வித்தகம் - சொல்லாய்வு

வித்தகம்
vittakam n. vitta-ka. 
1.Knowledge, wisdom; ஞானம். 
2. Learning;கல்வி. (அரு. நி.) 
3. See வித்தம்¹, 3. (பிங்.) 
4.A hand-pose. See சின்முத்திரை. வித்தகந் தரித்தசெங்கை விமலையை (கம்பரா. காப்பு.)

வித்தகம்
vittakam n. vidagdha. 
1.Skill, ability; சாமர்த்தியம். வித்தகமும் விதிவசமும்வெவ்வேறே புறங்கிடப்ப (கம்பரா. கார்முக. 19). 
2.Accomplishment; perfection; திருத்தம். வித்தகத்தும்பை விளைத்ததால் (பரிபா. 9, 68). 
3. Wonder;அதிசயம். (நாமதீப. 643.) 
4. Greatness; பெருமை.(அரு. நி.) 
5. Goodness; நன்மை. (யாழ். அக.)
6. Regularity, as of form; symmetry; வடிவின்செம்மை. நூல் புடைத்தாற் போற்கிடந்த வித்தகஞ்சேர் வரிகள் (சீவக. 1044). 
7. cf. vyakta. Fine,artistic work; minute workmanship; சிற்பம் முதலிய சிறந்த கைத்தொழில். குத்துமுளை செறித்தவித்தக விதானத்து (பெருங். இலாவாண. 5, 24).

வித்தகம்
vittakam s. knowledge, wisdom, ஞானம்.
வித்தகன், a wise man.


வித்தகம்
vittakam
s. Knowledge, ஞானம்.
வித்தகர், s. Artificers, கம்மாளர். 
2. Messengers, தூதர். (சது.)
வித்தகன், s. A knowing one, ஞானி. 
2. B'hairava, வைரவன். (சது.)

ஊழி தோறூழி - சொல்லாய்வு

ஊழி
(பெ) 1. நெடுங்காலம், 
2. வாழ்நாள், 
3. யுகம், 
4. விதி 
 
ūḻi n. ஊழ்²-. 
1. Time of universaldeluge and destruction of all things, end of theworld; பிரளயத்தால் உலகம் முடியுங் காலம் (சீவக.1157.) 
2. Aeon; யுகம் பண்டை யூழியிற் பார்மலிவுற்றதே (சீவக. 2581). 
3. Very long time; நெடுங்காலம் ஊழிவாழ்கென்று (பு. வெ 8, 7). 
4. Life-time; வாழ்நாள் அன்ன வாக நின்னூழி (புறநா. 135). 
5. [M. ūḻi.] World; உலகம் ஊழியேழான வொருவா போற்றி (தேவா. 1160, 8). 
6. Fate; விதி நல்லூழிச் செல்வம்போல் (கலித். 130). 
7. Regularorder; முறைமை தீந்தேனூழி வாய்க்கொண்ட தொக்கும் பாடலும் (சீவக. 2974). 
 
 1. s. a long period of time, eternity, நெடுங்காலம்; 
2. the end of the world, யுகமுடிவு; 
3. a demon, பிசாசம்; 
4. world, உலகம்; 
5. fate, விதி. 
 
1. நீடூழி வாழ்க, may you live long.
2. உனக்கூழிவர, may you die of a pestilence.
3. ஊழிக்காய்ச்சல், ஊழிநோய், pestilence, an epidemic supposed to be produced by a malignant demon. 
 
1. ஊழிக்காற்று, ஊழிக்கால், a destructive wind that prevails at the end of the world; 
2. a demon that causes pestilence. ஊழித்தீ, submarine fire, வடவை.


1. s. The periodical termination of a great age, or the time of the univer sal deluge and destruction of all things, the end of the world, உகமுடிவு. 
2. A very long time, நெடுங்காலம். 
3. (p.) Life time, உறைகாலம். 
4. The earth, பூமி. ஊழிபெயரினுங்கலங்காருரவோர். Though the world should come to an end, the sages will not deviate from their purposes.  

 

1. ஊழியுள்ளளவும். Through all eternity, lit. to the end of an age.  
உனக்கூழிவர. may you die--an impre cation.  
2. நீடுழிவாழ்க. May you live long.
3. ஊழிகாலம், s. A very long time, ages without number, நெடுங்காலம். (சத. 2.)
4. ஊழிக்காய்ச்சல், s. An epidemic fever, or pestilence supposed to be produced by a malignant demon, தொத்து சுரம்.
5. ஊழிக்காற்று, s. A destructive wind that prevails at the end of the world, யுகமுடிவிலுண்டாகுங்காற்று. 
6. A de mon, or bad vapor that causes epidemic diseases, pestilence, &c., விஷக்காற்று.  
7. ஊழித்தீ, s. The deluge, or sub marine fire, usually described as a mare dwelling in the sea and breath ing fire, by which, at the end of every quadruple age, the fire is consumed, வட வைத்தீ. 
8. ஊழிநீர், s. The water which pre vails at the last deluge, described as rain poured down from the seven species of clouds united, also as the water of the circumfluent sea, உலகமுடிவிலுண்டாகுஞ்ச லப்பிரளயம்.
9. ஊழிநோய், s. A pestilence in duced by a malignant demon, தொத்து வியாதி.
10. ஊழியூழிகாலம், s. From age to age, eternity

 

ஊழி தோறூழி - இவ்வாறு சில பொழிப்புரைகள் கொடுக்கப்பட்டுள்ளது - சரியா பிழையா?  

பாடல் #1458: ஐந்தாம் தந்திரம் – 7. யோகம் (இறைவனை அடைவதற்கு அசையாத மனதுடன் செய்வதே யோகம் ஆகும்

ஊழி தோறூழி யுணர்ந்தவர்க் கல்லது
யூழி தோறூழி யுணரவுந் தானொட்டா
ராழி யமரு மரியய னென்றுளோ
ரூழி முயன்று மோருச்சியுள் ளானே. 
 
