளி நோக்கி
நடந்தது தேறல் அதோ முகம் அம்பே.
உரை  
23அம்பு அன்ன கண்ணி அரிவை மனோன்மணி
கொம்பு அன்ன நுண் இடை கோதை குலாவிய
செம் பொன் செய் யாக்கை செறிகமழ் நாள்தொறும்
நம்பனை நோக்கி நவிலுகின்றாளே.
உரை  
24நவிலும் பெரும் தெய்வம் நால் மறைச் சத்தி
துகில் உடை ஆடை நிலம் பொதி பாதம்
அகிலமும் அண்டம் முழுதும் செம்மாந்து
புகலும் முச்சோதி புனைய நிற்பாளே.
உரை  
25புனைய வல்லாள் புவனத்து இறை எங்கள்
வனைய வல்லாள் அண்ட கோடிகள் உள்ளே
புனைய வல்லாள் மண்டலத்து ஒளி தன்னைப்
புனைய வல்லாளையும் போற்றி என்பேனே.
உரை  
26போற்றி என்பேன் புவனா பதி அம்மை என்
ஆற்றல் உள் நிற்கும் அரும் தவப் பெண் பிள்ளை
சீற்றம் கடிந்த திரு நுதல் சேயிழை
கூற்றம் துரக்கின்ற கோள் பைந் தொடியே.
உரை  
27தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி
வடிவார் திரிபுரை ஆம் மங்கை சங்கைச்
செடியார் வினை கெடச் சேர்வரை என்று என்று
அடியார் வினை கெடுத்து ஆதியும் ஆமே.
உரை  
28மெல் இசைப் பாவை வியோமத்தின் மென் கொடி
பல் இசைப் பாவை பயன் தரு பைங் கொடி
புல் இசைப் பாவையைப் போகத்துரந்திட்டு
வல் இசைப் பாவை மனம் புகுந்தாளே.
உரை  
29தாவித் தவப் பொருள் தானவன் எம் இறை
பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து
மேவிப் பரா சத்தி மேலொடு கீழ் தொடர்ந்து
ஆவிக்கும் அப் பொருள் தான் அது தானே.
உரை  
30அது இது என்பார் அவனை அறியார்
கதி வர நின்றது ஓர் காரணம் காணார்
மது விரி பூங் குழல் மா மங்கை நங்கை
திதம் அது உன்னார்கள் தேர்ந்து அறியாரே.
உரை  

8. ஆதார வாதேயம்

1நாலிதழ் ஆறில் விர்ந்தது தொண்ணூறு
தான் இதழ் ஆனவை நாற்பத்து நால் உள
பால் இதழ் ஆனவள் பங்கயம் மூலமாய்த்
தான் இதழ் ஆகித் தரித்து இருந்தாளே.
உரை  
2தரித்து இருந்தாள் அவள் தன் ஒளி நோக்கி
விரித்து இருந்தாள் அவள் வேதப் பொருளைக்
குறித்து இருந்தாள் அவள் கூறிய ஐந்து
மறித்து இருந்தாள் அவள் மாது நல்லாளே.
உரை  
3மாது நல்லாளும் மணாளன் இருந்திடப்
பாதி நல்லாளும் பகவனும் ஆனது
சோதி நல்லாளைத் துணைப் பெய்ய வல்லிர் ஏல்
வேதனை தீர் தரும் வெள்ளடை ஆமே.
உரை  
4வெள் அடையான் இரு மா மிகு மா மலர்க்
கள் அடையார் அக் கமழ் குழலார் மன
மள் அடையானும் வகைத் திறம் ஆய் நின்ற
பெண் ஒரு பாகம் பிறவி பெண் ஆமே.
உரை  
5பெண் ஒரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை
பெண் இடை ஆணும் பிறந்து கிடந்தது
பெண் உடை ஆண் என் பிறப்பு அறிந்து ஈர்க்கின்ற
பெண் உடை ஆண் இடைப் பேச்சு அற்ற வாறே.
உரை  
6பேச்சு அற்ற நல் பொருள் காணும் பெரும் தகை
மாச்சு அற்ற சோதி மனோன்மணி மங்கை ஆம்
காச்சு அற்ற சோதி கடவுளுடன் புணர்ந்து
ஆச்சு அற்று என் உள் புகுந்து ஆலிக்கும் தானே.
உரை  
7ஆலிக்கும் கன்னி அரிவை மனோன் மணி
பாலித்து உலகில் பரந்து பெண் ஆகும்
வேலைத் தலைவியை வேத முதல்வியை
ஆலித்து ஒருவன் உகந்து நின்றானே.
உரை  
8உகந்து நின்றான் நம்பி ஒள் நுதல் கண்ணோடு
உகந்து நின்றான் நம் முழை புக நோக்கி
உகந்து நின்றான் இவ் உலகங்கள் எல்லாம்
உகந்து நின்றான் அவன் அன்றோ தொகுத்தே.
உரை  
9குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்
துத்தி விரிந்த சுணங்கினள் தூ மொழி
புத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத்
தொத்த கருத்து அது சொல்ல கிலேனே.
உரை  
10சொல்ல ஒண்ணாத அழல் பொதி மண்டலம்
சொல்ல ஒண்ணாது திகைத்து அங்கு இருப்பார்கள்
வெல்ல ஒண்ணாத வினைத் தனி நாயகி
மல்ல ஒண்ணாத மனோன்மணி தானே.
உரை  
11தானே இரு நிலம் தாங்கி விண்ணாய் நிற்கும்
தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழை பொழி தையலும் ஆய் நிற்கும்
தானே வடவரைத் தண் கடல் கண்ணே.
உரை  
12கண் உடையாளைக் கலந்து அங்கு இருந்தவர்
மண் உடையாரை மனித்தரில் கூட்டு ஒணாப்
பண் உடையார்கள் பதைப்பு அற்று இருந்தவர்
விண் உடையார்களை மேல் உறக் கண்டே.
உரை  
13கண்டு எண் திசையும் கலந்து வரும் கன்னி
பண்டு எண் திசையும் பராசத்தியாய் நிற்கும்
விண்டு எண் திசையும் விரைமலர் கைக் கொண்டு
தொண்டு எண் திசையும் தொழ நின்ற கன்னியே.
உரை  
14கன்னி ஒளி என நின்ற இச் சந்திரன்
மன்னி இருக்கின்ற மாளிகை செந்நிறம்
சென்னி இருப்பிடம் சேர் பதினாறு உடன்
பன்னி இருப்பப் பராசத்தி ஆமே.
உரை  
15பரா சத்தி என்று என்று பல் வகையாலும்
தரா சத்தி ஆன தலைப் பிரமாணி
இராசத்தி யாமள ஆகமத்தாள் ஆகும்
குராசத்தி கோலம் பல உணர்ந்தேனே.
உரை  
16உணர்ந்து உலகு ஏழையும் யோகினி சத்தி
உணர்ந்து உயிராய் நிற்கும் உன்னதன் ஈசன்
புணர்ந்து ஒரு காலத்துப் போகம் அதுஆதி
இணைந்து பரம் என்று இசைந்து இது தானே.
உரை  
17இது அப் பெருந்தகை எம்பெருமானும்
பொது அக் கல்வியும் போகமும் ஆகி
மதுவக் குழலி மனோன்மணி மங்கை
அது அக் கல்வியுள் ஆயுழி யோகமே.
உரை  
18யோக நல் சத்தி ஒளி பீடம் தான் ஆகும்
யோக நல் சத்தி ஒளி முகம் தெற்கு ஆகும்
யோக நல் சத்தி உதர நடு ஆகும்
யோக நல் சத்தி தாள் உத்தரம் தேரே.
உரை  
19தேர்ந்து எழு மேல் ஆம் சிவன் அங்கியோடு உற
வார்ந்து எழு மாயையும் மந்தம் அதாய் நிற்கும்
ஓர்ந்து எழு விந்துவும் நாதமும் ஓங்கிடக்
கூர்ந்து எழு கின்றனள் கோல்வளைதானே.
உரை  
20தான் ஆன ஆறு எட்டு அது ஆம் பரைக்கு உள்மிசை
தான் ஆன ஆறும் ஈர் ஏழும் சமகலை
தான் ஆன விந்து சகமே பரம் எனும்
தான் ஆம் பரவாதனை எனத் தக்கதே.
உரை  
21தக்க பராவித்தை தான் இருபான் ஏழில்
தக்கு எழு ஓரும் திரம் சொல்லச் சொல்லவே
மிக்கிடும் எண் சத்தி வெண் நிற முக் கண்ணி
தொக்க கதையோடு தொல் முத்திரை யாளே.
உரை  
22முத்திரை மூன்றின் முடிந்த மெய்ஞ் ஞானத்தாள்
தத்துவமாய் அல்ல வாய சகலத்தாள்
வைத்த பராபரனாய பராபரை
சத்தியும் ஆனந்த சத்தியும் கொங்கே.
உரை  
23கொங்கு ஈன்ற கொம்பின் குரும்பைக் குலாம் கன்னி
பொங்கிய குங்குமத்து ஒளி பொருந்தினள்
அங்குச பாசம் எனும் அகிலம் கனி
தங்கும் அவள் மனை தான் அறிவாயே.
உரை  
24வாயும் மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிது உடைப் பெண் பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரசனுக்குத்
தாயும் மகளும் தாரமும் ஆமே.
உரை  
25தாரமும் ஆகுவள் தத்துவமாய் நிற்பள்
காரண காரியம் ஆகும் கலப்பினள்
பூரண விந்து பொதிந்த புராதனி
பார் அளவாம் திசை பத்து உடையாளே.
உரை  
26பத்து முகம் உடையாள் நம் பராசத்தி
வைத்தனள் ஆறு அங்க நாலுடன் தான் வேதம்
ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே
நித்தமாய் நின்றாள் எம் நேர் இழை கூறே.
உரை  
27கூறிய கன்னி குலாய புருவத்தள்
சீறியள் ஆய் உலகு ஏழும் திகழ்ந்தவள்
ஆரிய நங்கை அமுத பயோதரி
பேர் உயிர் ஆளி பிறிவு அறுத்தாளே.
உரை  
28பிறிவு இன்றி நின்ற பெருந்தகைப் பேதை
குறி ஒன்றி நின்றிடும் கோமளக் கொம்பு
பொறி ஒன்றி நின்று புணர்ச்சி செய்து ஆங்கே
அறிவு ஒன்ற நின்றனள் ஆர் உயிர் உள்ளே.
உரை  
29உள்ளத்தின் உள்ளே உடன் இருந்தவர் ஐவர் தம்
கள்ளத்தை நீக்கிக் கலந்து உடனே புல்கிக்
கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து
வள்ளல் தலைவி மருட்டிப் புரிந்தே.
உரை  
30புரிந்து அருள் செய்கின்ற போகமா சத்தி
இருந்து அருள் செய்கின்ற இன்பம் அறியார்
பொருந்தி இருந்த புதல்வி பூ வண்ணத்து
இருந்த இலக்கில் இனிது இருந்தாளே.
உரை  
31இருந்தனள் ஏந்திழை என் உளம் மேவித்
திருந்து புணர்ச்சியில் தேர்ந்து உணர்ந்து உன்னி
நிரந்தரம் ஆகிய நிரதி சய மொடு
பொருந்த இலக்கில் புணர்ச்சி அதுவே.
உரை  
32அது இது என்னும் அவாவினை நீக்கித்
துதி அது செய்து சுழி உற நோக்கில்
விதி அது தன்னையும் வென்றிடல் ஆகும்
மதிமலராள் சொன்ன மண்டலம் மூன்றே.
உரை  
33மூன்று மண்டலம் மோகினி சேர்விடம்
என்று உள ஈராறு எழுகலை உச்சியில்
தோன்றும் இலக்குற ஆகுதல் மாமாயை
ஏன்றனள் ஏழ் இரண்டு இந்துவொடு ஈறே.
உரை  
34இந்துவினின்று எழு நாதம் இரவி போல்
வந்து பின் நாக்கின் மதித்து எழும் கண்டத்தில்
உந்திய சோதி இதயத்து எழும் ஒலி
இந்துவின் மேல் உற்ற ஈறு அது தானே.
உரை  
35ஈறு அது தான் முதல் எண் இரண்டு ஆயிரம்
மாறுதல் இன்றி மனோ வசமாய் எழில்
தூறு அது செய்யும் சுகந்தச் சுழி அது
பேறு அது செய்து பிறந்து இருந்தாளே.
உரை  
36இருந்தனள் ஏந்திழை ஈறு அது இலாகத்
திருந்திய ஆனந்தம் செல் நெறி நண்ணிப்
பொருந்து புவனங்கள் போற்றி செய்து ஏத்தி
வருந்த இருந்தனள் மங்கை நல்லாளே.
உரை  
37மங்கையும் மாரனும் தம்மொடு கூடி நின்று
அங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர்
கொங்கை நல்லாளும் குமாரர்கள் ஐவரும்
தங்களின் மேவிச் சடங்கு செய்தாரே.
உரை  
38சடங்கு அது செய்து தவம் புரிவார்கள்
கடந்தனின் உள்ளே கருதுவர் ஆகில்
தொடர்ந்து எழு சோதி துளை வழி ஏறி
அடங்கிடும் அன்பினது ஆயிழை பாலே.
உரை  
39பாலித்து இருக்கும் பனிமலர் ஆறினும்
ஆலித்து இருக்கும் அவற்றின் அகம் படி
சீலத்தை நீக்கத் திகழ்ந்து எழு மந்திரம்
மூலத்து மேல் அது முத்து அது ஆமே.
உரை  
40முத்து வதனத்தி முகம் தொறும் முக் கண்ணி
சத்தி சதிரி சகளி சடாதரி
பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி
வித்தகி என் உள்ளம் மேவி நின்றாளே.
உரை  
41மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ் எரி
தாவிய நல் பதத் தண் மதியம் கதிர்
மூவரும் கூடி முதல்வியாய் முன்நிற்பார்
ஓவினும் மேலிடும் உள் ஒளி ஆமே.
உரை  
42உள் ஒளி மூ இரண்டு ஓங்கிய அங்கங்கள்
வெள் ஒளி அங்கியின் மேவி அவரொடும்
கள் அவிழ் கோதைக் கலந்து உடனே நிற்கும்
கொள்ள விசுத்திக் கொடி அமுதம் ஆமே.
உரை  
43கொடிய திரேகை குருஉள் இருப்பப்
படி அதுவார் உனைப் பைங் கழல் ஈசன்
வடிவு அது ஆனந்தம் வந்து முறையே
இடு முதல் ஆறு அங்கம் ஏந்திழையாளே.
உரை  
44ஏந்திழை யாளும் இறைவர்கள் மூவரும்
காந்தாரம் ஆறும் கலை முதல் ஈர் எட்டும்
ஆந்தக் குளத்தியும் மந்திரர் ஆயவும்
சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே.
உரை  
45சத்தி என்பாள் ஒரு சாதகப் பெண் பிள்ளை
முத்திக்கு நாயகி என்பது அறிகிலர்
பத்தியைப் பாழில் உகுத்த அப்பாவிகள்
கத்திய நாய் போல் கதறு கின்றாரே.
உரை  
46ஆரே திருவின் திருவடி காண்பார்கள்
நேரே நின்று ஓதி நினையவும் வல்லார்க்குக்
கார் ஏர் குழலி கமல மலர் அன்ன
சீர் ஏயும் சேவடி சிந்தை வைத்தாளே.
உரை  
47சிந்தையில் வைத்துச் சிராதியிலே வைத்து
முந்தையில் வைத்துத் தம் மூலத்திலே வைத்து
நிந்தையில் வையா நினைவு அதிலே வைத்துச்
சந்தையில் வைத்துச் சமாதி செய்வீரே.
உரை  
48சமாதி செய்வார் கட்குத் தான் முதல் ஆகிச்
சிவாதி இலாரும் சிலை நுதலாளை
நவாதியில் ஆக நயந்து அது ஓதில்
உவாதி அவளுக்குறைவில தாமே.
உரை  
49உறைபதி தோறும் முறைமுறை மேவி
நறைகமழ் கோதையை நாள்தொரு நண்ணி
மறையுடனே நிற்கும் மற்றுள்ள நான்கும்
இறை தினைப் போதினில் எய்திடல் ஆமே.
உரை  
50எய்திடல் ஆகும் இருவினையின் பயன்
கொய் தளிர் மேனிக் குமரி குலாம் கன்னி
மை தவழ் கண்ணி நல் மாதுரி கையொடு
கை தவம் இன்றிக் கருத்து உறும் வாறே.
உரை  
51கருத்து உறும் காலம் கருதும் மனமும்
திருத்தி இருந்தவை சேரும் நிலத்து
ஒருத்தியை உன்னி உணர்ந்திடும் மண்மேல்
இருத்திடும் எண் குணம் எய்தலும் ஆகுமே.
உரை  
52ஆமை ஒன்று ஏறி அகம்படியான் என
ஓம என்று ஓதி எம் உள் ஒளியாய் நிற்கும்
தாம நறும் குழல் தையலைக் கண்ட பின்
சோம நறு மலர் சூடி நின்றாளே.
உரை  
53சூடிடும் அங்குச பாசத் துளை வழி
கூடும் இருவளைக் கோலக்கை குண்டிகை
நாடும் இருபத நல் நெடு ருத்திரம்
ஆடிடும் சீர்புனை ஆடகம் ஆமே.
உரை  
54ஆம் அயன் மலரான் ஈசன் சதா சிவன்
தாம் அடி சூடி நின்று எய்தினர் தம் பதம்
காமனும் சாமன் இரவி கனல் உடன்
சோமனும் வந்து அடி சூட நின்றாளே.
உரை  
55சூடும் இளம் பிறை சூலி கபாலினி
நீடும் இளம் கொடி நின் மலி நேர் இழை
நாடி நடு இடை ஞானம் உருவ நின்று
ஆடும் அதன் வழி அண்ட முதல்வியே.
உரை  
56அண்டம் முதலாய் அவனி பரியந்தம்
கண்டது ஒன்று இல்லை கனம் குழை அல்லது
கண்டனும் கண்டியும் ஆகிய காரணம்
குண்டிகை கோளிகை கண்ட அதனாலே.
உரை  
57ஆலம் உண்டான் அமுது ஆங்கு அவர் தம் பதம்
சால வந்து எய்தும் தவத்து இன்பம் தான் வரும்
கோலி வந்து எய்தும் குவிந்த பதவை யோடு
ஏல வந்து ஈண்டி இருந்தனள் மேலே.
உரை  
58மேல் ஆம் அரும்தவம் மேல் மேலும் வந்து எய்தக்
காலால் வருந்திக் கழிவர் கணத்து இடை
நாலா நளின நின்று ஏத்தி நட்டு உச்சி தன்
மேல் ஆம் எழுத்தினள் ஆம் மத்தினாளே.
உரை  
59ஆமத்து இனிது இருந்தன்ன மயத்தினள்
ஓமத்திலேயும் ஒருத்தி பொருந்தினள்
நாம நமசிவ என்று இருப்பார்க்கு
நேமத் துணைவி நிலாவி நின்றாளே.
உரை  
60நிலா மயம் ஆகிய நீள் படிகத்தின்
சிலா மயம் ஆகும் செழும் தரளத்தின்
சுலா மயம் ஆகும் சுரிகுழல் கோதை
கலா மயம் ஆகக் கலந்து நின்றாளே.
உரை  
61கலந்து நின்றாள் கன்னி காதலனோடும்
கலந்து நின்றாள் உயிர் கற்பனை எல்லாம்
கலந்து நின்றாள் கலை ஞானங்கள் எல்லாம்
கலந்து நின்றாள் கன்னி காலமும் ஆயே.
உரை  
62காலவி எங்கும் கருத்தும் அருத்தியும்
கூலவி ஒன்று ஆகும் கூட இழைத்தனள்
மாலினி மாகுலி மந்திர சண்டிகை
பாலினி பாலவன் பாகம் அது ஆமே.
உரை  
63பாகம் பரா சத்தி பைம் பொன் சடை முடி
ஏகம் இருதயம் ஈர் ஐந்து திண்புய
மோக முகம் ஐந்து முக் கண் முகம் தொறும்
நாகம் உரித்து நடம் செய்யும் நாதர்க்கே.
உரை  
64நாதனும் நால் ஒன்பதின்மரும் கூடி நின்று
ஓதிடும் கூட்டங்கள் ஓர் ஐந்து உள அவை
வேதனும் ஈர் ஒன்பதின்மரும் மேவி நின்று
ஆதியும் அந்தமும் ஆகி நின்றாளே.
உரை  
65ஆகின்ற நாள்கலை ஐம்பத்து ஒருவர்கள்
ஆகி நின்றார்களில் ஆருயிராம் அவள்
ஆகி நின்றாள் உடன் ஆகிய சக்கரத்து
ஆகி நின்றான் அவன் ஆயிழை பாடே.
உரை  
66ஆய் இழையாள் ஒடும் ஆதிப் பரம் இடம்
ஆயதொர் அண்டவை ஆறும் இரண்டு உள
ஆய மனம் தொறும் அறுமுகம் அவை தனில்
ஏய வார் குழலி இனிது நின்றாளே.
உரை  
67நின்றனள் நேர் இழையோடு உடன் நேர்பட
இன்று என் அகம் படி ஏழும் உயிர்ப்பு எய்தும்
துன்றிய ஓர் ஒன்பதின்மரும் சூழல் உள்
ஒன்று உயர் ஓதி உணர்ந்து நின்றாளே.
உரை  
68உணர்ந்து எழு மந்திரம் ஓம் எனும் உள்ளே
மணந்து எழும் ஆம் கதி ஆகியது ஆகும்
குணர்ந்து எழு சூதனும் சூதியும் கூடிக்
கணந்து எழும் காணும் அக் காமுகை ஆமே.
உரை  
69ஆம் அது அங்கியும் ஆதியும் ஈசனும்
மா மது மண்டலம் மாருதம் ஆதியும்
ஏமது சீவன் சிகை அங்கு இருண்டிடக்
கோமலர் கோதையும் கோதண்டம் ஆகுமே.
உரை  
70ஆகிய கோதண்டத்து ஆகும் மனோன்மணி
ஆகிய ஐம்பது உடனே அடங்கிடும்
ஆகும் பரா பரையோடு அப்பரையவள்
ஆகும் அவள் ஐங் கருமத்தள் தானே.
உரை  
71தான் இகழ் மோகினி சார்வான யோகினி
போன மயம் உடையார் அடி போற்றுவர்
ஆனவர் ஆவியின் ஆகிய வச்சி வந்து
ஆனாம் பரசிவம் மேலது தானே.
உரை  
72தான் அந்தம் மேலே தரும் சிகை தன்னுடன்
ஆனந்த மோகினி ஆம் பொன் திருவொடு
மோனையில் வைத்து மொழி தரு கூறது
ஆனவை ஓம் எனும் அவ் உயிர் மார்க்கமே.
உரை  
73மார்க்கங்கள் ஈன்ற மனோன் மணி மங்கலி
யார்க்கும் அறிய அரியவள் ஆகும்
வாக்கும் மனமும் மருவி ஒன்றாய் விட்ட
நோக்கும் பெருமைக்கு நுண் அறிவு ஆமே.
உரை  
74நுண் அறிவு ஆகும் நுழை புலன் மாந்தர்க்குப்
பின் அறிவு ஆகும் பிரான் அறி அத்தடம்
செந் நெறி ஆகும் சிவ கதி சேர்வார்க்குத்
தன் நெறி ஆவது சன்மார்க்கம் ஆமே.
உரை  
75சன்மார்க்கம் ஆகச் சமைதரு மார்க்கமும்
துன்மார்க்கம் ஆனவை எல்லாம் துரந்திடும்
நன்மார்க்கத் தேவரும் நல்நெறி ஆவதும்
சன்மார்க்கத் தேவியும் சத்தி என்பாளே.
உரை  
76சத்தியும் நானும் சயம்புவும் அல்லது
முத்தியை யாரும் முதல் அறிவார் இல்லை
அத்தி மேல் வித்து இடில் அத்தி பழுத்தக்கால்
மத்தில் ஏற வழி அதுவாமே.
உரை  
77அது இது என்ற அவமே கழியாதே
மது விரி பூங் குழல் மங்கை நல்லாளைப்
பதி மது மேவிப் பணிய வல்லார்க்கு
விதி வழி தன்னையும் வென்றிடல் ஆமே.
உரை  
78வென்றிடல் ஆகும் விதி வழி தன்னையும்
வென்றிடல் ஆகும் வினைப் பெரும் பாசத்தை
வென்றிடல் ஆகும் விழை புலன் தன்னையும்
வென்றிடு மங்கை தன் மெய் உணர்வோர்க்கே.
உரை  
79ஓர் ஐம் பதின்மருள் ஒன்றியே நின்றது
பாரம் பரியத்து வந்த பரம் இது
மாரம் குழலாளும் அப்பதி தானும் முன்
சாரும் பதம் இது சத்தியம் ஆமே.
உரை  
80சத்தியி னோடு சயம்புவும் நேர் படில்
வித்து அது இன்றியே எல்லாம் விளைந்தன
அத்தகை ஆகிய ஐம்பத்தொருவரும்
சித்தது மேவித் திருந்திடுவாரே.
உரை  
81திருந்து சிவனும் சிலைநுதலாளும்
பொருந்திய வானவர் போற்றி செய்து ஏத்த
அருந்திட அவ்விடம் ஆரமுதாக
இருந்தனள் தான் அங்கு இளம் பிறை என்றே.
உரை  
82என்றும் எழுகின்ற வேரினை எய்தினார்
அன்று அது ஆகுவர் தார் குழலாளொடு
மன் தரு கங்கை மதியொடு மாதவர்
துன்றிய தாரகை சோதி நின்றாளே.
உரை  
83நின்றனள் நேர் இழையா ளொடு நேர்பட
ஒன்றிய உள் ஒளியாலே உணர்ந்தது
சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய
துன்றிடு ஞானங்கள் தோன்றிடும் தானே.
உரை  
84தோன்றிடும் வேண்டு உரு ஆகிய தூய் நெறி
ஈன்றிடும் ஆங்கு அவள் எய்திய பல்கலை
மான் தரு கண்ணியும் மாரனும் வந்து எதிர்
சான்று அது ஆகுவர் தாம் அவள் ஆயுமே.
உரை  
85ஆயும் அறிவும் கடந்து அணு வாரணி
மாயம் அது ஆகி மதோ மதி ஆயிடும்
சேய அரிவை சிவ ஆனந்த சுந்தரி
நேயம் அதா நெறி ஆகி நின்றாளே.
உரை  
86நெறி அதுவாய் நின்ற நேர் இழை யாளைப்
பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடும்
குறியது கூடிக் குறிக் கொண்டு நோக்கும்
அறிவொடும் ஆங்கே அடங்கிடல் ஆமே.
உரை  
87ஆம் அயன் மால் அரன் ஈசன் மால் ஆம் கதி
ஓம் மயம் ஆகிய ஒன்பதும் ஒன்றிடத்
தேம் மயம் ஆளும் தெனாது என என்றிடும்,
மா மயம் ஆனது வந்து எய்தலாமே.
உரை  
88வந்து அடி போற்றுவர் வானவர் தானவர்
இந்து முதல் ஆக எண் திசையோர் களும்
கொந்து அணியும் குழலாள் ஒடு கோனையும்
வந்தனை செய்யும் வழி நவில் வீரே.
உரை  
89நவிற்று நல் மந்திரம் நல் மலர் தூபம்
கவற்றிய கந்தம் கவர்ந்து எரிதீபம்
பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை
அவிக் கொண்ட சோதிக்கு ஓர் அர்ச்சனைதானே.
உரை  
90தாங்கி உலகில் தரித்த பராபரன்
ஓங்கிய காலத்து ஒருவன் உலப்பு இலி
பூங்கிளி தங்கும் புரிகுழலாள் அன்று
பாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே.
உரை  
91பொன் கொடி மாதர் புனை கழல் ஏத்துவர்
அற் கொடி மாது உமையார் அத் தலைமகள்
நல் கொடி மாதை நயனங்கள் மூன்று உடை
வில் கொடி மாதை விரும்பி விளங்கே.
உரை  
92விளங்கு ஒளி ஆய விரிசுடர் மாலை
துளங்கு பரா சத்தி தூங்கு இருள் நீங்கக்
களம் கொள் மணியுடன் காம வினோதம்
உளம் கொள் இலம்பியம் ஒன்று தொடரே.
உரை  
93தொடங்கி உலகினில் சோதி மணாளன்
அடங்கி இருப்பது என் அன்பின் பெருமை
விடம் கொள் பெரும் சடை மேல் வரு கங்கை
ஒடுங்கி உமை யொடும் ஓர் உரு ஆமே.
உரை  
94உருவம் பல உயிராய் வல்ல நந்தி
தெருவம் புகுந்தமை தேர் உற நாடில்
புரிவளைக் கைச்சி எம் பொன் அணி மாதை
மருவி இறைவன் மகிழ்வன மாயமே.
உரை  
95மாயம் புணர்க்கும் வளர் சடையான் அடித்
தாயம் புணர்க்கும் சல நதி அமலனைக்
காயம் புணர்க்கும் கலவியுள் மா சத்தி
ஆயம் புணர்க்கும் அவ் யோனியும் ஆமே.
உரை  
96உணர்ந்து ஒழிந்தேன் அவன் ஆம் எங்கள் ஈசனை
புணர்ந்து ஒழிந்தேன் புவனா பதியாரை
அணைந்து ஒழிந்தேன் எங்கள் ஆதிதன் பாதம்
பிணைந்து ஒழிந்தேன் தன் அருள் பெற்றவாறே.
உரை  
97பெற்றான் பெருமை பெரிய மனோன்மணி
நற்றாள் இறைவனே நன்பயனே என்பர்
கற்றான் அறியும் கருத்து அறிவார் கட்குப்
பொன்தான் உலகம் புகல் தனியாமே.
உரை  
98தனி நாயகன் தனோடு என் நெஞ்சம் நாடி
இனியார் இருப்பிடம் ஏழ் உலகு என்பர்
பனியான் மலர்ந்த பைம் போதுகை ஏந்தி
கனியாய் நினைவது என் காரணம் அம்மையே.
உரை  
99அம்மனை அம்மை அரிவை மனோன்மணி
செம்மனை செய்து திருமங்கையாய் நிற்கும்
இம்மனை செய்த இந் நில மங்கையும்
அம்மனை ஆகி அமர்ந்து நின்றாளே.
உரை  
100அம்மையும் அத்தனும் அன்பு உற்றது அல்லது
அம்மையும் அத்தனும் ஆர் அறிவார் என்னை
அம்மே யோடு அத்தனும் யானும் உடன் இருந்து
அம்மை யொடு அத்தனை யான் புரிந்தேனே.
உரை  

9. ஏரொளிச் சக்கரம்

1ஏர் ஒளி உள் எழு தாமரை நால் இதழ்
ஏர் ஒளி விந்துவினால் எழு நாதம் ஆம்
ஏர் ஒளி அக்கலை எங்கும் நிறைந்தபின்
ஏர் ஒளிச் சக்கரம் அந் நடு வன்னியே.
உரை  
2வன்னி எழுத்து அவை மாபலம் உள்ளன
வன்னி எழுத்து அவை வான் உற ஓங்கின
வன்னி எழுத்து அவை மா பெரும் சக்கரம்
வன்னி எழுத்து இடுவார் அது சொல்லுமே.
உரை  
3சொல்லிய விந்துவும் ஈர் ஆறு நாதம் ஆம்
சொல்லிடும் அப்பதி அவ் எழுத்து ஆவன
சொல் இடு நூறு ஒடு நால் பத்து நால் உரு
சொல் இடும் சக்கரம் ஆய் வரும் மேல் அதே.
உரை  
4மேல் வரும் விந்துவும் அவ் எழுத்தாய் விடும்
மேல் வரும் நாதமும் ஓங்கும் எழுத்து உடன்
மேல் வரும் அப்பதி அவ் எழுத்தே வரின்
மேல் வரும் சக்கரமாய் வரும் ஞாலமே.
உரை  
5ஞாலம் அது ஆக விரிந்தது சக்கரம்
ஞாலம் அது ஆயிடும் விந்துவும் நாதமும்
ஞாலம் அது ஆயிடும் அப்பதி யோசனை
ஞாலம் அது ஆக விரிந்தது எழுத்தே.
உரை  
6விரிந்த எழுத்து அது விந்துவும் நாதமும்
விரிந்த எழுத்து அது சக்கரம் ஆக
விரிந்த எழுத்து அது மேல் வரும் பூமி
விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே.
உரை  
7அப்பு அது ஆக விரிந்தது சக்கரம்
அப்பினில் அப்புறம் அவ் அனல் ஆயிடும்
அப்பினில் அப்புறம் மாருதமாய் எழ
அப்பினில் அப்புறம் ஆகாசம் ஆமே.
உரை  
8ஆகாச அக்கரம் ஆவது சொல்லிடில்
ஆகாச அக்கரத்து உள்ளே எழுத்து அவை
ஆகாச அவ் எழுத்து ஆகிச் சிவானந்தம்
ஆகாச அக்கரம் ஆவது அறிமினே.
உரை  
9அறிந்திடும் சக்கரம் ஐ ஐந்து விந்து
அறிந்திடும் சக்கரம் நாத முதலா
அறிந்திடும் அவ் எழுத்து அப்பதி யோர்க்கும்
அறிந்திடும் அப் பகலோன் இல்லை ஆமே.
உரை  
10அம் முதல் ஆறும் அவ் ஆதி எழுத்து ஆகும்
அம் முதல் ஆறும் அவ் அம்மை எழுத்து ஆகும்
இம் முதல் நாலும் இருந்திடும் வன்னியே
இம் முதல் ஆகும் எழுத்து அவை எல்லாம்.
உரை  
11எழுத்து அவை நூறொடு நாற்பத்து நாலும்
எழுத்து அவை ஆறு அது அந் நடு வன்னி
எழுத்து அவை அந் நடு அச் சுடர் ஆகி
எழுத்து அவைதான் முதல் அந்தமும் ஆமே.
உரை  
12அந்தமும் ஈறு முதலா நவைஅற
அந்தமும் அப் பதினெட்டுடன் ஆதலால்
அந்தமும் அப் பதின்மூன்றில் அமர்ந்தபின்
அந்தமும் இந்துகை ஆருடம் ஆனதே.
உரை  
13ஆவினம் ஆனவை முந்நூற்று அறுபது
ஆவினம் அப் பதினைந்து இனம் ஆய் உறு
ஆவினம் அப் பதினெட்டுடன் ஆய் உறு
அவினம் அக் கதிரோன் வர வந்தே.
உரை  
14வந்திடும் ஆகாசம் ஆறு அது நாழிகை
வந்திடும் அக்கரம் முப்பது ராசியும்
வந்திடும் நாள் அது முந்நூற்று அறுபதும்
வந்திடும் ஆண்டு வகுத்து அவ்வியே.
உரை  
15அவ் வினம் மூன்றும் அவ் ஆடு அது வாய் வரும்
எவ்வினம் மூன்றும் கிளர் தரு வேர் அதாம்
சவ் வினம் மூன்றும் தழைத்திடும் தண்டு அதாம்
இவ் வினம் மூன்றும் இராசிகள் எல்லாம்.
உரை  
16இராசியுள் சக்கரம் எங்கும் நிறைந்த பின்
இராசியுள் சக்கரம் என்று அறி விந்து ஆம்
இராசியுள் சக்கரம் நாதமும் ஒத்தபின்
இராசியுள் சக்கரம் நின்றிடும் ஆறே.
உரை  
17நின்றிடு விந்து என்று உள்ள எழுத்து எல்லாம்
நின்றிடு நாதமும் ஓங்கும் எழுத்துடன்
நின்றிடும் அப்பதி அவ் எழுத்தே வரில்
நின்றிடும் அப்புறம் தாரகை ஆனதே.
உரை  
18தாரகை ஆகச் சமைந்தது சக்கரம்
தாரகை மேல் ஓர் தழைத்தது பேர் ஒளி
தாரகை சந்திரன் நல் பகலோன் வரத்
தாரகை தாரகை தாரகை கண்டதே.
உரை  
19கண்டிடும் சக்கரம் விந்து வளர்வது ஆங்கு
கண்டிடும் நாதமும் தன் மேல் எழுந்திடக்
கண்டிடும் வன்னிக் கொழுந்து அன ஒத்தபின்
கண்டிடும் அப்புறம் கார் ஒளி ஆனதே.
உரை  
20கார் ஒளி அண்டம் பொதிந்து உலகு எங்கும்
பார் ஒளி நீர் ஒளி சார் ஒளி கால் ஒளி
வான் ஒளி ஒக்க வளர்ந்து கிடந்த பின்
நேர் ஒளி ஒன்றாய் நிறைந்து அங்கு நின்றதே.
உரை  
21நின்றது அண்டமும் நீளும் புவி எலாம்
நின்ற இவ் அண்டம் நிலைபெறக் கண்டிட
நின்ற இவ் அண்டமும் மூல மலம் ஒக்கும்
நின்ற இவ் அண்டம் பலமது விந்துவே.
உரை  
22விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில்
விந்துவும் நாதமும் ஒக்க விரை அதாம்
விந்தில் குறைந்திடு நாதம் எழுந்திடில்
விந்துவை எண் மடி கொண்டது வீசமே.
உரை  
23வீசம் இரண்டு உள நாதத்து எழுவன
வீசமும் ஒன்று விரைந்திடும் மேல் உற
வீசமும் நாதமும் எழுந்து உடன் ஒத்தபின்
வீசமும் விந்து விரிந்தது காணுமே.
உரை  
24விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்
விரிந்தது விந்துவும் நாதத்து அளவினில்
விரிந்தது உள் கட்டம் எட்டு எட்டும் ஆகில்
விரிந்தது விந்து விரையது ஆமே.
உரை  
25விரையது விந்து விளைந்தன எல்லாம்
விரையது விந்து விளைந்த உயிரும்
விரையது விந்து விளைந்த இஞ் ஞாலம்
விரையது விந்து விளைந்தவன் தாளே.
உரை  
26விளைந்த எழுத்து அது விந்துவும் நாதமும்
விளைந்த எழுத்து அது சக்கரம் ஆக
விளைந்த எழுத்து அவை மெய்யின் உள் நிற்கும்
விளைந்த எழுத்து அவை மந்திரம் ஆமே.
உரை  
27மந்திரம் சக்கரம் ஆனவை சொல்லிடில்
தந்திரத்து உள் எழுத்து ஒன்று எரி வட்டம் ஆம்
கந்தரத்து உள்ளும் இரேகையில் ஒன்று இல்லை
பந்தம் அது ஆகும் பிரணவம் உன்னிடே.
உரை  
28உன்னிட்ட வட்டத்தில் ஒத்துஎழு மந்திரம்
பின்னிட்ட ரேகை பிழைப்பது தான் இல்லை
தன்னிட்டு எழுந்த தகைப்பு அறப் பின் நிற்கப்
பன்னிட்ட மந்திரம் பார்க்கலும் ஆமே.
உரை  
29பார்க்கலும் ஆகும் பகை அறு சக்கரம்
காக்கலும் ஆகும் கருத்தில் தடம் எங்கும்
நோக்கலும் ஆகும் நுணுக்கு அற்றநுண் பொருள்
ஆக்கலும் ஆகும் அறிந்து கொள்வார்க்கே.
உரை  
30அறிந்திடும் சக்கரம் ஆதி எழுத்து
விரிந்திடும் சக்கரம் மேல் எழுத்து அம்மை
பரிந்திடும் சக்கரம் பாரங்கி நாலும்
குவிந்திடும் சக்கரம் கூறலும் ஆமே.
உரை  
31கூறிய சக்கரத்து உள் எழு மந்திரம்
மாறு இயல்பு ஆக அமைந்து விரிந்திடும்
தேறிய அஞ்சுடன் சேர்ந்து எழு மாரணம்
மாறு இயல்பாக மதித்துக் கொள்வார்க்கே.
உரை  
32மதித்திடும் அம்மையும் மா மாதும் ஆகும்
மதித்திடும் அம்மையும் அம் கனல் ஒக்கும்
மதித்து அங்கு எழுந்தவை காரணம் ஆகில்
கொதித்து அங்கு எழுந்தவை கூட கிலாவே.
உரை  
33கூடிய தம்பனம் மாரணம் வசியம்
ஆடு இயல்பாக அமைந்து செறிந்திடும்
பாடி உள் ஆகப் பகைவரும் வந்து உறார்
தேடி உள் ஆகத் தெளிந்து கொள்வார்க்கே.
உரை  
34தெளிந்திடும் சக்கர மூலத்தின் உள்ளே
அளிந்த அகாரத்தை அந் நடு ஆக்கிக்
குளிர்ந்த வரனைக் கூடி உள் வைத்து
வளிந்து அவை அங்கு எழு நாடிய காலே.
உரை  
35கால் அரை முக்கால் முழுது எனும் மந்திரம்
ஆலித்து எழுந்து அமைந்து ஊறி எழுந்து அதாய்
பாலித்து எழுந்து பகை அற நின்றபின்
மால் உற்ற மந்திரம் மாறிக் கொள்வார்க்கே.
உரை  
36கொண்ட இம் மந்திரம் கூத்தன் எழுத்து அதாய்ப்
பண்டை உள் நாவில் பகை அற விண்ட பின்
மன்றுள் நிறைந்த மணி விளக்கு ஆயிடும்
இன்றும் இதயத்து எழுந்து நம எனே.
உரை  

10. வயிரவச் சக்கரம்

1அறிந்த பிரதமை யோடு ஆறும் அறிஞ்சு
அறிந்த அச்சத்தம் இம் மேல் இவை குற்றம்
அறிந்தவை ஒன்று விட்டு ஒன்று பத்து ஆக
அறிந்து வலம் அது ஆக நடவே.
உரை  
2நடந்து வயிரவன் சூல கபாலி
கடந்த பகைவனைக் கண் அது போக்கித்
தொடர்ந்த உயிர் அது உண்ணும் பொழுது
படர்ந்த உடல் கொடு பந்து ஆடல் ஆமே.
உரை  
3ஆமே அப் பூண்ட அருள் ஆதி வயிரவன்
ஆமே கபாலமும் சூலமும் கைக் கொண்டு அங்கு
ஆமே தமருக பாசமும் கை அது
ஆமே சிரத்தொடு வாள் அது கையே.
உரை  
4கை அவை ஆறும் கருத்து உற நோக்கிடும்
மெய் அது செம்மை விளங்கு வயிரவன்
துய்யர் உளத்தில் துளங்கு மெய் உற்றது ஆய்ப்
பொய் வகை விட்டு நீ பூசனை செய்யே.
உரை  
5பூசனை செய்யப் பொருந்தி ஓர் ஆயிரம்
பூசனை செய்ய மது உடன் ஆடும் ஆல்
பூசனை சாந்து சவாது புழுகு நெய்
பூசனை செய்து நீர் பூசலை வேண்டுமே.
உரை  
6வேண்டிய வாறு கலகமும் ஆயிடும்
வேண்டிய ஆறின் நுண் மெய்யது பெற்றபின்
வேண்டியவாறு வரும் வழி நீ நட
வேண்டிய வாறு அது ஆகும் கருத்தே.
உரை  

11. சாம்பவி மண்டலச் சக்கரம்

1சாம்பவி மண்டலச் சக்கரம் சொல்லிடில்
ஆம்பதம் எட்டாக இட்டிடின் மேல் அதாம்
காண்பதம் தத்துவம் நாலுள் நயனமும்
நாம் பதம் கண்டபின் நாடறிந்தோமே.
உரை  
2நாடு அறி மண்டலம் நல்ல இக் குண்டத்துக்
கேடு அற வீதியும் கொடர்ந்து உள் இரண்டழி
பாடு அறி பத்துடன் ஆறு நடு வீதி
ஏடு அற நாலு ஐந்து இட வகை ஆமே.
உரை  
3நாலு ஐந்து இடவகை உள்ளது ஓர் மண்டலம்
நாலு நல் வீதியுள் நல்ல இலிங்கம் ஆய்
நாலு நல் கோணமும் நல் நால் இலிங்கம் ஆய்
நாலு நல் பூ நடு நண்ணல் அவ்வாறே.
உரை  
4ஆறு இருபத்து நால் அஞ்சு எழுத்து அஞ்சையும்
வேறு உரு ஆக விளைந்து கிடந்தது
தேறி நிருமல சிவாய நம என்று
கூறு மின் கூறில் குறைகளும் இல்லையே.
உரை  
5குறைவதும் இல்லை குரை கழல் கூடும்
அறைவதும் ஆரணம் அவ் எழுத்து ஆகித்
திறம் அது ஆகத் தெளிய வல்லார்க்கு
இறவு இல்லை என்று என்று இயம்பினர் காணே.
உரை  
6காணும் பொருளும் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்
ஊணும் உணர்வும் உறக்கமும் தான் ஆகக்
காணும் கனகமும் காரிகை ஆமே.
உரை  
7ஆமே எழுத்து அஞ்சு ஆம் வழியே ஆகப்
போமே அது தானும் போம் வழியே போனால்
நாமே நினைத்தன செய்யலும் ஆகும்
பார் மேல் ஒருவர் பகை இல்லை தானே.
உரை  
8பகை இல்லை என்றும் பணிந்தவர் தம்பால்
நகை இல்லை நாள் நாளும் நன்மைகள் ஆகும்
வினை இல்லை என்றும் விருத்தமும் இல்லை
தகை இல்லை தானும் சலம் அது ஆமே.
உரை  
9ஆரும் செய்யலாம் அஞ்சு எழுத்தாலே
யாரும் அறியாத ஆனந்த ரூபம் ஆம்
பாரும் விசும்பும் பகலும் அதி அதி
ஊனும் உயிரும் உணர்வு அது ஆமே.
உரை  

12. புவனாபதி சக்கரம்

1ககர் ஆதி ஓர் ஐந்தும் காணிய பொன்மை
அகர் ஆதி ஓர் அரத்தமே போலும்
சகர் ஆதி ஓர் நான்கும் தான் சுத்த வெண்மை
ககர் ஆதி மூவித்தை காமிய முத்தியே.
உரை  
2ஓரில் இதுவே உரையும் இத் தெய்வத்தைத்
தேரில் பிறிது இல்லை யான் ஒன்று செப்பக்கேள்
வாரில் திரிகோணம் மனம் இன்ப முத்தியும்
தேரில் அறியும் சிவ காயம் தானே.
உரை  
3ஏக பராசத்தி ஈசற்கு ஆம் அங்கமே
ஆகம் பரா வித்தை ஆம் முத்தி சித்தியே
ஏகம் பரா சத்தி ஆகச் சிவ குரு
யோகம் பரா சத்தி உண்மை எட்டு ஆமே.
உரை  
4எட்டு ஆகிய சத்தி எட்டு ஆகும் யோகத்துக்
கட்டு ஆகும் நாதாந்தத்து எட்டும் கலப்பித்த
தொட்டாத விந்துவும் தான் அற்று ஒழிந்தது
கிட்டாது ஒழிந்தது கீழ் ஆன மூடர்க்கே.
உரை  
5ஏதும் பலம் ஆம் இயந்திராசன் அடி
ஓதிக் குருவின் உபதேசம் கொண்டு
நீ தங்கும் அங்க நியாசம்தனைப் பண்ணிச்
சாதம் கெடச் செம்பில் சட்கோணம் தான் இடே.
உரை  
6சட் கோணம் தன்னில் ஸ்ரீம் ஹிரீம் தான் இட்டு
அக் கோணம் மாறின் தலையில் ரீங்காரம் இட்டு
எக்கோணமும் சூழ எழில் வட்டம் இட்டுப் பின்
மிக்கு ஈர் எட்டு அக்கரமம் முதன் மேல் இடே.
உரை  
7இட்ட இதழ்கள் இடை அந்தரத் திலே
அட்ட ஹவ் விட்டத்தின் மேலே உவ் இட்டுக்
கிட்ட இதழ்களின் மேலே கிரோம் சிரோம்
இட்டு வாமத்து ஆங்கு கிரோம் என்று மேவிடே.
உரை  
8மேவிய சக்கரம் மீது வலத்திலே
கோவை அடையவே குரோம் சிரோம் என்று இட்டுத்
தாவுஇல் ரீங்காரத்தால் சக்கரம் சூழ்ந்து
பூவைப் புவனா பதியைப் பின் பூசியே.
உரை  
9பூசிக்கும் போது புவனா பதி தன்னை
ஆசற்று அகத்தினில் ஆவா கனம் பண்ணிப்
பேசிய பிராணப் பிஅதிட்டை அது செய்து
தேசு உற்றிடவே தியானம் அது செய்யே.
உரை  
10செய்ய திருமேனி செம்பட்டு உடைத் தானும்
கையில் படை அங்குச பாசத்தோடு அபய
மெய்யில் அணிகலன் இரத்தின மா மேனி
துய்ய முடியும் அவ யவத்தில் தோற்றமே.
உரை  
11தோல் போர்வை நீக்கித் துதித்து அடைவில் பூசித்துப்
பால் போனகம் மந்திரத்தால் பயின்று ஏத்தி
நால் பால நாரதா யா சுவாகா என்று
சீர்ப் பாகச் சேடத்தை மாற்றிப் பின் சேவியே.
உரை  
12சேவிப்பதன் முன்னே தேவியையும் உத் வாகனத்தால்
பாவித்து இதய கமலம் பதிவித்து அங்கு
யாவருக்கும் எட்டா இயந்திர ராசனை
நீ வைத்துச் சேமி நினைந்தது தருமே.
உரை  

13. நவாக்கரி சக்கரம்

1நவாக்கரி சக்கரம் நான் செய்யின்
நவாக்கரி ஒன்று நவாக் கரி ஆக
நவாக்கரி எண்பத்து ஒரு வகை ஆக
நவாக்கரி அக்கிலி சௌ முதல் ஈறே.
உரை  
2சௌ முதல் அவ்வொடு ஹௌவுடனாம் கிரீம்
கௌவுள் உமையுளும் கலந்து இரீம் சிரீம் என்று
ஒவ்வில் எழும் கிலீ மந்திர பாதம் ஆச்
செவ்வுள் எழுந்து சிவாய நம என்னே.
உரை  
3நவாக்கரி ஆவது நான் அறி வித்தை
நவாக்கரி உள் எழும் நன்மைகள் எல்லாம்
நவாக்கரி மந்திரம் நாவுளே ஓத
நவாக்கரி சத்தி நலம் தரும் தானே.
உரை  
4நலம்தரு ஞானமும் கல்வியும் எல்லாம்
உரம்தரு வல் வினை உம்மை விட்டு ஓடிச்
சிரம்தரு தீவினை செய்வது அகற்றி
வரம்தரு சோதியும் வாய்த்திடும் காணே.
உரை  
5கண்டிடும் சக்கரம் வெள்ளி பொன் செம்பு இடை
கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை
வென்றிடும் மண்டலம் வெற்றி தருவிக்கும்
நின்றிடும் சக்கரம் நினைக்கும் அளவே.
உரை  
6நினைத்திடும் மச்சிரீ மக்கிலீம் ஈறா
நினைத்திடும் சக்கரம் ஆதியும் ஈறு
நினைத்திடு நெல்லொடு புல்லினை உள்ளே
நினைத்திடும் அருச்சனை நேர் தருவாளே.
உரை  
7நேர் தரும் அத்திரு நாயகி ஆனவள்
யாது ஒரு வண்ணம் அறிந்திடும் பொன் பூவை
கார் தரு வண்ணம் கருதின கைவரும்
நார் தரு வண்ணம் நடந்திடு நீயே.
உரை  
8நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்
கடந்திடும் காலனும் எண்ணிய நாளும்
படர்ந்திடு நாமமும் பாய் கதிர் போல
அடைந்திடு வண்ணம் அடைந்திடு நீயே.
உரை  
9அடைந்திடும் பொன் வெள்ளி கல்லுடன் எல்லாம்
அடைந்திடும் ஆதி அருளும் திருவும்
அடைந்திடும் அண்டத்து அமரர்கள் வாழ்வும்
அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே.
உரை  
10அறிந்திடுவார்கள் அமரர் களாகத்
தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்
பரிந்திடும் வானவன் பாய்புனல் சூடி
முரிந்திடு வானை முயன்றிடு நீரே.
உரை  
11நீர் பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்
பார் அணியும் ஹிரீ முன்ஷ்றீம் ஈறாம்
தார் அணியும் புகழ்த் தையல் நல்லாள் தனைக்
கார் அணியும் பொழில் கண்டு கொள்ளீரே.
உரை  
12கண்டும் கொள்ளும் தனி நாயகி தன்னையும்
மொண்டு கொளும் முக வசியம் அது ஆயிடும்
பண்டு கொளும் மரம் ஆய பரம் சுடர்
நின்று கொளும் நிலை பேறு உடையாளே.
உரை  
13பேறு உடையாள் தன் பெருமையை எண்ணிடில்
நாடு உடையார்களும் நம்வசம் ஆகுவர்
மாறு உடையார்களும் வாழ்வது தான் இலை
கூறு உடையாளையும் கூறுமின் நீரே.
உரை  
14கூறுமின் எட்டுத் திசைக்கும் தலைவியை
ஆறுமின் அண்டத்து அமரர்கள் வாழ்வு என
மாறுமின் வையம் வரும் வழி தன்னையும்
தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே.
உரை  
15சேவடி சேரச் செறிய இருந்தவர்
நாவடி உள்ளே நவின்று நின்று ஏத்துவர்
பூ அடி இட்டுப் பொலிய இருந்தவர்
மா அடி காணும் வகை அறிவாரே.
உரை  
16ஐம் முதல் ஆக வளர்ந்து எழு சக்கரம்
மைம் முதல் ஆக அமர்ந்து இரீம் ஈறு ஆகும்
அம் முதல் ஆகி அவர்க்கு உடையாள் தனை
மைம் முதல் ஆக வழுத்திடு நீயே.
உரை  
17வழுத்திடும் நாவுக்கு அரசி இவள் தன்னைப்
பகுத்திடும் வேத மெய் ஆகமம் எல்லாம்
தொகுத்து ஒரு நாவிடை சொல்ல வல்லாளை
முகத்துளும் முன் எழக் கண்டு கொளீரே.
உரை  
18கண்ட இச் சக்கரம் நாவில் எழுதிடில்
கொண்ட இம் மந்திரம் கூத்தன் குறி அதாம்
மன்றினுள் வித்தையும் மானுடர் கையது ஆய்
வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே.
உரை  
19மெல்லியல் ஆகிய மெய்ப் பொருளாள் தனைச்
சொல் இயலாலே தொடர்ந்து அங்கு இருந்திடும்
பல் இயல் ஆகப் பரந்து எழு நாள் பல
நல் இயல்பாலே நடந்திடும் தானே.
உரை  
20நடந்திடும் நாவின் உள் நன்மைகள் எல்லாம்
தொடர்ந்திடும் சொல்லொடு சொல் பொருள் தானும்
கடந்திடும் கல்விக்கு அரசி இவள் ஆகப்
படர்ந்திடும் பாரில் பகை இல்லை தானே.
உரை  
21பகை இல்லை கௌ முதல் ஐ அது ஈறா
நகை இல்லை சக்கரம் நன்று அறிவார்க்கு
மிகை இல்லை சொல்லிய பல் உரு எல்லாம்
வகை இல்லை ஆக வணங்கிடும் தானே.
உரை  
22வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை
நலங்கிடு நல் உயிர் ஆனவை எல்லாம்
கலங்கிடும் காம வெகுளி மயக்கம்
துலங்கிடும் சொல்லிய சூழ் வினைதானே.
உரை  
23தானே கழறித் தணியவும் வல்லன் ஆய்த்
தானே நினைத்து அவை சொல்லவும் வல்லன் ஆய்த்
தானே தனி நடம் கண்டவள் தன்னையும்
தானே வணங்கித் தலைவனும் ஆமே.
உரை  
24ஆமே அனைத்து உயிர் ஆகிய அம்மையும்
தாமே சகலமும் ஈன்ற அத் தையலும்
ஆமே அவள் அடி போற்றி வணங்கிடில்
போமே வினைகளும் புண்ணியன் ஆகுமே.
உரை  
25புண்ணியன் ஆகிப் பொருந்தி உலகு எங்கும்
கண்ணியன் ஆகிக் கலந்து அங்கு இருந்திடும்
தண்ணியன் ஆகித் தரணி முழுதுக்கும்
அண்ணியன் ஆகி அமர்ந்து இருந்தானே.
உரை  
26தான் அது கம் இறீம்க் கௌ அது ஈறு ஆம்
நானது சக்கரம் நன்று அறிவார்க்கு எலாம்
கானது கன்னி கலந்த பராசத்தி
கேள் அது வையம் கிளர் ஒளி ஆனதே.
உரை  
27ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில்
களிக்கும் இச்சிந்தையில் காரணம் காட்டித்
தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்து கொள்வார்க்கே.
உரை  
28அறிந்திடும் சக்கரம் அருச்சனை யோடே
எறிந்திடும் வையத்து இடர் அவை காணின்
மறிந்திடும் மன்னனும் வந்தனை செய்யும்
பொறிந்திடும் சிந்தை புகை இல்லை தானே.
உரை  
29புகை இல்லை சொல்லிய பொன் ஒளி உண்டாம்
குகை இல்லை கொல்வது இலாமை யினாலே
வகை இல்லை வாழ்கின்ற மன் உயிர்க்கு எல்லாம்
சிகை இல்லை சக்கரம் சேர்ந்தவர் தாமே.
உரை  
30சேர்ந்தவர் என்றும் திசை ஒளி ஆனவர்
காய்ந்து எழுமேல் வினை காண கிலாதவர்
பாய்ந்து எழும் உள் ஒளி பாரில் பரந்தது
மாய்ந்தது கார் இருள் மாறு ஒளி தானே.
உரை  
31ஒளி அது ஹௌ முன் கிரீம் அது ஈறு ஆம்
களி அது சக்கரம் கண்டு அறிவார்க்குத்
தெளிவது ஞானமும் சிந்தையும் தேறப்
பணிவது பஞ்சாக் கரம் அது ஆமே.
உரை  
32ஆமே சதாசிவ நாயகி ஆனவள்
ஆமே அதோ முகத்து உள் அறிவு ஆனவள்
ஆமே சுவை ஒளி ஊறு ஓசை கண்டவள்
ஆமே அனைத்து உயிர் தன் உளும் ஆமே.
உரை  
33தன் உளும் ஆகித் தரணி முழுதும் கொண்டு
என் உளும் ஆகி இடம் பெற நின்றவள்
மண் உளும் நீர் அனல் கால் உளும் வான் உளும்
கண் உளும் மெய் உளும் காணலும் ஆமே.
உரை  
34காணலும் ஆகும் கலந்து உயிர் செய்வன
காணலும் ஆகும் கருத்து உள் இருந்திடில்
காணலும் ஆகும் கலந்து வழி செயக்
காணலும் ஆகும் கருத்து உற நில்லே.
உரை  
35நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக்
கண்டிடும் உள்ளம் கலந்து எங்கும் தான் ஆகத்
கொண்டிடும் வையம் குணம் பல தன்னையும்
விண்டிடும் வல்வினை மெய்ப் பொருள் ஆகுமே.
உரை  
36மெய்ப் பொருள் ஓள முதல் ஹௌ அது ஈறு ஆக்
கைப் பொருள் ஆகக் கலந்து எழு சக்கரம்
தற் பொருள் ஆகச் சமைந்த அமுதேஸ்வரி
நல் பொருள் ஆக நடு இருந்தாளே.
உரை  
37தாள் அதன் உள்ளே சமைந்த அமுதேஸ்வரி
கால் அது கொண்டு கலந்து உற வீசிடின்
நாள் அது நாளும் புதுமைகள் கண்ட பின்
கேள் அது காயமும் கேடு இல்லை காணுமே.
உரை  
38கேடு இல்லை காணும் கிளர் ஒளி கண்டபின்
நாடு இல்லை காணும் நாள் முதல் அற்றபின்
மாடு இல்லை காணும் வரும்வழி கண்டபின்
காடு இல்லை காணும் கருத்துள் இடத்துக்கே.
உரை  
39உற்ற இடம் எல்லாம் உலப்பு இல் பாழ் ஆக்கிக்
கற்ற இடம் எல்லாம் கடுவெளி ஆனது
மற்ற இடம் இல்லை வழி இல்லை தான் இல்லை
சற்று இடம் இல்லை சலிப்பு அற நின்றிடே.
உரை  
40நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம்
நின்றிடும் உள்ளம் நினைத்து அவை தான் ஒக்கும்
நின்றிடும் சத்தி நிலைபெறக் கண்டிட
நின்றிடும் மேலை விளக்கு ஒளி தானே.
உரை  
41விளக்கு ஒளி ஸௌ முதல் லௌ அது ஈறா
விளக்கு ஒளி சக்கரம் மெய்ப் பொருள் ஆகும்
விளக்கு ஒளி ஆகிய மின் கொடியாளை
விளக்கு ஒளி ஆக விளங்கிடும் நீயே.
உரை  
42விளங்கிடும் மேல் வரும் மெய்ப் பொருள் சொல்லின்
விளங்கிடும் மெல்லியல் ஆனது ஆகும்
விளங்கிடும் மெய்ந் நின்ற ஞானப் பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.
உரை  
43தானே வெளி என எங்கும் நிறைந்தவள்
தானே பரம வெளி அது ஆனவள்
தானே சகலமும் ஆக்கி அழித்தவள்
தானே அனைத்து உள அண்ட சகலமே.
உரை  
44அண்டத்தின் உள்ளே அளப்பு அரிது ஆனவள்
பிண்டத்தின் உள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தின் உள்ளே குணம் பல காணினும்
கண்டத்தில் நின்ற கலப்பு அறியார் களே.
உரை  
45கலப்பு அறியார் கடல் சூழ் உலகு எல்லாம்
உலப்பு அறியார் உடலோடு உயிர்தன்னைச்
சிலப்பு அறியார் சில தேவரை நாடித்
தலைப் பறி ஆகச் சமைந்தவர் தானே.
உரை  
46தானே எழுந்த அச் சக்கரம் சொல்லிடின்
மானே மதிவரை பத்து இட்டு வைத்தபின்
தேனே இரேகை திகைப்பு அற ஒன்பதில்
தானே கலந்த வரை எண்பத்து ஒன்றுமே.
உரை  
47ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்
வென்றி கொள் மேனி மதி வட்டம் பொன்மை ஆம்
கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில்
என்று இயல் அம்மை எழுத்து அவை பச்சையே.
உரை  
48ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய
வாய்ந்த இப் பெண் எண்பத்து ஒன்றில் நிரைத்தபின்
காய்ந்த அவி நெய்யுள் கலந்து உடன் ஓமமும்
ஆம்தலத்து ஆம் உயிர் ஆகுதி பண்ணுமே.
உரை  
49பண்ணிய பொன்னைப் பரப்பு அற நீ பிடி
எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும்
நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்தபின்
துண் என நேய நல் சேர்க்கலும் ஆமே.
உரை  
50ஆகின்ற சந்தனம் குங்குமம் கத்தூரி
போகின்ற சாந்து சவாது புழுகு நெய்
ஆகின்ற கற்பூரம் ஆ கோசன நீரும்
சேர்கின்ற ஒன்பதும் சேர நீ வைத்திடே.
உரை  
51வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடில்
கைச் சிறு கொங்கை கலந்து எழு கன்னியைத்
தச்சிது ஆகச் சமைந்த இம் மந்திரம்
அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே.
உரை  
52சிந்தையின் உள்ளே திகழ் தரு சோதியாய்
எந்தை கரங்கள் இருமூன்றும் உள்ளது
பந்தம் ஆம் சூலம் படை பாசம் வில் அம்பு
முந்தை கிலீம் எழ முன் இருந்தாளே.
உரை  
53இருந்தனர் சத்திகள் அறுபத்து நால்வர்
இருந்தனர் கன்னிகள் எண் வகை எண்மர்
இருந்தனர் சூழ எதிர் சக்கரத்தே
இருந்த கரம் இரு வில் அம்பு கொண்டே.
உரை  
54கொண்ட கனகம் குழை முடி ஆடை ஆய்க்
கண்ட இம் முத்தம் கனல் திரு மேனி ஆய்ப்
பண்டு அமர் சோதிப் படர் இதழ் ஆனவள்
உண்டு அங்கு ஒருத்தி உணர வல்லார்க்கே.
உரை  
55உணர்ந்து இருந்து உள்ளே ஒருத்தியை நோக்கில்
கலந்து இருந்து எங்கும் கருணை பொழியும்
மணந்து எழும் ஓசை ஒளிஅது காணும்
தணந்து எழு சக்கரம் தான் தருவாளே.
உரை  
56தருவழி ஆகிய தத்துவ ஞானம்
குருவழி ஆகும் குணங்கள் உள் நின்று
கருவழி ஆகும் கணக்கை அறுத்துப்
பெருவழி ஆக்கும் பேர் ஒளி தானே.
உரை  
57பேர் ஒளி ஆய பெரிய பெரும் சுடர்
சீர் ஒளி ஆகித் திகழ் தரு நாயகி
கார் ஒளி ஆகிய கன்னிகை பொன் நிறம்
பார் ஒளி ஆகிப் பரந்து நின்றாளே.
உரை  
58பரந்த கரம் இரு பங்கயம் ஏந்திக்
குவிந்த கரம் இரு கொய் தளிர்ப் பாணி
பரிந்து அருள் கொங்கைகள் முத்து ஆர் பவளம்
இருந்த நல் ஆடை மணி பொதிந்து அன்றே.
உரை  
59மணி முடி பாதம் சிலம்பு அணி மங்கை
அணிபவள் அன்றி அருள் இல்லை ஆகும்
தணிபவர் நெஞ்சின் உள் தன் அருள் ஆகிப்
பணிபவர்க்கு அன்றோ பரகதி ஆமே.
உரை  
60பரந்து இருந்து உள்ளே அறுபது சத்தி
கரந்தன கன்னிகள் அப்படி சூழ
மலர்ந்து இருகையின் மலர் அவை ஏந்தச்
சிறந்தவர் ஏத்தும் சிறீம் தனம் ஆமே.
உரை  
61தனம் அது ஆகிய தையலை நோக்கி
மனம் அது ஓடி மரிக்கில் ஓர் ஆண்டில்
கனம் அவை அற்றுக் கருதிய நெஞ்சம்
தினகரன் ஆரிட செய்தி அது ஆமே.
உரை  
62ஆகின்ற மூலத்து எழுந்த முழுமலர்
போகின்ற பேர் ஒளி ஆய மலர் அதாய்ப்
போகின்ற பூரணம் ஆக நிறைந்த பின்
சேர்கின்ற செந் அழல் மண்டலம் ஆனதே.
உரை  
63ஆகின்ற மண்டலத்து உள்ளே அமர்ந்தவள்
ஆகின்ற ஐம்பத்து அறுவகை ஆனவள்
ஆகின்ற ஐம்பத்து அறு சத்தி நேர்தரு
ஆகின்ற ஐம்பத்து அறுவகை சூழவே.
உரை  
64சூழ்ந்து எழு சோதி சுடர் முடி பாதம் ஆய்
ஆங்கு அணி முத்தம் அழகிய மேனியும்
தாங்கிய கை அவை தார் கிளி ஞானம் ஆய்
ஏந்து கரங்கள் எடுத்து அமர் பாசமே.
உரை  
65பாசம் அது ஆகிய வேரை அறுத்து இட்டு
நேசம் அது ஆக நினைத்து இரும் உம்ளே
நாசம் அது எல்லாம் நடந்திடும் ஐ ஆண்டில்
காசினி மேல் அமர் கண் நுதல் ஆகுமே.
உரை  
66கண் உடை நாயகி தன் அருள் ஆம் வழி
பண் உறு நாதம் பகை அற நின்றிடில்
விண் அமர் சோதி விளங்க ஹிரீங்கார
மண் உடைய நாயகி மண்டலம் ஆகுமே.
உரை  
67மண்டலத்து உள்ளே மலர்ந்து எழு தீபத்தைக்
கண்டு அகத்து உள்ளே கருதி இருந்திடும்
விண்டு அகத்து உள்ளே விளங்கி வருதலால்
தண்டு அகத்து உள்ளவை தாங்கலும் ஆமே.
உரை  
68தாங்கிய நாபித் தட மலர் மண்டலத்து
ஓங்கி எழுங் கலைக்குள் உள் உணர்வு ஆனவள்
ஏங்க வரும் பிறப்பு எண்ணி உறுத்திட
வாங்கிய நாதம் வலியுடன் ஆகுமே.
உரை  
69நாவுக்கு நாயகி நல் மணிய பூண் ஆரம்
பூவுக்கு நாயகி பொன் முடி ஆடை ஆம்
பாவுக்கு நாயகி பால் ஒத்த வண்ணத்தள்
ஆவுக்கு நாயகி அங்கு அமர்ந்தாளே.
உரை  
70அன்று இரு கையில் அளந்த பொருள் முறை
இன்று இரு கையில் எடுத்த வெண் குண்டிகை
மன்று அது காணும் வழி அது ஆகவே
கண்டு அங்கு இருந்தவர் காரணி காணுமே.
உரை  
71காரணி சத்திகள் ஐம் பத்து இரண்டு எனக்
காரணி கன்னிகள் ஐம் பத்து இருவராய்க்
காரணி சக்கரத்து உள்ளே கரந்து எங்கும்
காரணி தன் அருள் ஆகி நின்றாளே.
உரை  
72நின்ற இச் சத்தி நிலை பெற நின்றிடில்
கண்ட இவ் வன்னி கலந்திடும் ஓர் ஆண்டில்
கொண்ட விரத நீர் குன்றாமல் நின்றிடின்
மன்றினில் ஆடும் மணி அது காணுமே.
உரை  
73கண்ட இச் சத்தி இருதய பங்கயம்
கொண்ட இத் தத்துவ நாயகி ஆனவள்
பண்டை அவ் வாயுப் பகையை அறுத்திட
இன்று என் மனத்துள் இனிது இருந்தாளே.
உரை  
74இருந்த இச் சத்தி இரு நாலு கையில்
பரந்த இப் பூங் கிளி பாசம் மழுவாள்
கரந்திடும் கேடகம் வில் அம்பு கொண்டு அங்கு
உரந்து அங்கு இருந்தவள் கூத்து உகந்தாளே.
உரை  
75உகந்தனள் பொன்முடி முத்து ஆரம் ஆகப்
பரந்த பவளமும் பட்டு ஆடை சாத்தி
மலர்ந்து எழு கொங்கை மணிக் கச்சு அணிந்து
தழைத்து அங்கு இருந்தவள் தான் பச்சை ஆமே.
உரை  
76பச்சை இவளுக்குப் பாங்கிமார் ஆறு எட்டு
கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலால்
கச்சு அணி கொங்கைகள் கை இரு காப்பு அதாய்
எச்ச இடைச்சி இனிது இருந்தாளே.
உரை  
77தாள் அத்தின் உள்ளே தாங்கிய சோதியைக்
கால் அது ஆகக் கலந்து கொள் என்று
மால் அது ஆக வழிபாடு செய்து நீ
பால் அது போலப் பரந்து எழு விண்ணிலே.
உரை  
78விண் அமர் நாபி இருதயம் ஆங்கு இடைக்
கண் அமர் கூபம் கலந்து வருதலால்
பண் அமர்ந்து ஆதித்த மண்டலம் ஆனது
தண் அமர் கூபம் தழைத்தது காணுமே.
உரை  
79கூபத்துச் சத்தி குளிர் முகம் பத்து உள
தா பத்துச் சத்தி தயங்கி வருதல் ஆல்
ஆ பத்துக் கைகள் அடைந்தன நால் ஐந்து
பாசம் அறுக்கப் பரந்தன சூலமே.
உரை  
80சூலம் தண்டு ஒள் வாள் சுடர் பறை ஞானம் ஆய்
வேல் அம்பு தமருகம் மா கிளி வில் கொண்டு
கால் அம் பூப் பாசம் மழு கத்தி கைக் கொண்டு
கோலம் சேர் சங்கு குவிந்தகை எண் அதே.
உரை  
81எண் அமர் சத்திகள் நால் பத்து நால் உடன்
எண் அமர் சத்திகள் நால் பத்து நால்வர் ஆம்
எண்ணிய பூ இதழ் உள்ளே இருந்தவள்
எண்ணிய எண்ணம் கடந்து நின்றாளே.
உரை  
82கடந்தவள் பொன் முடி மாணிக்கத் தோடு
தொடர்ந்து அணி முத்து பவளம் கச்சு ஆகப்
படர்ந்த அல்குல் பட்டு ஆடை பாதச் சிலம்பு
மடந்தை சிறியவள் வந்து நின்றாளே.
உரை  
83நின்ற இச் சத்தி நிரந்தரம் ஆகவே
கண்டிடும் மேரு வணிமாதி தான் ஆகிப்
பண்டைய வானின் பகட்டை அறுத்திட்டு
ஒன்றிய தீபம் உணர்ந்தார்க்கு உண்டாமே.
உரை  
84உண்டு ஓர் அதோ முகம் உத்தமம் ஆனது
கண்ட இச் சத்தி சதாசிவ நாயகி
கொண்ட முகம் ஐந்து கூறும் கரங்களும்
ஒன்று இரண்டு ஆகவே மூன்று நாலு ஆனதே.
உரை  
85நல் மணி சூலம் கபாலம் கிளியுடன்
பல் மணி நாகம் மழுகத்தி பந்து ஆகும்
கல் மணி தாமரைக் கையில் தமருகம்
பொன் மணி பூண் ஆரம் பூசனை ஆனதே.
உரை  
86பூசனைச் சத்திகள் எண் ஐவர் சூழவே
நேசவள் கன்னிகள் நால் பத்து நேர் அதாய்க்
காசினிச் சக்கரத்து உள்ளே கலந்து அவள்
மாசு அடையாமல் மகிழ்ந்து இருந்தார்களே.
உரை  
87தாரத்தின் உள்ளே தயங்கிய சோதியைப்
பாரத்தின் உள்ளே பரந்து உள் எழுந்திட
வேர் அது ஒன்றி நின்று எண்ணு மனோமயம்
கார் அது போலக் கலந்து எழு மண்ணிலே.
உரை  
88மண்ணில் எழுந்த அகார உகாரங்கள்
விண்ணில் எழுந்து சிவாய நம என்று
கண்ணில் எழுந்தது காண்பு அரிது அன்று கொல்
கண்ணில் எழுந்தது காட்சி தர என்றே.
உரை  
89என்று அங்கு இருந்த அமுத கலை இடைச்
சென்று அங்கு இருந்த அமுத பயோதரி
கண்டம் கரம் இரு வெள்ளி பொன் மண் அடை
கொண்டு அங்கு இருந்தது வண்ணம் அமுதே.
உரை  
90அமுதம் அது ஆக அழகிய மேனி
படிகம் அது ஆகப் பரந்து எழும் உள்ளே
குமுதம் அது ஆகக் குளிர்ந்து எழு முத்துக்
கெமுதம் அது ஆகிய கேடு இலிதானே.
உரை  
91கேடு இலி சத்திகள் முப்பத்து அறுவரும்
நாடு இலி கன்னிகள் நால் ஒன்பதின் மரும்
பூ இலி பூ இதழ் உள்ளே இருந்தவர்
நாள் இலி தன்னை நணுகி நின்றார்களே.
உரை  
92நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும்
கண்டது சோதி கருத்து உள் இருந்திடக்
கொண்டது ஓர் ஆண்டு கூடி வருகைக்கு
விண்ட வௌகாரம் விளங்கின அன்றே.
உரை  
93விளங்கிடும் வான் இடை நின்றவை எல்லாம்
வணங்கிடும் மண்டலம் மன் உயிர் ஆக
நலம் கிளர் நன்மைகள் நாரணன் ஒத்துச்
சுணங்கு இடை நின்று இவை செல்லலும் ஆமே.
உரை  
94ஆமே அதோ முகம் மேலே அமுதம் ஆய்த்
தாமே உகாரம் தழைத்து எழும் சோமனும்
கா மேல் வருகின்ற கற்பகம் ஆனது
பூ மேல் வருகின்ற பொன் கொடி ஆனதே.
உரை  
95பொன் கொடியாள் உடைப் பூசனை செய்திட
அக் களி ஆகிய ஆங்காரம் போயிடும்
மற் கடம் ஆகிய மண்டலம் தன் உளே
பிற் கொடி ஆகிய பேதையைக் காணுமே.
உரை  
96பேதை இவளுக்குப் பெண்மை அழகு ஆகும்
தாதை இவளுக்குத் தாணுவும் ஆய் நிற்கும்
மாதை அவளுக்கு மண்ணும் திலகம் ஆய்க்
கோதையர் சூழக் குவிந்திடக் காணுமே.
உரை  
97குவிந்தனர் சத்திகள் முப்பத்து இருவர்
நடந்தனர் கன்னிகள் நால் எண்மர் சூழப்
பரந்து இதழ் ஆகிய பங்கயத்து உள்ளே
இருந்தனள் காணும் இடம் பல கொண்டே.
உரை  
98கொண்டு அங்கு இருந்தனர் கூத்தன் ஒளியினைக்
கண்டு அங்கு இருந்தனர் காரணத்து உள்ளது
பண்டை மறைகள் பரந்து எங்கும் தேடும் ஆல்
இன்று என் மனத்து உளே இல் அடைந்து ஆளுமே.
உரை  
99இல் அடைந்தானுக்கும் இல்லாதது ஒன்று இல்லை
இல் அடைந்தானுக்கு இரப்பது தான் இல்லை
இல் அடைந்தானுக்கு இமையவர் தாம் ஒவ்வார்
இல் அடைந்தானுக்கு இல்லாதது இல்லானையே.
உரை  
100ஆனை மயக்கும் அறுபத்து நால் தறி
ஆனை இருக்கும் அறு பத்து நால் ஒளி
ஆனை இருக்கும் அறுபத்து நால் அறை
ஆனையும் கோடும் அறுபத்து நாலிலே.
உரை  

