பயபக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயபக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வணக்கவழிபாடும் பயபக்தியும்.

 தமிழில் வணக்கவழிபாடு, பயபக்தி என்று இரு சொற்களை கூறுவார்.

இவைகள் இரு சொற்கள் இணைந்த ஒருசொல்.

வணக்கம் - வணங்குதல், தொழுதல் 

வழிபாடு - வழிபடுதல், உபதேசத்தை பின்பற்றுதல் 

பயம் - அஞ்சுதல், விளைவு பற்றி கவலை கொள்ளுதல் 

பக்தி - அன்பு செய்தல், அன்பு செய்யப் படுபவர் விரும்பியவற்றை செய்து தருதல் 

இரண்டையும் ஒன்றாக இணைத்து ஒரு சொல்லாக அடையாள படுத்துவதற்கு ஓர் நோக்கமுண்டு.

கடவுளை வணங்குவது மட்டுமல்லால் அவன் மறை நூல்கள் சொல்லும் நெறிகளை பின்பற்றுபவனாக இருக்கவேண்டும். இரண்டும் ஒரு சேர இருந்தால் தான் அவன் உண்மையிலேயே கடவுளை வாங்குபவனாவான்.

கடவுளின் மீதும் அன்பும் இருக்கவேண்டும், பயமும் இருக்கவேண்டும். இரண்டில் ஒன்று இல்லாது போனாலும் கடவுளை நம்புபவனின் குணம் முழுமை பெறாது, அவன் அடுத்தவருக்கு தீங்கு செய்ய எண்ணுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.