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஊழி தொறூழி யுணரநதவரக கலலது
யூழி தொறூழி யுணரவுந தானொடடா
ராழி யமரு மரியய னெனறுளொ
ரூழி முயனறு மொருசசியுள ளானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஊழி தோறும் ஊழி உணர்ந்தவர்க்கு அல்லது
ஊழி தோறும் ஊழி உணரவும் தான் ஒட்டார்
ஆழி அமரும் அரி அயன் என்று உளோர்
ஊழி முயன்றும் ஓர் உச்சி உள்ளானே.

பதப்பொருள்
ஊழி (ஊழிக்காலம்) தோறும் (ஒவ்வொன்றிலும்) ஊழி (ஊழியாக இருந்து அனைத்தையும் அழித்து மீண்டும் உருவாக்குகின்ற இறைவனை) உணர்ந்தவர்க்கு (யோகத்தின் வழியால் சென்று தமக்குள் உணர்ந்தவர்களை) அல்லது (தவிர வேறு யாராலும் உணர இயலாது) ஊழி (ஊழிக்காலம்) தோறும் (ஒவ்வொன்றிலும்) ஊழி (ஊழியாக இருந்து அனைத்தையும் அழித்து மீண்டும் உருவாக்குகின்ற இறைவனை) உணரவும் (தமக்குள் உணர்ந்து கொண்ட யோகியர்கள்) தான் (அந்த ஊழிக்காலத்தோடு தானும்) ஒட்டார் (ஒட்டாமல் விலகி இறைவனை மட்டுமே சார்ந்து இருப்பார்கள்) ஆழி (பாற் கடலில்) அமரும் (பள்ளி கொண்டு அமர்ந்து இருக்கும்) அரி (திருமால்) அயன் (அவரது தொப்புள் கொடியில் இருக்கும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மன்) என்று (என்று இருக்கின்ற) உளோர் (தெய்வங்களும் ஊழிக்காலத்தோடு ஒட்டாமல் இருக்கின்றார்கள்) ஊழி (ஊழிக்காலம்) முயன்றும் (எவ்வளவுதான் இவர்களை அழிக்க முயற்சி செய்தாலும்) ஓர் (அதனால் அழிக்க முடியாத ஒரு மாபெரும்) உச்சி (உயரத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கின்ற அரனாக) உள்ளானே (இறைவன் இருக்கின்றான்).

விளக்கம்: ஊழிக்காலம் ஒவ்வொன்றிலும் ஊழியாக இருந்து அனைத்தையும் அழித்து மீண்டும் உருவாக்குகின்ற இறைவனை யோகத்தின் வழியால் சென்று தமக்குள் உணர்ந்தவர்களை தவிர வேறு யாராலும் உணர இயலாது. ஊழிக்காலம் ஒவ்வொன்றிலும் ஊழியாக இருந்து அனைத்தையும் அழித்து மீண்டும் உருவாக்குகின்ற இறைவனை தமக்குள் உணர்ந்து கொண்ட யோகியர்கள் அந்த ஊழிக்காலத்தோடு தானும் ஒட்டாமல் விலகி இறைவனை மட்டுமே சார்ந்து இருப்பார்கள். பாற் கடலில் பள்ளி கொண்டு அமர்ந்து இருக்கும் திருமால் அவரது தொப்புள் கொடியில் இருக்கும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மன் என்று இருக்கின்ற தெய்வங்களும் ஊழிக்காலத்தோடு ஒட்டாமல் இருக்கின்றார்கள். ஊழிக்காலம் எவ்வளவுதான் இவர்களை அழிக்க முயற்சி செய்தாலும் அதனால் அழிக்க முடியாத ஒரு மாபெரும் உயரத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கின்ற அரனாக இறைவன் இருக்கின்றான்.

கருத்து: பாடல் #1457 இல் உள்ளபடி யோகம் செய்து தமக்குள் இறைவனை உணர்ந்து அவனை மட்டுமே சார்ந்து இருக்கின்றவர்களை ஊழிக்காலம் எவ்வளவு முயன்று பார்த்தாலும் அழிக்க முடியாத அளவு பாதுகாக்கின்றான் இறைவன். 
 
ஒன்றா வுலகனைத்து மானார் தாமே
ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே
நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே
நீர்வளிதீ யாகாச மானார் தாமே
கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே
கோலப் பழனை உடையார் தாமே
சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே 
 
பொருள்: தாமே கலந்து உலகங்கள் யாவும் ஆனவரும், ஊழிகள் தோறும் பல உயிர்களை வீடேற்றி உயர்ந்தவரும், ஒருநிலையே நின்று எல்லா இடங்கட்கும் உரியவராய்ப் பரந்தவரும், நீரும் வளியும் தீயும் ஆகாசமுமாகி நின்றவரும், கொன்று திரிகின்ற கூற்றுவனை உதைத்தவரும், அழகிய பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், தேடிச்சென்று மூழ்கும் தீர்த்தங்கள் ஆனவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார்.

பூசனை - சொல்லாய்வு

பூசனை என்பது அன்றாட வழிபாடு எனப் பொருள்படும்.

காமக்கிழத்தியர் - சொல்லாய்வு

காமக்கிழத்தியர் என்பவர் சங்க காலச் சமூகத்தில் தலைவன், காதலால் தலைவியைத் திருமணம் செய்து கொண்ட பின்பும் காமம் காரணமாக உரிமை கொடுத்து மணந்து கொள்ளப்பட்ட பெண்கள் ஆவர் . "கிழமை" என்பது உரிமை என்ற பொருள்படும். 