ஐந்தாம் தந்திரம்

1. சுத்த சைவம்

1ஊரும் உலகமும் ஒக்கப் படைக்கின்ற
பேர் அறிவாளன் பெருமை குறித்திடின்
மேருவும் மூ உலகு ஆளி இலங்கு எழுந்து
தாரணி நால் வகைச் சைவமும் ஆமே.
உரை  
2சத்தும் அசத்தும் சத சத்தும் தான் கண்டு
சித்தும் அசித்தும் சேர் உறாமே நீத்த
சுத்தம் அசுத்தமும் தோய் உறாமே நின்று
நித்தம் பரஞ் சுத்தம் சைவர்க்கு நேயமே.
உரை  
3கற்பன கற்றுக் கலை மன்னும் மெய் யோகம்
முற்பத ஞான முறை முறை நண்ணியே
சொற் பதம் மேவித் துரிசு அற்று மேல் ஆன
தற்பரம் கண்டு உளோர் சைவ சிந்தாந்தரே.
உரை  
4வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்த
நாதாந்தம் கண்டோர் நடுக்கு அற்ற காட்சியர்
பூதாந்த போதாந்தம் ஆகப் புனம் செய்ய
நாதாந்த பூரணர் ஞான நேயத்தரே.
உரை  

2. அசுத்த சைவம்

1இணையார் திருவடி ஏத்தும் சீர் அங்கத்து
இணையார் இணைக் குழை ஈர் அணை முத்திரை
குணம் ஆர் இணைக் கண்ட மாலையும் குன்றாது
அணைவாம் சரியை கிரியை யினார்க்கே.
உரை  
2காதுப் பொன் ஆர்ந்த கடுக்கன் இரண்டு சேர்த்து
ஓதும் திரு மேனியுள் கட்டு இரண்டுடன்
சோதனை செய்து துவா தெச மார்க்கர் ஆய்
ஓதி இருப்பார் ஒரு சைவர் ஆகுமே.
உரை  
3கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டனர்
கண்டங்கள் ஒன்பதும் கண்டாய் அரும் பொருள்
கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டம் ஆம்
கண்டங்கள் கண்டோர் கடும் சுத்த சைவரே.
உரை  
4ஞானி புவி எழு நல் நூல் அனைத்துடன்
மோன திசையும் முழு எண் எண் சித்தியும்
ஏனை நிலமும் எழுதா மறை ஈறும்
கோனொடு தன்னையும் காணும் குணத்தனே.
உரை  

3. மார்க்க சைவம்

1பொன்னால் சிவ சாதனம் பூதி சாதனம்
நன் மார்க்க சாதனம் மா ஞான சாதனம்
துன் மார்க்க சாதனம் தோன்றாத சாதனம்
சன் மார்க்க சாதனம் ஆம் சுத்த சைவர்க்கே.
உரை  
2கேடு அறு ஞானி கிளர் ஞான பூபதி
பாடு அறு வேதாந்த சித்தாந்த பாகத்தின்
ஊடு உறு ஞான உதய உண்மை முத்தியோன்
பாடு உறு சுத்த சைவப் பத்த நித்தனே.
உரை  
3சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓர் ஏழும்
சத்தும் அசத்தும் தணந்த பரா பரை
உய்த்த பரா பரை உள்ளாம் பராபரை
அத்தன் அருள் சத்தியாய் எங்கும் ஆமே.
உரை  
4சத்தும் அசத்தும் தணந்தவர் தான் ஆகிச்
சித்தும் அசித்தும் தெரியாச் சிவோகம் ஆய்
முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினார்
சித்தியும் அங்கே சிறந்து உள தானே.
உரை  
5தன்னைப் பரனைச் சதா சிவன் என்கின்ற
மன்னைப் பதி பசு பாசத்தை மாசு அற்ற
முன்னைப் பழ மல முன் கட்டை வீட்டினை
உன்னத் தகும் சுத்த சைவர் உபாயமே.
உரை  
6பூரணம் தன்னிலே வைத்து அற்ற அப்போதம்
ஆரணம் அந்தம் மதித்து ஆனந்தந்தோடு
நேர் என ஈர் ஆறு நீதி நெடும் போகம்
காரணம் ஆம் சுத்த சைவர்க்குக் காட்சியே.
உரை  
7மாறாத ஞான மதிப்பு அற மாயோகம்
தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவம் ஆக்கிப்
பேறு ஆன பாவனை பேணி நெறி நிற்றல்
கூறு ஆகும் ஞானி சரிதை குறிக்கிலே.
உரை  
8வேத அந்தம் கண்டோர் பிரமம் இத்தியா தரர்
நாத அந்தம் கண்டோர் நடுக்கு அற்ற யோகிகள்
வேத அந்தம் அல்லாத சித்தாந்தம் கண்டு உள்ளோர்
சாதாரணம் அன்ன சைவர் உபாயமே.
உரை  
9விண்ணினைச் சென்று அணுகா வியன் மேகங்கள்
கண்ண்னைச் சென்று அணுகாப் பல காட்சிகள்
எண்ணினைச் சென்று அணுகாமல் எணப்படும்
அண்ணலைச் சென்று அணுகா பசு பாசமே.
உரை  
10ஒன்றும் இரண்டும் இலதும் ஆய் ஒன்று ஆக
நின்று சமய நிரா கார நீங்கியே
நின்று பரா பரை நேயத்தைப் பாதத்தால்
சென்று சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே.
உரை  

4. கடும் சுத்த சைவம்

1வேடம் கடந்து விகிர்தன் தன் பால் மேவி
ஆடம்பரம் இன்றி ஆசாபாசம் செற்றுப்
பாடு ஒன்று பாசம் பசுத்துவம் பாழ்படச்
சாடும் சிவ போதகர் சுத்த சைவரே.
உரை  
2உடல் ஆன ஐந்தையும் ஓர் ஆறும் ஐந்தும்
மடல் ஆன மா மாயை மற்று உள்ள நீவப்
படல் ஆன கேவல பாசம் துடைத்துத்
திடம் ஆய்த் தனை உறல் சித்தாந்த மார்க்கமே.
உரை  
3சுத்தச் சிவன் தான் அதில் தோயாமல்
முத்தர் பதப் பொருள் முத்தி வித்து ஆம் மூலம்
அத் தகையான் மா அரனை அடைந்தற்றால்
சுத்த சிவம் ஆவரே சுத்த சைவரே.
உரை  
4நான் என்றும் தான் என்றும் நாடி நான் சாரவே
தான் என்று நான் என்று இரண்டு இலாத் தற்பதம்
தான் என்று நான் என்ற தத்துவம் நல்கலால்
தான் என்று நான் என்றும் சாற்ற கில்லேனே.
உரை  
5சாற்ற அரிது ஆகிய தத்துவம் சிந்தித்தால்
ஆற்ற அரிது ஆகிய ஐந்தும் அடங்கிடும்
மேல் திகழ் ஞானம் விளக்கு ஒளியாய் நிற்கும்
பாற்பர சாயுச்சியம் ஆகும் பதியே.
உரை  

5. சரியை

1உயிர்க்கு உயிராய் நிற்றல் ஒண் ஞான பூசை
உயிர்க்கு ஒளி நோக்கல் மகா யோக பூசை
உயிர் பெறு ஆவாகனம் புறப் பூசை
செயின் கடை நேசம் சிவ பூசை ஆமே.
உரை  
2நாடு நகரமும் நல் திருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெருமான் என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே.
உரை  
3பத்தர் சரிதை படுவோர் கிரியை ஓர்
அத்தகு தொண்டர் அருள் வேடத்து ஆகுவோர்
சுத்தவியம் ஆதி சாதகர் தூ யோகர்
சித்தர் சிவஞானம் சென்று எய்து வோர் களே.
உரை  
4சார்ந்த மெய்ஞ் ஞானத்தோர் தான் அவன் ஆயினோர்
சேர்ந்த வெண் யோகத்தர் சித்தர் சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
நேர்ந்த சரியை யோர் நீள் நிலத்தோரே.
உரை  
5கிரியை யோகங்கள் கிளர் ஞான பூசை
அரிய சிவன் உரு அமரும் அரூபம்
தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை
உரியன நேயத்து உயர் பூசை ஆமே.
உரை  
6சரி ஆதி நான்கும் தரு ஞானம் நான்கும்
விரிவு ஆன வேதாந்த சித்தாந்தம் ஆறும்
பொருள் ஆனது நந்தி பொன் நகர் போந்து
மருள் ஆகும் மாந்தர் வணங்க வைத்தானே.
உரை  
7சமையம் பல சுத்தித் தன் செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் அரன் மந்திர சுத்தி
சமைய நிருவாணம் கலா சுத்தி ஆகும்
அமை மன்னும் ஞான மார்க்கம் அபிடேகமே.
உரை  

6. கிரியை

1பத்துத் திசையும் பரம் ஒரு தெய்வம் உண்டு
எத்திக் கிலர் இல்லை என்பதின் அமலர்க்கு
ஒத்துத் திருவடி நீழல் சரண் எனத்
தத்தும் வினைக் கடல் சாராது காணுமே.
உரை  
2கான் உறு கோடி கடி கமழ் சந்தனம்
வான் உறு மா மலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உண்பவர்க்கு அல்லது
தேன் அமர் பூங் கழல் சேர ஒண்ணாதே.
உரை  
3கோனக் கன்று ஆயே குரைகழல் ஏத்து மின்
ஞானக் கன்று ஆகிய நடுவே உழிதரும்
வானக் கன்று ஆகிய வானவர் கைதொழு
மானக் கன்று ஈசன் அருள் வள்ளம் ஆமே.
உரை  
4இது பணிந்து எண் திசை மண்டலம் எல்லாம்
அது பணி செய்கின்றவள் ஒரு கூறன்
இது பணி மானுடர் செய் பணி ஈசன்
பதி பணி செய்வது பத்திமை காணே.
உரை  
5பத்தன் கிரியை சரியை பயில் உற்றுச்
சுத்த அருளால் துரிசு அற்ற யோகத்தில்
உய்த்த நெறி உற்று உணர் கின்ற ஞானத்தால்
சித்தம் குரு அருளால் சிவம் ஆகுமே.
உரை  
6அன்பின் உருகுவன் நாளும் பணி செய்வன்
செம் பொன் செய் மேனி கமலத் திருவடி
முன்பு நின்று ஆங்கே மொழிவது எனக்கு அருள்
என்பின் உள் சோதி இலங்கு கின்றானே.
உரை  

7. யோகம்

1நெறி வழியே சென்று நேர்மையுள் ஒன்றித்
தறி இருந்தால் போல் தம்மை இருத்திச்
சொறியினும் தாக்கினும் துண் என்று உணராக்
குறி அறி வாளர்க்குக் கூடலும் ஆமே.
உரை  
2ஊழிதோறு ஊழி உணர்ந்தவர்க்கு அல்லால்
ஊழிதோறு ஊழி உணரவும் தான் ஒட்டான்
ஆழி அமரும் அரி அயன் என்று உளார்
ஊழி முயன்றும் ஒருச்சி உளானே.
உரை  
3பூவினில் கந்தம் பொருந்திய வாறு போல்
சீவனுக்கு உள்ளே சிவ மணம் பூத்தது
ஓவியம் போல உணர்ந்து அறிவாளர்க்கு
நாவி அணைந்த நடுதறி ஆமே.
உரை  
4உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரில் கலக்கின்ற நந்தியைச்
சிந்தை உறவே தெளிந்து இருள் நீங்கினால்
முந்தைப் பிறவிக்கு மூல வித்து ஆமே.
உரை  
5எழுத்தொடு பாடலும் எண் எண் கலையும்
பழித்தலை பாசப் பிறவியும் நீங்கா
வழித்தலை சோமனோடு அங்கி அருக்கன்
வழித்தலை செய்யும் வகை உணர்ந்தேனே.
உரை  
6விரும்பி நின்றே செயின் மெய்த்தவர் ஆகும்
விரும்பி நின்றே செயின் மெய் ஆகும்
விரும்பி நின்றே செயின் மெய்த்தவம் ஆகும்
விரும்பி நின்றே செயின் விண்ணவன் ஆகுமே.
உரை  
7பேணில் பிறவா உலகுஅருள் செய்திடும்
காணில் தனது கலவி உளே நிற்கும்
நாணில் நரக நெறிக்கே வழி செயும்
ஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே.
உரை  
8ஒத்த செங் கோலார் உலப்பு இலி மாதவர்
எத்தனை ஆயிரம் வீழ்ந்தனர் எண் இலி
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்
அத்தன் இவன் என்றே அன்பு உறுவார்களே.
உரை  
9யோகிக்கு யோக ஆதி மூன்று உள கொண்டு உற்றோர்
ஆகத் தகு கிரி ஆதி சரியை ஆம்
தாகத்தை விட்ட சரியை ஒன்றாம் ஒன்றுள்
ஆதித்தன் பத்தியுள் அன்பு வைத்தேனே.
உரை  
10யோகச் சமயமே யோகம் பல உன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகம் ஆம்
யோக நிர்வாணமே உற்ற பரோதயம்
யோக அபிடேகமே ஒண் சித்தி உற்றலே.
உரை  

8. ஞானம்

1ஞானத்தின் மிக்க அற நெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்று அன்று
ஞானத்தின் மிக்கவை நல் முத்தி நல்காவா
ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்காரே.
உரை  
2சத்தமும் சத்த மனனும் தகுமனம்
உய்த்த உணர்வு உணர்த்தும் அகந்தையும்
சித்தம் என்று இம் மூன்றும் சிந்திக்கும் செய்கையும்
சத்தம் கடந்தவர் பெற்ற சன்மார்க்கமே.
உரை  
3தன்பால் உலகும் தனக்கு அருகு ஆவதும்
அன்பால் எனக்கு அருள் ஆவதும் ஆவன
என்பார்கள் ஞானமும் எய்தும் சிவயோகமும்
பின்பாலின் நேயமும் பெற்றிடும் தானே.
உரை  
4இருக்கும் சேம இடம் பிரமம் ஆகும்
வருக்கம் சராசரம் ஆகும் உலகம்
தருக்கிய ஆசாரம் எல்லாம் தருமே
திருக்கிலா ஞானத்தைத் தேர்ந்து உணர்ந்தோர்க்கே.
உரை  
5அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர் மன்னும் பேர் அருளாளன்
குறியும் குணமும் குரை கழல் நீங்கா
நெறி அறிவார்க்கு இது நீர்த் தொனியாமே.
உரை  
6ஞானம் விளைந்து எழுகின்றது ஓர் சிந்தையுள்
ஏனம் விளைந்து எதிரே காண்வழி தொறும்
கூனல் மதி மண்டலத்து எதிர் நீர் கண்டு
ஊனம் அறுத்து நின்று ஒண் சுடர் ஆகுமே.
உரை  
7ஞானிக்கு உடன் குண ஞானத்தில் நான்கும் ஆம்
மோனிக்கு இவை ஒன்றும் கூடா முன் மோகித்து
மேல் நிற்றல் ஆம் சத்தி வித்தை விளைத்திடும்
தான் இக் குலத்தோர் சரியை கிரியையே.
உரை  
8ஞானத்தின் ஞானாதி நான்கும் மா ஞானிக்கு
ஞானத்தின் ஞானமே நான் எனது என்னாமல்
ஞானத்தில் யோகமே நாத அந்த நல் ஒளி
ஞானக் கிரியையே நல் முத்தி நாடலே.
உரை  
9நண்ணிய ஞானத்தின் ஞான ஆதி நண்ணுவோன்
புண்ணிய பாவம் கடந்த பிணக்கு அற்றோன்
கண்ணிய நேயம் கரைஞானம் கண்டு உளோன்
திண்ணிய சுத்தன் சிவ முத்தன் சித்தனே.
உரை  
10ஞானச் சமயமே நாடும் தனைக் காண்டல்
ஞான விசேடமே நாடு பரோதய
ஞான நிர்வாணமே நன்று அறிவான் அருள்
ஞான அபிடேகமே நற்குரு பாதமே.
உரை  

9. சன்மார்க்கம்

1சாற்றும் சன்மார்க்கம் ஆம் தற் சிவ தத்துவத்
தோற்றங்கள் ஆன சுருதிச் சுடர் கண்டு
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க்
கூற்றத்தை வென்றார் குறிப்பு அறிந்தார்களே.
உரை  
2சைவப் பெருமைத் தனி நாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்து உய்ய
வையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே.
உரை  
3தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்
பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகம் சூடக்
குருபத்தி செய்யும் குவலயத் தோர்க்குத்
தரு முத்திச் சார்பு ஊட்டும் சன்மார்க்கம் தானே.
உரை  
4தெளிவு அறியாதார் சிவனை அறியார்
தெளிவு அறியாதார் சீவனும் ஆகார்
தெளிவு அறியாதார் சிவம் ஆக மாட்டார்
தெளிவு அறியா தவர் தீரார் பிறப்பே.
உரை  
5தான் அவன் ஆகித் தான் ஐந்தாம் மலம் செற்று
மோனம் அதாம் மொழிப் பால் முத்தர் ஆவதும்
ஈனம் இல் ஞான அனு பூதியில் இன்பமும்
தான் அவனாய் உறல் ஆன சன் மார்க்கமே.
உரை  
6சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமும்
சன் மார்க்கத் தார்க்கும் இடத் தொடு தெய்வமும்
சன்மார்க்கத் தார்க்கு வருக்கம் தெரிசனம்
எம் மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ.
உரை  
7சன் மார்க்க சாதனம் தான் ஞான ஞேயம் ஆம்
பின் மார்க்க சாதனம் பேதையர்க்கு ஆய் நிற்கும்
துன் மார்க்கம் விட்ட துரியத் துரிசு அற்றார்
சன் மார்க்கம் தான் ஆகும் சன்மார்க்கமே.
உரை  
8சன் மார்க்கம் எய்த வரும் அரும் சீடர்க்குப்
பின் மார்க்கம் மூன்றும் பெற இயல்பாம் என்றால்
நன் மார்க்கம் தானே சிவனொடு நாடலே
சொன் மார்க்கம் என்னச் சுருதிகைக் கொள்ளுமே.
உரை  
9அன்னிய பாசமும் ஆகும் கருமமும்
முஇன்னும் அவத்தையும் மூலப் பகுதியும்
பின்னிய ஞானமும் போதாதி பேதமும்
தன்னொடும் கண்டவர் சன்மார்க்கத்தோரே.
உரை  
10பசு பாசம் நீக்கிப் பதியுடன் கூட்டிக்
கசி யாத நெஞ்சம் கசியக் கசிவித்து
ஒசியாத உண்மைச் சொரு போதயத்து உற்று
அசைவானது இல்லாமை ஆன சன்மார்க்கமே.
உரை  
11மார்க்கம் சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது
மார்க்கம் சன் மார்க்கமே அன்றி மற்று ஒன்று இல்லை
மார்க்கம் சன்மார்க்கம் எனும் நெறிவைகா தோர்
மார்க்கம் சன் மார்க்கம் ஆம் சித்த யோகமே.
உரை  

10. சகமார்க்கம்

1சன் மார்க்கம் தானே சக மார்க்கம் ஆனது
மன் மார்க்கம் ஆம் முத்தி சித்திக்குள் வைப்பது ஆம்
பின் மார்க்கம் ஆனது பேராப் பிறந்து இறந்து
உன் மார்க்க ஞானத்து உறுதியும் ஆமே.
உரை  
2மருவும் துவாதச மார்க்கம் இல்லாதார்
குருவும் சிவனும் சமயமும் கூடார்
வெருவும் திருமகள் வீட்டு இல்லை ஆகும்
உருவும் கிளையும் ஒருங்கு இழப்பாரே.
உரை  
3யோகச் சமாதியின் உள்ளே அகல் இடம்
யோகச் சமாதியின் உள்ளே உளர் ஒளி
யோகச் சமாதியின் உள்ளே உள சத்தி
யோகச் சமாதி உகந்தவர் சித்தரே.
உரை  
4யோகமும் போகமும் யோகியர்க்கு ஆகும் ஆல்
யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளத்து ஓர்
போகம் புவியில் புருடார்த்த சித்தியது
ஆகும் இரண்டும் அழியாத யோகிக்கே.
உரை  
5ஆதார சோதனையால் நாடி சுத்திகள்
மேதாதி ஈர் எண் கலாந்தது விண் ஒளி
போதஆலயத்துப் புலன் கரணம் புந்தி
சாதாரணம் கெடல் ஆம் சக மார்க்கமே.
உரை  
6பிணங்கி நிற்கின்றவை ஐந்தையும் பின்னை
அணங்கி எறிவன் அயிர் மன வாளால்
கணம் பதினெட்டும் கருதும் ஒருவன்
வணங்க வல்லான் சிந்தை வந்து நின்றானே.
உரை  
7வளம் கனி ஒக்கும் வள நிறத் தார்க்கும்
வளம் கனி ஒப்பது ஓர் வாய்மையன் ஆகும்
உளம் கனிந்து உள்ளம் உகந்து இருப்பார்க்குப்
பழம் கனிந்து உள்ளே பகுந்து நின்றானே.
உரை  

11. சற்புத்திர மார்க்கம்

1மேவிய சற்புத்திர மார்க்கம் மெய்த் தொழில்
தாவிப் பதாஞ்சக மார்க்கம் சகத் தொழில்
ஆவது இரண்டும் அகன்று சக மார்க்கத்
தேவி யோடு ஒன்றல் சன்மார்க்கத் தெளிவு அதே.
உரை  
2பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசு அற்ற நல் தவம் வாய்மை அழுக்கு இன்மை
நேசித்திட்டு அன்னமும் நீ சுத்தி செய்தல் மற்று
ஆசு அற்ற சற்புத்திர மார்க்கம் ஆகுமே.
உரை  
3அறு கால் பறவை அலர் தேர்ந்து உழலும்
மறுகா நரை அன்னம் தாமரை நீலம்
குறுகா நறுமலர் கொய்வன கண்டும்
சிறுகால் அற நெறி சேர கிலாரே.
உரை  
4அரும் கரை ஆவது அவ் அடி நீழல்
பெரும் கரை ஆவது பிஞ்ஞகன் ஆணை
வரும் கரை ஏகின்ற மன் உயிர்க்கு எல்லாம்
ஒரும் கரையாய் உலகு ஏழின் ஒத்தானே.
உரை  
5உயர்ந்தும் பணிந்தும் முகந்தும் தழுவி
வியந்தும் அரன் அடிக்கே முறை செய்மின்
பயந்தும் பிறவிப் பயன் அது ஆகும்
பயந்து பரிக்கில் அப் பான்மையன் ஆமே.
உரை  
6நின்று தொழுவன் கிடந்து எம்பிரான் தன்னை
என்றும் தொழுவன் எழில் பரஞ் சோதியைத்
துன்று மலர் தூவித் தொழுமின் தொழும் தோறும்
சென்று வெளிப்படும் தேவர் பிரானே.
உரை  
7திரு மன்னும் சற்புத்திர மார்க்கச் சரியை
உரு மன்னி வாழும் உலகத்தீர் கேண் மின்
கரு மன்னும் பாசம் கை கூம்பத் தொழுது
இரு மன்னும் நாள் தோறும் இன்பு உற்று இருந்தே.
உரை  

13. சாலோகம்

1சாலோகம் ஆதி சரி ஆதியில் பெறும்
சாலோகம் சாமீபம் தங்கும் சரியை ஆல்
மாலோகம் சேரில் வழி ஆகும் சாரூபம்
பா லோகம் இல்லாப் பரன் உரு ஆமே.
உரை  
2சமயம் கிரியையில் தன் மனம் கோயில்
சமய மனு முறை தானே விசேடம்
சமயத்து மூலம் தனைத் தேறல் மூன்று ஆம்
சமய அபிடேகம் தான் ஆம் சமாதியே.
உரை  

4. சாமீபம்


1 பாசம் பசு ஆனது ஆகும் இச் சாலோகம்
பாசம் அருள் ஆனது ஆகும் இச் சாமீபம்
பாசம் சிரம் ஆனது ஆகும் இச் சாரூபம்
பாசம் கரைபதி சாயுச்சியமே.
உரை

15. சாரூபம்


1 தங்கிய சாரூபம் தான் எட்டாம் யோகம் ஆம்
தங்கும் சன்மார்க்கம் தனில் அன்றிக் கைகூடா
அங்கத்து உடல் சித்தி சாதனர் ஆகுவர்,
இங்கு இவர் ஆக இழிவு அற்ற யோகமே.
உரை
 
2 சயிலலோகத்தினைச் சார்ந்த பொழுதே
சயிலம் அது ஆகும் சராசரம் போலப்
பயிலும் குருவின் பதி புக்க போதே
கயிலை இறைவன் கதிர் வடிவு ஆமே.
உரை

6. சாயுச்சியம்

1 சைவம் சிவனுடன் சம்பந்தம் ஆவது
சைவம் தனை அறிந்தே சிவம் சாருதல்
சைவம் சிவம் தன்னைச் சாராமல் நீவுதல்
சைவம் சிவ ஆனந்தம் சாயுச்சியமே.
உரை
 
2 சா யுச்சியம் சாக்கிர் அதீதம் சாருதல்
சா யுச்சிம் உப சாந்தத்துத் தங்குதல்
சா யுச்சியம் சிவம் ஆதல் முடிவு இலாச்
சாயுச்சிய மனத்து ஆனந்த சத்தியே.
     

17. சத்திநி பாதம் - மந்தரம்

1இருட்டு அறை மூலை இருந்த கிழவி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீங்கிக் குணம் பல காட்டி
மருட்டி அவனை மணம் புரிந்தாளே.
உரை  
2தீம் புலன் ஆன திசை அது சிந்திக்கில்
ஆம் புலன் ஆய அறிவார்க்கு அமுதாய் நிற்கும்
தேம் புலன் ஆன தெளிவு அறிவார்கட்கு
ஓம் புலன் ஆடிய கொல்லையும் ஆமே.
உரை  
3இருள் நீக்கி எண் இல் பிறவி கடத்தி
அருள் நீங்கா வண்ணமே ஆதி அருளும்
மருள் நீங்கா வானவர் கோன் ஒடும் கூடிப்
பொருள் நீங்கா இன்பம் புலம் பயில் தானே.
உரை  
4இருள் சூழ் அறையில் இருந்தது நாடில்
பொருள் சூழ் விளக்கு அது புக்கு எரிந்தால் போன்று
மருள் சூழ் மயக்கத்து மா மலர் நந்தி
அருள் சூழ் இறைவனும் அம்மையும் ஆமே.
உரை  
மந்ததரம்
5மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி
வெருட்டி வினை அறுத்து இன்பம் விளைத்துக்
குருட்டினை நீக்கிக் குணம் பல காட்டி
அருள் திகழ் ஞானம் அது புரிந்தானே.
உரை  
6கன்னித் துறை படிந்து ஆடிய ஆடவர்
கன்னித் துறை படிந்து ஆடும் கருத்து இலர்
கன்னித் துறை படிந்து ஆடும் கருத்து உண்டேல்
பின்னைப் பிறவி பிறிது இல்லை தானே.
உரை  
7செய்யன் கரியன் வெளியன் நல் பச்சையன்
எய்த உணர்ந்தவர் எய்வர் இறைவனை
மை வென்று அகன்ற படுகரி போர்த்த வெம்
கையன் இவன் என்று காதல் செய்வீரே.
உரை  
8எய்திய காலங்கள் எத்தனை ஆயினும்
தையலும் தானும் தனி நாயகம் என்பர்
வைகலும் தன்னை வணங்கும் அவர் கட்குக்
கையில் கருமம் செய் காட்டு அது ஆமே.
உரை  
9கண்டு கொண்டோம் இரண்டும் தொடர்ந்து ஆங்கு ஒளி
பண்டு பண்டு ஓயும் பரமன் பரம்சுடர்
வண்டு கொண்டு ஆடும் மலர் வார் சடை அண்ணல்
நின்று கண்டார்க்கு இருள் நீக்கி நின்றானே.
உரை  
தீவிரம்
10அண்ணிக்கும் பெண் பிள்ளை அப்பனார் தோட்டத்தில்
எண்ணிக்கும் ஏழ் ஏழ் பிறவி உணர்விக்கும்
உள் நிற்பது எல்லாம் ஒழிய முதல்வனைக்
கண் உற்று நின்ற கனி அது ஆகுமே.
உரை  
11பிறப்பை அறுக்கும் பெரும்தவம் நல்கும்
மறப்பை அறுக்கும் வழிபட வைக்கும்
குறப் பெண் குவி முலை கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்ய நின்றார்க்கே.
உரை  
12தாங்குமின் எட்டுத் திசைக்கும் தலைமகன்
பூங் கமழ் கோதைப் புரிகுழலாள் ஒடும்
ஆங்கு அது சேரும் அறிவு உடையார் கட்குத்
தூங்கு ஒளி நீலம் தொடர்தலும் ஆமே.
உரை  
13நணுகினும் ஞானக் கொழுந்து ஒன்று நல்கும்
பணிகிலும் பல்மலர் தூவிப் பணிவன்
அணுகியது ஒன்று அறியாத ஒருவன்
அணுகும் உலகு எங்கும் ஆவியும் ஆமே.
உரை  
தீவிரரரம்
14இருவினை நேர் ஒப்பு இல் இன் அருள் சத்தி
குருஎன வந்து குணம் பல நீக்கித்
தரும் எனும் ஞானத்தால் தன் செயல் அற்றால்
திரி மலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே.
உரை  
15மாலை விளக்கும் மதியமும் ஞாயிறும்
சாலை விளக்கும் தனிச்சுடர் அண்ணல் உள்
ஞானம் விளக்கிய நாதன் என் உள் புகுந்து
ஊனை விளக்கி உடன் இருந்தானே.
உரை  

18. புறச் சமயதூடணம்

1ஆயத்து உள் நின்ற அறு சமயங்களும்
காயத்து உள் நின்ற கடவுளைக் காண்கிலா
மாயக் குழியில் விழுவர் மனை மக்கள்
பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே.
உரை  
2ஆறு சமய முதலாம் சமயங்கள்
ஊறு அது எனவும் உணர்க உணர்பவர்
வேறு அது அற உணர்வார் மெய்க் குரு நந்தி
ஆறி அமைபவர்க்கு அண்ணிக்கும் தானே.
உரை  
3உள்ளத்து உளே தான் கரந்து எங்கும் நின்றவன்
வள்ளல் தலைவன் மலர் உறை மாதவன்
பொள்ளல் குரம்பைப் புகுந்து புறப்படும்
கள்ளத் தலைவன் கருத்து அறியார்களே.
உரை  
4உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பவர்க்கு
உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம் இறை
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை என்பவர்க்கு
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை தானே.
உரை  
5முதல் ஒன்றாம் ஆனை முதுகுடன் வாலும்
திதமுறு கொம்பு செவி துதிக்கை கான்
மதியுடன் அந்தகர் வகைவகை பார்த்தே
அது கூறல் ஒக்கும் ஆறு சமயமே.
உரை  
6ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்
ஆறு சமயப் பொருளும் அவன் அலன்
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்த பின்
மாறுதல் இன்றி மனைபுகல் ஆமே.
உரை  
7சிவம் அல்லது இல்லை அறையே சிவம் ஆம்
தவம் அல்லது இல்லை தலைப்படு வார்க்கு இங்கு
அவம் அல்லது இல்லை அறு சமயங்கள்
தவம் வல்ல நந்தி தாள் சார்ந்து உய்யும் நீரே.
உரை  
8அண்ணலை நாடிய ஆறு சமயமும்
விண்ணவர் ஆக மிகவும் விரும்பியே
முண் நின்று அழியும் முயன்று இலர் ஆதலால்
மண் நின்று ஒழியும் வகை அறியார்களே.
உரை  
9சிவகதியே கதி மற்று உள்ள எல்லாம்
மவகதி பாசப் பிறவி ஒன்று உண்டு
தவகதி தன்னொடு நேர் ஒன்று தோன்றில்
அவகதி மூவரும் அவ் வகை ஆமே.
உரை  
10நூறு சமயம் உளவா நுவலுங்கால்
ஆறு சமயம் அவ் ஆறு உட்படுவன
கூறு சமயங்கள் கொண்ட நெறி நில்லா
வீறு பர நெறி இல்லா நெறி யன்றே.
உரை  
11கத்தும் கழுதைகள் போலும் கலதிகள்
சுத்த சிவன் எங்கும் தோய் உற்று நிற்கின்றான்
குற்றம் தெளியார் குணம் கொண்டு கோது ஆட்டார்
பித்து ஏறி நாளும் பிறந்து இறப்பாரே.
உரை  
12மயங்கு கின்றாரும் மதி தெளிந்தாரும்
முயங்கி இருவினை முழை முகப் பாச்சி
இயங்கிப் பெறுவரேல் ஈறு அது காட்டில்
பயம் கெட்டவர்க்கு ஓர் பரநெறி ஆமே.
உரை  
13சேயன் அணியன் பிணி இலன் பேர் நந்தி
தூயன் துளக்கு அற நோக்க வல்லார்கட்கு
மாயன் மயக்கிய மானுடராம் அவர்
காயம் விளைக்கும் கருத்து அறியார்களே.
உரை  
14வழி இரண்டுக்கும் ஓர் வித்து அது ஆன
பழி அது பார்மிசை வாழ்தல் உறுதல்
சுழி அறி வாளன் தன் சொல் வழி முன்நின்று
அழிவு அறிவார் நெறி நாட நில்லாரே.
உரை  
15மாதவர் எல்லாம் மா தேவன் பிரான் என்பர்
நாதம் அது ஆக அறியப் படும் நந்தி
பேதம் செய்யாதே பிரான் என்று கை தொழில்
ஆதியும் அந் நெறி ஆகி நின்றானே.
உரை  
16அரன் நெறி அப்பனை ஆதிப் பிரானை
உரன் நெறி ஆகி உளம் புகுந்தானைப்
பரன் நெறி தேடிய பத்தர்கள் சித்தம்
பரன் அறியா விடில் பல்வகைத் தூரமே.
உரை  
17பரிசு அறவான் அவன் பண்பன் பகலோன்
பெரிசு அறி வானவர் பேற்றில் திகழும்
துரிசு அற நீ நினை தூய் மணி வண்ணன்
அரிது அவன் வைத்த அற நெறி தானே.
உரை  
18ஆன சமயம் அது இது நன்று எனும்
மாய மனிதர் மயக்கம் அது ஒழி
கானம் கடந்த கடவுளை நாடுமின்
ஊனம் கடந்த உரு அது ஆமே.
உரை  
19அந் நெறி நாடி அமரர் முனிவரும்
செல் நெறி கண்டார் சிவன் எனப் பெற்றார் பின்
முன் நெறி நாடி முதல்வன் அருள் இலார்
செல் நெறி செல்லார் திகைக்கின்ற வாறே.
உரை  
20உறும் ஆறு அறிவதும் உள் நின்ற சோதி
பெறும் ஆறு அறியில் பிணக்கு ஒன்றும் இல்லை
அறும் ஆறு அது ஆன அங்கியுள் ஆங்கே
இறும் ஆறு அறிகிலர் ஏழைகள் தாமே.
உரை  
21வழி நடக்கும் பரிசு ஒன்று உண்டு வையம்
கழி நடக்கு உண்டவர் கற்பனை கேட்பர்
சுழி நடக்கும் துயரம் அது நீக்கிப்
பழி நடப் பார்க்குப் பரவலும் ஆமே.
உரை  
22வழி சென்ற மாதவம் வைகின்ற போது
பழி செல்லும் வல்வினைப் பற்று அறுத்து ஆங்கே
வழி செல்லும் வல்வினையார் திறம் விட்டிட்டு
உழி செல்லில் உம்பர் தலைவன் முன் ஆமே.
உரை  

19. நிராசாரம்

1இமையங்களாய் நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
அமை அறிந்தோம் என்பர் ஆதி பிரானும்
கமை அறிந்தார் உள் கலந்து நின்றானே.
உரை  
2பாங்கு அமர் கொன்றைப் படர் சடையான் அடி
தாங்கு மனிதர் தரணியில் நேர் ஒப்பர்
நீங்கிய வண்ணம் நினைவு செய்யாதவர்
ஏங்கி உலகில் இருந்து அழுவாரே.
உரை  
3இருந்து அழுவாரும் இயல்பு கெட்டாரும்
அரும் தவம் மேற் கொண்டு அங்கு அண்ணலை எண்ணில்
வருந்தா வகை செய்து வானவர் கோனும்
பெரும் தன்மை நல்கும் பிறப்பு இல்லை தானே.
உரை  
4தூர் அறிவாளர் துணைவர் நினைப்பு இலர்
பார் அறிவாளர் படுபயன் தான் உண்பர்
கார் அறிவாளர் கலந்து பிறப்பார்கள்
நீர் அறிவார் நெடு மா முகில் ஆமே.
உரை  
5அறிவுடன் கூடி அழைத்தது ஓர் தோணி
பறியுடன் பாரம் பழம்பதி சிந்தும்
குறி அது கண்டும் கொடுவினை யாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே.
உரை  
6மன்னும் ஒருவன் மருவும் மனோ மயன்
என்னின் மனிதர் இகழ்வர் இவ் ஏழைகள்
துன்னி மனமே தொழுமின் துணை இலி
தன்னையும் அங்கே தலைப் படல் ஆமே.
உரை  
7ஓங்காரத்து உள் ஒளி உள்ளே உதயம் உற்று
ஆங்காரம் அற்ற அனுபவம் கை கூடார்
சாங்காலம் உன்னார் பிறவாமை சார் உறார்
நீங்காச் சமயத்துள் நின்று ஒழிந்தார்களே.
உரை  

20. உட் சமயம்

1இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்தவன் ஆதி புராணன்
சமையங்கள் ஆறும் தன் தாள் இணை நாட
அமையம் குழல் கின்ற ஆதி பிரானே.
உரை  
2ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள
என்றது போல இரு முச் சமயமும்
நன்று இது தீது இது என்று உரையாளர்கள்
குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே.
உரை  
3சைவப் பெருமைத் தனி நாயகன் தன்னை
உய்ய உயிர்க் கின்ற ஒண் சுடர் நந்தியை
மெய்ய பெருமையர்க்கு அன்பனை இன்பம் செய்
வையத் தலைவனை வந்து அடைந்து உய்மினே.
உரை  
4சிவன் அவன் வைத்தது ஓர் தெய்வ நெறியில்
பவன் அவன் வைத்த பழ வழி நாடி
இவன் அவன் என்பது அறிய வல்லார்கட்கு
அவன் அவன் அங்கு உளதாம் கடன் ஆமே.
உரை  
5ஆம் ஆறு உரைக்கும் அறு சமய ஆதிக்குப்
போம் ஆறு தான் இல்லை புண்ணியம் அல்லது அங்கு
ஆம் ஆம் வழி ஆக்கும் அவ் வேறு உயிர் கட்கும்
போம் ஆறு அவ் ஆதாரப் பூங் கொடியாளே.
உரை  
6அரன் நெறி ஆவது அறிந்தேனும் நானும்
சிர நெறி தேடித் திரிந்த அந்நாளும்
உர நெறி உள்ளக் கடல் கடந்து ஏறும்
தர நெறி நின்ற தனிச் சுடர் தானே.
உரை  
7தேர்ந்த அரனை அடைந்த சிவ நெறி
பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள் நெறி
போந்து புனைந்து புணர் நெறி ஆமே.
உரை  
8ஈருமனத்தை இரண்டு அற வீசுமின்
ஊரும் சகாரத்தை ஓதுமின் ஓதியே
வாரும் அரநெறி மன்னியே முன்னியத்
தூரும் சுடர் ஒளி தோன்றலும் ஆமே.
உரை  
9மினல் குறியாளனை வேதியர் வேதத்து
அனல் குறியாளனை ஆதிப் பிரான் தன்னை
நினைக் குறியாளனை ஞானக் கொழுந்தின்
நயக் குறி காணில் அரன் நெறி ஆமே.
உரை  
10ஆய்ந்து உணரார் களின் ஆன்மாச் சதுர் பல
ஆய்ந்து உணரா வகை நின்ற அரன் நெறி
பாய்ந்து உணர்வார் அரன் சேவடி கை தொழு
தேர்ந்து உணர் செய்வது ஓர் இன்பமும் ஆமே.
உரை  
11சைவ சமயத் தனிநாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்து உய்ய
வையத்து உளார்க்கு வகுத்து வைத்தானே.
உரை  
12இத்தவம் அத்தவம் என்று இரு பேர் இடும்
பித்தரைக் காணின் நகும் எங்கள் பேர் நந்தி
எத்தவம் ஆகில் என் எங்குப் பிறக்கில் என்
ஒத்து உணர்வார்க்கு ஒல்லையூர் புகல் ஆமே.
உரை  
13ஆமே பிரான் முகம் ஐந்தொடும் ஆர் உயிர்
ஆமே பிரானுக்கு அதோ முகம் ஆறு உள
தாமே பிரானுக்கும் தன் சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரர் இயல்பாமே.
உரை  
14ஆதிப் பிரான் உலகு ஏழும் அளந்தவன்
ஓதக் கடலும் உயிர்களும் ஆய் நிற்கும்
பேதிப்பு இலாமையின் நின்ற பராசத்தி
ஆதிக் கண் தெய்வமும் அந்தமும் ஆமே.
உரை  
15ஆய்ந்து அறிவார்கள் அமரர் வித்தியாதரர்
ஆய்ந்து அறியா வண்ணம் நின்ற அரன் நெறி
ஆய்ந்து அறிந்தேன் அவன் சேவடி கை தொழ
ஆய்ந்து அறிந்தேன் இம்மை அம்மை கண்டேனே.
உரை  
16அறிய ஒண்ணாத அவ் உடம்பின் பயனை
அறிய ஒண்ணாத அறு வகை ஆக்கி
அறிய ஒண்ணாத அறுவகைக் கோசத்து
அறிய ஒண்ணாதது ஓர் அண்டம் பதிந்தே.
உரை  

ஆறாம் தந்திரம்

1. சிவகுரு தரிசனம்

1பத்திப் பணித்துப் பரவும் அடி நல்கிச்
சுத்த உரையால் துரிசு அறச் சோதித்துச்
சத்தும் அசத்தும் சத சத்தும் காட்டலால்
சித்தம் இறையே சிவகுரு ஆமே.
உரை  
2பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு
நேசித்த காயம் விடிவித்து நேர் நேரே
கூசற்ற முத்தியில் கூட்டலா நாட்டதுஅது
ஆசற்ற சற்குரு அம்பலம் ஆமே.
உரை  
3சித்திகள் எட்டொடும் திண் சிவம் ஆக்கிய
சுத்தியும் எண் சத்தித் தூய்மையும் யோகத்துச்
சத்தியும் மந்திர சாதக போதமும்
பத்தியும் நாதன் அருளில் பயிலுமே.
உரை  
4எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பால் ஆய்
நல்லார் உள்ளத்து மிக்கு அருள் நல் கலால்
எல்லாரும் உய்யக் கொண்டு இங்கே அளித்த லால்
சொல்லார்ந்த நல்குரு சுத்த சிவமே.
உரை  
5தேவனும் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றாய் உனக் கண்டு உரையாலே
மூவாப்பசு பாசம் மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்கும் குருபரன் அன்பு உற்றே.
உரை  
6சுத்த சிவன் குருவாய் வந்து தூய்மை செய்து
அத்தனை நல்கு அருள் காணா அதி மூடர்
பொய்த் தகு கண்ணான் நமர் என்பர் புண்ணியர்
அத்தன் இவன் என்று அடி பணிவாரே.
உரை  
7உண்மையில் பொய்மை ஒழித்தலும் உண்மைப் பார்
திண்மையும் ஒண்மைச் சிவம் ஆய அவ் அரன்
வண்மையும் எட்டு எட்டுச் சித்தி மயக்கமும்
அண்ணல் அருள் அன்றி யார் அறிவாரே.
உரை  
8சிவனே சிவ ஞானி ஆதலால் சுத்த
சிவனே என அடி சேர வல்லார்க்கு
நவம் ஆன தத்துவம் நல் முத்தி நண்ணும்
பவம் ஆனது இன்றிப் பரலோகம் ஆமே.
உரை  
9குருவே சிவம் எனக் கூறினன் நந்தி
குருவே சிவம் என்பது குறித்து ஓரார்
குருவே சிவனும் ஆய்க் கோனும் ஆய் நிற்கும்
குருவே உணர்வு அற்றது ஓர் கோவே.
உரை  
10சித்தம் யாவையும் சிந்தித்து இருந்திடும்
அத்தன் உணர்த்துவது ஆகும் அருளாலே
சித்தம் யாவையும் திண் சிவம் ஆனக்கால்
அத்தனும் அவ் இடத்தே அமர்ந்தானே.
உரை  
11தான் நந்தி சீர்மை உள் சந்தித்த சீர் வைத்த
கோன் நந்தி எந்தை குறிப்பு அறிவார் இல்லை
வான் நந்தி என்று மகிழும் ஒருவற்குத்
தான் நந்தி அங்கித் தனிச் சுடர் ஆமே.
உரை  
12திரு ஆய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளாது அருளும் மயக்கு அறும் வாய்மைப்
பொருள் ஆய வேத அந்த போதமும் நாதன்
உருவாய் அருளா விடில் ஓர ஒண்ணாதே.
உரை  
13பத்தியும் ஞான வைராக்கியமும் பர
சித்திக்கு வித்து ஆம் சிவோகமே சேர்தலான்
முத்தியின் ஞானம் முளைத்தலால் அம்முளை
சத்தி அருள் தரில் தான் எளிது ஆமே.
உரை  
14இன் எய்த வைத்தது ஓர் இன்பப் பிறப்பினை
முன் எய்த வைத்த முதல்வனை எம் இறை
தன் எய்தும் காலத்துத் தானே வெளிப்படும்
மன் எய்த வைத்த மனம் அது தானே.
உரை  
15சிவம் ஆன ஞானம் தெளிய ஒண் சித்தி
சிவம் ஆன ஞானம் தெளிய ஒண் முத்தி
சிவம் ஆன ஞானம் சிவ பரத்தே ஏகச்
சிவம் ஆன ஞானம் சிவ ஆனந்தம் நல்குமே.
உரை  
16அறிந்து உணர்ந்தேன் இவ் அகல் இடம் முற்றும்
செறிந்து உணர்ந்து ஓதித் திரு அருள் பெற்றேன்
மறந்து ஒழிந்தேன் மதி மாண்டவர் வாழ்க்கை
பிறிந்து ஒழிந்தேன் இப் பிறவியை நானே.
உரை  

3. ஞாதுரு ஞான ஞேயம்

1நீங்காச் சிவ ஆனந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கு ஆன பாசம் படரா படரினும்
ஆங்காரம் நீங்கி அதன் நிலை நிற்கவே
நீங்கா அமுதம் நிலை பெறல் ஆமே.
உரை  
2ஞேயத்தே நின்றோர்க்கு ஞான ஆதி நின்றிடும்
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடு ஆகும்
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை உற்றவர்
ஆயத்தில் நின்ற அறிவு அறிவாறே.
உரை  
3தான் என்று அவன் என்று இரண்டு ஆகும் தத்துவம்
தான் என்று அவன் என்று இரண்டும் தனில் கண்டு
தான் என்ற பூவை அவன் அடி சாத்தினால்
நான் என்று அவன் என்கை நல்லது ஒன்று அன்றே.
உரை  
4வைச்சன வாறு ஆறு மாற்றி எனை வைத்து
மெச்சப் பரன்தன் வியாத்துவம் மேல் இட்டு
நிச்சயம் ஆக்கிச் சிவம் ஆக்கி ஞேயத்தால்
அச்சம் கெடுத்து என்னை ஆண்டனள் நந்தியே.
உரை  
5முன்னை அறிவு அறியாத அம் மூடர் போல்
பின்னை அறிவு அறியாமையைப் பேதித்தான்
தன்னை அறியப் பரன் ஆக்கித் தன்சிவத்து
என்னை அறிவித்து இருந்தனன் நந்தியே.
உரை  
6காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும்
கோணாத போகமும் கூடாத கூட்டமும்
நாணாத நாணமும் நாத அந்தப் போதமும்
காணாய் என வந்து காட்டினன் நந்தியே.
உரை  
7மோனம் கை வந்தோர்க்கு முத்தியும் கை கூடும்
மோனம் கை வந்தோர்க்குச் சித்தியும் முன் நிற்கும்
மோனம் கை வந்து ஊமையாம் மொழி முற்றும் காண்
மோனம் கை வந்து ஐங் கருமமும் முன்னுமே.
உரை  
8முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின் பால்
வைத்த கலை கால் நான் மடங்கான் மாற்றி
உய்த் தவத்து ஆனந்தத்து ஒண் குரு பாதத்தே
பெத்தம் அறுத்தோர் பிறந்து இறவாரே.
உரை  
9மேலைச் சொரூபங்கள் மூன்று மிகு சத்தி
பாலித்த முத்திரை பற்றும் பரஞானி
ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்து அற்ற
மூலச் சொரூபன் மொழிஞா துருவனே.
உரை  

4. துறவு

1இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித்
துறக்கும் தவம் கண்ட சோதிப் பிரானை
மறப்பு இலராய் நித்தம் வாய் மொழிவார் கட்கு
அறப்பதி காட்டும் அமரர் பிரானே.
உரை  
2பிறந்தும் இறந்தும் பல் பேதைமை யாலே
மறந்து மல இருள் நீங்க மறைந்து
சிறந்த சிவன் அருள் சேர் பருவத்துத்
துறந்த உயிர்க்குச் சுடர் ஒளி ஆமே.
உரை  
3அறவன் பிறப்பு இலி யாரும் இலாதான்
உறைவது காட்டு அகம் உண்பது பிச்சை
துறவனும் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி அறுத்திடும் பித்தன் கண்டீரே.
உரை  
4நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில் முள் பாயும்
நெறியில் வழுவாது இயங்க வல்லார்க்கு
நெறியின் நெருஞ்சில் முள் பாய கிலாவே.
உரை  
5கேடும் கடமையும் கேட்டு வந்து ஐவரும்
நாடி வளைந்தது நான் கடவேன் அலேன்
ஆடல் விடை உடை அண்ணல் திருவடி
கூடும் தவம் செய்த கொள்கையான் தானே.
உரை  
6உழவன் உழ உழ வானம் வழங்க
உழவன் உழவினில் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண் ஒக்கும் என்று இட்டு
உழவன் அதனை உழவு ஒழிந்தானே.
உரை  
7மேல் துறந்து அண்ணல் விளங்கு ஒளி கூற்றுவன்
நாள் துறந்தார்க்கு அவன் நண்பன் அவா இலி
கார் துறந்தார்க்கு அவன் கண் நுதலாய் நிற்கும்
பார் துறந்தார்க்கே பதம் செயல் ஆமே.
உரை  
8நாகமும் ஒன்று படம் ஐந்து நால் அது
போக முள் புற்றில் பொருந்தி நிறைந்தது
ஆகம் இரண்டும் படம் விரித்து ஆட்டு ஒழிந்து
ஏகப் படம் செய்து உடம்பு இடம் ஆமே.
உரை  
9அகன்றார் வழி முதல் ஆதிப் பிரானும்
இவன் தான் என நின்று எளியனும் அல்லன்
சிவன் தாள் பலபல சீவனும் ஆகும்
நயன்றான் வரும் வழி நாம் அறியோமே.
உரை  
10தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும்
ஆம்பல் குழலியின் கஞ்சுளிப் பட்டது
வேம்பு ஏறிநோக்கினன் மீகாமன் கூரையில்
கூம்பு ஏறிக் கோயிலில் பூக்கின்ற வாறே.
உரை  

5. தவம்

1ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவது இல்லை நமனும் அங்கு இல்லை
இடும்பையும் இல்லை இராப் பகல் இல்லை
படும் பயன் இல்லை பற்று விட்டோர்க்கே.
உரை  
2எம் ஆர் உயிரும் இரு நிலத் தோற்றமும்
செம் மா தவத்தின் செயலின் பெருமையும்
அம்மான் திரு அருள் பெற்றவர் அல்லால்
இம் மாதவத்தின் இயல்பு அறியாரே.
உரை  
3பிறப்பு அறியார் பல பிச்சை செய் மாந்தர்
சிறப் பொடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பு இலர் ஆகிய மா தவம் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமை பெற்றாரே.
உரை  
4இருந்து வருந்தி எழில் தவம் செய்யும்
பெரும் தன்மையாளரைப் பேதிக்க என்றே
இருந்து இந்திரன் எவரே வரினும்
திருந்து நும் தம் சிந்தை சிவன் அவன் பாலே.
உரை  
5கரந்தும் கரந்து இலன் கண்ணுக்கும் தோன்றான்
பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன்
அரும்தவர்க்கு அல்லால் அணுகலும் ஆகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி ஆனே.
உரை  
6அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்
பகைத்து எழும் பூசல் உட்பட்டார் நடுவே
அமைத்தது ஓர் ஞானமும் ஆத்தமும் நோக்கி
இமைத்து அழியாது இருந்தார் தவத்தாரே.
உரை  
7சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டு நீர்
மாத்திரைப் போது மறித்து உள்ளே நோக்கு மின்
பார்த்த அப் பார்வை பசுமரத்து ஆணி போல்
ஆர்த்த பிறவி அகல விட்டு ஓடுமே.
உரை  
8தவம் வேண்டும் ஞானம் தலைபட வேண்டில்
தவம் வேண்டா ஞான சாமாதிகை கூடில்
தவம் வேண்டா அச் சக மார்க்கத் தோர்க்குத்
தவம் வேண்டா மாற்றம் தனை அறியாரே.
உரை  

