திருக்குர்ஆன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருக்குர்ஆன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருக்குர்ஆன் - 2. ஸூரத்துல் பகரா (பசு மாடு)

  திருக்குர்ஆன் - 2. ஸூரத்துல் பகரா (பசு மாடு) - மதனீ, வசனங்கள்: 286

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
 
2:1 الٓمّٓۚ‏
الٓمّٓۚ‏அலிஃப், லாம், மீம்
2:1. அலிஃப், லாம், மீம்.
2:2
2:2 ذٰ لِكَ الْڪِتٰبُ لَا رَيْبَۛ فِيْهِۛ هُدًى لِّلْمُتَّقِيْنَۙ‏
ذٰ لِكَஇந்த الْڪِتٰبُவேதம் لَا رَيْبَۛஅறவே சந்தேகம் இல்லை فِيْهِۛஇதில் هُدًىநேர்வழி காட்டி لِّلْمُتَّقِيْنَۙ‏அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
2:2. இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.

2:3 الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْغَيْبِ وَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَۙ‏
الَّذِيْنَஎவர்கள் يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்வார்கள் بِالْغَيْبِமறைவானதை وَ يُقِيْمُوْنَஇன்னும் நிலைநிறுத்துவார்கள் الصَّلٰوةَதொழுகையை وَمِمَّاஇன்னும் எதிலிருந்து رَزَقْنٰهُمْகொடுத்தோம்/அவர்களுக்கு يُنْفِقُوْنَۙ‏தர்மம் புரிவார்கள்
2:3. (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.

2:4 وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِمَۤا اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَۚ وَبِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَؕ‏
وَالَّذِيْنَஇன்னும் எவர்கள் يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்வார்கள் بِمَۤاஎதை اُنْزِلَஇறக்கப்பட்டது اِلَيْكَஉமக்கு وَمَاۤஇன்னும் எதை اُنْزِلَஇறக்கப்பட்டது مِنْ قَبْلِكَۚஉமக்கு முன்னர் وَبِالْاٰخِرَةِஇன்னும் மறுமையை هُمْஅவர்கள் يُوْقِنُوْنَؕ‏உறுதி கொள்வார்கள்
2:4. (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.
 
2:5 اُولٰٓٮِٕكَ عَلٰى هُدًى مِّنْ رَّبِّهِمْ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏
اُولٰٓٮِٕكَஅவர்கள் عَلٰىஇல் هُدًىநேர்வழி مِّنْஇருந்து رَّبِّهِمْதங்கள் இறைவன் وَاُولٰٓٮِٕكَ هُمُஇன்னும் அவர்கள்தான் الْمُفْلِحُوْنَ‏வெற்றியாளர்கள்
2:5. இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.

2:6 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا سَوَآءٌ عَلَيْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْ هُمْ لَا يُؤْمِنُوْنَ‏
اِنَّநிச்சயமாக الَّذِيْنَஎவர்கள் كَفَرُوْاநிராகரித்தார்கள் سَوَآءٌசமம் عَلَيْهِمْஅவர்கள் மீது ءَاَنْذَرْتَهُمْஅவர்களை எச்சரித்தீர் اَمْஅல்லது لَمْ تُنْذِرْநீர் எச்சரிக்கவில்லை هُمْஅவர்களை لَا يُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
2:6. நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.

2:7 خَتَمَ اللّٰهُ عَلَىٰ قُلُوْبِهِمْ وَعَلٰى سَمْعِهِمْ‌ؕ وَعَلٰىٓ اَبْصَارِهِمْ غِشَاوَةٌ  وَّلَهُمْ عَذَابٌ عَظِيْمٌ‏
خَتَمَமுத்திரையிட்டான் اللّٰهُஅல்லாஹ் عَلَىٰ قُلُوْبِهِمْஅவர்களின் உள்ளங்கள் மீது وَعَلٰىஇன்னும் மீது سَمْعِهِمْ‌ؕஅவர்களின் கேள்விப் புலன் وَعَلٰىٓஇன்னும் மீது اَبْصَارِهِمْஅவர்களின் பார்வைகள் غِشَاوَةٌ திரை وَّلَهُمْஇன்னும் அவர்களுக்கு عَذَابٌவேதனை عَظِيْمٌ‏பெரியது
2:7. அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான் இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது; மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.

2:8 وَمِنَ النَّاسِ مَنْ يَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالْيَوْمِ الْاٰخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِيْنَ‌ۘ‏
وَمِنَ النَّاسِஇன்னும் மக்களில் مَنْஎவர் يَّقُوْلُகூறுகிறார் اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம் بِاللّٰهِஅல்லாஹ்வை وَبِالْيَوْمِஇன்னும் நாளை الْاٰخِرِஇறுதி وَمَا هُمْஅவர்கள் அல்லர் بِمُؤْمِنِيْنَ‌ۘ‏நம்பிக்கையாளர்களே
2:8. இன்னும் மனிதர்களில் “நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்” என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.
2:9 يُخٰدِعُوْنَ اللّٰهَ وَالَّذِيْنَ اٰمَنُوْا ‌ۚ وَمَا يَخْدَعُوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُوْنَؕ‏
يُخٰدِعُوْنَவஞ்சிக்கின்றனர் اللّٰهَஅல்லாஹ்வை وَالَّذِيْنَஇன்னும் எவர்கள் اٰمَنُوْا ۚநம்பிக்கை கொண்டார்கள் وَمَا يَخْدَعُوْنَவஞ்சிக்க மாட்டார்கள் اِلَّاۤதவிர اَنْفُسَهُمْதங்களையே وَمَا يَشْعُرُوْنَؕ‏இன்னும் உணரமாட்டார்கள்
2:9. (இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.

2:10 فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌۙ فَزَادَهُمُ اللّٰهُ مَرَضًا ۚ وَّلَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙۢ بِمَا كَانُوْا يَكْذِبُوْنَ‏
فِىْ قُلُوْبِهِمْஅவர்களின் உள்ளங்களில் مَّرَضٌۙஒரு நோய் فَزَادَهُمُஎனவே, அவர்களுக்கு அதிகப்படுத்தினான் اللّٰهُஅல்லாஹ் مَرَضًا ۚநோயை وَّلَهُمْஇன்னும் அவர்களுக்கு عَذَابٌவேதனை اَلِيْمٌۙۢதுன்புறுத்தக் கூடியது بِمَاகாரணத்தால் كَانُوْاஇருந்தனர் يَكْذِبُوْنَ‏பொய்கூறுபவர்களாக
2:10. அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு.

2:11 وَاِذَا قِيْلَ لَهُمْ لَا تُفْسِدُوْا فِىْ الْاَرْضِۙ قَالُوْاۤ اِنَّمَا نَحْنُ مُصْلِحُوْنَ‏
وَاِذَا قِيْلَஇன்னும் கூறப்பட்டால் لَهُمْஅவர்களுக்கு لَا تُفْسِدُوْاவிஷமம் செய்யாதீர்கள் فِىْ الْاَرْضِۙபூமியில் قَالُوْاۤகூறுகிறார்கள் اِنَّمَاஎல்லாம் نَحْنُநாங்கள் مُصْلِحُوْنَ‏சீர்திருத்தவாதிகள்தான்
2:11. “பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.

2:12 اَلَا ۤ اِنَّهُمْ هُمُ الْمُفْسِدُوْنَ وَلٰـكِنْ لَّا يَشْعُرُوْنَ‏
اَلَا ۤஅறிந்துகொள்ளுங்கள்! اِنَّهُمْ هُمُநிச்சயமாக அவர்கள்தான் الْمُفْسِدُوْنَவிஷமிகள் وَلٰـكِنْஎனினும் لَّا يَشْعُرُوْنَ‏உணர மாட்டார்கள்
2:12. நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.
2:13 وَاِذَا قِيْلَ لَهُمْ اٰمِنُوْا كَمَاۤ اٰمَنَ النَّاسُ قَالُوْاۤ اَنُؤْمِنُ كَمَاۤ اٰمَنَ السُّفَهَآءُ‌ ؕ اَلَاۤ اِنَّهُمْ هُمُ السُّفَهَآءُ وَلٰـكِنْ لَّا يَعْلَمُوْنَ‏
وَاِذَا قِيْلَஇன்னும் கூறப்பட்டால் لَهُمْஅவர்களுக்கு اٰمِنُوْاநம்பிக்கை கொள்ளுங்கள் كَمَاۤபோன்று اٰمَنَநம்பிக்கை கொண்டார்(கள்) النَّاسُமக்கள் قَالُوْاۤகூறுகிறார்கள் اَنُؤْمِنُநாங்கள் நம்பிக்கை கொள்வோமா? كَمَاۤபோன்று اٰمَنَநம்பிக்கை கொண்டார்(கள்) السُّفَهَآءُ‌ ؕஅறிவீனர்கள் اَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்! اِنَّهُمْ هُمُநிச்சயமாக அவர்கள்தான் السُّفَهَآءُஅறிவீனர்கள் وَلٰـكِنْஎனினும் لَّا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
2:13. (மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், “மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?“ என்று கூறுகிறார்கள் (அப்படியல்ல;) நிச்சயமாக இ(ப்படிக் கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.
2:14 وَاِذَا لَقُوْا الَّذِيْنَ اٰمَنُوْا قَالُوْاۤ اٰمَنَّا ۖۚ وَاِذَا خَلَوْا اِلٰى شَيٰطِيْنِهِمْۙ قَالُوْاۤ اِنَّا مَعَكُمْۙ اِنَّمَا نَحْنُ مُسْتَهْزِءُوْنَ‏
وَاِذَا لَقُوْاஅவர்கள் சந்தித்தால் الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களை قَالُوْاۤகூறுகிறார்கள் اٰمَنَّا ۖۚநம்பிக்கை கொண்டோம் وَاِذَا خَلَوْاஅவர்கள் தனித்தால் اِلٰى شَيٰطِيْنِهِمْۙபக்கம்/ஷைத்தான்கள்/தங்கள் قَالُوْاۤகூறுகிறார்கள் اِنَّاநிச்சயமாக நாங்கள் مَعَكُمْۙஉங்களுடன் اِنَّمَا نَحْنُநாங்கள் எல்லாம் مُسْتَهْزِءُوْنَ‏பரிகசிப்பவர்கள்தான்
2:14. இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, “நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்” எனக் கூறுகிறார்கள்.

2:15 اَللّٰهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِىْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ‏
اَللّٰهُஅல்லாஹ் يَسْتَهْزِئُபரிகசிக்கிறான் بِهِمْஅவர்களை وَيَمُدُّهُمْஇன்னும் விட்டு வைக்கி றான்/அவர்களை فِىْ طُغْيَانِهِمْஅட்டூழியத்தில் / அவர்களுடைய يَعْمَهُوْنَ‏கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக
2:15. அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான்.

2:16 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰى فَمَا رَبِحَتْ تِّجَارَتُهُمْ وَمَا كَانُوْا مُهْتَدِيْنَ‏
اُولٰٓٮِٕكَஅவர்கள் الَّذِيْنَஎவர்கள் اشْتَرَوُاவிலைக்கு வாங்கினார்கள் الضَّلٰلَةَவழிகேட்டை بِالْهُدٰىநேர்வழிக்குப் பதிலாக فَمَا رَبِحَتْஎனவே, இலாபமடையவில்லை تِّجَارَتُهُمْவியாபாரம்/அவர்களின் وَمَا كَانُوْاஇன்னும் அவர்கள் இருக்கவில்லை مُهْتَدِيْنَ‏நேர்வழி பெற்றவர்களாக
2:16. இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது; மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர்.

2:17 مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِى اسْتَوْقَدَ نَارًا ‌ۚ فَلَمَّاۤ اَضَآءَتْ مَا حَوْلَهٗ ذَهَبَ اللّٰهُ بِنُوْرِهِمْ وَتَرَكَهُمْ فِىْ ظُلُمٰتٍ لَّا يُبْصِرُوْنَ‏
مَثَلُهُمْஉதாரணம்/அவர்களின் كَمَثَلِஉதாரணத்தைப் போல் الَّذِىஎவர்(கள்) اسْتَوْقَدَமூட்டினார்(கள்) نَارًا ۚநெருப்பை فَلَمَّاۤபோது اَضَآءَتْவெளிச்சமாக்கியது مَا حَوْلَهٗஎதை/சுற்றி/அவரை ذَهَبَசென்றான் اللّٰهُஅல்லாஹ் بِنُوْرِهِمْஒளியைக் கொண்டு/அவர்களின் وَتَرَكَهُمْஇன்னும் விட்டு விட்டான்/அவர்களை فِىْ ظُلُمٰتٍஇருள்களில் لَّا يُبْصِرُوْنَ‏பார்க்க மாட்டார்கள்
2:17. இத்தகையோருக்கு ஓர் உதாரணம் நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான்; இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான்.

2:18 صُمٌّۢ بُكْمٌ عُمْىٌ فَهُمْ لَا يَرْجِعُوْنَ ۙ‏
صُمٌّۢசெவிடர்கள் بُكْمٌஊமைகள் عُمْىٌகுருடர்கள் فَهُمْஎனவே, அவர்கள் لَا يَرْجِعُوْنَ ۙ‏திரும்ப மாட்டார்கள்
2:18. (அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.
2:19 اَوْ كَصَيِّبٍ مِّنَ السَّمَآءِ فِيْهِ ظُلُمٰتٌ وَّرَعْدٌ وَّبَرْقٌ‌ ۚ يَجْعَلُوْنَ اَصَابِعَهُمْ فِىْۤ اٰذَانِهِمْ مِّنَ الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِ‌ؕ وَاللّٰهُ مُحِيْطٌ‌ۢ بِالْكٰفِرِيْنَ‏
اَوْஅல்லது كَصَيِّبٍபோல/மழை مِّنَ السَّمَآءِவானத்திலிருந்து فِيْهِஅதில் ظُلُمٰتٌஇருள்கள் وَّرَعْدٌஇன்னும் இடி وَّبَرْقٌ‌ ۚஇன்னும் மின்னல் يَجْعَلُوْنَவைக்கிறார்கள் اَصَابِعَهُمْதங்கள் விரல்களை فِىْۤ اٰذَانِهِمْதங்கள் காதுகளில் مِّنَ الصَّوَاعِقِஇடி முழக்கங்களால் حَذَرَபயந்து الْمَوْتِ‌ؕமரணத்தை وَاللّٰهُஇன்னும் அல்லாஹ் مُحِيْطٌ‌ۢசூழ்ந்திருக்கிறான் بِالْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்களை
2:19. அல்லது, (இன்னும் ஓர் உதாரணம்) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம்; (இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தவனாகவே இருக்கின்றான்.
2:20
2:20 يَكَادُ الْبَرْقُ يَخْطَفُ اَبْصَارَهُمْ‌ؕ كُلَّمَاۤ اَضَآءَ لَهُمْ مَّشَوْا فِيْهِ  وَاِذَاۤ اَظْلَمَ عَلَيْهِمْ قَامُوْا‌ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَاَبْصَارِهِمْ‌ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
يَكَادُநெருங்குகிறது الْبَرْقُமின்னல் يَخْطَفُபறிக்கிறது اَبْصَارَபார்வைகளை هُمْ‌ؕஅவர்களின் كُلَّمَاۤ اَضَآءَஅது வெளிச்சம் தரும் போதெல்லாம் لَهُمْஅவர்களுக்கு مَّشَوْاநடக்கிறார்கள் فِيْهِஅதில் وَاِذَاۤ اَظْلَمَஇன்னும் இருள் சூழ்ந்தால் عَلَيْهِمْஅவர்கள் மீது قَامُوْا‌ؕநிற்கிறார்கள் وَلَوْ شَآءَநாடினால் اللّٰهُஅல்லாஹ் لَذَهَبَதிட்டமாக சென்றுவிடுவான் بِسَمْعِهِمْகேள்விப்புலனைக் கொண்டு/அவர்களின் وَاَبْصَارِபார்வைகளை هِمْ‌ؕஅவர்களின் اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ் عَلٰىமீது كُلِّஎல்லாம் شَىْءٍபொருள் قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
2:20. அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அ(ம் மின்னலான)து அவர்களுக்கு ஒளி தரும் போதெல்லாம், அவர்கள் அத(ன் துணையினா)ல் நடக்கிறார்கள்; அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது (வழியறியாது) நின்றுவிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்.
2:21 يٰۤاَيُّهَا النَّاسُ اعْبُدُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ وَالَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۙ‏
يٰۤاَيُّهَا النَّاسُமக்களே اعْبُدُوْاவணங்குங்கள் رَبَّكُمُஉங்கள் இறைவனை الَّذِىْஎவன் خَلَقَكُمْஉங்களைப் படைத்தான் وَالَّذِيْنَஇன்னும் எவர்கள் مِنْ قَبْلِكُمْஉங்களுக்கு முன்னர் لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۙ‏நீங்கள் அஞ்சுவதற்காக
2:21. மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்.