இல்லக்கிழத்தியர் + காமக்கிழத்தியர் + பரத்தையர் = பண்டைச் சமூகம்

அரன் - சொல்லாய்வு

 அரன்’ தீவினைகளை அரிப்பவன்

அரன் என்னும் பெயர் அடியார் வினைகளை அரித்தல் அல்லது அராவுதல் பற்றி வந்தது.
சொல் பொருள் விளக்கம்

(1) ‘அரன்’ தீவினைகளை அரிப்பவன். இச்சொல் தமிழ் வடமொழி இரண்டற்கும் பொது. (திருவாசக விரிவுரை. மறைமலை. 92.)

(2) அரன் என்னும் பெயர் அடியார் வினைகளை அரித்தல் அல்லது அராவுதல் பற்றி வந்தது. தமிழில் இருந்து வட மொழிக்கட் சென்ற சொற்களுள் இதுவும் ஒன்று. (திருவாசக விரிவுரை. மறைமலை. 390.)

பகவர் - சொல்லாய்வு

 முக்கோல் பகவர் என்பவர்கள் ‘உள்ளம், மெய், நா’ ஆகியவற்றை அடக்கியவர்கள்.  கலித்தொகை 126 

 முக்கோல் கொள் அந்தணர், முல்லைப்பாட்டு 38 

கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல்.  நச்சினார்க்கினியர் உரை – ‘அரி, அயன், அரன் என்னும் மூவரும் ஒருவர் என்று சொல்லுதல் தன்னிடத்தே அமைந்த முக்கோல்’.

பகவர் என்கிற சொல்  - அடியார், மனிதர் என்கிற பொருளில் இவைகளில் கையாளப் பட்டுள்ளது 


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு - குறள் 1 

இங்கே பகவன் என்பது பகவானின் இடைக்குறை என்பர். ஆனால் பகவர் மற்றும் பகவன் இரண்டும் ஒரே பொருளுடையவை. இரண்டும் இறை அடியாரை அல்லது மனிதரை குறிக்கும் சொல். 

அழிதகவு - சொல்லாய்வு

அகநானூற்றில் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிகண்ணனார் பாடல் ‘அழி தகவு’ எனும் சொல்லை ஆண்டுள்ளது. அழிதகவு என்றால் வருந்துதல் என்று பொருள் சொல்கிறார் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார். 

அகநானூற்றில் ஓரம்போகியார் பாடல் ‘தற்தகவு’ என்ற சொல் தருகிறது. தன் தகவு என்பதே புணர்ச்சி விதிகளின்படி தற்தகவு ஆகிறது. தற்தகவு என்றால் தன் தகுதி என்று பொருள். தன் தகுதி என்ன என்று அறியாமல், அல்லது அபரிமிதமான மதிப்பீடு வைத்துக்கொண்டு சமூகப் பெருந்திரு என்று தம்மை நினைத்துக் கொள்பவர்கள் மக்களை மந்தை என்றெண்ணி அறிவுரையாக அருளிக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் ஐங்குறுநூறு நூலில் முல்லைத்திணை பாடும் பேயனார், பாணன் பத்து முதற்பாடலில் “என் அவர் தகவே?” என்று கேட்கிறார். அவனது தகுதி என்ன என்பது பொருள். அடியாட்களும் குண்டர்களும் தரகர்களுமே இன்றைய தகவுகள்.

கலித்தொகையில் மருதக்கலி பாடிய மருதன் இளநாகனார், காமக் கிழத்தி கூற்றாகக் கூறுகிறார், ‘தாழ்ந்தாய் போல் வந்து தகவில செய்யாது’ என்று. மனக்குறை உடையவன் போல இங்கு வந்து தகுதி இல்லாச் செயல்களைச் செய்யாதே என்பது பாடல்வரியின் பொருள்.

சத்தி - சொல்லாய்வு

சக்திஎன்கிற வார்த்தை தமிழ் மொழி அல்ல.

சத்தியை சக்தி என்று மாற்றி பொருள் கூறப் பட்டு வருகிறது அதுவும் பிழை

சத்தி: catti n. chardi. 1. Vomiting;வாந்திசெய்கை. (பிங்.) 2. Neem. See வேம்பு (மலை.) 3. A small water-melon. See கொம்மட்டி (மலை.) 4. Wild snake-gourd. See பேய்ப்புடல்

catti n. šakti. 1. Ability, power,strength, energy, prowess; ஆற்றல் (பிங்.) 2.Regal power of three kinds, viz., pirapu-catti,mantira-catti, uṟcāka-catti; பிரபுசத்தி மந்திரசத்தி உற்சாகசத்தியாகிய மூவகை அரசராற்றல்கள். 3.The number 3; மூன்று (தைலவ. தைல. 113.) 4.Banner, large flag; பெருங்கொடி (பிங்.) 5. Pit in 
 

ஆற்றல் தமிழ் வார்த்தை - தொல்காப்பியத்தில் இடம் பெற்று உள்ளது

ஆற்றலு மவள்வயி னான (தொல். பொ 129).

அருங்கலச்செப்பு

 அருங்கலச்செப்பு ஒரு தமிழ் நீதி நூல் ஆகும். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூல் பெயர் தெரியாத சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது. இதில் 180 குறள் வெண்பாக்கள் உள்ளன. ‘ரத்ன கரண்ட சிராவகாசாரம்’ என்னும் வடமொழி நூலின் மொழிபெயர்ப்பு இது என்று கருதப்படுகிறது. இந்த நூலின் காலம் 12ஆம் நூற்றாண்டு.

கடவுள் வாழ்த்து

அணிமதிக் குடை அருகனைத் தொழ
அருவினைப் பயன் அகலுமே.