6. தவ நிந்தை

1ஓதலும் வேண்டாம் உயிர்க்கு உயிர் உள் உற்றால்
காதலும் வேண்டாம் மெய்க் காயம் இடம் கண்டால்
சாதலும் வேண்டாம் சமாதிகை கூடினால்
போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே.
உரை  
2கத்தவும் வேண்டாம் கருத்து அறிந்து ஆறினால்
சத்தமும் வேண்டாம் சமாதிகை கூடினால்
சுத்தமும் வேண்டாம் துடக்கு அற்று நிற்றல் ஆல்
சித்தமும் வேண்டாம் செயல் அற்று இருக்கிலே.
உரை  
3விளைவு அறிவார் பண்டை மெய்த்தவம் செய்வார்
விளைவு அறிவார் பண்டை மெய் செய்வார்
விளைவு அறிவார் பண்டை மெய் அறம் செய்வார்
விளைவு அறிவார் விண்ணின் மண்ணின் மிக்காரே.
உரை  
4கூடித் தவம் செய்து கண்டேன் குரை கழல்
தேடித் தவம் செய்து கண்டேன் சிவ கதி
வாடித் தவம் செய்வதே தவம் இவை களைந்து
ஊடில் பல உலகோர் எத்தவரே.
உரை  
5மனத்து உறை மா கடல் ஏழும் கை நீந்தித்
தவத்து இடையாளர் தம் சார்வத்து வந்தார்
பவத்து இடையாளர் அவர் பணி கேட்கின்
முகத்து இடை நந்தியை முந்தலும் ஆமே.
உரை  
6மனத்து இடை நின்ற மதிவாள் உருவி
இனத்து இடை நீக்கி இரண்டு அற ஈர்த்துப்
புனத்து இடை அஞ்சும் போகாமல் மறித்தால்
தவத்து இடை ஆறொளி தன் ஒளி ஆமே.
உரை  
7ஒத்து மிகவும் நின்றானை உரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்து அடியார் தொழ
முத்தி கொடுக்கும் முனிவன் எனும் பதம்
சத்தான செய்வது தான் தவம் தானே.
உரை  
8இலை தொட்டுப் பூப் பறித்து எந்தைக்கு என்று எண்ணி
மலர் தொட்டுக் கொண்டேன் வரும் புனல் காணேன்
தலை தொட்ட நூல் கண்டு தாழ்ந்தது என் உள்ளம்
தலை தொட்டுக் கண்டேன் தவம் கண்ட வாறே.
உரை  
9படர் சடை மா தவம் பற்றிய பத்தர்க்கு
இடர் அடையா வண்ணம் ஈசன் அருளும்
இடர் அடை செய்தவர் மெய்த்தவம் நோக்கில்
உடர் அடை செய்வது ஒரு மனத்து ஆமே.
உரை  
10ஆற்றில் கிடந்த முதலை கண்டு அஞ்சிப் போய்
ஈற்றுக் கரடிக்கு எதிர்ப்பட்ட தன் ஒக்கும்
நோற்றுத் தவம் செய்யார் நூல் அறியாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.
உரை  
11பழுக் கின்ற வாறும் பழம் உண்ணும் ஆறும்
குழக் கன்று துள்ளியக் கோணியைப் பல்கால்
குழக் கன்று கொட்டிலில் கட்டவல்லார்க்கு உள்
இழுக் காது நெஞ்சத்து இட ஒன்றும் ஆமே.
உரை  
12சித்தம் சிவம் ஆகச் செய் தவம் வேண்டா ஆல்
சித்தம் சிவ ஆனந்தம் சேர்ந்தோர் உறவு உண்டால்
சித்தம் சிவம் ஆகவே சித்தி முத்தி ஆம்
சித்தம் சிவம் ஆதல் செய்தவப் பேறே.
உரை  

7. அருள் உடைமையின் ஞானம் வருதல்

1பிரான் அருள் உண்டு எனில் உண்டு நல் செல்வம்
பிரான் அருள் உண்டு எனில் உண்டு நல் ஞானம்
பிரான் அருளில் பெரும் தன்மையும் உண்டு
பிரான் அருளில் பெரும் தெய்வமும் ஆமே.
உரை  
2தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகம் திரிவார்
அவிழும் மனமும் எம் ஆதி அறிவும்
தமிழ் மண்டலம் ஐந்தும் தத்துவம் ஆமே.
உரை  
3புண்ணியம் பாவம் இரண்டு உள பூமியில்
நண்ணும் பொழுது அறிவார் சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேர் அறுத்துப்புறத்து
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வீரே.
உரை  
4முன் நின்று அருளும் முடிகின்ற காலத்து
நல் நின்று உலகில் நடு உயிராய் நிற்கும்
பின் நின்று அருளும் பிறவியை நீக்கிடும்
முன் நின்று எனக்கு ஒரு முத்தி தந்தானே.
உரை  
5சிவன் அருளால் சிலர் தேவரும் ஆவர்
சிவன் அருளால் சிலர் தெய்வத்தோடு ஒப்பர்
சிவன் அருளால் வினை சேர கிலாமை
சிவன் அருள் கூடின் அச் சிவலோகம் ஆமே.
உரை  
6புண்ணியன் எந்தை புனிதன் இணை அடி
நண்ணி விளக்கு என ஞானம் விளைந்தது
மண்ணவர் ஆவதும் வானவர் ஆவதும்
அண்ணல் இறைவன் அருள் பெற்ற போதே.
உரை  
7காயத் தேர் ஏறி மனப் பாகன் கை கூட்ட
மாயத் தேர் ஏறி மங்கும் அவை உணர்
நேயத் தேர் ஏறி நிமலன் அருள் பெற்றால்
ஆயத் தேர் ஏறி அவன் இவன் ஆமே.
உரை  
8கதிர் கண்ட காந்தம் கனலின் வடிவு ஆம்
மதி கண்ட காந்தம் மணி நீர் வடிவு ஆம்
சதி கொண்ட சாக்கி எரியின் வடிவு ஆம்
எரி கொண்ட ஈசன் எழில் வடிவு ஆமே.
உரை  
9நாடும் உறவும் கலந்து எங்கள் நந்தியைத்
தேடுவன் தேடிச் சிவ பெருமான் என்று
கூடுவன் கூடிக் குறை கழற்கே செல்ல
வீடும் அளவும் விடுகின்றிலேனே.
உரை  



8. அவ வேடம்

1ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவன் அவன் தாள் களே.
உரை  
2ஞானம் இல்லார் வேடம் பூண்டு இந்த நாட்டு இடை
ஈனம் அதே செய்து இரந்து உண்டு இருப்பினும்
மானம் நலம் கெடும் வையகம் பஞ்சம் ஆம்
ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.
உரை  
3இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்து உள்ள
நன் செயல் புன் செயலால் அந்த நாட்டிற்கு ஆம்
என்ப இறை நாடி நாள் தோறும் நாட்டினில்
மன் பதை செப்பம் செயின் வையம் வாழுமே.
உரை  
4இழிகுலத்தோர் வேடம் பூண்பர் மேல் எய்த
வழி குலத்தோர் வேடம் பூண்பர்தே ஆகப்
பழிகுலத்து ஆகிய பாழ் சண்டர் ஆனார்
கழி குலத்தோர்கள் களையப் பட்டோரே.
உரை  
5பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்துப்
பொய்த்தவம் செய்தவர் புண்ணியர் ஆகார் ஏல்
பொய்த்தவம் மெய்த்தவம் போகத்துள் போக்கி அம்
சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே.
உரை  
6பொய் வேடம் பூண்பர் பொசித்தல் பயன் ஆக
மெய் வேடம் பூண்போர் மிகு பிச்சைகைக் கொள்வர்
பொய் வேடம் மெய் வேடம் போலவே பூணினும்
உய் வேடம் ஆகும் உணர்ந்து அறிந்தோர்க்கே.
உரை  


9. தவவேடம்

1தவம் மிக்கவரே தலையான வேடர்
அவம் மிக்கவரே அதி கொலை வேடர்
அவம் மிக்கவர் வேடத்து ஆகார் அவ் வேடம்
தவம் மிக்கவர்க்கு அன்றித் தாங்க ஒண்ணாதே.
உரை  
2பூதி அணிவது சாதனம் ஆதியில்
காது அணி தாம்பிர குண்டலம் கண்டிகை
ஓதி அவர்க்கும் உருத்திர சாதனம்
தீது இல் சிவ யோகி சாதனம் தேரிலே.
உரை  
3யோகிக்கு இடும் அதுவுள் கட்டுக் கஞ்சுளி
தோகைக்குப் பாசத்துச் சுற்றும் சடை அது ஒன்று
ஆகத்து நீறு அணி ஆங்கு அக் கபாலம்
சீகத்த மாத்திரை திண் பிரம்பு ஆகுமே.
உரை  
4காது அணி குண்டலம் கண்டிகை நாதமும்
ஊது நல் சங்கும் உயர் கட்டி கப்பரை
ஏதம் இல் பாதுகம் யோகாந்த மா தனம்
ஏதல் இல் யோக பட்ட அம் தண்டம் ஈர் ஐந்தே.
உரை  



10. திருநீறு

1நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள்
நூல் அது வேத அந்தம் நுண் சிகை ஞானம் ஆம்
பால் ஒன்றும் அந்தணர் பார்ப்பார் பரம் உயிர்
ஓர் ஒன்று இரண்டினில் ஓங்காரம் ஓதிலே.
உரை  
2கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாம் ஆகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்காரம் ஆன திருவடி சேர்வரே.
உரை  
3அரசுடன் ஆலத்தி ஆகும் அக்காரம்
விரவு கனலில் வியன் உரு மாறி
நிரவயன் நின்மலன் தாள் பெற்ற நீதர்
உருவம் பிரமன் உயர் குலம் ஆகுமே.
உரை  

11. ஞான வேடம்

1ஞானம் இலார் வேடம் பூண்டும் நரகத்தார்
ஞானம் உள்ளார் வேடம் இன்று எனில் நல் முத்தர்
ஞானம் உளது ஆக வேண்டுவோர் நக்கன்பால்
ஞானம் உள வேடம் நண்ணி நிற்பாரே.
உரை  
2புன் ஞானத்தோர் வேடம் பூண்டும் பயன் இல்லை
நல் ஞானத்தோர் வேடம் பூணார் அருள் நண்ணித்
துன் ஞானத்தோர் சமய துரிசு உள்ளோர்
பின் ஞானத்தோர் ஒன்றும் பேச கில்லாரே.
உரை  
3சிவ ஞானி கட்கும் சிவ யோகி கட்கும்
அவம் ஆன சாதனம் ஆகாது தேரில்
அவம் ஆம் அவர்க்கு அது சாதனம் நான்கும்
உவமானம் இல் பொருள் உள் உறம் ஆமே.
உரை  
4கத்தித் திரிவர் கழுவடி நாய் போல்
கொத்தித் திரிவர் குரக்களி ஞாளிகள்
ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே
செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே.
உரை  
5அடியார் அவரே அடியார் அலா தார்
அடியாரும் ஆகார் அவ் வேடமும் ஆகார்
அடியார் சிவ ஞானம் ஆனது பெற்றோர்
அடியார் அலாதார் அடியார்கள் அன்றே.
உரை  
6ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்ல ஆம்
தான் உற்ற வேடமும் தன் சிவ யோகமே
ஆன அவ்வேடம் அருள் ஞான சாதனம்
ஆனது ஆம் ஒன்றும் ஆகாது அவனுக்கே.
உரை  
7ஞானத்தினால் பதம் நண்ணும் சிவ ஞானி
தானத்தில் வைத்த தனி ஆலயத்தன் ஆம்
மோனத்தின் ஆதலின் முத்தன் ஆம் சித்தன் ஆம்
ஏனைத் தவசி இவன் எனல் ஆகுமே.
உரை  
8தான் அற்ற தன்மையும் தான் அவன் ஆதலும்
ஏனைய அச் சிவம் ஆன இயற்கையும்
தான் உறு சாதக முத்திரை சாத்தலும்
ஏனமும் நந்தி பத முத்தி பெற்றதே.
உரை  



12. சிவவேடம்

1அருளால் அரனுக்கு அடிமை அது ஆகிப்
பொருள் ஆம் தனது உடல் பொன் பதி நாடி
இருள் ஆனது இன்றி இரும் செயல் அற்றோர்
தெருள் ஆம் அடிமைச் சிவ வேடத்தோரே.
உரை  
2உடலில் துவக்கிய வேடம் உயிர்க்கு ஆகா
உடல் கழன்றால் வேடம் உடனே கழலும்
உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே.
உரை  
3மயல் அற்று இருள் அற்று மா மனம் அற்று
கயல் உற்ற கண்ணியர் கை இணக்கு அற்றுத்
தயல் அற்றவரோடும் தாமே தாம் ஆகிச்
செயல் அற்று இருப்பார் சிவ வேடத்தாரே.
உரை  
4ஓடும் குதிரைக் குசை திண்ணம் பற்றுமின்
வேடம் கொண்டு என் செய்வீர் வேண்டா மனிதரே
நாடுமின் நந்தியை நம் பெருமான் தன்னைத்
தேடும் இன்பப் பொருள் சென்று எய்தலாமே.
உரை  


13. அபக்குவன்

1குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழும் ஆறே.
உரை  
2மனத்தில் எழுந்தது ஓர் மாயக் கண்ணாடி
நினைப்பின் அதனின்ல் நிழலையும் காணார்
வினைப் பயன் போக விளக்கியும் கொள்ளார்
புறக் கடை இச்சித்துப் போகின்ற வாறே.
உரை  
3ஏய் எனில் என் என மாட்டார் பிரசைகள்
வாய் முலை பெய்ய மதுர நின்று ஊறிடும்
தாய் முலை ஆவது அறியார் தமர் உளோர்
ஊன் நிலை செய்யும் உரு இலிதானே.
உரை  
4வாய் ஒன்று சொல்லி மனம் ஒன்று சிந்தித்து
நீ ஒன்று செய்யல் உறுதி நெடும் தகாய்
தீ என்று இங்கு உன்னைத் தெளிவன் தெளிந்தபின்
பேய் என்று இங்கு என்னைப் பிறர் தெளியாரே.
உரை  
5பஞ்சத் துரோகத்துப் பாதகர் தம்மை
அஞ்சச் சமயத்தோர் வேந்தன் அரும் தண்டம்
விஞ்சச் செய்து இப்புவி வேறே விடா விடில்
பஞ்சத்து உளாய்ப் புவி முற்றும் பாழ் ஆகுமே.
உரை  
6தவத்து இடை நின்றவர் தாம் உண்ணும் கன்மம்
சிவத்து இடை நின்றது தேவர் அறியார்
தவத்து இடை நின்று அறியாதவர் எல்லாம்
பவத்து இடை நின்றது ஓர் பாடு அது ஆமே.
உரை  
7கன்றலும் கருதலும் கருமம் செய்தலும்
நின்றலும் சுவைத்தலும் தீமை செய்தலும்
பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும்
என்று இவை இறை பால் இயற்கை அல்லவே.
உரை  
8விடிவது அறியார் வெளி காண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார்
கடியது ஓர் உண்மை கட்டு மின் காண்மின்
விடியாமை காக்கும் விளக்கு அது ஆமே.
உரை  
9வைத்த பசு பாச மாற்று நெறி வைகிப்
பெத்தம் அற முத்தன் ஆகிப் பிறழ் உற்றுத்
தத்துவம் உன்னித் தலைப் படாது அவ்வாறு
பித்து ஆன சீடனுக்கு ஈயப் பெறாது ஆனே.
உரை  
10மன்னும் மலம் ஐந்தும் மாற்றும் வகை ஓரான்
துன்னிய காமம் ஆதி தோயும் தொழில் நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்பு இறப்பு அஞ்சாதான்
அன்னியன் ஆவன் அசல் சீடன் ஆமே.
உரை  

4. பக்குவன்

1தொழில் அறிவாளர் சுருதி கண் ஆகப்
பழுது அறியாத பரம குருவை
வழி அறிவார் நல்வழி அறிவாளர்
அழிவு அறிவார் மற்றை அல்லாதவரே.
உரை  
2பதைத்து ஒழிந்தேன் பரமா உனை நாடி
அதைத்து ஒழிந்தேன் இனி யாரொடும் கூடேன்
சிதைத்து அடியேன் வினை சிந்தனை தீர
உதைத்து உடையாய் உகம் தாண்ட அருளாயே.
உரை  
3பதைக்கின்ற போதே பரம் என்னும் வித்தை
விதைக் கின்ற வித்தினை மேல் நின்று நோக்கிச்
சிதைக் கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி
இசைக் கின்ற அன்பருக்கு ஈயலும் ஆமே.
உரை  
4கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருள் உடல் ஆவியுடன் ஈக
எள்ளத் தனையும் இடைவிடதே நின்று
தெள்ளி அறியச் சிவ பதம் தானே.
உரை  
5சோதி விசாகம் தொடர்ந்து இரு தேள் நண்டு
ஓதிய நாளே உணர்வது தான் என்று
நீதியுள் நீர்மை நினைந்தவர்க்கு அல்லது
ஆதியும் ஏதும் அறிய கிலானே.
உரை  
6தொழில் ஆரம் ஆம் மணித் தூய்தான சிந்தை
எழிலால் இறைவன் இடம் கொண்ட போதே
விழலார் விறல் ஆம் வினை அது போகக்
கழல் ஆர் திருவடி கண்ட அருள் ஆமே.
உரை  
7சாத்திகன் ஆய்ப் பர தத்துவம் தான் உன்னி
ஆத்திக பேத நெறி தோற்றம் ஆகியே
ஆர்த்த பிறவியின் அஞ்சி அற நெறி
சாத்த வல்லான் அவன் சற் சீடன் ஆமே.
உரை  
8சத்தும் அசத்தும் எவ்வாறு எனந் தான் உன்னிச்
சித்தை உறுக்கிச் சிவன் அருள் கை காட்டப்
பத்தியின் ஞானம் பெறப் பணிந்தான் அந்தச்
சத்தியில் இச்சைத் தகுவோன் சற் சீடனே.
உரை  
9அடி வைத்து அருளுதி ஆசான் நின்று உன்னா
அடி வைத்த மா முடி மாயப் பிறவி
அடி வைத்த காய அருள் சத்தி யாலே
அடி பெற்ற ஞானத்தன் ஆசற்று உளோனே.
உரை  
10சீராரு ஞானத்தின் இச்சை செலச்செல்ல
வாராத காதல் குருபரன் பால் ஆகச்
சாராத சாதக நான்கும் தன் பால் உற்றோன்
ஆராயும் ஞானத்தன் ஆம் அடிவைக்கவே.
உரை  
11உணர்த்து மதி பக்குவர்க்கே உணர்த்தி
இணக்கில் பராபரத்து எல்லையுள் இட்டுக்
குணக்கொடு தெற்குத் தர பச்சிமம் கொண்டு
உணர்த்துமின் நாவுடையாள் தன்னை உன்னியே.
உரை  
12இறை அடி தாழ்ந்து ஐ வணக்கமும் எய்திக்
குறை அது கூறிக் குணம் கொண்டு போற்றச்
சிறை உடல் நீ அறக் காட்டிச் சிவத்தோடு
அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கி ஆமே.
உரை  
13வேட்கை விடு நெறி வேதாந்தம் ஆதலால்
வாழ்க்கைப் புனல் வழி மாற்றிச் சித்தாந்தத்து
வேட்கை விடும் மிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்கும் தலையினோன் சற் சீடன் ஆமே.
உரை  
14சற்குணம் வாய்மை தயா விவேகம் தண்மை
சற்குரு பாதமே சாயை போல் நீங்காமே
சிற்பர ஞானம் தெளியத் தெளிவோர்தல்
அற்புதமே தோன்றல் ஆகும் சற் சீடனே.
உரை  
ஏழாம் தந்திரம்

1. ஆறாதாரம்

1நாலும் இருமூன்றும் ஈர் ஐந்தும் ஈர் ஆறும்
கோலி மேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும்
காலம் கண்டான் அடி காணலும் ஆமே.
உரை  
2ஈர் ஆறு நாதத்தில் ஈர் எட்டாம் அந்தத்தின்
மேதாதி நாத அந்த மீதாம் பராசத்தி
போத அலயத்த விகாரம் தனில் போத
மேதாதி ஆதாரம் ஈது ஆன உண்மையே.
உரை  
3மேல் என்றும் கீழ் என்று இரண்டு அறக் காணுங்கால்
தான் என்றும் நான் என்றும் தன்மைகள் ஓர் ஆறும்
பார் எங்கும் ஆகிப் பரந்த பராபரம்
கார் ஒன்று கற்பகம் ஆகி நின்றானே.
உரை  
4மேதாதி யாலே விடாதோம் எனத் தூண்டி
ஆதார சோதனை அத்துவ சோதனை
தாதாரம் ஆகவே தான் எழச் சாதித்தால்
ஆதாரம் செய் போகம் ஆவது காயமே.
உரை  
5ஆறு அந்தமும் கூடி ஆகும் உடம்பினில்
கூறிய ஆதாரம் மற்றும் குறிக் கொண்மின்
ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே
ஊறிய ஆதாரத்து ஓர் எழுத்து ஆமே.
உரை  
6ஆகும் உடம்பும் அழிக்கின்ற அவ்வுடல்
போகும் உடம்பும் பொருந்திய வாறுதான்
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்
ஆகும் உடம்புக்கும் ஆறந்தம் ஆமே.
உரை  
7ஆயு மலரின் அணிமலர் மேல் அது
ஆய இதழும் பதினாறும் அங்கு உள
தூய அறிவு சிவானந்தம் ஆகிப் போய்
மேய அறிவாய் விளைந்தது தானே.
உரை  

2. அண்ட லிங்கம்

1இலிங்கம் அது ஆவது யாரும் அறியார்
இலிங்கம் அது ஆவது எண் திசை எல்லாம்
இலிங்கம் அது ஆவது எண் எண் கலையும்
இலிங்கம் அது ஆக எடுத்தது உலகே.
உரை  
2உலகில் எடுத்தது சத்தி முதலா
உலகில் எடுத்தது சத்தி வடிவாய்
உலகில் எடுத்தது சத்தி குணமாய்
உலகம் எடுத்த சதாசிவன் தானே.
உரை  
3போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
ஆகமும் ஆறு ஆறு தத்துவத்து அப்பால் ஆம்
ஏகமும் நல்கி இருக்கும் சாதா சிவம்
ஆகம துத்துவா ஆறும் சிவமே.
உரை  
4ஏத்தினர் எண் இலி தேவர் எம் ஈசனை
வாழ்த்தினர் வாசப் பசும் தென்றல் வள்ளல் என்று
ஆர்த்தனர் அண்டம் கடந்தப் புறநின்று
காத்தனர் என்னும் கருத்து அறியாரே.
உரை  
5ஒண் சுடரோன் அயன் மால் பிரசா பதி
ஒண் சுடர் ஆன இரவியோடு இந்திரன்
கண் சுடர் ஆகிக் கலந்து எங்கும் தேவர்கள்
தண் சுடராய் எங்கும் தற்பரம் ஆமே.
உரை  
6தாபரத்து உள் நின்று அருள வல்லான் சிவன்
மாபரத்து உண்மை வழி படுவார் இல்லை
மாபரத்து உண்மை வழிபடுவாளர்க்கும்
பூவகத்து உள்நின்ற பொன் கொடி ஆகுமே.
உரை  
7தூய விமானமும் தூலம் அது ஆகும் ஆல்
ஆய சதா சிவம் ஆகும் நல் சூக்குமம்
பாய பலி பீடம் பத்திர லிங்கம் ஆம்
ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார் கட்கே.
உரை  
8முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்
கொத்தும் அக் கொம்பு சிலை நீறு கோமளம்
அத்தன் தன் ஆகமம் அன்னம் அரிசி ஆம்
உய்த்த தின் சாதனம் பூமண லிங்கமே.
உரை  
9துன்றும் தயிர் நெய் பால் துய்ய மெழுகுடன்
கன்றிய செம்பு கனல் இரதம் சலம்
வன்திறல் செங்கல் வடிவு உடை வில்லம் பொன்
தென்றி அம் கொன்றை தெளி சிவ லிங்கமே.
உரை  
10அது உணர்ந்தோன் ஒரு தன்மையை நாடி
எது உணரா வகை நின்றனன் ஈசன்
புது உணர்வான புவனங்கள் எட்டும்
இது உணர்ந்து என் உடல் கோயில் கொண்டானே.
உரை  
11அகல் இடமாய் அறியாமல் அடங்கும்
உகல் இடமாய் நின்ற ஊன் அதன் உள்ளே
பகல் இடம் ஆம் முனம் பாவ வினாசன்
புகல் இடம் ஆய் நின்ற புண்ணியன் தானே.
உரை  
12போது புனை கழல் பூமி அது ஆவது
மாது புனை முடி வானகம் ஆவது
நீதியுள் ஈசன் உடல் விசும்பாய் நிற்கும்
ஆதி உற நின்றது அப்பரிசு ஆமே.
உரை  
13தரை உற்ற சத்தி தனி லிங்கம் விண்ணாம்
திரை பொரு நீர் அது மஞ்சன சாலை
வரை தவழ் மஞ்சுநீர் வானுடு மாலை
கரை அற்ற நந்தி கலை உந்திக்கு ஆமே.
உரை  

3. பிண்டலிங்கம்

1மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக் கூத்தே.
உரை  
2உலந்து இலர் பின்னும் உளர் என நிற்பர்
நிலம்தரு நீர் தெளி ஊன் அவை செய்யப்
புலம் தரு பூதங்கள் ஐந்தும் ஒன்று ஆக
வலம் தரு தேவரை வந்தி செய்யீரே.
உரை  
3கோயில் கொண்டு அன்றே குடிகொண்ட ஐவரும்
வாயில் கொண்டு ஆங்கே வழிநின்று அருளுவர்
தாயில் கொண்டால் போல் தலைவன் என் உள் புக
வாயில் கொண்டு ஈசனும் ஆள வந்தானே.
உரை  
4கோயில் கொண்டான் அடி கொல்லைப் பெருமறை
வாயில் கொண்டான் அடி நாடிகள் பத்து உள
பூசை கொண்டான் புலன் ஐந்தும் பிறகு இட்டு
வாயில் கொண்டான் எங்கள் மா நந்தி தானே.
உரை  

4. சதாசிவ லிங்கம்

1கூடிய பாதம் இரண்டும் படி மிசை
பாடிய கை இரண்டு எட்டும் பரந்து எழுந்து
தேடுமுகம் ஐந்து செங் கணின் மூ ஐந்து
நாடும் சதா சிவ நல் ஒளி முத்தே.
உரை  
2வேதா நெடுமால் உருத்திரன் மேல் ஈசன்
மீது ஆன ஐம் முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும்
சாதாரணம் ஆம் சதா சிவம் தானே.
உரை  
3ஆகின்ற சத்தியின் உள்ளே கலை நிலை
ஆகின்ற சத்தியின் உள்ளே கதிர் எழ
ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்த பின்
ஆகின்ற சத்தி உள் அத்திசை பத்தே.
உரை  
4அத்திசைக்கு உள்ளே அமர்ந்தன ஆறு அங்கம்
அத்திசைக்கு உள்ளே அமர்ந்தன நால்வேதம்
அத்திசைக்கு உள்ளே அமர்ந்த சரியையோடு
அத்திசைக்கு உள்ளே அமர்ந்த சமயமே.
உரை  
5சமயத்து எழுந்த அவத்தை ஈர் ஐந்து உள
சமயத்து எழுந்த இராசி ஈர் ஆறு உள
சமயத்து எழுந்த சதி ஈர் ஆறு எட்டு உள
சமயத்து எழுந்த சதா சிவம் தானே.
உரை  
6நடுவு கிழக்குத் தெற்குத் தர மேற்கு
நடுவு படிக நல் குங்கும வன்னம்
அடைவு உள அஞ்சனம் செவ்வரத் தம்பால்
அடியேற்கு அருளிய முகம் இவை அஞ்சே.
உரை  
7அஞ்சு முகம் உள ஐம் மூன்று கண் உள
அஞ்சினோடு அஞ்சு கரதலம் தான் உள
அஞ்சுடன் அஞ்சு ஆயுதம் உள நம்பி என்
நெஞ்சு புகுந்து நிறைந்து நின்றானே.
உரை  
8சத்தி தராதலம் அண்டம் சதா சிவம்
சத்தி சிவம் மிக்க தாபரம் சங்கமம்
சத்தி உருவம் அருவம் சதாசிவம்
சத்தி சிவ தத்துவம் முப்பத்து ஆறே.
உரை  
9தத்துவம் ஆவது அருவம் சராசரம்
தத்துவம் ஆவது உருவம் சுகோதயம்
தத்துவம் எல்லாம் சகலமும் ஆய் நிற்கும்
தத்துவம் ஆகும் சதா சிவன் தானே.
உரை  
10கூறுமின் ஊறு சதா சிவன் எம் இறை
வேறு ஓர் செய்து மிகைப் பொருளாய் நிற்கும்
ஏறு செய் தொழில் வானவர் தம்மொடு
மாறு செய்வான் என் மனம் புகுந்தானே.
உரை  
11இருள் ஆர்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
சுருள் ஆர்ந்த செஞ் சடைச் சோதிப் பிறையும்
அருள் ஆர்ந்த சிந்தை எம் ஆதிப் பிரானைத்
தெருள் ஆர்ந்து என் உள்ளே தெளிந்து இருந்தேனே.
உரை  
12சத்தி தான் நிற்கின்ற ஐம் முகம் சாற்றிடில்
உத்தரம் வாமம் உரையற்று இருந்திடும்
தத்துவம் பூருவம் தற்புருடன் சிரம்
அத் தகு கோரம் மகுடத்து ஈசனே.
உரை  
13நாணு நல் ஈசான நடுஉச்சி தான் ஆகும்
தாணுவின் தன் முகந்து தற் புருடம் ஆகும்
காணும் அகோரம் இருதயம் குய்யமாம்
மாண் உற வாமம் ஆம் சத்தி நல் பாதமே.
உரை  
14நெஞ்சு சிரம் சிகை நீள் கவசம் கண் ஆம்
வஞ்சம் இல் விந்து வளர் நிறம் பச்சை ஆம்
செஞ்சு உறு செஞ் சுடர் சேகரி மின் ஆகும்
செஞ் சுடர் போலும் தெசாயுதம் தானே.
உரை  
15எண் இல் இதயம் இறை ஞான சத்தி ஆம்
விண்ணில் பரை சிரமிக்க சிகை ஆதி
வண்ணக் கவசம் வனப்பு உடை இச்சை ஆம்
பண்ணும் கிரியை பர நேத்திரத்திலே.
உரை  
16சத்தி நால் கோணம் சலம் உற்று நின்றிடும்
சத்தி அறு கோணம் சயனத்தை உற்றிடும்
சத்தி நல் வட்டம் சலம் உற்று இருந்திடும்
சத்தி உரு ஆம் சதா சிவன் தானே.
உரை  
17மா நந்தி எத்தனை காலம் அழைக்கினும்
தா நந்தி அஞ்சின் தனிச்சுடராய் நிற்கும்
கால் நந்தி உந்தி கடந்து கமலத்தின்
மேல் நந்தி ஒன்பதின் மேவி நின்றானே.
உரை  
18ஒன்றிய வாறும் உடலின் உடன் கிடந்து
என்றும் எம் ஈசன் நடக்கும் இயல்பு அது
தென் தலைக்கு ஏறத் திருந்தும் சிவன் அடி
நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே.
உரை  
19உணர்ந்தேன் உலகினில் ஒண் பொருளானைக்
கொணர்ந்தேன் குவலயம் கோயில் என் நெஞ்சம்
புணர்ந்தேன் புனிதனும் பொய் அல்ல மெய்யே
பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே.
உரை  
20ஆங்கு அவை மூன்றினும் ஆர் அழல் வீசிடத்
தாங்கிடும் ஈர் ஏழு தான் நடு ஆனதில்
ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆம் என
ஈங்கு இவை தம் உடல் இந்துவும் ஆமே.
உரை  
21தன் மேனி தன் சிவலிங்கம் ஆய் நின்றிடும்
தன் மேனி தானும் சதா சிவம் ஆய் நிற்கும்
தன் மேனி தன் சிவன் தன் சிவ ஆனந்தம் ஆம்
தன் மேனி தான் ஆகும் தற்பரம் தானே.
உரை  
22ஆரும் அறியார் அகாரம் அவன் என்று
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
தாரம் இரண்டும் தரணி முழுதும் ஆய்
மாறி எழுந்திடும் ஓசை அது ஆமே.
உரை  
23இலிங்க நல் பீடம் இசையும் ஓங் காரம்
இலிங்க நல் கண்ட நிறையும் மகாரம்
இலிங்கத்து உள் வட்ட நிறையும் உகாரம்
இலிங்க மகார நிறை விந்து நாதமே.
உரை  

5. ஆத்தும லிங்கம்

1அகாரம் முதலாய் அனைத்தும் ஆய் நிற்கும்
உகாரம் முதல் ஆய் உயிர்ப்பு எய்து நிற்கும்
அகார உகாரம் இரண்டும் அறியில்
அகார உகாரம் இலிங்கம் அது ஆமே.
உரை  
2ஆதாரம் மாதேயம் ஆகின்ற விந்துவும்
மேதாதி நாதமும் மீதே விரிந்தன
ஆதார விந்து அதி பீட நாதமே
போதா இலிங்கப் புணர்ச்சி அது ஆமே.
உரை  
3சத்தி சிவம் ஆம் இலிங்கமே தாபரம்
சத்தி சிவம் ஆம் இலிங்கமே சங்கமம்
சத்தி சிவம் ஆம் இலிங்கம் சதாசிவம்
சத்தி சிவம் ஆகும் தாபரம் தானே.
உரை  
4தான் நேர் எழுகின்ற சோதியைக் காணலாம்
வான் நேர் எழுகின்ற ஐம்பதம் அமர்ந்திடம்
பூ நேர் எழுகின்ற பொன் கொடி தன்னுடன்
தான் நேர் எழுகின்ற வகாரம் அது தாமே.
உரை  
5விந்துவும் நாதமும் மேவும் இலிங்கம் ஆம்
விந்து அதே பீட நாத இலிங்கம் ஆம்
அந்த இரண்டையும் ஆதார தெய்வம் ஆய்
வந்த கரு ஐந்தும் செய்யும் அவை ஐந்தே.
உரை  
6சத்தி நல் பீடம் தகுநல்ல ஆன்மா
சத்தி நல் கண்டம் தகு வித்தை தான் ஆகும்
சத்தி நல் லிங்கம் தகும் சிவ தத்துவம்
சத்தி நல் ஆன்மாச் சதா சிவம் தானே.
உரை  
7மனம் புகுந்து என் உயிர் மன்னிய வாழ்க்கை
மனம் புகுந்து இன்பம் பொழிகின்ற போது
நலம் புகுந்து என்னொடு நாதனை நாடும்
இலம் புகுந்து ஆதியும் மேல் கொண்டவாறே.
உரை  
8பராபரன் எந்தை பனி மதி சூடி
தராபரன் தன் அடியார் மனக் கோயில்
சிராபரன் தேவர்கள் சென்னியில் மன்னும்
மராமரன் மன்னி மனத்து உறைந்தானே.
உரை  
9பிரான் அல்ல நாம் எனில் பேதை உலகம்
குரால் என்னும் என் மனம் கோயில் கொள் ஈசன்
அரா நின்ற செம் சடை அங்கியும் நீரும்
பொரா நின்றவர் செய்யப் புண்ணியன் தானே.
உரை  
10அன்று நின்றான் கிடந்தான் அவன் என்று
சென்று நின்று எண்திசை ஏத்துவர் தேவர்கள்
என்று நின்று ஏத்துவன் எம் பெருமான் தனை
ஒன்றி என் உள்ளத்தின் உள் இருந்தானே.
உரை  

6. ஞானலிங்கம்

1உருவும் அருவும் உருவோடு அருவும்
மருவு பரசிவன் மன் பல் உயிர்க்கும்
குருவும் என நிற்கும் கொள்கையன் ஆகும்
தரு என நல்கும் சதா சிவன் தானே.
உரை  
2நால் ஆன கீழ் அது உருவ நடு நிற்க
மேல் ஆன நான்கும் மருவு மிக நாப்பண்
நால் ஆன ஒன்று மரு உரு நண்ணல் ஆல்
பால் ஆம் இவை ஆம் பர சிவன் தானே.
உரை  
3தேவர் பிரானைத் திசை முக நாதனை
நால்வர் பிரானை நடு உற்ற நந்தியை
ஏவர் பிரான் என்று இறைஞ்சுவர் அவ்வழி
யாவர் பிரான் அடி அண்ணலும் ஆமே.
உரை  
4வேண்டி நின்றே தொழுதேன் வினை போய் அற
ஆண்டு ஒரு திங்களும் நாளும் அளக்கின்ற
காண் தகையானொடும் கன்னி உணரினும்
மூண்ட கை மாறினும் ஒன்று அது ஆமே.
உரை  
5ஆதி பரம் தெய்வம் அண்டத்து நல் தெய்வம்
சோதி அடியார் தொடரும் பெரும் தெய்வம்
நீதியுள் மா தெய்வம் நின் மலன் எம் இறை
பாதியுள் மன்னும் பராசத்தி ஆமே.
உரை  
6சத்திக்கு மேலே பரா சத்தி தன் உள்ளே
சுத்த சிவ பதம் தோயாத தூ ஒளி
அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பால் ஆம்
ஒத்தவும் ஆம் ஈசன் தான் ஆன உண்மையே.
உரை  
7கொழுந்தினைக் காணில் குவலயம் தோன்றும்
எழுந்து இடம் காணில் இருக்கலும் ஆகும்
பரந்து இடம் காணில் பார்ப்பதி மேலே
திரண்டு எழக் கண்டவன் சிந்தை உளானே.
உரை  
8எந்தை பரமனும் என் அம்மை கூட்டமும்
முந்த உரைத்து முறை சொல்லின் ஞானம் ஆம்
சந்தித்து இருந்த இடம் பெரும் கண்ணியை
உந்தியின் மேல் வைத்து உகந்து இருந்தானே.
உரை  
9சத்தி சிவன் விளையாட்டாகும் உயிராகி
ஒத்த இருமாயா கூட்டத்து இடை ஊட்டிச்
சுத்தம் அது ஆகும் துரியம் பிறவித்துச்
சித்தம் புகுந்து சிவம் அகம் ஆக்குமே.
உரை  

7. சிவ லிங்கம்

1குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்
பரக்கின்ற காற்றுப் பயில் கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறு இவை நீண்டு அகன்றானை
வரைத்து வலம் செயும் ஆறு அறியேனே.
உரை  
2வரைத்து வலம் செய்யும் ஆறு இங்கு ஒன்று உண்டு
நிரைத்து வருகங்கை நீர் மலர் ஏந்தி
உரைத்தவன் நாமம் உணர வல்லார்க்குப்
புரைத்து எங்கும் போகான் புரிசடையோனே.
உரை  
3ஒன்று எனக் கண்டே எம் ஈசன் ஒருவனை
நன்று என்று அடி இணை நான் அவனைத் தொழ
வென்று ஐம் புலனும் மிகக் கிடந்து இன்பு உற
அன்று என் அருள் செய்யும் ஆதிப் பிரானே.
உரை  
4மலர்ந்த அயன் மால் உருத்திரன் மகேசன்
பலம் தரும் ஐம் முகன் பரவிந்து நாதம்
நலம் தரும் சத்தி சிவன் வடிவு ஆகிப்
பலம் தரும் லிங்கம் பரா நந்தி ஆமே.
உரை  
5மேவி எழுகின்ற செஞ் சுடர் ஊடு சென்று
ஆவி எழும் அளவு அன்றே உடல் உற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித்து அடக்கில் பரகதி தானே.
உரை  

8. சம்பிரதாயம்

1உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு
படர் வினை பற்று அறப் பார்த்துக் கை வைத்து
நொடியின் அடி வைத்து நுண் உணர்வு ஆக்கிக்
கடிய பிறப்பு அறக் காட்டினன் நந்தியே.
உரை  
2உயிரும் சரீரமும் ஒண் பொருள் ஆன
வியவார் பரமும் பின் மேவும் பிராணன்
செயலார் சிவமும் சிற் சத்தி ஆதிக்கே
உயலார் குருபரன் உய்யக் கொண்டானே.
உரை  
3பச்சி மதிக்கிலே வைத்த ஆசாரியன்
நிச்சலும் என்னை நினை என்ற அப்பொருள்
உச்சிக்கும் கீழ் அது உள் நாக்குக்கு மேல் அது
வைச்ச பதம் இது வாய் திறவாதே.
உரை  
4பொட்டடித்து எங்கும் பிதற்றித் திரிவேனை
பொட்டடித்து உள்ளமார் மாசு எல்லாம் வாங்கிப்பின்
தட்டு ஒக்க மாறினன் தன்னையும் என்னையும்
வட்டம் அது ஒத்து அது வாணிபம் வாய்த்ததே.
உரை  
5தரிக்கின்ற பல் உயிர்க்கு எல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற விந்து பிணக்கு அறுத்து எல்லாம்
கருக் கொண்ட ஈசனைக் கண்டு கொண்டேனே.
உரை  
6கூடும் உடல் பொருள் ஆவி குறிக் கொண்டு
நாடி அடி வைத்து அருள் ஞான சத்தியால்
பாடல் உடலினில் பற்று அற நீக்கியே
கூடிய தான் அவன் ஆம் குளிக் கொண்டே.
உரை  
7கொண்டான் அடியேன் அடிமை குறிக் கொள்ளக்
கொண்டான் உயிர் பொருள் காயக் குழாத்தினைக்
கொண்டான் பலம் முற்றும் தந்தவன் கோடலால்
கொண்டான் என ஒன்றும் கூற கிலேனே.
உரை  
8குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி
நெறிக்கும் பிராணன் நிலை பெற்ற சீவன்
பறிக்கின்ற காயத்தைப் பற்றிய நேர்மை
பிறக்க அறியா தார் பேயுடன் ஒப்பாரே.
உரை  
9உணர்வு உடையார் கட்கு உலகமும் தோன்றும்
உணர்வு உடையார் கட்கு உறு துயர் இல்லை
உணர்வு உடையார்கள் உணர்ந்த அக் காலம்
உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே.
உரை  
10காயப் பரப்பில் அலைந்து துரியத்துச்
சால விரிந்து குவிந்து சகலத்தில்
ஆய அவ்வாறு அடைந்து திரிந்தோர்க்குத்
தூய அருள் தந்த நந்திக்கு என் சொல்வதே.
உரை  
11நான் என நீ என வேறு இல்லை நண்ணுதல்
ஊன் என ஊன் உயிர் என்ன உடன் நின்று
வான் என வானவர் நின்று மனிதர்கள்
தேன் என இன்பம் திளைக்கின்ற வாறே.
உரை  
12அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவன் இவன் ஆமே.
உரை  
13நான் இது தான் என நின்றவன் நாள் தோறும்
ஊன் இது தான் உயிர் போல் உணர்வான் உளன்
வான் இரு மாமுகில் போல் பொழிவான் உளன்
நான் இது வம்பர நாதனும் ஆமே.
உரை  
14பெரும் தன்மை தான் என யான் என வேறு ஆய்
இருந்ததும் இல்லை அது ஈசன் அறியும்
பொருந்தும் உடல் உயிர் போலும் ஐ மெய்யே
திருந்த முன் செய்கின்ற தேவர் பிரானே.
உரை  

9. திருவருள் வைப்பு

1இரு பதம் ஆவது இரவும் பகலும்
உரு அது ஆவது உயிரும் உடலும்
அருள் அது ஆவது அறமும் தவமும்
பொருள் அது உள் நின்ற போகம் அது ஆமே.
உரை  
2காண்டற்கு அரியன் கருத்து இலன் நந்தியும்
தீண்டற்கும் சார்தற்கும் சேயனாத் தோன்றிடும்
வேண்டிக் கிடந்து விளக்கு ஒளியான் நெஞ்சம்
ஈண்டுக் கிடந்து அங்கு இருள் அறும் ஆமே.
உரை  
3குறிப்பினில் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பு இருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும்
செறிப்பு உறு சிந்தையைச் சிக்கென நாடில்
அறிப்பு உறு காட்சி அமரரும் ஆமே.
உரை  
4தேர்ந்து அறியாமையின் சென்றன காலங்கள்
பேர்ந்து அறிவான் எங்கள் பிஞ்ஞகன் எம் இறை
ஆர்ந்து அறிவார் அறிவே துணையாம் எனச்
சார்ந்து அறிவான் பெரும் தன்மை வல்லானே.
உரை  
5தானே அறியும் வினைகள் அழிந்தபின்
நானே அறிகிலன் நந்தி அறியும் கொல்
ஊனே உருகி உணர்வை உணர்ந்த பின்
தேனே அனைய நம் தேவர் பிரானே.
உரை  
6நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை
வான் அறிந்தார் அறியாது மயங்கினர்
ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர்
தான் அறியான் பின்னை யார் அறிவாரே.
உரை  
7அருள் எங்கும் ஆன அளவை அறியார்
அருளை நுகர அமுது ஆனதும் தேரார்
அருள் ஐங்கருமத்து அதி சூக்கம் உன்னார்
அருள் எங்கும் கண்ணானது ஆர் அறிவாரே.
உரை  
8அறிவில் அணுக அறிவது நல்கிப்
பொறிவழி ஆசை புகுத்திப் புணர்ந்திட்டு
அறிவு அது ஆக்கி அடி அருள் நல்கும்
செறிவொடு நின்றார் சிவம் ஆயினாரே.
உரை  
9அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு
அருளில் அழிந்து இளைப் பாறி மறைந்திட்டு
அருளான ஆனந்தத்து ஆர் அமுது ஊட்டி
அருளால் என் நந்தி அகம் புகுந்தானே.
உரை  
10அருளால் அமுதப் பெருங் கடல் ஆட்டி
அருளால் அடி புனைந்து ஆர்வமும் தந்திட்டு
அருளான ஆனந்தத்து ஆர் அமுது ஊட்டி
அருளால் என் நந்தி அகம் புகுந்தானே.
உரை  
11பாசத்தில் இட்டது அருள் அந்தப் பாசத்தின்
நேசத்தை விட்டது அருள் அந்த நேசத்தின்
கூசற்ற முத்தி அருள் அந்தக் கூட்டத்தின்
நேசத்துத் தோன்றா நிலை அருள் ஆமே.
உரை  
12பிறவா நெறி தந்த பேர் அருளாளன்
மறவா அருள் தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன்
உறவு ஆகி வந்து என் உளம் புகுந்தானே.
உரை  
13அகம் புகுந்தான் அடியேற்கு அருளாலே
அகம் புகுந்தும் தெரியான் அருள் இல்லோர்க்கு
அகம் புகுந்து ஆனந்தம் ஆக்கிச் சிவம் ஆய்
அகம் புகுந்தான் அந்தியான் அந்தி ஆமே.
உரை  
14ஆயும் அறிவோடு அறியாத மா மாயை
ஆய கரணம் படைக்கும் ஐம் பூதமும்
மாய பல இந்திரியம் அவற்றுடன்
ஆய அருள் ஐந்து மா மருள் செய்கையே.
உரை  
15அருளே சகலமும் ஆய பௌதிகம்
அருளே சரா சரம் ஆய அகிலம்
இருளே வெளியே எனும் எங்கும் ஈசன்
அருளே சகளத்தன் அன்றி இன்று ஆமே.
உரை  
16சிவமொடு சத்தி திகழ் நாதம் விந்து
தவம் ஆன ஐம் முகன் ஈசன் அரனும்
பவம் உறு மாலும் பதுமத்தோன் ஈறா
நவம் அவை ஆகி நடிப்பவன் தானே.
உரை  
17அருள் கண் இலாதார்க்கு அரும் பொருள் தோன்றா
அருள் கண் உளோர்க்கு எதிர் தோன்றும் அரனே
இருள் கண்ணினோர்க்கு அங்கு இரவியும் தோன்றாத்
தெருள் கண்ணி னோர்க்கு எங்கும் சீர் ஒளி ஆமே.
உரை  
18தானே படைத்திடும் தானே அளித்திடும்
தானே துடைத்திடும் தானே மறைந்திடும்
தானே இவை செய்து தான் முத்தி தந்திடும்
தானே வியாபித்து தலைவனும் ஆமே.
உரை  
19தலை ஆன நான்கும் தனது அருவாகும்
அலையா வரு உருவாகும் சதா சிவம்
நிலையான கீழ் நான்கு நீடு உரு ஆகும்
துலையா இவை முற்றும் ஆய் அல்லது ஒன்றே.
உரை  
20ஒன்று அதுவாலே உலப்பு இலி தான் ஆகி
நின்றது தான்போல் உயிர்க்கு உயிராய் நிலை
துன்றி அவை அல்ல ஆகும் துணை என்ன
நின்றது தான் விளையாட்டு என் உள் நேயமே.
உரை  
21நேயத்தே நின்றிடும் நின் மலன்சத்தியோடு
ஆயக் குடிலையுள் நாதம் அடைந்து இட்டுப்
போயக் கலை பல ஆகப் புணர்ந்திட்டு
வீயத் தகா விந்து ஆக விளையுமே.
உரை  
22விளையும் பர விந்து தானே வியாபி
விளையும் தனி மாயை மிக்க மா மாயை
கிளை ஒன்று தேவர் கிளர் மனு வேதம்
அளவு ஒன்று இலா அண்ட கோடிகள் ஆமே.
உரை  

10. அருளொளி

1அருளில் தலை நின்று அறிந்து அழுந்தா தார்
அருளில் தலை நில்லார் ஐம் பாசம் நீங்கார்
அருளில் பெருமை அறியார் செறியார்
அருளில் பிறந்திட்டு அறிந்து அறிவாரே.
உரை  
2வாரா வழி தந்த மா நந்தி பேர் நந்தி
ஆரா அமுது அளித்தான் நந்தி பேர் நந்தி
பேர் ஆயிரம் உடைப் பெம்மான் பேர் ஒன்றினில்
ஆரா அருள் கடல் ஆடுக என்றானே.
உரை  
3ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் கண்டேன் சிவன் பெரும் தன்மையைக்
கூடிய வாறே குறியா குறி தந்து என்
ஊடு நின்றான் அவன் தன் அருள் உற்றே.
உரை  
4உற்ற பிறப்பும் உறுமலம் ஆனதும்
பற்றிய மாயாப் படலம் எனப் பண்ணி
அத்தனை நீ என்று அடி வைத்தான் பேர் நந்தி
கற்றன விட்டேன் கழல் பணிந்தேனே.
உரை  
5விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கு அவர் தாமே.
உரை  
6ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா
ஒளி உளோர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும்
ஒளி இருள் கண்ட கண் போல வேறாய் உள்
ஒளி இருள் நீங்க உயிர் சிவம் ஆமே.
உரை  
7புறமே திரிந்தேனைப் பொன் கழல் சூட்டி
நிறமே புகுந்து என்னை நின்மலன் ஆக்கி
அறமே புகுந்து எனக்கு ஆரமுது ஈந்த
திறம் ஏது என்று எண்ணித் திகைத்து இருந்தேனே.
உரை  
8அருள் அது என்ற அகல் இடம் ஒன்றும்
பொருள் அது என்ற புகல் இடம் ஒன்றும்
மருள் அது நீங்க மனம் புகுந்தானைத்
தெருள் உறும் பின்னைச் சிவகதி ஆமே.
உரை  
9கூறுமின் நீர் முன் பிறந்து இங்கு இறந்தமை
வேறு ஒரு தெய்வத்தின் மெய்ப் பொருள் நீக்கிடும்
பார் அணியும் உடல் வீழ விட்டு ஆர் உயிர்
தேர் அணிவோம் இது செப்ப வல்லீரே.
உரை  

11. சிவபூசை

1உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே.
உரை  
2வேட்டு அவி உண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் நாம் இலம் காலையும் மாலையும்
ஊட்டு அவி ஆவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டு அவி காட்டுதும் பால் அவி ஆகுமே.
உரை  
3பால் மொழிப் பாகன் பரா பரன் தான் ஆகும்
மான சதா சிவன் தன்னை ஆவாகித்து
மேல் முகம் ஈசானம் ஆகவே கைக்கொண்டு
சீல் முகம் செய்யச் சிவன் அவன் ஆகுமே.
உரை  
4நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
கனைகழல் ஈசனைக் காண அரிதாம்
கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்
புனைமலர் நீர் கொண்டு போற்ற வல்லாரே.
உரை  
5மஞ்சனம் மாலை நிலாவிய வானவர்
நெஞ்சின் உள் ஈசன் நிலை பெறு காரணம்
அஞ்சு அமுது ஆம் உபசாரம் எட்டு எட்டொடும்
அஞ்சலி யோடும் கலந்து அர்ச்சித்தார்களே.
உரை  
6புண்ணியம் செய்வார்க்குப் பூ உண்டு நீர் உண்டு
அண்ணல் அது கண்டு அருள் புரியா நிற்கும்
எண் இலி பாவிகள் எம் இறை ஈசனை
நண்ணி அறியாமல் நழுவுகின்றாரே.
உரை  
7மறப்பு உற்று இவ்வழி மன்னி நின்றாலும்
சிறப்பொடு பூ நீர் திருந்த முன் ஏந்தி
மறப்பு இன்றி உன்னை வழிபடும் வண்ணம்
அறப் பெற வேண்டும் அமரர் பிரானே.
உரை  
8ஆராதனையும் அமரர் குழாங்களும்
தீராக் கடலும் நிலத்தும் அதாய் நிற்கும்
பேர் ஆயிரமும் பிரான் திரு நாமமும்
ஆரா வழி எங்கள் ஆதிப் பிரானே.
உரை  
9ஆன் ஐந்தும் ஆட்டி அமரர் கணம் தொழத்
தான் அந்தம் இல்லாத் தலைவன் அருள் அது
தேன் உந்து மாமலர் உள்ளே தெளிந்தோர்
பார் ஐங் குணமும் படைத்து நின்றானே.
உரை  
10உழைக் கொண்ட பூ நீர் ஒருங்கு உடன் ஏந்தி
மழைக் கொண்ட மா முகில் மேல் சென்று வானோர்
தழைக் கொண்ட பாசம் தயங்கி நின்று ஏத்தப்
பிழைப்பு இன்றி எம் பெருமான் அருள் ஆமே.
உரை  
11வெள்ளக் கடல் உள் விரிசடை நந்திக்கு
உள்ளக் கடல் புக்கு வார் சுமை பூக் கொண்டு
கள்ளக் கடல் விட்டுக் கை தொழ மாட்டாதார்
அள்ளல் கடல் உள் அழுந்து கின்றாரே.
உரை  
12கழிப்படும் தண் கடல் கௌவை உடைத்து
வழிப் படுவார் மலர் மொட்டு அறியார்கள்
பழிப் படுவார் பலரும் பழி வீழ
வெளிப் படுவோர் உச்சி மேவி நின்றானே.
உரை  
13பயன் அறிவு ஒன்று உண்டு பன் மலர் தூவிப்
பயன் அறிவார்க்கு அரன் தானே பயிலும்
நயனங்கள் மூன்று உடையான் அடி சேர
வயனங்களால் என்றும் வந்து நின்றானே.
உரை  
14ஏத்துவர் மா மலர் தூவித் தொழுது நின்று
ஆர்த்து எமது ஈசன் அருள் சேவடி என்றன்
மூர்த்தியை மூவா முதல் உருவாய் நின்ற
தீர்த்தனை யாரும் துதித்து உணராரே.
உரை  
15தேவர்களோடு இசை வந்து மண்ணோடு உறும்
பூவொடு நீர்சுமந்து ஏத்திப் புனிதனை
மூவரில் பன்மை முதல்வன் ஆய் நின்று அருள்
நீர்மையை யாவர் நினைக்க வல்லாரே.
உரை  
16உழைக்க வல்லோர் நடு நீர் மலர் ஏந்திப்
பிழைப்பு இன்றி ஈசன் பெரும் தவம் பேணிப்
இழைக் கொண்ட பாதத்து இனமலர் தூவி
மழைக் கொண்டல் போலவே மன்னி நில்லீரே.
உரை  
17வென்று விரைந்து விரைப் பணி என்றனர்
நின்று பொருந்த இறை பணி நேர்படத்
துன்று சல மலர் தூவித் தொழுதிடில்
கொண்டிடு நித்தலும் கூறிய அன்றே.
உரை  
18சாத்தியும் வைத்தும் சயம்பு என்று ஏத்தியும்
ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மலக்கிட்டு அகத்து இழுக்கு அற்றக் கால்
மாத்திக்கே செல்லும் வழி அது ஆமே.
உரை  
19ஆவிக் கமலத்தின் அப்புறத்து இன்பு உற
மேவித் திரியும் விரிசடை நந்தியைக்
கூவிக் கருதிக் கொடு போய்ச் சிவத்து இடை
தாவிக்கும் மந்திரம் தாம் அறியாரே.
உரை  
20சாண் ஆகத்து உள்ளே அழுந்திய மாணிக்கம்
காணும் அளவும் கருத்து அறிவார் இல்லை
பேணிப் பெருக்கிப் பெருக்கி நினை வோர்க்கு
மாணிக்க மாலை மனம் புகுந்தானே.
உரை  
21பெரும் தன்மை நந்தி பிணங்கி இருள் நேமி
இரும் தன்மையாலும் என் நெஞ்சு இடம் கொள்ள
வரும் தன்மை யாளனை வானவர் தேவர்
தரும் தன்மை யாளனைத் தாங்கி நின்றாரே.
உரை  

12. குருபூசை

1ஆகின்ற நந்தி அடித் தாமரை பற்றிப்
போகின்று உபதேசம் பூசிக்கும் பூசையும்
ஆகின்ற ஆதாரம் ஆறா அதனின் மேல்
போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே.
உரை  
2மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப் பரன்
ஆவயின் ஞான நெறி நிற்றல் அர்ச்சனை
ஓவற உள் பூசனை செய்யில் உத்தமம்
சேவடி சேரல் செயல் அறல் தானே.
உரை  
3உச்சியும் காலையும் மாலையும் ஈசனை
நச்சு மின் நச்சி நம என்று நாமத்தை
விச்சு மின் விச்சி விரி சுடர் மூன்றினும்
நச்சு மின் பேர் நந்தி நாயகன் ஆகுமே.
உரை  
4புண்ணிய மண்டலம் பூசை நூறு ஆகும் ஆம்
பண்ணிய மேனியும் பத்து நூறு ஆகும் ஆம்
எண் இலிக்கு ஐயம் இடில் கோடி ஆகும் ஆல்
பண் இடில் ஞானி ஊண் பார்க்கில் விசேடமே.
உரை  
5இந்துவும் பானுவும் இலங்கும் தலத்து இடை
வந்தித்தது எல்லாம் அசுரர்க்கு வாரி ஆம்
இந்துவும் பானுவும் இலங்காத் தலத்து இடை
வந்தித்தல் நந்திக்கு மா பூசை ஆமே.
உரை  
6இந்துவும் பானுவும் என்றே எழுகின்றது ஓர்
விந்துவும் நாதமும் ஆகி ஈது ஆனத்தே
சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு
நந்தியைப் பூசிக்க நல்பூசை ஆமே.
உரை  
7மன பவனங்களை மூலத்தான் மாற்றி
அனித உடல் பூதம் ஆக்கி அகற்றிப்
புனிதன் அருள் தனில் புக்கு இருந்து இன்பத்து
தனி உறு பூசை சதாசிவற்கு ஆமே.
உரை  
8பகலும் இரவும் பயில் கின்ற பூசை
இயல்பு உடை ஈசர்க்கு இணை மலர் ஆகப்
பகலும் இரவும் பயிலாத பூசை
சகலமும் தான் கொள்வன் தாழ் சடையோனே.
உரை  

13. மகேசுவர பூசை

1பட மாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயின்
பட மாடக் கோயில் பகவற்கு அது ஆமே.
உரை  
2தண்டு அறு சிந்தை தபோதனர் தாம் மகிழ்ந்து
உண்டது மூன்று புவனமும் உண்டது
கொண்டது மூன்று புவனமும் கொண்டது என்று
எண் திசை நந்தி எடுத்து உரைத்தானே.
உரை  
3மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்து உறை
யாத்தனுக்கு ஈந்த அரும் பொருள் ஆனது
மூர்த்திகள் மூவர்க்கு மூ ஏழ் குரவர்க்கும்
தீர்த்தம் அது ஆம் தேர்ந்து கொள்வீரே.
உரை  
4அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என்
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில் என்
பகரும் ஞானி பகல் ஊண் பலத்துக்கு
நிகர் இலை என்பது நிச்சயம் தானே.
உரை  
5ஆறிடும் வேள்வி அருமறை நூல் அவர்
கூறிடும் அந்தணர் கோடி பேர் உண்பதில்
நீறு இடும் தொண்டர் நினைவின் பயன் இலை
பேறு எனில் ஓர் பிடி பேறு அது ஆகுமே.
உரை  
6ஏறு உடையாய் இறைவா எம் பிரான் என்று
நீறு இடுவார் அடியார் நிகழ் தேவர்கள்
ஆறு அணி செஞ் சடை அண்ணல் இவர் என்று
வேறு அணிவார்க்கு வினை இல்லை தானே.
உரை  
7சீர் நந்தி கொண்டு திருமுகமாய் விட்ட
பேர் நந்தி என்னும் பிறங்கு சடையனை
நான் நொந்து நொந்து வரும் அளவும் சொல்லப்
பேர் நந்தி என்னும் பிதற்று ஒழியேனே.
உரை  
8அழி தகவு இல்லா அரன் அடியாரைத்
தொழு தகை ஞாலத்துத் தூங்கு இருள் நீங்கும்
பழுது படா வண்ணம் பண்பனை நாடித்
தொழுது எழ வையகத்தோர் இன்பம் ஆமே.
உரை  
9பகவற்கு ஏதாகிலும் பண்பு இலர் ஆகிப்
புகும் அத்தராய் நின்று பூசனை செய்யும்
முக மத்தோடு ஒத்து நின்று ஊழி தோறும் ஊழி
அகமத்தர் ஆகி நின்று ஆய்ந்து ஒழிந்தாரே.
உரை  
10தாழ்வு இலர் பின்னும் முயல்வர் அரும்தவம்
ஆழ் வினை ஆழ அவர்க்கே அறம் செய்யும்
ஆழ் வினை நீக்கி அருவினை தன்னொடும்
போழ் வினை தீர்க்கும் அப் பொன் உலகம் ஆமே.
உரை  

14. அடியார் பெருமை

1திகைக்கு உரியான் ஒரு தேவனை நாடும்
வகைக்கு உரியான் ஒருவாதி இருக்கில்
பகைக்கு உரியார் இல்லை பார் மழை பெய்யும்
அகக் குறை கேடு இல்லை அவ் உலகுக்கே.
உரை  
2அவ் உலகத்தே பிறந்த அவ் உடலொடும்
அவ் உலகத்தே அரும் தவம் நாடுவர்
அவ் உலகத்தே அரன் அடி கூடுவர்
அவ் உலகத்தே அருள் பெறுவாரே.
உரை  
3கொண்ட குறியும் குல வரை உச்சியும்
அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும்
எண் திசை யோரும் வந்து என் கைத் தலத்தின் உள்
உண்டு எனில் நாம் இனி உய்ந்து ஒழிந்தோமே.
உரை  
4அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசரம் முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைப்பு அளிப்பு ஆதியும்
கண்ட சிவனும் கண் அன்றி இல்லையே.
உரை  
5பெண் அல்ல ஆண் அல்ல பேடு அல்ல மூடத்துள்
உள் நின்ற சோதி ஒருவர்க்கு அறி ஒண்ணாக்
கண் இன்றிக் காணும் செவி இன்றிக் கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே.
உரை  
6இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
மயங்கா வழி செல்வர் வான் உலகு ஆள்வர்
புயங்களும் எண்திசை போது பாதாள
மயங்காப் பகிரண்ட மா முடி தானே.
உரை  
7அகம் படிகின்ற நம் ஐயனை ஓரும்
அகம் படி கண்டவர் அல்லலில் சேரார்
அகம் படி உள் புக்கு அறிகின்ற நெஞ்சம்
அகம் படி கண்டாம் அழிக்கலும் எட்டே.
உரை  
8கழிவு முதலும் காதல் துணையும்
அழிவும் அதாய் நின்ற ஆதிப் பிரானைப்
பழியும் புகழும் படுபொருள் முற்றும்
ஒழியும் என் ஆவி உழவு கொண்டானே.
உரை  
9என் தாயோ என் அப்பன் ஏழ் ஏழ் பிறவியும்
அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்
ஒன்றா உலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில் வண்ணன் ஏர் எழுந்தாயே.
உரை  
10துணிந்தார் அகம் படி துன்னி உறையும்
பணிந்தார் அகம்படி பால் பட்டு ஒழுகும்
அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக்
கணிந்தார் ஒருவர்க்குக் கைவிடல் ஆமே.
உரை  
11தலை மிசை வானவர் தாள் சடை நந்தி
மிலை மிசை வைத்தனன் மெய்ப் பணி செய்யப்
புலை மிசை நீங்கிய பொன் உலகு ஆளும்
பல மிசை செய்யும் படர் சடை யோனே.
உரை  
12அறியாப் பருவத்து அரன் அடியாரைக்
குறியால் அறிந்து இன்பம் கொண்டது அடிமை
குறியார் சடைமுடி கட்டி நடப்பார்
மறியார் புனல் மூழ்க மாதவம் ஆமே.
உரை  
13அவன் பால் அணுகியே அன்பு செய்வார்கள்
சிவன் பால் அணுகுதல் செய்யவும் வல்லன்
அவன் பால் அணுகியே நாடும் அடியார்
இவன் பால் பெருமை இலயம் அதாமே.
உரை  
14முன் இருந்தார் முழுதும் எண் கணத் தேவர்கள்
எண் இறந்து தன் பால் வருவர் இருநிலத்து
எண் இரு நாலு திசை அந்தரம் ஒக்கப்
பன்னிரு காதம் பதம் செய்யும் பாரே.
உரை  
15சிவ யோகிஞானி செறிந்த அத் தேசம்
அவ யோகம் இன்றி அறிவோர் உண்டாகும்
நவ யோகம் கை கூடும் நல் இயல் காணும்
பவ யோகம் இன்றிப் பரலோகம் ஆமே.
உரை  
16மேல் உணர்வான் மிகு ஞாலம் படைத்தவன்
மேல் உணர்வான் மிகு ஞாலம் கடந்தவன்
மேல் உணர்வார் மிகுஞாலத்து அமரர்கள்
மேல் உணர்வார் சிவன் மெய் அடியார்களே.
உரை  