2:22 الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ فِرَاشًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّـكُمْ‌ۚ فَلَا تَجْعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا وَّاَنْـتُمْ تَعْلَمُوْنَ ‏
الَّذِىْஎவன் جَعَلَஆக்கினான் لَـكُمُஉங்களுக்கு الْاَرْضَபூமியை فِرَاشًاவிரிப்பாக وَّالسَّمَآءَஇன்னும் வானத்தை بِنَآءًமுகடாக وَّاَنْزَلَஇன்னும் இறக்கினான் مِنَஇருந்து السَّمَآءِவானம் مَآءًநீரை فَاَخْرَجَஉற்பத்தி செய்தான் بِهٖஅதன் மூலம் مِنَஇருந்து الثَّمَرٰتِகனிகள் رِزْقًاஉணவை لَّـكُمْ‌ۚஉங்களுக்கு فَلَا تَجْعَلُوْاஆகவே, ஏற்படுத்தாதீர்கள் لِلّٰهِஅல்லாஹ்வுக்கு اَنْدَادًاஇணைகளை وَّاَنْـتُمْநீங்கள் تَعْلَمُوْنَஅறிகிறீர்கள்
2:22. அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
2:23 وَاِنْ کُنْتُمْ فِىْ رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلٰى عَبْدِنَا فَاْتُوْا بِسُوْرَةٍ مِّنْ مِّثْلِهٖ وَادْعُوْا شُهَدَآءَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
وَاِنْ کُنْتُمْநீங்கள் இருந்தால் فِىْ رَيْبٍசந்தேகத்தில் مِّمَّاஎதில் نَزَّلْنَاஇறக்கினோம் عَلٰىமீது عَبْدِنَاஅடிமை/நம் فَاْتُوْاஎனவே, வாருங்கள் بِسُوْرَةٍஓர் அத்தியாயத்தைக் கொண்டு مِّنْ مِّثْلِهٖஅது போன்ற وَادْعُوْاஇன்னும் அழையுங்கள் شُهَدَآءَஆதரவாளர்களை كُمْஉங்கள் مِّنْ دُوْنِஅல்லாத اللّٰهِஅல்லாஹ் اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
2:23. இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.