1. நற்காட்சி அதிகாரம்

மங்கல வாழ்த்து

முற்ற உணர்ந்தானை ஏத்தி, மொழிகுவன்
குற்றம்ஒன்று இல்லா அறம். 1

அறம்

நற்காட்சி நன்ஞானம் நல்லொழுக்கம் இம்மூன்றும்
தொக்க அறச்சொல் பொருள். 2

நற்காட்சி

மெய்ப்பொருள் தேறுதல் நற்காட்சி என்றுரைப்பர்
எப்பொருளும் கண்டுணர்ந் தார். 3

மெய்ப்பொருள்

தலைமகனும் நூலும் முனியும் இம்மூன்றும்
நிலைமைய தாகும் பொருள். 4

தலை மகன் இயல்பு

குற்றமொன்று இன்றிக் குறையின்று உணர்ந்துஅறம்
புற்ற உரைத்தான் இறை. 5


இருக்கத் தகாதவை

பசிவேர்ப்பு நீர்வேட்கை பற்றுஆர்வம் செற்றம்
கசிவினோடு இல்லான் இறை. 6

இருக்கத் தக்கவை

கடையில் அறிவு இன்பம் வீரியம் காட்சி
உடையான் உலகுக்கு இறை. 7

அறத்தினை உரைத்தல்

தெறித்த பறையின் இராகாதி இன்றி
உரைத்தான் இறைவன் அறம். 8

நூல் இயல்பு

என்றும்உண் டாகி இறையால் வெளிப்பட்டு
நின்றது நூலென்பர் உணர். 9
ஆகமத்தின் பயன்

மெய்ப்பொருள் காட்டி உயிர்கட்கு அரணாகி
துக்கம் கெடுப்பது நூல். 10

முனி இயல்பு

இந்தியத்தை வென்றான் தொடர்ப்பாட்டோடு ஆரம்பம்
முந்து துறந்தான் முனி. 11

முனி மாண்பு

தத்துவ ஞான நிகழ்ச்சியும் சிந்தையும்
உய்த்தல் இருடிகள் மாண்பு. 12

நற்காட்சி உறுப்புகள்

எட்டு வகைஉறுப்பிற் றாகி இயன்றது
சுட்டிய நற்காட்சி தான். 13

இதுவும் அது

ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கின்மை
மெய்பெற இன்னவை நான்கு. 14