15. போசனவிதி

1எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு
அட்ட அடிசில் அமுது என்று எதிர் கொள்வர்
ஒட்டி ஒரு நிலம் ஆள்பவர் அந்நிலம்
விட்டுக் கிடக்கில் விருப்பு அறியாரே.
உரை  
2அச்சிவன் உள் நின்ற அருளை அறிந்தவர்
உச்சியம் போது ஆக உள் அமர் கோவிற்குப்
பிச்சை பிடித்து உண்டு பேதம் அற நினைந்து
இச்சை விட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே.
உரை  

16. பிட்சா விதி

1விச்சுக் கலம் உண்டு வேலிச் செய் ஒன்று உண்டு
உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது
அச்சம் கெட்டு அச் செய் அறுத்து உண்ண மாட்டாதார்
இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே.
உரை  
2பிச்சை அது ஏற்றான் பிரமன் தலை தன்னில்
பிச்சை அது ஏற்றான் பிரியா அறம் செய்யப்
பிச்சை அது ஏற்றான் பிரமன் சிரம் காட்டிப்
பிச்சை அது ஏற்றான் பிரமன் பரம் ஆகவே.
உரை  
3பரந்து உலகு ஏழும் படைத்த பிரானை
இரந்து உணி என்பார்கள் எற்றுக்கு இரக்கும்
நிரந்தரம் ஆக நினையும் அடியார்
இரந்து உண்டு தன்கழல் எட்டச் செய்தானே.
உரை  
4வர இருந்தான் வழி நின்றிடும் ஈசன்
தர இருந்தான் தன்னை நல்லவர்க்கு இன்பம்
பொர இருந்தான் புகலே புகல் ஆக
வர இருந்தால் அறியான் என்பது ஆமே.
உரை  
5அங்கார் பசியும் அவாவும் வெகுளியும்
தங்கார் சிவன் அடியார் சரீரத்து இடைப்
பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும்
தங்கார் சிவனைத் தலைப் படு வாரே.
உரை  
6மெய் அக ஞானம் மிகத்ம் தெளிந்தார்களும்
கை அக நீண்டார் கடைத் தலைக்கே செல்வர்
ஐயம் புகாமல் இருந்த தவசியார்
வையகம் எல்லாம் வர இருந்தாரே.
உரை  

17. முத்திரை பேதம்

1நால் ஏழு மாறவே நண்ணிய முத்திரை
பால் ஆன மோன மொழியில் பதிவித்து
மேல் ஆன நந்தி திருவடி மீது உய்யக்
கோலா கலம் கெட்டுக் கூடு நல் முத்தியே.
உரை  
2துரியம் கண் மூன்றும் சொருகின் ஆகி
அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி
மருவிய சாம்பவி கேசரி உண்மை
பெருவிய ஞானம் பிறழ் முத்திரையே.
உரை  
3சாம்பவி நந்தி தன் அருள் பார்வை ஆம்
ஆம் பவம் இல்லா அருள் பணி முத்திரை
ஓம் பயில் ஓங்கிய உண்மைய கேசரி
நாம் பயில் நாதன் மெய்ஞ் ஞான முத்திரையே.
உரை  
4தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும்
ஞானத்தின் உள்ளே நல் சிவம் ஆதலால்
ஏனைச் சிவம் ஆம் சொரூபம் மறைந்திட்ட
மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே.
உரை  
5வாக்கும் மனமும் இரண்டு மவுனம் ஆம்
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கை ஆம்
வாக்கும் மனமும் மவுனமும் ஆம் சுத்தரே
ஆக்கும் அச் சுத்தத்தை யார் அறிவார்களே.
உரை  
6யோகத்தின் முத்திரை ஓர் அட்ட சித்தி ஆம்
ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணும்கால்
ஆகத் தகு வேத கேசரி சாம்பவி
யோகத்துக் கேசரி யோக முத்திரையே.
உரை  
7யோகி எண் சித்தி அருள் ஒலி வாதனை
போகி தன் புத்தி புருடார்த்த நல்நெறி
ஆகு நன் சத்தியும் ஆதார சோதனை
ஏகமும் கண்டு ஒன்றில் எய்த நின்றானே.
உரை  
8துவாதச மார்க்கம் என் சோடச மார்க்கம் ஆம்
அவா அறு ஈர் ஐ வகை அங்கம் ஆறும்
தவா அறு வேதாந்த சித்தாந்தத் தன்மை
நவா அகமோடு உன்ன நல் சுத்த சைவமே.
உரை  
9மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை
ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை
தேனிக்கு முத்திரை சித்தாந்த முத்திரை
கானிக்கு முத்திரை கண்ட சமயமே.
உரை  
10தூ நெறி கண்ட சுவடு நடு எழும்
பூ நெறி கண்டது பொன் அகம் ஆய் நிற்கும்
மேல் நெறி கண்டது வெண்மதி மேதினி
நீ நெறி கண்டுள நின் மலன் ஆமே.
உரை  

18. பூரணக் குகை நெறிச் சமாதி

1வளர் பிறையில் தேவர் தம் பாலின் மன்னி
உளர் ஒளி பானுவின் உள்ளே ஒடுங்கித்
தளர்வு இல் பிதிர் பதம் தங்கிச் சசியுள்
உளது உறும் யோகி உடல் விட்டால் தானே.
உரை  
2தான் இவை ஒக்கும் சமாதி கை கூடாது
போன வியோகி புகல் இடம் போந்து பின்
ஆனவை தீர நிரந்தர மாயோகம்
ஆனவை சேர்வார் அருளின் சார்வாகியே.
உரை  
3தான் இவ்வகையே புவியோர் நெறி தங்கி
ஆன சிவயோகத்து ஆம் ஆறு அவ்விந்து
தான் அதில் அந்தச் சிவ யோகி ஆகு முன்
ஊனத்தோர் சித்தி வந்தோர் காயம் ஆகுமே.
உரை  
4சிவயோகி ஞானி சிதைந்து உடல் விட்டால்
தவ லோகம் சேர்ந்து பின் தான் வந்து கூடிச்
சிவ யோக ஞானத்தால் சேர்ந்து அவர் நிற்பர்
புவலோகம் போற்றுநர் புண்ணியத் தோரே.
உரை  
5ஊனம் இல் ஞானி நல் யோகி உடல் விட்டால்
தான் அற மோனச் சமாதியுள் தங்கியே
தான் அவன் ஆகும் பரகாயம் சாராதே
ஊனம் இல் முத்தராய் மீளார் உணர்வு உற்றே.
உரை  
6செத்தார் பெறும் பயன் ஆவது ஏது எனில்
செத்து நீர் சேர்வது சித்தினைக் கூடிடில்
செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்
செத்தார் சிவம் ஆகியே சித்தர் தாமே.
உரை  
7உன்னக் கருவிட்டு உரவோன் அரன் அருள்
பன்னப் பரனே அருள் குலம் பாலிப்பன்
என்னப் புதல்வர்க்கும் வேண்டி இடு ஞானி
தன் இச்சைக்கு ஈசன் உருச் செய்யும் தானே.
உரை  
8எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத்
தங்கும் சிவஞானிக்கு எங்கும் ஆம் தற்பரம்
அங்கு ஆங்கு என நின்று சகம் உண்ட வான் தோய்தல்
இங்கே இறந்து எங்குமாய் நிற்கும் ஈசனே.
உரை  

19. சமாதிக் கிரியை

1அந்தம் இல் ஞானி தன் ஆகம் தீயினில்
வெந்திடின் நாடு எலாம் வெப்புறத் தீயினில்
நொந்து அது நாய் நரி நுகரின் உண் செரு
வந்து நாய் நரிக்கு உணவு ஆகும் வையகமே.
உரை  
2எண்ணிலா ஞானி உடல் எரி தாவிடில்
அண்ணல் தம் கோயில் அழல் இட்டது ஆங்கு ஒக்கும்
மண்ணின் மழை விழா வையகம் பஞ்சம் ஆம்
எண் அரு மன்னர் இழப்பார் அரசே.
உரை  
3புண்ணியம் ஆம் அவர் தம்மைப் புதைப்பது
நண்ணி அனல் கோக்கில் நாட்டில் அழிவு ஆகும்
மண்ணில் அழியில் அலங்கார பங்கம் ஆம்
மண் உலகு எல்லாம் மயங்கும் அனல் மண்டியே.
உரை  
4அந்தம் இல் ஞானி அருளை அடைந்தக் கால்
அந்த உடல் தான் குகை செய்து இருத்திடில்
சுந்தர மன்னரும் தொல் புவி உள்ளோரும்
அந்தம் இல் இன்ப அருள் பெறுவாரே.
உரை  
5நவ மிகு சாணாலே நல் ஆழம் செய்து
குவை மிகு சூழ ஐஞ் சாண் ஆகக் கோட்டித்
தவம் மிகு குகை முக்கோண முச்சாண் ஆக்கிப்
பவம் அறு நல்குகை பத்மா சனமே.
உரை  
6தன் மனை சாலை குளம் கரை ஆற்று இடை
நல் மலர்ச் சோலை நகரின் நல் பூமி
உன்னருங் கானம் உயர்ந்த மலைச் சாரல்
இந் நிலம் தான் குகைக்கு எய்தும் இடங்களே.
உரை  
7நல் குகை நால் வட்டம் பஞ்சாங்க பாதம் ஆய்
நிற்கின்ற பாத நவ பாத நேர்விழப்
பொற்பமர் ஓசமும் மூன்றுக்கு மூன்று அணி
நிற்பவர் தாம் செய்யும் நேர்மை அது ஆமே.
உரை  
8பஞ்ச லோகங்கள் நவ மணி பாரித்து
விஞ்சப் படுத்த தன் மேல் ஆசனம் இட்டு
முஞ்சி படுத்து வெண் நீறு இட்டு அதன் மேலே
பொன் செய்த நல் சுண்ணம் பொதியலும் ஆமே.
உரை  
9நள் குகை நால் வட்டம் படுத்த தன்மேல் சாரக்
கள் அவிழ் தாமம் களபம் கத்தூரியும்
தெள்ளிய சாந்து புழுகு பன்னீர் சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்து இடு வீரே.
உரை  
10ஓதிடும் வெண் நீற்றால் உத் தூள் அம் குப்பாய
மீதினில் இட்ட ஆசனத்தின் மேல் வைத்துப்
போது அறு சுண்ணமும் நீறும் பொலிவித்து
மீதில் இருத்தி விரித்திடு வீரே.
உரை  
11விரித்த பின்னால் சாரு மேவுதல் செய்து
பொரித்த கறி போனகம் இள நீரும்
குருத்தலம் வைத்தோர் குழை முகம் பார்வை
தரித்த பின் மேல் வட்டம் சாத்திடுவீரே.
உரை  
12மீது சொரிந்திடும் வெண் நீறும் சுண்ணமும்
போது பல கொண்டு தர்ப்பைப் புல் வில்வமும்
பாத உகத்தான் மஞ்சனம் செய்து பார்
மீது மூன்றுக்கு மூன்று அணி நிலம் செய்யுமே.
உரை  
13ஆதனம் மீதில் அரசு சிவலிங்கம்
போதும் இரண்டினில் ஒன்றைத் தாபித்து
மேதகு சந்நிதி மேவுத் தரம் பூர்வம்
காதலில் சோடசம் காண் உப சாரமே.
உரை  

20. விந்துற்பனம்

1உதயத்தில் விந்துவில் ஓங்கு குண்டலியும்
உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான்
விதியில் பிரம ஆதிகள் மிகு சத்தி
கதியில் கரணம் கலைவை கரியே.
உரை  
2செய்திடும் விந்து பேதத்தின் திறன் ஐ ஐந்தும்
செய்திடும் நாத பேதத் திறனால் ஆறும்
செய்திடும் மற்று அவை ஈர் இரண்டில் திறம்
செய்திடும் மாறாது சேர் தத்துவங்களே.
உரை  
3வந்திடு பேதம் எல்லாம் பர விந்துமேல்
தந்திடு மா மாயை வாகேசி தற்பரை
உந்து குடிலையோடு ஏமுறு குண்டலி
விந்துவில் இந்நான்கும் மாவா விளங்குமே.
உரை  
4விளங்கு நிவிர்த்து ஆதி மேவு அகர ஆதி
வளம் கொள் உகார மகாரத்து உள் விந்து
களங்கம் இல் நாதாந்தம் கண்ணின் உள் நண்ணி
உளம் கொள் மன் ஆதியுள் அந்தமும் ஆமே.
உரை  
5அந்தமும் ஆதியும் ஆகிப் பரா பரன்
வந்த வியாபி எனல் ஆய் அந்நெறி
கந்தம் அது ஆகிய காரண காரியம்
தந்து ஐங் கருமமும் தான் செய்யும் வீயமே.
உரை  
6வீயம் அது ஆகிய விந்துவின் சத்தியால்
ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்பக்
காய ஐம்பூதமும் காரிய மாயையில்
ஆயிட விந்து அகம் புறம் ஆகுமே.
உரை  
7புறம் அகம் எங்கும் புகுந்து ஒளிர் விந்து
நிறம் அது வெண்மை நிகழ் நாதம் செம்மை
உற மகிழ் சத்தி சிவ பாதம் ஆய் உள்
திறனொடு வீடு அளிக்கும் செயல் கொண்டே.
உரை  
8கொண்ட இவ் விந்து பரமம் போல் கோது அற
நின்ற படம் கடம் ஆய் நிலை நிற்றலில்
கண்டகல் ஆதியின் காரண காரியத்து
அண்டம் அனைத்தும் ஆய் மா மாயை ஆகுமே.
உரை  
9அது வித்திலே நின்று அம் கண்ணிக்கு நந்தி
இது வித்திலே உள ஆற்றை உணரார்
மது வித்திலே மலர் அன்னம் அது ஆகிப்
பொது வித்திலே நின்ற புண்ணியம் தானே.
உரை  
10வித்தினில் அன்றி முளை இல்லை அம் முளை
வித்தினில் அன்றி வெளிப்படும் ஆறில்லை
வித்தும் முளையும் உடன் அன்றி வேறு அல்ல
அத்தன்மை ஆகும் அரன் நெறி காணுமே.
உரை  
11அருந்திய அன்னம் அவை மூன்று கூறு ஆம்
பொருந்தும் உடல் மனம் போல் மலம் என்னத்
திருந்தும் உடல் மனம் ஆம் கூறு சேர்ந்திட்டு
இருந்தன முன்னாள் இரதம் அது ஆகுமே.
உரை  
12இரதம் முதல் ஆன ஏழ் தாது மூன்றின்
உரிய தினத்தின் ஒரு புல் பனி போல்
அரிய துளி வந்து ஆகும் ஏழ் மூன்றின்
மருவிய விந்து வளரும் காயத்திலே.
உரை  
13காயத்திலே மூன்று நாளில் கலந்திட்டு
காயத்து உள் தன் மனம் ஆகும் கலா விந்து
நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்
மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே.
உரை  
14அழிகின்ற விந்து அளவை அறியார்
கழிகின்ற தன்னை உள் காக்கலும் தேரார்
அழிகின்ற காயத்து அழிந்து அயர் உற்றோர்
அழிகின்ற தன்மை அறிந்து ஒழியாரே.
உரை  

21. விந்து சயம் - போக சர வேட்டம்

1பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்று போய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டிப்
பார்க்கின்ற கண் ஆசை பாழ் பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவ யோகி தானே.
உரை  
2தானே அருளால் சிவயோகம் தங்காது
தானே அக் காமம் ஆதி தங்குவோனும் உட்கும்
தானே அதிகாரம் தங்கில் சடம் கெடும்
ஊனே அவற்றுள் உயிர் ஓம்பா மாயுமே.
உரை  
3மாயாள் வசத்தே சென்று இவர் வேண்டில்
ஓயா இரு பக்கத்து உள் வளர் பக்கத்துள்
ஏயா எண்ணாள் இன்ப மேல் பனி மூன்று இரண்டு
ஆயா அபரத்துள் ஆதி நாள் ஆறு ஆமே.
உரை  
4ஆறு ஐந்து பன் னொன்றும் அன்றிச் சக மார்க்கம்
வேறு அன்பு வேண்டுவோர் பூவரில் பின் னந்தோடு
ஏறும் இரு பத்து ஒரு நாள் இடைத்து ஓங்கும்
ஆறின் மிகுத்து ஓங்கும் அக்காலம் செய்யவே.
உரை  
5செய்யும் அளற்று இரு நால் முகூர்த்தமே
எய்யும் கலை காலம் இந்து பருதி கால்
நையும் இடத்து ஓடினன் காம நூல் நெறி
செய்க வலம் இடம் தீர்ந்து விடுக்கவே.
உரை  
6விடும் காண் முன் ஐந்திரியங்களைப் போல்
நடுங்காது இருப்பானும் ஐ ஐந்து நண்ணப்
படுங்காதல் மாதின்பால் பற்று அற விட்டுக்
கடுங்கால் கரணம் கருத்து உறக் கொண்டே.
உரை  
7கொண்ட குணனே நலனே நல் கோமளம்
பண்டை உருவே பகர்வாய் பவளமே
மிண்டு தனமே மிடைய விடும் போதில்
கண்ட கரணம் உள் செல்லக் கண்டு ஏவிடே.
உரை  
8விட்ட பின் கர்ப்ப உற்பத்தி விதியிலே
தொட்டு உறும் காலங்கள் தோன்றக் கருதிய
கட்டிய வாழ் நாள் சா நாள் குணம் கீழ்மை சீர்ப்
பட்ட நெறி இது என்று எண்ணியும் பார்க்கவே.
உரை  
9பார்த்திட்டு வைத்துப் பரப்பு அற்று உருப் பெற்று
வார்ச்சென்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்த்து உற்ற இரு திங்கள் சேராது அகலினும்
மூப்பு உற்றே பின் நாளில் ஆம் எல்லாம் உள்ளவே.
உரை  
10வித்து இடுவோர்க்கு அன்றி மேலோர் விளைவு இல்லை
வித்து இடுவோர்க்கு அன்றி மிக்கோர் அறிவு இல்லை
வித்தினில் வித்தை விது அர உணர்வ ரேல்
மத்தில் இருந்த ஓர் மாங்கனி ஆமே.
உரை  
11கருத்தினில் அக்கரம் ஆய் உயவும் யாவும்
கருத்து உளன் ஈசன் கரு உயிரோடும்
கருத்தது வித்தாய்க் காரண காரியம்
கருத்து உறுமாறு இவை கற்பனை தானே.
உரை  
12ஒழியாத விந்து உடன் நிற்க நிற்கும்
அழியாப் பிராணன் அதிபலம் சத்தி
ஒழியாத புத்தி தபம் செபம் மோனம்
அழியாத சித்தி உண்டாம் விந்து வற்றிலே.
உரை  
13வற்ற அனலைக் கொளுவி மறித்து ஏற்றி
உற்ற சுழி அனல் சொருகிச் சுடர் உற்று
முற்று மதியத்து அமுதை முறை முறை
செற்று உண்பவரே சிவ யோகியாரே.
உரை  
14யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்
யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும்
மோகம் உறினும் அமிர் உண்போனும்
ஆகிய விந்து அழியாத அண்ணலே.
உரை  
15அண்ணல் உடல் ஆகி அவ் அனல் விந்துவும்
மண் இடை மாய்க்கும் பிராணன் ஆம் விந்துவும்
கண்ணும் கனல் இடைக் கட்டி கலந்து எரித்து
உண்ணில் அமிர்து ஆகி யோகிக்கு அறிவாமே.
உரை  
16அறியாது அழிகின்ற ஆதலால் நாளும்
பொறியால் அழிந்து புலம்பு கின்றார்கள்
அறிவாய் நனவில் அதீதம் புரியச்
செறிவாய் இருந்து சேரவே மாயுமே.
உரை  
17மாதரை மாய வரும் கூற்றம் என்று உன்னக்
காதல் அது ஆகிய காமம் கழிந்திடும்
சாதலும் இல்லை சத கோடி ஆண்டினும்
சோதியின் உள்ளே துரிசு அறும் காலமே.
உரை  
18காலம் கடந்தவன் காண் விந்து செற்றவன்
காலம் கடந்து அழிந்தான் விந்து செற்றவன்
காலங்களின் விந்து செற்று உற்ற காரிகை
காலின் கண் வந்த கலப்பு அறியாரே.
உரை  
19கலக்கு நாள் முன்னாள் தன் இடைக் காதல்
நலத் தக வேண்டில் அந் நாரி உதரக்
கலத்தின் மலத்தைத் தண் சீதத்தைப் பித்தை
விலக்குவன செய்து மேல் அணைவீரே.
உரை  
20மேலா நிலத்து எழு விந்துவும் நாதமும்
கோலால் நடத்திக் குறி வழியே சென்று
பால் ஆம் அமிர்து உண்டு பற்று அறப் பற்றினால்
மால் ஆனது மாள மாளும் அவ் விந்துவே.
உரை  
21விந்து விளையும் விளைவின் பயன் முற்றும்
அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும்
நந்திய நாதமும் நாதத்தால் பேதமும்
தந்து உணர்வோர்க்குச் சயம் ஆகும் விந்துவே.
உரை  
22விந்து என் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய அங்கியினாலே நயம் தெரித்து
அந்தம் இல் பானு அதி கண்டம் மேல் ஏற்றிச்
சந்திரன் சார்பு உறத் தண் அமுது ஆமே.
உரை  
23அமுதச் சசிவிந்து ஆம் விந்து மாள
அமுதப் புனல் ஓடி அங்கியின் மாள
அமுதச் சிவ போகம் ஆதலால் சித்தி
அமுதப் பலாவன ஆங்கு உறும் யோகிக்கே.
உரை  
24யோகம் அவ் விந்து ஒழியா வகை புணர்ந்து
ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்கு உறாப்
போகம் சிவபோகம் போகி நல் போகமா
மோகம் கெட முயங்கார் மூடர் மாதர்க்கே.
உரை  
25மாதர் இடத்தே செலுத்தினும் அவ்விந்து
காதலின் ஆல் விடார் யோகம் கலந்தவர்
மாதர் உயிர் ஆசை கைக் கொண்டே வாடுவர்
காதலர் போன்று அங்ஙன் காதலாம் சாற்றிலே.
உரை  
26சாற்றிய விந்து சயம் ஆகும் சத்தியால்
ஏற்றிய மூலத் தழலை எழ மூட்டி
நாற்றிசை ஓடா நடு நாடி நாதத்தோடு
ஆற்றி அமுதம் அருந்த விந்து ஆமே.
உரை  
27விந்துவும் நாதமும் மேவக் கனல் மூல
வந்தவன் நன் மயிர்க்கால் தோறும் மன்னிடச்
சிந்தனை மாறச் சிவ மகம் ஆகவே
விந்துவும் மாளும் மெய்க் காயத்தில் வித்திலே.
உரை  
28வித்துக் குற்று உண்பான் விலை அறியாதவன்
வித்துக் குற்று உண்ணாமல் வித்துச் சுட்டு உண்பவன்
வித்துக் குற்று உண்பானில் வேறு அலன் நீற்றவன்
வித்துக் குற்று உண்ணாமல் வித்து வித்தான் நன்றே.
உரை  
29அன்னத்தில் விந்து அடங்கும் படி கண்டு
மன்னப் பிராணன் ஆம் விந்து மறித்திட்டு
மின் ஒத்த விந்து நாதாந்தத்து விட்டிட
அன்ன அத் திரு விந்து ஆயும் காயத்திலே.
உரை  
30அன்னம் பிராணன் என்றார்க்கும் இருவிந்து
தன்னை அறிந்து உண்டு சாதிக்க வல்லார்க்குச்
சொன்ன மாம் உருத்தோன்றும் எண் சித்தி ஆம்
அன்னவர் எல்லாம் அழிவு அற நின்றதே.
உரை  
31நின்ற சிகாரம் நினைக்கும் பிராணன் ஆய்
ஒன்று மகாரம் ஒரு மூன்றோடு ஒன்று அவை
சென்று பரா சத்தி விந்து சயம் தன்னை
ஒன்ற உரைக்க உபதேசம் தானே.
உரை  
32தானே உபதேசம் தான் அல்லாதது ஒன்று இல்லை
வானே உயர்விந்து வந்த பதினான்கு
மானேர் அடங்க அதன் பின்பு புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே.
உரை  
33விந்துவும் நாதமும் விளைய விளைந்தது
வந்த இப் பல் உயிர் மன் உயிர்க்கு எலாம்
அந்தமும் ஆதியும் ஆம் மந்திரங்களும்
விந்து அடங்க விளையும் சிவோகமே.
உரை  
34வறுக்கின்ற வாறு மனத்து உலா வெற்றி
நிறுக்கின்ற வாறும் அந் நீள் வரை ஒட்டிப்
பொறிக்கின்ற வாறும் அப் பொல்லா வினையை
அறுக்கின்ற நாள் வரும் அத்திப் பழமே.
உரை  
35விந்துவும் நாதமும் மேவி உடன் கூடிச்
சந்திரனோடே தலைப் படும் ஆயிடில்
அந்தர வானத்து அமுதம் வந்து ஊறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி ஆகுமே.
உரை  
36மனத்தொடு சத்து மனம் செவி அன்ன
இனத்து எழுவார்கள் இசைந்தன நாடி
மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம்
கனத்த இரதம் அக் காமத்தை நாடிலே.
உரை  
37சத்தமும் சத்த மனமும் மனக் கருத்து
ஒத்து அறிகின்ற இடமும் அறிகிலர்
மெய்த்து அறிகின்ற இடம் அறிவாளர்க்கு
அத்தன் இருப்பிடம் அவ் இடம் தானே.
உரை  
38உரமடி மேதினி உந்தியில் அப்பாம்
விரவிய தன் முலை மேவிய கீழ் அங்கி
கரு முலை மீ மிசை கைக் கீழில் கால் ஆம்
விரவிய கந்தரம் மேல் வெளி ஆமே.
உரை  

22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்

1செஞ் சுடரோன் முதல் ஆகிய தேவர்கள்
மஞ்சு உடை மேரு வலம் வரு காரணம்
எம் சுடர் ஈசன் இறைவன் இணை அடி
அம் சுடர் ஆக வணங்கும் தவமே.
உரை  
2பகலவன் மாலவன் பல் உயிர்க்கு எல்லாம்
புகலவன் ஆய் நின்ற புண்ணிய நாதன்
இகல் அற ஏழ் உலகும் உற ஓங்கும்
பகலவன் பல் உயிர்க்கு ஆதியும் ஆமே.
உரை  
3ஆதித்தன் அன்பினோடு ஆயிரம் நாமமும்
சோதியின் உள்ளே சுடர் ஒளியாய் நிற்கும்
வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்
ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே.
உரை  
4தானே உலகுக்குத் தத்துவன் ஆய் நிற்கும்
தானே உலகுக்குத் தையலும் ஆய் நிற்கும்
தானே உலகுக்குச் சம்புவும் ஆய் நிற்கும்
தானே உலகுக்குத் தண் சுடர் ஆகுமே.
உரை  
5வலைய முக் கோணம் வட்டம் அறு கோணம்
துலை இரு வட்டம் துய்ய விதம் எட்டில்
அலை உற்ற வட்டத்தில் ஈர் எட்டு இதழ் ஆம்
மலைவு அற்று உதித்தனன் ஆதித்தன் ஆமே.
உரை  
6ஆதித்தன் உள்ளில் ஆன முக் கோணத்தில்
சோதித்து இலங்கும் நல் சூரியன் நூல் ஆங்கு
ஏதம் உறும் கேணி சூரியன் எட்டில்
சோதி தன் ஈர் எட்டில் சோடசம் தானே.
உரை  
7ஆதித்தனோடே அவனி இருண்டது
பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது
சோதிக்குள் நின்று துடி இடை செய்கின்ற
வேதப் பொருளை விளங்குகிலீரே.
உரை  
8பாருக்குக் கீழே பகலோன் வரும் வழி
யாருக்கும் காண ஒண்ணாத அரும் பொருள்
நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்
ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே.
உரை  
9மண்ணை இடந்து அதின் கீழ் ஓடும் ஆதித்தன்
விண்ணை இடந்து வெளி செய்து நின்றிடும்
கண்ணை இடந்து களி தந்த ஆனந்தம்
எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே.
உரை  
10பாரை இடந்து பகலோன் வரும் வழி
யாரும் அறியார் அருங் கடை நூலவர்
தீரன் இருந்த திரு மலை சூழ் என்பர்
ஊரை உணர்ந்தார் உணர்ந்து இருந்தாரே.
உரை  
11நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
கன்று ஆய நந்திக் கருத்துள் இருந்தனன்
கொன்று மலங்கள் குழல்வழி ஓடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே.
உரை  
12ஆதித்தன் ஓடி அடங்கும் இடம் கண்டு
சாதிக்க வல்லவர் தம்மை உணர்ந்தவர்
பேதித்து உலகம் பிதற்றும் பிதற்று எல்லாம்
ஆதித்தனோடே அடங்கு கின்றாரே.
உரை  
13உருவிப் புறப்பட்டு உலகை வலம் வந்து
சொருகிக் கிடக்கும் துறை அறிவார் இல்லை
சொருகிக் கிடக்கும் துறை அறிவாளர்க்கு
உருகிக் கிடக்கும் என் உள் அன்பு தானே.
உரை  
14எறிகதிர் ஞாயிறு மின் பனி சோரும்
எறிகதிர் சோமன் எதிர் நின்று எறிப்ப
விரிகதிர் உள்ளே வியங்கும் என் ஆவி
ஒரு கதிர் ஆகில் உவா அது ஆமே.
உரை  
15சந்திரன் சூரியன் தான் வரில் பூசனை
முந்திய பானுவில் இந்து வந்தேய் முறை
அந்த இரண்டும் உபய நிலத்தில்
சிந்தை தெளிந்தார் சிவம் ஆயினாரே.
உரை  
16ஆகும் கலையோடு அருக்கன் அனல் மதி
ஆகும் கலை இடை நான்கு எனல் ஆம் என்பார்
ஆகும் அருக்கன் அனல் மதியோடு ஒன்ற
ஆகும் அப் பூரனை ஆம் என்று அறியுமே.
உரை  
17ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அவ்வொளி
ஓர் அண்டத்தார்க்கும் உணரா உணர்வது
பேர் அண்டத்து ஊடே பிறங்கு ஒளியாய் நின்ற
தார் அண்டத் தக்கார் அரியத்தக்காரே.
உரை  
18ஒன்பதின் மேவி உலகம் வலம் வரும்
ஒன்பதும் ஈசன் இயல் அறிவார் இல்லை
முன்பதின் மேவி முதல்வன் அருள் இலார்
இன்பம் இலார் இருள் சூழ நின்றாரே.
உரை  
19விந்து அபரம் பரம் இரண்டாய் விரிந்து
அந்த அபரம் பரம் நாதம் ஆகியே
வந்தன தம்மில் பரம் கலை ஆதி வைத்து
உந்தும் அருணோ தயம் என்ன உள்ளத்தே.
உரை  
20உள்ள அருணோதயத்து எழும் ஓசை தான்
தெள்ளும் பர நாதத்தின் செயல் என்பதால்
வள்ளல் பரவிந்து வைகரி ஆதி வாக்கு
உள்ளன ஐம் கலைக்கு ஒன்றாம் உதயமே.
உரை  
21தேவர் பிரான் திசை பத்தும் உதயம் செய்யும்
மூவர் பிரான் என முன் ஒரு காலத்து
நால்வர் பிரான் நடுவாய் உரையாய் நிற்கும்
மேவு பிரான் என்பர் விண்ணவர் தாமே.
உரை  
22பொய் இலன் மெய்யன் புவனா பதி எந்தை
மை இருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு
செய் இருள் நீக்கும் திரு உடை நந்தி என்று
கை இருள் நீங்கக் கலந்து எழுந்தானே.
உரை  
23தனிச்சுடர் எற்றித் தயங்கு இருள் நீங்க
அனித்திடு மேலை அரும் கனி ஊறல்
கனிச் சுடராய் நின்ற கயிலையில் ஈசன்
நனிச் சுடர் மேல் கொண்ட வண்ணமும் ஆமே.
உரை  
24நேர் அறிவாக நிரம்பிய பேர் ஒளி
போர் அறியாது புவனங்கள் போய் வரும்
தேர் அறியாத திசை ஒளி ஆய் இடும்
ஆர் அறிவார் இது நாயகம் ஆமே.
உரை  
25மண்டலத்து உள்ளே மலர்ந்து எழும் ஆதித்தன்
கண்டிடத்து உள்ளே கதிர் ஒளியாய் இடும்
சென்றிடத்து எட்டுத் திசை எங்கும் போய்வரும்
நின்று இடத்தே நிலை நேர் அறிவார்க்கே.
உரை  
26நாபிக் கண் நாசி நயன நடுவினும்
தூபியோடு ஐந்தும் சுடர் விடும் சோதியை
தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்
மூவரும் ஆக உணர்ந்து இருந்தாரே.
உரை  
27அன்றிய பாச இருளும் அஞ்ஞானமும்
சென்றிடு ஞானச் சிவப் பிரகாசத்தால்
ஒன்றும் இரு சுடர் ஆம் அருண உதயம்
துன்று இருள் நீங்குதல் போலத் தொலைந்ததே.
உரை  
28கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடம் கொண்ட கண்டனும் மேவிய காயத்து
அடங்கிட நின்றதும் அப் பரிசு ஆமே.
உரை  
29தானே விரிசுடர் மூன்றும் ஒன்றாய் நிற்கும்
தானே அயன் மால் என நின்று தாபிக்கும்
தானே உடல் உயிர் வேறு அன்றி நின்று உளன்
தானே வெளி ஒளி தான் இருட்டு ஆமே.
உரை  
30தெய்வச் சுடர் அங்கி ஞாயிறும் திங்களும்
வையம் புனல் அனல் மாருதம் வானகம்
சைவப் பெரும்பதி தாங்கிய பல் உயிர்
ஐவர்க்கு இடம் இடை ஆறு அங்கம் ஆமே.
உரை  

23. பசு இலக்கணம் - பிராணன்

1உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்
பன்னும் மறைகள் பயிலும் பரமனை
என் உள் இருக்கும் இளையா விளக்கினை
அன்ன மயம் என்று அறிந்து கொண்டேனே.
உரை  
2அன்னம் இரண்டு உள ஆற்றங் கரையினில்
துன்னி இரண்டும் துணைப் பிரியாது அன்ன
தன்னிலை அன்னம் தனி ஒன்று அது என்றக் கால்
பின்ன மட அன்னம் பேறு அணு காதே.
உரை  
3வைகரி ஆதியும் மாயா மலா தியும்
பொய் கரி ஆன புருட ஆதி பேதமும்
மெய் கரி ஞானம் கிரியா விசேடத்துச்
செய் கரி ஈசன் அனாதியே செய்ததே.
உரை  
4அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார் கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.
உரை  
5படர் கொண்ட ஆல் அதின் வித்து அது போலச்
சுடர் கொண்ட அணுவினைத் தூவழி செய்ய
இடர் கொண்ட பாச இருள் அற ஓட்டி
நடர் கொண்ட நல்வழி நாடலும் ஆமே.
உரை  
6அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணு அற நின்ற கலப்பது உணரார்
இணை இலி ஈசன் அவன் எங்கும் ஆகித்
தணிவு அற நின்றான் சராசரம் தானே.
உரை  
7மேவிய சீவன் வடிவு அது சொல்லிடில்
கோவின் மயிர் ஒன்று நூறுடன் கூறு இட்டு
மேவிய கூறு அது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறு நூறு ஆயிரத்து ஒன்றே.
உரை  
8உண்டு தெளிவன் உரைக்க வியோகமே
கொண்டு பயிலும் குணம் இல்லை ஆயினும்
பண்டு பயிலும் பயில் சீவனார் பின்னைக்
கண்டு சிவன் உருக் கொள்வர் கருத்து உளே.
உரை  
9மாயா உபாதி வசத்து ஆகும் சேதனத்து
ஆய குரு அருளாலே அதில் தூண்ட
ஓயும் உபாதியோடு ஒன்றி ஒன்றாது உயிர்
ஆய துரியம் புகுந்து அறிவு ஆகவே.
உரை  
10கற்ற பசுக்கள் கதறித் திரியினும்
கொற்ற பசுக்கள் குறி கட்டி மேயினும்
உற்ற பசுக்கள் ஒரு குடம் பால் போதும்
மற்றைப் பசுக்கள் வறள் பசு தானே.
உரை  
11கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வது என்
எல்லை கடப்பித்து இறைவன் அடி கூட்டி
வல்ல செய்து ஆற்ற மதித்த பின் அல்லது
கொல்லை செய் நெஞ்சம் குறிப்பு அறியாதே.
உரை  
12சீவன் எனச் சிவன் என்ன வேறு இல்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்த பின்
சீவனார் சிவனாய் இட்டு இருப்பரே.
உரை  
13குண விளக்கு ஆகிய கூத்தப் பிரானும்
மண விளக்கு ஆகிய மன் உயிர்க்கு எல்லாம்
பண விளக்கு ஆகிய பல் தலை நாகம்
கண விளக்கு ஆகிய கண் காணி ஆகுமே.
உரை  
14அறிவாய் அறியாமை நீங்கி அவனே
பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன போதன்
அறிவாய் அவற்றின் உள் தானா அறிவன்
செறிவு ஆகி நின்ற அச் சீவனும் ஆகுமே.
உரை  
15ஆறு ஆறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு
ஆறு ஆறின் தன்மை அறிவித்தான் பேர் நந்தி
ஆறு ஆறின் தன்மை அருளால் அறிந்தபின்
ஆறு ஆறுக்கு அப்புறம் ஆகி நின்றானே.
உரை  
16சிவம் ஆகிய அருள் நின்று அறிந்து ஓரார்
அவம் ஆம் மலம் ஐந்தும் ஆவது அறியா
தவம் ஆன செய்து தலைப் பறிகின்றார்
நவம் ஆன தத்துவம் நாட கிலாரே.
உரை  
17நாள் தோறும் ஈசன் நடத்தும் தொழில் உன்னார்
நாள் தோறும் ஈசன் நயந்து ஊட்டல் நாடிடார்
நாள் தோறும் ஈசன் நல்லோர்க்கு அருள் நல்கல் ஆல்
நாள் தோறும் நாடார்கள் நாள் வினை யாளரே.
உரை  

24. ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை

1ஆக மதத்தன ஐந்து களிறு உள
ஆக மதத்து அறியோடு அணை கின்றில
பாகனும் மெய்த்தவை தாமும் இளைத்த பின்
யோகு திருந்துதல் ஒன்று அறியோமே.
உரை  
2கருத்தின் நல் நூல் கற்றுக் கால் கொத்திப் பாகன்
திருத்தலும் பாய் மாத் திகைத்து அன்றிப் பாயா
எருத்து உறவே இருக்கிலும் ஆங்கே
வருத்தினும் அம்மா வழி நடவாதே.
உரை  
3புலம் ஐந்தும் புள் ஐந்து புள் சென்று மேயும்
நிலம் ஐந்து நீர் ஐந்து நீர்மையும் ஐந்து
குலம் ஒன்று கோல் கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலம் வந்து போம்வழி ஒன்பது தானே.
உரை  
4அஞ்சு உள சிங்கம் அடவியில் வாழ்வன
அஞ்சும் போய் மேய்ந்ததும் அஞ்சுகமே புகும்
அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்து இட்டால்
எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே.
உரை  
5ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள்
ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர்
ஐவரும் ஐந்து சினத்தொடே நின்றிடில்
ஐவர்க்கு இறை இறுத்து ஆற்ற கிலோமே.
உரை  
6சொல்ல கில்லேன் சுடர்ச் சோதியை நாள் தொறும்
சொல்ல கில்லேன் திரு மங்கையும் அங்கு உள
வெல்ல கில்லேன் புலன் ஐந்துடன் தன்னையும்
கொல்ல நின்று ஓடும் குதிரை ஒத்தேனே.
உரை  
7எண் இலி இல்லி உடைத்து அவ் இருட்டு அறை
எண் இலி இல்லியோடு ஏகில் பிழைதரும்
எண் இலி இல்லியோடு ஏகாமை காக்கு மேல்
எண் இலி இல்லது ஓர் இன்பம் அது ஆமே.
உரை  
8விதியின் பெருவலி வேலை சூழ் வையம்
துதியின் பெருவலி தொல் வான் உலகம்
மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை
நிதியின் பெருவலி நீர்வலி தானே.
உரை  

25. ஐந்து இந்திரியம் அடக்கு முறைமை

1குட்டம் ஒருமுழம் உள்ளது அரை முழம்
வட்டம் அமைந்தது ஓர் வாவியுள் வாழ்வன
பட்டன மீன் பல பரவன் வலை கொணர்ந்து
இட்டனன் யாம் இனி ஏதம் இலோமே.
உரை  
2கிடக்கும் உடலில் கிளர் இந்திரியம்
அடக்கலும் உறும் அவன் தானே அமரன்
விடக்கு இரண்டின் புறம் மேவுறு சிந்தை
நடக்கின் நடக்கும் நடக்கும் அளவே.
உரை  
3அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவு இலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இலை
அஞ்சும் அடக்கில் அசேதனம் ஆம் என்று இட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே.
உரை  
4முழக்கி எழுவன மும் மத வேழம்
அடக்க அறிவு என்னும் கோட்டையை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெரும் கேடு மண்டிக்
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே.
உரை  
5ஐந்தில் ஒடுங்கில் அகல் இடம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அரும் தவம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அரன் பதம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருள் உடையாரே.
உரை  
6பெருக்கப் பிதற்றில் என் பேய்த்தேர் நினைந்து என்
விரித்த பொருட்கு எல்லாம் வித்து ஆவது உள்ளம்
பெருக்கில் பெருக்கும் சுருக்கில் சுருக்கும்
அருத்தமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே.
உரை  
7இளைக்கின்ற வாறு அறிந்து இன் உயிர் வைத்த
கிளைக்கு ஒன்றும் ஈசனைக் கேடுஇல் புகழோன்
தளைக் கொன்ற நாகம் ஐஞ்சு ஆடல் ஒடுக்கத்
துளைக் கொண்டது அவ்வழி தூங்கும் படைத்தே.
உரை  
8பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படர் ஒளி
சார்ந்திடும் ஞானத் தறியினில் பூட்டு இட்டு
ஆய்ந்து கொள் ஆனந்தம் என்னும் அருள் செய்யில்
வேய்ந்து கொள் மேலை விதி அது தானே.
உரை  
9நடக்கின்ற நந்தியை நாள் தோறும் உன்னில்
படர்க்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக்
குறிக் கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்
வடக்கொடு தெற்கு மனக் கோயில் ஆமே.
உரை  
10சென்றன நாழிகை நாள்கள் சில பல
நின்றது நீள் பொருள் நீர் மேல் எழுத்து ஒத்து
வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்
குன்று விழ அதில் தாங்கலும் ஆமே.
உரை  
11போற்றி இசைத்துப் புனிதன் திரு மேனியைப்
போற்றி செய் மீட்டே புலன் ஐந்தும் புத்தி ஆல்
நால் திசைக்கும் பின்னை யாருக்கும் நாதனை
ஊற்று கை உள்ளத்து ஒருங்கலும் ஆமே.
உரை  
12தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே
அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்
சிரிக்கின்ற வாறு சில பல பேசில்
வரிக் கொண்ட மை சூழ் வரை அது ஆமே.
உரை  
13கை விடலால் ஆவது ஒன்று இல்லை கருத்தின் உள்
எய்தி அவனை இசையினால் ஏத்து மின்
ஐவருடைய அவா வினில் தோன்றிய
பொய் வருடைய புலன்களும் ஐந்தே.
உரை  

26. அசற்குரு நெறி

1உணர்வு ஒன்று இலா மூடன் உண்மை ஓராதோன்
கணு இன்றி வேத ஆகம நெறி காணான்
பணி ஒன்று இலா தோன் பர நிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசல் குரு ஆமே.
உரை  
2மந்திர தந்திர மா யோக ஞானமும்
பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்
சிந்தனை செய்யாத் தெளிவுயாது ஊண் பொருள்
அந்தகர் ஆவோர் அசல் குரு ஆமே.
உரை  
3ஆம் ஆறு அறியாதோன் மூடன் அதி மூடன்
காம ஆதி நீங்காக் கலதி கலதிகட்கு
ஆமா அசத்து அறிவிப்போன் அறிவு இலோன்று
கோமான் அலன் அசனத்து ஆகும் குரவனே.
உரை  
4கற்பாய கற்பங்கள் நீக்காமல் கற்பித்தால்
தன் பாவம் குன்றும் தனக்கே பகை ஆகும்
நற் பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடு என்றே
முற்பாலே நந்தி மொழிந்து வைத்தானே.
உரை  
5குருடர்க்குக் கோல் காட்டிச் செல்லும் குருடர்
முரணும் பழம் குழி வீழ்வார்கள் முன்பின்
குருடரும் வீழ்வார்கள் முன் பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே.
உரை  

27. சற்குரு நெறி

1தாள் தந்து அளிக்கும் தலைவனே சற்குரு
தாள் தந்து தன்னை அறியத் தர வல்லோன்
தாள் தந்து தத்துவா தீதத்துச் சார் சீவன்
தால் தந்து பாசம் தணிக்கும் அவன் சத்தே.
உரை  
2தவிர வைத்தான் வினை தன் அடியார் கோள்
தவிர வைத்தான் சிரத்தோடு தன் பாதம்
தவிர வைத்தான் நமன் தூதுவர் கூட்டம்
தவிர வைத்தான் பிறவித் துயர் தானே.
உரை  
3கறுத்த இரும்பே கனகம் அது ஆனால்
மறித்து இரும்பு ஆகா வகை அது போலக்
குறித்த அப்போதே குரு அருள் பெற்றால்
மறித்துப் பிறவியில் வந்து அணுகானே.
உரை  
4பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலம் அற நீக்கு வோர்
ஆசு அற்ற சற்குரு ஆவோர் அறிவு அற்றுப்
பூசற்கு இரங்குவோர் போதக் குரு அன்றே.
உரை  
5நேயத்தே நிற்கும் நிமலன் மலம் அற்ற
நேயத்தை நல்க வல்லோன் நித்தன் சுத்தனே
ஆயத்தவர் தத்துவம் உணர்ந்து தாம் கற்ற
நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே.
உரை  
6பரிசன வேதி பரிசித்தது எல்லாம்
வரிசைதரும் பொன் வகை ஆகும் மா போல்
குரு பரிசித்த குவலயம் எல்லாம்
திரி மலம் தீர்ந்து சிவகதி ஆமே.
உரை  
7தானே என நின்ற சற்குரு சந்நிதி
தானே என நின்ற தன்மை வெளிப்படில்
தானே தனைப் பெற வேண்டும் சதுர் பெற
ஊனே என நினைந்து ஓர்ந்து கொள் உன்னிலே.
உரை  
8வரும் வழி போம் வழி மாயா வழியைக்
கருவழி கண்டவர் காணா வழியைப்
பெரும் வழியா நந்தி பேசும் வழியைக்
குரு வழியே சென்று கூடலும் ஆமே.
உரை  
9குரு என்பவனே வேத ஆகமம் கூறும்
பர இன்பன் ஆகிச் சிவயோகம் பாவித்து
ஒரு சிந்தை இன்றி உயர் பாசம் நீக்கி
வரு நல் குரவன் பால் வைக்கலும் ஆமே.
உரை  
10சத்தும் அசத்தும் சத சத்தும் தான் காட்டிச்
சித்தும் அசித்தும் சிவ பரத்தே சேர்த்துச்
சுத்தம் அசுத்தம் அறச் சுகம் ஆன சொல்
அத்தன் அருள் குருவாம் அவன் கூறிலே.
உரை  
11உற்றிடும் ஐம் மலம் பாச உணர்வினால்
பற்று அறு நாதன் அடியில் பணிதலால்
சுற்றிய பேதம் துரியம் மூன்றால் வாட்டித்
தற்பரம் மேவும் ஓர் சாதகர் ஆமே.
உரை  
12எல்லாம் இறைவன் இறைவி உடன் இன்பம்
வல்லார் புலனும் வரும்கால் உயிர் தோன்றிச்
சொல்லா மலம் ஐந்து அடங்கி இட்டு ஓங்கியே
செல்லாச் சிவ கதி சேர்தல் விளையாட்டே.
உரை  
13ஈனப் பிறவியில் இட்டது மீட்டு ஊட்டித்
தானத்துள் இட்டுத் தனை ஊட்டித் தாழ்த்தலும்
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுஉற்று
மோனத்துள் வைத்தலும் முத்தன் தன் செய்கையே.
உரை  
14அத்தன் அருளின் விளையாட்டு இடம் சடம்
சித்தொடு சித்து அறத் தெளிவித்த சீவனைச்
சுத்தனும் ஆக்கித் துடைத்து மலத்தினைச்
சத்துடன் ஐம் கருமத்து இடும் தன்மையே.
உரை  
15ஈ சத்துவம் கடந்து இல்லை என்று அப்புறம்
பாசத்து உள்ளே என்றும் பாவியும் அண்ணலை
நேசத்து உள்ளே நின்ற நின் மலன் எம் இறை
தேசத்தை எல்லாம் தெளிய வைத்தானே.
உரை  
16மாணிக்க மாலை மலர்ந்து எழு மண்டலம்
ஆணிப் பொன் நின்று அங்கு அமுதம் விளைந்தது
பேணிக் கொண்டு உண்டார் பிறப்பு அற்று இருந்தார்கள்
ஊணுக்கு இருந்தார் உணராத மாக்களே.
உரை  
17அசத்தொடு சத்தும் அசத்து சத்து நீங்க
இசைத்திடு பாசப் பற்று ஈங்கு அறு மாறே
அசைத்து இரு மாயை அணுத்தானும் ஆங்கே
இசைத் தானும் ஒன்று அறிவிப்போன் இறையே.
உரை  
18ஏறு நெறியே மலத்தை எரித்தல் ஆல்
ஈறு இல் உரையால் இருளை அறுத்தலால்
மாறு இல் பசு பாசம் வாட்டலால் வீடுக
கூறு பரனே குரு வாம் இயம்பிலே.
உரை  

28. கூடா வொழுக்கம்

1கண் காணி இல் என்று கள்ளம் பல செய்வார்
கண் காணி இல்லா இடம் இல்லை காணுங் கால்
கண் காணி ஆகக் கலந்து எங்கும் நின்றானைக்
கண் காணி கண்டார் களவு ஒழிந்தாரே.
உரை  
2செய்தான் அறியும் செழும் கடல் வட்டத்துப்
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில் விண்ணோர் தொழச் செய்வன்
மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே.
உரை  
3பத்தி விற்று உண்டு பகலைக் கழிவிடு
மத்தகர்க்கு அன்றோ மறு பிறப்பு உள்ளது
வித்துக் குற்று உண்டு விளை புலம் பாழ்செய்யும்
பித்தர் கட்கு என்றும் பிறப்பு இல்லை தானே.
உரை  
4வடக்கு வடக்கு என்பர் வைத்தது ஒன்று இல்லை
நடக்க உறுவரே ஞானம் இல்லாதார்
வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்
அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே.
உரை  
5காயக் குழப்பனைக் காய நல் நாடனைக்
காயத்தின் உள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து உளே எங்கும் தேடித் திரிவர்கள்
காயத்து உள் நின்ற கருத்து அறியாரே.
உரை  
6கண் காணி ஆகவே கை அகத்தே எழும்
கண் காணி ஆகக் கருத்து உள் இருந்திடும்
கண் காணி ஆகக் கலந்து வழி செய்யும்
கண் காணி ஆகிய காதலன் தானே.
உரை  
7கன்னி ஒரு சிறை கற்றோர் ஒரு சிறை
மன்னிய மா தவம் செய்வோர் ஒரு சிறை
தன் இயல்பு உன்னி உணர்ந்தோர் ஒரு சிறை
என் இது ஈசன் இயல்பு அறியாரே.
உரை  
8காணாத கண்ணில் படலமே கண் ஒளி
காணாதவர் கட்கும் காணாத அவ் வொளி
காணாதவர் கட்கும் கண் ஆம் பெரும் கண்ணைக்
காணாது கண்டார் களவு ஒழிந்தாரே.
உரை  
9பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
உய்த்து ஒன்றுமா போல் வழி அந்தன் கண் ஒளி
அத்தன்மை ஆதல் போல் நந்தி அருள் தரச்
சித்தம் தெளிந்தேன் செயல் ஒழிந்தேனே.
உரை  
10பிரான் மயம் ஆகப் பெயர்ந்தன எட்டும்
பராம் மயம் என்று எண்ணிப் பள்ளி உணரார்
சுரா மயம் உன்னிய சூழ்வினை யாளர்
நிரா மயம் ஆக நினைப்பு ஒழிந்தாரே.
உரை  
11ஒன்று இரண்டு ஆகி நின்று ஒன்றி ஒன்று ஆயினோர்க்கு
ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா
ஒன்று இரண்டு என்றே தருவோர்க்கு எலாம்
ஒன்று இரண்டாய் நிற்கும் ஒன்றோடு ஒன்று ஆனதே.
உரை  
12உயிர் அது நின்றால் உணர்வு எங்கும் நிற்கும்
அயர் அறிவு இல்லை ஆல் ஆருடல் வீழும்
உயிரும் உடலும் ஒருங்கிக் கிடக்கும்
பயிரும் கிடந்து உள்ளப் பாங்கு அறியாரே.
உரை  
13உயிர் அது வேறா உணர்வு எங்கும் ஆகும்
உயிரை அறியில் உணர்வு அறிவு ஆகும்
உயிர் அன்று உடலை விழுங்கும் உணர்வை
அயரும் பெரும் பொருள் ஆங்கு அறியாரே.
உரை  
14உலகு ஆணி ஒண்சுடர் உத்தம சித்தன்
நில ஆணி ஐந்தின் உள் நேர் உற நிற்கும்
சில ஆணி ஆகிய தேவர் பிரானைத்
தலைவாணி செய்வது தன்னை அறிவதே.
உரை  
15தான் அந்தம் ஆம் என நின்ற தனிச்சுடர்
ஊன் அந்தம் ஆய் உலகு ஆய் நின்ற ஒண் சுடர்
தேன் அந்தம் ஆய் நின்ற சிற்றின்பம் நீ ஒழி
கோன் அந்தம் இல்லாக் குணத்து அருள் ஆமே.
உரை  
16உன் முதல் ஆகிய ஊன் உயிர் உண்டு எனும்
கன் முதல் ஈசன் கருத்து அறிவார் இல்லை
நன் முதல் ஏறிய நாமம் அற நின்றால்
தன் முதல் ஆகிய தத்துவம் ஆமே.
உரை  
17இந்தியம் அந்தக் கரணம் இவை உயிர்
வந்தன சூக்க உடல் அன்றும் ஆனது
தந்திடும் ஐ விதத்தால் தற்புருடனும்
முந்து உள மன்னும் ஆறு ஆறு முடிவிலே.
உரை  

29. கேடு கண்டு இரங்கல்

1வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார்
அற்றதம் வாழ்நாள் அறிகிலாப் பாவிகள்
உற்ற வினைத்து உயர் ஒன்றும் அறிகிலார்
முற்று ஒளிதீயின் முனிகின்ற வாறே.
உரை  
2போது சடக் எனப் போகின்றது கண்டும்
வாதுசெய்து என்னோ மனிதர் பெறுவது
நீதி உள்ளே நின்று நின் மலன் தாள் பணிந்து
ஆதியை அன்பில் அறிய கில்லார்களே.
உரை  
3கடன் கொண்டு நெல் குத்துக் கையரை ஊட்டி
உடம்பினை ஓம்பி உயிராத் திரிவர்
தடம் கொண்ட சாரல் தழல் முருடு ஏறி
இடம் கொண்டு உடலார் கிடக்கின்ற வாறே.
உரை  
4விரைந்து அன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து
புரந்த கல் ஆல் நிழல் புண்ணியன் சொன்ன
பரம் தன்னை ஓராப் பழி மொழி யாளர்
உரம் தன்மை ஆக ஒருங்கி நின்றார்களே.
உரை  
5நின்ற புகழும் நிறை தவத்து உண்மையும்
என்றும் எம் ஈசன் அடியவர்க்கே நல்கும்
அன்றி உலகம் அது இது தேவென்று
குன்று கையாலே குறைப் பட்ட வாறே.
உரை  
6இன்பத்து உளே பிறந்து இன்பத்து உளே வளர்ந்து
இன்பத்து உளே நினைக்கின்ற இது மறந்து
துன்பத்து உளே சிலர் சோ றொடு கூறை என்று
துன்பத்து உளே நின்று தூங்கு கின்றார்களே.
உரை  
7பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு அரிய பிரான் அடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியது ஓர் பேர் இழந்தாரே.
உரை  
8ஆர்வ மனமும் அளவு இல் இளமையும்
ஈரமும் நல்ல என்று இன்பு உறு காலத்துத்
தீர வருவது ஓர் காமத் தொழில் நின்று
மாதவன் இன்பம் மறந்து ஒழிந்தார்களே.
உரை  
9இப் பரிசே இள ஞாயிறு போல் உரு
அப் பரிசு அங்கியின் உள் உறை அம்மானை
இப் பரிசே கமலத்து உறை ஈசனை
மெய்ப் பரிசே வினவாது இருந்தோமே.
உரை  
10கூட கில்லார் குரு வைத்த குறி கண்டு
நாட கில்லார் நயம் பேசித் திரிவர்கள்
பாட கில்லார் அவன் செய்த பரிசு அறிந்து
ஆட வல்லார் அவர் பேறு எது ஆமே.
உரை  
11நெஞ்சு நிறைந்து அங்கு இருந்த நெடும் சுடர்
நஞ்சு எம்பிரான் என்று நாதனை நாள் தொறும்
துஞ்சும் அளவும் தொழுமின் தொழா விடில்
அஞ்சு அற்று விட்டது ஓர் ஆணையும் ஆமே.
உரை  
12மிருக மனிதர் மிக்கோர் பறவை
ஒருவர் செய் அன்பு வைத்து உன்னாதது இல்லை
பருகுவரோடு அவர் பார்ப்பயன் கொள்வர்
திரு மரு மாதவம் சேர்ந்து உணர்ந்தாரே.
உரை  
13நீதி இலோர் பெற்ற பொன் போல் இறைவனைச்
சோதியில் ஆரும் தொடர்ந்து அறிவார் இல்லை
ஆதி பயன் என்று அமரர் பிரான் என்று
நாதியே வைத்து அது நாடுகின்றேனே.
உரை  
14இரும் தேன் மலர் அளைந்து இன்பு உற வண்டு
பெரும் தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்
வரும் தேன் நுகராது வாய்புகு தேனை
அரும் தேனை யாரும் அறிய கிலாரே.
உரை  
15கருத்து அறியாது கழிந்தன காலம்
அருத்தி உள்ளான் அமரா பதி நாதன்
ஒருத்தன் உள்ளான் உலகத்து உயிர்க்கு எல்லாம்
வருத்தி நில்லாது வழுக்கு கின்றாரே.
உரை  
16குதித்து ஓடிப் போகின்ற கூற்றமும் சார்வாய்
விதித்தன நாட்களும் வீழ்ந்து கழிந்த
அதிர்த்து இருந்து என் செய்திர் ஆறுதிர் ஆகில்
கொதிக்கின்ற கூழில் துடுப்பு இடலாமே.
உரை  
17கரை அருகு ஆறாக் கழனி விளைந்த
திரை அருகா முன்னம் சேர்ந்து இன்பம் எய்தும்
வரை அருகு ஊறிய மாதவம் நோக்கின்
நரை உருவாச் செல்லும் நாள் இலவாமே.
உரை  
18வரவு அறிவானை மயங்கி இருள் ஞாலத்து
இரவு அறிவானை எழும் சுடர்ச் சோதியை
அரவு அறிவார் முன் ஒரு தெய்வம் என்று
விரவு அறியாமலே மேல் வைத்த வாறே.
உரை  

30. இதோபதேசம்

1மறந்து ஒழி மண் மிசை மன்னாப் பிறவி
இறந்து ஒழி காலத்தும் ஈசனை உள்கும்
பறந்து அலமந்து படுதுயர் தீர்ப்பான்
சிறந்த சிவ நெறி சிந்தை செய்யீரே.
உரை  
2செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை
வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை
இல்லை எனினும் பெரிது உளன் எம் இறை
நல்ல வரன் நெறி நாடுமின் நீரே.
உரை  
3ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும் கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலை பெற நீர் நினைந்து உய்மினே.
உரை  
4போற்றி செயம் தண் கயிலைப் பொருப்பனை
நால் திசைக்கும் நடுவாய் நின்ற நம்பனைக்
காற்று இசைக்கும் கமழ் ஆக்கையைக் கைக்கொண்டு
கூற்று உதைத்தான் தன்னைக் கூறி நின்று உய்மின்னே.
உரை  
5இக் காயம் நீக்கி இனி ஒரு காயத்தில்
புக்குப் பிறவாமல் போம் வழி நாடுமின்
எக்காலத்து இவ் உடல் வந்து எமக்கு ஆனது என்
அக் காலம் உன்ன அருள் பெறலாமே.
உரை  
6போகின்ற ஆறே புகுகின்ற அப்பொருள்
ஆகின்ற போதும் அரன் அறிவான் உளன்
சாகின்ற போதும் தலைவனை நாடுமின்
ஆகின்ற அப் பொருள் அக்கரை ஆகுமே.
உரை  
7பறக்கின்ற ஒன்று பயன் உற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவ கதி பின்னைப்
பிறப்பு ஒன்று இலாமையும் பேர் உலகு ஆமே.
உரை  
8கூடியும் நின்றும் தொழுது எம் இறைவனைப்
பாடி உளே நின்று பாதம் பணிமின்கள்
ஆடி உளே நின்று அறிவு செய்வார்கட்கு
நீடிய ஈற்றுப் பசு அது ஆமே.
உரை  
9விடுகின்ற சீவனார் மேல் எழும் போது
நடு நின்று நாடு மின் நாதன் தன் பாதம்
கெடுகின்ற வல் வினை கேடுஇல் புகழோன்
இடுகின்றான் உம்மை இமையவ ரோடே.
உரை  
10இன்பு உறுவீர் அறிந்தே எம் இறைவனை
அன்பு உறுவீர் தவம் செய்யும் மெய் ஞானத்துப்
பண்பு உறுவீர் பிறவித் தொழிலே நின்று
துன்பு உறு பாசத்து உழைத்து ஒழிந்தீரே.
உரை  
11மேற் கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தவம் ஒன்று உண்டு
மேற் கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தாளும் ஒன்று உண்டு
மேற் கொள்ளல் ஆவது ஓர் மெய்ந் நெறி ஒன்று உண்டு
மேற் கொள்ளல் ஆம் வண்ணம் வேண்டி நின்றோர்க்கே.
உரை  
12சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல் வண்ணன்
பேர்ந்து அவர்க்கு இன்னாப் பிறவி கொடுத்திடும்
கூர்ந்து அவர்க்கே குரைகழல் காட்டிடும்
சேர்ந்தவர் தேவரைச் சென்று உணர் வாரே.
உரை  
13முத்தியை ஞானத்தை முத் தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்த் தலைப் பால் போல் நிமலனும் அங்கு உளன்
அத் தரு சோதி அது விரும்பாரே.
உரை  
14நியமத்தன் ஆகிய நின் மலன் வைத்த
உலகம் எத்தனை என்று ஒருவரும் தேறார்
பவமத்திலே வந்து பாய்கின்றது அல்லால்
சிவம் அத்தை ஒன்றும் தெளிய கில்லாரே.
உரை  
15இங்கு இத்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும்
துஞ்சு ஒத்த காலத்துத் தூய் மணி வண்ணனை
விஞ்சத்து உறையும் விகிர்தா என நின்னை
நஞ்சு அற்றவர்க்கு அன்றி நாட ஒண்ணாதே.
உரை  
16பஞ்சமும் ஆம் புவி சற்குரு பால் முன்னி
வஞ்சகர் ஆனவர் வைகில் அவர் தம்மை
அஞ்சுவன் நாதன் அரு நரகத்து இடும்
செஞ்ச நிற்போரைத் தெரிசிக்கச் சித்தியே.
உரை  
17சிவனை வழி பட்டார் எண் இலாத் தேவர்
அவனை வழி பட்டு அங்கு ஆம் ஆறு ஒன்று இல்லை
அவனை வழி பட்டு அங்கு ஆம் ஆறு காட்டும்
குருவை வழி படில் கூடலும் ஆமே.
உரை  
18நரரும் சுரரும் பசு பாசம் நண்ணிக்
கருங் களாலே கழிதலில் கண்டு
குரு என்பவன் ஞானி கோது இலன் ஆனால்
பரம் என்றல் அன்றிப் பகர் ஒன்றும் இன்றே.
உரை  
19ஆட் கொண்டவர் தனிநாயகன் அன்பு உற
மேற் கொண்டவர் வினை போய் அற நாள் தொறும்
நீர்க்கின்ற செம் சடை நீளன் உருவத்தின்
மேல் கொண்ட வாறு அலை வீவித்து உளானே.
உரை  
எட்டாம் தந்திரம்