2:24 فَاِنْ لَّمْ تَفْعَلُوْا وَلَنْ تَفْعَلُوْا فَاتَّقُوْا النَّارَ الَّتِىْ وَقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ  ۖۚ اُعِدَّتْ لِلْكٰفِرِيْنَ‏
فَاِنْ لَّمْ تَفْعَلُوْاநீங்கள் செய்யவில்லையென்றால் وَلَنْ تَفْعَلُوْاநீங்கள் செய்யவே மாட்டீர்கள் فَاتَّقُوْاஅஞ்சுங்கள் النَّارَ(நரக) நெருப்பை الَّتِىْஎது وَقُوْدُهَاஎரிபொருள்/அதன் النَّاسُமக்கள் وَالْحِجَارَةُ  ۖۚஇன்னும் கற்கள் اُعِدَّتْதயாரிக்கப்பட்டுள்ளது لِلْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்களுக்கு
2:24. (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.
2:25 وَبَشِّرِ الَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ‌ؕ ڪُلَّمَا رُزِقُوْا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِّزْقًا ‌ۙ قَالُوْا هٰذَا الَّذِىْ رُزِقْنَا مِنْ قَبْلُ وَاُتُوْا بِهٖ مُتَشَابِهًا ‌ؕ وَلَهُمْ فِیْهَاۤ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ ‌ وَّهُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
وَبَشِّرِநற்செய்தி கூறுவீராக الَّذِيْنَஎவர்கள் اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள் وَ عَمِلُواஇன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِநற்செயல்களை اَنَّநிச்சயமாக لَهُمْஅவர்களுக்கு جَنّٰتٍசொர்க்கங்கள் تَجْرِىْஓடும் مِنْஇருந்து تَحْتِهَاஅவற்றின் கீழ் الْاَنْهٰرُ‌ؕஆறுகள் ڪُلَّمَا رُزِقُوْاஅவர்களுக்கு வழங்கப்படும் போதெல்லாம் مِنْهَاஅவற்றிலிருந்து مِنْ ثَمَرَةٍஒரு கனியின் رِّزْقًا ۙஉணவு قَالُوْاகூறுவார்கள் هٰذَاஇது الَّذِىْஎது رُزِقْنَاநமக்குவழங்கப்பட்டது مِنْ قَبْلُமுன்னர் وَاُتُوْاஇன்னும் அவர்களிடம் வரப்படும் بِهٖஅதைக் கொண்டு مُتَشَابِهًا ؕஒரே விதமாகத் தோன்றக் கூடியதாகவே وَلَهُمْஇன்னும் அவர்களுக்கு فِيْهَآஅவற்றில் اَزْوَاجٌமனைவிகள் مُّطَهَّرَةٌ ۙதூய்மையான وَّهُمْஇன்னும் அவர்கள் فِيْهَاஅவற்றில் خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
2:25. (ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக; சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு; அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் “இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்தில்) கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு; மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள்.
2:26 اِنَّ اللّٰهَ لَا يَسْتَحْـىٖۤ اَنْ يَّضْرِبَ مَثَلًا مَّا ‌بَعُوْضَةً فَمَا فَوْقَهَا ‌ؕ فَاَمَّا ‌الَّذِيْنَ اٰمَنُوْا فَيَعْلَمُوْنَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّهِمْ‌ۚ وَاَمَّا الَّذِيْنَ ڪَفَرُوْا فَيَقُوْلُوْنَ مَاذَآ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ۘ يُضِلُّ بِهٖ ڪَثِيْرًا وَّيَهْدِىْ بِهٖ كَثِيْرًا ‌ؕ وَمَا يُضِلُّ بِهٖۤ اِلَّا الْفٰسِقِيْنَۙ ‏
اِنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் لَا يَسْتَحْـىٖۤவெட்கப்படமாட்டான் اَنْ يَّضْرِبَஅவன் கூறுவதற்கு مَثَلًاஉதாரணமாக مَّا بَعُوْضَةًகொசுவைக் கூட فَمَا فَوْقَهَا ؕஇன்னும் /எது/மேல்/அதற்கு فَاَمَّاஆகவே الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்கள் فَيَعْلَمُوْنَஅறிவார்கள் اَنَّهُநிச்சயமாக அது الْحَـقُّஉண்மைதான் مِنْஇருந்து رَّبِّهِمْ‌ۚஇறைவன்/தங்கள் وَاَمَّاஆகவே الَّذِيْنَ ڪَفَرُوْاநிராகரிப்பாளர்கள் فَيَقُوْلُوْنَகூறுவார்கள் مَاذَآஎன்ன اَرَادَநாடினான் اللّٰهُஅல்லாஹ் بِهٰذَاஇதன் மூலம் مَثَلًا ۘஉதாரணத்தை يُضِلُّவழிகெடுக்கிறான் بِهٖஇதன் மூலம் ڪَثِيْرًاஅதிகமானோரை وَّيَهْدِىْஇன்னும் நேர்வழி நடத்துகிறான் بِهٖஇதன் மூலம் كَثِيْرًا ؕஅதிகமானோரை وَمَا يُضِلُّஇன்னும் வழிகெடுக்க மாட்டான் بِهٖۤஇதன் மூலம் اِلَّاதவிர الْفٰسِقِيْنَۙ ‏பாவிகளை
2:26. நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, “இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?” என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.
2:27 الَّذِيْنَ يَنْقُضُوْنَ عَهْدَ اللّٰهِ مِنْۢ بَعْدِ مِيْثَاقِهٖ وَيَقْطَعُوْنَ مَآ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ يُّوْصَلَ وَيُفْسِدُوْنَ فِى الْاَرْضِ‌ؕ اُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ‏
الَّذِيْنَஎவர்கள் يَنْقُضُوْنَமுறிக்கின்றனர் عَهْدَஒப்பந்தத்தை اللّٰهِஅல்லாஹ்வின் مِنْۢ بَعْدِபின்னர் مِيْثَاقِهٖஅது உறுதி(யாகிவிட்ட) وَيَقْطَعُوْنَஇன்னும் துண்டிக்கின்றனர் مَآஎதை اَمَرَஏவினான் اللّٰهُஅல்லாஹ் بِهٖۤஅதை اَنْ يُّوْصَلَசேர்க்கப்படவேண்டும் وَيُفْسِدُوْنَஇன்னும் விஷமம் செய்கின்றனர் فِى الْاَرْضِ‌ؕபூமியில் اُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான் الْخٰسِرُوْنَ‏நஷ்டவாளிகள்
2:27. இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள்.
2:28 كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ‌ۚ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ‏
كَيْفَஎப்படி تَكْفُرُوْنَநிராகரிக்கிறீர்கள் بِاللّٰهِஅல்லாஹ்வை وَڪُنْتُمْஇருந்தீர்களே اَمْوَاتًاஇறந்தவர்களாக فَاَحْيَاکُمْ‌ۚஉயிர்ப்பித்தான்/ உங்களை ثُمَّ يُمِيْتُكُمْபிறகு/மரணிக்கச் செய்கிறான்/உங்களை ثُمَّபிறகு يُحْيِيْكُمْஉயிர்ப்பிப்பான்/ உங்களை ثُمَّபிறகு اِلَيْهِஅவனிடமே تُرْجَعُوْنَ‏திருப்பப்படுவீர்கள்
2:28. நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
2:29 هُوَ الَّذِىْ خَلَقَ لَـكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا ثُمَّ اسْتَوٰۤى اِلَى السَّمَآءِ فَسَوّٰٮهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ‌ؕ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏
هُوَஅவன் الَّذِىْஎவன் خَلَقَபடைத்தான் لَـكُمْஉங்களுக்கு مَّا فِى الْاَرْضِஎவற்றை/பூமியில் جَمِيْعًاஅனைத்தையும் ثُمَّபிறகு اسْتَوٰۤىஉயர்ந்தான் اِلَىமேல் السَّمَآءِவானம் فَسَوّٰٮهُنَّஅமைத்தான்/அவற்றை سَبْعَஏழு سَمٰوٰتٍ‌ؕவானங்களாக وَهُوَஇன்னும் அவன் بِكُلِّ شَىْءٍஎல்லாப் பொருளையும் عَلِيْمٌநன்கறிந்தவன்
2:29. அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.
2:30
2:30 وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓٮِٕكَةِ اِنِّىْ جَاعِلٌ فِى الْاَرْضِ خَلِيْفَةً ؕ قَالُوْٓا اَتَجْعَلُ فِيْهَا مَنْ يُّفْسِدُ فِيْهَا وَيَسْفِكُ الدِّمَآءَۚ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَـكَ‌ؕ قَالَ اِنِّىْٓ اَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ‏
وَاِذْசமயம் قَالَகூறினான் رَبُّكَஉன் இறைவன் لِلْمَلٰٓٮِٕكَةِவானவர்களுக்கு اِنِّىْநிச்சயமாக நான் جَاعِلٌபடைக்கப்போகிறேன் فِى الْاَرْضِபூமியில் خَلِيْفَةً ؕஒரு பிரதிநிதியை قَالُوْٓاகூறினார்கள் اَتَجْعَلُபடைக்கிறாயா? فِيْهَاஅதில் مَنْஎவர் يُّفْسِدُவிஷமம் செய்வார் فِيْهَاஅதில் وَيَسْفِكُஇன்னும் சிந்துவார் الدِّمَآءَۚஇரத்தங்களை وَنَحْنُநாங்களோ نُسَبِّحُதுதிக்கிறோம் بِحَمْدِكَபுகழை/உன் وَنُقَدِّسُஇன்னும் பரிசுத்தப்படுத்துகிறோம் لَـكَ‌ؕஉன்னை قَالَகூறினான் اِنِّىْٓநிச்சயமாக நான் اَعْلَمُஅறிவேன் مَا لَا تَعْلَمُوْنَ‏நீங்கள் அறியாதவற்றை
2:30. (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.
2:31
2:31 وَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلٰٓٮِٕكَةِ فَقَالَ اَنْۢبِـــٴُـوْنِىْ بِاَسْمَآءِ هٰٓؤُلَآءِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
وَعَلَّمَஇன்னும் கற்பித்தான் اٰدَمَஆதமுக்கு الْاَسْمَآءَபெயர்களை كُلَّهَاஎல்லாவற்றையும்/ அவை ثُمَّபிறகு عَرَضَهُمْவைத்தான்/அவற்றை عَلَىமுன் الْمَلٰٓٮِٕكَةِவானவர்கள் فَقَالَஇன்னும் கூறினான் اَنْۢبِـُٔوْنِیْஅறிவியுங்கள்/எனக்கு بِاَسْمَآءِபெயர்களை هٰٓؤُلَآءِஇவற்றின் اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
2:31. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.
2:32
2:32 قَالُوْا سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَآ اِلَّا مَا عَلَّمْتَنَا ؕ اِنَّكَ اَنْتَ الْعَلِيْمُ الْحَكِيْمُ‏
قَالُوْاகூறினார்கள் سُبْحٰنَكَநீ மகாத்தூயவன் لَاஅறவேஇல்லை عِلْمَஅறிவு لَنَآஎங்களுக்கு اِلَّاதவிர مَاஎவை عَلَّمْتَنَا ؕகற்பித்தாய் / எங்களுக்கு اِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான் الْعَلِيْمُநன்கறிந்தவன் الْحَكِيْمُ‏மகா ஞானவான்
2:32. அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.
2:33
2:33 قَالَ يٰٓـاٰدَمُ اَنْۢبِئْهُمْ بِاَسْمَآٮِٕهِمْ‌ۚ فَلَمَّآ اَنْۢبَاَهُمْ بِاَسْمَآٮِٕهِمْۙ قَالَ اَلَمْ اَقُلْ لَّـكُمْ اِنِّىْٓ اَعْلَمُ غَيْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِۙ وَاَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا كُنْتُمْ تَكْتُمُوْنَ‏
قَالَகூறினான் يٰٓـاٰدَمُஆதமே اَنْۢبِئْهُمْஅறிவிப்பீராக/அவர்களுக்கு بِاَسْمَآٮِٕهِمْ‌ۚபெயர்களை/அவற்றின் فَلَمَّآபோது اَنْۢبَاَஅறிவித்தார் هُمْஅவர்களுக்கு بِاَسْمَآٮِٕهِمْۙபெயர்களை/அவற்றின் قَالَகூறினான் اَلَمْ اَقُلْநான் கூறவில்லையா? لَّـكُمْஉங்களுக்கு اِنِّىْٓநிச்சயமாக நான் اَعْلَمُஅறிவேன் غَيْبَமறைவானவற்றை السَّمٰوٰتِவானங்கள் وَالْاَرْضِۙஇன்னும் பூமி وَاَعْلَمُஇன்னும் அறிவேன் مَاஎதை تُبْدُوْنَவெளிப்படுத்துகிறீர்கள் وَمَاஇன்னும் எதை كُنْتُمْஇருந்தீர்கள் تَكْتُمُوْنَ‏மறைக்கிறீர்கள்
2:33. “ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?” என்று (இறைவன்) கூறினான்.
2:34
2:34 وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْٓا اِلَّاۤ اِبْلِيْسَؕ اَبٰى وَاسْتَكْبَرَ  وَكَانَ مِنَ الْكٰفِرِيْنَ‏
وَاِذْசமயம் قُلْنَاகூறினோம் لِلْمَلٰٓٮِٕكَةِவானவர்களுக்கு اسْجُدُوْاசிரம் பணியுங்கள் لِاٰدَمَஆதமுக்கு فَسَجَدُوْٓاஆகவே சிரம் பணிந்தார்கள் اِلَّاۤதவிர اِبْلِيْسَؕஇப்லீஸ் اَبٰىமறுத்தான் وَاسْتَكْبَرَ இன்னும் பெருமையடித்தான் وَكَانَஇன்னும் ஆகிவிட்டான் مِنَ الْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்களில்
2:34. பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.
2:35
2:35 وَقُلْنَا يٰٓـاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَـنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِيْنَ‏
وَقُلْنَاஇன்னும் கூறினோம் يٰٓـاٰدَمُஆதமே اسْكُنْவசிப்பீராக اَنْتَநீர் وَزَوْجُكَஇன்னும் உம் மனைவி الْجَـنَّةَசொர்க்கத்தில் وَكُلَاஇன்னும் இருவரும் சாப்பிடுங்கள் مِنْهَاஅதிலிருந்து رَغَدًاதாராளமாக حَيْثُவிதத்தில் شِئْتُمَاஇருவரும் நாடினீர்கள் وَلَا تَقْرَبَاஇன்னும் இருவரும் நெருங்காதீர்கள் هٰذِهِஇந்த الشَّجَرَةَமரத்தை فَتَكُوْنَاஇருவரும் ஆகிவிடுவீர்கள் مِنَ الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களில்
2:35. மேலும் நாம், “ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்” என்று சொன்னோம்.
2:36
2:36 فَاَزَلَّهُمَا الشَّيْطٰنُ عَنْهَا فَاَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيْهِ‌ وَقُلْنَا اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚ وَلَـكُمْ فِى الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰى حِيْنٍ‏
فَاَزَلَّهُمَاபிறழச் செய்தான்/அவ்விருவரை الشَّيْطٰنُஷைத்தான் عَنْهَاஅதிலிருந்து فَاَخْرَجَهُمَاவெளியேற்றினான்/அவ்விருவரை مِمَّاஎதிலிருந்து كَانَاஇருவரும்இருந்தனர் فِيْهِ‌அதில் وَقُلْنَاஇன்னும் கூறினோம் اهْبِطُوْاஇறங்குங்கள் بَعْضُكُمْஉங்களில் சிலர் لِبَعْضٍசிலருக்கு عَدُوٌّ ۚஎதிரி وَلَـكُمْஇன்னும் உங்களுக்கு فِى الْاَرْضِபூமியில் مُسْتَقَرٌّவசிக்குமிடம் وَّمَتَاعٌஇன்னும் இன்பம் اِلٰىவரை حِيْنٍ‏ஒரு காலம்
2:36. இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், “நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம்.
2:37
2:37 فَتَلَقّٰٓى اٰدَمُ مِنْ رَّبِّهٖ كَلِمٰتٍ فَتَابَ عَلَيْهِ‌ؕ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ‏
فَتَلَقّٰٓىபெற்றார் اٰدَمُஆதம் مِنْஇருந்து رَّبِّهٖதம் இறைவன் كَلِمٰتٍ(சில) வாக்கியங்களை فَتَابَஆகவே மன்னித்தான் عَلَيْهِ‌ؕஅவரை اِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான் التَّوَّابُதவ்பாவை அங்கீகரிப்பவன் الرَّحِيْمُ‏பேரன்பாளன்
2:37. பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.
2:38
2:38 قُلْنَا اهْبِطُوْا مِنْهَا جَمِيْعًا ‌‌ۚ فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّىْ هُدًى فَمَنْ تَبِعَ هُدَاىَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏
قُلْنَاகூறினோம் اهْبِطُوْاஇறங்குங்கள் مِنْهَاஅதிலிருந்து جَمِيْعًا ۚஅனைவரும் فَاِمَّا يَاْتِيَنَّكُمْநிச்சயமாக வரும்/உங்களுக்கு مِّنِّىْஎன்னிடமிருந்து هُدًىநேர்வழி فَمَنْஎவர்(கள்) تَبِعَபின்பற்றினார்(கள்) هُدَاىَநேர்வழியை/என் فَلَا خَوْفٌஅச்சமில்லை عَلَيْهِمْஅவர்கள் மீது وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
2:38. (பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.”
2:39
2:39 وَالَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِـاٰيٰتِنَآ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ    
وَالَّذِيْنَஇன்னும் எவர்கள் كَفَرُوْاநிராகரித்தார்கள் وَكَذَّبُوْاஇன்னும் பொய்ப்பித்தார்கள் بِـاٰيٰتِنَآவசனங்களை/நம் اُولٰٓٮِٕكَஅவர்கள் اَصْحٰبُ النَّارِ‌ۚநரகவாசிகள் هُمْஅவர்கள் فِيْهَاஅதில் خٰلِدُوْنَநிரந்தரமானவர்கள்
2:39. அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள்; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர்.
2:40
2:40 يٰبَنِىْٓ اِسْرَآءِيْلَ اذْكُرُوْا نِعْمَتِىَ الَّتِىْٓ اَنْعَمْتُ عَلَيْكُمْ وَاَوْفُوْا بِعَهْدِىْٓ اُوْفِ بِعَهْدِكُمْۚ وَاِيَّاىَ فَارْهَبُوْنِ‏