இதுவும் அது

அறப்பழி நீக்கல், அழிந்தாரைத் தாங்கல்
அறத்துக்கு அளவளா மூன்று. 15

இதுவும் அது

அறத்தை விளக்கலோடு எட்டாகும் என்ப
திறம்பட உள்ள உறுப்பு. 16

ஐயம் இன்மை

மெய்ந்நெறிக்கண் உள்ளம் துளக்கின்மை காட்சிக்கண்
ஐயம் இலாத உறுப்பு. 17

அவா இன்மை

தடுமாற்ற இன்பக்கு இவறாமை ஆகும்
வடுமாற்று அவா இன்மை நற்கு. 18

உவர்ப்பு இன்மை

பழிப்பில் அருங்கலம் பெய்த உடம்புஎன்று
இழிப்பு இன்மை மூன்ற்றம் உறுப்பு. 19

மயக்கு இன்மை

பாவ நெறியாரைச் சேர்ந்த மதிப்பின்மை
மோவம் இலாத உறுப்பு. 20

அறப்பழி நீக்கல்

அறத்துக்கு அலர்களைதல் எவ்வகை யானும்
திறத்தின் உவகூ வனம். 21

அழிந்தாரைத் தாங்கல்

அறத்தின் தளர்ந்தாரை ஆற்றின் நிறுத்தல்
சிறப்புடை ஆறாம் உறுப்பு. 22

அளவளாவல்

ஏற்ற வகையின் அறத்துள்ளார்க் கண்டுவத்தல்
சாற்றிய வச்சளத்தின் மாண்பு. 23

அறம் விளக்கல்

அறத்தின் பெருமையை யார்க்கும் உரைத்தல்
அறத்தை விளக்குதல் நற்கு. 24

எடுத்துக்காட்டுகள்

அஞ்சன சோரன் அனந்த மதிஉலகில்
வஞ்சமில் ஒத்தா யணன். 25

இதுவும் அது

இரேவதை யாரும் சிநேந்திர பத்தரும்
தோவகையின் பாரிசரும் சொல். 26

இதுவும் அது

வச்சிர மாமுனியும் வளர்பெரு விண்ணுவும்
நிச்சயம் எட்டும் உரை. 27

உறுப்புகளின் இன்றியமையாமை

உறுப்பின் குறையின் பயனின்று காட்சி
மறுப்பாட்டின் மந்திரமே போன்று. 28

நற்காட்சியர் தன்மை

மூவகை மூடமும் எட்டு மயங்களும்
தோவகையில் காட்சியார்க்கு இல். 29

உலக மூடம்

வரைப்பாய்தல் தீப்புகுதல் ஆறாடல் இன்ன
உரைப்பின் உலக மயக்கு. 30

தேவ மூடம்

வாழ்விப்பர் தேவர் எனமயங்கி வாழ்த்துதல்
பாழ்பட்ட தெய்வ மயக்கு. 31

இதுவும் அது

மயக்கார்வம் செற்ற முடையாரை ஏத்தல்
துயக்குடைத் தெய்வ மயக்கு. 32

பாசண்டி மூடம்

மாசுண்ட மார்க்கத்து நின்றாரைப் பூசித்தல்
பாசண்டி மூடம் எனல். 33

எட்டு மதங்கள்

பிறப்புக் குலம்வலி செல்வம் வனப்புச்
சிறப்புத் தவமுணர்வோடு எட்டு. 34

மதத்தின் விளைவு

இவற்றால் பெரியேம்யாம் என்றே எழுந்தே
இகழ்க்கில் இறக்கும் அறம். 35

நற்காட்சியின் சிறப்பு

அறம் உண்டேல் யாவரும் எள்ளப்படாஅர்
பிறகுணத்தால் என்ன பயன்? 36

இதுவும் அது

பறையன் மகனெனினும் காட்சி உடையான்
இறைவன் என உணரல் பாற்று. 37

இதுவும் அது

தேவனும் நாயாகும் தீக்காட்சி யால்நாயும்
தேவனாம் நற்காட்சி யால். 38

ஆறு அவிநயம்

அவ்விநயம் ஆறும் அகன்றது நற்காட்சி
செவ்விதின் காப்பார் இடை. 39

அவிநயம் இலக்கணம்

நல்லறத்தின் தீர்ந்த வணக்கத்தை நல்லோர்கள்
சொல்வர் அவிநயம் என்று. 40

அவிநயத்தின் வகை

மிச்சை இலிங்கியர் நூல் தெய்வம் அவாவினோடு
அச்சம் உலோபிதத்தோடு ஆறு. 41

அவிநயம் நீக்கும் வழி

இவ்வாறு நோக்கி வணங்கார் அவிநயம்
எவ்வாறும் நீங்கல் அரிது. 42

நற்காட்சியின் இன்றியமையாமை

காட்சி விசேடம் உணர்வும் ஒழுக்கமும்
மாட்சி அதனில் பெறும். 43

இதுவும் அது

நற்காட்சி இல்லார் உணர்வும் ஒழுக்கமும்
ஒற்கா ஒசிந்து கெடும். 44

இதுவும் அது

அச்சிலேல் பண்டியும் இல்லை சுவரிலேல்
சித்திரமும் இல்லதே போன்று. 45

இதுவும் அது

காட்சியோடு ஒப்பதுயாம் காணோம் வையத்து
மாட்சி உடையது உயிருக்கு. 46

நற்காட்சியின் பயன்

விரதம் இலர் எனினும் காட்சி உடையார்
நரகம் புகுதல் இலர். 47

இதுவும் அது

கலங்கலில் காட்சி உடையார் உலகில்
விலங்காய்ப் பிறத்தல் இலர். 48

இதுவும் அது

பெண்டிர் நபுஞ்சகர் ஆகார் பிழைப்பின்றிக்
கொண்ட நற்காட்சி யவர். 49

இதுவும் அது

இழிகுலத்து என்றும் பிறவார் இறைவன்
பழியறு காட்சி யவர். 50

இதுவும் அது

உறுப்பில் பிறர் பழிப்ப என்றும் பிறவார்
மறுப்பாடில் காட்சி யவர். 51

இதுவும் அது

குறுவாழ்க்கை நோயோடு நல்குரவு கூடப்
பெறுவாழ்க்கை யுள்பிறத்தல் இல். 52

இதுவும் அது

அரசர் இளவரசர் செட்டியரும் ஆவர்
புரைதீர்ந்த காட்சி யவர். 53

இதுவும் அது

மூவகைக் கீழ்த்தேவர் ஆகார்; முகடுயர்வர்
தோவகையில் காட்சி யவர். 54

இதுவும் அது

விச்சா தரரும் பலதேவரும் ஆவர்
பொச்சாப்பில் காட்சி யவர். 55

இதுவும் அது

முச்சக் கரத்தோடு சித்தியும் எய்துவர்
நச்சறு காட்சி யவர். 56

2. நல்ஞான அதிகாரம்

நல் அறிவின் இலக்கணம்

பொருள்நின்ற பெற்றியைப் பொய்யின்று உணர்தல்
மருளறு நன்ஞான மாண்பு. 57

பிரத மானுயோகத்தின் இலக்கணம்

சரிதம் புராணம் அருத்தக் கியானம்
அரிதின் உரைப்பது நூல். 58

காணானுயோகத்தின் இலக்கணம்