1. உடலில் பஞ்சபேதம்

1காயப் பை ஒன்று சரக்குப் பல உள
மாயப் பை ஒன்று உண்டு மற்றும் ஓர் பை உண்டு
காயப் பைக்கு உள் நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப் பை மண்ணா மயங்கிய வாறே.
உரை  
2அத்தன் அமைத்த உடல் இரு கூறினில்
சுத்தம் அது ஆகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரச கந்தம்
புத்திமான் ஆங்காரம் புரி அட்ட காயமே.
உரை  
3எட்டினில் ஐந்து ஆகும் இந்திரியங் களும்
கட்டிய மூன்று கரணமும் ஆயிடும்
ஒட்டிய பாசம் உணர்வு அது ஆகவே
கட்டி அவிழ்த்திடும் கண் நுதல் காணுமே.
உரை  
4இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை
மருவிய அத்தி வழும்பொடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழ் ஆம் உபாதி
உருவம் அலால் உடல் ஒன்று எனலாமே.
உரை  
5ஆரே அறிவார் அடியின் பெருமையை
யாரே அறிவார் அங்கு அவர் நின்றது
யாரே அறிவார் அறுபத்து எட்டு ஆக்கையை
யாரே அறிவார் அடிக் காவல் ஆனதே.
உரை  
6எண் சாண் அளவால் எடுத்த உடம்புக்கு உள்
கண் கால் உடலில் கரக்கின்ற கைகளில்
புண் கால் அறுபத்து எட்டு ஆக்கை புணர்க்கின்ற
நண் பால் உடம்பு தன்னால் உடம்பு ஆமே.
உரை  
7உடம்புக்கும் நாலுக்கும் உயிர் ஆய சீவன்
ஒடுங்கும் பரனோடு ஒழியாப் பிரமம்
கடம்தொறு நின்ற கணக்கு அது காட்டி
அடங்கியே அற்றது ஆர் அறிவாரே.
உரை  
8ஆறு அந்தம் ஆகி நடுவுடன் கூடினால்
தேறிய மூ ஆறும் சிக் என்று இருந்திடும்
கூறும் கலைகள் பதினெட்டும் கூடியே
ஊறும் உடம்பை உயிர் உடம்பு எண்ணுமே.
உரை  
9மெய்யினில் தூலம் மிகுத்த முகத்தையும்
பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும்
கையினில் துல்லி அம் காட்டும் உடலையும்
ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே.
உரை  
10காயும் கடும் பரி கால் வைத்து வாங்கல் போல்
சேய இடம் அண்மை செல்லவும் வல்லது
காயத் துகிர் போர்வை ஒன்று விட்டு ஆங்கு ஒன்று இட்டு
ஏயும் அவர் என்ன ஏய்ந்திடும் காயமே.
உரை  
11நாகம் உடல் உரி போலும் நல் அண்டசம்
ஆக நனாவில் கனா மறந்து அல்லது
போகலும் ஆகும் அரன் அருளாலே சென்று
ஏகும் இடம் சென்று இருபயன் உண்ணுமே.
உரை  
12உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன
கண்டு விடும் சூக்கம் காரண மாச் செலப்
பண்டு தொடரப் பரகாய யோகி போல்
பிண்டம் எடுக்கும் பிறப்பு இறப்பு எய்தியே.
உரை  
13தான் அவன் ஆகிய தற்பரம் தாங்கினோன்
ஆன அவை மாற்றிப் பரமத்து அடைந்திடும்
ஏனை உயிர் வினைக்கு எய்தும் இடம் சென்றும்
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே.
உரை  
14ஞானிக்குக் காயம் சிவமே தனுவாம் அஞ்
ஞானிக்குக் காயம் உடம்பே அது ஆகும்
மேல் நிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும்
மோனிக்குக் காயம் முப் பாழ் கெட்ட முத்தியே.
உரை  
15விஞ்ஞானத் தோர்க்கு ஆணவமே மிகுதனு
எஞ்ஞானத் தோர்க்குத் தனு மாயை தான் என்ப
அஞ்ஞானத் தோர்க்குக் கன்மம் தனு ஆகும்
மெய் ஞானத் தோர்க்குச் சிவ தனு மேவுமே.
உரை  
16மலம் என்று உடம்பை மதியாத ஊமர்
தலம் என்று வேறு தரித்தமை கண்டீர்
நலம் என்று இதனையே நாடி இருக்கில்
பலம் உள்ள காயத்தில் பற்றும் இவ் அண்டத்தே.
உரை  
17நல்ல வசனத்து வாக்கும் அனாதிகள்
மெல்ல விளையாடும் விமலன் அகத்திலே
அல்ல செவி சத்தம் ஆதி மனத்தையும்
மெல்லத் தரித்தார் முகத்தார் பசித்தே.
உரை  

2. உடல் விடல்

1பண் ஆகும் காமம் பயிலும் வசனமும்
விண் ஆம் பிராணன் விளங்கிய சத்தமும்
புண் ஆம் உடலில் பொருந்து மனத்தையும்
அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே.
உரை  
2அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவி கண்
கழிகின்ற கால் அவ் விரதங்கள் தானம்
மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி
ஒழிகின்ற ஊனுக்கு உறு துணை இல்லையே.
உரை  
3இலை ஆம் இடையில் எழுகின்ற காம
முலை வாய நெஞ்சத்து மூழ்கும் உளத்துத்
தலை ஆய மின் உடல் தாங்கித் திரியும்
சிலை ஆய சித்தம் சிவ முன் இடைக்கே.
உரை  

3. அவத்தை பேதம்
கீழாலவத்தை

1ஐ ஐந்து மத்திமை ஆனது சாக்கிரம்
கை கண்ட பல் நான்கில் கண்டு அங் கனா என்பர்
பொய் கண்டு இலாத புருடன் இதயம் சுழுனை
மெய் கண்டவன் உந்தி ஆகும் துரியமே.
உரை  
2முப்பதோடு ஆறின் முதல் நனா ஐந்து ஆகச்
செப் பதின் நான்காய்த் திகழ்ந்து இரண்டு ஒன்று ஆகி
அப் பதி ஆகும் நியதி முதலாகச்
செப்பும் சிவம் ஈறு ஆய்த் தேர்ந்து கொள்ளீரே.
உரை  
3இந்தியம் ஈர் ஐந்து ஈர் ஐந்து மாத்திரை
மந்திரம் ஆய் நின்ற மாருதம் ஈர் ஐந்தும்
அந்தக் கரணம் ஒரு நான்கும் ஆன்மாவும்
பந்த அச் சக்கரப் பால் அது ஆகுமே.
உரை  
4பார் அது பொன்மை பசுமை உடையது
நீர் அது வெண்மை செம்மை நெருப்பு அது
கார் அது மாருதம் கருப்பை உடையது
வானகம் தூமம் மறைந்து நின்றாரே.
உரை  
5பூதங்கள் ஐந்தும் பொறி அவை ஐந்து உளும்
ஏதம் படம் செய்து இருந்த புறநிலை
ஓது மலம் குணம் ஆகும் ஆதாரமோடு
ஆதி அவத்தைக் கருவி தொண்ணூற்று ஆறே.
உரை  
6இட வகை சொல்லில் இருபத்து அஞ்சு ஆனை
படு பர சேனையும் பாய் பரி ஐந்தும்
உடையவன் மத்திமை உள் உறு நால்வர்
அடைய நெடும் கடை ஐந்தொடு நான்கே.
உரை  
7உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பு இடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிர் இடை நட்பு அறியாதார்
மடம் புகு நாய் போல் மயங்கு கின்றாரே.
உரை  
8இருக்கின்ற வாறு ஒன்று அறிகிலர் ஏழைகள்
முருக்கும் அசபையை மாற்றி முகந்து
கருக்கொண்டு காமாரி சார முகம் தேர்ந்து
உருக் கொண்டு தொக்க உடல் ஒழியாதே.
உரை  
9ஒளித்திட்டு இருக்கும் ஒருபதினாலை
அளித்தனன் என் உள்ளே ஆறியன் வந்து
அளிக்கும் கலைகளின் அறுபத்து
ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே.
உரை  
10மண்ணினில் ஒன்று மலர் நீரும் அங்காகும்
பொன்னினில் அங்கி புகழ் வளி ஆகாயம்
மன்னு மனோ புத்தி ஆங்காரம் ஓர் ஒன்றாய்
உன்னின் முடிந்த ஒரு பூத சயமே.
உரை  
11முன்னிக்கு ஒருமகன் மூர்த்திக்கு இருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்குப் பிள்ளைகள் ஐவர் முனாள் இல்லை
கன்னியைக் கன்னியே காதலித்தாளே.
உரை  
12கண்ட கனவு ஐந்தும் கலந்தன தான் ஐந்தும் சென்று
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்
பண்டை அது ஆகிப் பரந்த வியாக்கிரத்து
அண்டமும் தான் ஆய் அமர்ந்து நின்றானே.
உரை  
13நின்றவன் நிற்கப் பதினாலில் பத்து நீத்து
ஒன்றிய அந்தக் கரணங்கள் நான்குடன்
மன்று கலந்த மனை வாழ்க்கை வாதனை
கன்றிய கண்டத்தில் கண்டான் கனவு அதே.
உரை  
14தானம் இழந்து தனி புக்கு இதயத்து
மானம் அழிந்து மதி கெட்டு மால் ஆகி
ஆன விரிவு அறியா அவ் வியத்தத்தின்
மேனி அழிந்து சுழுத்தியது ஆமே.
உரை  
15சுழுனையைச் சேர்ந்து உள மூன்று உடன் காட்சி
கெழுமிய சித்தம் பிராணன் தன் காட்சி
ஒழுகக் கமலத்தின் உள்ளே இருந்து
விழுமப் பொருளுடன் மேவி நின்றானே.
உரை  
16தானத்து எழுந்து தருக்கும் துரியத்தின்
வானத்து எழுந்து போய் வையம் பிறகிட்டுக்
கானத்து எழுந்த கருத்தின் தலையிலே
ஊனத்து அவித்தை விட்டு ஊமனின் நின்றானே.
உரை  
17ஊமை எழுத்தொடு பேசும் எழுத்து உறில்
ஆமை அகத்தினில் அஞ்சும் அடங்கிடும்
ஓமயம் உற்றது உள் ஒளி பெற்றது
நாமயம் அற்றது நாம் அறியோமே.
உரை  
18துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே
நரிகள் பதினாலும் நஞ்சு உண்டு செத்தன
பரிய புரவியும் பாறிப் பறந்தது
துரியம் இறந்த இடம் சொல்ல ஒண்ணாதே.
உரை  
19மாறா மலம் ஐந்தான் மன்னும் அவத்தையின்
வேறு ஆய மாயா அநு கரண ஆதிக்கு இங்கு
ஈறு ஆகாதே எவ் உயிரும் பிறந்து இறுந்து
ஆறாத வல் வினையால் அடி உண்ணுமே.
உரை  
20உண்ணும் தன் ஊடு ஆடாது ஊட்டிடும் மாயையும்
அண்ணல் அருள் பெற்ற முத்தி அது ஆவது
நண்ணல் இலா உயிர் ஞானத்தினால் பிறந்து
எண்ணூறு ஞானத்தின் நேர் முத்தி எய்துமே.
உரை  
21அதி மூட நித்திரை ஆணவம் நந்த
அதனால் உணர்வோன் அரும் கன்மம் உன்னித்
திதம் ஆன கேவலம் இத் திறம் சென்று
பரம் ஆகா வைய அவத்தைப் படுவானே.
உரை  
22ஆசான் முன்னே துயில் மாணவர்தமைத்
தேசாய தண்டால் எழுப்பும் செயல் போல்
நேசாய ஈசனு நீடு ஆணவத் தரை
ஏசாத மாயாள் தன்னாலே எழுப்புமே.
உரை  
23மஞ்சொடு மந்தாகினி குடம் ஆம் என
விஞ்சு அறி வில்லோன் விளம்பு மிகுமதி
எஞ்சலில் ஒன்று எனும் ஆறு என இவ் உடல்
அஞ்சு உணு மன்னன் அன்றே போம் அளவே.
உரை  
24படி உடை மன்னவன் பாய் பரி ஏறி
வடி உடை மாநகர் தான் வரும் போது
அடி உடை ஐவரும் அங்கு உறை வோரும்
துடி இல்லம் பற்றித் துயின்றனர் தாமே.
உரை  
25நேரா மலத்தை நீடு அடைந்து அவத்தையின்
நேரான வாறு உன்னி நீடு நனவினில்
நேரா மலம் ஐந்தும் நேரே தரிசித்து
நேர் ஆம் பரத்துடன் நிற்பது நித்தமே.
உரை  
மத்திய சாக்கிராவத்தை
1சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோ தாயி
சாக்கிர சொப்பனம் தன் இடை மா மாயை
சாக்கிரம் தன்னில் சுழுத்தி தற் காமியம்
சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே.
உரை  
2மாயை எழுப்பும் கலாதியை மற்று அதின்
நேய விராகு ஆதி ஏய்ந்த துரியத்துத்
தோயும் சுழுனை கனா நனாவும் துன்னி
ஆயினன் அந்தச் சகலத்து உளானே.
உரை  
3மேவிய அந்தகன் விழி கண் குருடன் ஆம்
ஆவயின் முன் அடிக் காணும் அது கண்டு
மேவும் தடி கொண்டு சொல்லும் விழிபெற
மூவயினான் மா முயலும் கருமமே.
உரை  
4மத்திமம் ஒத்த சிலந்தி வலயத்துள்
ஒத்து அங்கு இருந்து உயிர் உண்ணும் ஆறுபோல்
அத்தனும் ஐம் பொறி ஆடகத்து உள் நின்று
சத்தம் முதல் ஐந்தும் தான் உண்ணும் ஆறே.
உரை  
5வைச்சன வச்சு வகை இருபத்து அஞ்சு
முச்சும் ஊடன் அணைவான் ஒருவன் உளன்
பிச்சன் பெரியன் பிறப்பு இலி என்று என்று
நச்சி அவன் அருள் நான் உய்ந்த வாறே.
உரை  
6நாலு ஆறு உடன் புருடன் அற்று தத்துவமுடன்
வேறு ஆன ஐ ஐந்து மெய்ப்புருடன் பரம்
கூறா வியோமம் பரம் எனக் கொண்டனன்
வேறு ஆன நாலு ஏழு வேத அந்த தத்துவமே.
உரை  
7ஏலம் கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை
கோலம் கொண்டு ஆங்கே குணத்தின் உடன்புக்கு
மூலம் கொண்டு ஆங்கே முறுக்கி முக்கோணிலும்
காலம் கொண்டான் அடி காணலும் ஆமே.
உரை  
8நாடிகள் பத்தும் நலம் திகழ் வாயுவும்
ஓடிய காலில் ஒடுங்கி இருந்திடும்
கூடிய காமம் குளிக்கும் இரதமும்
நாடிய நல்ல மனமும் உடலிலே.
உரை  
9பத்தொடு பத்தும் ஓர் மூன்றும் பகுதியும்
உய்த்த துரியமும் உள் உணர் காலமும்
மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும்
தத்துவ நால் ஏழு என உன்னத் தக்கதே.
உரை  
10விளங்கிடும் முந்நூற்று முப்பதோடு ஒருபான்
தளம் கொள் இரட்டிய ஆறு நடந்தால்
வணங்கிடும் ஐம் மலம் வாயு எழுந்து
விளங்கிடும் அவ்வழி தத்துவம் நின்றே.
உரை  
11நாலு ஒரு கோடியே நாற்பத்து எண் ஆயிரம்
மேலும் ஓர் ஐந்து நூறு வேறாய் அடங்கிடும்
பால் அவை தொண்ணூறோடு ஆறு உட் படும் அவை
கோலிய ஐ ஐந்துள் ஆகும் குறிக்கிலே.
உரை  
12ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொது என்பர்
ஆகின்ற ஆறா அரும் சைவர் தத்துவம்
ஆகின்ற நால் ஏழ் வேதாந்தி வயின் அவர்க்கு
ஆகின்ற நாலு ஆறு ஐந்தும் மாய வாதிக்கே.
உரை  
13தத்துவம் ஆனது தன் வழி நின்றிடில்
வித்தகன் ஆகி விளங்கி இருக்கலாம்
பொய்த்தவம் ஆம் அவை போயிடும் அவ்வழி
தத்துவம் ஆவது அகார எழுத்தே.
உரை  
14அறிவு ஒன்று இலாதன ஐ ஏழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியாது இருந்தேன்
அறிகின்றாய் நீ என்று அருள் செய்தார் நந்தி
அறிகின்ற நான் என்று அறிந்து கொண்டேனே.
உரை  
15சாக்கிர சாக்கிரம் ஆதி தனில் ஐந்தும்
ஆக்கும் மல அவத்தை ஐந்து நனவு ஆதி
போக்கி இவற்றொடும் பொய்யான ஆறு ஆறு
நீக்கி நெறி நின்றான் ஆகியே நிற்குமே.
உரை  
16ஆணவம் ஆதி மலம் ஐந்து அலரோனுக்கு
ஆணவம் ஆதி நான்கு ஆம் ஆற் அரனுக்கு
ஆணவம் ஆதி மூன்று ஈசர்க்கு இரண்டு என்ப
ஆணவம் ஒன்றே சதா சிவற்கு ஆவதே.
உரை  
அத்துவாக்கள்
1தத்துவம் ஆறு ஆறு தன் மனு ஏழ்கோடி
மெய்த்தகு அன்னம் ஐம் பான் ஒன்று மேதினி
ஒத்து இரு நூற்று இருபான் நான்கு என்பான் ஒன்று
வைத்த பதம் கலை ஓர் ஐந்தும் வந்தவே.
உரை  
2நாடிய மண்டலம் மூன்று நலம் தெரிந்து
ஓடும் அவரோடு உள் இருபத்து அஞ்சும்
கூடுவர் கூடிக் குறிவழியே சென்று
தேடிய பின்னர்த் திகைத்து இருந்தார்களே.
உரை  
3சாக்கிர சாக்கிரம் ஆதித் தலை ஆக்கி
ஆக்கிய தூலம் அளவு ஆக்கி அதீதத்துத்
தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்தது
தேக்கும் சிவம் ஆதல் ஐந்தும் சிவாயமே.
உரை  
சுத்த நனவாதி பருவம்
1நனவு ஆதி தூலமே சூக்கப் பகுதி
அனது ஆன ஐ ஐந்தும் விந்துவின் சத்தி
தனது ஆம் விந்து தான் நின்று போந்து
கனவா நனவில் கலந்தது இவ் ஆறே.
உரை  
2நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார்
நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார்
நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார்
நனவில் கனவோடு நல் செய்தி ஆனதே.
உரை  
3செறியும் கிரியை சிவ தத்துவம் ஆம்
பிறிவில் சுக யோகம் பேர் அருள் கல்வி
குறிதல் திருமேனி குணம் பல ஆகும்
அறிவில் சரா சரம் அண்டத்து அளவே.
உரை  
4ஆதி பரம் சிவம் சத்தி சதாசிவம்
ஏதம் இல் ஈசன் நல் வித்தியா தத்துவம்
போதம் கலை கால நியதி மா மாயை
நீதி ஈறு ஆக நிறுத்தினன் என்னே.
உரை  
5தேசு திகழ் சிவம் சத்தி சதா சிவம்
ஈசன் நல் வித்தை இராகம் கலைகாலம்
ஆசு அகல் வித்தை நியதி மகா மாயை
ஆசு இல் புருட ஆதி ஆன்மா ஈறு ஆறே.
உரை  
6ஆணவ மாயையும் கன்மமும் மா மலம்
காணு முளைக்கும் தவிடு உமிஆன்மாவும்
தாணுவை ஒவ்வாமல் தண் துலம் ஆய் நிற்கும்
பேணுவாய் மற்று நின் பாசம் பிரித்தே.
உரை  
7பசுக்கள் பல வண்ணம் பால் ஒரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன் கோல் போடில்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.
உரை  
8உடல் இந்திய மனம் ஒண்புத்தி சித்தம்
அடல் ஒன்று அகந்தை அறியாமை மன்னிக்
கெடும் அவ் உயிர் மயல் மேலும் கிளைத்தால்
அடைவது தான் ஏழ் நரகத்து உளாயே.
உரை  
9தன் தெரியாத அதீதம் தன் காண அம்
சொல் தெரிகின்ற துரியம் சொல் காமியம்
பெற்ற சுழுத்திப் பின் பேசு உறும் காதலால்
மற்று அது உண்டிக் கன நனவு ஆதலே.
உரை  
10நனவில் கனவு இல்லை ஐந்து நனவில்
கனவு இலாச் சூக்குமம் காணும் சுழுத்தி
தனல் உண் பகுதியே தன் கூட்டு மாயை
நனவில் துரியது அதீதம் தலை வந்தே.
உரை  
11ஆறு ஆறில் ஐ ஐந்து அகல நனா நனா
ஆறாம் அவை விட ஆகும் நனாக் கனா
வேறு ஆன ஐந்தும் விடவே நனா வினில்
ஈறு ஆம் சுழுத்தி இதில் மாயை தானே.
உரை  
12மாயையில் வந்த புருடன் துரியத்தில்
ஆய முறை விட்டதுவும் தான் அன்றாகிச்
சேய கேவல விந்துடன் செல்லச் சென்றக் கால்
ஆய தனுவின் பயன் இல்லை ஆமே.
உரை  
13அதீதத்து துரியத்து அறிவன் ஆம் ஆன்மா
அதீதத் துரிய அதனால் புரிந்தால்
அதீதத்து எழுந்து அறிவு ஆகிய மானன்
முதிய அனலில் துரியத்து முற்றுமே.
உரை  
14ஐ ஐந்து பத்துடன் ஆனது சாக்கிரம்
கை கண்ட ஐ ஐந்தில் கண்டம் கனா என்பர்
பொய் கண்ட மூவர் புருடர் சுழுனையின்
மெய் கண்டவன் உந்தி மேவல் இருவரே.
உரை  
15புரி அட்டகமே பொருந்தல் நனவு
புரி அட்டகம் தன்னின் மூன்று கனவு
புரி அட்டகத்தில் இரண்டு சுழுத்தி
புரி அட்டகத்து ஒன்று புக்கல் துரியமே.
உரை  
16நனவின் நனவு புலன் இல் வழக்கம்
நனவில் கனவு நினைத்தல் மறத்தல்
நனவில் சுழுத்தி உண் ஆடல் இலாமை
நனவில் துரியம் அதீதத்து நந்தியே.
உரை  
17கனவின் நனவு போல் காண்டல் நனவு ஆம்
கனவினில் கண்டு மறத்தல் கனவு ஆம்
கனவில் சுழுத்தியும் காணாமை காணல்
அணு ஆதி செய்தலில் ஆன துரியமே.
உரை  
18சுழுத்தி நனவு ஒன்றும் தோன்றாமை தோன்றல்
சுழுத்தி கனவு அதன் உண்மை சுழுத்தியில்
சுழுத்தி அறிவு அறிவாலே அழிகை
சுழுத்தி துரியம் ஆம் சொல் அறும் பாழே.
உரை  
19துரிய நனவு ஆம் இதம் உணர் போதம்
துரியக் கனவு ஆம் அகம் உணர் போதம்
துரியச் சுழுத்தி வியோமம் துரியம்
துரியம் பரம் எனத் தோன்றிடும் தானே.
உரை  
20அறிவு அறிகின்ற அறிவு நனவு ஆம்
அறிவு அறியாமை அடையக் கனவு ஆம்
அறிவு அறி அவ் அறியாமை சுழுத்தி
அறிவு அறிவு ஆகும் ஆனதுரியமே.
உரை  
21தான் எங்கும் ஆய அவனை அம் மலம் தான் விட்டு
ஞானம் தனது உரு ஆகி நயந்தபின்
தான் எங்கும் ஆய் நெறி நின்றது தான் விட்டு
மேன் அந்தச் சூக்கம் அவை வன்னம் மேல் இட்டே.
உரை  
22ஐ ஐந்தும் ஆறும் ஓர் ஐந்தும் நனாவினில்
எய்யும் நனவு கனவு சுழுத்தியா
மெய்யும் பின் சூக்கமும் மெய்ப் பகுதி மாயை
ஐயமும் தான் அவன் அத் துரியத்தனே.
உரை  
23ஈது என்று அறிந்திலன் இத்தனை காலமும்
ஈது என்று அறிந்த பின் ஏதும் அறிந்திலேன்
ஈது என்று அறியும் அறிவை அறிந்தபின்
ஈது என்று அறியும் இயல்பு உடையோனே.
உரை  
24உயிர்க்கு உயிராகி உருவாய் அருவாய்
அயல் புணர்வு ஆகி அறிவாய்ச் செறிவாய்
நயப்பு உறு சத்தியும் நாதன் உலகு ஆதி
இயற்பு இன்றி எல்லாம் இருள் மூடம் ஆமே.
உரை  
25சத்தி இராகத்தில் தான் நல் உயிர் ஆகி
ஒத்து உறு பாச மலம் ஐந்தோடு ஆறு ஆறு
தத்துவ பேதம் சமைத்துக் கருவியும்
வைத்தனன் ஈசன் மலம் அறும் ஆறே.
உரை  
26சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன் உண்மை
சாக்கிரா தீதம் துரியத்தில் தான் உறச்
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான் விடாச்
சாக்கிரா தீதம் பரன் உண்மை தங்குமே.
உரை  
27மலக் கலப்பாலே மறைந்தது சத்தி
மலக் கலப்பாலே மறைந்தது ஞானம்
மலக் கலப்பாலே மறைந்தனன் தாணு
மலக் கலப்பு அற்றான் மதி ஒளி ஆமே.
உரை  
28திகைக் கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நகைக் கின்ற நெஞ்சுள் நரிக் குட்டி நான்கு
வகைக் கின்ற நெஞ்சின் உள் ஆனைக் கன்று ஐந்து
பகைக் கின்ற நெஞ்சுக்குப் பால் இரண்டு ஆமே.
உரை  
29கதறு பதி னெட்டுக் கண்களும் போகச்
சிதறி எழுந்திடும் சிந்தையை நீரும்
விதறு படா முன்னம் மெய் வழி நின்றால்
அதிர வருவது ஓர் ஆனையும் ஆமே.
உரை  
30நனவு அகத்தே ஒரு நால் ஐந்தும் வீடக்
கனவு அகத்தே உள் கரணங்களோடு
முனவு அகத்தே நின்று உதறி உள் புக்கு
நினைவு அகத்து இன்றி சுழுத்தி நின்றானே.
உரை  
31நின்றவன் ஆசான் நிகழ் துரியத்தனாய்
ஒன்றி உலகின் நியம் ஆதிகள் உற்றுச்
சென்று துரிய ஆதீதத்தே சில காலம்
நின்று பரன் ஆய் நின்மலன் ஆமே.
உரை  
32ஆன அவ் ஈசன் அதீதத்தில் வித்தையாத்
தான் உலகு உண்டு சதாசிவ மா சத்தி
மேனிகள் ஐந்தும் போய் விட்டுச் சிவம் ஆகி
மோனம் அடைந்து ஒளி மூலத்தன் ஆமே.
உரை  
33மண்டலம் மூன்றின் உள் மாய நல் நாடனைக்
கண்டு கொண்டு உள்ளே கருதிக் கழிகின்ற
விண்டு அலர் தாமரை மேல் ஒன்றும் கீழ் ஆகத்
தண்டமும் தான் ஆக அகத்தின் உள் ஆமே.
உரை  
34போது அறியாது புலம்பின புள் இனம்
மாது அறியா வகை நின்று மயங்கின
வேதறி ஆவணம் நின்றான் எம் இறை
சூது அறிவார் உச்சி சூடி நின்றாரே.
உரை  
35கருத்து அறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கே
பொருத்து அறிந்தோன் புவனாபதி நாடித்
திருத்து அறிந்தேன் மிகு தேவர் பிரானை
வருத்து அறிந்தேன் மனம் மன்னி நின்றானே.
உரை  
36ஆன விளக்கு ஒளி தூண்டும் அவன் என்னத்
தான விளக்கு ஒளியாம் மூல சாதனத்து
ஆன விதி மூலத் தானத்தில் அவ் விளக்கு
ஏனை மதி மண்டலம் கொண்டு எரியுமே.
உரை  
37உள் நாடும் ஐவர்க்கும் அண்டை ஒதுங்கிய
விண் நாட நின்ற வெளியை வினவுறில்
அண்ணாந்து பார்த்து ஐவர் கூடிய சந்தியில்
கண்ணாடி காணும் கருத்து என்றானே.
உரை  
38அறியாத வற்றை அறிவான் அறிவான்
அறிவான் அறியாதான் தன் அறிவு ஆகான்
அறியா தவத்தை அறிவானைக் கூட்டி
அறியாது அறிவானை யார் அறிவாரே.
உரை  
39துரிய தரிசனம் சொற்றோம் வியோமம்
அரியன தூடணம் அந் நனவு ஆதி
பெரியன கால பரம்பில் துரியம்
அரிய அதீதம் அதீதத்தம் ஆமே.
உரை  
40மாயையில் சேதனன் மன்னும் பகுதியோன்
மாயையின் மற்று அது நீவு தன் மாயை ஆம்
கேவலம் ஆகும் சகலமா யோனியுள்
தோயும் மனிதர் துரியத்துள் சீவனே.
உரை  
கேவல சகல சுத்தம்
1தன்னை அறி சுத்தன் தற்கே ஏவலன் தானும்
பின்னம் உற நின்ற பேத சகலனும்
மன்னிய சத்து அசத்து சத சத்துடன்
துன்னுவர் தத்தம் தொழிற்கு அளவு ஆகவே.
உரை  
2தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான் செய்த வினைப் பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.
உரை  
3பாசம் அது ஆகும் பழமலம் பற்று அற
நேசம் அதாய் நின்ற ஆறாது நீங்கிடக்
காசம் இலாத குணம் கேவல சுத்தம்
ஆசு அற நிற்றல் அது சுத்த சைவமே.
உரை  
4ஆம் உயிர் கேவலம் மா மாயை இன் நடந்து
ஆம் உயிர் மாயை எறிப்ப அறிவு உற்றுக்
காமியம் மாயேயமும் கலவா நிற்பத்
தாம் உறு பாசம் சகல அத்தம் ஆமே.
உரை  
5சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர்
புகலும் மலம் மூ வகையும் புணர்ந்தோர்
நிகர் இல் மலரோன் மால் நீடு பல் தேவர்கள்
நிகழ் நரர் கீடம் அந்தமும் ஆமே.
உரை  
6தாவிய மாயையில் தங்கும் பிரளய
மேவிய மற்று அது உடம்பாய் மிக்கு உள்ளன
ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர்
ஆவயின் நூற்று எட்டு உருத்திரர் ஆமே.
உரை  
7ஆகின்ற கேவலத்து ஆணவத் தானவர்
ஆகின்ற இத் தேசர் ஆம் அனந்த ஆதியர்
ஆகின்ற எண்மர் எழு கோடி மந்திரர்
ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே.
உரை  
8ஆம் அவரில் சிவனார் அருள் பெற்று உளோர்
போம் மலம் தன்னால் புகழ் விந்து நாதம் விட்டு
ஓம் மயம் ஆகி ஒடுங்கனலின் மலம்
தோம் அறு சுத்தா அவத்தைத் தொழிலே.
உரை  
9ஓரினும் மூவகை நால் வகையும் உள
தேரில் இவை கேவல மாயை சேர் இச்சை
சாரியல் ஆயவை தாமே தணப் பவை
வாரி வைத்து ஈசன் மலம் அறுத்தானே.
உரை  
10பொய் ஆன போதாந்தம் ஆறு ஆறும் விட்டு அகன்று
எய்யாமை நீங்கவே எய்தவன் தான் ஆகி
மெய் ஆம் சரா சரம் ஆய் வெளி தன் உள்புக்கு
எய்தாமல் எய்தும் சுத்தாவத்தை என்பதே.
உரை  
11அனாதி பசு வியாத்தி ஆகும் இவனை
அனாதியில் வந்த மலம் ஐந்தால் ஆட்டி
அனாதியில் கேவலம் அச்ச கலத்து இட்டு
அனாதி பிறப்பு அறச் சுத்தத்து உளாகுமே.
உரை  
12அந்தரம் சுத்தா வத்தை கேவலத்து ஆறு
தந்தோர் தம் சுத்த கேவலத்து அற்ற தற்பரத்து
இன் பால் துரியத்து இடையே அறிவுறத்
தன் பால் தனை அறி தத்துவம் தானே.
உரை  
13ஐ ஐந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும்
மெய் கண்டு சுத்த அவத்தையில் வீடாகும்
துய்ய அவ் வித்தை முதல் மூன்றும் தொல் சத்தி
ஐய சிவம் சித்தி ஆம் தோற்றம் அவ்வாறே.
உரை  
14ஐ ஐந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கிடும்
மெய் கண்ட மேல் மூன்று மேவும் மெய் யோகத்தில்
கை கண்ட சத்தி சிவ பாகத்தே காண
எய்யும் படி அடங்கும் நால் ஏழ் எய்தியே.
உரை  
15ஆணவத்தார் ஒன்று அறியாத கேவலர்
பேணிய மாயைப் பிரளயாகலர் ஆகும்
காணும் உருவினர் காணாமை காண்பவே
பூணும் சகலர் முப் பாசமும் புக்கோரே.
உரை  
16ஆணவம் ஆகும் விஞ்ஞான கலருக்குப்
பேணிய மாயை பிரளயா கலருக்கே
ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே
காணும் சகலர்க்குக் காட்டு மலங்களே.
உரை  
17கேவலம் தன்னில் கிளர்ந்த விஞ்ஞாகலர்
கேவலம் தன்னில் கிளர் விந்து சத்தியால்
ஆவயில் கேவலத்து அச் சகலத்தையும்
மேவிய மந்திர மா மாயை மெய்ம்மையே.
உரை  
18மாயையின் மன்னும் பிரளயாகலர் வந்து
மாயையும் தோன்றா வகை நிற்க ஆணவ
மாய சகலத்துக் காமிய மாமாயை
ஏய மன் நூற்று எட்டு உருத்திரர் என்பவே.
உரை  
19மும் மலம் கூடி முயங்கி மயங்குவோர்
அம் மெய்ச் சகலத்தர் தேவர் சுரர் நரர்
மெய்ம்மை இல் வேதா விரிமிகு கீடாந்தத்து
அம் முறை யோனி புக்கார்க்கும் சகலரே.
உரை  
20சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும் மலச்
சத்து அசத்தோடு அத்தனித் தனி பாசமும்
மத்த இருள் சிவன் ஆன கதிராலே
தொத்து அற விட்டிடச் சுத்தர் ஆவார்களே.
உரை  
21தற்கே வலம் முத்தி தானே தனிமை ஆம்
பிற்பால் சகலம் கலாதிப் பிறிவது ஆம்
சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம்
தற்பால் புரிவது தற் சுத்தம் ஆமே.
உரை  
22அறிவு இன்றி முத்தன் அரா காதி சேரான்
குறி ஒன்று இலா நித்தன் கூடான் கலாதி
செறியும் செயல் இலான் இனம் கற்றவல்லோன்
கிறியன் மல வியாபிக்கே வலம் தானே.
உரை  
23விந்துவும் மாயையும் மேவும் கிரியையும்
சந்தத ஞான பரையும் தனுச் சத்தி
விந்துவின் மெய்ஞ் ஞானம் மேவும் பிரளயர்
வந்த சகல சுத்த ஆன்மாக்கள் வையத்தே.
உரை  
24கேவலம் ஆதியில் பேதம் கிளக்குறில்
கேவலம் மூன்றும் கிளரும் சகலத்துள்
ஆவயின் மூன்று மதி சுத்த மூடவே
ஒவல் இல்லா ஒன்பான் உற்று உணர்வோர் கட்கே.
உரை  
25கேவலத்தில் கேவலம் அதீதா தீதம்
கேவலத்தில் சகலங்கள் வயின் தவம்
கேவலத்தில் சுத்தம் கேடு இல் விஞ்ஞாகலவர்க்கு
ஆவயின் ஆதன் அருண் மூர்த்தி தானே.
உரை  
26சகலத்தில் கேவலம் சாக்கிரா தீதம்
சகல சகலமே சாக்கிர சாக்கிரம்
சகலத்தின் சுத்தமே தற் பரா வத்தை
சகலத்தில் இம் மூன்று தன்மையும் ஆமே.
உரை  
27சுத்தத்தில் சுத்தமே தொல் சிவம் ஆகுதல்
சுத்தத்தில்கேவலம் தொல் உப சாந்தம் ஆம்
சுத்த சகலம் துரிய விலாசம் ஆம்
சுத்தத்தில் இம் மூன்றும் சொல்லலும் ஆமே.
உரை  
28சாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடும்
சாக்கிரம் தன்னில் சுழுத்தி துரியமே
சாக்கிரா தீதம் தனில் சுக ஆனந்தமே
ஆக்கு மறை ஆதி ஐம் மல பாசமே.
உரை  
29சாக்கிரா தீதத்தில் தான் அறும் ஆணவம்
சாக்கிரா தீதம் பராவத்தை தங்காது
ஆக்கு பரோ பாதியா உப சாந்தத்தை
நோக்கு மலம் குண நோக்குதல் ஆகுமே.
உரை  
30பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும்
சுத்த அதீதமும் தோன்றாமல் தான் உணும்
அத்தன் அருள் என்று அருளால் அறிந்தபின்
சித்தமும் இல்லை செயல் இல்லை தானே.
உரை  
31எய்திய பெத்தமும் முத்தமும் என்பன
எய்தும் அரன் அருளே விளையாட்டோடு
எய்திடு உயிர் சுத்தத்து இடு நெறி என்னவே
எய்தும் உயிர் இறை பால் அறிவாமே.
உரை  
32ஐம் மலத்தாரும் மதித்த சகலத்தர்
ஐம் மலத்தாரும் அருவினைப் பாசத்தார்
ஐம் மலத்தார் சுவர்க்க நெறி ஆள்பவர்
ஐம் மலத்தார் அரனார்க்கு அறிவோரே.
உரை  
33கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
அரிய துரியம் அதில் உண்ணும் ஆசையும்
உரிய சுழுமுனை முதல் எட்டும் சூக்கத்து
அரிய கனா, தூலாம் அந் நனவு ஆமே.
உரை  
34ஆணவம் ஆகும் அதீத மேல் மாயையும்
பூணும் துரியம் சுழுத்தி பொய்க் காமியம்
பேணும் கனவும் மா மாயை திரோதாயி
காணும் நனவில் மலக் கலப்பு ஆகுமே.
உரை  
35அரன் முதல் ஆக அறிவோன் அதீ தத்தன்
அரன் முதல் ஆம் மாயை தங்கிச் சுழுனை
கருமம் உணர்ந்து மா மாயைக் கைக் கொண்டோர்
அருளும் அறைவர் சகலத்து உற்றாரே.
உரை  
36உரு உற்றுப் போகமே போக்கி அந்துற்று
மரு உற்றுப் பூதம் அனாதியான் மன்னி
வரும் அச் செயல் பற்றிச் சத்து ஆதி வைகிக்
கரு உற்றிடும் சீவன் காணும் சகலத்தே.
உரை  
37இருவினை ஒத்திட இன் அருள் சத்தி
மருவிட ஞானத்தில் ஆதன மன்னிக்
குருவினைக் கொண்டு அருள் சத்திமுன் கூட்டிப்
பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே.
உரை  
38ஆறு ஆறும் ஆறதின் ஐ ஐந்து அவத்தையோடு
ஈறு ஆம் அதீதத் துரியத்து இவன் எய்தப்
பேறு ஆன ஐவரும் போம் பிரகாசத்து
நீறு ஆர் பரம் சிவ மாதேயம் ஆகுமே.
உரை  
39தன்னை அறியாது உடலை முன் தான் என்றான்
தன்னை முன் கண்டான் துரியம் தனைக் கண்டான்
உன்னும் துரிய மும் ஈசனோடு ஒன்று ஆக்கால்
பின்னையும் வந்து பிறந்திடும் தானே.
உரை  
40சாக்கிரம் தன்னில் அதீதம் தலைப்படில்
ஆக்கிய அந்த வயிந் தவம் ஆனந்த
நோக்கும் பிறப்பு அறு நோன் முத்தி சித்தி ஆம்
வாக்கும் மனமும் மருவல் செய்யாவே.
உரை  
41அப்பும் அனலும் அகலத்துளே வரும்
அப்பும் அனலும் அகலத்துளே வாரா
அப்பும் அனலும் அகலத்து உளே ஏது எனில்
அப்பும் அனலும் கலந்தது அவ்வாறே.
உரை  
42அறு நான்கு அசுத்தம் அதி சுத்தா சுத்தம்
உறும் ஏழு மாயை உடன் ஐந்தே சுத்தம்
பெறு மாறு இவை மூன்றும் கண்டத்தால் பேதித்து
உறும் மாயை மா மாயை ஆன்மாவினோடே.
உரை  
43மாயை கைத் தாய் ஆக மா மாயை ஈன்றிட
ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே
ஏயும் உயிர்க்கேவல சகலத்து எய்தி
ஆய்தரு சுத்தமும் தான் வந்து அடையுமே.
உரை  
பராவத்தை
1அஞ்சும் கடந்த அனாதி பரம் தெய்வ
நெஞ்சம் அது ஆய நிமலன் பிறப்பு இலி
விஞ்சும் உடல் உயிர் வேறு படுத்திட
வஞ்சத்து இருந்த வகை அறிந்தேனே.
உரை  
2சத்தி பரா பரம் சாந்தி தனில் ஆன
சத்தி பரானந்தம் தன்னில் சுடர் விந்து
சத்திய மாயை தனுச் சத்தி ஐந்துடன்
சத்தி பெறும் உயிர் தான் அங்கத்து ஆறுமே.
உரை  
3ஆறு ஆறுக்கு அப்பால் அறிவார் அறிபவர்
ஆறு ஆறுக்கு அப்பால் அருளார் பெறுபவர்
ஆறு ஆறுக்கு அப்பால் அறிவு ஆம் அவர்கட்கே
ஆறு ஆறுக்கு அப்பால் அரன் இனிது ஆமே.
உரை  
4அஞ்சொடு நான்கும் கடந்து அகமே புக்குப்
பஞ்சணி காலத்துப் பள்ளி துயில் நின்ற
விஞ்சையர் வேந்தனும் மெல்லியலாளோடு
நஞ்சு உற நாதி நயம் செய்யும் ஆறே.
உரை  
5உரிய நனாத் துரியத்தில் இவன் ஆம்
அரிய துரிய நனா ஆதி மூன்றில்
பரிய பர துரியத்தில் பரன் ஆம்
திரிய வரும் துரியத்தில் சிவமே.
உரை  
6பரம் ஆம் அதீதமே பற்று அறப் பற்றப்
பரம் ஆம் அதீதம் பயிலப் பயிலப்
பரம் ஆம் அதீதம் பயிலாத் தபோதனர்
பரம் ஆகார் பாசமும் பற்று ஒன்று அறாதே.
உரை  
7ஆயும் பொய்ம் மாயை அகம்புறம் ஆய் நிற்கும்
வாயும் மனமும் கடந்த மயக்கு அறின்
தூய அறிவு சிவானந்தம் ஆகிப் போய்
வேயும் பொருளாய் விளைந்தது தானே.
உரை  
8துரியப் பரியில் இருந்த அச்சீவனைப்
பெரிய வியாக்கிரத்து உள்ளே புகவிட்டு
நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்கு
உரிய வினைகள் நின்று ஓலம் இட்டு அன்றே.
உரை  
9நின்ற இச் சாக்கிர நீள் துரியத்தினின்
மன்றனும் அங்கே மணம் செய்ய நின்றிடும்
மன்றன் மணம் செய்ய மாயை மறைந்திடும்
அன்றே இவனும் அவன் வடிவு ஆமே.
உரை  
10விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்
இருந்த இடத்து இடை ஈடு ஆன மாயை
பொருந்தும் துரியம் புரியில் தான் ஆகும்
தெரிந்த துரியத்தே தீது அகலாதே.
உரை  
11உன்னை அறியாது உடலை முன் நான் என்றாய்
உன்னை அறிந்து துரியத்து உற நின்றாய்
தன்னை அறிந்தும் பிறவி தணவாது ஆல்
அன்ன வியாத்தன் அமலன் என்று அறிதியே.
உரை  
12கரு வரம்பு ஆகிய காயம் துரியம்
இருவரும் கண்டீர் பிறப்பு இறப்பு உற்றார்
குருவரம் பெற்றவர் கூடிய பின்னை
இருவரும் இன்றி ஒன்று ஆகி நின்றாரே.
உரை  
13அணுவின் துரியத்தில் ஆன நனவும்
அணு அசைவின் கண் ஆன கனவும்
அணு அசைவில் பரா தீதம் சுழுத்தி
பணியில் பரதுரியம் பரம் ஆமே.
உரை  
14பர துரியத்து நனவும் பரந்து
விரி சகம் உண்ட கனவு மெய்ச் சாந்தி
உரு உறுகின்ற சுழுத்தியும் ஓவத்
தெரியும் சிவ துரி அத்தனும் ஆமே.
உரை  
15பரமா நனவின் பின் பாற்சகம் உண்ட
திரமார் கனவும் சிறந்த சுழுத்தி
உரம் ஆம் உப சாந்தம் உற்றல் துறவே
தரனாம் சிவ துரி அத்தனும் ஆமே.
உரை  
16சீவன் துரிய முதல் ஆகச் சீர் ஆன
ஆவ சிவன் துரி யாந்தம் அவத்தை பத்து
ஓவும் பரா நந்தி உண்மைக்குள் வைகியே
மேவிய நால் ஏழ் விடுத்து நின்றானே.
உரை  
17பரம் சிவன் மேல் ஆம் பரமம் பரத்தில்
பரம் பரன் மேல் ஆம் பர நனவு ஆக
விரிந்த கனா இடர் வீட்டும் சுழுனை
உரம்தகு மா நந்தி ஆம் உண்மை தானே.
உரை  
18சார்வாம் பரசிவம் சத்தி பரநாதம்
மேல் ஆய விந்து சதா சிவம் மிக்கு ஓங்கிப்
பால் ஆய்ப் பிரமன் அரி அமராபதி
தேவாம் உருத்திரன் ஈசன் ஆம் காணிலே.
உரை  
19கலப்பு அறியார் கடல் சூழ் உலகு ஏழும்
உலப்பு அறியார் உடலோடு உயிர் தன்னை
அலப்பு அறிந்து இங்கு அர சாள கிலாதார்
குறிப்பது கோல மடல் அது வாமே.
உரை  
20பின்னை அறியும் பெரும் தவத்து உண்மைசெய்
தன்னை அறியில் தயாபரன் எம் இறை
முன்னை அறிவு முடிகின்ற காலமும்
என்னை அறியல் உற்று இன்புற்ற வாறே.
உரை  
21பொன்னை மறைத்தது பொன் அணி பூடணம்
பொன்னின் மறைந்தது பொன் அணி பூடணம்
தன்னை மறைத்தது தன் கணரணங்கள் ஆம்
தன்னின் மறைந்தது தன் கரணங்களே.
உரை  
22மரத்தை மறைத்தது மா மத யானை
மரத்தில் மறைந்தது மா மத யானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார் முதல் பூதமே.
உரை  
23ஆறு ஆறு அகன்று நமவிட்டு அறிவாகி
வேறு ஆன தானே அகரமாய் மிக்கு ஓங்கி
ஈறார் பரையின் இருள் அற்ற தற்பரன்
பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே.
உரை  
24துரியத்தில் ஓர் ஐந்தும் சொல் அகராதி
விரியப் பரையின் மிகுநாதம் அந்தம்
புரியப் பரையின் பரா வத்தார் போதம்
திரியப் பரமம் துரியம் தெரியவே.
உரை  
25ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்றுப்
பந்திடும் சுத்த அவத்தைப் பதைப் பினில்
நந்தி பராவத்தை நாடச் சுடர் முனம்
அந்தி இருள் போலும் ஐம் மலம் ஆறுமே.
உரை  
26ஐ ஐந்தும் எட்டுப் பகுதியும் மாயையும்
பொய் கண்ட மா மாயை தானும் புருடன் கண்டு
எய்யும் படியாய் எவற்றும் ஆய் அன்று ஆகி
உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே.
உரை  
27நின்றான் அருளும் பரமும் முன் நேயமும்
ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்
சென்றான் எனை விடுத்து ஆங்கில் செல்லாமையும்
நன்றான ஞானத்தின் நாதப் பிரானே.
உரை  
முக்குண நிர்க்குணம்
1சாத்திகம் எய்து நனவு எனச் சாற்றுங் கால்
வாய்த்த இராசதம் மன்னும் கனவு என்ப
ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தி ஆம்
மாய்த்திடு நிர்க்குண மாசு இல் துரியமே.
உரை  
அண்டாதி பேதம்
1பெறு பகிரண்டம் பேதித்த அண்டம்
எறிகடல் ஏழின் மணல் அளவு ஆகப்
பொறி ஒளி பொன் அணி என்ன விளங்கிச்
செறியும் அண்டா சனத் தேவர் பிரானே.
உரை  
2ஆனந்த தத்துவம் அண்டா சனத்தின் மேல்
மேனி ஐந்து ஆக வியாத்தம் முப்பத்து ஆறாய்த்
தான் அந்தம் இல்லாத தத்துவம் ஆனவை
ஈனம் இலா அண்டத்து எண் மடங்கு ஆமே.
உரை  
பதினொராம் தானமும் அவத்தை எனக் காணல்
1அஞ்சில் அமுதும் ஓர் ஏழின் கண் ஆனந்த
முஞ்சில் ஓங்காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில்
வஞ்சமே நின்று வைத்திடில் காயம் ஆம்
கிஞ்சுகச் செவ்வாய்க் கிளிமொழி கேளே.
உரை  
2புருடன் உடனே பொருந்திய சித்தம்
அருவ மொடு ஆறும் அதீதத் துரியம்
விரியும் சுழுத்தியின் மிக்கு உள எட்டும்
அரிய பதினொன்றும் ஆம் அவ் அவத்தையே.
உரை  
3காட்டும் பதினொன்றும் கை கலந்தால் உடல்
நாட்டி அழுத்திடின் நந்தி அல்லால் இல்லை
ஆட்டம் செய்யாத அது விதியே நினை
ஈட்டும் அது திடம் எண்ணலும் ஆமே.
உரை  
கலவு செலவு
1கேவலம் தன்னில் கலவச் சகலத்தின்
மேவும் செலவு விட வரு நீக்கத்துப்
பாவும் தனைக் காண்டல் மூன்றும் படர் அற்ற
தீது அறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே.
உரை  
2வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை
செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி ஆமே.
உரை  
நின்மலாவத்தை
1ஊமைக் கிணற்று அகத்து உள்ளே உறைவது ஓர்
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்து உள
வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல்
ஆமையின் மேலும் ஓர் ஆயிரத்து ஆண்டே.
உரை  
2காலங்கி நீர்பூக் கலந்த ஆகாயம்
மாலங்கி ஈசன் பிரமன் சதா சிவன்
மேல் அஞ்சும் ஓடி விரவ வல்லார் கட்குக்
காலனும் இல்லை கருத்து இல்லை தானே.
உரை  
3ஆன்மாவே மைந்தன் ஆயினான் என்பது
தான் மா மறை அறை தன்மை அறிகிலர்
ஆன் மாவே மைந்தன் அரனுக்கு இவன் என்றல்
ஆன் மாவும் இல்லைஆல் ஐ ஐந்தும் இல்லையே.
உரை  
4உதயம் அழுங்கல் ஒடுங்கல் இம் மூன்றின்
கதி சாக்கிரம் கனவு ஆதி சுழுத்தி
பதி தரு சேதனன் பற்று ஆம் துரியத்து
அதி சுபன் ஆயன் தான் நந்தி ஆகுமே.
உரை  
5எல்லாம் தன்னுள் புக யாவுளும் தான் ஆகி
நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல் உயிர்
பொல்லாத ஆறா உள் போகாது போதம் ஆய்ச்
செல்லாச் சிவகதி சென்று எய்தும் அன்றே.
உரை  
6காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்
வாய்ந்த கனல் என வாதனை நின்றால்போல்
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத்
தோய்ந்த கருமத்து துரிசு அகலாதே.
உரை  
7ஆன மறை ஆதி யாம் உரு நந்தி வந்து
ஏனை அருள் செய் தெரி நனா வத்தையில்
ஆன வகையை விடும் அடைத்தாய் விட
ஆன மலா தீதம் அப்பரம் தானே.
உரை  
8சுத்த அதீதம் சகலத்தில் தோய் உறில்
அத்தன் அருள் நீங்கா ஆங்கு அணிற்றான் ஆகச்
சித்த சுகத்தைத் தீண்டாச் சமாதி செய்
அத்தனோடு ஒன்றற்கு அருள் முதல் ஆமே.
உரை  
9வேறு செய்தான் இருபாதியின் மெய்த் தொகை
வேறு செய்தான் என்னை எங்கணும் விட்டு உய்த்தான்
வேறு செய்யா அருள் கேவலத்தே விட்டு
வேறு செய்யா அத்தன் மேவி நின்றானே.
உரை  
10கறங்கு ஓலை கொள்ளிவட்டம் கடலில் திரை
நிறம்சேர் ததிமத்தின் மலத்தே நின்று அங்கு
அறம் காண் சுவர்க்க நரகம் புவி சேர்ந்து
இறங்கா உயிர் அருளால் இவை நீங்குமே.
உரை  
11தானே சிவம் ஆன தன்மை தலைப் பட
ஆன மலமும் அப் பாச பேதமும்
மான குணமும் பரான்மா உபாதியும்
பானுவின் முன் மதிபோல் படராவே.
உரை  
12நெருப்பு உண்டு நீர் உண்டு வாயுவும் உண்டு அங்கு
அருக்கனும் சோமனும் அங்கே அமரும்
திருத் தக்க மாலும் திசை முகன் தானும்
உருத்திர சோதியும் உள்ளத்து உளாரே.
உரை  
13ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவு என்னும்
ஞானத் திரியைக் கொளுவி அதன் உள்புக்கு
கூனை இருள் அற நோக்கும் ஒருவற்கு
வானகம் ஏற வழி எளிது ஆமே.
உரை  
14ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும்
தாடித்து எழுந்த தமருக ஓசையும்
பாடி எழுகின்ற வேத ஆகமங்களும்
நாடியின் உள் ஆக நான் கண்ட வாறே.
உரை  
15முன்னை அறிவினில் செய்த முது தவம்
பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்
தன்னை அறிவது அறிவாம் அஃது அன்றிப்
பின்னை அறிவது பேய் அறிவு ஆகுமே.
உரை  
16செயல் அற்று இருக்கச் சிவானந்தம் ஆகும்
செயல் அற்று இருப்பார் சிவ யோகம் தேடார்
செயல் அற்று இருப்பார் செகத் தொடும் கூடார்
செயல் அற்று இருப்பார்க்கே செய்தி உண்டாமே.
உரை  
17தான் அவன் ஆகும் சமாதி கை கூடினால்
ஆன மலம் அறும் அப் பசுத் தன்மை போம்
ஈனம் இல் காயம் இருக்கும் இருநிலத்து
ஊனங்கள் எட்டு ஒழித்து ஒன்றுவோர் கட்கே.
உரை  
18தொலையா அரன் அடி தோன்றும் அம் சத்தி
தொலையா இருள் ஒளி தோற்ற அணுவும்
தொலையா தொழில் ஞானம் தொன்மையில் நண்ணித்
தொலையாத பெத்த முத்திக்கு இடை தோயுமே.
உரை  
19தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ் சத்தி
மான்றும் தெருண்டு உயிர் பெறும் மற்று அவை
தான் தரு ஞானம் தன் சத்திக்குச் சாதன் ஆம்
ஊன்றல் இல்லா உள் ஒளிக்கு ஒளி ஆமே.
உரை  
20அறிகின்று இலாதன ஐ ஏழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியாது இருந்தேன்
அறிகின்றாய் நீ என்று அருள் செய்தான் நந்தி
அறிகின்ற நான் என்று அறிந்து கொண்டேனே.
உரை  
21தான் அவன் ஆகிய ஞானத் தலைவனை
வானவர் ஆதியை மா மணிச் சோதியை
ஈனம் இல் ஞானத்தின் அருள் சத்தியை
ஊனம் இலாள் தன்னை ஊன் இடைக் கண்டதே.
உரை  
22ஒளியும் இருளும் பரையும் பரையுள்
அளியது எனல் ஆகும் ஆன் மாவை அன்றி
அளியும் அருளும் தெருளும் கடந்து
தெளிய அருளே சிவானந்தம் ஆமே.
உரை  
23ஆனந்தம் ஆகும் அரன் அருள் சத்தியில்
தான் அந்தம் ஆம் உயிர் தானே சமாதி செய்
ஊன் அந்தம் ஆய் உணர்வாய் உள் உணர்வு உறில்
கோன் அந்தம் வாய்க்கும் மகா வாக்கியம் ஆமே.
உரை  
24அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர் வோர்க்கும்
அறிவிக்க வேண்டாம் அறிவில் செறிவோர்க்கும்
அறிவு உற்று அறியாமை எய்தி நிற்போர்க்கே
அறிவிக்கத் தம் அறிவார் அறிவோரே.
உரை  
25சத்தும் அசத்தும் சத சத்தும் தான் கூடிச்
சித்தும் அசித்தும் சிவ சித்தாய் நிற்கும்
சுத்தம் அசுத்தம் தொடங்கா துரியத்துச்
சுத்தரா மூன்றுடன் சொல் அற்றவர்களே.
உரை  
26தானே அறியான் அறிவிலோன் தான் அல்லன்
தானே அறிவான் அறிவு சத சத்து என்று
ஆனால் இரண்டும் அரன் அருளாய் நிற்கத்
தானே அறிந்து சிவத்துடன் தங்குமே.
உரை  
27தத்துவ ஞானம் தலைப்பட்டவர் கட்கே
தத்துவ ஞானம் தலைப்படலாய் நிற்கும்
தத்துவ ஞானத்துத் தான் அவன் ஆகவே
தத்துவ ஞானம் தந்தான் தொடங்குமே.
உரை  
28தன்னை அறிந்து சிவனுடன் தான் ஆக
மன்னும் மலம் குணம் மாளும் பிறப்பு அறும்
பின்னது சன் முத்தி சன்மார்க்கப் பேர் ஒளி
நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே.
உரை  
29ஞானம் தன் மேனி கிரியை நடு அரங்கம்
தான் உறும் இச்சை உயிர் ஆகத் தற்பரன்
மேனி கொண்டு ஐங் கருமத்து வித்து ஆதலான்
மோனிகள் ஞானத்து முத்திரை பெற்றார்களே.
உரை  
30உயிர்க்கு அறிவு உண்மை உயிர் இச்சை மானம்
உயிர்க்குக் கிரியை உயிர் மாயை சூக்கம்
உயிர்க்கு இவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே
உயிர்ச் செயல் அன்றி அவ் உள்ளத்து உளானே.
உரை  
31தொழில் இச்சை ஞானங்கள் தொல் சிவ சீவர்
கழிவு அற்ற மா மாயை மாயையின் ஆகும்
பழி அற்ற காரண காரியம் பாழ் விட்டு
அழிவு அற்ற சாந்தன் அதீதன் சிவன் ஆமே.
உரை  
32இல்லதும் உள்ளதும் யாவையும் தான் ஆகி
இல்லதும் உள்ளதும் ஆயன் தாம் அண்ணலைச்
சொல்லாது சொல்லிடில் தூர் ஆதி தூரம் என்று
ஒல்லை உணர்ந்தால் உயிர்க்கு உயிர் ஆகுமே.
உரை  
33உயிர் இச்சை ஊட்டி உழி தரும் சத்தி
உயிர் இச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம்
உயிர் இச்சை ஊட்டி உடன் உறலாலே
உயிர் இச்சை வாட்டி உயர் பதம் சேருமே.
உரை  
34சேரும் சிவம் ஆனார் ஐம்மலம் தீர்ந்தவர்
ஓர் ஒன்று இலார் ஐம் மல இருள் உற்றவர்
பாரின் கண் விண்ணர் அகம்புகும் பான்மையர்
ஆரும் கண்டு ஓரார் அவை அருள் என்றே.
உரை  
35எய்தினர் செய்யும் இரு மாயா சத்தியின்
எய்தினர் செய்யும் இரு ஞான சத்தியின்
எய்தினர் செய்யும் இரு ஞால சத்தியின்
எய்தினர் செய்யும் இறை அருள் தானே.
உரை  
36திருந்தனர் விட்டார் திருவின் அரகம்
திருந்தனர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தனர் விட்டார் செறிமலக் கூட்டம்
திருந்தனர் விட்டார் சிவமாய் அவமே.
உரை  
37அவமும் சிவமும் அறியார் அறியார்
அவமும் சிவமும் அறிவார் அறிவார்
அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
அவமும் சிவமும் அவன் அருள் ஆமே.
உரை  
38அருளான சத்தி அனல் வெம்மை போலப்
பொருள் அவன் ஆகத்தான் போதம் புணரும்
இருள் ஒளியாய் மீண்டும் மும் மலம் ஆகும்
திரு அருள் ஆன நந்தி செம் பொருள் ஆமே.
உரை  
39ஆதித்தன் தோன்ற வரும் பதுமாதிகள்
பேதித்த அவ்வினையால் செயல் சேதிப்ப
ஆதித்தன் தன் கதிரால் அவை சேட்டிப்பப்
பேதித்துப் பேதியா வாறு அருட் பேதமே.
உரை  
40பேதம் அபேதம் பிறழ் பேதா பேதமும்
போதம் புணர் போதம் போதமும் நாதமும்
நாதமுடன் நாத நாதாதி நாதமும்
ஆதன் அருளின் அருள் இச்சை ஆமே.
உரை  
41மேவிய பொய்க் கரி ஆட்டும் வினை எனப்
பாவிய பூதம் கொண்டாட்டிப் படைப் பாதி
பூ இயல் கூட்டத்தால் போதம் புரிந்து அருள்
ஆவியை நாட்டும் அரன் அருள் ஆமே.
உரை  
42ஆறு அகன்று தனை அறிந்தான் அவன்
ஈறு ஆகி யாவினும் யாவும் தனில் எய்த
வேறு ஆய் வெளிபுக்கு வீடு உற்றான் அம் அருள்
தேறாத் தெளி உற்றுத் தீண்டச் சிவம் ஆமே.
உரை  
43தீண்டற்கு அரிய திருவடி நேயத்தை
மீண்டு உற்று அருளால் விதி வழியே சென்று
தூண்டிச் சிவ ஞான மா வினைத் தான் ஏறித்
தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே.
உரை  
44சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
சார்ந்தவர் நேயம் தலைப்பட்ட ஆனந்தர்
சார்ந்தவர் சத்தி அருள் தன்மை யாரே.
உரை  
45தான் என்று அவன் என்று இரண்டு என்பர் தத்துவம்
தான் என்று அவன் என்று இரண்டு அற்ற தன்மையைத்
தான் என்று இரண்டு உன்னார் கேவலத்து ஆனவர்
தான் இன்றித் தான் ஆகத் தத்துவ சுத்தமே.
உரை  
46தன்னினில் தன்னை அறியும் தலைமகன்
தன்னினில் தன்னை அறியத் தலைப்படும்
தன்னினில் தன்னைச் சார்கிலன் ஆகில்
தன்னினில் தன்னையும் சார்தற்கு அரியவே.
உரை  
47அறியகிலேன் என்று அரற்றாதே நீயும்
நெறி வழியே சென்று நேர் பட்ட பின்னை
இரு சுடர் ஆகி இயற்ற வல்லானும்
ஒரு சுடரா வந்து என் உள்ளத்துள் ஆமே.
உரை  
48ஓம்புகின்றான் உலகு ஏழையும் உள் நின்று
கூம்புகின்றார் குணத்தினொடும் கூறுவர்
தேம்பு கின்றார் சிவம் சிந்தை செய்யாதவர்
கூம்ப கில்லார் வந்து கொள்ளலும் ஆமே.
உரை  
49குறி அறியார்கள் குறிகாண மாட்டார்
குறி அறியார்கள் தம் கூடல் பெரிது
குறி அறியா வகை கூடுமின் கூடி
அறிவு அறியா விருந்து அன்னமும் ஆமே.
உரை  
50ஊனோ உயிரோ உறுகின்றதே இன்பம்
வானோர் தலைவி மயக்கத்து உற நிற்கத்
தானோ பெரிது அறிவோம் என்னும் மானுடர்
தானே பிறப்போடு இறப்பு அறியாரே.
உரை  