يٰبَنِىْٓசந்ததிகளே اِسْرَآءِيْلَஇஸ்ராயீலின் اذْكُرُوْاநினைவு கூறுங்கள் نِعْمَتِىَஎன் அருளை الَّتِىْٓஎது اَنْعَمْتُஅருள் புரிந்தேன் عَلَيْكُمْஉங்கள் மீது وَاَوْفُوْاஇன்னும் நிறைவேற்றுங்கள் بِعَهْدِىْٓவாக்கை/என் اُوْفِநிறைவேற்றுவேன் بِعَهْدِكُمْۚவாக்கை/உங்கள் وَاِيَّاىَஇன்னும் என்னையே فَارْهَبُوْنِ‏பயப்படுங்கள்/என்னை
2:40. இஸ்ராயீலின் சந்ததியினரே! நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவு கூறுங்கள்; நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்; மேலும், நீங்கள் (வேறெவருக்கும் அஞ்சாது) எனக்கே அஞ்சுவீர்களாக.
2:41
2:41 وَاٰمِنُوْا بِمَآ اَنْزَلْتُ مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ وَلَا تَكُوْنُوْآ اَوَّلَ كَافِرٍۢ بِهٖ‌ وَلَا تَشْتَرُوْا بِاٰيٰتِىْ ثَمَنًا قَلِيْلًا وَّاِيَّاىَ فَاتَّقُوْنِ‏
وَاٰمِنُوْاஇன்னும் நம்பிக்கை கொள்ளுங்கள் بِمَآஎதை اَنْزَلْتُஇறக்கினேன் مُصَدِّقًاஉண்மைப்படுத்தக் கூடியதாக لِّمَاஎதை مَعَكُمْஉங்களிடம் وَلَا تَكُوْنُوْآஇன்னும் ஆகிவிடாதீர்கள் اَوَّلَமுதலாமவர்களாக كَافِرٍۢநிராகரிப்பவர்களில் بِهٖ‌அதை وَلَا تَشْتَرُوْاஇன்னும் (விலைக்கு) வாங்காதீர்கள் بِاٰيٰتِىْஎன் வசனங்களுக்குப் பகரமாக ثَمَنًاகிரயத்தை قَلِيْلًاசொற்ப وَّاِيَّاىَஇன்னும் என்னையே فَاتَّقُوْنِ‏அஞ்சுங்கள்/என்னை
2:41. இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது; நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக.
2:42
2:42 وَلَا تَلْبِسُوا الْحَـقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَـقَّ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ‏
وَلَا تَلْبِسُواகலக்காதீர்கள் الْحَـقَّஉண்மையை بِالْبَاطِلِபொய்யுடன் وَتَكْتُمُواஇன்னும் மறைக்காதீர்கள் الْحَـقَّஉண்மையை وَاَنْتُمْநீங்கள் تَعْلَمُوْنَ‏அறிகிறீர்கள்
2:42. நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.
2:43
2:43 وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَارْكَعُوْا مَعَ الرّٰكِعِيْنَ‏
وَاَقِيْمُواஇன்னும் நிலைநிறுத்துங்கள் الصَّلٰوةَதொழுகையை وَاٰتُواஇன்னும் கொடுங்கள் الزَّكٰوةَஸகாத்தை وَارْكَعُوْاஇன்னும் /பணியுங்கள் مَعَ الرّٰكِعِيْنَ‏பணிபவர்களுடன்
2:43. தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.
2:44
2:44 اَتَاْمُرُوْنَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ اَنْفُسَكُمْ وَاَنْتُمْ تَتْلُوْنَ الْكِتٰبَ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
اَتَاْمُرُوْنَஏவுகிறீர்களா? النَّاسَமக்களுக்கு بِالْبِرِّநன்மையை وَتَنْسَوْنَஇன்னும் மறக்கிறீர்கள் اَنْفُسَكُمْஉங்களை وَاَنْتُمْ تَتْلُوْنَநீங்களோ ஓதுகிறீர்கள் الْكِتٰبَ‌ؕவேதத்தை اَفَلَا تَعْقِلُوْنَ‏நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
2:44. நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?
2:45
2:45 وَاسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ‌ؕ وَاِنَّهَا لَكَبِيْرَةٌ اِلَّا عَلَى الْخٰشِعِيْنَۙ‏
وَاسْتَعِيْنُوْاஇன்னும் உதவிகோருங்கள் بِالصَّبْرِபொறுத்திருந்து وَالصَّلٰوةِ ؕஇன்னும் தொழுது وَاِنَّهَاநிச்சயமாக அது لَكَبِيْرَةٌபளுவானதுதான் اِلَّاதவிர عَلَىமீதே الْخٰشِعِيْنَۙ‏உள்ளச்சமுடையோர்
2:45. மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.
2:46
2:46 الَّذِيْنَ يَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوْا رَبِّهِمْ وَاَنَّهُمْ اِلَيْهِ رٰجِعُوْنَ    
الَّذِيْنَஎவர்கள் يَظُنُّوْنَநம்புவார்கள் اَنَّهُمْநிச்சயமாக/தாங்கள் مُّلٰقُوْاசந்திப்பவர்கள் رَبِّهِمْஇறைவனை/தங்கள் وَاَنَّهُمْஇன்னும் நிச்சயமாக/தாங்கள் اِلَيْهِஅவனிடமே رٰجِعُوْنَ‏திரும்புகிறவர்கள்
2:46. (உள்ளச்சமுடைய) அவர்கள்தாம், “திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம்; நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச்செல்வோம்” என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார்.
2:47
2:47 يٰبَنِىْٓ اِسْرَآءِيْلَ اذْكُرُوْا نِعْمَتِىَ الَّتِىْٓ اَنْعَمْتُ عَلَيْكُمْ وَاَنِّىْ فَضَّلْتُكُمْ عَلَى الْعٰلَمِيْنَ‏
يٰبَنِىْٓசந்ததிகளே اِسْرَآءِيْلَஇஸ்ராயீலின் اذْكُرُوْاநினைவு கூறுங்கள் نِعْمَتِىَஎன் அருளை الَّتِىْٓஎது اَنْعَمْتُஅருள் புரிந்தேன் عَلَيْكُمْஉங்கள் மீது وَاَنِّىْஇன்னும் நிச்சயமாக நான் فَضَّلْتُكُمْமேன்மைப்படுத்தினேன்/உங்களை عَلَىவிட الْعٰلَمِيْنَ‏உலகத்தார்களை
2:47. இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்.
2:48
2:48 وَاتَّقُوْا يَوْمًا لَّا تَجْزِىْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَيْــٴًـــا وَّلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَّلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَّلَا هُمْ يُنْصَرُوْنَ‏
وَاتَّقُوْاஇன்னும் அஞ்சுங்கள் يَوْمًاஒரு நாளை لَّا تَجْزِىْபலனளிக்காது نَفْسٌஓர் ஆன்மா عَنْ نَّفْسٍஓர் ஆன்மாவிற்கு شَیْـًٔاஒன்றையும் وَّلَا يُقْبَلُஇன்னும் ஏற்கப்படாது مِنْهَاஅதனிடமிருந்து شَفَاعَةٌபரிந்துரை وَّلَا يُؤْخَذُஇன்னும் வாங்கப்படாது مِنْهَاஅதனிடமிருந்து عَدْلٌபரிகாரம் وَّلَا هُمْ يُنْصَرُوْنَ‏இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
2:48. இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
2:49
2:49 وَاِذْ نَجَّيْنٰکُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ يُذَبِّحُوْنَ اَبْنَآءَكُمْ وَيَسْتَحْيُوْنَ نِسَآءَكُمْ‌ؕ وَفِىْ ذٰلِكُمْ بَلَاۤءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِيْمٌ‏
وَاِذْ نَجَّيْنٰکُمْசமயம்/காப்பாற்றினோம்/உங்களை مِّنْ اٰلِகூட்டத்திடமிருந்து فِرْعَوْنَஃபிர்அவ்னுடைய يَسُوْمُوْنَكُمْசிரமம் தந்தார்கள்/உங்களுக்கு سُوْٓءَதீயது, கொடியது الْعَذَابِவேதனை يُذَبِّحُوْنَஅறுத்தார்கள் اَبْنَآءَكُمْஆண் பிள்ளைகளை/உங்கள் وَيَسْتَحْيُوْنَஇன்னும் வாழவிட்டார்கள் نِسَآءَكُمْ‌ؕபெண்(பிள்ளை)களை/உங்கள் وَفِىْ ذٰلِكُمْஅதில் بَلَاۤءٌஒரு சோதனை مِّنْ رَّبِّكُمْஉங்கள் இறைவனிடமிருந்து عَظِيْمٌ‏பெரிய
2:49. உங்களை கடுமையாக வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் விடுவித்ததையும் (நினைவு கூறுங்கள்); அவர்கள் உங்கள் ஆண் மக்களை கொன்று, உங்கள் பெண்மக்களை (மட்டும்) வாழவிட்டிருந்தார்கள்; அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை இருந்தது.
2:50
2:50 وَاِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَاَنْجَيْنٰکُمْ وَاَغْرَقْنَآ اٰلَ فِرْعَوْنَ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ‏
وَاِذْஇன்னும் சமயம் فَرَقْنَاபிளந்தோம் بِكُمُஉங்களுக்காக الْبَحْرَகடலை فَاَنْجَيْنٰکُمْகாப்பாற்றினோம்/ உங்களை وَاَغْرَقْنَآஇன்னும் மூழ்கடித்தோம் اٰلَகூட்டத்தாரை فِرْعَوْنَஃபிர்அவ்னுடைய وَاَنْتُمْ تَنْظُرُوْنَ‏நீங்கள் பார்த்துக் கொண்டிருக்க
2:50. மேலும் உங்களுக்காக நாம் கடலைப்பிளந்து, உங்களை நாம் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை அதில் மூழ்கடித்தோம்(என்பதையும் நினைவு கூறுங்கள்).
2:51
2:51 وَاِذْ وٰعَدْنَا مُوْسٰٓى اَرْبَعِيْنَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْۢ بَعْدِهٖ وَاَنْـتُمْ ظٰلِمُوْنَ‏
وَاِذْஇன்னும் சமயம் وٰعَدْنَاவாக்களித்தோம் مُوْسٰٓىமூஸாவிற்கு اَرْبَعِيْنَநாற்பது لَيْلَةًஇரவுகளை ثُمَّபிறகு اتَّخَذْتُمُஎடுத்துக்கொண்டீர்கள் الْعِجْلَகாளைக் கன்றை مِنْۢ بَعْدِهٖஅவருக்குப் பின்னர் وَاَنْـتُمْநீங்கள் ظٰلِمُوْنَ‏அநியாயக்காரர்கள்
2:51. மேலும் நாம் மூஸாவுக்கு(வேதம் அருள) நாற்பது இரவுகளை வாக்களித்தோம்; (அதற்காக அவர் சென்ற) பின்னர் காளைக்கன்(று ஒன்)றைக் (கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள்; (அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.
2:52
2:52 ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏
ثُمَّபிறகு عَفَوْنَاமன்னித்தோம் عَنْكُمْஉங்களை مِّنْۢ بَعْدِ ذٰلِكَபின்னர்/அதன் لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
2:52. இதன் பின்னரும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நாம் உங்களை மன்னித்தோம்.
2:53
2:53 وَاِذْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏
وَاِذْஇன்னும் சமயம் اٰتَيْنَاகொடுத்தோம் مُوْسَىமூஸாவிற்கு الْكِتٰبَவேதத்தை وَالْفُرْقَانَஇன்னும் பகுத்தறிவிக்கக் கூடியதை لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏நீங்கள் நேர்வழி பெறுவதற்காக
2:53. இன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்க்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்).
2:54
2:54 وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ اِنَّكُمْ ظَلَمْتُمْ اَنْفُسَکُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوْبُوْآ اِلٰى بَارِٮِٕكُمْ فَاقْتُلُوْٓا اَنْفُسَكُمْؕ ذٰلِكُمْ خَيْرٌ لَّـكُمْ عِنْدَ بَارِٮِٕكُمْؕ فَتَابَ عَلَيْكُمْ‌ؕ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ‏
وَاِذْஇன்னும் சமயம் قَالَகூறினார் مُوْسٰىமூசா لِقَوْمِهٖசமுதாயத்திற்கு/தன் يٰقَوْمِஎன் சமுதாயமே اِنَّكُمْநிச்சயமாக நீங்கள் ظَلَمْتُمْஅநியாயம்செய்தீர்கள் اَنْفُسَکُمْஆன்மாக்களுக்கு/உங்கள் بِاتِّخَاذِكُمُநீங்கள் எடுத்துக் கொண்டதினால் الْعِجْلَகாளைக் கன்றை فَتُوْبُوْآஎனவே பாவத்தை விட்டுத் திரும்புங்கள் اِلٰىபக்கம் بَارِٮِٕكُمْபடைத்தவன்/உங்களை فَاقْتُلُوْٓاஆகவேகொல்லுங்கள் اَنْفُسَكُمْؕஉயிர்களை/உங்கள் ذٰلِكُمْஅது خَيْرٌசிறந்தது لَّـكُمْஉங்களுக்கு عِنْدَஇடம் بَارِٮِٕكُمْؕபடைத்தவன்/உங்களை فَتَابَஎனவே மன்னித்தான் عَلَيْكُمْ‌ؕஉங்களை اِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான் التَّوَّابُதவ்பாவை அங்கீகரிப்பவன் الرَّحِيْمُ‏பேரன்பாளன்
2:54. மூஸா தம் சமூகத்தாரை நோக்கி; “என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை(வணக்கத்திற்காக) எடுத்துக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள்; அதுவே உங்களைப் படைத்தவனிடம், உங்களுக்கு நற்பலன் அளிப்பதாகும்” எனக் கூறினார். (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைவு கூறுங்கள்.) நிச்சயமாக, அவன் தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கிறான்.
2:55
2:55 وَاِذْ قُلْتُمْ يٰمُوْسٰى لَنْ نُّؤْمِنَ لَـكَ حَتّٰى نَرَى اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْكُمُ الصّٰعِقَةُ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ‏
وَاِذْஇன்னும் சமயம் قُلْتُمْகூறினீர்கள் يٰمُوْسٰىமூஸாவே! لَنْ نُّؤْمِنَநம்பிக்கை கொள்ளவே மாட்டோம் لَـكَ حَتّٰى نَرَىஉம்மை/நாம் காணும் வரை اللّٰهَஅல்லாஹ்வை جَهْرَةًகண்கூடாக فَاَخَذَتْكُمُஎனவே பிடித்தது/உங்களை الصّٰعِقَةُபெரும் சப்தம் وَاَنْتُمْ تَنْظُرُوْنَ‏நீங்கள் பார்த்துக்கொண்டிருக்க
2:55. இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) நீங்கள், “மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்” என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது.
2:56
2:56 ثُمَّ بَعَثْنٰكُمْ مِّنْۢ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏
ثُمَّபிறகு بَعَثْنٰكُمْஎழுப்பினோம்/உங்களை مِّنْۢ بَعْدِபின்னர் مَوْتِكُمْமரணம்/உங்கள் لَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
2:56. நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, நீங்கள் இறந்தபின் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம்.
2:57
2:57 وَظَلَّلْنَا عَلَيْکُمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوٰى‌ؕ كُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ‌ؕ وَمَا ظَلَمُوْنَا وَلٰـكِنْ كَانُوْآ اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ‏
وَظَلَّلْنَاஇன்னும் நிழலிடச் செய்தோம் عَلَيْکُمُஉங்கள் மீது الْغَمَامَமேகத்தை وَاَنْزَلْنَاஇன்னும் இறக்கினோம் عَلَيْكُمُஉங்கள் மீது الْمَنَّமன்னு وَالسَّلْوٰى‌ؕஇன்னும் ஸல்வா كُلُوْاபுசியுங்கள் مِنْ طَيِّبٰتِநல்லவற்றிலிருந்து مَاநாம் வழங்கியது رَزَقْنٰكُمْ‌ؕஉங்களுக்கு وَمَاஇல்லை ظَلَمُوْنَاநமக்கு அவர்கள் தீங்கிழைக்க وَلٰـكِنْஎனினும் كَانُوْآஇருந்தனர் اَنْفُسَهُمْதங்களுக்கே يَظْلِمُوْنَ‏தீங்கிழைப்பவர்களாக
2:57. இன்னும், உங்கள் மீது மேகம் நிழலிடச் செய்தோம்; மேலும் “மன்னு, ஸல்வா” (என்னும் மேன்மையான உணவுப் பொருள்களை) உங்களுக்காக இறக்கி வைத்து, “நாம் உங்களுக்கு அருளியுள்ள பரிசுத்தமான உணவுகளிலிருந்து புசியுங்கள்” (என்றோம்;) எனினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்துவிடவில்லை; மாறாக, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
2:58
2:58 وَاِذْ قُلْنَا ادْخُلُوْا هٰذِهِ الْقَرْيَةَ فَکُلُوْا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَّادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَّقُوْلُوْا حِطَّةٌ نَّغْفِرْ لَـكُمْ خَطٰيٰكُمْ‌ؕ وَسَنَزِيْدُ الْمُحْسِنِيْنَ‏
وَاِذْஇன்னும் சமயம் قُلْنَاகூறினோம் ادْخُلُوْاநுழையுங்கள் هٰذِهِஇந்த الْقَرْيَةَஊரில் فَکُلُوْاஇன்னும் புசியுங்கள் مِنْهَاஅதில் حَيْثُவிதத்தில் شِئْتُمْநாடினீர்கள் رَغَدًاதாராளமாக وَّادْخُلُواஇன்னும் நுழையுங்கள் الْبَابَவாசலில் سُجَّدًاதலைகுனிந்தவர்களாக وَّقُوْلُوْاஇன்னும் கூறுங்கள் حِطَّةٌபாவச்சுமை நீங்குக! نَّغْفِرْமன்னிப்போம் لَـكُمْஉங்களுக்கு خَطٰيٰكُمْ‌ؕகுற்றங்களை/உங்கள் وَسَنَزِيْدُஇன்னும் அதிகப்படுத்துவோம் الْمُحْسِنِيْنَ‏நல்லறம் புரிவோருக்கு
2:58. இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம் “ இந்த பட்டிணத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள் அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி “ஹித்ததுன்” (-“எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்”) என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம்.