உலகின் கிடக்கையும் ஊழி நிலையும்
மலைவுஇன்று உரைப்பது நூல். 59

சரணானுயோகத்தின் இலக்கணம்

இல்லறம் ஏனைத் துறவறம் என்றிவற்றைப்
புல்ல உரைப்பது நூல். 60

திரவியானுயோக இலக்கணம்

கட்டொடு வீடும் உயிரும் பிறபொருளும்
முட்டின்றிச் சொல்லுவது நூல். 61

3. நல்லொழுக்க அதிகாரம்

நல்லொழுக்கத்தின் இலக்கணம்

காட்சி யுடையார் வினைவரும் வாயிலின்
மீட்சியா நல்லொழுக்கு நன்று. 62

நல்லொழுக்கத்தின் வகை

குறைந்ததூஉம் முற்ற நிறைந்ததூஉ மாம
அறைந்தார் ஒழுக்கம் இரண்டு. 63

ஒழுக்கத்துக்கு உரியார்

நிறைந்தது இருடிகட்கு ஆகு மனையார்க்கு
ஒழிந்தது மூன்று வகைத்து. 64

குறைந்த ஒழுக்கத்தின் வகை

அணுவதம் ஐந்தும் குணவதம் மூன்றும்
உணர்நான்கு சிக்கா வதம். 65

அணுவிரதம்

பெரிய கொலைபொய் களவொடு காமம்
பொருளை வரைதலோடு ஐந்து. 66

கொல்லாமை

இயங்குயிர் கொல்லாமை ஏவாமை ஆகும்
பெருங்கொலையின் மீட்சி எனல். 67

அதிசாரம்

அறுத்தல் அலைத்தல் அடைத்தலோடு ஆர்த்தல்
இறப்பப் பொறை இறப்போர் ஐந்து. 68

பொய்யாமை

பாவம் பொருந்துவன சொல்லாமை ஏவாமை
ஆகும் இரண்டாம் வதம். 69

பொய்யாமைக்கு அதிசாரம்

குறளை மறைவிரி இல்லடை வௌவல்
புறவுரை பொய்யோலை கேடு. 70

திருடாமை

கொடாதது கொள்ளாமை ஏவாமை ஆகும்
கொடாதது கொள்ளா வதம். 71

திருடாமைக்கு அதிசாரம்

குறைவு, நிறைகோடல், கொள்ளைக் கவர்தல்
மறைய விராதல் இறப்பு. 72

இதுவும் அது

கள்ளரொடு கூடல் கள்ளர் கொணர்பொருளை
உள்ளினர் கோடலோடு ஐந்து. 73

ஏகதேச பிரமசரியம் இலக்கணம்

விதித்த வழியின்றிக் காமம் நுகர்தல்
மதிப்பின்மை நான்காம் வதம். 74

பிரமசரியத்திற்கு அதிசாரம்

அனங்க விளையாட்டு வேட்கை மிகுதி
மனங்கொள் விலாரிணைக் கேடு. 75

இதுவும் அது

பிறர்மனை கோடல் பிறர்க்குச் செல்வாளை
திறவதில் கோடலோடு ஐந்து. 76

பொருள் வரைதல்

பொருள் வரைந்து ஆசைச் சுருக்கியே ஏவாமை
இருள்தீர்ந்தார்க்கு ஐந்தாம் வதம். 77

மிகுபொருள் விரும்பாமைக்கு அதிசாரம்

இயக்க்மோடு ஈட்டம் பெருக்கலும் லோபம்
வியப்புமிகைக் கோடலோடு ஐந்து. 78

அணுவிரத பயன்

ஐயைந்து இறப்பிகந்த ஐந்து வதங்களும்
செய்யும் சுவர்க்கச் சுகம். 79

விரதங்களால் சிறப்படைந்தவர் வரலாறுகள்

சட்டித் தனதேவன் பாரீசன் நீலியும்
பெற்றார் சயனும் சிறப்பு. 80

விரதமின்மையால் கேடு அடைந்தவர்கள்

தனசிரி சத்தியன் தாபதன் காப்பான்
நனைதாடி வெண்ணெய் உரை. 81

அணுவிரதியின் மூல குணங்கள்

கள்ளொடு தேன்புலைசு உண்ணாமை ஐவதமும்
தெள்ளுங்கால் மூல குணம். 82

குண விரதம் இலக்கணம்

வரைப திசைபத்தும் வாழும் அளவும்
புரைவில் திசைவிரதம் எண். 83

எல்லை அமையும் முறை

ஆறும் மலையும் கடலும் அடவியும்
கூறுப எல்லை அதற்கு. 84

திசை விரதத்தின் சிறப்பு

எல்லைப் புறத்தமைந்த பாவம் ஈண்டாமையின்
சொல்லுப மாவதம் என்று. 85

மகா விரதம்

சிறிய கொலைபொய் களவொடு காமம்
பொருளைத் துறத்தலோடு ஐந்து. 86

இதுவும் அது

கொலைமுதலா ஐந்தினையும் முற்றத் துறத்தல்
தலையாய மாவத மாம். 87

திசை விரத அதிசாரம்

இடம் பெருக்கல் எல்லை மறத்தல் கீழ் மேலோடு
உடன் இறுத்தல் பக்கம் இறப்பு. 88

அனர்த்த தண்ட விரதம்

எல்லை அகத்தும் பயமில மீண்டொழுகல்
நல்அனத்த தண்ட வதம். 89

அனர்த்த தண்ட விரதத்தின் வகை

ஐந்தனத்த தண்ட விரதம் முறையுள்ளிச்
சிந்திக்கச் செய்வன் தெரிந்து. 90

இதுவும் அது

ஆர்வமொடு செற்றத்தை ஆக்கும் நினைப்புகள்
தீவுறு தீச்சிந்தை யாம். 91

இதுவும் அது

சேவாள் விலைகொளல் கூறுதல் கூட்டுதல்
பாபோப தேசம் எனல். 92

இதுவும் அது

பயமின் மரம் குறைத்த லோடுஅகழ்தல் என்ப
பயமில் பமாதம் எனல். 93

இதுவும் அது

தீக்கருவி நஞ்சு கயிறு நார்கள்
ஈத்தல் கொலைகொடுத்த லாம். 94

இதுவும் அது

மோகத்தை ஈன்று தவமழிக்கும் சொல்கேட்டல்
பாபச் சுருதி எனல். 95

அனர்த்த தண்ட விரதத்திற்கு அதிசாரம்

நகையே நினைப்பு மொழியின்மை கூறல்
மிகைநினைவு நோக்கார் செயல். 96

இதுவும் அது

ஐந்தனத்த தண்ட விரதக்கு இறப்பிவை
முந்துணர்ந்து காக்க முறை. 97

போக உபபோக பரிமாண விரதம்

போகோப போக பரிமாணம் என்றுரைப்பர்
வாயில் புலன்கள் வரைந்து. 98

போக உபபோக பொருள் இலக்கணம்

துய்த்துக் கழிப்பன போகம் உபபோகம்
துய்ப்பாம் பெயர்த்தும் எனல். 99

உண்ணத் தகாதன

மயக்கம் கொலை அஞ்சிக் கள்ளு மதுவும்
துயக்கில் துறக்கப் படும். 100
இதுவும் அது

வேப்ப மலரிஞ்சி வெண்ணெய் அதம்பழம்
நீப்பர் இவைபோல் வன. 101
பரிமாணத்திற்கு கால வரம்பு