4. அறிவுதயம்

1தன்னை அறியத் தனக்கு ஒரு கேடு இல்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே.
உரை  
2அங்கே அடல் பெரும் தேவர் எல்லாம் தொழச்
சிங்கா சனத்தே சிவன் இருந்தான் என்று
சங்கார் வளையும் சிலம்பும் சரேல் எனப்
பொங்கார் குழலியும் போற்றி என்றாளே.
உரை  
3அறிவு வடிவு என்று அறியாத என்னை
அறிவு வடிவு என்று அருள் செய்தான் நந்தி
அறிவு வடிவு என்று அருளால் அறிந்தே
அறிவு வடிவு என்று அறிந்து இருந்தேனே.
உரை  
4அறிவுக்கு அழிவு இல்லை ஆக்கமும் இல்லை
அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிகின்றது என்று இட்டு
அறைகின்றன மறை ஈறுகள் தாமே.
உரை  
5மன்னி நின்றார் இடை வந்த அருள் மாயத்து
முன்னி நின்றானை மொழிந்தேன் முதல்வனும்
பொன்னின் வந்தான் ஓர் புகழ் திருமேனியைப்
பின்னி நின்றேன் நீ பெரியை என்றானே.
உரை  
6அறிவு அறிவு ஆக அறிந்து அன்பு செய்ம்மின்
அறிவு அறிவு ஆக அறியும் இவ் வண்ணம்
அறிவு அறிவு ஆக அணிமா ஆதி சித்தி
அறிவு அறிவு ஆக அறிந்தனன் நந்தியே.
உரை  
7அறிவு அறிவு என்று அங்கு அரற்றும் உலகம்
அறிவு அறியாமை யாரும் அறியார்
அறிவு அறியாமை கடந்து அறிவானால்
அறிவு அறியாமை அழகிய வாறே.
உரை  
8அறிவு அறியாமையை நீவி அவனே
பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன போது
அறிவாய் அவற்றின் உள் தான் ஆய் அறிவின்
செறிவு ஆகி நின்றவன் சீவனும் ஆமே.
உரை  
9அறிவுடையார் நெஞ்சு அகல் இடம் ஆவது
அறிவுடையார் நெஞ்சு அரும் தவம் ஆவது
அறிவுடையார் நெஞ்சொடு ஆதிப் பிரானும்
அறிவுடையார் நெஞ்சத்து அங்கு நின்றானே.
உரை  
10மாயனும் ஆகி மலரோன் இறையும் ஆய்க்
காய நல் நாட்டுக் கருமுதல் ஆனவன்
சேயன் அணியன் தித்திக்கும் தீங் கரும்பு
ஆய அமுதாகி நின்று அண்ணிக் கின்றானே.
உரை  
11என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை அறிந்த பின் ஏதும் அறிந்திலேன்
என்னை அறிந்திட்டு இருத்தலும் கை விடாது
என்னை இட்டு என்னை உசாவு கின்றானே.
உரை  
12மாய விளக்கு அது நின்று மறைந்திடும்
தூய விளக்கு அது நின்று சுடர் விடும்
காய விளக்கு அது நின்று கனன்றிடும்
சேய விளக்கினைத் தேடு கின்றேனே.
உரை  
13தேடு கின்றேன் திசை எட்டோடு இரண்டையும்
நாடு கின்றேன் நலமே உடையான் அடி
பாடுகின்றேன் பரமே துணை ஆம் எனக்
கூடுகின்றேன் குறையா மனத்தாலே.
உரை  
14முன்னை முதல் விளையாட்டத்து முன்வந்து ஓர்
பின்னைப் பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத்
தன்னைத் தெரிந்து தன் பண்டைத் தலைவன் தாள்
மன்னிச் சிவம் ஆக வாரா பிறப்பே.
உரை  

5. ஆறந்தம்

1வேதத்தின் அந்தமும் மிக்க சித்தாந்தமும்
நாதத்தின் அந்தமும் நல்போத அந்தமும்
ஓதத்தகும் எட்டு யோகாந்த அந்தமும்
ஆதிக் கலாந்தமும் ஆறு அந்தம் ஆமே.
உரை  
2அந்தம் ஓர் ஆறும் அறிவார் அதி சுத்தர்
அந்தம் ஓர் ஆறும் அறிவார் அமலத்தர்
அந்தம் ஓர் ஆறும் அறியார் அவர்தமக்கு
அந்தமோடு ஆதி அறிய ஒண்ணாதே.
உரை  
3தான் ஆன வேதாந்தம் தான் என்னும் சித்தாந்தம்
ஆனாத் துரியத்து அணுவன் தனைகண்டு
தேனார் பராபரம் சேர் சிவ யோகமாய்
ஆனா மலம் அற்று அரும் சித்தியாலே.
உரை  
4நித்தம் பரனோடு உயிர் உற்று நீள் மனம்
சத்தம் முதல் ஐந்தும் தத்துவத்தால் நீங்கிச்
சுத்தம் அசுத்தம் தொடரா வகை நினைந்து
அத்தன் பரன்பால் அடைதல் சித்தாந்தமே.
உரை  
5மேவும் பிரமனே விண்டு உருத்திரன்
மேவும் செய் ஈசன் சதாசிவன் மிக்கப்பால்
மேவும் பரவிந்து நாதம் விடா ஆறுஆறு
ஓவும் பொழுது அணு ஒன்று உளதாமே.
உரை  
6உள்ள உயிர் ஆறுஆறு அது ஆகும் உபாதியைத்
தெள்ளி அகன்று நாத அந்தத்தைச் செற்று மேல்
உள்ள இருள் நீங்க ஓர் உணர்வு ஆகுமேல்
எள்ளலின் நாதாந்தத்து எய்திடும் போதமே.
உரை  
7தேடும் இயம நியம ஆதி சென்று அகன்று
ஊடும் சமாதியில் உற்றுப் பரசிவன்
பாடு உறச் சீவன் பரமாகப் பற்று அறக்
கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே.
உரை  
8கொள்கையில் ஆன கலாந்தம் குறிக் கொள்ளில்
விள்கையில் ஆன நிவிர்தாதி மேதாதிக்கு
உள்ளனவாம் விந்து உள்ளே ஒடுங்கலும்
தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே.
உரை  
9தெளியும் இவை அன்றித் தேர் ஐங் கலை வேறு
ஒளியுள் அமைத்து உள்ளது ஓர வல்லார் கட்கு
அளியவன் ஆகிய மந்திரம் தந்திரம்
தெளிவு உபதேச ஞானத் தொடு ஐந்தாமே.
உரை  
10ஆகும் அனாதி கலை ஆகம வேதம்
ஆகும் அத் தந்திரம் அந்நூல் வழி நிற்றல்
ஆகும் அனாதி உடல் அல்லா மந்திரம்
ஆகும் சிவ போதகம் உபதேசமே.
உரை  
11தேசார் சிவம் ஆகும் தன் ஞானத்தின் கலை
ஆசார நேயம் அறையும் கலாந்தத்துப்
பேசா உணர்வு அற்ற பெருந்தகை
வாசா மகோசர மா நந்தி தானே.
உரை  
12தான் அவன் ஆகும் சமாதி தலைப் படில்
ஆன கலாந்த நாதாந்த யோகாந்தமும்
ஏனைய போதாந்தம் சித்தாந்தம் ஆனது
ஞானம் என ஞேய ஞாதுரு ஆகுமே.
உரை  
13ஆறு அந்தமும் சென்று அடங்கும் அந்நேயத்தே
ஆறு அந்த ஞேயம் அடங்கிடு ஞாதுரு
கூறிய ஞானக் குறியுடன் வீடவே
தேறிய மோனம் சிவானந்தம் உண்மையே
உரை  
14உண்மைக் கலை ஆறு ஓர் ஐந்தான் அடங்கிடும்
உண்மைக் கலாந்தம் இரண்டு ஐந்தோடு ஏழ் அந்தம்
உண்மைக் கலை ஒன்றில் ஈறு ஆய நாத அந்தத்து
உண்மைக் கலை சொல்ல ஓர் அந்தம் ஆமே.
உரை  
15ஆவுடையாளை அரன் வந்து கொண்டபின்
தேவுடையான் எங்கள் சீர் நந்தி தாள் தந்து
வீவு அற வேதாந்த சித்தாந்த மேன்மையைக்
கூவி அருளிய கோனைக் கருதுமே.
உரை  
16கருதும் அவர் தம் கருத்தினுக்கு ஒப்ப
அரன் செய்து அருள் ஆகமம் தன்னில்
வரு சமயப் புற மாயை மா மாயை
உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே.
உரை  
17வேதாந்தம் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்தத் ஆன பிரணவத்துள் புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாம் எனாது கண்டு இன்புறுவோர்களே.
உரை  
18வேதாந்தம் சித்தாந்தம் வேறு இலா முத்திரை
போதாந்தம் ஞானம் யோகாந்தம் பொது ஞேய
நாதாந்தம் ஆனந்தம் சீரா உதயம் ஆகும்
மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே.
உரை  
19வேதாந்தம் தன்னில் உபாதி மேல் ஏழ் விட
நாதாந்த பாசம் விடு நல்ல தொம் பதம்
மீதாந்த காரணோ பாதி ஏழ் மெய்ப் பரன்
போதாந்த தற்பதம் போமசி என்பவே.
உரை  
20வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர்
நாதாந்த போதம் நணுகிய போக்கது
போதாந்தமாம் பரன் பால் புகப் புக்கதால்
நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே.
உரை  
21அண்டங்கள் ஏழும் கடந்து அகன்று அப்பாலும்
உண்டு என்ற பேர் ஒளிக்கு உள்ளாம் உள ஒளி
பண்டு உறு நின்ற பராசத்தி என்னவே
கொண்டவன் அன்றி நின்றான் தங்கள் கோவே.
உரை  
22கோ உணர்த்தும் சத்தியாலே குறி வைத்துத்
தே உணர்த்தும் கருமம் செய்தி செய்யவே
பா அனைத்தும் படைத்து அர்ச்சனை பாரிப்ப
ஒவ அனைத்து உண்டு ஒழியாத ஒருவனே.
உரை  
23ஒருவனை உன்னார் உயிர் தனை உன்னார்
இருவினை உன்னார் இருமாயை உன்னார்
ஒருவனுமே உள் உணர்த்தி நின்று ஊட்டி
அருவனும் ஆகிய ஆதரத் தானே.
உரை  
24அரன் அன்பர் தானம் அது ஆகிச் சிவத்து
வரும் அவை சத்திகள் முன்னா வகுத்திட்டு
உரன் உறு சந்நிதி சேட்டிப்ப என்றும்
திரன் உறு தோயாச் சிவா நந்தி ஆமே.
உரை  
25வேதாந்த தொம் பதம் மேவும் பசு என்ப
நாதாந்த பாசம் விடநின்ற நன்பதி
போதாந்த தற்பதம் போய் இரண்டு ஐக்கியம்
சாதாரணம் சிவ சாயுச்சியம் ஆமே.
உரை  
26சிவம் ஆதல் வேதாந்த சித்தாந்தம் ஆகும்
அவம் அவம் ஆகும் அவ் அவ் இரண்டும்
சிவம் ஆம் சதா சிவம் செய்து ஒன்றான் ஆனால்
நவம் ஆன வேதாந்த ஞான சித்தாந்தமே.
உரை  
27சித்தாந்தத் தேசீவன் முத்தி சித்தித்தலால்
சித்தாந்தத்தே நிற்போர் முத்தி சித்தித்தவர்
சித்தாந்த வேதாந்தம் செம் பொருள் ஆதலால்
சித்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே.
உரை  
28சிவனைப் பரமன் உள் சீவன் உள் காட்டும்
அவம் அற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனான்
நவம் உற்று அவத்தையில் ஞானம் சிவம் ஆம்
தவம் மிக்கு உணர்ந்தவர் தத்துவத்தாரே.
உரை  
29தத்துவம் ஆகும் சகள வகளங்கள்
தத்துவம் ஆம் விந்து நாதம் சதா சிவம்
தத்துவம் ஆகும் சீவன் தன் தற்பரம்
தத்துவம் ஆம் சிவ சாயுச் சியமே.
உரை  
30வேதமோடு ஆகமம் மெய் ஆம் இறைவன் நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உள்ளன
நாதன் அவை நாடில் இரண்டு அந்தம்
பேதம் அது என்பர் பெரியோர்க்கு அபேதமே.
உரை  
31பரா னந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம்
பரா னந்த மேல் மூன்றும் பாழ் உறு ஆனந்தம்
விரா முத்திரானந்தம் மெய்ந் நடன ஆனந்தம்
பொரா நின்ற உள்ளமே பூரிப்பியாமே.
உரை  
32ஆகும் கலாந்தம் இரண்டு அந்த நாதாந்தம்
ஆகும் பொழுதில் கலை ஐந்தாம் ஆதலில்
ஆகும் அரனே பஞ்சாந்தகன் ஆம் என்ன
ஆகும் மறை ஆகமம் மொழிந்தான் அன்றே.
உரை  
33அன்று ஆகும் என்னாது ஐவகை அந்தம் தன்னை
ஒன்று ஆன வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு
நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால்
மன்று ஆடி பாதம் மருவலும் ஆமே.
உரை  
34அனாதி சீவன் ஐம் மலம் அற்றப் பாலாய்
அனாதி அடக்கித் தனைக் கண்டு அரனாய்
தனாதி மலம் கெடத் தத்துவா தீதம்
வினாவு நீர் பால் ஆதல் வேதாந்த உண்மையே.
உரை  
35உயிரைப் பரனை உயர் சிவன் தன்னை
அயர்வு அற்று அறி தொந்தத் தசி அதனால்
செயல் அற்ற அறிவாகியும் சென்று அடங்கி
அயர்வு அற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே.
உரை  
36மன்னிய சோகமா மாமறையாளர் தம்
சென்னியது ஆன சிவயோகம் ஆம் ஈது என்ன
அன்னது சித்தாந்த மா மறையாய் பொருள்
துன்னிய ஆகம நூல் எனத் தோன்றுமே.
உரை  
37முதல் ஆகும் வேத முழுது ஆகமம் அப்
பதியான ஈசன் பகர்ந்த இரண்டு
முதிது ஆன வேத முறை முறையால் அலமந்து
அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆகவே.
உரை  

6. பதிபசு பாசம் வேறின்மை

1அறிவு அறிவு என்ற அறிவும் அனாதி
அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியில் பிறப்பு அறும் தான்
உரை  
2பசுபல கோடி பிரமன் முதலாய்ப்
பசுக்களைக் கட்டிய பாசம் மூன்று உண்டு
பசுத் தன்மை நீக்கி அப் பாசம் அறுத்தால்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.
உரை  
3கிடக்கின்ற வாறே கிளர் பயன் மூன்று
நடக்கின்ற ஞானத்தை நாள் தோறும் நோக்கித்
தொடக்கு ஒன்றும் இன்றித் தொழுமின் தொழுதால்
குடக் குன்றில் இட்ட விளக்கு அதுவாமே.
உரை  
4பாசம் செய்தானைப் படர்சடை நந்தியை
நேசம் செய்து ஆங்கே நினைப்பவர் நினைத்தலும்
கூசம் செய்துஉன்னிக் குறிக் கொள்வது எவ் வண்ணம்
வாசம் செய் பாசத்துள் வைக்கின்ற வாறே.
உரை  
5விட்ட விடம் ஏறா வாறு போல் வேறு ஆகி
விட்ட பசு பாச மெய் கண்டோன் மேவுறான்
கட்டிய கேவலம் காணும் சகலத்தைச்
சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே.
உரை  
6நாடும் பதியுடன் நல் பசு பாசமும்
நீடுமா நித்தன் நிலை அறிவார் இல்லை
நீடிய நித்தம் பசு பாச நீக்கமும்
நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே.
உரை  
7ஆய பதிதான் அருள் சிவலிங்கம் ஆம்
ஆய பசுவும் அடலேறு என நிற்கும்
ஆய பலி பீடம் ஆகும் நல்பாசம் ஆம்
ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே.
உரை  
8பதி பசு பாசம் பயில் வியா நித்தம்
பதிபசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கிப்
பதிபசு பாசத்தைப் பற்று அற நீக்கும்
பதிபசு பாசம் பயில நிலாவே.
உரை  
9பதியும் பசுவொடு பாசமும் மேலைக்
கதியும் பசுபாச நீக்கமும் காட்டி
மதி தந்த ஆனந்த மா நந்தி காணும்
துதி தந்து வைத்தனன் சுத்த சைவத்திலே.
உரை  
10அறிந்த அணு மூன்றுமே யாங்கணும் ஆகும்
அறிந்த அணு மூன்றுமே யாங்கணும் ஆக
அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன்
அறிந்த பதி படைப்பான் அங்கு அவற்றையே.
உரை  
11படைப்பு ஆதி ஆவது பரம்சிவம் சத்தி
இடைப்பால் உயிர்கள் கடைத்து இவை தூங்கல்
படைப்பு ஆதி சூக்கத்தைத் தற்பரம் செய்யப்
படைப்பு ஆதி தூய மலம் அப்பரத்திலே.
உரை  
12ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும்
ஆகிய சத்தி சிவ பர மேல் ஐந்தால்
ஆகிய சூக்கத்தில் ஐங் கருமம் செய்வோன்
ஆகிய தூய ஈசானனும் ஆமே.
உரை  
13மேவும் பரசிவ மேல் சத்தி நாதமும்
மேவும் பரவிந்து ஐம் முகன் வேறு ஈசன்
மேவும் உருத்திரன் மால் வேதா மேதினி
ஆகும்படி படைப்போன் அரன் ஆமே.
உரை  
14படைப்பும் அளிப்பும் பயில் இளைப் பாற்றும்
துடைப்பு மறைப்பு முன் தோன்ற அருளும்
சடத்தை விடுத்த அருளும் சகலத்து
அடைத்த அனாதியை ஐந்து எனல் ஆமே.
உரை  
15ஆறு ஆறு குண்டலி தன்னின் அகத்து இட்டு
வேறு ஆகும் மாயையின் முப்பான் மிகுத்துஇட்டு அங்கு
ஈறு ஆம் கருவி இவற்றால் வகுத்து இட்டு
வேறு ஆம் பதி பசு பாசம் வீடு ஆகுமே.
உரை  
16வீட்கும் பதி பசு பாசமும் மீது உற
ஆட்கும் இருவினை ஆங்கு அவற்றால் உணர்ந்து
ஆட்கும் நரக சுவர்க்கத்தில் தான் இட்டு
நாட்கு உற நான் தங்கு நல் பாசம் நண்ணுமே.
உரை  
17நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண் வந்த பேர் அருள்
அண்ணல் அடிசேர் உபாயம் அது ஆகுமே.
உரை  
18ஆகும் உபாயமே அன்றி அழுக்கு அற்று
மோகம் அறச் சுத்தன் ஆதற்கு மூலமே
ஆகும் அறுவை அழுக்கு ஏற்றி ஏற்றல் போல்
ஆகுவது எல்லாம் அருள் பாசம் ஆகுமே.
உரை  
19பாசம் பயில் உயிர் தானே பர முதல்
பாசம் பயில் உயிர் தானே பசு என்ப
பாசம் பயிலப் பதி பரம் ஆதலால்
பாசம் பயிலப் பதி பசு ஆகுமே.
உரை  
20அத்தத்தில் உத்தரம் கேட்ட அரும் தவர்
அத்தத்தில் உத்தரம் ஆகும் அருள் மேனி
அத்தத்தினாலே அணையப் பிடித்தலும்
அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே.
உரை  

7. அடித்தலை அறியும் திறம் கூறல்

1காலும் தலையும் அறியார் கலதிகள்
கால் அந்தச் சத்தி அருள் என்பர் காரணம்
பால் ஒன்று ஞானமே பண்பார் தலை உயிர்
கால் அந்த ஞானத்தைக் காட்ட வீடு ஆகும்.
உரை  
2தலைஅடி ஆவது அறியார் காயத்தில்
தலை அடி உச்சியில் உள்ளது மூலம்
தலை அடி ஆன அறிவை அறிந்தோர்
தலை அடி ஆகவே தான் இருந்தாரே.
உரை  
3நின்றான் நிலம் முழுது அண்டமும் மேல் உற
வன் தாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்
பின் தான் உலகம் படைத்தவன் பேர் நந்தி
தன் தாள் இணை என் தலை மிசை ஆனதே.
உரை  
4சிந்தையின் உள்ளே எந்தை திருவடி
சிந்தையும் எந்தை திருவடிக் கீழ் அது
எந்தையும் என்னை அறியகிலன் ஆகில்
எந்தையை யானும் அறிய கிலேனே.
உரை  
5பன்னாத பார் ஒளிக்கு அப்புறத்து அப்பால்
என் நாயகனார் இசைந்து அங்கு இருந்திடு இடம்
உன்னா ஒளியும் செய்யா மந்திரம்
சொன்னான் கழல் இணை சூடி நின்றேனே.
உரை  
6பதி அது தோற்றும் பதம் அது வைம்மின்
மதி அது செய்து மலர்ப் பதம் ஓதும்
நதி பொதியும் சடை நாரி ஓர் பாகன்
கதி செயும் காலங்கள் கண்டு கொளீரே.
உரை  
7தரித்து நின்றான் அடி தன்னிட நெஞ்சில்
தரித்து நின்றான் அமராபதி நாதன்
கரித்து நின்றான் கருதாதவர் சிந்தை
பரித்து நின்றான் அப் பரி பாகத்தானே.
உரை  
8ஒன்று உண்டு தாமரை ஒண் மலர் மூன்று உள
தன் தாதை தாளும் இரண்டு உள காயத்துள்
நன்றாகக் காய்ச்சிப் பதம் செய வல்லார்கட்கு
இன்றே சென்று ஈசனை எய்தலும் ஆமே.
உரை  
9கால் கொண்டு என் சென்னியில் கட்டறக் கட்டற
மால் கொண்ட நெஞ்சின் மயக்கு இற்று துயக்கு அறப்
பால் கொண்ட என்னைப் பரன் கொள்ள நாடினான்
மேல் கொண்டு என் செம்மை விளம்ப ஒண்ணாதே.
உரை  
10பெற்ற புதல்வர் போல் பேணிய நாற்றமும்
குற்றமும் கண்டு குணம் குறை செய்ய ஓர்
பற்றைய ஈசன் உயிரது பான்மைக்குச்
செற்றம் இலாச் செய்கைக்கு எய்தின செய்யுமே.
உரை  

8. முக் குற்றம்

1மூன்று உள குற்றம் முழுது நலிவன
மான்று இருள் தூங்கி மயங்கிக் கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றின் உள் பட்டு முடிகின்ற வாறே.
உரை  
2காமம் வெகுளி மயக்கம் இவை கடிந்து
ஏமம் பிடித்து இருந் தேனுக்கு எறி மணி
ஓம் எனும் ஓசையின் உள்ளே உறைவது ஓர்
தாமம் அதனைத் தலைப் பட்டவாறே.
உரை  

9. முப்பதம்

1தோன்றியது தொம் பதம் தற் பதம் சூழ்தர
ஏன்ற அசிபதம் இம் மூன்றோடு எய்தினோன்
ஆன்ற பராபரம் ஆகும் பிறப்பு அற
ஏன்றனன் மாளச் சிவமாய் இருக்குமே.
உரை  
2போதம் தனை உன்னிப் பூதாதி பேதமும்
ஓதும் கருவி தொண்ணூறு உடன் ஓர் ஆறு
பேதமும் நாத அந்தப் பெற்றியில் கைவிட்டு
வேதம் சொல் தொம் பதம் ஆகும் தன் மெய்மையே.
உரை  
3தற்பதம் என்றும் தொம்பதம் தான் என்றும்
நிற்ப தசியத்துள் நேர் இழையாள் பதம்
சொல் பதத்தாலும் தொடர ஒண்ணாச் சிவன்
கற்பனை இன்றிக் கலந்து நின்றானே.
உரை  
4அணுவும் பரமும் அசி பதத் தேய்ந்து
கணு ஒன்று இலாத சிவமும் கலந்தால்
இணை அறு பால் தேன் அமுது என இன்பத்
துணை அது வாய் அற்றிடத் தோன்றுமே.
உரை  
5தொம் பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்
நம்பிய சீவன் பரன் சிவனாய் நிற்கும்
அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம்
செம் பொருள் ஆண்டு அருள் சீர் நந்தி தானே.
உரை  
6ஐம்பது அறியா தவரும் அவர் சிலர்
உம்பனை நாடி முப் பதத்து இடைச்
செம்பரம் ஆகிய வாசி செலுத்திடத்
தம் பர யோகமாய்த் தானவன் ஆகுமே.
உரை  
7நந்தி அறிவும் நழுவில் அதீதம் ஆம்
இந்தியம் சத்து ஆதி விட வியன் ஆகும்
நந்திய மூன்று இரண்டு ஒன்று நலம் ஐந்தும்
நந்தி நனவாதி மூட்டும் அனாதியே.
உரை  
8பர துரியத்து நனவு படி உண்ட
விரிவில் கனவும் இதன் உப சாந்தத்து
உரிய சுழுனையும் ஓவும் சிவன் பால்
அரிய துரியம் அசி பதம் ஆமே.
உரை  

10. முப்பரம்

1தோன்றி என் உள்ளே சுழன்று எழுகின்றது ஓர்
மூன்று படி மண்டலத்து முதல்வனை
ஏன்று எய்தி இன்புற்று இருந்தே இளம் கொடி
நான்று நலம் செய் நலம் தரும் ஆறே.
உரை  
2மன்று நிறைந்தது மா பரம் ஆயது
நின்று நிறைந்தது நேர் தரு நந்தியும்
கன்று நினைந்து எழு தாய் என வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே.
உரை  
3ஆறாறு தத்துவத்து அப்புறத்து அப் பரம்
கூறா உபதேசம் கூறில் சிவபரம்
வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார்
பேறு ஆக ஆனந்தம் பேணும் பெருகவே.
உரை  
4பற்று அறப் பற்றில் பரம் பதி ஆவது
பற்று அறப் பற்றில் பரன் அறிவே பரம்
பற்று அறப் பற்றினில் பற்ற வல்லார்க்கே
பற்று அறப் பற்றில் பரம் பரம் ஆமே.
உரை  
5பரம் பரம் ஆன பதி பாசம் பற்றாப்
பரம் பரம் ஆகும் பரம் சிவம் மேவப்
பரம் பரம் ஆன பர சிவானந்தம்
பரம் பரம் ஆகப் படைப்பது அறிவே.
உரை  
6நனவில் கலாதியா நால் ஒன்று அகன்று
தனி உற்ற கேவலம் தன்னில் தான் ஆகி
நினைவுற்று அகன்ற அதீதத்து உள் நேயம்
தனை உற்றிடத் தானே தற்பரம் ஆமே.
உரை  
7தன் கண்ட தூயமும் தன்னில் விலாசமும்
பின் காணும் தூடணம் தானும் பிறழ்வுற்றுத்
தற் பரன் கால பரமும் கலந்து அற்ற
நற் பரா தீதமும் நாட அகராதியே.
உரை  

11. பர லட்சணம்

1அதீதத்து உள் ஆகி அகன்றவன் நந்தி
அதீதத்து உள் ஆகி அறிவிலோன் ஆன்மா
மதி பெற்று இருள் விட்ட மன் உயிர் ஒன்று ஆகும்
பதியில் பதியும் பரவுயிர் தானே.
உரை  
2ஆதியும் அந்தமும் இல்லா அரும் பதி
சோதிப் பரம் சுடர் தோன்றத் தோன்றாமையின்
நீதி அதாய் நிற்கும் நீடிய அப் பர
போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே.
உரை  
3துரியம் கடந்து துரியா தீதத்தே
அரிய வியோகம் கொண்டு அம்பலத்து ஆடும்
பெரிய பிரானைப் பிரணவக் கூபத்தே
துரிய வல்லார்க்குத் துரிசில்லை தானே.
உரை  
4செம்மை முன் நிற்பச் சுவேதம் திரிவபோல்
அம்மெய்ப் பரத்தோடு அணுவன் உள் ஆயிடப்
பொய்ம்மைச் சகம் உண்ட போத வெறும் பாழில்
செம்மைச் சிவமேரு சேர் கொடி ஆகுமே.
உரை  
5வைச்ச கலாதி வரு தத்துவம் கெட
வெச்ச இரு மாயை வேறு ஆக வேர் அறுத்து
உச்ச பரசிவம் ஆம் உண்மை ஒன்றவே
அச்சம் அறுத்து என்னை ஆண்டனன் நந்தியே.
உரை  
6என்னை அறிய இசைவித்த என் நந்தி
என்னை அறிந்து அறியாத இடத்து உய்த்துப்
பின்னை ஒளியில் சொரூபம் புறப்பட்டுத்
தன்னை அளித்தான் தற்பரம் ஆகவே.
உரை  
7பரந்தும் சுருங்கியும் பார் புனல் வாயு
நிரந்த வளியொடு ஞாயிறு திங்கள்
அரந்த அரன் நெறி ஆயது ஆகித்
தரந்த விசும்பு ஒன்று தாங்கி நின்றானே.
உரை  
8சத்தின் நிலையினில் தான் ஆன சத்தியும்
தற்பரையாய் நிற்கும் தான் ஆம் பரற்கு உடல்
உய்த்தகும் இச்சையில் ஞான ஆதி பேதம் ஆய்
நித்த நடத்து நடிக்குமா நேயத்தே.
உரை  
9மேலொடு கீழ்ப்பக்கம் மெய் வாய் கண் நராசிகள்
பாலிய விந்து பரையுள் பரையாகக்
கோலிய நான்கு அவை ஞானம் கொணர் விந்து
சீலம் இலா அணுச் செய்தி அது ஆமே.
உரை  
10வேறு ஆம் அதன் தன்மை போலும் இக் காயத்தில்
ஆறு ஆம் உபாதி அனைத்து ஆகும் தத்துவம்
பேறு ஆம் பர ஒளி தூண்டும் பிரகாசம் ஆய்
ஊறா உயிர்த்து உண்டு உறங்கிடும் மாயையே.
உரை  
11தற்பரம் மன்னும் தனி முதல் பேர் ஒளி
சிற்பரம் தானே செகம் உண்ணும் போதமும்
தொல் பதம் தீர் பாழில் சுந்தரச் சோதிபுக்கு
அப்புறம் அற்றது இங்கு ஒப்பு இல்லை தானே.
உரை  
12பண்டை மறைகள் பரவான் உடல் என்னும்
துண்ட மதியோன் துரியா தீதம் தன்னைக்
கண்டு பரனும் அக் காரணோ பதிக்கே
மிண்டின் அவன் சுத்தன் ஆகான் வினவிலே.
உரை  
13வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற
தளி ஆகிய தற்பரம் காண் அவன் தான்
வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற
வெளி ஆய சத்தி அவன் வடிவாமே.
உரை  
14மேருவி னோடே விரிகதிர் மண்டலம்
ஆர நினையும் அரும் தவ யோகிக்குச்
சீர் ஆர் தவம் செய்யில் சிவன் அருள் தான் ஆகும்
பேரவும் வேண்டாம் பிறிது இல்லை தானே.
உரை  

11. பர லட்சணம்

1அதீதத்து உள் ஆகி அகன்றவன் நந்தி
அதீதத்து உள் ஆகி அறிவிலோன் ஆன்மா
மதி பெற்று இருள் விட்ட மன் உயிர் ஒன்று ஆகும்
பதியில் பதியும் பரவுயிர் தானே.
உரை  
2ஆதியும் அந்தமும் இல்லா அரும் பதி
சோதிப் பரம் சுடர் தோன்றத் தோன்றாமையின்
நீதி அதாய் நிற்கும் நீடிய அப் பர
போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே.
உரை  
3துரியம் கடந்து துரியா தீதத்தே
அரிய வியோகம் கொண்டு அம்பலத்து ஆடும்
பெரிய பிரானைப் பிரணவக் கூபத்தே
துரிய வல்லார்க்குத் துரிசில்லை தானே.
உரை  
4செம்மை முன் நிற்பச் சுவேதம் திரிவபோல்
அம்மெய்ப் பரத்தோடு அணுவன் உள் ஆயிடப்
பொய்ம்மைச் சகம் உண்ட போத வெறும் பாழில்
செம்மைச் சிவமேரு சேர் கொடி ஆகுமே.
உரை  
5வைச்ச கலாதி வரு தத்துவம் கெட
வெச்ச இரு மாயை வேறு ஆக வேர் அறுத்து
உச்ச பரசிவம் ஆம் உண்மை ஒன்றவே
அச்சம் அறுத்து என்னை ஆண்டனன் நந்தியே.
உரை  
6என்னை அறிய இசைவித்த என் நந்தி
என்னை அறிந்து அறியாத இடத்து உய்த்துப்
பின்னை ஒளியில் சொரூபம் புறப்பட்டுத்
தன்னை அளித்தான் தற்பரம் ஆகவே.
உரை  
7பரந்தும் சுருங்கியும் பார் புனல் வாயு
நிரந்த வளியொடு ஞாயிறு திங்கள்
அரந்த அரன் நெறி ஆயது ஆகித்
தரந்த விசும்பு ஒன்று தாங்கி நின்றானே.
உரை  
8சத்தின் நிலையினில் தான் ஆன சத்தியும்
தற்பரையாய் நிற்கும் தான் ஆம் பரற்கு உடல்
உய்த்தகும் இச்சையில் ஞான ஆதி பேதம் ஆய்
நித்த நடத்து நடிக்குமா நேயத்தே.
உரை  
9மேலொடு கீழ்ப்பக்கம் மெய் வாய் கண் நராசிகள்
பாலிய விந்து பரையுள் பரையாகக்
கோலிய நான்கு அவை ஞானம் கொணர் விந்து
சீலம் இலா அணுச் செய்தி அது ஆமே.
உரை  
10வேறு ஆம் அதன் தன்மை போலும் இக் காயத்தில்
ஆறு ஆம் உபாதி அனைத்து ஆகும் தத்துவம்
பேறு ஆம் பர ஒளி தூண்டும் பிரகாசம் ஆய்
ஊறா உயிர்த்து உண்டு உறங்கிடும் மாயையே.
உரை  
11தற்பரம் மன்னும் தனி முதல் பேர் ஒளி
சிற்பரம் தானே செகம் உண்ணும் போதமும்
தொல் பதம் தீர் பாழில் சுந்தரச் சோதிபுக்கு
அப்புறம் அற்றது இங்கு ஒப்பு இல்லை தானே.
உரை  
12பண்டை மறைகள் பரவான் உடல் என்னும்
துண்ட மதியோன் துரியா தீதம் தன்னைக்
கண்டு பரனும் அக் காரணோ பதிக்கே
மிண்டின் அவன் சுத்தன் ஆகான் வினவிலே.
உரை  
13வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற
தளி ஆகிய தற்பரம் காண் அவன் தான்
வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற
வெளி ஆய சத்தி அவன் வடிவாமே.
உரை  
14மேருவி னோடே விரிகதிர் மண்டலம்
ஆர நினையும் அரும் தவ யோகிக்குச்
சீர் ஆர் தவம் செய்யில் சிவன் அருள் தான் ஆகும்
பேரவும் வேண்டாம் பிறிது இல்லை தானே.
உரை  

12. முத்துரியம்

1நனவு ஆதி மூன்றினில் சீவ துரியம்
தனது ஆதி மூன்றினில் பர துரியம் தான்
நனவு ஆதி மூன்றினில் சிவ துரியம் ஆம்
இனது ஆகும் தொந்தத் தசி பதத்து ஈடே.
உரை  
2தானா நனவில் துரியம் தன் தொம் பதம்
தான் ஆம் துரிய நனவு ஆதி தான் மூன்றில்
ஆனாப் பர பதம் அற்ற தரு நனா
வான் ஆன மேல் மூன்றும் துரியம் அணுகுமே.
உரை  
3அணுவின் துரியத்து நான்கும் அது ஆகிப்
பணியும் பரதுரியம் பயில் நான்கும்
தணிவில் பரம் ஆகிச் சார் முத்துரியக்
கணுவில் இந்நான்கும் கலந்த ஈர் ஐந்தே.
உரை  
4ஈர் ஐந்து அவத்தை இசைமுத் துரியத்துள்
நேர் அந்தம் ஆக நெறிவழியே சென்று
பார் அந்தம் ஆன பரா பரத்து அயிக்கியத்து
ஓர் அந்தம் ஆம் இரு பாதியைச் சேர்த்திடே.
உரை  
5தொட்டே இருமின் துரிய நிலத்தினை
எட்டாது எனின் நின்று எட்டும் இறைவனைப்
பட்டு ஆங்கு அறிந்திடில் பல் நா உதடுகள்
தட்டாது ஒழிவது ஓர் தத்துவம் தானே.
உரை  
6அறிவாய் அசத்து என்னும் மாறா அகன்று
செறிவு ஆய மாயை சிதைத்து அருளாலே
பிரியாத பேர் அருள் ஆயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலை அறிந்தாரே.
உரை  
7நனவின் நனவு ஆதி நால் ஆம் துரியம்
தனது உயிர் தொம் பதம் ஆமாறு போல
வினை அறு சீவன் நனவு ஆதி ஆகத்து
அனைய பர துரியம் தற் பதமே.
உரை  
8தொம் பதம் தற்பதம் சொல் முத்துரியம் போல்
நம்பிய மூன்று ஆம் துரியத்து நல் தாமம்
அம்புவி உன்னா அதி சூக்கம் அப்பாலைச்
செம் பொருள் ஆண்டருள் சீர் நந்தி தானே.
உரை  

13. மும்முத்தி

1சீவன் தன் முத்தி அதீதம் பரமுத்தி
ஓ உபசாந்தம் சிவ முத்தி ஆனந்த
மூவயின் முச் சொரூப முத்தி முப்பாலது ஆய்
ஓ உறு தாரத்தில் உள்ளு நாதாந்தமே.
உரை  
2ஆவது அறியார் உயிர் பிறப்பால் உறும்
ஆவது அறியும் உயிர் அருள் பால் உறும்
ஆவது ஒன்று இல்லை அகம் புறத்து என்று அகன்று
ஓவு சிவனுடன் ஒன்று தன் முத்தியே.
உரை  
3சிவம் ஆகி மும்மல முக்குணம் செற்றுத்
தவம் ஆன மும் முத்தி தத்துவத்து அயிக்கியத்து
உவம் ஆகிய நெறி சோகம் என்போர்க்குச்
சிவம் ஆம் அமலன் சிறந்தனன் தானே.
உரை  
4சித்தியும் முத்தியும் திண் சிவம் ஆகிய
சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுக ஆனந்த
சத்தியும் மேலைச் சமாதியும் ஆயிடும்
பெத்தம் அறுத்த பெரும் பெருமானே.
உரை  

14. முச் சொரூபம்

1ஏறிய வாறே மலம் ஐந்து இடை அடைத்து
ஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டு
வேறும் என முச் சொரூபத்து வீடு உற்று அங்கு
ஈறு அதில் பண்டைப் பரன் உண்மை செய்யுமே.
உரை  
2மூன்று உள மாளிகை மூவர் இருப்பிடம்
மூன்றினில் முப்பத்தாறும் உதிப்பு உள
மூன்றினின் உள்ளே முளைத்து எழும் சோதியைக்
காண்டலும் காயக் கணக்கு அற்ற வாறே.
உரை  
3உலகம் புடை பெயர்ந்து ஊழியும் போன
நிலவு சுடர் ஒளி மூன்றும் ஒன்று ஆய
பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன்
அளவும் பெருமையும் ஆர் அறிவாரே.
உரை  
4பெருவாய் முதல் எண்ணும் பேதமே பேதித்து
அருவாய் உருவாய் அருஉரு ஆகிக்
குருவாய் வரும் சத்தி கோன் உயிர்ப் பன்மை
உருவாய் உடன் இருந்து ஒன்றாய் அன்று ஆமே.
உரை  
5மணி ஒளி சோபை இலக்கணம் வாய்த்து
மணி எனல் ஆய் நின்றவாறு அது போலத்
தணி முச்சொருப ஆதி சத்தி ஆதி சாரப்
பணி வித்த பேர் நந்தி பாதம் பற்றாயே.
உரை  
6கல் ஒளி மா நிறம் சோபைக் கதிர் தட்ட
நல்ல மணி ஒன்றின் ஆடி ஒண் முப்பதம்
சொல் அறு முப் பாழில் சொல் அறு பேர் ஊரைத்து
அதல் அறு முத்திராம் அந்தத்து அனு பூதியே.
உரை  
7உடந்த செந்தாமரை உள் உறு சோதி
நடந்த செந்தாமரை நாத அம் தகைந்தால்
அடைந்த பயோதரி அட்டி அடைத்து அவ்
விடம் தரு வாசலை மேல் திறவீரே.
உரை  

14. முச் சொரூபம்

1ஏறிய வாறே மலம் ஐந்து இடை அடைத்து
ஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டு
வேறும் என முச் சொரூபத்து வீடு உற்று அங்கு
ஈறு அதில் பண்டைப் பரன் உண்மை செய்யுமே.
உரை  
2மூன்று உள மாளிகை மூவர் இருப்பிடம்
மூன்றினில் முப்பத்தாறும் உதிப்பு உள
மூன்றினின் உள்ளே முளைத்து எழும் சோதியைக்
காண்டலும் காயக் கணக்கு அற்ற வாறே.
உரை  
3உலகம் புடை பெயர்ந்து ஊழியும் போன
நிலவு சுடர் ஒளி மூன்றும் ஒன்று ஆய
பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன்
அளவும் பெருமையும் ஆர் அறிவாரே.
உரை  
4பெருவாய் முதல் எண்ணும் பேதமே பேதித்து
அருவாய் உருவாய் அருஉரு ஆகிக்
குருவாய் வரும் சத்தி கோன் உயிர்ப் பன்மை
உருவாய் உடன் இருந்து ஒன்றாய் அன்று ஆமே.
உரை  
5மணி ஒளி சோபை இலக்கணம் வாய்த்து
மணி எனல் ஆய் நின்றவாறு அது போலத்
தணி முச்சொருப ஆதி சத்தி ஆதி சாரப்
பணி வித்த பேர் நந்தி பாதம் பற்றாயே.
உரை  
6கல் ஒளி மா நிறம் சோபைக் கதிர் தட்ட
நல்ல மணி ஒன்றின் ஆடி ஒண் முப்பதம்
சொல் அறு முப் பாழில் சொல் அறு பேர் ஊரைத்து
அதல் அறு முத்திராம் அந்தத்து அனு பூதியே.
உரை  
7உடந்த செந்தாமரை உள் உறு சோதி
நடந்த செந்தாமரை நாத அம் தகைந்தால்
அடைந்த பயோதரி அட்டி அடைத்து அவ்
விடம் தரு வாசலை மேல் திறவீரே.
உரை  

15. முக்கரணம்

1இடன் ஒரு மூன்றில் இயைந்த ஒருவன்
கடன் உறு அவ் உருவேறு எனக் காணும்
திடம் அது போலச் சிவ பர சீவர்
உடன் உறை பேதமும் ஒன்று எனல் ஆமே.
உரை  
2ஒளியை ஒளிசெய்து ஓம் என்று எழுப்பி
வளியை வளி செய்து வாய்த்திட வாங்கி
வெளியை வெளி செய்து மேல் எழ வைத்துத்
தெளியத் தெளியும் சிவ பதம் தானே.
உரை  
3முக்கரணங்களின் மூர்ச்சை தீர்த்து ஆவது அக்
கைக் காரணம் என்னத் தந்தனன் காண் நந்தி
மிக்க மனோன்மணி வேறே தனித்து ஏக
ஒக்கும் அது உன்மணி ஓது உள் சமாதியே.
உரை  

16. முச்சூனிய தொந்தத் தசி

1தற்பதம் தொம் பதம் தான் ஆம் அசி பதம்
தொற்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றவே
நிற்பது உயிர் பரன் நிகழ் சிவமும் மூன்றின்
சொல் பதம் ஆகும் தொந்தத் தசியே.
உரை  
2தொந்தத் தசி மூன்றில் தொல் காமியம் ஆதி
தொந்தத் தசி மூன்றில் தொல் தாமதம் ஆதி
வந்த மலம் குணம் மாளச் சிவம் தோன்றின்
இந்துவின் முன் இருள் ஏகுதல் ஒக்குமே.
உரை  
3தொந்தத் தசியை அவ் வாசியில் தோற்றியே
அந்த முறை ஈர் ஐந்து ஆக மதித்து இட்டு
அந்தம் இலாத அவத்தை அவ்வாக்கியத்து
உந்து முறையில் சிவ முன் வைத்து ஓதிடே.
உரை  
4வைத்துச் சிவத்தை மதி சொரு பானந்தத்து
உய்த்துப் பிரணவம் ஆம் உபதேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடும் மெய் உணர்ந்து
அத்தற்கு அடிமை அடைந்து நின்றானே.
உரை  
5தொம் பதம் மாயை உள் தோன்றிடும் தற்பதம்
அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம்
நம்புறு சாந்தியில் நண்ணும் அவ் வாக்கியம்
உம்பர் தொந்தத் தசி வாசி ஆமே.
உரை  
6ஆகிய அச்சோயம் தேவதத் தன்னிடத்து
ஆகிய வை விட்டால் காயம் உபாதானம்
ஏகிய தொந்தத் தசி என்ப மெய் அறிவு
ஆகிய சீவன் பரசிவன் ஆமே.
உரை  
7தாமத காமியம் ஆகித் தகுகுண
மா மலம் மூன்றும் அகார உகாரத்தோடு
ஆமறும் அவ்வும் அவ் வாயுடன் மூன்றில்
தாம் ஆம் துரியமும் தொந்தத் தசி அதே.
உரை  

17. முப்பாழ்

1காரியம் ஏழ் கண்டு அறு மாயப் பாழ்விடக்
காரணம் ஏழ் கண்டு அறும் போதப் பாழ்விடக்
காரிய காரண வாதனை கண்டு அறும்
சீரூப சாந்த முப் பாழ் விடத் தீருமே.
உரை  
2மாயப் பாழ் சீவன் வியோமப் பாழ்மன் பரன்
சேய முப் பாழ் எனச் சிவசத்தியில் சீவன்
ஆய வியாப்தம் எனும் முப்பாழாம் அந்தத்
தூய சொரூபத்தில் சொல் முடி வாகுமே.
உரை  
3எதிர் அற நாளும் எருது வந்து ஏறும்
பதி எனும் நந்தி பதம் அது கூடக்
கதி எனப் பாழைக் கடந்த அந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்கு கின்றேனே.
உரை  
4துரியம் அடங்கிய சொல் அறும் பாழை
அரிய பரம் பரம் என்பர்கள் ஆதர்
அரிய பரம் பரம் என்றே துதிக்கும்
அரு நிலம் என்பதை யார் அறிவாரே.
உரை  
5ஆறு ஆறு நீங்க நமவாதி அகன்றிட்டு
வேறு ஆகிய பரை ஆ என்று மெய்ப் பரன்
ஈறு ஆன வாசியில் கூட்டும் அது அன்றோ
தேறாச் சிவாய நம எனத் தேறிலே.
உரை  
6உள்ளம் உரு என்றும் உருவம் உளம் என்றும்
உள்ள பரிசு அறிந்தோறும் அவர்கட்குப்
பள்ளமும் இல்லை திடர் இல்லை பாழ் இல்லை
உள்ளமும் இல்லை உரு இல்லை தானே.
உரை  

18. காரிய காரண உபாதி

1செற்றிடும் சீவ உபாதித் திறன் ஏழும்
பற்றும் பரோபாதி ஏழும் பகர் உரை
உற்றிடும் காரிய காரணத் தோடு அற
அற்றிட அச்சிவம் ஆகும் அணுவனே.
உரை  
2ஆறு ஆறு காரியோ பாதி அகன்றிட்டு
வேறு ஆய் நனவு மிகுத்த கனா நனா
ஆறா அகன்ற சுழுத்தி அதில் எய்தாப்
பேறா நிலத்து உயிர் தொம் பதம் பேசிலே.
உரை  
3உயிர்க்கு உயிர் ஆகி ஒழிவு அற்று அழிவு அற்று
அயிர்ப்பு அறு காரணோ பாதி விதிரேகத்து
உயிர்ப்பு உறும் ஈசன் உபமிதத்தால் அன்றி
வியர்ப்பு உறும் ஆணவம் வீடல் செய்யாவே.
உரை  
4காரியம் ஏழில் கலக்கும் கடும் பசு
காரணம் ஏழில் கலக்கும் பரசிவன்
காரிய காரணம் கற்பனை சொல் பதம்
பார் அறும் பாழில் பரா பரத் தானே.
உரை  
5முத்திக்கு வித்து முதல்வன் தன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்து உற்றுப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம் தான் ஆதல்
சத்திக்கு வித்துத் தனது உப சாந்தமே.
உரை  

19. உபசாந்தம்

1காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள்
காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி
காரிய காரண வாதனைப் பற்று அறப்
பாரணவும் உப சாந்தப் பரிசு இதே.
உரை  
2அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்
முன்னிய சாக்கிரா தீதத்து உறு புரி
மன்னு பரங்காட்சி ஆவது உடன் உற்றுத்
தன்னின் வியாத்தி தனின் உப சாந்தமே.
உரை  
3ஆறு ஆறு அமைந்த ஆணவத்தை உள் நீங்குதற்கு
பேறு ஆன தன்னை அறிந்து அதன் பின் தீர் சுத்தி
கூறாத சாக்கிரா தீதம் குருபரன்
பேறு ஆம் வியாத்தம் பிறழ் உப சாந்தமே.
உரை  
4வாய்ந்த உப சாந்த வாதனை உள்ளப் போய்
ஏய்ந்த சிவம் ஆதலின் சிவ ஆனந்தத்துத்
தோய்ந்து அறல் மோனச் சுக அனுபவத் தோடே
ஆய்ந்ததில் தீர்க்கை ஆனது ஈர் ஐந்துமே.
உரை  
5பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்த்
திரையின் இன்றாகிய தெண்புனல் போல உற்று
உணர்ந்தார் ஆரமும் தொக்க உணர்ந்துளோன்
கரை கண்டான் அற்ற கணக்கிலே.
உரை  
6பிறையுள் கிடந்த முயலை எறிவான்
அறை மணி வாள் கொண்டவர் தமைப் போலக்
கறை மணி கண்டனைக் காண்குற மாட்டார்
நிறை அறிவோம் என்பர் நெஞ்சிலர் தாமே.
உரை  

20. புறங் கூறாமை

1கரும் தாள் கருடன் விசும்பு ஊடு இறப்பக்
கரும் தாள் கயத்தில் கரும் பாம்பு நீங்கப்
பெரும் தன்மை பேசுதி நீ ஒழி நெஞ்சே
அருந்தா அலை கடல் ஆறு சென்றாலே.
உரை  
2கருதலர் மாளக் கருவாயில் நின்ற
பொருதலைச் செய்வது புல் அறிவு ஆண்மை
மருவலர் செய்கின்ற மா தவம் ஒத்தால்
தரு அலர் கேட்ட தனி உம்பர் ஆமே.
உரை  
3பிணங்கவும் வேண்டாம் பெரு நிலம் முற்றும்
இணங்கி எம் ஈசனை ஈசன் என்று உன்னில்
கணம் பதினெட்டும் கழல் அடி காண
வணங்கு எழு நாடி அங்கு அன்பு உறல் ஆமே.
உரை  
4என்னிலும் என் உயிர் ஆய இறைவனைப்
பொன்னிலும் மா மணி ஆய புனிதனை
மின்னிய எவ்வுயிர் ஆய விகிர்தனை
உன்னிலும் உன்னும் உறுவகை யாலே.
உரை  
5நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை
ஒன்றும் பொருள்கள் உரைப்பவர்கள் ஆகிலும்
வென்று ஐம் புலனும் விரைந்து பிணக்கு அறுத்து
ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே.
உரை  
6நுண் அறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும்
எண் அறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப்
பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை
விண் அறிவாளர் விரும்பு கின்றாரே.
உரை  
7விண்ணவ ராலும் அறிவறியான் தன்னைக்
கண் உற உள்ளே கருதிடில் காலையில்
எண் உற ஆக முப்போதும் இயற்றி நீ
பண்ணிடில் தன்மை பரா பரன் ஆமே.
உரை  
8ஒன்றா உலகுடன் ஏழும் பரந்தவன்
பின் தான் அருள் செய்த பேர் அருளாள வன்
கன்றா மனத்தார் தம் கல்வியுள் நல்லவன்
பொன்றாத போது புனை புகழானே.
உரை  
9போற்றி என்றேன் எந்தை பொன் ஆன சேவடி
ஏற்றியேது என்றும் எறிமணி தான் அகக்
காற்றின் விளக்கு அது காய மயக்கு உறும்
ஆற்றலும் கேட்டதும் அன்று கண்டேனே.
உரை  
10நேடிக் கொண்டு என் உள்ளே நேர் தரு நந்தியை
ஊடுபுக்கு ஆரும் உணர்ந்து அறிவார் இல்லை
கூடுபுக்கு ஏறல் உற்றேன் அவன் கோலம் கண்
மூடிக் கண்டேன் உலகு ஏழும் கண்டேனே.
உரை  
11ஆன புகழும் அமைந்தது ஓர் ஞானமும்
தேனும் இருக்கும் சிறுவரை ஒன்று கண்டு
ஊனம் ஒன்று இன்றி உணர்வு செய்வார் கட்கு
வானகம் செய்யும் மறவனும் ஆமே.
உரை  
12மா மதி ஆம் மதியாய் நின்ற மாதவர்
தூய் மதி ஆகும் சுடர் பரம் ஆனந்தம்
தா மதி ஆகச் சகம் உணச் சாந்தி புக்கு
ஆம் மலம் அற்றார் அமைவு பெற்றாரே.
உரை  
13பத முத்தி மூன்றும் பழுது என்று கைவிட்டு
இதம் உற்ற பாச இருளைத் துரந்து
மதம் அற்று எனது யான் மாற்றி விட்டு ஆங்கே
திதம் உற்றவர்கள் சிவ சித்தர் தாமே.
உரை  
14சித்தர் சிவத்தைக் கண்டவர் சீர் உடன்
சுத்த ஆசுத்தத்துடன் தோய்ந்து தோயாதவர்
முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்
சத்தர் சதா சிவத் தன்மையர் தாமே.
உரை  
15உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும்
துதிக்கும் நிருதி வருணன் நல் வாயு
மதிக்கும் குபேரன் வடதிசை ஈசன்
நிதித் தெண் திசையும் நிறைந்து நின்றாரே.
உரை  

21. எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை

1ஒருங்கிய பூவும் ஓர் எட்டு இதழ் ஆகும்
மருங்கிய மாயா புரி அதன் உள்ளே
சுருங்கிய தண்டின் சுழுனையின் ஊடே
ஒருங்கிய சோதியை ஓர்ந்து எழும் உய்ந்தே.
உரை  
2மொட்டு அலர் தாமரை மூன்று உள மூன்றினும்
விட்டு அலர் கின்றனன் சோதி விரி சுடர்
எட்டு அலர் உள்ளே இரண்டு அலர் உள் உறில்
பட்டு அலர் கின்றது ஓர் பண்டு அங்ஙண் ஆமே.
உரை  
3ஆறே அருவி அகம் குளம் ஒன்று உண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவி முலைக் கொம்பு அனையாளொடும்
வேறே இருக்கும் விழுப் பொருள் தானே.
உரை  
4திகை எட்டும் தேர் எட்டும் தேவதை எட்டும்
வகை எட்டும் ஆய் நின்ற ஆதிப் பிரானை
வகை எட்டு நான்கும் மற்று ஆங்கே நிறைந்து
முகை எட்டும் உள் நின்று உதிக்கின்ற வாறே.
உரை  
5ஏழும் சகளம் இயம்பும் கடந்து எட்டில்
வாழும் பரம் என்றது கடந்து ஒன்பதில்
ஊழி பரா பரம் ஓங்கிய பத்தினில்
தாழ்வு அது ஆன தனித் தன்மை தானே.
உரை  
6பல் ஊழி பண்பன் பகலோன் இறையவன்
நல் ஊழி ஐந்தின் உள்ளே நின்ற ஊழிகள்
செல் ஊழி அண்டத்துச் சென்ற அவ் வூழியுள்
அவ்வூழி உச்சியுள் ஒன்றில் பகவனே.
உரை  
7புரியம் உலகினில் பூண்ட எட்டானை
திரியும் களிற்றொடு தேவர் குழாமும்
எரியும் மழையும் இயங்கும் வெளியும்
பரியும் ஆகாசத்தில் பற்றது தானே.
உரை  
8ஊறும் அருவி உயர் வரை உச்சி மேல்
ஆறு இன்றிப் பாயும் அரும் குளம் ஒன்று உண்டு
சேறு இன்றிப் பூத்த செழும் கொடித் தாமரைப்
பூ இன்றிச் சூடான் புரி சடையோனே.
உரை  
9ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நின்றும் இருந்தும் நிலம் பல பேசினும்
வென்றும் இருந்தும் விகிர்தனை நாடுவர்
சென்றும் இருந்தும் திரு உடையோரே.
உரை  
10தொல் பத விசுவன்றை சதன் பிராஞ்ஞன்
நல் பத விராட்டன் பொன் கர்ப்பன் அவ் யாகிர்தன்
பிற் பதம் சொலிதையன் பிரசா பத்தியன்
பொன் புவி சாந்தன் பொரு அபிமானியே.
உரை  

22. ஒன்பான் அவத்தை - ஒன்பான் அபிமானி

1நவம் ஆம் அவத்தை நனவு ஆதி பற்றில்
பவம் ஆம் மலம் குணம் பற்று அற்றுப் பற்றாத்
தவம் ஆன சத்திய ஞானப் பொதுவில்
துவம் ஆர் துரியம் சொரூபம் அது ஆமே.
உரை  
2சிவம் ஆன சிந்தையில் சீவன் சிதைய
பவம் ஆன மும் மலம் பாறிப் பறிய
நவம் ஆன அந்தத்தின் நல் சிவ போதம்
தவம் ஆம் அவை ஆகித் தான் அல்ல ஆகுமே.
உரை  
3முன் சொன்ன ஒன்பானின் முன் உறு தத்துவம்
தன் சொல்லில் எண்ணத் தகா ஒன்பான் வேறு உள
பின் சொல்ல ஆகும் இவ் ஈர் ஒன்பான் பேர்த்திட்டு
தன் செய்த ஆண்டவன் தான் சிறந்தானே.
உரை  
4உகந்தன ஒன்பதும் ஐந்தும் உலகம்
பகர்ந்த பிரான் என்னும் பண்பினை நாடி
அகந்து எம்பிரான் என்பான் அல்லும் பகலும்
இகந்தன வல்வினையோடு அறுத்தானே.
உரை  
5நலம் பல காலம் தொகுத்தன நீளம்
குலம் பல வண்ணம் குறிப் பொடும் கூடும்
பலம் பல பன்னிரு கால நினையும்
நிலம் பலவாறு இன நீர்மையன் தானே.
உரை  
6ஆதி பராபரம் ஆகும் பரா பரை
சோதி பரம் உயிர் சொல்லும் நல் தத்துவம்
ஓதும் கலை மாயை ஓர் இரண்டு ஓர் முத்தி
நீதி ஆம் பேதம் ஒன்பானுடன் ஆதியே.
உரை  
7தேறாத சிந்தை தெளியத் தெளிவித்து
வேறா நரக சுவர்க்கமும் மேதினி
ஆறாப் பிறப்பும் உயிர்க்கு அருளால் வைத்தான்
வேறாத் தெளியார் வினை உயிர் பெற்றதே.
உரை  
8ஒன்பான் அவத்தை உள் ஒன்பான் அபிமானி
நன்பால் பயிலும் நவ தத்துவம் ஆதி
ஒன்பானில் நிற்பது ஓர் முத்துரியத்து உறச்
செம்பால் சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே.
உரை  
9நாசி நுனியினில் நான்கு மூவிரல் இடை
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்
பேசி இருக்கும் பெரு மறை அம் மறை
கூசி இருக்கும் குணம் அது ஆமே.
உரை  

23. சுத்தா சுத்தம்

1கருமங்கள் ஒன்று கருதும் கருமத்து
உரிமையும் கன்மமும் முன்னும் பிறவிக்கு
அருவினை ஆவது கண்டு அகன்றபின்
புரிவன கன்மக் கயத்துள் புகுமே.
உரை  
2மாயை மறைக்க மறைந்த மறைப் பொருள்
மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்
மாயை மறைய மறைய வல்லார் கட்குக்
காயமும் இல்லை கருத்து இல்லை தானே.
உரை  
3மோழை அடைந்து முழை திறந்து உள் புக்குக்
கோழை அடைகின்றது அண்ணல் குறிப்பினில்
ஆழ அடைத்து அங்கு அனலில் புறம் செய்து
தாழ அடைப்பது தன் வலி ஆமே.
உரை  
4ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
ஆசூசம் ஆம் இடம் ஆரும் அறிகிலார்
ஆசூசம் ஆம் இடம் ஆரும் அறிந்தபின்
ஆசூசம் ஆளிடம் ஆசூசம் ஆமே.
உரை  
5ஆசூசம் இல்லை அரு நியமத் தருக்கு
ஆசூசம் இல்லை அரனை அர்ச்சிப் பவர்க்கு
ஆசூசம் இல்லை ஆம் அங்கி வளர்ப் போர்க்கு
ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே.
உரை  
6வழிபட்டு நின்று வணங்கும் அவர்க்குச்
சுழிபட்டு நின்றது ஓர் தூய்மை தொடங்கும்
குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்
கழி பட்டவர்க்கு அன்றிக் காண ஒண்ணாதே.
உரை  
7தூய் மணி தூய் அனல் தூய ஒளிவிடும்
தூய் மணி தூய் அனல் தூர் அறிவார் இல்லை
தூய் மணி தூய் அனல் தூர் அறிவார் கட்குத்
தூய் மணி தூய் அனல் தூயவும் ஆமே.
உரை  
8தூயது வாளாக வைத்தது தூ நெறி
தூயது வாளாக நாதன் திரு நாமம்
தூயது வாளாக அட்டமா சித்தியும்
தூயது வாளாகத் துய் அடிச் சொல்லே.
உரை  
9பொருள் அதுவாய் நின்ற புண்ணியன் எந்தை
அருள் அது போற்றும் அடியவர் அன்றிச்
சுருள் அதுவாய் நின்ற துன்பச் சுழியின்
மருள் அதுவாச் சிந்தை மயங்குகின்றாரே.
உரை  
10வினை ஆம் அசத்து விளைவது உணரார்
வினை ஞானம் தன்னில் வீடலும் தேரார்
வினை விட வீடு என்னும் வேதமும் ஓதார்
வினையாளர் மிக்க விளைவு அறியாரே.
உரை  

24. முத்திநிந்தை

1பரகதி உண்டு என இல்லை என்போர்கள்
நரகதி செல்வது ஞாலம் அறியும்
இரகதி செய்திடுவார் கடை தோறும்
துரகதி உண்ணத் தொடங்குவர் தாமே.
உரை  
2புறப்பட்டுப் போகும் புகுதும் என் நெஞ்சில்
திறப்பட்ட சிந்தையைத் தெய்வம் என்று எண்ணி
அறப்பட்ட மற்றப் பதி என்று அழைத்தேன்
இறப் பற்றினேன் இங்கு இது என் என்கின்றானே.
உரை  
3திடர் இடை நில்லாத நீர் போல ஆங்கே
உடல் இடை நில்லா உறு பொருள் காட்டிக்
கடல் இடை நில்லாக் கலம் சேருமாப் போல்
அடல் எரி வண்ணனும் அங்கு நின்றானே.
உரை  
4தாமரை நூல் போல் தடுப்பார் பரத்தொடும்
போம் வழி வேண்டிப் புறமே உழிதர்வர்
காண் வழி காட்டக் கண் காணா கலதிகள்
தீ நெறி செல்வான் திரிகின்ற வாறே.
உரை  
5மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்
கூடுவர் நந்தி அவனைக் குறித்து உடன்
காடும் மலையும் கழனி கடந்தோறும்
ஊடும் உருவினை உன்ன கிலாரே.
உரை  
6ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள்
போவர் குடக்கும் குணக்கும் குறி வழி
நாவின் இன் மந்திரம் என்று நடு அங்கி
வேவது செய்து விளங்கிடுவீரே.
உரை  
7மயக்கு உற நோக்கினும் மா தவம் செய்யார்
தமக்கு உறப் பேசின தாரணை கொள்ளார்
சிணக்கு உறப் பேசின தீவினை யாளர்
தமக்கு உறவல் வினை தாங்கி நின்றாரே.
உரை  
8விட்ட இலக்கணை தான் போம் வியோ மத்துத்
தொட்டு விடாத துப சாந்தத்தே தொகும்
விட்டு விடாதது மேவும் சத்து ஆதியில்
சுட்டும் இலக்கண ஆதீதம் சொரூபமே.
உரை  

25. இலக்கணாத் திரயம்

1வில்லின் விசை நாணில் கோத்து இலக்கு எய்தபின்
கொல்லும் களிறு ஐந்தும் கோலொடு சாய்ந்தன
இல்லுள் இருந்து எறி கூரும் ஒருவற்குக்
கல் கலன் என்னக் கதிர் எதிர் ஆமே.
உரை  