2:59
2:59 فَبَدَّلَ الَّذِيْنَ ظَلَمُوْا قَوْلاً غَيْرَ الَّذِىْ قِيْلَ لَهُمْ فَاَنْزَلْنَا عَلَى الَّذِيْنَ ظَلَمُوْا رِجْزًا مِّنَ السَّمَآءِ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ
فَبَدَّلَஆகவே மாற்றினார்(கள்) الَّذِيْنَ ظَلَمُوْاஅநியாயக்காரர்கள் قَوْلاًவார்த்தையாக غَيْرَஅல்லாத الَّذِىْஎது قِيْلَகூறப்பட்டது لَهُمْதங்களுக்கு فَاَنْزَلْنَاஎனவே இறக்கினோம் عَلَىமீது الَّذِيْنَ ظَلَمُوْاஅநியாயக்காரர்கள் رِجْزًاவேதனையை مِّنَஇருந்து السَّمَآءِவானம் بِمَاகாரணமாக كَانُوْاஇருந்தார்கள் يَفْسُقُوْنَ    பாவம் செய்பவர்களாக
2:59. ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம்.
2:60
2:60 وَاِذِ اسْتَسْقَىٰ مُوْسٰى لِقَوْمِهٖ فَقُلْنَا اضْرِبْ بِّعَصَاكَ الْحَجَرَ‌ؕ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا‌ؕ قَدْ عَلِمَ کُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْ‌ؕ کُلُوْا وَاشْرَبُوْا مِنْ رِّزْقِ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِىْ الْاَرْضِ مُفْسِدِيْنَ‏
وَاِذِஇன்னும் சமயம் اسْتَسْقَىٰதண்ணீர் தேடினார் مُوْسٰى لِقَوْمِهٖமூசா/சமுதாயத்திற்கு/தனது فَقُلْنَاஆகவே, கூறினோம் اضْرِبْஅடிப்பீராக بِّعَصَاكَதடியால்/உம் الْحَجَرَ‌ؕகல்லை فَانْفَجَرَتْபீறிட்டன مِنْهُஅதிலிருந்து اثْنَتَا عَشْرَةَபன்னிரெண்டு عَيْنًا‌ؕஊற்று(கள்) قَدْ عَلِمَதிட்டமாக அறிந்தார்(கள்) کُلُّஎல்லாம் اُنَاسٍமக்கள் مَّشْرَبَهُمْ‌ؕகுடிக்குமிடத்தை/தங்கள் کُلُوْاபுசியுங்கள் وَاشْرَبُوْاஇன்னும் பருகுங்கள் مِنْ رِّزْقِஉணவிலிருந்து اللّٰهِஅல்லாஹ்வின் وَلَا تَعْثَوْاஇன்னும் வரம்பு மீறி விஷமம் செய்யாதீர்கள் فِىْ الْاَرْضِபூமியில் مُفْسِدِيْنَ‏விஷமிகளாக
2:60. மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, “உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக!” என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; “அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்” (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள்.
2:61
2:61 وَاِذْ قُلْتُمْ يٰمُوْسٰى لَنْ نَّصْبِرَ عَلٰى طَعَامٍ وَّاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ مِنْۢ بَقْلِهَا وَقِثَّـآٮِٕهَا وَفُوْمِهَا وَعَدَسِهَا وَ بَصَلِهَا‌ؕ قَالَ اَتَسْتَبْدِلُوْنَ الَّذِىْ هُوَ اَدْنٰى بِالَّذِىْ هُوَ خَيْرٌ‌ؕ اِهْبِطُوْا مِصْرًا فَاِنَّ لَـکُمْ مَّا سَاَلْتُمْ‌ؕ وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْکَنَةُ وَبَآءُوْ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ‌ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ كَانُوْا يَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَيَقْتُلُوْنَ النَّبِيّٖنَ بِغَيْرِ الْحَـقِّ‌ؕ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّڪَانُوْا يَعْتَدُوْنَ
وَاِذْஇன்னும் சமயம் قُلْتُمْகூறினீர்கள் يٰمُوْسٰىமூஸாவே! لَنْ نَّصْبِرَசகிக்கவே மாட்டோம் عَلٰىமீது طَعَامٍஓர் உணவு وَّاحِدٍஒரே (ஒன்று) فَادْعُஆகவே பிரார்த்திப்பீராக لَنَاஎங்களுக்காக رَبَّكَஉம் இறைவனிடம் يُخْرِجْஉற்பத்திசெய்வான் لَنَاஎங்களுக்காக مِمَّاஎதிலிருந்து تُنْۢبِتُவிளைவிக்கிறது الْاَرْضُபூமி مِنْۢஇருந்து بَقْلِهَاஅதன் கீரை وَقِثَّـآٮِٕهَاஇன்னும் வெள்ளரிக்காய்/அதன் وَفُوْمِهَاஇன்னும் கோதுமை/அதன் وَعَدَسِهَاஇன்னும் பருப்பு/அதன் بَصَلِهَا‌ؕஇன்னும் வெங்காயம் / அதன் قَالَகூறினார் اَتَسْتَبْدِلُوْنَமாற்றிக் கொள்கிறீர்களா? الَّذِىْஎது هُوَஅது اَدْنٰىமிகத் தாழ்ந்தது بِالَّذِىْஎதற்குப் பகரமாக هُوَ خَيْرٌ‌ؕஅது சிறந்தது اِهْبِطُوْاஇறங்குங்கள் مِصْرًاஒரு நகரத்தில் فَاِنَّநிச்சயமாக لَـکُمْஉங்களுக்கு مَّاஎது سَاَلْتُمْ‌ؕகேட்டீர்கள் وَضُرِبَتْஇன்னும் விதிக்கப்பட்டன عَلَيْهِمُஅவர்கள் மீது الذِّلَّةُஇழிவு وَالْمَسْکَنَةُஇன்னும் வீழ்ச்சி وَبَآءُوْஇன்னும் சார்ந்து விட்டார்கள் بِغَضَبٍகோபத்தில் مِّنَ اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின் ذٰلِكَஅது بِاَنَّهُمْகாரணம்/நிச்சயமாக அவர்கள் كَانُوْاஇருந்தார்கள் يَكْفُرُوْنَநிராகரிக்கிறார்கள் بِاٰيٰتِவசனங்களை اللّٰهِஅல்லாஹ்வுடைய وَيَقْتُلُوْنَஇன்னும் கொலை செய்கிறார்கள் النَّبِيّٖنَநபிமார்களை بِغَيْرِ الْحَـقِّ‌ؕநியாயமின்றி ذٰلِكَஅது بِمَاகாரணமாக عَصَوْاபாவம் செய்தனர் وَّڪَانُوْاஇன்னும் இருந்தனர் يَعْتَدُوْنَ‏வரம்பு மீறுவார்கள்
2:61. இன்னும், “மூஸாவே! ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்க மாட்டோம். ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித்தருமாறு உன் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்” என்று நீங்கள் கூற, “நல்லதாக எது இருக்கிறதோ, அதற்கு பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்(ள நாடு)கிறீர்களா? நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள்; அங்கு நீங்கள் கேட்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்” என்று அவர் கூறினார். வறுமையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன; மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது.
2:62
2:62 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَالنَّصٰرٰى وَ الصّٰبِـِٕیْنَ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًـا فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏
اِنَّநிச்சயமாக الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்கள் وَالَّذِيْنَ هَادُوْاஇன்னும் யூதர்கள் وَالنَّصٰرٰىஇன்னும் கிறித்தவர்கள் وَ الصّٰبِـِٕیْنَஇன்னும் ஸாபியீன்கள் مَنْஎவர் اٰمَنَநம்பிக்கை கொண்டார் بِاللّٰهِஅல்லாஹ்வை وَالْيَوْمِ الْاٰخِرِஇன்னும் இறுதி நாளை وَعَمِلَஇன்னும் செய்தார் صَالِحًـاநன்மையை فَلَهُمْஅவர்களுக்கு اَجْرُهُمْகூலி/அவர்களின் عِنْدَ رَبِّهِمْஅவர்களின் இறைவனிடம் وَلَا خَوْفٌஇன்னும் பயம் இல்லை عَلَيْهِمْஅவர்கள் மீது وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
2:62. ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
2:63
2:63 وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَؕ خُذُوْا مَآ اٰتَيْنٰكُمْ بِقُوَّةٍ وَّ اذْكُرُوْا مَا فِيْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ‏
وَاِذْஇன்னும் சமயம் اَخَذْنَاவாங்கினோம் مِيْثَاقَكُمْஉறுதிமொழியை/உங்கள் وَرَفَعْنَاஇன்னும் உயர்த்தினோம் فَوْقَكُمُமேல்/உங்களுக்கு الطُّوْرَؕமலையை خُذُوْاபிடியுங்கள் مَآ اٰتَيْنٰكُمْஎதை/கொடுத்தோம்/உங்களுக்கு بِقُوَّةٍபலமாக وَّ اذْكُرُوْا مَا فِيْهِஇன்னும் நினைவு கூருங்கள்/எதை/அதில் لَعَلَّكُمْ تَتَّقُوْنَ‏நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக
2:63. இன்னும், நாம் உங்களிடம் வாக்குறுதி வாங்கி, “தூர்“ மலையை உங்கள் மேல் உயர்த்தி, “நாம் உங்களுக்கு கொடுத்த (வேதத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (அப்படிச் செய்வீர்களானால்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆவீர்கள்” (என்று நாம் கூறியதையும் நினைவு கூறுங்கள்).
2:64
2:64 ثُمَّ تَوَلَّيْتُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ‌‌ۚ فَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ لَـكُنْتُمْ مِّنَ الْخٰسِرِيْنَ‏
ثُمَّபிறகு تَوَلَّيْتُمْதிரும்பி விட்டீர்கள் مِّنْۢ بَعْدِபின்னர் ذٰلِكَ‌ۚஅதன் فَلَوْلَاஇல்லையென்றால் فَضْلُஅருள் اللّٰهِஅல்லாஹ்வுடைய عَلَيْكُمْஉங்கள் மீது وَرَحْمَتُهٗஇன்னும் அவனின் கருணை لَـكُنْتُمْநீங்கள் ஆகியிருப்பீர்கள் مِّنَ الْخٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளில்
2:64. அதன் பின்னும் நீங்கள் (உங்கள் வாக்குறுதியைப்) புறக்கணித்து (மாறி) விட்டீர்கள்; உங்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் அவன் அருளும் இல்லாவிட்டால் நீங்கள்(முற்றிலும்) நஷ்டவாளிகளாக ஆகியிருப்பீர்கள்.
2:65
2:65 وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِيْنَ اعْتَدَوْا مِنْكُمْ فِىْ السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُوْنُوْا قِرَدَةً خٰسِـِٕیْنَ‌ۚ‏
وَلَقَدْ عَلِمْتُمُதிட்டமாக அறிந்து கொண்டீர்கள் الَّذِيْنَ اعْتَدَوْاவரம்பு மீறியவர்களை مِنْكُمْஉங்களில் فِىْ السَّبْتِசனிக்கிழமைகளில் فَقُلْنَاஎனவே கூறினோம் لَهُمْஅவர்களுக்கு كُوْنُوْاஆகிவிடுங்கள் قِرَدَةًகுரங்குகளாக خَاسِـِٔـيْنَ ۚ‏சிறுமைப்பட்ட(வர்களாக)
2:65. உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி “சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று கூறினோம்.
2:66
2:66 فَجَعَلْنٰهَا نَكٰلاً لِّمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِّلْمُتَّقِيْنَ‏
فَجَعَلْنٰهَاஆகவே, ஆக்கினோம்/அதை نَكٰلاًஎச்சரிக்கை மிகுந்த படிப்பினையாக لِّمَا بَيْنَ يَدَيْهَاஅதற்கு முந்திய பாவங்களுக்கும் وَمَا خَلْفَهَا(அதுபோன்ற) அதற்குப் பிந்திய பாவங்களுக்கும் وَمَوْعِظَةًஇன்னும் உபதேசமாக لِّلْمُتَّقِيْنَ‏அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
2:66. இன்னும், நாம் இதனை அக்காலத்தில் உள்ளவர்களுக்கும், அதற்குப் பின் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாகவும்; பயபக்தியுடையவர்களுக்கு நல்ல உபதேசமாகவும் ஆக்கினோம்.
2:67
2:67 وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖۤ اِنَّ اللّٰهَ يَاْمُرُكُمْ اَنْ تَذْبَحُوْا بَقَرَةً ‌ ؕ قَالُوْآ اَتَتَّخِذُنَا هُزُوًْا ‌ؕ قَالَ اَعُوْذُ بِاللّٰهِ اَنْ اَكُوْنَ مِنَ الْجٰـهِلِيْنَ‏
وَاِذْஇன்னும் சமயம் قَالَகூறினார் مُوْسٰىமூசா لِقَوْمِهٖۤசமுதாயத்திற்கு/தன் اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ் يَاْمُرُكُمْஏவுகிறான்/உங்களை اَنْ تَذْبَحُوْاநீங்கள் அறுப்பதற்கு بَقَرَةً  ؕஒரு பசுவை قَالُوْآகூறினார்கள் اَتَتَّخِذُنَاஎடுத்துக் கொள்கிறீரா?/எங்களை هُزُوًْا ؕபரிகாசமாக قَالَகூறினார் اَعُوْذُபாதுகாப்புத் தேடுகிறேன் بِاللّٰهِஅல்லாஹ்விடம் اَنْ اَكُوْنَநான் ஆகுவதை விட்டு مِنَ الْجٰـهِلِيْنَ‏அறிவிலிகளில்
2:67. இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், “நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்” என்று சொன்னபோது, அவர்கள் “(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?” என்று கூறினர்; (அப்பொழுது) அவர், “(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறினார்.
2:68
2:68 قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا هِىَ‌ؕ قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا فَارِضٌ وَّلَا بِكْرٌؕ عَوَانٌۢ بَيْنَ ذٰلِكَ‌ؕ فَافْعَلُوْا مَا تُؤْمَرُوْنَ‏
قَالُواகூறினார்கள் ادْعُபிரார்த்திப்பீராக لَنَاஎங்களுக்காக رَبَّكَஉம் இறைவனிடம் يُبَيِّنْவிவரிப்பான் لَّنَاஎங்களுக்கு مَاஎன்ன? هِىَ‌ؕஅது قَالَகூறினார் اِنَّهٗநிச்சயமாக அவன் يَقُوْلُகூறுகிறான் اِنَّهَاநிச்சயமாக அது بَقَرَةٌபசு لَّا فَارِضٌகிழடு அல்ல وَّلَا بِكْرٌؕஇன்னும் இளங்கன்றல்ல عَوَانٌۢநடுத்தரமானது بَيْنَமத்தியில் ذٰلِكَ‌ؕஅதற்கு فَافْعَلُوْاஎனவே செய்யுங்கள் مَاஎதை تُؤْمَرُوْنَ‏ஏவப்படுகிறீர்கள்
2:68. “அது எத்தகையது என்பதை எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக!” என்றார்கள். “அப்பசு மாடு அதிகக் கிழடுமல்ல, கன்றுமல்ல, அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகும். எனவே “உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்“ என்று அவன் (அல்லாஹ்) கூறுவதாக” (மூஸா) கூறினார்.
2:69
2:69 قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا لَوْنُهَا ‌ؕ قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ صَفْرَآءُۙ فَاقِعٌ لَّوْنُهَا تَسُرُّ النّٰظِرِيْنَ‏
قَالُواகூறினார்கள் ادْعُபிரார்த்திப்பீராக لَنَاஎங்களுக்காக رَبَّكَஉம் இறைவனிடம் يُبَيِّنْவிவரிப்பான் لَّنَاஎங்களுக்கு مَاஎன்ன? لَوْنُهَا ؕஅதன் நிறம் قَالَகூறினார் اِنَّهٗநிச்சயமாக அவன் يَقُوْلُகூறுகிறான் اِنَّهَاநிச்சயமாக அது بَقَرَةٌபசு صَفْرَآءُۙமஞ்சள் நிறமானது فَاقِعٌதூய்மையானது لَّوْنُهَاநிறம்/அதன் تَسُرُّஅது மகிழ்விக்கும் النّٰظِرِيْنَ‏பார்ப்பவர்களை
2:69. “அதன் நிறம் யாது!” என்பதை விளக்கும்படி நமக்காக உம் இறைவனை வேண்டுவீராக!” என அவர்கள் கூறினார்கள்; அவர் கூறினார் “திடமாக அது மஞ்சள் நிறமுள்ள பசு மாடு; கெட்டியான நிறம்; பார்ப்பவர்களுக்குப் பரவசம் அளிக்கும் அதன் நிறம் என அ(வ்விறை)வன் அருளினான்” என்று மூஸா கூறினார்.
2:70
2:70 قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا هِىَۙ اِنَّ الْبَقَرَ تَشٰبَهَ عَلَيْنَا ؕ وَاِنَّـآ اِنْ شَآءَ اللّٰهُ لَمُهْتَدُوْنَ‏
قَالُواகூறினார்கள் ادْعُபிரார்த்திப்பீராக لَنَاஎங்களுக்காக رَبَّكَஉம் இறைவனிடம் يُبَيِّنْவிவரிப்பான் لَّنَاஎங்களுக்கு مَاஎன்ன? هِىَۙஅது اِنَّநிச்சயமாக الْبَقَرَமாடுகள் تَشٰبَهَகுழப்பமாகி விட்டன عَلَيْنَا ؕஎங்களுக்கு وَاِنَّـآஇன்னும் நிச்சயமாகநாங்கள் اِنْ شَآءَ اللّٰهُநாடினால்/அல்லாஹ் لَمُهْتَدُوْنَ‏திட்டமாக (நாம்) நேர்வழி பெறுவோம்
2:70. “உமது இறைவனிடத்தில் எங்களுக்காக பிரார்த்தனை செய்வீராக! அவன் அது எப்படிப்பட்டது என்பதை எங்களுக்கு தெளிவு படுத்துவான். எங்களுக்கு எல்லாப் பசுமாடுகளும் திடனாக ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன; அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாம் நேர்வழி பெறுவோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
2:71
2:71 قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا ذَلُوْلٌ تُثِيْرُ الْاَرْضَ وَلَا تَسْقِى الْحَـرْثَ ‌ۚ مُسَلَّمَةٌ لَّا شِيَةَ فِيْهَا ‌ؕ قَالُوا الْـٰٔـنَ جِئْتَ بِالْحَـقِّ‌ؕ فَذَبَحُوْهَا وَمَا كَادُوْا يَفْعَلُوْنَ