இயமங்கள் கால வரையறை இல்லை
நியமங்கள் அல்லா வதம். 102
நியமத்திற்கு உரிய பொருள்

உடுப்பன, பூண்பன, பூசாந்தும் ஊர்தி
படுப்ப, பசிய நீராட்டு. 103
இதுவும் அது

கோலம் இலைகூட நித்த நியமங்கள்
கால வரையறுத்தல் நற்கு. 104
நியமத்திற்குக் கால பேதம்

இன்று பகலிரா இத்திங்கள் இவ்வாண்டைக்கு
என்று நியமம் செயல். 105
அதிசாரம்

வேட்கை வழி நினைப்பு துய்ப்பு மிகநடுக்கு
நோக்குஇன்மை ஐந்தாம் இறப்பு. 106

4. சிக்கா வதம்

சாமாயிகம்கட்டு விடுகாறும் எஞ்சாமை ஐம்பாவம்
விட்டொழுகல் சாமா யிகம். 107

கட்டு இன்னது

கூறை மயிர்முடி முட்டி நிலையிருக்கை
கூறிய கட்டென்று உணர். 108

சாமாயிக இடத்தின் தன்மை

ஒரு சிறை இல்லம் பிறவழி யானும்
மருவுக சாமா யிகம். 109

சாமாயிகம் செய்ய சிறப்பான காலம்

சேதியம் வந்தனை பட்டினி ஆதியா
ஓதிய காலம் அதற்கு. 110

சாமாயிக கால நடைமுறை

பெற்ற வகையினால் சாமாயிகம் உவப்பின்
முற்ற நிறையும் வதம். 111

சாமாயிக காலச் சிந்தனை

தனியன் உடன்பிது வேற்றுமை சுற்றம்
இனைய நினைக்கப் படும். 112

இதுவும் அது

இறந்ததன் தீமைக்கு இழித்தும் பழித்தும்
மறந்தொழியா மீட்டல் தலை. 113

இதுவும் அது

தீயவை எல்லாம் இனிச்செய்யேன் என்று அடங்கித்
தூயவழி நிற்றலும் அற்று. 114

இதுவும் அது

ஒன்றியும் ஒன்றாதும் தான்செய்த தீவினையை
நின்று நினைந்திரங்கல் பாற்று. 115

இதுவும் அது

தனக்கும் பிறர்க்கும் உறுதிச் சொல்செய்கை
மனத்தினில் சிந்திக்கற் பாற்று. 116

இதுவும் அது

பிறர்கண் வருத்தமும் சாக்காடும் கேடும்
மறந்தும் நினயாமை நன்று. 117

இதுவும் அது

திருந்தார் பொருள் வரவும் தீயார் தொடர்பும்
பொருந்தாமை சிந்திக்கற் பாற்று. 118

இதுவும் அது

கூடியவை எல்லாம் பிரிவனவாம் கூடின்மை
கேடின்மை சிந்திக்கற் பாற்று. 119

இதுவும் அது

நல்லறச் சார்வு நவையுற நீக்கலும்
பல்வகையாற் பார்க்கப் படும். 120

சாமாயிக விரத அதிசாரம்

உள்ளம் மொழி செய்கை தள்ளல் விருப்பின்மை
உள்ளார் மறத்தல் இறப்பு. 121

போசத உபவாசம்

உவாட் டமியின்கண் நால்வகை ஊணும்
அவாவறுத்தல் போசத மெனல். 122

உபவாசத்தில் நிகழும் விதி

ஐம்பாவம் ஆரம்பம் நீராட்டுப் பூச்சாந்து
நம்பற்க பட்டினியின் ஞான்று. 123

இதுவும் அது

அறவுரை கேட்டல் நினைத்தல் உரைத்தல்
திறவதிற் செய்யப் படும். 124

போசத உபவாசம் பொருள்

உண்டி மறுத்தல் உபவாசம் போசதம்
உண்டல் ஒருபோது எனல். 125

உபவாச நாளில் தொழில் செய்யாமை

போச துபவாசம் என்றுரைப்பர் பட்டினிவிட்டு
ஆரம்பம் செய்யான் எனில். 126

அதிசாரம்

நோக்கித் துடையாது கோடல் மலந்துறத்தல்
சேக்கைப் படுத்தல் இறப்பு. 127

இதுவும் அது

கிரியை விருப்புக் கடைப்பிடி இன்மை
உரிதின் இறப்பிவை ஐந்து. 128

தேசாவகாசிக விரதம்

தேசம் வரைந்தொழுகல் கால வரையறையில்
தேசாவ காசிக மென். 129

தேசாவகாசிக எல்லை

மனைச் சேரி ஊர்புலம் ஆறடவி காதம்
இனைய இடம் வரைதல் எண். 130

தேசாவகாசிக கால எல்லை

ஆண்டொடு நாள்திங் களித்தனை என்றுய்த்தல்
காண்தகு கால மதற்கு. 131

தேசாவகாசிக பெருமை

எல்லைப் புறத்தமைந்த பாவமீண் டாமையின்
புல்லுக நாளும் புரிந்து. 132

அதிசாரம்

கூறல் கொணருதல் ஏவல் உருக்காட்டல்
யாதொன்றும் விட்டெறிதல் கேடு. 133

அதிதி சம்விபாகம்

உண்டி மருந்தோடு உறையுள் உபகரணம்
கொண்டுய்த்தல் நான்காம் வதம். 134

விரதத்தின் பெயர்

தானம் செயல்வையா வச்சம் அறம்நோக்கி
மானமில் மாதவர்க்கு நற்கு. 135

இதுவும் அது

இடர்களைதல் உற்றது செய்தலும் ஆங்கே
படுமெனப் பண்புடை யார்க்கு. 136

உத்தம தானம் தரும் முறை

உத்தமற்கு ஒன்பது புண்ணியத்தால் ஈவது
உத்தம தானம் எனல். 137

தானம் செய்ய வேண்டும்

உத்தம தானம் தயாதானம் தம்மளவில்
வைத்தொழியான் செய்க உவந்து. 138

உத்தம தானத்தின் பயன்

மனைவாழ்க்கை யால் வந்த பாவம் துடைத்தல்
மனைநீத்தார்க்கு ஈயும் கொடை. 139

இதுவும் அது

தான விடயத்தில் தடுமாற்றம் போந்துணையும்
ஈனமில் இன்பக் கடல். 140

தானத்தில் சிறந்து நின்றார்

சிரிசேன் இடபமா சேனையே பன்றி
உரைகோடல் கொண்டை உரை. 141

அதிசாரம்