26. தத்துவமசி வாக்கியம்

1சீவ துரியத்துத்தொம் பதம் சீவன் ஆர்
தாவு பர துரியத் தினில் தற்பதம்
மேவு சிவ துரியத் தசி மெய்ப் பதம்
ஓவி விடும் தத்துவ மசி உண்மையே.
உரை  
2ஆறு ஆறு அகன்ற அணுத் தொம் பதம் சுத்தம்
ஈறு ஆன தற்பதம் எய்துப சாந்தத்துப்
பேறு ஆகிய சீவன் நீங்கிப் பிரசாதத்து
வீறு ஆன தொந்தத் தசி தத்வ மசியே.
உரை  
3துவந்தத் தசியே தொந்தத் தசியும்
அவை மன்னா வந்து வயத் தேகம் ஆன
தவம் உறு தத்துவ மசி வேதாந்த
சிவமாம் அதும் சித்தாந்த வேதாந்தமே.
உரை  
4தொம் பதம் தற்பதம் சொல்லும் அசிபதம்
நம்பிய முத் துரியத்துமேல் நாடவே
உம் பதமும் பதம் ஆகும் உயிர்பரன்
செம் பொருள் ஆன சிவம் எனல் ஆமே.
உரை  
5வைத்த துரியம் அதில் சொரு பானந்தத்து
உய்த்த பிரணவம் ஆம் உப தேசத்தை
மெய்த்த விதயத்து விட்டிடும் மெய் உணர்
வைத்த படியே அடைந்து நின்றானே.
உரை  
6நனவாதி ஐந்தையும் நாத ஆதியில் வைத்துப்
பினமா மலத்தைப் பின்வைத்துப் பின் சுத்தத்
தனதாம் சிவகதி சத்து ஆதி சாந்தி
மனவாசகம் கெட்ட மன்னனை நாடே.
உரை  
7பூரணி யாது புறம்பு ஒன்று இலாமையின்
பேரணி யாது அது பேச்சு ஒன்று இலாமையில்
ஓரணை யாது அது ஒன்றும் இலாமையில்
காரணம் இன்றியே காட்டும் தகைமைத்தே.
உரை  
8நீ அது ஆனாய் என நின்ற பேருரை
ஆயது நான் ஆனேன் என்னச் சமைந்து அறச்
சேய சிவம் ஆக்கும் சீர் நந்தி பேர் அருள்
ஆய அதுவாய் அனந்து ஆன் நந்தி ஆகுமே.
உரை  
9உயிர் பரம் ஆக உயர் பர சீவன்
அரிய சிவம் ஆக அச்சிவ வேதத்
திரியிலும் சீர் ஆம் பரா பரன் என்ன
உரிய அற்ற ஓம் மயம் ஆமே.
உரை  
10வாய் நாசியே புரு மத்தகம் உச்சியில்
ஆய் நாசி உச்சி முதல் அவையாய் நிற்கும்
தாய் நாடி ஆதிவாக்கு ஆதி சகலாதி
சேய் நாடு ஒளி எனச் சிவகதி ஐந்துமே.
உரை  
11அறிவு அறியாமை இருண்டும் அகற்றிச்
செறிவு அறிவாய் எங்கும் நின்ற சிவனைப்
பிறிவு அறியாது பிரான் என்று பேணும்
குறி அறியாதவர் கொள் அறியாரே.
உரை  
12அறிவார் அறிவன அப்பும் அனலும்
அறிவார் அறிவன அப்பும் கலப்பும்
அறிவான் இருந்து அங்கு அறிவிக்கின் அல்லால்
அறிவான் அறிந்த அறிவு அறியோமே.
உரை  
13அடி தொழ முன் நின்று அமரர்கள் அத்தன்
முடி தொழ ஈசனும் முன் நின்று அருளிப்
படி தொழ நீ பண்டு பாவித்தது எல்லாம்
கடி தொழக் காண் என்னும் கண் நுதலானே.
உரை  
14நின்மல மேனி நிமலன் பிறப்பு இலி
என்னுளம் வந்து இவன் என் அடியான் என்று
பொன் வளர் மேனி புகழ் கின்ற வானவன்
நின்மலம் ஆகென்று நீக்க வல்லானே.
உரை  
15துறந்து புக்கு ஒள் ஒளி சோதியைக் கண்டு
பறந்தது என் உள்ளம் பணிந்து கிடந்தே
மறந்து அறியா என்னை வானவர் கோனும்
இறந்து பிறவாமல் ஈங்கு வைத்தானே.
உரை  
16மெய்வாய் கண் மூக்கு செவி என்னும் மெய்த் தோற்றத்து
அவ்வாய அந்தக் கரணம் அகிலமும்
எவ்வாய் உயிரும் இறை ஆட்ட ஆடலால்
கை வாய் இலா நிறை எங்கும் மெய் கண்டதே.
உரை  

27. விசுவக் கிராசம்

1அழிகின்ற சாயா புருடனைப் போலக்
கழிகின்ற நீரில் குமிழியைக் காணில்
எழுகின்ற தீயில் கற்பூரத்தை ஒக்கப்
பொழிகின்ற இவ்வுடல் போம் அப்பரத்தே.
உரை  
2உடலும் உயிரும் ஒழிவற ஒன்றில்
படரும் சிவ சத்தி தாமே பரம் ஆம்
உடலை விட்டு இந்த உயிர் எங்கும் ஆகிக்
கடையும் தலையும் கரக்கும் சிவத்தே.
உரை  
3செவி மெய் வாய் கண் மூக்குச் சேர் இந்திரியம்
அவி இன்றி யமனம் ஆதிகள் ஐந்தும்
குவி ஒன்று இலாமல் விரிந்து குவிந்து
தவிர் ஒன்று இலாத சரா சரம் தானே.
உரை  
4பரன் எங்கும் ஆரப் பரந்து உற்று நிற்கும்
திரன் எங்கும் ஆகிச் செறிவு எங்கும் எய்தும்
உரன் எங்கும் ஆய் உலகு உண்டு உமிழ்க்கும்
வரம் இங்ஙன் கண்டு யான் வாழ்ந்து உற்ற வாறே.
உரை  
5அளந்து துரியத்து அறிவினை வாங்கி
உளம் கொள் பரம்சகம் உண்டது ஒழித்து
கிளர்ந்த பரம் சிவம் சேரக் கிடைத்தால்
விளங்கிய வெட்ட வெளியனும் ஆமே.
உரை  
6இரும்பு இடை நீர் என என்னை உள்வாங்கிப்
பரம்பரம் ஆன பரம் அது விட்டே
உரம் பெற முப்பாழ் ஒளியை விழுங்கி
இருந்த என் நந்தி இதயத்து உளானே.
உரை  
7கரி உண் விளவின் கனிபோல் உயிரும்
உரிய பரமும் முன் ஓதும் சிவமும்
அரிய துரிய மேல் அகிலமும் எல்லாம்
திரிய விழுங்கும் சிவ பெருமானே.
உரை  
8அந்தமும் ஆதியும் ஆகும் பரா பரன்
தந்தம் பரம் பரன் தன்னில் பரம் உடன்
நம்தமை உண்டு மெய்ஞ்ஞான நேயந்தத்தே
நந்தி இருந்தனன் நாம் அறியோமே.
உரை  

28. வாய்மை

1அற்றது உரைக்கில் அருள் உபதேசங்கள்
குற்றம் அறுத்த பொன்போலும் கனல் இடை
அற்று அற வைத்து இறை மாற்று அற ஆற்றிடில்
செற்றம் அறுத்த செழும் சுடர் ஆகுமே.
உரை  
2எல்லாம் அறியும் அறிவு தனை விட்டு
எல்லாம் அறிந்தும் இலாபம் அங்கு இல்லை
எல்லாம் அறிந்த அறிவினை நான் என்னில்
எல்லாம் அறிந்த இறை எனல் ஆமே.
உரை  
3தானே உலகில் தலைவன் எனத் தகும்
தானே உலகுக்கு ஓர் தத்துவம் ஆய் நிற்கும்
வானே மழை பொழி மா மறை கூர்ந்திடும்
ஊனே உருகிய உள்ளம் ஒன்று ஆமே.
உரை  
4அருள் பெற்ற காரணம் என் கொல் அமரில்
இருள் அற்ற சிந்தை இறைவனை நாடி
மருள் உற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருள் உற்ற சேவடி போற்றுவர் தாமே.
உரை  
5மெய் கலந்தாரொடு மெய் கலந்தான் தன்னைப்
பொய் கலந்தார் முன் புகுதா ஒருவனை
உய் கலந்து ஊழித் தலைவனும் ஆய் நிற்கும்
மெய் கலந்து இன்பம் விளைந்திடும் மெய்யர்க்கே.
உரை  
6மெய் கலந்தாரொடு மெய் கலந்தான் மிகப்
பொய் கலந்தார் உள் புகுதா புனிதனைக்
கை கலந்து ஆவி எழும் பொழுது அண்ணலைக்
கை கலந்தார்க்கே கருத்து உறல் ஆமே.
உரை  
7எய்திய காலத்து இரு பொழுதும் சிவன்
மெய் செயின் மேலை விதி அதுவாய் நிற்கும்
பொய்யும் புலனும் புகல் ஒன்று நீத்திடில்
ஐயனும் அவ்வழி ஆகி நின்றானே.
உரை  
8எய்துவது எய்தாது ஒரு இது அருள்
உய்ய அருள் செய்தான் உத்தமன் சீர் நந்தி
பொய் செய்புலன் நெறி ஒன்பதும் ஆட் கொளின்
மெய் என் புரவியை மேற் கொள்ளல் ஆமே.
உரை  
9கை கலந்தானைக் கருத்தினுள் நந்தியை
மெய் கலந்தான் தன்னை வேத முதல்வனை
பொய் கலந்தார் முன் புகுதாப் புனிதனைப்
பொய் ஒழிந்தார்க்கே புகல் இடம் ஆமே.
உரை  
10மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக்
கைத்தாள் கொண்டாரும் திறந்து அறிவார் இல்லை
பொய்த்தாள் இடும்பையைப் பொய் அற நீ விட்டு அங்கு
அத்தாள் திறக்கில் அரும் பேறு அது ஆமே.
உரை  
11உய்யும் வகையால் உணர்வினால் ஏத்துமின்
மெய்யன் அரன் நெறி மேல் உண்டு திண் எனப்
பொய் ஒன்றும் இன்றிப் புறம் பொலிவார் நடு
ஐயனும் அங்கே அமர்ந்து நின்றானே.
உரை  
12வம்பு பழுத்த மலர்ப் பழம் ஒன்று உண்டு
தம்பால் பறவை புகுந்து உணத்தான் ஒட்டாது
அம்பு கொண்டு எய்திட்ட கலத் துரத்திடில்
செம் பொன் சிவகதி சென்று எய்தலாமே.
உரை  
13மயக்கிய ஐம் புலப் பாசம் அறுத்துத்
துயக்கு அறுத்தானைத் தொடர்மின் தொடர்ந்தால்
தியக்கம் செய்யாதே சிவன் எம் பெருமான்
உயப்போ என மனம் ஒன்று வித்தானே.
உரை  
14மனம் அது தானே நினைய வல்லார்க்குக்
இனம் எனக் கூறும் இரும் காயம் ஏவல்
தனிவு இனி நாதன்பால் தக்கன செய்யில்
புனிதன் செயல் ஆகும் போது அப் புவிக்கே.
உரை  

29. ஞானிசெயல்

1முன்னை வினைவரின் முன் உண்டே நீங்குவர்
பின்னை வினைக் கணார் பேர்ந்து அறப் பார்ப்பார்கள்
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
நன்மை இல் ஐம்புலன் நாடலினாலே.
உரை  
2தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவன் அருளாலே.
உரை  
3மன வாக்குக் காயத்தால் வல்வினை மூளும்
மன வாக்கு நேர் நிற்கில் வல்வினை மன்னா
மன வாக்குக்கு எட்ட அவர் வாதனை தன்னால்
தனை மாற்றி ஆற்றத் தகு ஞானி தானே.
உரை  
4நிற்றல் இருத்தல் கிடத்தல் நடை ஓடல்
பெற்ற அக்காலும் திருவருள் பேராமல்
சற்றியல் ஞானந்தம் தானந்தம் தங்கவே
உற்ற பிறப்பு அற்று ஒளிர் ஞான நிட்டையே.
உரை  

30. அவா அறுத்தல்

1வாசியும் மூசியும் பேசி வகையினால்
பேசி இருந்து பிதற்றிப் பயன் இல்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம் எளிதாமே.
உரை  
2மாடத்து உளான் அலன் மண்டபத்தான் அலன்
கூடத்து உளான் அலன் கோயில் உள்ளான் அலன்
வேடத்து உளான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில்
மூடத்து உளே நின்று முத்தி தந்தானே.
உரை  
3ஆசை அறுமின் கள் ஆசை அறுமின் கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப் படப் பட ஆய் வரும் துன்பங்கள்
ஆசை விட விட ஆனந்தம் ஆமே.
உரை  
4அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே
படுவழி செய்கின்ற பற்று அற வீசி
விடுவது வேட்கையை மெய்ந் நின்ற ஞானம்
தொடுவது தம்மைத் தொடர்தலும் ஆமே.
உரை  
5உவாக் கடல் ஒக்கின்ற ஊழியும் போன
துவாக் கடல் உட் பட்டுத் துஞ்சினர் வானோர்
அவாக் கடல் உட்பட்டு அழுந்தினர் மண்ணோர்
தவாக் கடல் ஈசன் தரித்து நின்றானே.
உரை  
6நின்ற வினையும் பிணியும் நெடும் செயல்
துன் தொழில் அற்றுச் சுத்தம் அது ஆகலும்
பின்றை அம் கருமமும் பேர்த்து அருள் நேர் பெற்றுத்
துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே.
உரை  
7உண்மை உணர்ந்து உற ஒண் சித்தி முத்தி ஆம்
பெண் மயல் கெட்டு அறப் பேறு அட்ட சித்தி ஆம்
திண்மையின் ஞானி சிவ காயம் கை விட்டால்
வண்மை அருள்தான் அடைந்து அன்பில் ஆறுமே.
உரை  
8அவன் இவன் ஈசன் என்று அன்பு உற நாடிச்
சிவன் இவன் ஈசன் என்று உண்மையை ஓரார்
பவன் இவன் பல் வகையாம் இப் பிறவி
புவன் இவன் போவது பொய் கண்ட போதே.
உரை  
9கொதிக்கின்ற வாறும் குளிர்கின்ற வாறும்
பதிக்கின்ற வாறு இந்தப் பார் அகம் முற்றும்
விதிக்கின்ற ஐவரை வேண்டாது உலகம்
நொதிக்கின்ற காயத்து நூல் ஒன்றும் ஆமே.
உரை  

31. பத்தி உடைமை

1முத்தி செய் ஞானமும் கேள்வியும் ஆய் நிற்கும்
அத்தனை மாயா அமரர் பிரான் தன்னைச்
சுத்தனைத் தூய் நெறியாய் நின்ற சோதியைப்
பத்தர் பரசும் பசுபதி தான் என்றே.
உரை  
2அடியார் அடியார் அடியார்க்கு அடிமைக்கு
அடியனாய் நல்கிட்டு அடிமையும் பூண்டேன்
அடியார் அருளால் அவன் அடி கூட
அடியான் இவன் என்று அடிமை கொண்டானே.
உரை  
3நீரில் குளிரும் நெருப்பினில் சுட்டிடும்
ஆரிக் கடன் நந்தியாம் அறிபவர்
பாரில் பயனாரைப் பார்க்கிலும் நேரியர்
ஊரில் உமாபதி ஆகி நின்றானே.
உரை  
4ஒத்து உலகு ஏழும் அறியா ஒருவன் என்று
அத்தன் இருந்திடம் ஆர் அறிவார் சொல்லப்
பத்தர் தம் பத்தியில் பால் படில் அல்லது
முத்தினை யார் சொல்ல முந்து கின்றாரே.
உரை  
5ஆன் கன்று தேடி அழைக்கும் அது போல்
நான் கன்றாய் நாடி அழைத்தேன் என் நாதனை
வான் கன்றுக்கு அப்பால் ஆய் நின்ற மறைப்பொருள்
ஊன் கன்றாய் நாடி வந்து உள் புகுந்தானே.
உரை  
6பெத்தத்தும் தன் பணி இல்லை பிறத்தலான்
முத்தத்தும் தன் பணி இல்லை முறைமை யால்
அத்தற்கு இரண்டும் அருளால் அளித்தலால்
பத்தி பட்டோர்க்குப் பணி ஒன்றும் இல்லையே.
உரை  
7பறவையில் கற்பமும் பாம்பு மெய் ஆகக்
குறவம் சிலம்பக் குளிர் வரை ஏறி
நறவு ஆர் மலர் கொண்டு நந்தியை அல்லால்
இறைவன் என்று என் மனம் ஏத்தகிலாவே.
உரை  
8உறு துணை நந்தியை உம்பர் பிரானைப்
பெறு துணை செய்து பிறப்பு அறுத்து உய்மின்
செறி துணை செய்து சிவன் அடி சிந்தித்து
உறு துணை ஆய் அங்கி ஆகி நின்றானே.
உரை  
9வானவர் தம்மை வலிசெய்து இருக்கின்ற
தானவர் முப்புரம் செற்ற தலைவனைக்
கானவன் என்றும் கருவரையான் என்றும்
ஊனதன் உள் நினைந்து ஒன்று பட்டாரே.
உரை  
10நிலை பெறு கேடு என்று முன்னே படைத்த
தலைவனை நாடித் தயங்கும் என் உள்ளம்
மலையுளும் வான் அகத்து உள்ளும் புறத்தும்
உலையுளும் உள்ளத்து மூழ்கி நின்றேனே.
உரை  

32. முத்தி உடைமை

1முத்தியில் அத்தன் முழுத்த அருள் பெற்றுத்
தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன் பணி
மெய்த் தவம் செய்கை வினைவிட்ட மெய் உண்மைப்
பத்தியில் உற்று ஓர் பரானந்த போதரே.
உரை  
2வளம் கனி தேடிய வன் தாள் பறவை
உளம் கனி தேடி அழி தரும் போது
களம் கனி அங்கியில் கை விளக்கு ஏற்றி
நலம் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே.
உரை  

33. சோதனை

1பெம்மான் பெரு நந்தி பேச்சு அற்ற பேர் இன்பத்து
அம்மான் அடி தந்து அருள் கடல் ஆடினோம்
எம்மாயமும் விடுத்து எம்மைக் கரந்திட்டுச்
சும்மா இருந்து இடம் சோதனை ஆகுமே.
உரை  
2அறிவு உடையான் அரு மாமறை உள்ளே
செறிவு உடையான் மிகு தேவர்க்கும் தேவன்
பொறி உடையான் புலன் ஐந்தும் கடந்த
குறி உடையானொடும் கூடுவன் நானே.
உரை  
3குறியாக் குறியினில் கூடாத கூட்டத்து
அறியா அறிவில் அவிழ்ந்து ஏக சித்தம் ஆய்
நெறி ஆம் பரா நந்தி நீடு அருள் ஒன்றும்
செறியாச் செறிவே சிவம் எனலாமே.
உரை  
4காலினில் ஊறும் கரும்பினில் கட்டியும்
பாலின் உள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூவின் உள் நாற்றமும் போல் உளன் எம் இறை
காவலன் எங்கும் கலந்து நின்றானே.
உரை  
5விருப்பொடு கூடி விகிர்தனை நாடிப்
பொருப்பு அகம் சேர் தரு பொன் கொடி போல
இருப்பர் மனத்து இடை எங்கள் பிரானார்
நெருப்பு உரு ஆகி நிகழ்ந்து நின்றாரே.
உரை  
6நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து
வந்து என் அகம் படி கோயில் கொண்டான் கொள்ள
எந்தை வந்தான் என்று எழுந்தேன் எழுதலும்
சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே.
உரை  
7தன்மை வல்லோனைத் தத்துவத்துள் நலத்தினை
நன்மை வல்லோனை நடுவுறை நந்தியைப்
புன்மை பொய்யாதே புனிதனை நாடுமின்
பன்மையில் உம்மைப் பரிசு செய்வானே.
உரை  
8தொடர்ந்து நின்றான் என்னைச் சோதிக்கும் போது
தொடர்ந்து நின்றான் அல்ல நாதனும் அங்கே
படர்ந்து நின்று ஆதிப் பராபரன் எந்தை
கடந்து நின்று அவ்வழி காட்டு கின்றானே.
உரை  
9அவ்வழி காட்டும் அமரர்க்கு அரும்பொருள்
இவ்வழி தந்தை தாய் கேள் யான் ஒக்கும்
செவ்வழி சேர் சிவலோகத்து இருந்திடும்
இவ்வழி நந்தி இயல்பு அது தானே.
உரை  
10எறிவது ஞானத்து உறைவாள் உருவி
அறிவு அதனோடே அவ் ஆண் தகையானைச்
செறிவது தேவர்க்குத் தேவர் பிரானைப்
பறிவது பல் கணப் பற்று விட்டாரே.
உரை  
11ஆதிப்பிரான் தந்த வாள் அங் கைக் கொண்டபின்
வேதித்து என்னை விலக்க வல்லார் இல்லை
சோதிப்பன் அங்கே சுவடு படா வண்ணம்
ஆதிக் கண் தெய்வம் அவன் இவன் ஆமே.
உரை  
12அந்தக் கருவை அருவை வினை செய்தல்
பந்தம் பணி அச்சம் பல் பிறப்பும் வாட்டிச்
சிந்தை திருத்தலும் சேர்ந்தார் அச்சோதனை
சந்திக்கத் தற்பரம் ஆகும் சதுரர்க்கே.
உரை  

ஒன்பதாம் தந்திரம்

1. குருமட தரிசனம்

1பலியும் அவியும் பரந்து புகையும்
ஒலியும் எம் ஈசன் தனக்கு என்றே உள்கிக்
குவியும் குருமடம் கண்டவர் தாம் போய்த்
தளிரும் மலர் அடி சார்ந்து நின்றாரே.
உரை  
2இவன் இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை
அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின்
அவனுக்கு இவன் இல்லம் என்று என்று அறிந்தும்
அவனைப் புறம்பு என்று அரற்று கின்றாரே.
உரை  
3நாடும் பெரும் துறை நான் கண்டு கொண்டபின்
கூடும் சிவனது கொய் மலர்ச் சேவடி
தேட அரியன் சிறப்பு இலி எம் இறை
ஓடும் உலகு உயிராகி நின்றானே.
உரை  
4இயம்புவன் ஆசனத் தோடு மலையும்
இயம்புவன் சித்தக் குகையும் இடமும்
இயம்புவன் ஆதாரத் தோடு வனமும்
இயம்புவன் ஈரா இரு நிலத்தோர்க்கே.
உரை  
5முகம் பீடம் ஆம் மடம் உன்னிய தேயம்
அகம் பர வர்க்கமே ஆசு இல் செய் காட்சி
அகம் பரம் ஆதனம் எண் எண் கிரியை
சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே.
உரை  
6ஆக முகம் ஆம் பீடம் ஆதாரம் ஆகும்
சக முகம் ஆம் சத்தி ஆதனம் ஆகும்
செகமுகம் ஆம் தெய்வமே சிவம் ஆகும்
அக முகம் ஆய்ந்த அறிவு உடையோர்க்கே.
உரை  
7மாயை இரண்டு மறைக்க மறை உறும்
காயம் ஓர் ஐந்தும் கழியத் தான் ஆகியே
தூய பரம் சுடர் தோன்றச் சொரூபத்து உள்
ஆய் பவர் ஞான ஆதி மோனத்தர் ஆமே.
உரை  

2. ஞானகுரு தரிசனம்

1ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில்
கூறக் குருபரன் கும்பிடு தந்திடும்
வேறே சிவ பதம் மேலாய் அளித்திடும்
பேறு ஆக ஆனந்தம் பேணும் பெருகவே.
உரை  
2துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர் சோதி
அரிய பரசிவம் யாவையும் ஆகி
விரிவு குவிவற விட்ட நிலத்தே
பெரிய குருபதம் பேச ஒண்ணாதே.
உரை  
3ஆயன நந்தி அடிக்கு என் தலை பெற்றேன்
வாயன நந்தியை வாழ்த்த என் வாய் பெற்றேன்
காயன நந்தியைக் காண என் கண் பெற்றேன்
சேயன நந்திக்கு என் சிந்தை பெற்றேனே.
உரை  
4கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடம் தீர்ந்து பயம் கெடு மா போல்
குருவின் உருவம் குறித்த அப்போதே
திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே.
உரை  
5தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும்
ஆன்ற அறிவும் அறிநனவு ஆதிகள்
மூன்று அவை நீங்கும் துரியங்கள் மூன்று அற
ஊன்றிய நந்தி உயர் மோனத் தானே.
உரை  
6சந்திர பூமிக்கு உடன் புருவத்து இடைக்
கந்த மலரில் இரண்டு இதழ்க் கன்னியும்
பந்தம் இலாத பளிங்கின் உருவினள்
பந்தம் அறுத்த பரம் குரு பற்றே.
உரை  
7மனம் புகுந்தான் உலகு ஏழும் மகிழ
நிலம் புகுந்தான் நெடுவான் நிலம் தாங்கிச்
சினம் புகுந்தான் திசை எட்டும் நடுங்க
வனம் புகுந்தான் ஊர் வடக்கு என்பதாமே.
உரை  
8தான் ஆன வண்ணமும் கோசமும் சார் தரும்
தான் ஆம் பறவை வனம் எனத் தக்கன
தான் ஆன சோடச மார்க்கம் தான் நின்றிடில்
தான் ஆம் தசாங்கமும் வேறு உள்ள தானே.
உரை  
9மருவிப் பிரிவு அறியா எங்கள் மா நந்தி
உருவ நினைக்க நின்று உள்ளே உருக்கும்
கருவில் கரந்து உள்ளம் காண வல்லார்க்கு இங்கு
அருவினை கண் சோரும் அழிவார் அகத்தே.
உரை  
10தலைப் படலாம் எங்கள் தத்துவன் தன்னைப்
பலப் படு பாசம் அறுத்து அறுத்து இட்டு
நிலைப் பெற நாடி நினைப்பு அற உள்கில்
தலைப் படல் ஆகும் தருமமும் தானே.
உரை  
11நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்
சுனைக்குள் விளை மலர் சோதியினானைத்
தினைப் பிளந்து அன்ன சிறுமையர் ஏனும்
கனத்த மனத்து அடைந்தால் உயர்ந்தாரே.
உரை  
12தலைப்படும் காலத்துத் தத்துவன் தன்னை
விலக்கு உறின் மேலை விதி என்றும் கொள்க
அனைத்து உலகாய் நின்ற ஆதிப் பிரானை
நினைப்பு உறுவார் பத்தி நேடிக் கொள்வாரே.
உரை  
13நகழ்வு ஒழிந்தார் அவர் நாதனை உள்கி
நிகழ்வு ஒழிந்தார் எம் பிரானொடும் கூடித்
திகழ்வு ஒழிந்தார் தங்கள் சிந்தையின் உள்ளே
புகழ் வழி காட்டிப் புகுந்து நின்றானே.
உரை  
14வந்த மரகத மாணிக்க ரேகை போல்
சந்திடும் மா மொழிச் சற்குரு சன்மார்க்கம்
இந்த ரேகை இலாடத்தின் மூலத்தே
சுந்தரச் சோதியுள் சோதியும் ஆமே.
உரை  
15உண்ணும் வாயும் உடலும் உயிரும் ஆய்க்
கண்ணுமா யோகக் கடவுள் இருப்பது
மண்ணுநீர் அனல் காலொடு வானும் ஆய்
விண்ணும் இன்றி வெளி ஆனோர் மேனியே.
உரை  
16பரசு பதி என்று பார் முழுது எல்லாம்
பரசிவன் ஆணை நடக்கும் பாதியால்
பெரிய பதி செய்து பின் ஆம் அடியார்க்கு
உரிய பதியும் பார் ஆக்கி நின்றானே.
உரை  
17அம்பர நாதன் அகல் இட நீள் பொழில்
தம்பரம் அல்லது தாம் அறியோம் என்பர்
உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்
எம்பெருமான் அருள் பெற்று இருந்தாரே.
உரை  
18கோ வணங்கும் படி கோவணம் ஆகிப் பின்
நா வணங்கும் படி நந்தி அருள் செய்தான்
தே வணங்கோம் இனிச் சித்தம் தெளிந்தனம்
போய் வணங்கும் பொருளாய் இருந்தோமே.
உரை  

3. பிரணவ சமாதி

1தூலப் பிரணவம் சொரூப ஆனந்தப் பேர் உரை
பாலித்த சூக்கும மேலைச் சொரூபப் பெண்
ஆலித்த முத்திரை ஆம் அதில் காரணம்
மேலைப் பிரணவம் வேத அந்த வீதியே.
உரை  
2ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே ஒருமொழி
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே உருவரு
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே பல பேதம்
ஓம் எனும் ஓங்காரம் ஒண் முத்தி சித்தியே.
உரை  
3ஓங்காரத்து உள்ளே உதித்த ஐம் பூதங்கள்
ஓங்காரத்து உள்ளே உதித்த சரா சரம்
ஓங்காரா தீதத்து உயிர் மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பர சிவ ரூபமே.
உரை  
4வருக்கம் சுகம் ஆம் பிரமமும் ஆகும்
அருக்கம் சரா சரம் ஆகும் உலகில்
தருக்கிய ஆதாரம் எல்லாம் தன் மேனி
சுருக்கம் இன் ஞானம் தொகுத்து உணர்ந்தோரே.
உரை  
5மலையு மனோ பவம் அருள்வன ஆவன
நிலையில் தரிசனம் தீப நெறி ஆம்
தலமும் குலமும் தவம் சித்தம் ஆகும்
நலமும் சன் மார்க்கத்து உபதேசம் தானே.
உரை  
6சோடச மார்க்கமும் சொல்லும் சன் மார்க்கி கட்கு
ஆடிய ஈற் ஆறின் அந்தமும் ஈர் ஏழில்
கூடிய அந்தமும் கோதண்டமும் கடந்து
ஏறிய ஞான ஞேயாந் தத்து இருக்கவே.
உரை  

4. ஒளி

1ஒளியை அறியில் உருவும் ஒளியும்
ஒளியும் உருவம் அறியில் உருவாம்
ஒளியின் உருவம் அறியில் ஒளியே
ஒளியும் உருக உடன் இருந்தானே.
உரை  
2புகல் எளிது ஆகும் புவனங்கள் எட்டும்
அகல் ஒளிதாய் இருள் ஆசு அற வீசும்
பகல் ஒளி செய்தது அத் தாமரை யிலே
இகல் ஒளி செய்து எம்பிரான் இருந்தானே.
உரை  
3விளங்கு ஒளி அங்கி விரிகதிர் சோமன்
துளங்கு ஒளி பெற்றன சோதி அருள
வளங்கு ஒளி பெற்றதே பேர் ஒளி வேறு
களங்கு ஒளி செய்து கலந்து நின்றானே.
உரை  
4இளங்கு ஒளி ஈசன் பிறப்பு ஒன்றும் இல்லி
துளங்கு ஒளி ஞாயிறும் திங்களும் கண்கள்
வளங்கு ஒளி அங்கியும் அற்றைக் கண் நெற்றி
விளங்கு ஒளி செய்கின்ற மெய் காயம் ஆமே.
உரை  
5மேல் ஒளி கீழ் அதன் மேவிய மாருதம்
பால் ஒளி அங்கி பரந்து ஒளி ஆகாசம்
நீர் ஒளி செய்து நெடுவிசும்பு ஒன்றிலும்
மேல் ஒளி ஐந்தும் ஒருங்கு ஒளி ஆமே.
உரை  
6மின்னிய தூ ஒளி மே தக்க செவ் ஒளி
பன்னிய ஞானம் பரந்த பரத்து ஒளி
துன்னிய வாறு ஒளி தூய் மொழி நாள் தொறும்
உன்னிய வாறு ஒளி ஒத்தது தானே.
உரை  
7விளங்கு ஒளி மின் ஒளி ஆகிக் கரந்து
துளங்கு ஒளி ஈசனைச் சொல்லும் எப்போதும்
உளங்கு ஒளி ஊன் இடை நின்று உயிர்க்கின்ற
வளங்கு ஒளி எங்கும் மருவி நின்றானே.
உரை  
8விளங்கு ஒளி அவ் ஒளி அவ் இருள் மன்னும்
துளங்கு ஒளியான் தொழுவார்க்கும் ஒளியான்
அளங்கு ஒளி ஆர் அமுதாக நம் சாரும்
களங்கு ஒளி ஈசன் கருத்து அது தானே.
உரை  
9இலங்கியது எவ் ஒளி அவ் ஒளி ஈசன்
துலங்கு ஒளி போல்வது தூங்கு அருள் சத்தி
விளங்கு ஒளி மூன்றே விரிசுடர் தோன்றி
உளங்கு ஒளி உள்ளே ஒருங்கு கின்றானே.
உரை  
10உளங்கு ஒளி ஆவது என் உள்நின்ற சீவன்
வளங்கு ஒளியாய் நின்ற மா மணிச்சோதி
விளங்கு ஒளியாய் மின்னி விண்ணில் ஒடுங்கி
வளங்கு ஒளி ஆயத்து உளாகி நின்றானே.
உரை  
11விளங்கு ஒளியாய் நின்ற விகிர்தன் இருந்த
துளங்கு ஒளி பாசத்துள் தூங்கு இருள் சேராக்
களங்கு இருள் நட்டமே கண் நுதல் ஆட
விளங்கு ஒளி உன் மனத்து ஒன்றி நின்றானே.
உரை  
12போது கருங் குழல் போனவர் தூது இடை
ஆதி பரத்தை அமரர் பிரானொடும்
சோதியும் அண்டத்து அப்பால் உற்ற தூ ஒளி
நீதியின் அல் இருள் நீக்கிய வாறே.
உரை  
13உண்டு இல்லை என்னும் உலகத்து இயல்வது
பண்டு இல்லை என்னும் பரம் கதி உண்டு கொல்
கண்டு இல்லை மானுடர் கண்ட கருத்து உறில்
விண்டு இல்லை உள்ளே விளக்கு ஒளி ஆமே.
உரை  
14சுடர் உற ஓங்கிய ஒள் ஒளி ஆங்கே
படர் உறு காட்சிப் பகலவன் ஈசன்
அடர் உறு மாயையின் ஆர் இருள் வீசில்
உடல் உறு ஞானத் துறவியன் ஆமே.
உரை  
15ஒளி பவளத் திருமேனி வெண்ணீற்றன்
அளி பவளச் செம்பொன் ஆதிப் பிரானும்
களி பவளத்தினன் கார் இருள் நீங்கி
ஒளி பவளத்து என்னோடு ஈசன் நின்றானே.
உரை  
16ஈசன் நின்றான் இமையோர்கள் நின்றார் நின்ற
தேசம் ஒன்று இன்றித் தகைத்து இழைக்கின்றார்
பாசம் ஒன்று ஆகப் பழவினைப் பற்று அற
வாசம் ஒன்று ஆம் மலர் போன்றது தானே.
உரை  
17தானே இருக்கும் அவற்றில் தலைவனும்
தானே இருக்கும் அவன் என நண்ணிடும்
வானாய் இருக்கும் இம்மா இரு ஞாலத்துப்
பானாய் இருக்கப் பரவலும் ஆமே.
உரை  

5. தூல பஞ்சாக்கரம்

1ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்த பின்
ஐம்பது எழுத்தே அஞ்சு எழுத்து ஆமே.
உரை  
2அகார முதல் ஆக ஐம்பத்து ஒன்று ஆகி
உகார முதல் ஆக ஓங்கி உதித்து
மகார இறுதியாய் மாய்ந்து மாய்ந்து ஏறி
நகார முதல் ஆகும் நந்தி தன் நாமமே.
உரை  
3அகர ஆதி ஈர் எண் கலந்த பரையும்
உகர ஆதி தன் சத்தி உள் ஒளி ஈசன்
சிகர ஆதி தான் சிவ வேதமே கோண
நகர ஆதி தான் மூல மந்திரம் நண்ணுமே.
உரை  
4வாயொடு கண்டம் இதயம் மருவு உந்தி
ஆய இலிங்கம் அவற்றின் மேலே அவ்வாய்த்
தூயது ஓர் துண்டம் இருமத்து அகம் செல்லல்
ஆயது ஈறாம் ஐந்தோடு ஆம் எழுத்து அஞ்சுமே.
உரை  
5கிரணங்கள் ஏழும் கிளர்ந்து எரி பொங்கிக்
கரணங்கள் விட்டு உயிர் தான் எழும் போது
மரணம் கை வைத்து உயிர் மாற்றிடும் போதும்
அரணம் கை கூட்டுவது அஞ்சு எழுத்து ஆமே.
உரை  
6ஞாயிறு திங்கள் நவின்று எழு காலத்தில்
ஆய் உறு மந்திரம் ஆரும் அறிகிலர்
சேய் உறு கண்ணி திரு எழுத்து அஞ்சையும்
வாய் உற ஓதி வழுத்தலும் ஆமே.
உரை  
7குருவழி ஆய குணங்களின் நின்று
கருவழி ஆய கணக்கை அறுக்க
வரும் வழி மாள மறுக்க வல்லார் கட்கு
அருள்வழி காட்டுவது அஞ்சு எழுத்து ஆமே.
உரை  
8வெறிக்க வினைத் துயர் வந்திடும் போது
செறிக்கின்ற நந்தி திரு எழுத்து ஓதும்
குறிப்பது உன்னில் குரை கழல் கூட்டும்
குறிப்பு அறிவான் தவம் கோன் உரு ஆமே.
உரை  
9நெஞ்சு நினைந்து தம் வாயால் பிரான் என்று
துஞ்சும் பொழுது உன் துணைத் தாள் சரண் என்று
மஞ்சு தவழும் வடவரை மீது உறை
அஞ்சில் இறைவன் அருள் பெறல் ஆமே.
உரை  
10பிரான் வைத்த ஐந்தின் பெருமை உணராது
இரா மாற்றம் செய்வார் கொல் ஏழை மனிதர்
பரா முற்றும் கீழொடு பல்வகை யாலும்
அரா முற்றும் சூழ்ந்த அகல் இடம் தானே.
உரை  

6. சூக்கும பஞ்சாக்கரம்

1எளிய வாது செய்வார் எங்கள் ஈசனை
ஒளியை உன்னி உருகு மனத்தர் ஆய்த்
தெளிய ஓதிச் சிவாய நம என்னும்
குளிகை இட்டுப் பொன் ஆக்குவன் கூட்டையே.
உரை  
2சிவன் சத்தி சீவன் செறு மல மாயை
அவம் சேர்த்த பாச மலம் ஐந்து அகலச்
சிவன் சத்தி தன்னுடன் சீவனார் சேர
அவம் சேர்த்த பாசம் அணுக கிலாவே.
உரை  
3சிவன் அருள் ஆய சிவன் திரு நாமம்
சிவன் அருளான் மாத் திரோத மலமாயை
சிவன் முதல் ஆகச் சிறந்து நிரோதம்
பவம் அது அகன்று பரசிவன் ஆமே.
உரை  
4ஓதிய நம் மலம் எல்லாம் ஒழித்திட்டு அவ்
வாதி தனை விட்டு இறை அருள் சத்தியால்
தீது இல் சிவஞான யோகமே சித்திக்கும்
ஓதும் சிவாய மலம் அற்ற உண்மையே.
உரை  
5தெள்ளமுது ஊறச் சிவாய நம என்று
உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும்
வெள்ளமுது ஊறல் விரும்பி உண்ணாதவர்
துள்ளிய நீர்போல் சுழல்கின்றவாறே.
உரை  
6நம ஆதி நனஆதி திரோதாயி ஆகித்
தம் ஆதியாய் நிற்கத் தான் அந்தத்து உற்றுச்
சமாதித் துரியம் தமது ஆகம் ஆகவே
நமஆதி சமாதி சிவ ஆதல் எண்ணவே.
உரை  
7அருள் தரு மாயமும் அத்தனும் தம்மில்
ஒருவனை ஈன்றவள் உள்ளுறு மாயை
திரி மலம் நீங்கிச் சிவாய என்று ஓதும்
அருவினை தீர்ப்பதும் அவ் எழுத்து ஆமே.
உரை  
8சிவ சிவ என்றே தெளிகிலர் ஊமர்
சிவ சிவ வாயுவும் தேர்ந்து உள் அடங்கச்
சிவ சிவ ஆய தெளிவின் உள்ளார்கள்
சிவ சிவ ஆகும் திரு அருள் ஆமே.
உரை  
9சிவ சிவ என்கிலர் தீ வினை யாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே.
உரை  
10நம என்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்
சிவம் என்னும் நாமத்தைச் சிந்தை உள் ஏற்றப்
பவம் அது தீரும் பரிசும் அது அற்றால்
அவமதி தீரும் அறும் பிறப்பு அன்றோ.
உரை  

7. அதி சூக்கும பஞ்சாக்கரம்

1சிவாய நம எனச் சித்தம் ஒருக்கி
அவாயம் அறவே அடிமை அது ஆக்கிச்
சிவாய சிவ சிவ என்று என்றே சிந்தை
அவாயம் கெட நிற்க ஆனந்தம் ஆமே.
உரை  
2செஞ் சுடர் மண்டலத்து ஊடு சென்று அப்புறம்
அஞ்சணவும் முறை ஏறி வழிக் கொண்டு
துஞ்சும் அவன் சொன்ன காலத்து இறைவனை
நெஞ்சு என நீங்கா நிலை பெறல் ஆகுமே.
உரை  
3அங்கமும் ஆகம வேதம் அது ஓதினும்
எங்கள் பிரான் எழுத்து ஒன்றில் இருப்பது
சங்கை கெட்ட அவ் எழுத்து ஒன்றையும் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அரும் கலம் ஆமே.
உரை  
4நாய் ஓட்டு மந்திரம் நான்மறை வேதம்
நாய் ஓட்டு மந்திரம் நாதன் இருப்பிடம்
நாய் ஓட்டு மந்திரம் நாதாந்த சோதி
நாய் ஓட்டு மந்திரம் நாமறியோம் அன்றே.
உரை  
5பழுத்தன ஐந்தும் பழமறை உள்ளே
விழித்து அங்கு உறங்கும் வினை அறிவார் இல்லை
எழுத்து அறிவோம் என்று உரைப்பார்கள் ஏதர்
எழுத்தை அழுத்தும் எழுத்து அறியாரே.
உரை  

8. திருக்கூத்துத் தரிசனம்

1எங்கும் திருமேனி எங்கும் சிவ சத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திரு நட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கு எங்கும்
தங்கும் சிவன் அருள் தன் விளையாட்டு அதே.
உரை  
2சிற்பரம் சோதி சிவ ஆனந்தக் கூத்தனைச்
சொல் பதம் ஆம் அந்தச் சுந்தரக் கூத்தனைப்
பொன் பதிக் கூத்தனைப் பொன் தில்லைக் கூத்தனை
அற்புதக் கூத்தனை யார் அறிவாரே.
உரை  

சிவானந்தக் கூத்து

1தான் அந்தம் இல்லாச் சதானந்த சத்தி மேல்
தேன் உந்தும் ஆனந்த மா நடம் கண்டீர்
ஞானம் கடந்து நடம் செய்யும் நம்பிக்கு அங்கு
ஆனந்தக் கூத்து ஆட ஆட அரங்கு ஆனதே.
உரை  
2ஆனந்தம் ஆடு அரங்கம் ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல் இயம் ஆனந்த வாச்சியம்
ஆனந்தம் ஆக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக் கூத்து உகந்தானுக்கே.
உரை  
3ஒளி ஆம் பரமும் உளது ஆம் பரமும்
அளியார் சிவகாமி ஆகும் சமயக்
களியார் பரமும் கருதுறை அந்தத்
தெளிவு ஆம் சிவ ஆனந்த நட்டத்தின் சித்தியே.
உரை  
4ஆன நடம் ஐந்து அகள சகளத்தர்
ஆன நடம் ஆடி ஐங் கருமத்து ஆக
ஆன தொழில் அருளால் ஐந் தொழில் செய்தே
தேன் மொழி பாகன் திரு நடம் ஆடுமே.
உரை  
5பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகாண்ட
மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட
தாகாண்ட ஐங் கருமத்து ஆண்ட தற்பரம்
தேகாந்தம் ஆம் பிரமாண்டத்த என்பவே.
உரை  
6வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளர் அண்டம் ஏழ் ஆடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுது ஆட
நாதம் கொண்டு ஆடினான் ஞான ஆனந்தக் கூத்தே.
உரை  
7பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகாண்ட
மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட
தாகாண்ட மைங்கரு மத்தாண்ட தற்பரத்து
ஏகாந்தமாம் பிரமாண்டத்த என்பவே.
உரை  
8வேதங்கள் ஓட மிகு ஆகமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளர் அண்டம் ஏழு ஆடப்
பூதங்கள் ஆடப் புவன முழுது ஆட
நாதம் கொண்டு ஆடினான் ஞானானந்தக் கூத்தே.
உரை  
9பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன் ஐந்தில்
வேதங்கள் ஐந்தின் மிகும் ஆகமம் தன்னில்
ஓதும் கலை காலம் ஊழியுடன் அண்டப்
போதங்கள் ஐந்தில் புணர்ந்து ஆடும் சித்தனே.
உரை  
10தேவர் சுரர் நரர் சித்தர் வித்தியா தரர்
மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்
தாபதர் சத்தர் சமயம் சரா சரம்
யாவையும் ஆடிடும் எம் இறை ஆடவே.
உரை  

சுந்தரக் கூத்து

1அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பால்
உண்டு என்ற சத்தி சதா சிவத்து உச்சி மேல்
கண்டம் கரியான் கருணை திரு உருக்
கொண்டு அங்கு உமை காணக் கூத்து உகந்தானே.
உரை  
2கொடு கொட்டி பாண்டரம் கோடு சங்கார
நடம் எட்டோடு ஐந்து ஆறு நாடி உள் நாடும்
திடம் உற்று எழும் தேவ தாரு ஆம் தில்லை
வடம் உற்றமாவனம் மன்னவன் தானே.
உரை  
3பரமாண்டத்து ஊடே பரா சத்தி பாதம்
பரமாண்டத்து ஊடே படர் ஒளி ஈசன்
பரமாண்டத்து ஊடே படர் தரு நாதம்
பரமாண்டத்து ஊடே பரன் நடம் ஆடுமே.
உரை  
4அங்குசம் என்ன எழு மார்க்கம் போதத்தில்
தங்கியது ஒந்தி எனும் தாள ஒத்தினில்
சங்கரன் மூல நாடிக்குள் தரித்து ஆடல்
பொங்கிய காலம் புகும் போகல் இல்லையே.
உரை  
5ஆனத்து ஆடிப் பின் நவக் கூத்து ஆடிக்
கானத்து ஆடிக் கருத்தில் தரித்து ஆடி
மூனச் சுழுனையுள் ஆடி முடிவு இல்லா
ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே.
உரை  
6சத்திகள் ஐந்தும் சிவ பேதம் தான் ஐந்தும்
முத்திகள் எட்டும் முதல் ஆம் பதம் எட்டும்
சித்திகள் எட்டும் சிவ பதம் தான் எட்டும்
சுத்திகள் எட்டு ஈசன் தொல் நடம் ஆடுமே.
உரை  
7மேகங்கள் ஏழும் விரி கடல் தீவு ஏழும்
தேகங்கள் ஏழும் சிவ பாற் கரன் ஏழும்
தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும்
ஆகின்ற நந்தி அடிக் கீழ் அடங்குமே.
உரை  

பொன்பதிக் கூத்து

1தெற்கு வடக்குக் கிழக்கு மேற்கு உச்சியில்
அற்புதம் ஆனது ஓர் அஞ்சு முகத்திலும்
ஒப்பு இல் பேர் இன்பத்து உபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே.
உரை  
2அடியார் அரன் அடி ஆனந்தம் கண்டோர்
அடியார் ஆனவர் அத்தர் அருள் உற்றோர்
அடியார் பவரே அடியவர் ஆம் ஆல்
அடியார் பொன் அம்பலத்து ஆடல் கண்டாரே.
உரை  
3அடங்காத என்னை அடக்கி அடி வைத்து
இடம் காண் பர ஆனந்தத்தே என்னை இட்டு
நடந்தான் செயும் நந்தி நல் ஞானக் கூத்தன்
படம்தான் செய்து உள் உடனே படிந்து இருந்தானே.
உரை  
4உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச்
செம்பொன் திரு மன்றுள் சேவகக் கூத்தனைச்
சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை
இன்பு உற நாடி என் அன்பில் வைத்தேனே.
உரை  
5மாணிக்கக் கூத்தனை வண் தில்லைக் கூத்தனைப்
பூண் உற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்
சேண் உற்ற சோதிச் சிவ ஆனந்தக் கூத்தனை
ஆணிப் பொன் கூத்தனை யார் உரைப் பாரே.
உரை  
6விம்மும் வெருவும் விழும் எழும் மெய் சோரும்
தம்மையும் தாம் அறியார்கள் சதுர் கெடும்
செம்மை சிறந்த திரு அம்பலக் கூத்துள்
அம் மலர்ப் பொன் பாதத்து அன்பு வைப்பார் கட்கே.
உரை  
7தேட்டு அறும் சிந்தை திகைப்பு அறும் பிண்டத்து உள்
வாட்டு அறும் கால் புந்தி ஆகி வரும் புலன்
ஓட்டு அறும் ஆசை அறும் உளத்து ஆனந்த
நாட்டம் உறும் குறு நாடகம் காணவே.
உரை  
8காளியோடு ஆடிக் கனகா சலத்து ஆடிக்
கூளியோடு ஆடிக் குவலயத்தே ஆடி
நீடிய நீர் தீ கால் நீள் வான் இடை ஆடி
நாள் உற அம்பலத்தே ஆடும் நாதனே.
உரை  
9மேரு நடு நாடி மிக்கு இடை பிங்கலை
கூரும் இவ் வானின் இலங்கைக் குறி உறும்
சாரும் திலை வனத் தண் மா மலையத்து ஊடு
ஏறும் சுழுனை இவை சிவ பூமியே.
உரை  

பொற்றில்லைக் கூத்து

1பூதல மேருப் புறத்து ஆன தெக்கணம்
ஓதும் இடை பிங்கலை ஒண் சுழுனை ஆம்
பாதி மதியோன் பயில் திரு அம்பலம்
ஏதம் இல் பூதாண்டத்து எல்லையின் ஈறே.
உரை  
2அண்டங்கள் ஓர் ஏழும் அம் பொன் பதி ஆகப்
பண்டை ஆகாசங்கள் ஐந்தும் பதி ஆகத்
தெண்டினில் சத்தி திரு அம்பலம் ஆகக்
கொண்டு பரம் சோதி கூத்து உகந்தானே.
உரை  
3குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணம் ஆம்
சிரானந்தம் பூரித்துத் தென் திசை சேர்ந்து
புரானந்த போகனாய்ப் பூவையும் தானும்
நிரானந்தம் ஆகி நிருத்தம் செய்தானே.
உரை  
4ஆதி பரன் ஆட அங் கைக் கனல் ஆட
ஓதும் சடை ஆட உன்மத்தம் உற்று ஆடப்
பாதி மதி ஆடப் பார் அண்டம் மீது ஆட
நாத மோடு ஆடினான் நாத அந்த நட்டமே.
உரை  
5கும்பிட அம்பலத்து ஆடிய கோன் நடம்
அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டம் ஆம்
செம் பொருளாகும் சிவலோகம் சேர்ந்து உற்றால்
உம்பர மோன ஞான அந்தத்தில் உண்மையே.
உரை  
6மேதினி மூ ஏழ் மிகும் அண்டம் ஓர் ஏழு
சாதகம் ஆகும் சமயங்கள் நூற்று எட்டு
நாதமோடு அந்த நடானந்த நாற்பதப்
பாதியோடு ஆடிப் பரன் இரு பாதமே.
உரை  
7இடை பிங்கலை இம வானோடு இலங்கை
நடு நின்ற மேரு நடு ஆம் சுழுனை
கடவும் திலை வனம் கை கண்ட மூலம்
படர் ஒன்றி என்னும் பரம் ஆம் பரமே.
உரை  
8ஈறு ஆன கன்னி குமரியே காவிரி
வேறா நவ தீர்த்தம் மிக்கு உள்ள வெற்பு ஏழுள்
பேறு ஆன வேத ஆகமமே பிறத்தலான்
மாறாத தென் திசை வையகம் சுத்தமே.
உரை  
9நாதத்தினில் ஆடி நார் பதத்தே ஆடி
வேதத்தில் ஆடித் தழல் அந்தம் மீது ஆடி
போதத்தில் ஆடிப் புவனம் முழுதும் ஆடும்
தீது அற்ற தேவாதி தேவர் பிரானே.
உரை  
10தேவரோடு ஆடித் திரு அம்பலத்து ஆடி
மூவரோடு ஆடி முனி சனத்தோடு ஆடிப்
பாவின் உள் ஆடிப் பரா சத்தியில் ஆடிக்
கோவின் உள் ஆடிடும் கூத்த பிரானே.
உரை  
11ஆறு முகத்தில் அதிபதி நான் என்றும்
கூறு சமயக் குருபரன் நான் என்றும்
தேறினர் தெற்குத் திரு அம்பலத்து உள்ளே
வேறு இன்றி அண்ணல் விளங்கி நின்றானே.
உரை  
12அம்பலம் ஆடு அரங்கு ஆக அதன் மீதே
எம் பரன் ஆடும் இரு தாளின் ஈர் ஒளி
உம் பரம் ஆம் ஐந்து நாதத்து ரேகையுள்
தம் பதம் ஆய் நின்று தான் வந்து அருளுமே.
உரை  
13ஆடிய காலும் அதில் சிலம்பு ஓசையும்
பாடிய பாட்டும் பல ஆன நட்டமும்
கூடிய கோலம் குருபரன் கொண்டு ஆடத்
தேடி உளே கண்டு தீர்ந்து அற்ற வாறே.
உரை  
14இருதயம் தன்னில் எழுந்த பிராணன்
கர சரண் ஆதி கலக்கும் படியே
அர தனம் மன்றினின் மாணிக்கக் கூத்தன்
குரவனாய் எங்கணும் கூத்து உகந்தானே.
உரை  

அற்புதக் கூத்து

1குரு உரு அன்றிக் குனிக்கும் உருவம்
அரு உரு ஆவதும் அந்த அருவே
திரிபுரை ஆகித் திகழ் தரு வாளும்
உரு அருவு ஆகும் உமை அவள் தானே.
உரை  
2திரு வழி ஆவது சிற்றம் பலத்தே
குரு வடிவு உள்ளாக் குனிக்கும் உருவே
உருவு அருவு ஆவது முற்றும் உணர்ந்தோர்க்கு
அருள் வழி ஆவதும் அவ்வழி தானே.
உரை  
3நீரும் சிரசு இடை பன்னிரண்டு அங்குலம்
ஓடும் உயிர் எழுத்து ஓங்கி உதித்திட
நாடு மின் நாத அந்த நம் பெருமான் உகந்து
ஆடும் இடம் திரு அம்பலம் தானே.
உரை  
4வளி மேக மின் வில்லு வானக ஓசை
தெளிய விசும்பில் திகழ்தரு வாறு போல்
களி ஒளி ஆறும் கலந்து உடன் வேறாய்
ஒளி உரு ஆகி ஒளித்து நின்றானே.
உரை  
5தீ முதல் ஐந்தும் திசை எட்டும் கீழ் மேலும்
ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம்
மாயை மா மாயை கடந்து நின்றார் காண
நாயகன் நின்று நடம் செய்யும் ஆறே.
உரை  
6கூத்தன் கலந்திடும் கோல் வளையா ளொடும்
கூத்தன் கலந்திடும் கோது இலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோது இலா ஞானத்துக்
கூத்தனும் கூத்தியும் கூத்து அதின் மேலே.
உரை  
7இடம் கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடம் கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படம் கொடு நின்ற இப் பல் உயிர்க்கு எல்லாம்
அடங்கலும் தாம் ஆய் நின்று ஆடு கின்றாரே.
உரை  
8சத்தி வடிவு சகல ஆனந்தமும்
ஒத்த ஆனந்தம் உமை அவள் மேனி ஆம்
சத்தி வடிவு சகளத்து எழும் திரண்டு
ஒத்த ஆனந்தம் ஒரு நடம் ஆமே.
உரை  
9நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்று உற்றுப் பார்க்க ஒளி விடும் மந்திரம்
பற்றுக்குப் பற்று ஆய்ப் பரமன் இருந் திடம்
சிற்றம் பலம் என்று சேர்ந்து கொண்டேனே.
உரை  
10அண்டங்கள் தத்துவம் ஆகிச் சதா சிவம்
தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம்
தெண்டினில் ஏழும் சிவ ஆசனம் ஆகவே
கொண்டு பரஞ்சோதி கூத்து உகந்தானே.
உரை  
11மன்று நிறைந்த விளக்கு ஒளி மா மலர்
நன்று இது தான் இதழ் நாலொடு நூறு அவை
சென்றது தான் ஒரு பத்து இரு நூறு உள
நின்றது தான் நெடு மண்டலம் ஆமே.
உரை  
12அண்டம் எழு கோடி பிண்டம் எழு கோடி
தெண் திரை சூழ்ந்த திசைகள் எழு கோடி
எண் திசை சூழ்ந்த இலிங்கம் எழு கோடி
அண்ட நடம் செயும் ஆலயம் தானே.
உரை  
13ஆகாசம் ஆம் உடல் அலங்கார் முயலகன்
ஏகாசம் ஆம் திசை எட்டும் திருக்கை கள்
மோகாய முக் கண்கள் மூன்று ஒளி தான் ஆக
மாகாய மன்றுள் நடம் செய் கின்றானே.
உரை  
14அம்பலம் ஆவது அகில சரா சரம்
அம்பலம் ஆவது ஆதிப் பிரான் அடி
அம்பலம் ஆவது அப்புத் தீ மண்டலம்
அம்பலம் ஆவது அஞ்சு எழுத்து ஆமே.
உரை  
15கூடிய திண் முழவம் குழலோம் என்று
ஆடிய மானுடர் ஆதிப் பிரான் என்ன
நாடி நல் கணம் ஆர் அம்பல் பூதங்கள்
பாடிய வாறு ஒரு பாண்டரங்கம் ஆமே.
உரை  
16அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்
தெண் திரை சூழ் புவிக்கு உள் உள்ள தேவர்கள்
புண்டரிகப் பதப் பொன் அம்பலக் கூத்துக்
கண்டு சேவித்துக் கதி பெறுவார் களே.
உரை  
17புளிக் கண்டவர்க்குப் புனல் ஊறு மா போல்
களிக்கும் திருக் கூத்துக் கண்டவர்க்கு எல்லாம்
அளிக்கும் அருள் கண்ணீர் சோர் நெஞ்சு உருக்கும்
ஒளிக்குள் ஆனந்தத்து அமுது ஊறும் உள்ளத்தே.
உரை  
18திண்டாடி வீழ்கை சிவ ஆனந்தம் ஆவது
உண்டார்க்கு உணவு உண்டால் உன்மத்தம் சித்திக்கும்
கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக்
கண்டார் வரும் குணம் கேட்டார்க்கும் ஒக்குமே.
உரை  
19அங்கி தமருகம் அக்கு மாலை பாசம்
அங்குசம் சூலம் கபாலமுடன் ஞானம்
தங்கு பயம் தரு நீலமும் உடன்
மங்கை யோர் பாகம் ஆய் நடம் ஆடுமே.
உரை  
20ஆடல் பதினோர் உறுப்பும் அடைவு ஆகக்
கூடிய பாதம் சிலம்பு கைக் கொள் துடி
நீடியநாதம் பரால் பர நேயத்தே
ஆடிய நந்தி புறம் அகத்தானே.
உரை  
21ஒன்பதும் ஆட ஒரு பதினாறு ஆட
அன்பு உறு மார்க்கங்கள் ஆறும் உடன் ஆட
இன்பு உறும் ஏழினும் ஏழ் ஐம் பத்து ஆறு ஆட
அன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.
உரை  
22ஏழினில் ஏழாய் இகந்து எழுத்து ஏழதாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்து அமைந்து ஒன்றாகி
ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரம் சோதி
ஏழ் இசை நாடகத்தே இசைந்தானே.
உரை  
23மூன்றினில் அஞ்சாகி முந்நூற்று அறுபதாய்
மூன்றினில் ஆறாய் முதல் பன்னீர் மூலமாய்
மூன்றினில் அக்க முடிவு ஆகி முந்தியே
மூன்றிலும் ஆடினான் மோகாந்தக் கூத்தே.
உரை  
24தாம் முடி வானவர் தம் முடி மேல் உறை
மா மணி ஈசன் மலர் அடித் தாள் இணை
வா மணி அன்பு உடையார் மனத்து உள் எழும்
கா மணி ஞாலம் கடந்து நின்றானே.
உரை  
25புரிந்தவன் ஆடில் புவனங் களோடும்
தெரிந்தவன் ஆடும் அளவு எங்கள் சிந்தை
புரிந்தவன் ஆடில் பல் பூதங்கள் ஆடும்
எரிந்தவன் ஆடல் கண்டு இன்புற்ற வாறே.
உரை  
26ஆதி நடம் செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடம் செய்கை யாரும் அறிகிலர்
ஆதி நடம் ஆடல் ஆரும் அறிந்தபின்
ஆதி நடம் ஆடல் ஆம் அருள் சத்தியே.
உரை  
27ஒன்பதோடு ஒன்பது ஆம் உற்ற இருபதத்து
அன்பு உறு கோணம் அசி பதத்து ஆடிடத்
துன்பு உறு சத்தியுள் தோன்றி நின்று ஆடவே
அன்பு உறு எந்தை நின்று ஆடல் உற்றானே.
உரை  
28தத்துவம் ஆடச் சதாசிவம் தான் ஆடச்
சித்தமும் ஆடச் சிவ சத்தி தான் ஆட
வைத்த சரா சரம் ஆட மறை ஆட
அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.
உரை  
29இருவரும் காண எழில் அம்பலத்தே
உருவோடு அருவோடு உருபர ரூபமாய்த்
திரு அருள் சத்திக்குள் சித்தன் ஆனந்தன்
அருள் உரு ஆக நின்று ஆடல் உற்றானே.
உரை  
30சிவம் ஆடச் சத்தியும் ஆடச் சகத்தில்
அவம் ஆட ஆடாத அம்பரம் ஆட
நவம் ஆன தத்துவ நாத அந்தம் ஆடச்
சிவம் ஆடும் வேத அந்தச் சித்தாந்தத்து உள்ளே.
உரை  
31நாதத்தின் அந்தமும் நால் போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய்ச் சிவ ஆனந்தமும்
தாது அற்ற நல்ல சதா சிவ ஆனந்தத்து
நாதப் பிரமம் சிவ நடம் ஆமே.
உரை  
32சிவம் ஆதி ஐவர் திண்டாட்டமும் தீரத்
தவம் ஆர் பசு பாசம் ஆங்கே தனித்துத்
தவம் ஆம் பரன் எங்கும் தான் ஆக ஆடும்
தவம் ஆம் சிவ ஆனந்தத் தோர் ஞானக் கூத்தே.
உரை  
33கூடி நின்றான் ஒரு காலத்துத் தேவர்கள்
வீட நின்றான் விகிர்தா என்னும் நாமத்தைத்
தேட நின்றான் திகழும் சுடர் மூன்று ஒளி
ஆட நின்றான் என்னை ஆள் கொண்ட வாறே.
உரை  
34நாதத்துவம் கடந்து ஆதி மறை நம்பி
பூதத்துவத்தே பொலிந்து இன்பம் எய்தினர்
நேதத்துவமும் அவற்றொடு நேதியும்
பேதப் படா வண்ணம் பின்னி நின்றானே.
உரை  
35ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவு இலர்
ஆனந்த மா நடம் ஆரும் அறிகிலர்
ஆனந்த மா நடம் ஆரும் அறிந்த பின்
தான் அந்தம் அற்றிடம் ஆனந்தம் ஆமே.
உரை  
36திருந்து நல் என்று உதறிய கையும்
அரும் தவர் வா என்று அணைத்த மலர்க் கையும்
பொருந்தில் இமைப் பிலி அவ் என்ற பொன் கையும்
திருந்தத் தீ ஆகும் திரு நிலை மவ்வே.
உரை  
37மருவம் துடியுடன் மன்னிய வீச்சு
மருவிய அப்பும் அனலுடன் கையும்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் சிவாய நம என ஓதே.
உரை  
38அரன் துடி தோற்றம் அமைத்தல் திதி ஆம்
அரன் அங்கி தன்னில் அறையில் சங்காரம்
அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயி
அரன் அடி என்றும் அனுக் கிரகம் என்னே.
உரை  
39தீத் திரள் சோதி திகழ் ஒளி உள் ஒளி
கூத்தனைக் கண்ட அக் கோமளக் கண்ணினள்
மூர்த்திகள் மூவர் முதல்வன் இடை செல்லப்
பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே.
உரை  
40நந்தியை எந்தையை ஞானத் தலைவனை
மந்திரம் ஒன்றுள் மருவி அது கடந்து
அந்தர வானத்தின் அப்புறத்து அப்பர
சுந்தரக் கூத்தனை என் சொல்லும் ஆறே.
உரை  
41சீய குரு நந்தி திரு அம்பலத்திலே
ஆய் உறு மேனியை யாரும் அறிகிலர்
தீய் உறு செம்மை வெளுப் பொடு அத் தன்மை
ஆய் உறு மேனி அணை புகல் ஆமே.
உரை  
42தான் ஆன சத்தியும் தற்பரை ஆய் நிற்கும்
தான் ஆம் பரற்கும் உயிர்க்கும் தகும் இச்சை
ஞான ஆதி பேத நடத்து நடித்து அருள்
ஆனால் அரன் அடி நேயத்தம் ஆமே.
உரை  
43பத்தி விதையில் பயிர் ஒன்று நாணத்தைச்
சித்தி தரு வயிராக்கத்தால் செய்து அறுத்து
உய்த்த சமாதி சிவானந்தம் உண்டிடச்
சித்தி திகழ் முத்தி யானந்தம் சித்தியே.
உரை  