قَالَகூறினார் اِنَّهٗநிச்சயமாக அவன் يَقُوْلُகூறுகிறான் اِنَّهَاநிச்சயமாக அது بَقَرَةٌபசு لَّا ذَلُوْلٌபயன்படுத்தப்படாதது تُثِيْرُஉழுவதற்கு الْاَرْضَநிலத்தை وَلَا تَسْقِىநீர் இறைக்காது الْحَـرْثَ ۚவிளை நிலத்திற்கு مُسَلَّمَةٌகுறையற்றது لَّاஅறவே இல்லை شِيَةَவடு فِيْهَا ؕஅதில் قَالُواகூறினார்கள் الْـٰٔـنَஇப்போது جِئْتَவந்தீர் بِالْحَـقِّ‌ؕஉண்மையைக் கொண்டு فَذَبَحُوْهَاஅறுத்தார்கள்/அதை وَمَا كَادُوْاஅவர்கள் நெருங்கவில்லை يَفْعَلُوْنَ‏செய்வார்கள்
2:71. அவர் (மூஸா) “நிச்சயமாக அப்பசுமாடு நிலத்தில் உழவடித்தோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப்படாதது; ஆரோக்கியமானது; எவ்விதத்திலும் வடுவில்லாதது என்று இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார். “இப்பொழுதுதான் நீர் சரியான விபரத்தைக் கொண்டு வந்தீர்” என்று சொல்லி அவர்கள் செய்ய இயலாத நிலையில் அப்பசு மாட்டை அறுத்தார்கள்.
2:72
2:72 وَ اِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادّٰرَءْتُمْ فِيْهَا ‌ؕ وَاللّٰهُ مُخْرِجٌ مَّا كُنْتُمْ تَكْتُمُوْنَۚ‏
وَ اِذْ قَتَلْتُمْஇன்னும் சமயம்/கொன்றீர்கள் نَفْسًاஓர் உயிரை فَادّٰرَءْتُمْஇன்னும் தர்க்கித்தீர்கள் فِيْهَا ؕஅதில் وَاللّٰهُஇன்னும் அல்லாஹ் مُخْرِجٌவெளியாக்கக்கூடியவன் مَّاஎதை كُنْتُمْஇருந்தீர்கள் تَكْتُمُوْنَۚ‏மறைக்கிறீர்கள்
2:72. “நீங்கள் ஒரு மனிதனை கொன்றீர்கள்; பின் அதுபற்றி (ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டித்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள்; ஆனால் அல்லாஹ் நீங்கள் மறைத்ததை வெளியாக்குபவனாக இருந்தான் (என்பதை நினைவு கூறுங்கள்).
2:73
2:73 فَقُلْنَا اضْرِبُوْهُ بِبَعْضِهَا ‌ؕ كَذٰلِكَ يُحْىِ اللّٰهُ الْمَوْتٰى ۙ وَيُرِيْکُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏
فَقُلْنَاஎனவே கூறினோம் اضْرِبُوْهُஅடியுங்கள்/அவரை بِبَعْضِهَا ؕகொண்டு/சிலதை/அதில் كَذٰلِكَஅப்படியே يُحْىِஉயிர்ப்பிப்பான் اللّٰهُஅல்லாஹ் الْمَوْتٰى ۙஇறந்தவர்களை وَيُرِيْکُمْஇன்னும் காண்பிக்கிறான்/உங்களுக்கு اٰيٰتِهٖதன் அத்தாட்சிகளை لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏நீங்கள் சிந்தித்து புரிவதற்காக
2:73. “(அறுக்கப்பட்ட அப்பசுவின்) ஒரு துண்டால் அ(க்கொலையுண்டவனின் சடலத்)தில் அடியுங்கள்” என்று நாம் சொன்னோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சிகளையும் அவன்(இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான்.
2:74
2:74 ثُمَّ قَسَتْ قُلُوْبُكُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ فَهِىَ كَالْحِجَارَةِ اَوْ اَشَدُّ قَسْوَةً ‌ ؕ وَاِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْاَنْهٰرُ‌ؕ وَاِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَآءُ‌ؕ وَاِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللّٰهِ‌ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ‏
ثُمَّபிறகு قَسَتْஇறுகிவிட்டன قُلُوْبُكُمْஉங்கள் உள்ளங்கள் مِّنْۢ بَعْدِ ذٰلِكَபின்னர்/அதற்கு فَهِىَஅவை كَالْحِجَارَةِபோல/கற்கள் اَوْஅல்லது اَشَدُّமிகக் கடினமானவை قَسْوَةً  ؕஇறுக்கத்தால் وَاِنَّஇன்னும் நிச்சயமாக مِنَ الْحِجَارَةِகற்களில் لَمَاதிட்டமாக/எது يَتَفَجَّرُபீறிடுகிறது مِنْهُஅதில் الْاَنْهٰرُ‌ؕநதிகள் وَاِنَّஇன்னும் நிச்சயமாக مِنْهَاஅவற்றில் لَمَاதிட்டமாக/எது يَشَّقَّقُபிளக்கிறது فَيَخْرُجُஇன்னும் வெளியேறுகிறது مِنْهُஅதிலிருந்து الْمَآءُ‌ؕதண்ணீர் وَاِنَّஇன்னும் நிச்சயமாக مِنْهَاஅவற்றில் لَمَاதிட்டமாக/எது يَهْبِطُவிழுகிறது مِنْ خَشْيَةِபயத்தால் اللّٰهِ‌ؕஅல்லாஹ்வுடைய وَمَاஇல்லை اللّٰهُஅல்லாஹ் بِغَافِلٍகவனமற்றவனாக عَمَّاஎதைப்பற்றி تَعْمَلُوْنَ‏செய்கிறீர்கள்
2:74. இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன; அவை கற்பாறையைப்போல் ஆயின; அல்லது, (அதை விடவும்)அதிகக் கடினமாயின; (ஏனெனில்) திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு; இன்னும், சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு; இன்னும், திடமாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் சில(கற்பாறைகள்) உருண்டு விழக்கூடியவையும் உண்டு; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி கவனிக்காமல் இல்லை.
2:75
2:75 اَفَتَطْمَعُوْنَ اَنْ يُّؤْمِنُوْا لَـكُمْ وَقَدْ كَانَ فَرِيْقٌ مِّنْهُمْ يَسْمَعُوْنَ كَلٰمَ اللّٰهِ ثُمَّ يُحَرِّفُوْنَهٗ مِنْۢ بَعْدِ مَا عَقَلُوْهُ وَهُمْ يَعْلَمُوْنَ‏
اَفَتَطْمَعُوْنَஆசைப்படுகிறீர்களா? اَنْ يُّؤْمِنُوْاஅவர்கள் நம்பிக்கைகொள்வதை لَـكُمْஉங்களுக்காக وَقَدْ كَانَதிட்டமாக இருக்கின்றனர் فَرِيْقٌஒரு பிரிவினர் مِّنْهُمْஅவர்களில் يَسْمَعُوْنَசெவியுறுகின்றனர் کَلَامَபேச்சை اللّٰهِஅல்லாஹ்வுடைய ثُمَّபிறகு يُحَرِّفُوْنَهٗமாற்றுகின்றனர்/அதை مِنْۢ بَعْدِபின்னர் مَاஅதை عَقَلُوْهُசிந்தித்து புரிந்தனர் وَهُمْஅவர்கள் يَعْلَمُوْنَ‏அறிகின்றனர்
2:75. (முஸ்லிம்களே!) இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா? இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு; அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள்.
2:76
2:76 وَاِذَا لَـقُوْا الَّذِيْنَ اٰمَنُوْا قَالُوْآ اٰمَنَّا  ۖۚ وَاِذَا خَلَا بَعْضُهُمْ اِلٰى بَعْضٍ قَالُوْآ اَ تُحَدِّثُوْنَهُمْ بِمَا فَتَحَ اللّٰهُ عَلَيْكُمْ لِيُحَآجُّوْكُمْ بِهٖ عِنْدَ رَبِّكُمْ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
وَاِذَا لَـقُوْاஅவர்கள் சந்தித்தால் الَّذِيْنَஎவர்கள் اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள் قَالُوْآகூறினார்கள் اٰمَنَّا  ۖۚநம்பிக்கைகொள்கிறோம் وَاِذَا خَلَاதனித்து விட்டால் بَعْضُهُمْசிலர்/அவர்களில் اِلٰى بَعْضٍசிலருடன் قَالُوْآகூறுகிறார்கள் اَ تُحَدِّثُوْنَهُمْஅறிவிக்கிறீர்களா? / அவர்களுக்கு بِمَاஎதை فَتَحَதெரிவித்தான் اللّٰهُஅல்லாஹ் عَلَيْكُمْஉங்களுக்கு لِيُحَآجُّوْكُمْஅவர்கள் தர்க்கிப்பதற்காக/உங்களிடம் بِهٖஅதைக் கொண்டு عِنْدَ رَبِّكُمْ‌ؕஉங்கள்இறைவன்முன் اَفَلَا تَعْقِلُوْنَ‏நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
2:76. மேலும் அவர்கள் ஈமான் கொண்டவர்களை சந்திக்கும்போது, “நாங்களும் ஈமான் கொண்டிருக்கிறோம்” என்று சொல்கிறார்கள் ஆனால் அவர்களுள் சிலர் (அவர்களுள்) சிலருடன் தனித்திடும்போது, “உங்கள் இறைவன் முன் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதாடுவதற்காக அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துத் தந்த (தவ்ராத்)தை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறீர்களா, (இதை) நீங்கள் உணரமாட்டீர்களா? என்று(யூதர்கள் சிலர்) கூறுகின்றனர்.
2:77
2:77 اَوَلَا يَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا يُسِرُّوْنَ وَمَا يُعْلِنُوْنَ‏
اَوَلَا يَعْلَمُوْنَஅறிய மாட்டார்களா? اَنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் يَعْلَمُநன்கறிவான் مَاஎது يُسِرُّوْنَஇரகசியமாகப் பேசுகிறார்கள் وَمَاஇன்னும் எது يُعْلِنُوْنَ‏பகிரங்கப்படுத்துகிறார்கள்
2:77. அவர்கள் மறைத்து வைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா?
2:78
2:78 وَ مِنْهُمْ اُمِّيُّوْنَ لَا يَعْلَمُوْنَ الْكِتٰبَ اِلَّاۤ اَمَانِىَّ وَاِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ‏
وَ مِنْهُمْஅவர்களில் اُمِّيُّوْنَகல்வி இல்லாதவர்கள் لَا يَعْلَمُوْنَஅறியமாட்டார்கள் الْكِتٰبَவேதத்தை اِلَّاۤதவிர اَمَانِىَّவீண் நம்பிக்கைகளை وَاِنْஇல்லை هُمْஅவர்கள் اِلَّاதவிர يَظُنُّوْنَ‏சந்தேகிக்கிறார்கள்
2:78. மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை.
2:79
2:79 فَوَيْلٌ لِّلَّذِيْنَ يَكْتُبُوْنَ الْكِتٰبَ بِاَيْدِيْهِمْ ثُمَّ يَقُوْلُوْنَ هٰذَا مِنْ عِنْدِ اللّٰهِ لِيَشْتَرُوْا بِهٖ ثَمَنًا قَلِيْلًا ؕ فَوَيْلٌ لَّهُمْ مِّمَّا کَتَبَتْ اَيْدِيْهِمْ وَوَيْلٌ لَّهُمْ مِّمَّا يَكْسِبُوْنَ‏
فَوَيْلٌகேடுதான் لِّلَّذِيْنَஎவர்களுக்கு يَكْتُبُوْنَஎழுதுகிறார்கள் الْكِتٰبَபுத்தகத்தை بِاَيْدِيْهِمْதங்கள் கரங்களால் ثُمَّபிறகு يَقُوْلُوْنَகூறுகிறார்கள் هٰذَاஇது مِنْஇருந்து عِنْدِ اللّٰهِஅல்லாஹ்விடம் لِيَشْتَرُوْاஅவர்கள் வாங்குவதற்காக بِهٖஅதைக் கொண்டு ثَمَنًاகிரயத்தை قَلِيْلًا ؕசொற்பமான فَوَيْلٌஇன்னும் கேடுதான் لَّهُمْஅவர்களுக்கு مِّمَّاஎதன் காரணமாக کَتَبَتْஎழுதியன اَيْدِيْهِمْஅவர்களின் கரங்கள் وَوَيْلٌஇன்னும் கேடுதான் لَّهُمْஅவர்களுக்கு مِّمَّاஎதன் காரணமாக يَكْسِبُوْنَ‏சம்பாதிக்கிறார்கள்
2:79. அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்!
2:80
2:80 وَقَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّاۤ اَيَّامًا مَّعْدُوْدَةً ‌ ؕ قُلْ اَتَّخَذْتُمْ عِنْدَ اللّٰهِ عَهْدًا فَلَنْ يُّخْلِفَ اللّٰهُ عَهْدَهٗۤ‌ اَمْ تَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ‏
وَقَالُوْاஇன்னும் கூறினர் لَنْ تَمَسَّنَاஎங்களை அறவே தீண்டாது النَّارُநரக நெருப்பு اِلَّاۤதவிர اَيَّامًاநாள்களை مَّعْدُوْدَةً  ؕஎண்ணப்பட்டவை قُلْகூறுவீராக اَتَّخَذْتُمْஎடுத்துக் கொண்டீர்களா? عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம் عَهْدًاஓர் உறுதிமொழியை فَلَنْ يُّخْلِفَமாற்றவே மாட்டான் اللّٰهُஅல்லாஹ் عَهْدَهٗۤ‌உறுதிமொழியை/தன் اَمْஅல்லது تَقُوْلُوْنَகூறுகிறீர்கள் عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீது مَاஎதை لَا تَعْلَمُوْنَ‏அறியமாட்டீர்கள்
2:80. “ஒரு சில நாட்கள் தவிர எங்களை நரக நெருப்புத் தீண்டாது” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதேனும் உறுதிமொழி பெற்றிருக்கிறீர்களா? அப்படியாயின் அல்லாஹ் தன் உறுதி மொழிக்கு மாற்றம் செய்யவே மாட்டான்; அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக் கட்டிக் கூறுகின்றீர்களா?” என்று (நபியே! அந்த யூதர்களிடம்) நீர் கேளும்.
2:81
2:81 بَلٰى مَنْ كَسَبَ سَيِّئَةً وَّاَحَاطَتْ بِهٖ خَطِيْۤئَتُهٗ فَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
بَلٰىஅவ்வாறன்று مَنْஎவர்(கள்) كَسَبَசம்பாதித்தார்(கள்) سَيِّئَةًதீமையை وَّاَحَاطَتْஇன்னும் சூழ்ந்து கொண்டது بِهٖஅவரை خَطِيْۤئَتُهٗஅவருடைய பாவம் فَاُولٰٓٮِٕكَஅவர்கள் اَصْحٰبُ النَّارِ‌ۚநரகவாசிகள் هُمْஅவர்கள் فِيْهَاஅதில் خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
2:81. அப்படியல்ல! எவர் தீமையைச் சம்பாதித்து, அந்தக் குற்றம் அவரைச் சூழ்ந்து கொள்கிறதோ, அத்தகையோர் நரகவாசிகளே; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் இருப்பார்கள்.
2:82
2:82 وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْجَـنَّةِ ‌‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
وَالَّذِيْنَஇன்னும் எவர்கள் اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள் وَعَمِلُواஇன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِநற்காரியங்களை اُولٰٓٮِٕكَஅவர்கள் اَصْحٰبُ الْجَـنَّةِ ۚசொர்க்கவாசிகள் هُمْஅவர்கள் فِيْهَاஅதில் خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
2:82. எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள்; அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள்.
2:83
2:83 وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَ بَنِىْٓ اِسْرَآءِيْلَ لَا تَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰکِيْنِ وَقُوْلُوْا لِلنَّاسِ حُسْنًا وَّاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّکٰوةَ ؕ ثُمَّ تَوَلَّيْتُمْ اِلَّا قَلِيْلًا مِّنْکُمْ وَاَنْـتُمْ مُّعْرِضُوْنَ‏
وَاِذْஇன்னும் சமயம் اَخَذْنَاவாங்கினோம் مِيْثَاقَஉறுதிமொழியை بَنِىْٓ اِسْرَآءِيْلَஇஸ்ராயீலுடைய சந்ததிகளின் لَا تَعْبُدُوْنَவணங்காதீர்கள் اِلَّاதவிர اللّٰهَஅல்லாஹ்வை وَبِالْوَالِدَيْنِஇன்னும் பெற்றோருக்கு اِحْسَانًاநன்மை செய்யுங்கள் وَّذِى الْقُرْبٰىஇன்னும் உறவினர்கள் وَالْيَتٰمٰىஇன்னும் அநாதைகள் وَالْمَسٰکِيْنِஇன்னும் ஏழைகள் وَقُوْلُوْاஇன்னும் கூறுங்கள் لِلنَّاسِமக்களிடம் حُسْنًاஅழகியதை وَّاَقِيْمُواஇன்னும் நிலைநிறுத்துங்கள் الصَّلٰوةَதொழுகையை وَاٰتُواஇன்னும் கொடுங்கள் الزَّکٰوةَ ؕஸகாத்தை ثُمَّபிறகு تَوَلَّيْتُمْதிரும்பி விட்டீர்கள் اِلَّاதவிர قَلِيْلًاகுறைவானவர்கள் مِّنْکُمْஉங்களில் وَاَنْـتُمْநீங்களோ مُّعْرِضُوْنَ‏புறக்கணிப்பவர்கள்
2:83. இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்.
2:84
2:84 وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ لَا تَسْفِكُوْنَ دِمَآءَكُمْ وَلَا تُخْرِجُوْنَ اَنْفُسَكُمْ مِّنْ دِيَارِكُمْ ثُمَّ اَقْرَرْتُمْ وَاَنْـتُمْ تَشْهَدُوْنَ‏
وَاِذْஇன்னும் சமயம் اَخَذْنَاவாங்கினோம் مِيْثَاقَكُمْஉறுதிமொழியை/உங்கள் لَا تَسْفِكُوْنَஓட்டாதீர்கள் دِمَآءَكُمْஇரத்தங்களை/உங்கள் وَلَا تُخْرِجُوْنَஇன்னும் வெளியேற்றாதீர்கள் اَنْفُسَكُمْஉங்களை مِّنْஇருந்து دِيَارِكُمْஉங்கள் இல்லங்கள் ثُمَّபிறகு اَقْرَرْتُمْஉறுதிப்படுத்தினீர்கள் وَاَنْـتُمْநீங்களே تَشْهَدُوْنَ‏சாட்சிகளாக இருக்கிறீர்கள்
2:84. இன்னும் (நினைவு கூறுங்கள்;) “உங்களிடையே இரத்தங்களைச் சிந்தாதீர்கள்; உங்களில் ஒருவர் மற்றவரை தம் வீடுகளை விட்டும் வெளியேற்றாதீர்கள்” என்னும் உறுதிமொழியை வாங்கினோம். பின்னர் (அதை) ஒப்புக்கொண்டீர்கள் (அதற்கு) நீங்களே சாட்சியாகவும் இருந்தீர்கள்.
2:85
2:85 ثُمَّ اَنْـتُمْ هٰٓؤُلَاۤءِ تَقْتُلُوْنَ اَنْفُسَكُمْ وَتُخْرِجُوْنَ فَرِيْقًا مِّنْكُمْ مِّنْ دِيَارِهِمْ تَظٰهَرُوْنَ عَلَيْهِمْ بِالْاِثْمِ وَالْعُدْوَانِؕ وَاِنْ يَّاْتُوْكُمْ اُسٰرٰى تُفٰدُوْهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَیْكُمْ اِخْرَاجُهُمْ‌ؕ اَفَتُؤْمِنُوْنَ بِبَعْضِ الْكِتٰبِ وَتَكْفُرُوْنَ بِبَعْضٍ‌ۚ فَمَا جَزَآءُ مَنْ يَّفْعَلُ ذٰلِكَ مِنْکُمْ اِلَّا خِزْىٌ فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۚ وَيَوْمَ الْقِيٰمَةِ يُرَدُّوْنَ اِلٰٓى اَشَدِّ الْعَذَابِ‌ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ‏