பசியதன் மேல்வைத்தல் மூடல் மறைத்தல்
புரிவின்மை எஞ்சாமை கேடு. 142

பகவான் பூஜை

தேவாதி தேவன் திருவடிக்குப் பூசனை
ஓவாது செய்க உவந்து. 143

பூஜையின் பெருமை

தெய்வச் சிறப்பின் பெருமையைச் சாற்றுமேல்
மையுறு தேரை உரை. 144

5. சல்லேகனை அதிகாரம்

சல்லேகனையின் காரணம்

இடையூறு ஒழிவில்நோய் மூப்பிவை வந்தால்
கடைதுறத்தல் சல்லே கனை. 145

சல்லேகனை காலத்துச் சிந்தனை

இறுவாய்க்கண் நான்கும் பெறுவாம் என்று எண்ணி
மறுவாய நீக்கப் படும். 146

சல்லேகனை காலத்தில் செய்யவேண்டுவன

பற்றொடு செற்றமே சுற்றம் தொடர்ப்பாடு
முற்றும் துறக்கப் படும். 147

இதுவும் அது

ஆலோ சனையின் அழிவகற்றி மாதவன்கண்
மீள்வின்றி ஏற்றுக் கொளல். 148

இதுவும் அது

கசிவு கலக்கம் அகற்றி மனத்தை
ஒசியாமல் வைக்க உவந்து. 149

சல்லேகனை கால உணவு குறைப்பு முறை

ஊணொடு பானம் முறைசுருக்கி ஓர்ந்துணர்ந்து
மானுடம்பு வைக்கப் படும். 150

சல்லேகனையில் பஞ்ச மந்திரம் நினைக்க வேண்டும்

மந்திரங்கள் ஐந்து மனத்துவரச் சென்றார்கள்
இந்திரற்கும் இந்திரரே எண். 151

அதிசாரம்

சாவொடு வாழ்க்கையை அஞ்சித்தான் மெச்சுதல்
வாழ்வொடு நட்டார் நினைப்பு. 152

இதுவும் அது

நிதானத்தோடு ஐந்திறப்பும் இன்றி முடித்தார்
பதானம் அறுத்தார் எனல். 153

சல்லேகனையின் பயன்

அறத்துப் பயனைப் புராண வகையில்
திறத்துள்ளிக் கேட்கப் படும். 154

இதுவும் அது

பிறப்பு பிணிமூப்புச் சாக்காடு நான்கும்
அறுத்தல் அறத்தின் பயன். 155

இதுவும் அது

பரிவு நலிவினொடு அச்சமும் இல்லை
உருவின் பிறப்பில் லவர்க்கு. 156

இதுவும் அது

கிட்டமும் காளிதமும் நீக்கிய பொன்போல
விட்டு விளங்கும் உயிர். 157

இதுவும் அது

எல்லையில் இன்ப உணர்வு வலிகாட்சி
புல்லும் வினைவென் றவர்க்கு. 158

இதுவும் அது

உலக மறியினும் ஒன்றும் மறியார்
நிலைய நிலைபெற் றவர். 159

இதுவும் அது

மூவுலகத்து உச்சிச் சூளா மணிவிளக்குத்
தோவகையில் சித்தி யவர். 160

சிராவகர் படிநிலைகள்

பதினோர் நிலைமையர் சாவகர் என்று
விதியின் உணரப் படும். 161

தரிசன்

காட்சியில் திண்ணனாய் சீல விரதம் இலான்
மாட்சியுறு தரிசன் ஆம். 162

விரதிகன்

வதம்ஐந்தும் சீலமோர் ஏழும் தரித்தான்
விதியால் விரதி எனல். 163

சாமாயிகன்

எல்லியும் காலையும் ஏத்தி நியமங்கள்
வல்லியான் சாமாயிகன். 164

போசத உபவாசன்

ஒருதிங்கள் நால்வகைப் பவ்வமே நோன்பு
புரிபவன் போசத னாம். 167

அசித்தன்

பழம்இலை காயும் பசியத் துறந்தான்
அழிவகன்ற அச்சித்த னாம். 168

இராத்திரி அபுக்தன்

இருளின்கண் நால்வகை ஊணும் துறந்தான்
இராத்திரி அபுக்தன் எனல். 167

பிரமசரிய நிலை

உடம்பினை உள்ளவாறு ஓர்ந்துணர்ந்து காமம்
அடங்கியான் பம்மன் எனல். 168

அநாரம்பன்

கொலைவரு ஆரம்பம் செய்தலின் மீண்டான்
அலகிலநா ரம்பன் எனல். 169

அபரிக்ரகன்

இரு தொடர்ப் பாட்டின்கண் ஊக்கம் அறுத்தான்
உரியன் அபரிக்ர கன். 170

அனனுமதன்

யாதும் உடன்பாடு வாழ்க்கைக்கண் இல்லவன்
மாசில் அனனு மதன். 171

உத்திட்டன்

மனைதுறந்து மாதவர் தாளடைந்து தோற்று
வினையறுப்பான் உத்திட்ட னாம். 172

படிநிலையர் ஒழுக்கம்

முன்னைக் குணத்தொடு தத்தம் குணமுடைமை
பன்னிய தானம் எனல். 173

நூலுணர்தல்

பாவம் பகையொடு சுற்றம் இவைசுருக்கி
மோவமோடு இன்றி உணர். 174

(இது முதல் வரும் குறள்கள் இடைச் செருகலாகக் கருதப்படுகின்றன)

நூல் கற்றலினால் வரும் பயன்

அருங்கலச் செப்பினை ஆற்றத் தெளிந்தார்
ஒருங்கு அடையும் மாண்புதிரு. 175

இதுவும் அது

வந்தித்தாய்ந்து ஓதினும் சொல்லினும் கேட்பினம்
வெந்து வினையும் விடும். 176

இதுவும் அது

தரப்பினில் மீளாக் கடுந்தவம் நீருற்ற
உப்பினில் மாய்ந்து கெடும். 177

இதுவும் அது

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றின்
நாமம் கெடக்கெடும் நோய். 178

இதுவும் அது

முத்தி நெறிகாட்டும் முன்னறியா தார்க்கெல்லாம்
சித்தி அருங்கலச் செப்பு. 179

இதுவும் அது

தீரா வினைதீர்க்கும் சித்திபதம் உண்டாக்கும்
பாராய் அருங்கலச் செப்பு. 180

அருங்கலச்செப்பு முற்றிற்று