9. ஆகாசப் பேறு

1உள்ளத்து உளோம் என ஈசன் ஒருவனை
உள்ளத்து உளே அங்கி ஆய ஒருவனை
உள்ளத்து உளே நீதி ஆய ஒருவனை
உள்ளத்து உளே உடல் ஆகாயம் ஆமே.
உரை  
2பெரு நிலம் ஆய் அண்டம் ஆய அண்டத்து அப்பால்
குரு நிலம் ஆய் நின்ற கொள்கையான் ஈசன்
பெரு நிலம் ஆய் நின்று தாங்கிய தாளோன்
அரு நிலை ஆய் நின்ற ஆதிப் பிரானே.
உரை  
3அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை
உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது
கொண்ட குறியைக் குலைத்தது தானே.
உரை  
4பயன் உறு கன்னியர் போகத்தின் உள்ளே
பயன் உறும் ஆதி பரம் சுடர்ச் சோதி
அயனொடு மால் அறியா வகை நின்றிட்டு
உயர் நெறியாய் ஒளி ஒன்று அது ஆமே.
உரை  
5அறிவுக்கு அறிவு ஆம் அகண்ட ஒளியும்
பிறியா வலத்தினில் பேர் ஒளி மூன்றும்
அறியாது அடங்கிடில் அத்தன் அடிக்குள்
பிறியாது இருக்கில் பெரும் காலம் ஆமே.
உரை  
6ஆகாச வண்ணன் அமரர் குலக் கொழுந்து
ஏகாச மாசுணம் இட்டு அங்கு இருந்தவன்
ஆகாச வண்ணம் அமர்ந்து நின்று அப்புறம்
ஆகாசம் ஆய் அங்கி வண்ணனும் ஆமே.
உரை  
7உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க
உயிர்க்கின்ற உள் ஒளி சேர்கின்ற போது
குயில் கொண்ட பேதை குலாவி உலாவி
வெயில் கொண்டு என் உள்ளம் வெளியது ஆமே.
உரை  
8நணுகில் அகல் இலன் ஆதன் உலகத்து
அணுகில் அகன்ற பெரும் பதி நந்தி
நணுகிய மின் ஒளி சோதி வெளியைப்
பணியின் அமுதம் பருகலும் ஆமே.
உரை  
9புறத்து உள ஆகாசம் புவனம் உலகம்
அகத்து உள ஆகாசம் எம் ஆதி அறிவு
சிவத்துள் ஆகாசம் செழும் சுடர்ச் சோதி
சகத்துள் ஆகாசம் தானம் சமாதியே.
உரை  

10. ஞானோதயம்

1மன சந்தியில் கண்ட மன்நனவு ஆகும்
கனவுற ஆனந்தம் காண்டல் அதனை
வினவுற ஆனந்தம் ஈது ஒழி என்ப
இனம் உற்ற் ஆனந்தி ஆனந்தம் இரண்டே.
உரை  
2கரி அட்ட கையன் கபாலம் கை ஏந்தி
எரியும் இளம் பிறை சூடும் எம்மானை
அரியன் பெரியன் என்று ஆட் பட்டது அல்லால்
கரியன் கொல் சேயன் கொல் காண்கின்றிலேனே.
உரை  
3உண்ணல் உறங்கல் உலாவல் உயிர்போதல்
நண்ணல் நரக சுவர்க்கத்து நாட்டிடப்
பண்ணல் அவன்பணியால் இவன் பாலிடை
திண்ணிதில் செய்கை சிவன் பணி ஆகுமே.
உரை  
4ஓடும் இருக்கும் கிடக்கும் உடன் எழுந்து
ஆடும் பறக்கும் அகண்டமும் பேசிடும்
பாடும் புறத்து எழும் பல்லுயிர் ஆனந்தம்
கூடும் பொழுதில் குறிப்பு இவை தான் அன்றே.
உரை  
5மிக்கார் அமுது உண்ண நஞ்சு உண்ட மேலவன்
தக்கார் உரைத்த தவநெறியே சென்று
புக்கால் அருளும் பொன் ஞானத்தை
நக்கார் கழல் வழி நாடுமின் நீரே.
உரை  
6விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக்கு உள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு
விளக்கு உடையான் கழல் மேவலும் ஆமே.
உரை  
7தத்துவம் எங்கு உண்டு தத்துவன் அங்கு உண்டு
தத்துவம் எங்கு இல்லை தத்துவன் அங்கு இல்லை
தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்த பின்
தத்துவன் அங்கே தலைப்படும் தானே.
உரை  
8விசும்பு ஒன்று தாங்கிய மெய்ஞ் ஞானத்து உள்ளே
அசும்பின் நின்று ஊறிய தார் அமுதாகும்
பசும் பொன் திகழும் படர் சடை மீதே
குசும்ப மலர்க் கந்தம் கூடி நின்றானே.
உரை  
9முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின்
கொத்தும் பசும் பொன்னின் தூ ஒளி மாணிக்கம்
ஒத்து உயர் அண்டத்து உள் அமர் சோதியை
எத்தன்மை வேறு என்று கூறு செய்வீரே.
உரை  
10நான் என்றும் தான் என்றும் நாடினேன் நாடலும்
நான் என்றும் தான் என்று இரண்டு இல்லை என்பது
நான் என்ற ஞான முதல்வனே நல்கினான்
நான் என்று நானும் நினைப்பு ஒழிந்தேனே.
உரை  
11ஞானத்தின் நன் நெறி நாத அந்த நல் நெறி
ஞானத்தின் நல் நெறி நான் என்று அறிவோர்தல்
ஞானத்தின் நல் யோக நல் நிலையே நிற்றல்
ஞானத்தின் நல் மோன நாத அந்த வேதமே.
உரை  
12உய்ய வல்லார் கட்கு உயிர் சிவ ஞானமே
உய்ய வல்லார் கட்கு உயிர் சிவ தெய்வமே
உய்ய வல்லார் கட்கு ஒடுக்கம் பிரணவம்
உய்ய வல்லார் அறிவு உள் அறிவு ஆமே.
உரை  
13காண வல்லார்க்கு அவன் கண்ணின் மணி ஒக்கும்
காண வல்லார்க்குக் கடலின் அமுது ஒக்கும்
பேண வல்லார்க்குப் பிழைப்பு இலன் பேர் நந்தி
ஆண வல்லார்க்கே அவன் துணை ஆமே.
உரை  
14ஓம் எனும் ஓர் எழுத்து உள் நின்ற ஓசை போல்
மேல் நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்
சேய் நின்ற செஞ் சுடர் எம் பெருமான் அடி
ஆய் நின்ற தேவர் அகம் படி ஆமே.
உரை  

11. சத்திய ஞானாந்தம்

1எப்பாழும் பாழும் யாவும் ஆய் அன்றாகி
முப்பாழும் கீழ் உள முப்பாழும் முன்னியே
இப்பாழும் இன்னவாறு என்பதில் இலா இன்பத்து
தற்பர ஞான ஆனந்தம் தான் அது ஆகுமே.
உரை  
2மன்னும் சத்தி ஆதி மணி ஒளி மாசோபை
அன்னதோடு ஒப்பமிடல் ஒன்றாம் ஆறது
இன்னிய வுற்பலம் ஒண்சீர் நிறமணம்
பன்னிய சோபை பகர் ஆறும் ஆனதே.
உரை  
3சத்தி சிவன் பரஞானமும் சாற்றும் கால்
உய்த்த அனந்தம் சிவம் உயர் ஆனந்தம்
வைத்த சொரூபத்த சத்தி வரு குரு
உய்த்த உடல் இவை உற்பலம் போலுமே.
உரை  
4உருஉற் பலம் நிறம் ஒண் மணம் சோபை
தரநிற்ப போல் உயிர் தற்பரம் தன்னில்
மருவச் சிவம் என்ற மா முப் பதத்தின்
சொரு பத்தன் சத்தி ஆதி தோன்ற நின்றானே.
உரை  
5நினையும் அளவின் நெகிழ வணங்கிப்
புனையில் அவனைப் பொதியலும் ஆகும்
எனையும் எம்கோன் நந்தி தன் அருள் கூட்டி
நினையும் அளவில் நினைப் பித்தனனே.
உரை  
6பாலொடு தேனும் பழத்து உள் இரதமும்
வாலிய பேர் அமுதாகும் மதுரமும்
போலும் துரியம் பொடி பட உள் புகச்
சீலம் மயிர்க்கால் தொறும் தேக்கிடுமே.
உரை  
7அமரத்துவம் கடந்து அண்டம் கடந்து
தமரத்து நின்ற தனிமையன் ஈசன்
பவளத்து முத்தும் பனிமொழி மாதர்
துவள் அற்ற சோதி தொடர்ந்து நின்றானே.
உரை  
8மத்திமம் ஆறு ஆறு மாற்றி மலம் நீக்கிச்
சுத்தம் அது ஆகும் துரியத்து துரிசு அற்றுப்
பெத்தம் அறச் சிவம் ஆகிப் பிறழ் உற்றுச்
சத்திய ஞான ஆனந்தம் சார்ந்தனன் ஞானியே.
உரை  
9சிவம் ஆய் அம் ஆன மும் மலம் தீரப்
பவம் ஆன முப்பாழைப் பற்று அறப் பற்றத்
தவம் ஆன சத்திய ஞான ஆனந்தத்தே
துவம் ஆர் துரியம் சொரூபம் அது ஆமே.
உரை  

12. சொரூப உதயம்

1பரம குரவன் பரம் எங்கும் ஆகித்
திரம் உற எங்கணும் சேர்ந்து ஒழிவு அற்று
நிரவு சொரூபத்து உள் நீடும் சொரூபம்
அரிய துரியத்து அணைந்து நின்றானே.
உரை  
2குலைக்கின்ற நீரில் குவலய நீரும்
அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாச
நிலத்து இடை வான் இடை நீண்டு அகன்றானை
வரைத்து வலம் செயும் மாறு அறியேனே.
உரை  
3அங்கு நின்றான் அயன் மால் முதல் தேவர்கள்
எங்கு நின்றாரும் இறைவன் என்று ஏத்துவர்
தங்கி நின்றான் தனி நாயகன் எம் இறை
பொங்கி நின்றான் புவனா பதி தானே.
உரை  
4சமையச் சுவடும் தனை அறியாமல்
கமை அற்ற காமம் ஆதி காரணம் எட்டும்
திமிரச் செயலும் தெளிவுடன் நின்றோர்
அமரர்க்கு அதிபதி ஆகி நிற்பாரே.
உரை  
5மூவகைத் தெய்வத்து ஒருவன் முதல் உரு
வாய் அது வேறு ஆம் அதுபோல் அணுப் பரன்
சேய சிவமுத் துரியத்துச் சீர் பெற
ஏயும் நெறி என்று இறை நூல் இயம்புமே.
உரை  
6உருவு அன்றியே நின்று உருவம் புணர்க்கும்
கரு அன்றியே நின்று தான் கரு ஆகும்
அரு அன்றியே நின்ற மாயப் பிரானைக்
குரு அன்றி யாவர்க்கும் கூட ஒண்ணாதே.
உரை  
7உருவ நினைப்பவர்க்கு உள் உறும் சோதி
உருவ நினைப்பவர் ஊழியும் காண்பர்
உருவ நினைப்பவர் உம்பரும் ஆவர்
உருவ நினைப்பவர் உலகத்தில் யாரே.
உரை  
8பரஞ்சோதி ஆகும் பதியினைப் பற்றாப்
பரஞ்சோதி எனுள் படிந்ததன் பின்னைப்
பரஞ்சோதி உண்ணான் படியப் படியப்
பரஞ்சோதி தன்னைப் பறையக் கண்டேனே.
உரை  
9சொரூபம் உருவம் குணம் தொல் விழுங்கி
அரியன உற்பலம் ஆம் ஆறு போல
மருவிய சத்தி ஆதி நான்கு மதித்த
சொரூபக் குரவன் சுகோதயம் தானே.
உரை  
10 அற்ற ஆனந்த மோன சொரூபத்தன்
கரை அற்ற சத்தி ஆதி காணில் அகார
மரு உற்று உகார மகாரம் அது ஆக
அற்ற தாரத்தில் உள் ஒளி ஆமே.
உரை  
11தலை நின்ற தாழ்வரை மீது தவம் செய்து
முலை நின்ற மாது அறி மூர்த்தியை யானும்
புலை நின்ற பொல்லாப் பிறவி கடந்து
கலை நின்ற கள்வனில் கண்டு கொண்டேனே.
உரை  
12ஆம் ஆறு அறிந்தேன் அகத்தின் அரும் பொருள்
போம் ஆறு அறிந்தேன் புகும் ஆறும் ஈது என்றே
ஏமாப்பது இல்லை இனி ஓர் இடம் இல்லை
நாம் ஆம் முதல்வனும் நான் எனல் ஆமே.
உரை  

13. ஊழ்

1செற்றில் என் சீவில் என் செஞ் சாந்து அணியில் என்
மத்தகத்தே உளி நாட்டி மறிக்கில் என்
வித்தகன் நந்தி விதிவழி அல்லது
தத்துவ ஞானிகள் தன்மை குன்றாரே.
உரை  
2தான் முன்னம் செய்த விதி வழி தான் அல்லால்
வான் முன்னம் செய்து அங்கு வைத்தது ஓர் மாட்டு இல்லை
கோன் முன்னம் சென்னி குறிவழியே சென்று
நான் முன்னம் செய்ததே நல் நிலம் ஆனதே.
உரை  
3ஆறு இட்ட நுண் மணல் ஆறே சுமவாதே
கூறு இட்டுக் கொண்டு சுமந்து அறிவார் இல்லை
நீறு இட்ட மேனி நிமிர் சடை நந்தியைப்
பேறு இட்ட என் உள்ளம் பிரிய கிலாவே.
உரை  
4வான் நின்று இடிக்கில் என் மா கடல் பொங்கில் என்
கான் நின்ற செந் தீக் கலந்து உடன் வேகில் என்
தான் ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கில் என்
நான் ஒன்றி நாதனை நாடுவேன் நானே.
உரை  
5ஆனை துரக்கில் என் அம்பு ஊடு அறுக்கில் என்
கானத்து உழுவை கலந்து வளைக்கில் என்
ஏனைப் பதியினில் எம் பெருமான் வைத்த
ஞானத்து உழவினை நான் உழுவேனே.
உரை  
6கூடு கெடின் மற்று ஓர் கூடு செய்வான் உளன்
நாடு கெடினும் நமர் கெடுவார் இல்லை
வீடு கெடின் மற்று ஓர் வீடு புக்கால் ஒக்கும்
பாடது நந்தி பரிசு அறிவார்க்கே.
உரை  

14. சிவதரிசனம்

1சிந்தை அது என்னச் சிவன் என்ன வேறு இல்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளிய வல்லார் கட்குச்
சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே.
உரை  
2வாக்கும் மனமும் மறைந்த மறைப் பொருள்
நோக்குமின் நோக்கப்படும் பொருள் நுண்ணிது
போக்கு ஒன்றும் இல்லை வரவு இல்லை கேடு இல்லை
ஆக்கமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே.
உரை  
3பரனாய்ப் பராபரன் ஆகி அப்பால் சென்று
உரனாய் வழக்கு அற ஒண் சுடர் தானாய்த்
தரனாய் தனாது எனவாறு அறி ஒண்ணா
அரனாய் உலகில் அருள் புரிந்தானே.
உரை  

15. சிவசொரூப தரிசனம்

1ஓதும் மயிர்க்கால் தொறும் அமுது ஊறிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்
ஆதி சொரூபங்கள் மூன்று அகன்று அப்பாலை
வேதம் அது ஓதும் சொரூபி தன் மேன்மையே.
உரை  
2உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலவி அவனே
இணரும் அவன் தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க் கந்தம் துன்னி நின்றானே.
உரை  
3இணங்க வேண்டா இனி உலகோருடன்
நுணங்கு கல்வியும் நூல்களும் என்செயும்
வணங்க வேண்டா வடிவை அறிந்தபின்
பிணங்க வேண்டா பிதற்றை ஒழியுமே.
உரை  
4துன்னி நின்றான் தன்னை உன்னி முன்னா இரு
முன்னி அவர் தம் குறையை முடித்திடும்
மன்னிய கேள்வி மறையவன் மாதவன்
சென்னியுள் நின்றது ஓர் தேற்றத்தன் ஆமே.
உரை  
5மின் உற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்
தன் உற்ற சோதித் தலைவன் இணை இலி
பொன் உற்ற மேனிப் புரிசடை நந்தியும்
என் உற்று அறிவான் என் விழித்தானே.
உரை  
6சத்திய ஞானத் தனிப் பொருள் ஆனந்தம்
சித்தத்தின் இல்லாச் சிவ ஆனந்தப் பேர் ஒளி
சுத்தப் பிரம துரியம் துரியத்துள்
உய்த்த துரியத்து உறு பேர் ஒளியே.
உரை  
7பரன் அல்ல நீடும் பரா பரன் அல்ல
உரன் அல்ல மீது உணர் ஒண் சுடர் அல்ல
தரன் அல்ல தான் அவையாய் அல்ல ஆகும்
அரன் அல்ல ஆனந்தத்து அப்புறத்தாணே.
உரை  
8முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரம் தன்னுள் நின்று மா
சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவம் கூடலால்
சுத்தி அகன்றோர் சுக ஆனந்த போதமே.
உரை  
9துரிய அதீதம் சொல் அறும் பாழ் ஆம்
அரிய துரியம் அதீதம் புரியில்
விரியும் குவியும் விள்ளாம் மிளிரும் தன்
உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே.
உரை  

16. முத்தி பேதம் - கரும நிருவாணம்

1ஓதிய முத்தி அடைவே உயிர் பர
பேதம் இல் அச் சிவம் எய்தும் துரியமோடு
ஆதி சொரூபம் சொரூபத்தது ஆகவே
ஏதம் இலா நிருவாணம் பிறந்தவே.
உரை  
2பற்று அற்றவர் பற்றி நின்ற பரம் பொருள்
கற்று அற்றவர் கற்றுக் கருதிய கண்நுதல்
சுற்று அற்றவர் சுற்றி நின்ற என் சோதியை
பெற்று உற்றவர்கள் பிதற்று ஒழிந்தாரே.
உரை  
3சித்தம் சிவமாம் சிவஞானி சேர்விடம்
சத்தச் சிவாலயம் தொல் பாச நாசமாம்
அத்த மழையகம் அனந்த மேலிடும்
முத்தம் பெருகும் முழுப் பொருள் ஆகுமே.
உரை  
4ஆணவ மூலத்து அகாரம் உதித்திடப்
பேணி உகாரம் கலாதி பிறிவிக்கத்
தாணு மகாரம் சதாசிவம் ஆகவே
ஆணவ பாசம் அடர்தல் செய்யா அன்றே.
உரை  
5நெற்றி நடுவுள் நினைவு எழு கண்டமும்
உற்ற விதையமும் ஓதிய நாபிக்கீழ்ப்
பெற்ற துரியமும் பேசிய மூலத்தே
உற்ற அதீதம் ஒடுங்கும் உடன் அன்றே.
உரை  

17. மறைபொருட் கூற்று

1காயம் பல கை கவறு ஐந்து கண் மூன்றா
ஆயம் பொருவது ஓர் ஐம்பத்து ஓர் அக்கரம்
ஏய பெருமான் இருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பு அறியேனே.
உரை  
2தூறு படர்ந்து கிடந்தது தூ நெறி
மாறிக் கிடக்கும் வகை அறிவார் இல்லை
மாறிக் கிடக்கும் வகை அறிவாளர்க்கு
ஊறிக் கிடந்தது என் உள் அன்பு தானே.
உரை  
3ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
சாறு படுவன நான்கு பனை உள
ஏறற்கு அரியது ஓர் ஏணி இட்டு அப்பனை
ஏறல் உற்றேன் கடல் ஏழும் கண்டேனே.
உரை  
4வழுதலை வித்து இடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுது கொண்டு ஓடினார் தோட்டக் குடி கள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.
உரை  
5ஐ என்னும் வித்தினில் ஆனை விளைப்பது ஓர்
செய் உண்டு செய்யின் தெளிவு அறிவார் இல்லை
மை அணி கண்டனன் மனம் பெறின் அந் நிலம்
பொய் ஒன்றும் இன்றிப் புக எளிது ஆமே.
உரை  
6பள்ளச் செய் ஒன்று உண்டு பாழச் செய் இரண்டு உள
கள்ளச் செய் அங்கே கலந்து கிடந்தது
உள்ளச் செய் அங்கே உழவு செய்வார் கட்கு
வெள்ளச் செய் ஆகி விளைந்தது தானே.
உரை  
7மூ அணை யேரும் உழுவது முக் காணி
தாம் அணி கோலித் தறிஉறிப் பாய்ந்திடு
நாவணை கோலி நடுவில் செறு உழார்
கால் அணை கோலிக் களர் உழுவாரே.
உரை  
8ஏற்றம் இரண்டு உள ஏழு துரவு உள
மூத்தான் இறைக்க இளையான் படுத்த நீர்
பாத்தியில் பாயாது பாழ்ப் பாய்ந்து போயிடில்
கூத்தி வளர்த்தது ஓர் கோழிப் புள் ஆமே.
உரை  
9பட்டிப் பசுக்கள் இருபத்து நால் உள
குட்டிப் பசுக்கள் ஓர் ஏழு உள ஐந்து உள
குட்டிப் பசுக்கள் குடப் பால் சொரியினும்
பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே.
உரை  
10ஈற்றுப் பசுக்கள் இருபத்து நால் உள
ஊற்றுப் பசுக்கள் ஒரு குடம் பால் போதும்
காற்றுப் பசுக்கள் கறந்து உண்ணும் காலத்து
மாற்றுப் பசுக்கள் வரவு அறியோமே.
உரை  
11தட்டான் அகத்தில் தலை ஆன மச்சின் மேல்
மொட்டாய் எழுந்தது செம் பால் மலர்ந்தது
வட்டம் பட வேண்டி வாய்மை மடித்திட்டுத்
தட்டான் அதனைத் தகைந்து கொண்டானே.
உரை  
12அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி
திரிக்கின்ற வொட்டம் சிக் கெனக் கட்டி
வரிக்கின்ற நல்லான் கறவையைப் பூட்டில்
விரிக்கின்ற வெள்ளரி வித்து வித்து ஆமே.
உரை  
13இடாக் கொண்டு தூவி எரு இட்டு வித்திக்
கிடாக் கொண்டு பூட்டிக் கிளறி முளையை
மிடாக் கொண்டு சோறு அட்டு மெள்ள விழுங்கார்
கிடாக் கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே.
உரை  
14விளைந்து கிடந்தது மேலைக்கு வித்து அது
விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்
விளைந்து விளைந்து விளைந்து கொள்வார்க்கு
விளைந்து கிடந்தது மேவு முக் காதமே.
உரை  
15களர் உழுவார்கள் கருத்தை அறியோம்
களர் உழுவார்கள் கருதலும் இல்லை
களர் உழுவார்கள் களரின் முளைத்த
வளர் இள வஞ்சியின் மாய்தலும் ஆமே.
உரை  
16கூப்பிடு கொள்ளாக் குறுநரிக் கொட்டகத்து
ஆப்பு இடு பாசத்தை அங்கி உள் வைத்து இட்டு
நாள் பட நின்று நலம் புகுந்து ஆய் இழை
ஏற்பட இல்லத்து இனிது இருந்தானே.
உரை  
17மலை மேல் மழை பெய்ய மான் கன்று துள்ளக்
குலை மேல் இருந்த கொழும் கனி வீழ
உலை மேல் இருந்த உறுப்பு எனக் கொல்லன்
முலை மேல் அமிர்தம் பொழிய வைத்தானே.
உரை  
18பார்ப்பான் அகத்திலே பால் பசு ஐந்து உண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசு ஐந்தும் பாலாச் சொரியுமே.
உரை  
19ஆ மாக்கள் ஐந்தும் அரி ஏறு முப்பதும்
தே மா இரண்டொடு திப்பிலி ஒன்பதும்
தாமாக் குரங்கு கொளில் தம் மனத்து உள்ளன
மூவாக் கடா விடின் மூட்டு கின்றாரே.
உரை  
20எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத்
தெருளாத கன்னி தெளிந்து இருந்து ஓத
மலராத பூவின் மணத்தின் மதுவைப்
பிறவாத வண்டு மணம் உண்ட வாறே.
உரை  
21போகின்ற பொய்யும் புகுகின்ற பொய் வித்தும்
கூகின்ற நாவலின் கூழைத் தரும் கனி
ஆகின்ற பைங்கூழ் அவை உண்ணும் ஐவரும்
வேகின்ற கூரை விருத்தி பெற்றாரே.
உரை  
22மூங்கில் முளையில் எழுந்தது ஓர் வேம்பு உண்டு
வேம்பினில் சார்ந்து கிடந்த பனையில் ஓர்
பாம்பு உண்டு பாம்பைத் துரத்தின் பார் இன்றி
வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே.
உரை  
23பத்துப் பரும் புலி யானை பதினைந்து
வித்தகர் ஐவர் வினோதகர் ஈர் எண்மர்
அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்
அத்தலை ஐவர் அமர்ந்து நின்றாரே.
உரை  
24இரண்டு கடா உண்டு இவ்வூரின் உள்ளே
இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பன்
இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கில்
இரண்டு கடாவும் ஒரு கடா ஆமே.
உரை  
25ஒத்த மனக் கொல்லை உள்ளே சமன் கட்டிப்
பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்
முத்தக் கயிறு ஆக மூவர்கள் ஊரின் உள்
நித்தம் பொருது நிரம்ப நின்றாரே.
உரை  
26கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்
நாகையும் பூழும் நடுவில் உறைவன
நாகையைக் கூகை நணுகல் உறுதலும்
கூகையைக் கண்டு எலி கூப்பிடும் ஆறே.
உரை  
27குலைக்கின்ற நல் நகை ஆம் கொங்கு உழக்கின்
நிலைக்கின்ற வெள் எலி மூன்று கொணர்ந்தான்
உலைக்குப் புறம் எனில் ஓடும் இருக்கும்
புலைக்குப் பிறந்தவை போகின்ற ஆறே.
உரை  
28காடுபுக்கு ஆர் இனிக் காணார் கடு வெளி
கூடு புக்கான் அவை ஐந்து குதிரையும்
மூடுபுக்கு ஆனவை ஆறு உள ஒட்டகம்
மூடு புகா விடின் மூவணை ஆமே.
உரை  
29கூறையும் சோறும் குழாய் அகத்து எண்ணெயும்
காறையும் நாணும் வளையலும் கண்டவர்
பாறையில் உற்ற பறக்கின்ற சீலை போல்
ஆறைக் குழியில் அழுந்து கின்றாரே.
உரை  
30துருத்தியுள் அக்கரை தோன்று மலைமேல்
விருத்தி கண் காணிக்கப் போவார் முப்போதும்
வருத்தி உள் நின்ற மலையைத் தவிர்ப்பான்
ஒருத்தி உள்ளாள் அவர் ஊர் அறியோமே.
உரை  
31பருந்தும் கிளியும் படு பறை கொட்டத்
திருந்திய மாதர் திருமணப் பட்டார்
பெரும் தவப் பூதம் பெறல் உரு ஆகும்
இருந்திய பேற்றினில் இன்புறுவாரே.
உரை  
32கூடும் பறவை இரை கொத்தி மற்று அதன்
ஊடு புக்கு உண்டி அறுக்குறில் என் ஒக்கும்
சூடு எறி நெய் உண்டு மை கான்றிடு கின்ற
பாடு அறிவார்க்குப் பயன் எளிது ஆமே.
உரை  
33இலை இல்லை பூ உண்டு இன வண்டு இங்கு இல்லை
தலை இல்லை வேர் உண்டு தாள் இல்லை பூவின்
குலை இல்லை கொய்யும் மலர் உண்டு சூடும்
தலை இல்லை தாழ்ந்த கிளை புலராதே.
உரை  
34அக்கரை நின்றது ஓர் ஆல மரம் கண்டு
நக்கரை வாழ்த்தி நடுவே பயன் கொள்வார்
மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டு போய்த்
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே.
உரை  
35கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம்
காப்பு இடு கள்ளர் கலந்து நின்றார் உளர்
காப்பு இடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்து இட்டுக்
கூப்பிடு மீண்டது ஓர் கூரை கொண்டாரே.
உரை  
36கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்து இடை
எட்டியும் வேம்பும் இனியது ஓர் வாழையும்
கட்டியும் தேனும் கலந்து உண்ண மாட்டாதார்
எட்டிப் பழத்துக்கு இளைக்கின்ற வாறே.
உரை  
37பெடை வண்டும் ஆண் வண்டும் பீடிகை வண்ணக்
குடை கொண்ட பாசத்துக் கோலம் உண்டானும்
கடை வண்டு தான் உண்ணும் கண் கலந்து இட்ட
பெடை வண்டு தான் பெற்றது இன்பமும் ஆமே.
உரை  
38தட்டத்து நீரிலே தாமரை பூத்தது
குட்டத்து நீரில் குவளை எழுந்தது
விட்டத்தின் உள்ளே விளங்க வல்லார் கட்குக்
குட்டத்தில் இட்டது ஓர் கொம்மட்டி ஆமே.
உரை  
39ஆறு பறவைகள் ஐந்து அகத்து உள்ளன
நூறு பறவை நுனிக் கொம்பின் மேலன
ஏறும் பெரும் பதி ஏழும் கடந்த பின்
மாறுதல் இன்றி மனை புகல் ஆமே.
உரை  
40கொட்டனம் செய்து குளிக்கின்ற கூவல் உள்
வட்டனப் பூமி மருவி வந்து ஊறிடும்
கட்டனம் செய்து கயிற்றால் தொழுமி உள்
ஒட்டணம் செய்து ஒளி யாவர்க்கும் ஆமே.
உரை  
41ஏழு வளை கடல் எட்டுக் குலவரை
ஆழும் விசும்பினில் அங்கி மழை வளி
தாழும் இரு நிலம் தன்மை அது கண்டு
வாழ நினைக்கில் அது ஆலயம் ஆமே.
உரை  
42ஆலிங்கனம் செய்து அகம் சுடச் சூலத்துச்
சால் இங்கு அமைத்துத் தலைமை தவிர்த்தனர்
கோல் இங்கு அமைத்த பின் கூபப் பறவை கண்
மால் இங்கன் வைத்தது முன் பின் வழியே.
உரை  
43கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிது என்பர்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்
இட்டம் வலிது என்பர் ஈசன் அருளே.
உரை  
44கயல் ஒன்று கண்டவர் கண்டே இருப்பர்
முயல் ஒன்று கண்டவர் மூவரும் உய்வர்
பறை ஒன்று பூசல் பிடிப்பான் ஒருவன்
மறை ஒன்று கண்ட துருவம் பொன் ஆமே.
உரை  
45கோரை எழுந்து கிடந்த குளத்தினில்
ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது
நாரை படுகின்றாற் போல் அல்ல நாதனார்
பாரை கிடக்கப் படிகின்ற வாறே.
உரை  
46கொல்லை முக் காதமும் காடு அரைக் காதமும்
எல்லை மயங்கிக் கிடந்த இரு நெறி
எல்லை மயங்காது இயங்க வல்லார்கட்கு
ஒல்லை கடந்து சென்று ஊர் புகல் ஆமே.
உரை  
47உழவு ஒன்று வித்து ஒருங்கின காலத்து
எழு மழை பெய்யாது இரு நிலச் செவ்வி
தழுவி வினை சென்று தான் பய வாது
வழுவாது போவன் வளர் சடையோனே.
உரை  
48பதுங்கிலும் பாய் புலி பன்னிரு காதம்
ஒதுங்கிய தண் கடல் ஓதம் உலவ
மதுங்கிய வார் களியார் அமுது ஊறப்
பொதுங்கிய ஐவரைப் போய் வளைத் தானே.
உரை  
49தோணி ஒன்று ஏறித் தொடர்ந்து கடல் புக்கு
வாணிபம் செய்து வழங்கி வளர் மகன்
நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலை தளர்ந்து
ஆலிப் பழம் போல் அளிக்கின்ற அப்பே.
உரை  
50முக் காதம் ஆற்றிலே மூன்று உள வாழைகள்
செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன
பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர்
நக்கு மலர் உண்டு நடுவு நின்றாரே.
உரை  
51அடியும் முடியும் அமைந்தது ஓர் ஆத்தி
முடியும் நுனியும் கண் முத்தலை மூங்கில்
கொடியும் படையும் கோட்சரன் ஐ ஐந்து
மடியும் வலம்புரி வாய்த்தது அவ்வாறே.
உரை  
52பன்றியும் பாம்பும் பசு முசு வானரம்
தென்றி கிடந்த சிறு நரிக் கூட்டத்துக்
குன்றாமை கூடித் தராசின் நிறுத்த பின்
குன்றி நிறையைக் குறைக் கின்ற வாறே.
உரை  
53மொட்டித்து எழுந்தது ஓர் மொட்டு உண்டு மொட்டினைக்
கட்டு விட்டு ஓடின் மலர்தலும் காணலாம்
பற்று விட்டு அம்மனை பாழ் பட நோக்கினால்
கட்டு விட்டார்க்கு அன்றிக் காண ஒண்ணாதே.
உரை  
54நீர் இன்றிப் பாயும் நிலத்தினில் பச்சை ஆம்
யாவரும் என்றும் அறிய வல்லார் இல்லை
கூரு மழை பொழியாது பொழி புனல்
தேரின் இந் நீர்மை திடரில் நில்லாதே.
உரை  
55கூகை குருந்தம் அது ஏறிக் குணம் பயில்
மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து
நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்
பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே.
உரை  
56வாழையும் சூரையும் வந்து இடம் கொண்டன
வாழைக்குச் சூரை வலிது வலிது என்பர்
வாழையும் சூரையும் வன் துண்டம் செய்திட்டு
வாழை இடம் கொண்டு வாழ்கின்ற வாறே.
உரை  
57நிலத்தைப் பிளந்து நெடும் கடல் ஓட்டிப்
புனத்துக் குறவன் புணர்ந்த கொழு மீன்
விலக்குமின் யாவர்க்கும் வேண்டில் குறையாது
அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே.
உரை  
58தளிர்க்கும் ஒரு பிள்ளை தட்டான் அகத்தில்
விளிப்பது ஓர் சங்கு உண்டு வேந்தனை நாடிக்
களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்
அளிக்கும் பதத்து ஒன்று ஆய்ந்து கொள்வார்க்கே.
உரை  
59குடை விட்டுப் போந்தது கோயில் எருமை
படை கண்டு மீண்டது பாதி வழியில்
உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்
அடையா நெடும் கடை ஐந்தொடு நான்கே.
உரை  
60போகின்ற எட்டும் புகுகின்ற பத்து எட்டும்
ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டொடு நாலு புரவியும்
பாகன் விடா விடில் பன்றியும் ஆமே.
உரை  
61பாசி படர்ந்து கிடந்த குளத்து இடைக்
கூசி இருக்கும் குருகு இரை தேர்ந்து உண்ணும்
தூசி மறவன் துணை வழி எய்திடப்
பாசம் கிடந்து பதைக்கின்ற வாறே.
உரை  
62கும்ப மலைமேல் எழுந்தது ஓர் கொம்பு உண்டு
கொம்புக்கும் அப்பால் அடிப்பது ஓர் காற்று உண்டு
வம்பாய் மலர்ந்தது ஓர் பூ உண்டு அப் பூவுக்குள்
வண்டாய்க் கிடந்து மணம் கொள்வன் ஈசனே.
உரை  
63வீணையும் தண்டும் விரவி இசை முரல்
தாணுவும் மேவித் தகு தலைப் பெய்தது
வாணிபம் சிக் என்று அது அடையா முன்னம்
காணியும் அங்கே கலக்கின்ற வாறே.
உரை  
64கொங்கு புக்காரொடு வாணிபம் செய்தது
அங்கு புக்கால் அன்றி ஆய்ந்து அறிவார் இல்லை
திங்கள் புக்கால் இருள் ஆவது அறிந்திலர்
தங்கு புக்கார் சிலர் தாபதர் தாமே.
உரை  
65போதும் புலர்ந்தது பொன் நிறம் கொண்டது
தாது அவிழ் புன்னை தயங்கும் இரு கரை
ஏதம் இல் ஈசன் இயங்கு நெறி இது
மாதர் இருந்தோர் மண்டலம் தானே.
உரை  
66கோம் உற்று அமரும் குடிகளும் தம்மிலே
காம் உற்று அகத்து இடுவர் கடை தொறும்
ஈவற்ற எல்லை விடாது வழி காட்டி
யாம் உற்ற தட்டினால் ஐந்து உண்ணலாமே.
உரை  
67தோட்டத்தில் மாம் பழம் தொண்டி விழுந்தக்கால்
நாட்டின் புறத்தில் நரி அழைத்து என் செய்யும்
மூட்டிக் கொடுத்த முதல்வனை முன்னிட்டுக்
காட்டிக் கொடுத்தவர் கை விட்ட வாறே.
உரை  
68புலர்ந்தது போது என்று புட்கள் சிலம்பப்
புலர்ந்தது போது என்று பூங்கொடி புல்லிப்
புலம்பின் அவளொடும் போகம் நுகரும்
புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே.
உரை  
69போது இரண்டு ஓதிப் புரிந்து அருள் செய்திட்டு
மாது இரண்டு ஆகி மகிழ்ந்து உடனே நிற்கும்
தாது இரண்டு ஆகிய தண்ணம் பறவைகள்
வேது இரண்டு ஆகி வெறிக்கின்றவாறு அன்றே.
உரை  
70தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது
ஆணி மிதித்து நின்று ஐவர் கோல் ஊன்றலும்
வாணிபம் செய்வார் வழி இடை ஆற்று இடை
ஆணி கலங்கில் அது இது ஆமே.
உரை  

18. மோன சமாதி

1நின்றார் இருந்தார் கிடந்தார் என இல்லை
சென்றார் தம் சித்த மோன சமாதி
மன்றேயும் அங்கே மறைப் பொருள் ஒன்று
சென்று ஆங்கு அணைந்தவர் சேர்கின்ற வாறே.
உரை  
2காட்டும் குறியும் கடந்தவர் காரணம்
ஏற்றின் புறத்தில் எழுதி வைத்து என் பயன்
கூட்டும் குரு நந்தி கூட்டிடின் அல்லது
ஆட்டின் கழுத்தில் அதர் கிடந்து அற்றே.
உரை  
3உணர்வு உடையார் கட்கு உலகமும் தோன்றும்
உணர்வு உடையார் கட்கு உறுதுயர் இல்லை
உணர்வு உடையார்கள் உணர்ந்த அக்காலம்
உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே.
உரை  
1மறப்ப அதுவாய் நின்ற மாய நல் நாடன்
பிறப்பினை நீங்கிய பேர் அருளாளன்
சிறப்பு உடையான் திரு மங்கையும் தானும்
உறக்கம் இல் போகத்து உறங்கிடும் தானே.
உரை  
2துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர் சோதி
அரிய துரியம் அதில் மீது மூன்றாய்
விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே
இல் அநுபூதிகத்து உள்ளானே.
உரை  
3உருவு இலி ஊன் இலி ஊனம் ஒன்று இல்லி
திரு இலி தீது இலி தேவர்க்குத் தேவன்
பொருஇலி பூதப் படை உடையாளி
மரு இலி வந்து என் மனம் புகுந்தானே.
உரை  
4கண்டு அறிவார் இல்லைக் காயத்தின் நந்தியை
எண் திசை யோரும் இறைவன் என்று ஏத்துவர்
அண்டம் கடந்த அளவு இலா ஆனந்தத்
தொண்டர் முகந்த துறை அறியோமே.
உரை  
5தற்பரம் அல்ல சதாசிவன் தான் அல்ல
நிட்களம் அல்ல சகள நிலை அல்ல
அற்புதம் ஆகி அநுபோகக் காமம் போல்
கற்பனை இன்றிக் கலந்து நின்றானே.
உரை  
6முகத்தில் கண் கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தில் கண் கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய் தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல் என்றால் சொல்லும் ஆறு எங்ஙனே.
உரை  
7அப்பினில் உப்பு என அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பரா பரம் சேர் பரமும் விட்டுக்
கப்புறு சொற்பதம் ஆளக் கலந்தமை
எப்படி அப்படி என்னும் அவ்வாறே.
உரை  
8கண்டார்க்கு அழகு இது காஞ்சிரத்தின் பழம்
தின்றார்க்கு அறியலாம் அப்பழத்தின் சுவை
பெண்தான் நிரம்பி மடவியள் ஆனால்
கொண்டான் அறிவன் குணம் பல தானே.
உரை  
9நந்தி இருந்தான் நடுவுள் தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன
உந்தியின் உள்ளே உதித்து எழும் சோதியைப்
புந்தியினாலே புணர்ந்து கொண்டேனே.
உரை  
10விதறு படா வண்ணம் வேறு இருந்து ஆய்ந்து
பதறு படாதே பழ மறை பார்த்துக்
கதறிய பாழைக் கடந்த அந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்கு கின்றேனே.
உரை  
11வாடா மலர் புனை சேவடி வானவர்
கூடார் அற நெறி நாள்தொறும் இன்பு உறச்
சேடார் கமலச் செழும் சுடருள் சென்று
நாடார் அமுது உற நாடார் அமுதமே.
உரை  
12அதுக்கு என்று இருவர் அமர்ந்த சொல் கேட்டும்
பொதுக்கு எனக் காமம் புலப்படு மா போல்
சதுக்கு என்று வேறே சமைந்தாரைக் காண
மதுக் கொன்றைத் தாரான் வளம் தரும் அன்றே.
உரை  
13தானும் அழிந்து தனமும் அழிந்து நீடு
ஊனும் அழிந்து உயிரும் அழிந்து உடன்
வானும் அழிந்து மனமும் அழிந்து பின்
நானும் அழிந்தமை நான் அறியேனே.
உரை  
14இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்
பொருளில் பொருளாய்ப் பொருந்த உள் ஆகி
அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே
உருளாத கல் மனம் உற்று நின்றேனே.
உரை  
15ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றி நின்றே பல ஊழி கண்டேனே.
உரை  

19. வரை மாட்சி

1தான் வரை அற்ற பின் ஆரை வரைவது
தான் அவன் ஆன பின் ஆரை நினைவது
காமனை வென்ற கண்ணாரை உகப்பது
தூ மொழி வாசகம் சொல்லுமின் நீரே.
உரை  
2 அற்றது ஒன்றை செய்யும் ஊமர்காள்
கரை அற்றது ஒன்றைக் கரை காணல் ஆகுமோ
திரை அற்ற நீர் போல் சிந்தை தெளிவார்க்குப்
புரை அற்று இருந்தான் புரிசடை யோனே.
உரை  
3மன மாயை மாயை இம் மாயை மயக்க
மன மாயை தான் மாய மற்று ஒன்றும் இல்லை
பினை மாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா
தனைஆய்ந்து இருப்பது தத்துவம் தானே.
உரை  

20. அணைந்தோர் தன்மை

1மலம் இல்லை மாசு இல்லை மான அபிமானம்
குலம் இல்லை கொள்ளும் குணங்களும் இல்லை
நலம் இல்லை நந்தி ஞானத்தி னாலே
பல மன்னி அன்பில் பதித்து வைப்போர்க்கே.
உரை  
2ஒழிந்தேன் பிறவி உறவு என்னும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும் ஒன்று ஆனேன்
அழிந்து ஆங்கு இனிவரு மார்க்கமும் வேண்டேன்
செழும் சார்புடைய சிவனைக் கண்டேனே.
உரை  
3ஆலைக் கரும்பும் அமுதும் அக்காரமும்
சோலைத் தண்ணீரும் உடைத்து எங்கள் நாட்டு இடைப்
பீலிக் கண்ணன் அன்ன வடிவு செய்வாள் ஒரு
கோலப் பெண்ணாட்குக் குறை ஒன்றும் இல்லையே.
உரை  
4ஆராலும் என்னை அமட்ட ஒண்ணாது இனிச்
சீரார் பிரான் வந்து என் சிந்தை புகுந்தனன்
சீராடி அங்கே திரிவது அல்லால் இனி
யார் பாடும் சாரா அறிவு அறிந்தேனே.
உரை  
5பிரிந்தேன் பிரமன் பிணித்தது ஓர் பாசம்
தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை
அரிந்தேன் வினையை அயில் மன வாளால்
முரிந்தேன் புரத்தினை முந்து கின்றேனே.
உரை  
6ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வமும்
ஒன்று கண்டீர் உலகுக்கு உயிர் ஆவது
நன்று கண்டீர் நல் நமச்சிவாயப் பழம்
தின்று கண்டேற்கு இது தித்தித்த வாறே.
உரை  
7சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன்
வந்து என்னை ஆண்ட மணிவிளக்கு ஆனவன்
அந்தமும் ஆதியும் இல்லா அரும் பொருள்
சிந்தையின் மேவித் தியக்கு அறுத்தானே.
உரை  
8பண்டு எங்கள் ஈசன் நெடுமால் பிரமனைக்
கண்டு அங்கு இருக்கும் கருத்து அறிவார் இல்லை
விண்டு அங்கே தோன்றி வெறு மனம் ஆயிடில்
துண்டு அங்கு இருந்தோர் தூறது ஆமே.
உரை  
9அன்னையும் அத்தனும் அன்பு உற்றது அல்லது
அன்னையும் அத்தனும் ஆர் அறிவார் என்னை
அன்னையும் அத்தனும் யானும் உடன் இருந்து
அன்னையும் அத்தனை யான் புரந்தேனே.
உரை  
10கொண்ட சுழியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும்
எண் திசை யோரும் வந்து என் கைத் தலத்து உளே
உண்டனர் நான் இனி உய்ந்து ஒழிந்தேனே.
உரை  
11நமன் வரின் ஞான வாள் கொண்டே எறிவன்
சிவன் வரின் நான் உடன் போவது திண்ணம்
பவம் வரும் வல்வினை பண்டே அறுத்தேன்
தவம் வரும் சிந்தைக்குத் தான் எதிர் யாரே.
உரை  
12சித்தம் சிவமாய் மலம் மூன்றும் செற்றவர்
சுத்தச் சிவம் ஆவர் தோயார் மல பந்தம்
கத்தும் சிலுகும் கலகமும் கை காணார்
சத்தம் பரவிந்து தான் ஆம் என்று எண்ணியே.
உரை  
13நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினைப் பற்று அறுக்கும் விமலன் இருக்கும்
வினைப் பற்று அறுக்கும் விமலனைத் தேடி
நினைக்கப் பெறில் அவன் நீளியன் ஆமே.
உரை  
14சிவ பெருமான் என்று நான் அழைத்து ஏத்தத்
தவ பெருமான் என்று தான் வந்து நின்றான்
அவ பெருமான் என்னை ஆள் உடை நாதன்
பவ பெருமானைப் பணிந்து நின்றேனே.
உரை  
15பணிந்து நின்றேன் பரமாதி பதியைத்
துணிந்து நின்றேன் இனி மற்று ஒன்றும் வேண்டேன்
அணிந்து நின்றேன் உடல் ஆதிப் பிரானைத்
தணிந்து நின்றேன் சிவன் தன்மை கண்டேனே.
உரை  
16என் நெஞ்சம் ஈசன் இணை அடி தாம் சேர்ந்து
முன்னம் செய்து ஏத்த முழுதும் பிறப்பு அறும்
தன் நெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி
பின்னம் செய்து என்னைப் பிணக்கு அறுத்தானே.
உரை  
17பிணக்கு அறுத்தான் பிணி மூப்பு அறுத்து எண்ணும்
கணக்கு அறுத்து ஆண்டனன் காண் நந்தி என்னைப்
பிணக்கு அறுத்து என்னுடன் முன் வந்த துன்பம்
வணக்கல் உற்றேன் சிவம் வந்தது தானே.
உரை  
18சிவன் வந்து தேவர் குழாம் உடன் கூடப்
பவம் வந்திட நின்ற பாசம் அறுத்திட்டு
அவன் எந்தை ஆண்டு அருள் ஆதிப் பெருமான்
அவன் வந்து என் உள்ளே அகப்பட்ட வாறே.
உரை  
19கரும்பும் தேனும் கலந்த ஓர் காயத்தில்
அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளி உறக் கண்டபின்
கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே.
உரை  
20உள்ள சரி ஆதி ஒட்டியே மீட்டு என்பால்
வள்ளல் அருத்தியே வைத்த வளம் பாடிச்
செய்வன எல்லாம் சிவம் ஆகக் காண்டலால்
கை வளம் இன்றிக் கருக் கடந்தேனே.
உரை  
21மீண்டார் கமலத்து உள் அங்கி மிகச் சென்று
தூண்டா விளக்கின் தகளி நெய் சோர்தலும்
பூண்டாள் ஒருத்தி புவன சூடா மணி
மாண்டான் ஒருவன் கை வந்தது தானே.
உரை  
22அன்பு உள் உருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப் பகல் ஏத்துவன்
என் பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே.
உரை  
23மனம் விரிந்து குவிந்தது மாதவ
மனம் விரிந்து குவிந்தது வாயு
வனம் விரிந்து குவிந்தது மன் உயிர்
மனம் விரிந்து மாண்டது முத்தியே.
உரை  

21. தோத்திரம்

1மாயனை நாடி மன நெடும் தேர் ஏறிப்
போயின நாடு அறியாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்து எங்கள் செல்வனைக்
காயமின் நாட்டிடைக் கண்டு கொண்டேனே.
உரை  
2மன்னும் மலைபோல் மத வாரணத்தின் மேல்
இன்னிசை பாட இருந்தவர் ஆர் எனில்
முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப்
பன்னினர் என்றே பாடு அறிவீரே.
உரை  
3முத்தினின் முத்தை முகிழ் இள ஞாயிற்றை
எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை
அத்தனைக் காணாது அரற்று கின்றேன் ஏனையோர்
பித்தன் இவன் என்று பேசு கின்றாரே.
உரை  
4புகுந்து நின்றான் எங்கள் புண்ணிய மூர்த்தி
புகுந்து நின்றான் எங்கள் போதறி வாளன்
புகுந்து நின்றான் அடியார் தங்கள் நெஞ்சம்
புகுந்து நின்றானையே போற்று கின்றேனே.
உரை  
5பூதக் கண்ணாடியில் புகுந்திலன் போதுளன்
வேதக் கண்ணாடியில் வேறே வெளிப்படு
நீதிக் கண்ணாடி நினைவார் மனத்து உளன்
கீதக் கண்ணாடியில் கேட்டு நின்றேனே.
உரை  
6நாமம் ஓர் ஆயிரம் ஓதுமின் நாதனை
ஏமம் ஓர் ஆயிரத்து உள்ளே இசைவீர்கள்
ஓமம் ஓர் ஆயிரம் ஓத வல்லார் அவர்
காமம் ஓர் ஆயிரம் கண்டு ஒழிந்தாரே.
உரை  
7நானாவிதம் செய்து நாடுமின் நந்தியை
ஊனார் கமலத்தின் ஊடு சென்று அப்புறம்
வானோர் உலகம் வழிப் பட மீண்டபின்
தேன் ஆர உண்டு தெவிட்டலும் ஆமே.
உரை  
8வந்து நின்றான் அடியார் கட்கு அரும் பொருள்
இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும்
சுந்தர மாதர் துழனி ஒன்று அல்லது
அந்தர வானத்தின் அப்புறம் ஆமே.
உரை  
9மண்ணில் கலங்கிய நீர் போல் மனிதர்கள்
எண்ணில் கலங்கி இறைவன் இவன் என்னார்
உண்ணில் குளத்தின் முகந்து ஒருபால் வைத்துத்
தெண்ணில் படுத்த சிவன் அவன் ஆமே.
உரை  
10மெய்த் தவத்தானை விரும்பும் ஒருவர்க்குக்
கைத் தலம் சேர்தரு நெல்லிக் கனி ஒக்கும்
சுத்தனைத் தூய் நெறியாய் நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந்து ஒழிந்தேனே.
உரை  
11அமைந்து ஒழிந்தேன் அளவு இல் புகழ் ஞானம்
சமைந்து ஒழிந்தேன் தடு மாற்றம் ஒன்று இல்லை
புகைந்து எழும் பூதலம் புண்ணியன் நண்ணி
வகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே.
உரை  
12வள்ளல் தலைவனை வான நல் நாடனை
வெள்ளப் புனல் சடை வேத முதல்வனைக்
கள்ளப் பெருமக்கள் காண்பர் கொலோ என்று
உள்ளத்தின் உள்ளே ஒளித்து இருந்து ஆளுமே.
உரை  
13ஆளும் மலர்ப் பதம் தந்த கடவுளை
நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர்
கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்
வாளும் மனத் தொடும் வைத்து ஒழிந்தேனே.
உரை  
14விரும்பில் அவன் அடி வீர சுவர்க்கம்
பொருந்தில் அவன் அடி புண்ணிய லோகம்
திருந்தில் அவன் அடி தீர்த்தமும் ஆகும்
வருந்தி அவன் அடி வாழ்த்த வல்லார்க்கே.
உரை  
15வானகம் ஊடு அறுத்தான் இவ் உலகினில்
தானகம் இல்லாத் தனி ஆகும் போதகன்
கானக வாழைக் கனி நுகர்ந்து உள் உறும்
பானகச் சோதியைப் பற்றி நின்றேனே.
உரை  
16விதி அது மேலை அமரர் உறையும்
பதி அது பாய் புனல் கங்கையும் உண்டு
துதி அது தொல்வினைப் பற்று அறுவிக்கும்
பதி அது அவ்விட்ட அந்தமும் ஆமே.
உரை  
17மேல் அது வானவர் கீழ் அது மாதவர்
தான் இடர் மானுடர் கீழ் அது மாதனம்
கான் அது கூவிள மாலை கமழ் சடை
ஆனது செய்யும் எம் ஆர் உயிர் தானே.
உரை  
18சூழும் கருங் கடல் நஞ்சு உண்ட கண்டனை
ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பு இலி
யாழும் சுனையும் அடவியும் அங்கு உளன்
வாழும் எழுத்து ஐந்து மன்னனும் ஆமே.
உரை  
19உலகம் அது ஒத்து மண் ஒத்து உயர் காற்றை
அலர் கதிர் அங்கி ஒத்து ஆதிப் பிரானும்
நிலவிய மா முகில் நீர் ஒத்து மீண்டச்
செலவு ஒத்து அமர் திகைத் தேவர் பிரானே.
உரை  
20பரிசு அறிந்து அங்கு உளன் அங்கி அருக்கன்
பரிசு அறிந்து அங்கு உளன் மாருதத்து ஈசன்
பரிசு அறிந்து அங்கு உளன் மாமதி ஞானப்
பரிசு அறிந்து தன்னிலம் பாரிக்கும் ஆறே.
உரை  
21அந்தம் கடந்தும் அது அதுவாய் நிற்கும்
பந்த உலகினில் கீழோர் பெரும் பொருள்
தந்த உலகு எங்கும் தானே பராபரன்
வந்து படைக்கின்ற மாண்பு அது ஆமே.
உரை  
22முத்தண்ட வீரண்டமே முடி ஆயினும்
அத்தன் உருவம் உலகு ஏழ் எனப்படும்
அத்தனின் பாதாளம் அளவு உள்ள சேவடி
மத்தர் அதனை மகிழ்ந்து உணராரே.
உரை  
23ஆதிப் பிரான் நம் பிரான் அவ் அகல் இடச்
சோதிப் பிரான் சுடர் மூன்று ஒளியாய் நிற்கும்
ஆதிப் பிரான் அண்டத்து அப்புறம் கீழ் அவன்
ஆதிப் பிரான் நடு ஆகி நின்றானே.
உரை  
24அண்டம் கடந்து உயர்ந்து ஓங்கும் பெருமையன்
பிண்டம் கடந்த பிறவிச் சிறுமையன்
தொண்டர் நடந்த கனை கழல் காண் தொறும்
தொண்டர்கள் தூய் நெறி தூங்கி நின்றானே.
உரை  
25உலவு செய் நோக்கம் பெரும் கடல் சூழ
நில முழுது எல்லா நிறைந்தனன் ஈசன்
பல முழுது எல்லாம் படைத்தனன் முன்னே
புலம் உழு பொன் நிறம் ஆகி நின்றானே.
உரை  
26பரா பரன் ஆகிப் பல் ஊழிகள் தோறும்
பரா பரன் ஆய் இவ் அகல் இடம் தாங்கித்
தரா பரன் ஆய் நின்ற தன்மை உணரார்
நிரா பரன் ஆகி நிறைந்து நின்றானே.
உரை  
27போற்றும் பெரும் தெய்வம் தானே பிறர் இல்லை
ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்
வேற்று உடல் தான் என்றது பெரும் தெய்வம் ஆம்
காற்றது ஈசன் கலந்து நின்றானே.
உரை  
28திகை அனைத்தும் சிவனே அவன் ஆகின்
மிகை அனைத்தும் சொல்ல வேண்டா மனிதரே
புகை அனைத்தும் புறம் அங்கியில் கூடு
முகைஅனைத்தும் எங்கள் ஆதிப் பிரானே.
உரை  
29கலை ஒரு மூன்றும் கடந்து அப்பால் நின்ற
தலைவனை நாடுமின் தத்துவ நாதன்
விலை இல்லை விண்ணவ ரோடும் உரைப்பன்
நரை இல்லை உள்ளுறும் உள்ளவன் தானே.
உரை  
30படிகால் பிரமன் செய் பாசம் அறுத்து
நெடியான் குறுமை செய் நேசம் அறுத்துச்
செடியார் தவத்தினில் செய் தொழில் நீக்கி
அடியேனை உய்ய வைத்து அன்பு கொண்டானே.
உரை  
31ஈசன் என்று எட்டுத் திசையும் இயங்கின
ஓசையினின்று எழு சத்தம் உலப்பு இலி
தேசம் ஒன்று ஆங்கே செழும் கண்டம் ஒன்பதும்
வாச மலர் போல் மருவி நின்றானே.
உரை  
32இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம் இறை
கல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன்
தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய் மணி
சொல் அரும் சோதி தொடர்ந்து நின்றானே.
உரை  
33உள்ளத்து ஒடுங்கும் புறத்து உளும் நான் எனும்
கள்ளத் தலைவன் கமழ் சடை நந்தியும்
வள்ளல் பெருமை வழக்கம் செய்வார்கள் தம்
அள்ளல் கடலை அறுத்து நின்றானே.
உரை  
34மாறு எதிர் வானவர் தானவர் நாள் தொறும்
கூறுதல் செய்து குரை கழல் நாடுவர்
ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறத்துளும்
வேறு செய்து ஆங்கே விளக்கு ஒளி ஆமே.
உரை  
35விண்ணிலும் வந்த வெளி இலன் மேனியன்
கண்ணிலும் வந்த புலன் அல்லன் காட்சியன்
பண்ணினில் வந்த பயன் அல்லன் பான்மையன்
எண் இல் ஆனந்தமும் எங்கள் பிரானே.
உரை  
36உத்தமன் எங்கும் உகக்கும் பெரும் கடல்
நித்திலச் சோதியன் நீலக் கருமையன்
எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனைச்
சித்தர் அமரர்கள் தேர்ந்து அறியாரே.
உரை  
37நிறம் பல எவ் வண்ணம் அவ் வண்ணம் ஈசன்
அறம் பல எவ் வண்ணம் அவ் வண்ணம் இன்பம்
மறம் பல எவ் வண்ணம் அவ் வண்ணம் பாவம்
புறம் பல காணினும் போற்ற கிலாரே.
உரை  
38இங்கு நின்றான் அங்கு நின்றனன் எங்கு உளன்
பொங்கி நின்றான் புவனா பதி புண்ணியன்
கங்குல் நின்றான் கதிர் மா மதி ஞாயிறு
எங்கும் நின்றான் மழை போல் இறை தானே.
உரை  
39உணர்வு அது வாயுமே உத்தமம் ஆயும்
உணர்வு அது நுண் அறிவு எம் பெருமானைப்
புணர்வு அது வாயும் புல்லியது ஆயும்
உணர் உடல் அண்டமும் ஆகி நின்றானே.
உரை  
40தன் வலியால் உலகு ஏழும் தரித்தவன்
தன் வலியாலே அணுவினும் தான் ஒய்யன்
தன் வலியான் மலை எட்டினும் தான் சாரான்
தன் வலியாலே தடம் கடல் ஆமே.
உரை  
41ஏனோர் பெருமையன் ஆகிலும் எம் இறை
ஊனே சிறுமையுள் உள் கலந்து அங்கு உளன்
வானோர் அறியும் அளவு அல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே.
உரை  
42பிண்டால் அம் வித்தில் எழுந்த பெருமுளைக்கு
உண்டால் அம் காயத்துக் குதிரை பழுத்தது
உண்டனர் உண்டார் உணர்வு இலா மூடர்கள்
பிண்டத்து உட்பட்டுப் பிணங்கு கின்றார்களே.
உரை  

22. சர்வ வியாபி

1ஏயும் சிவ போகம் ஈது அன்றி ஓர் ஒளி
ஆயும் அறிவையும் மாயா உபாதியால்
ஏய பரிய புரியும் தனது எய்தும்
சாயும் தனது வியா பகம் தானே.
உரை  
2நான் அறிந்த அப் பொருள் நாட இடம் இல்லை
வான் அறிந்து அங்கே வழியுற விம்மிடும்
ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர்
தான் அறிந்து எங்கும் தலைப் படல் ஆமே.
உரை  
3கடல் இடை வாழ்கின்ற கௌவை உலகத்து
உடல் இடை வாழ்வு கொண்டு உள் ஒளி நாடி
உடல் இடை வைகின்ற உள் உறு தேவனைக்
கடலின் மலி திரைக் காணலும் ஆமே.
உரை  
4பெரும் சுடர் மூன்றினும் உள் ஒளி ஆகித்
தெரிந்து உடலாய் நிற்கும் தேவர் பிரானும்
இரும் சுடர் விட்டிட்டு இகல் இடம் எல்லாம்
பரிந்து உடன் போகின்ற பல் கோரை ஆமே.
உரை  
5உறுதியின் உள் வந்த உள் வினைப் பட்டு
இறுதியின் வீழ்ந்தார் இரணம் அது ஆகும்
சிறுதியின் உள் ஒளி திப்பிய மூர்த்தி
பெறுதியின் மேலோர் பெரும் சுடர் ஆமே.
உரை  
6பற்றின் உள்ளே பரம் ஆய பரம் சுடர்
முற்றினும் முற்றி முளைக் கின்ற மூன்று ஒளி
நெற்றியின் உள்ளே நினைவாய் நிலை தரு
மற்றவன் ஆய் நின்ற மாதவன் தானே.
உரை  
7தேவனும் ஆகும் திசை திசை பத்துளும்
ஏவனும் ஆம் விரி நீர் உலகு ஏழையும்
ஆவனும் ஆம் அமர்ந்து எங்கும் உலகினும்
நாவனும் ஆகி நவிற்று கின்றானே.
உரை  
8நோக்கும் கருடன் நொடி ஏழ் உலகையும்
காக்கும் அவனித் தலைவனும் அங்கு உள
நீக்கும் வினை என் நிமலன் பிறப்பு இலி
போக்கும் வரவும் புணர வல்லானே.
உரை  
9செழும் சடையன் செம்பொனே ஒக்கும் மேனி
ஒழிந்தன வாயு ஒருங்குடன் கூடும்
கழிந்திலன் எங்கும் பிறப்பு இலன் ஈசன்
ஒழிந்திலன் ஏழு உலகு ஒத்து நின்றானே.
உரை  
10புலமையின் நாற்றம் இல் புண்ணியன் எந்தை
நலமையின் ஞான வழக்கமும் ஆகும்
விலமையில் வைத்துள வேதியர் கூறும்
பலமையில் எங்கும் பரந்து நின்றானே.
உரை  
11விண்ணவன் ஆய் உலகு ஏழுக்கும் மேல் உளன்
மண்ணவன் ஆய் வலம் சூழ் கடல் ஏழுக்கும்
தண்ணவன் ஆய் அது தன்மையின் நிற்பது ஓர்
கண்ணவன் ஆகிக் கலந்து நின்றானே.
உரை  
12நின்றனன் மாலொடு நான் முகன் தான் ஆகி
நின்றனன் தான் நிலம் கீழொடு மேல் என
நின்றனன் தான் நெடு மால் வரை ஏழ் கடல்
நின்றனன் தானே வளம் கனி ஆயே.
உரை  
13புவனா பதி மிகு புண்ணியன் எந்தை
அவனே உலகில் அடர் பெரும் பாகன்
அவனே அரும் பல சீவனும் ஆகும்
அவனே இறை என மால் உற்ற வாறே.
உரை  
14உள் நின்று ஒளிரும் உலவாப் பிராணனும்
விண் நின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும்
மண் நின்று இயங்கும் வாயுவும் ஆய் நிற்கும்
கண் நின்று இலங்கும் கருத்தவன் தானே.
உரை  
15எண்ணும் எழுத்தும் இனம் செயல் அவ்வழிப்
பண்ணும் திறனும் படைத்த பரமனைக்
கண்ணில் கவரும் கருத்தில் அது இது
உள் நின்று உருக்கி ஓர் ஆயமும் ஆமே.
உரை  
16இருக்கின்ற எண் திசை அண்டம் பாதாளம்
உருக்கொடு தன் நடு ஓங்க இவ் வண்ணம்
கருக்கொடு எங்கும் கலந்து இருந்தானே
திருக் கொன்றை வைத்த செழும் சடையானே.
உரை  
17பலவுடன் சென்ற அப் பார் முழுது ஈசன்
செலவு அறிவார் இல்லை சேயன் அணியன்
அலைவு இலன் சங்கரன் ஆதி எம் ஆதி
பல இலது ஆய் நிற்கும் பான்மை வல்லானே.
உரை  
18அது அறிவு ஆனவன் ஆதிப் புராணன்
எது அறியா வகை நின்றவன் ஈசன்
பொது அது ஆன புவனங்கள் எட்டும்
இது அறிவான் நந்தி எங்கள் பிரானே.
உரை  
19நீரும் நிலனும் விசும்பு அங்கி மாருதம்
தூரும் உடம்பு உறு சோதியும் ஆய் உளன்
பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம் இறை
ஊரும் சகலன் உலப்பு இலி தானே.
உரை  
வாழ்த்து
1வாழ்கவே வாழ்க என் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலம் அறுத்தான் பதம்
வாழ்கவே வாழ்க மெய்ஞ் ஞானத்தவன் தாள்
வாழ்கவே வாழ்க மலம் இலான் பாதமே.
உரை