ثُمَّபிறகு اَنْـتُمْநீங்கள் هٰٓؤُلَاۤءِஓ இவர்களே تَقْتُلُوْنَகொன்றீர்கள் اَنْفُسَكُمْஉங்களை وَتُخْرِجُوْنَஇன்னும் வெளியேற்றுகிறீர்கள் فَرِيْقًاஒரு பிரிவினரை مِّنْكُمْஉங்களில் مِّنْஇருந்து دِيَارِهِمْஇல்லங்கள்/ அவர்களுடைய تَظٰهَرُوْنَஉதவுகிறீர்கள் عَلَيْهِمْஅவர்களுக்கு எதிராக بِالْاِثْمِபாவமாக وَالْعُدْوَانِؕஇன்னும் அநியாயம் وَاِنْ يَّاْتُوْكُمْஅவர்கள் வந்தால்/உங்களிடம் اُسٰرٰىகைதிகளாக تُفٰدُوْهُمْஈடுகொடுத்து மீட்கிறீர்கள்/அவர்களை وَهُوَஅதுவோ مُحَرَّمٌதடுக்கப்பட்டது عَلَیْكُمْஉங்கள் மீது اِخْرَاجُهُمْ‌ؕவெளியேற்றுவது/அவர்களை اَفَتُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறீர்கள்? بِبَعْضِசிலவற்றை الْكِتٰبِவேதத்தில் وَتَكْفُرُوْنَஇன்னும் நிராகரிக்கிறீர்கள் بِبَعْضٍ‌ۚசிலவற்றை فَمَاஇல்லை جَزَآءُகூலி مَنْஎவர் يَّفْعَلُசெய்கிறார் ذٰلِكَஅதை مِنْکُمْஉங்களில் اِلَّاதவிர خِزْىٌஇழிவு فِى الْحَيٰوةِவாழ்க்கையில் الدُّنْيَا ۚஇவ்வுலகம் وَيَوْمَ الْقِيٰمَةِஇன்னும் மறுமை நாளில் يُرَدُّوْنَதிருப்பப்படுவார்கள் اِلٰٓىபக்கம் اَشَدِّமிகக் கடுமையானது الْعَذَابِ‌ؕவேதனை وَمَاஇல்லை اللّٰهُஅல்லாஹ் بِغَافِلٍகவனமற்றவனாக عَمَّاஎதைப் பற்றி تَعْمَلُوْنَ‏செய்கிறீர்கள்
2:85. (இவ்வாறு உறுதிப்படுத்திய) நீங்களே உங்களிடையே கொலை செய்கின்றீர்கள்; உங்களிலேயே ஒருசாராரை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்கள்மீது அக்கிரமம் புரியவும், பகைமை கொள்ளவும் (அவர்களின் விரோதிகளுக்கு) உதவி செய்கிறீர்கள். வெளியேற்றப்பட்டவர்கள் (இவ்விரோதிகளிடம் சிக்கி) கைதிகளாக உங்களிடம் வந்தால், (அப்பொழுது மட்டும் பழிப்புக்கு அஞ்சி) நஷ்டஈடு பெற்றுக்கொண்டு (அவர்களை விடுதலை செய்து) விடுகிறீர்கள்-ஆனால் அவர்களை (வீடுகளை விட்டு) வெளியேற்றுவது உங்கள் மீது ஹராமா(ன தடுக்கப்பட்ட செயலா)கும். (அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.
2:86
2:86 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اشْتَرَوُا الْحَيٰوةَ الدُّنْيَا بِالْاٰخِرَةِ‌ فَلَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْصَرُوْنَ
اُولٰٓٮِٕكَஅவர்கள் الَّذِيْنَஎவர்கள் اشْتَرَوُاவாங்கினார்கள் الْحَيٰوةَவாழ்க்கையை الدُّنْيَاஇவ்வுலக(ம்) بِالْاٰخِرَةِ‌மறுமைக்குப் பதிலாக فَلَا يُخَفَّفُஎனவே இலேசாக்கப்படாது عَنْهُمُஅவர்களை விட்டு الْعَذَابُவேதனை وَلَا هُمْ يُنْصَرُوْنَ‏இன்னும் அவர்கள் உதவிசெய்யப்பட மாட்டார்கள்
2:86. மறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமான) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள்.
2:87
2:87 وَ لَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَقَفَّيْنَا مِنْۢ بَعْدِهٖ بِالرُّسُلِ‌ وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنٰتِ وَاَيَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ‌ؕ اَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰٓى اَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ‌ۚ فَفَرِيْقًا كَذَّبْتُمْ وَفَرِيْقًا تَقْتُلُوْنَ‏
وَ لَقَدْதிட்டவட்டமாக اٰتَيْنَاகொடுத்தோம் مُوْسَىமூஸாவிற்கு الْكِتٰبَவேதத்தை وَقَفَّيْنَاஇன்னும் தொடர்ச்சியாக அனுப்பினோம் مِنْۢ بَعْدِهٖஅவருக்குப் பின்னர் بِالرُّسُلِ‌தூதர்களை وَاٰتَيْنَاஇன்னும் கொடுத்தோம் عِيْسَىஈஸாவிற்கு ابْنَமகன் مَرْيَمَமர்யமுடைய الْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளை وَاَيَّدْنٰهُஇன்னும் பலப்படுத்தினோம்/அவரை بِرُوْحِஆத்மாவைக்கொண்டு الْقُدُسِ‌ؕபரிசுத்தமான اَفَكُلَّمَا جَآءَكُمْவந்தபோதெல்லாம் / உங்களுக்கு رَسُوْلٌۢஒரு தூதர் بِمَا لَا تَهْوٰٓىஎதைக் கொண்டு/விரும்பவில்லை اَنْفُسُكُمُமனங்கள்/உங்கள் اسْتَكْبَرْتُمْ‌ۚபெருமையடித்தீர்கள் فَفَرِيْقًاஒரு பிரிவினரை كَذَّبْتُمْபொய்ப்பித்தீர்கள் وَفَرِيْقًاஇன்னும் ஒரு பிரிவினரை تَقْتُلُوْنَ‏கொலை செய்கிறீர்கள்
2:87. மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்.
2:88
2:88 وَقَالُوْا قُلُوْبُنَا غُلْفٌ‌ؕ بَل لَّعَنَهُمُ اللّٰهُ بِكُفْرِهِمْ فَقَلِيْلًا مَّا يُؤْمِنُوْنَ‏
وَقَالُوْاஇன்னும் கூறினார்கள் قُلُوْبُنَاஉள்ளங்கள்/எங்கள் غُلْفٌ‌ؕதிரையிடப்பட்டுள்ளன بَلமாறாக لَّعَنَهُمُஅவர்களை சபித்தான் اللّٰهُஅல்லாஹ் بِكُفْرِهِمْநிராகரிப்பின் காரணமாக/அவர்களுடைய فَقَلِيْلًا مَّاஎனவே மிகக் குறைவாகவே يُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்வார்கள்
2:88. இன்னும், அவர்கள் (யூதர்கள்) “எங்களுடைய இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன” என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களுடைய (குஃப்ரு என்னும்) நிராகரிப்பின் காரணத்தால், அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான். ஆகவே, அவர்கள் சொற்பமாகவே ஈமான் கொள்வார்கள்.
2:89
2:89 وَلَمَّا جَآءَهُمْ كِتٰبٌ مِّنْ عِنْدِ اللّٰهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْۙ وَكَانُوْا مِنْ قَبْلُ يَسْتَفْتِحُوْنَ عَلَى الَّذِيْنَ كَفَرُوْا  ۖۚ فَلَمَّا جَآءَهُمْ مَّا عَرَفُوْا کَفَرُوْا بِهٖ‌ فَلَعْنَةُ اللّٰهِ عَلَى الْكٰفِرِيْنَ‏
وَلَمَّاபோது جَآءَவந்தது هُمْஅவர்களுக்கு كِتٰبٌஒரு வேதம் مِّنْஇருந்து عِنْدِ اللّٰهِஅல்லாஹ்விடம் مُصَدِّقٌஉண்மைப்படுத்தக் கூடியது لِّمَاஎதை مَعَهُمْۙஅவர்களுடன் وَكَانُوْاஇன்னும் இருந்தார்கள் مِنْ قَبْلُமுன்னர் يَسْتَفْتِحُوْنَவெற்றியைத் தேடுவார்கள் عَلَىஎதிராக الَّذِيْنَஎவர்கள் كَفَرُوْاநிராகரித்தனர் ۖۚ فَلَمَّا جَآءَவந்த போது هُمْஅவர்களிடம் مَّاஎது عَرَفُوْاஅறிந்தனர் کَفَرُوْاநிராகரித்தார்கள் بِهٖ‌அதை فَلَعْنَةُஎனவே சாபம் اللّٰهِஅல்லாஹ்வின் عَلَىமீது الْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்கள்
2:89. அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது; இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் மூலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்த போது, அதை நிராகரிக்கின்றார்கள் இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது!
2:90
2:90 بِئْسَمَا اشْتَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ اَنْ یَّكْفُرُوْا بِمَآ اَنْزَلَ اللّٰهُ بَغْيًا اَنْ يُّنَزِّلَ اللّٰهُ مِنْ فَضْلِهٖ عَلٰى مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌ۚ فَبَآءُوْ بِغَضَبٍ عَلٰى غَضَبٍ‌ؕ وَلِلْكٰفِرِيْنَ عَذَابٌ مُّهِيْنٌ‏
بِئْسَمَاகெட்டது/எது اشْتَرَوْاவிற்றார்கள் بِهٖۤஅதற்குப் பகரமாக اَنْفُسَهُمْதங்களை اَنْ يَّڪْفُرُوْاஅவர்கள் நிராகரித்து بِمَآஎதை اَنْزَلَஇறக்கினான் اللّٰهُஅல்லாஹ் بَغْيًاபொறாமைப்பட்டு اَنْ يُّنَزِّلَஇறக்குவதை اللّٰهُஅல்லாஹ் مِنْஇருந்து فَضْلِهٖதன் அருள் عَلٰىமீது مَنْஎவர் يَّشَآءُநாடுகிறான் مِنْஇருந்து عِبَادِهٖ‌ۚதன் அடியார்கள் فَبَآءُوْஆகவே சார்ந்தார்கள் بِغَضَبٍகோபத்தில் عَلٰىமேல் غَضَبٍ‌ؕகோபம் وَلِلْكٰفِرِيْنَஇன்னும் நிராகரிப்பாளர்களுக்கு عَذَابٌவேதனை مُّهِيْنٌ‏இழிவு தரக்கூடியது
2:90. தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக பொறாமைப்பட்டு, அல்லாஹ் அருளியதையே நிராகரித்து தங்கள் ஆத்மாக்களை விற்று அவர்கள் பெற்றுக் கொண்டது மிகவும் கெட்டதாகும். இதனால் அவர்கள் (இறைவனுடைய) கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள். (இத்தகைய) காஃபிர்களுக்கு இழிவான வேதனை உண்டு.
2:91
2:91 وَاِذَا قِيْلَ لَهُمْ اٰمِنُوْا بِمَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا نُؤْمِنُ بِمَآ اُنْزِلَ عَلَيْنَا وَيَكْفُرُوْنَ بِمَا وَرَآءَهٗ وَهُوَ الْحَـقُّ مُصَدِّقًا لِّمَا مَعَهُمْ‌ؕ قُلْ فَلِمَ تَقْتُلُوْنَ اَنْـــۢبِيَآءَ اللّٰهِ مِنْ قَبْلُ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
وَاِذَا قِيْلَகூறப்பட்டால் لَهُمْஅவர்களுக்கு اٰمِنُوْاநம்பிக்கை கொள்ளுங்கள் بِمَآஎதை اَنْزَلَஇறக்கினான் اللّٰهُஅல்லாஹ் قَالُوْاகூறுகிறார்கள் نُؤْمِنُநம்பிக்கை கொள்கிறோம் بِمَآஎதை اُنْزِلَஇறக்கப்பட்டது عَلَيْنَاஎங்கள் மீது وَيَكْفُرُوْنَஇன்னும் நிராகரிக்கிறார்கள் بِمَاஎதை وَرَآءَهٗஅதற்கு அப்பால் وَهُوَஅதுவோ الْحَـقُّஉண்மை مُصَدِّقًاஉண்மைப்படுத்தக் கூடியது لِّمَاஎதை مَعَهُمْ‌ؕஅவர்களிடம் قُلْகூறுவீராக فَلِمَஎதற்காக تَقْتُلُوْنَகொலை செய்தீர்கள் اَنْـــۢبِيَآءَதூதர்களை اللّٰهِஅல்லாஹ்வுடைய مِنْ قَبْلُமுன்னர் اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
2:91. “அல்லாஹ் இறக்கி வைத்த (திருக்குர்ஆன் மீது) ஈமான் கொள்ளுங்கள்” என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால், “எங்கள் மீது இறக்கப்பட்டதன் மீதுதான் நம்பிக்கை கொள்வோம்” என்று கூறுகிறார்கள் அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. “நீங்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால், ஏன் அல்லாஹ்வின் முந்திய நபிமார்களை நீங்கள் கொலை செய்தீர்கள்?” என்று அவர்களிடம் (நபியே!) நீர் கேட்பீராக.
2:92
2:92 وَلَقَدْ جَآءَکُمْ مُّوْسٰى بِالْبَيِّنٰتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْۢ بَعْدِهٖ وَاَنْـتُمْ ظٰلِمُوْنَ‏
وَلَقَدْதிட்டவட்டமாக جَآءَவந்தார் کُمْஉங்களிடம் مُّوْسٰىமூசா بِالْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன் ثُمَّபிறகு اتَّخَذْتُمُஎடுத்துக்கொண்டீர்கள் الْعِجْلَகாளைக் கன்றை مِنْۢ بَعْدِهٖஅவருக்குப் பின்னர் وَاَنْـتُمْநீங்களோ ظٰلِمُوْنَ‏அநியாயக்காரர்கள்
2:92. நிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளைத் கொண்டு வந்தார்; (அப்படியிருந்தும்) அதன்பின் காளை மாட்டை (இணை வைத்து) வணங்கினீர்கள்; (இப்படிச் செய்து) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.
2:93
2:93 وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَکُمُ الطُّوْرَ ؕ خُذُوْا مَآ اٰتَيْنٰکُمْ بِقُوَّةٍ وَّاسْمَعُوْا ‌ ؕ قَالُوْا سَمِعْنَا وَعَصَيْنَا  وَاُشْرِبُوْا فِىْ قُلُوْبِهِمُ الْعِجْلَ بِکُفْرِهِمْ ‌ؕ قُلْ بِئْسَمَا يَاْمُرُکُمْ بِهٖۤ اِيْمَانُكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
وَاِذْஇன்னும் சமயம் اَخَذْنَاவாங்கினோம் مِيْثَاقَكُمْஉறுதிமொழியை/உங்கள் وَرَفَعْنَاஇன்னும் உயர்த்தினோம் فَوْقَکُمُமேல்/உங்களுக்கு الطُّوْرَ ؕமலையை خُذُوْا(கடைப்)பிடியுங்கள் مَآஎதை اٰتَيْنٰکُمْகொடுத்தோம்/ உங்களுக்கு بِقُوَّةٍபலமாக وَّاسْمَعُوْا  ؕஇன்னும் செவிசாயுங்கள் قَالُوْاகூறினார்கள் سَمِعْنَاசெவியுற்றோம் وَعَصَيْنَا இன்னும் மாறு செய்தோம் وَاُشْرِبُوْاஇன்னும் ஊட்டப்பட்டார்கள் فِىْ قُلُوْبِهِمُஅவர்களுடைய உள்ளங்களில் الْعِجْلَகாளைக் கன்றை بِکُفْرِهِمْ ؕநிராகரிப்பின் காரணமாக/அவர்களுடைய قُلْகூறுவீராக بِئْسَمَاகெட்டது/எது يَاْمُرُکُمْஏவுகிறது/உங்களுக்கு بِهٖۤஅதை اِيْمَانُكُمْநம்பிக்கை/உங்கள் اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
2:93. தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதை செவியேற்றுக்கொள்ளுங்கள். என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம். (அதற்கு அவர்கள்) நாங்கள் செவியேற்றோம்; மேலும்(அதற்கு) மாறு செய்தோம் என்று கூறினார்கள். மேலும் அவர்கள் நிராகரித்த காரணத்தினால் அவர்கள் இதயங்களில் காளைக்கன்றின் (பக்தி) புகட்டப்பட்டது. நீங்கள் முஃமின்களாக இருந்தால் உங்களுடைய ஈமான் எதை கட்டளையிடுகிறதோ அது மிகவும் கெட்டது என்று (நபியே!) நீர் கூறும்.
2:94
2:94 قُلْ اِنْ كَانَتْ لَـکُمُ الدَّارُ الْاٰخِرَةُ عِنْدَ اللّٰهِ خَالِصَةً مِّنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ کُنْتُمْ صٰدِقِيْنَ‏
قُلْகூறுவீராக اِنْ كَانَتْஇருந்தால் لَـکُمُஉங்களுக்கு الدَّارُவீடு الْاٰخِرَةُமறுமை عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடத்தில் خَالِصَةًமட்டும் مِّنْ دُوْنِ النَّاسِஅன்றி/மக்களுக்கு فَتَمَنَّوُاவிரும்புங்கள் الْمَوْتَமரணத்தை اِنْ کُنْتُمْநீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
2:94. (நபியே!) “இறைவனிடத்தில் உள்ள மறுமையின் வீடு (சுவர்க்கம்) உங்களுக்கே சொந்தமானது; வேறு மனிதர்களுக்கு கிடையாது என்று உரிமை கொண்டாடுவதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (அதைப் பெறுவதற்காக) மரணத்தை விரும்புங்கள்” என்று (நபியே!) நீர் சொல்வீராக.
2:95
2:95 وَ لَنْ يَّتَمَنَّوْهُ اَبَدًاۢ بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِالظّٰلِمِيْنَ‏
وَ لَنْ يَّتَمَنَّوْهُவிரும்பவே மாட்டார்கள்/அதை اَبَدًاۢஒரு போதும் بِمَاகாரணமாக/எதன் قَدَّمَتْமுற்படுத்தின اَيْدِيْهِمْ‌ؕஅவர்களின் கரங்கள் وَاللّٰهُஇன்னும் அல்லாஹ் عَلِيْمٌۢநன்கறிந்தவன் بِالظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களை
2:95. ஆனால், அவர்கள் கரங்கள் செய்த (பாவங்களை) அவர்கள் முன்னமேயே அனுப்பி வைத்திருந்த காரணத்தால் அவர்கள் மரணத்தை விரும்பவே மாட்டார்கள்; நிச்சயமாக அல்லாஹ் அந்த அக்கிரமக்காரர்களை நன்கு அறிந்தவனாகவே இருக்கிறான்.
2:96
2:96 وَلَتَجِدَنَّهُمْ اَحْرَصَ النَّاسِ عَلٰى حَيٰوةٍ  ۛۚ وَ مِنَ الَّذِيْنَ اَشْرَكُوْا‌‌  ۛۚ يَوَدُّ اَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ اَ لْفَ سَنَةٍ ۚ وَمَا هُوَ بِمُزَحْزِحِهٖ مِنَ الْعَذَابِ اَنْ يُّعَمَّرَ‌ؕ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِمَا يَعْمَلُوْنَ 
وَلَتَجِدَنَّهُمْநிச்சயமாகக் காண்பீர்/அவர்களை اَحْرَصَபேராசைக்காரர்(களாக) النَّاسِமக்களை விட عَلٰىமீது حَيٰوةٍ  ۛۚவாழ்க்கை وَ مِنَஇன்னும் விட الَّذِيْنَ اَشْرَكُوْا‌  ۛۚஇணைவைப்பவர்கள் يَوَدُّவிரும்புவார் اَحَدُهُمْஒருவர்/அவர்களில் لَوْ يُعَمَّرُவாழ்வு கொடுக்கப்பட வேண்டுமே اَ لْفَஆயிரம் سَنَةٍ ۚஆண்டு(கள்) وَمَاஇன்னும் இல்லை هُوَஅது بِمُزَحْزِحِهٖதப்பிக்க வைத்துவிடக் கூடியது/அவனை مِنَ الْعَذَابِவேதனையிலிருந்து اَنْ يُّعَمَّرَ‌ؕவாழ்வு கொடுக்கப்படுவது وَاللّٰهُஇன்னும் அல்லாஹ் بَصِيْرٌۢஉற்று நோக்குபவன் بِمَا يَعْمَلُوْنَ ‏எதை/செய்கிறார்கள்
2:96. அவர்கள், மற்ற மனிதர்களைவிட, இணை வைக்கும் முஷ்ரிக்குகளையும் விட (இவ்வுலக) வாழ்க்கையில் பேராசை உடையவர்களாக இருப்பதை (நபியே!) நீர் நிச்சயமாகக் காண்பீர்; அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்; ஆனால் அப்படி அவர்களுக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும், அவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது; இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்வதையெல்லாம் கூர்ந்து பார்ப்பவனாகவே இருக்கிறான்.
2:97
2:97 قُلْ مَنْ كَانَ عَدُوًّا لِّجِبْرِيْلَ فَاِنَّهٗ نَزَّلَهٗ عَلٰى قَلْبِكَ بِاِذْنِ اللّٰهِ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَهُدًى وَّبُشْرٰى لِلْمُؤْمِنِيْنَ‏
قُلْகூறுவீராக مَنْயார் كَانَஆகிவிட்டார் عَدُوًّاஎதிரியாக لِّجِبْرِيْلَஜிப்ரீலுக்கு فَاِنَّهٗநிச்சயமாக அவர் نَزَّلَهٗஇறக்கினார்/அதை عَلٰىமீது قَلْبِكَஉள்ளம்/உம் بِاِذْنِஅனுமதி கொண்டு اللّٰهِஅல்லாஹ்வின் مُصَدِّقًاஉண்மைப்படுத்தக் கூடியதாக لِّمَاஎதை بَيْنَமுன்னர் يَدَيْهِஅதற்கு وَهُدًىஇன்னும் நேர்வழியாக وَّبُشْرٰىஇன்னும் நற்செய்தியாக لِلْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களுக்கு
2:97. யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது; இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.
2:98
2:98 مَنْ كَانَ عَدُوًّا لِّلّٰهِ وَمَلٰٓٮِٕکَتِهٖ وَ رُسُلِهٖ وَجِبْرِيْلَ وَمِيْكٰٮلَ فَاِنَّ اللّٰهَ عَدُوٌّ لِّلْكٰفِرِيْنَ‏
مَنْஎவர்(கள்) كَانَஆகிவிட்டார்(கள்) عَدُوًّاஎதிரிகளாக لِّلّٰهِஅல்லாஹ்வுக்கு وَمَلٰٓٮِٕکَتِهٖஇன்னும் வானவர்கள்/அவனுடைய وَ رُسُلِهٖஇன்னும் தூதர்கள் / அவனுடைய وَجِبْرِيْلَஇன்னும் ஜிப்ரீல் وَمِيْكٰٮلَஇன்னும் மீகால் فَاِنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் عَدُوٌّஎதிரி لِّلْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்களுக்கு
2:98. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.
2:99
2:99 وَلَقَدْ اَنْزَلْنَآ اِلَيْكَ اٰيٰتٍۢ بَيِّنٰتٍ‌‌ۚ وَمَا يَكْفُرُ بِهَآ اِلَّا الْفٰسِقُوْنَ‏
وَلَقَدْதிட்டவட்டமாக اَنْزَلْنَآஇறக்கினோம் اِلَيْكَஉமக்கு اٰيٰتٍۢவசனங்களை بَيِّنٰتٍ‌ۚதெளிவானவை وَمَا يَكْفُرُஇன்னும் நிராகரிக்க மாட்டார்(கள்) بِهَآஅவற்றை اِلَّاதவிர الْفٰسِقُوْنَ‏பாவிகள்
2:99. (நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்.
2:100
2:100 اَوَکُلَّمَا عٰهَدُوْا عَهْدًا نَّبَذَهٗ فَرِيْقٌ مِّنْهُمْ‌ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا يُؤْمِنُوْنَ‏
اَوَکُلَّمَاஇன்னும் / போதெல்லாம் عٰهَدُوْاஉடன்படிக்கை செய்தார்கள் عَهْدًاஓர் உடன்படிக்கையை نَّبَذَهٗஎறிந்தார்(கள்)/அதை فَرِيْقٌபிரிவினர் مِّنْهُمْ‌ؕஅவர்களில் بَلْமாறாக اَكْثَرُஅதிகமானோர் هُمْஅவர்களில் لَا يُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
2:100. மேலும், அவர்கள் உடன்படிக்கை செய்தபோதெல்லாம், அவர்களில் ஒரு பிரிவினர் அவற்றை முறித்து விடவில்லையா? ஆகவே, அவர்களில் பெரும்பாலோர் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
2:101
2:101 وَلَمَّا جَآءَهُمْ رَسُوْلٌ مِّنْ عِنْدِ اللّٰهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ نَبَذَ فَرِيْقٌ مِّنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَۙ کِتٰبَ اللّٰهِ وَرَآءَ ظُهُوْرِهِمْ كَاَنَّهُمْ لَا يَعْلَمُوْنَ‏
وَلَمَّا جَآءَهُمْபோது/வந்தார்/அவர்களிடம் رَسُوْلٌஒரு தூதர் مِّنْஇருந்து عِنْدِ اللّٰهِஅல்லாஹ்விடம் مُصَدِّقٌஉண்மைப்படுத்தக் கூடியவர் لِّمَاஎதை مَعَهُمْஅவர்களிடம் نَبَذَஎறிந்தார்(கள்) فَرِيْقٌஒரு பிரிவினர் مِّنَஇருந்து الَّذِيْنَஎவர்கள் اُوْتُواகொடுக்கப்பட்டனர் الْكِتٰبَۙவேதம் کِتٰبَவேதத்தை اللّٰهِஅல்லாஹ்வுடைய وَرَآءَபின்னால் ظُهُوْرِமுதுகுகளுக்கு هِمْதங்கள் كَاَنَّهُمْபோல்/அவர்கள் لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
2:101. அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள்.
2:102
2:102 وَاتَّبَعُوْا مَا تَتْلُوا الشَّيٰطِيْنُ عَلٰى مُلْكِ سُلَيْمٰنَ‌‌ۚ وَمَا کَفَرَ سُلَيْمٰنُ وَلٰـكِنَّ الشَّيٰـطِيْنَ كَفَرُوْا يُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ وَمَآ اُنْزِلَ عَلَى الْمَلَـکَيْنِ بِبَابِلَ هَارُوْتَ وَمَارُوْتَ‌ؕ وَمَا يُعَلِّمٰنِ مِنْ اَحَدٍ حَتّٰى يَقُوْلَاۤ اِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْؕ‌ فَيَتَعَلَّمُوْنَ مِنْهُمَا مَا يُفَرِّقُوْنَ بِهٖ بَيْنَ الْمَرْءِ وَ زَوْجِهٖ‌ؕ وَمَا هُمْ بِضَآرِّيْنَ بِهٖ مِنْ اَحَدٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ‌ؕ وَيَتَعَلَّمُوْنَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ‌ؕ وَلَقَدْ عَلِمُوْا لَمَنِ اشْتَرٰٮهُ مَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ‌ؕ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ‌ؕ لَوْ کَانُوْا يَعْلَمُوْنَ‏
وَاتَّبَعُوْاஇன்னும் பின்பற்றினார்கள் مَاஎவற்றை تَتْلُواஓதின الشَّيٰطِيْنُஷைத்தான்கள் عَلٰىஇல் مُلْكِஆட்சி سُلَيْمٰنَ‌ۚசுலைமானுடைய وَمَا کَفَرَநிராகரிக்கவில்லை سُلَيْمٰنُசுலைமான் وَلٰـكِنَّஎனினும் الشَّيٰـطِيْنَஷைத்தான்கள் كَفَرُوْاநிராகரித்தார்கள் يُعَلِّمُوْنَகற்பித்தார்கள் النَّاسَமனிதர்களுக்கு السِّحْرَசூனியத்தை وَمَآஇன்னும் எவற்றை اُنْزِلَஇறக்கப்பட்டன عَلَىமீது الْمَلَـکَيْنِஇரு வானவர்கள் بِبَابِلَபாபிலோனில் هَارُوْتَஹறாரூத் وَمَارُوْتَ‌ؕஇன்னும் மாரூத் وَمَا يُعَلِّمٰنِஅவ்விருவரும் கற்றுக் கொடுக்கவில்லை مِنْ اَحَدٍஒருவருக்கும் حَتّٰىவரை يَقُوْلَاۤஅவ்விருவரும் கூறுவார்கள் اِنَّمَا نَحْنُநாங்கள் எல்லாம் فِتْنَةٌஒரு சோதனை فَلَا تَكْفُرْؕ‌ஆகவேநிராகரிக்காதே فَيَتَعَلَّمُوْنَகற்றார்கள் مِنْهُمَاஅவ்விருவரிடமிருந்து مَاஎதை يُفَرِّقُوْنَபிரிப்பார்கள் بِهٖஅதன் மூலம் بَيْنَஇடையில் الْمَرْءِஆண் وَ زَوْجِهٖ‌ؕஇன்னும் மனைவி / அவனுடைய وَمَاஇல்லை هُمْஅவர்கள் بِضَآرِّيْنَதீங்கிழைப்பவர்களாக بِهٖஅதன் மூலம் مِنْ اَحَدٍஒருவருக்கும் اِلَّاதவிர بِاِذْنِஅனுமதி கொண்டே اللّٰهِ‌ؕஅல்லாஹ்வுடைய وَيَتَعَلَّمُوْنَகற்றார்கள் مَاஎவற்றை يَضُرُّهُمْதீங்கிழைக்கும்/அவர்களுக்கு وَلَا يَنْفَعُهُمْ‌ؕஇன்னும் பலனளிக்காது / அவர்களுக்கு وَلَقَدْஇன்னும் திட்டவட்டமாக عَلِمُوْاஅறிந்தார்கள் لَمَنِ اشْتَرٰٮهُநிச்சயமாக எவர்/விலைக்கு வாங்கினார்/அதை مَاஇல்லை لَهٗஅவருக்கு فِى الْاٰخِرَةِமறுமையில் مِنْ خَلَاقٍ‌ؕஎந்த பாக்கியமும் وَلَبِئْسَஇன்னும் திட்டமாக கெட்டது مَاஎது شَرَوْاவிற்றார்கள் بِهٖۤஅதற்கு பகரமாக اَنْفُسَهُمْ‌ؕதங்களையே لَوْ کَانُوْا يَعْلَمُوْنَ‏அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே
2:102. அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
2:103
2:103 وَلَوْ اَنَّهُمْ اٰمَنُوْا وَاتَّقَوْا لَمَثُوْبَةٌ مِّنْ عِنْدِ اللّٰهِ خَيْرٌ ؕ‌ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ
وَلَوْ اَنَّهُمْ اٰمَنُوْاநிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொண்டால் وَاتَّقَوْاஇன்னும் அல்லாஹ்வை அஞ்சினார்கள் لَمَثُوْبَةٌதிட்டமாக சன்மானம் مِّنْ عِنْدِ اللّٰهِஇடமிருந்து/அல்லாஹ் خَيْرٌ ؕ‌சிறந்தது لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ‏அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
2:103. அவர்கள் நம்பிக்கை கொண்டு தங்களை காப்பாற்றிக் கொண்டால், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்கூலி மிகவும் மேலானதாக இருக்கும்; இதனை அவர்கள் அறிய வேண்டாமா?
2:104
2:104 يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقُوْلُوْا رَاعِنَا وَ قُوْلُوا انْظُرْنَا وَاسْمَعُوْا ‌ؕ وَلِلْڪٰفِرِيْنَ عَذَابٌ اَلِيْمٌ‏
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களே! لَا تَقُوْلُوْاகூறாதீர்கள் رَاعِنَاராஇனா وَ قُوْلُواஇன்னும் கூறுங்கள் انْظُرْنَاஉன்ளுர்னா (பாருங்கள்/எங்களை) وَاسْمَعُوْا ؕஇன்னும் செவிமடுங்கள் وَلِلْڪٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்கு عَذَابٌவேதனை اَلِيْمٌ‏துன்புறுத்தக் கூடியது
2:104. ஈமான் கொண்டோரே! நீங்கள் (நம் ரஸூலைப் பார்த்து இரண்டு அர்த்தம் கொடுக்கும் சொல்லாகிய) “ராயினா” என்று சொல்லாதீர்கள். (இதற்குப் பதிலாக அன்புடன் நோக்குவீர்களாக என்னும் பொருளைத் தரும் சொல்லாகிய) “உன்ளுர்னா” என்று கூறுங்கள். இன்னும், அவர் சொல்வதைக் கேளுங்கள். மேலும் காஃபிர்களுக்குத் துன்பம் தரும் வேதனையும் உண்டு.
2:105
2:105 مَا يَوَدُّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَلَا الْمُشْرِكِيْنَ اَنْ يُّنَزَّلَ عَلَیْكُمْ مِّنْ خَيْرٍ مِّنْ رَّبِّکُمْ‌ؕ وَاللّٰهُ يَخْتَصُّ بِرَحْمَتِهٖ مَنْ يَّشَآءُ ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ‏
مَا يَوَدُّவிரும்பமாட்டார்(கள்) الَّذِيْنَஎவர்கள் كَفَرُوْاநிராகரித்தனர் مِنْ اَهْلِ الْكِتٰبِவேதக்காரர்களாகிய وَلَا الْمُشْرِكِيْنَஇன்னும் இணைவைப்பவர்கள் اَنْ يُّنَزَّلَஇறக்கப்படுவதை عَلَیْكُمْஉங்கள் மீது مِّنْ خَيْرٍசிறந்தது எதுவும் مِّنْஇருந்து رَّبِّکُمْ‌ؕஇறைவன்/உங்கள் وَاللّٰهُஅல்லாஹ் يَخْتَصُّசொந்தமாக்குகிறான் بِرَحْمَتِهٖகருணையை/தன் مَنْஎவர் يَّشَآءُ ؕநாடுகிறான் وَاللّٰهُஅல்லாஹ் ذُو الْفَضْلِஅருளுடையவன் الْعَظِيْمِ‏பெரும்
2:105. அஹ்லுல் கிதாப்(வேதத்தையுடையவர்களில்) நிராகரிப்போரோ, இன்னும் முஷ்ரிக்குகளோ உங்கள் இறைவனிடமிருந்து, உங்கள் மீது நன்மை இறக்கப்படுவதை விரும்பவில்லை; ஆனால் அல்லாஹ் தன் அருட்கொடைக்கு உரியவர்களாக யாரை நாடுகிறானோ அவரையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்; அல்லாஹ் மிகப் பெரும் கிருபையாளன்.
2:106
2:106 مَا نَنْسَخْ مِنْ اٰيَةٍ اَوْ نُنْسِهَا نَاْتِ بِخَيْرٍ مِّنْهَآ اَوْ مِثْلِهَا ‌ؕ اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
مَا نَنْسَخْநாம் மாற்றினால் مِنْஇருந்து اٰيَةٍஒரு வசனம் اَوْஅல்லது نُنْسِهَاமறக்கடித்தால்/அதை نَاْتِவருவோம் بِخَيْرٍசிறந்ததைக் கொண்டு مِّنْهَآஅதைவிட اَوْஅல்லது مِثْلِهَا ؕஅது போன்றதை اَلَمْ تَعْلَمْநீர் அறியவில்லையா? اَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ் عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்கள் மீதும் قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
2:106. ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?
2:107
2:107 اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَمَا لَـکُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ‏
اَلَمْ تَعْلَمْநீர் அறியவில்லையா? اَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ் لَهٗஅவனுக்கு உரியது مُلْكُஆட்சி السَّمٰوٰتِவானங்கள் وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமி وَمَاஇன்னும் இல்லை لَـکُمْஉங்களுக்கு مِّنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வைத் தவிர مِنْஅறவே وَّلِىٍّபொறுப்பாளர் وَّلَا نَصِيْرٍ‏இன்னும் உதவியாளர் இல்லை
2:107. நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?
2:108
2:108 اَمْ تُرِيْدُوْنَ اَنْ تَسْــٴَــلُوْا رَسُوْلَـكُمْ كَمَا سُٮِٕلَ مُوْسٰى مِنْ قَبْلُ‌ؕ وَمَنْ يَّتَبَدَّلِ الْکُفْرَ بِالْاِيْمَانِ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِيْلِ‏
اَمْ تُرِيْدُوْنَநாடுகிறீர்களா? اَنْ تَسْـَٔلُوْاநீங்கள் கேள்வி கேட்க رَسُوْلَـكُمْதூதரிடம்/உங்கள் كَمَاபோல் سُٮِٕلَகேள்வி கேட்கப்பட்டார் مُوْسٰىமூசா مِنْ قَبْلُ‌ؕமுன்னர் وَمَنْஇன்னும் எவர் يَّتَبَدَّلِமாற்றுவார் الْکُفْرَநிராகரிப்பை بِالْاِيْمَانِநம்பிக்கைக்குப் பகரமாக فَقَدْதிட்டமாக ضَلَّதவறினார் سَوَآءَநேர் السَّبِيْلِ‏வழி
2:108. இதற்கு முன்னர் மூஸாவிடம் கேள்விகள் கேட்கப்பட்ட மாதிரி நீங்களும் உங்கள் ரஸூலிடம் கேட்க விரும்புகிறீர்களா? எவனொருவன் ஈமானை “குஃப்ரினால்” மாற்றுகிறானோ அவன் நிச்சயமாக நேர் வழியினின்றும் தவறிவிட்டான்.
2:109
2:109 وَدَّ کَثِيْرٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ لَوْ يَرُدُّوْنَكُمْ مِّنْۢ بَعْدِ اِيْمَانِكُمْ كُفَّارًا ۖۚ حَسَدًا مِّنْ عِنْدِ اَنْفُسِهِمْ مِّنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْحَـقُّ‌ ۚ فَاعْفُوْا وَاصْفَحُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ ‌ؕ اِنَّ اللّٰهَ عَلٰى کُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
وَدَّவிரும்பினார்(கள்) کَثِيْرٌஅதிகமானவர்கள் مِّنْ اَهْلِ الْكِتٰبِவேதக்காரர்களில் لَوْ يَرُدُّوْنَكُمْஅவர்கள் திருப்பிவிடவேண்டுமே / உங்களை مِّنْۢ بَعْدِபின்னர் اِيْمَانِكُمْநம்பிக்கை/உங்கள் كُفَّارًا ۖۚநிராகரிப்பாளர்களாக حَسَدًاபொறாமையினால் مِّنْ عِنْدِ اَنْفُسِهِمْஅவர்களின் உள்ளங்களில் مِّنْۢ بَعْدِபின்னர் مَا تَبَيَّنَதெளிவானதற்கு لَهُمُஅவர்களுக்கு الْحَـقُّ‌ ۚஉண்மை فَاعْفُوْاஆகவே மன்னியுங்கள் وَاصْفَحُوْاஇன்னும் புறக்கணியுங்கள் حَتّٰى يَاْتِىَவரும் வரை اللّٰهُஅல்லாஹ் بِاَمْرِهٖ ؕகட்டளையைக் கொண்டு / தன் اِنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் عَلٰىமீது کُلِّஎல்லா شَىْءٍபொருள் قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
2:109. வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர் உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும் தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் கட்டளை வரும்வரை அவர்களை மன்னித்து, அவர்கள் போக்கிலே விட்டுவிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி உடையவனாக இருக்கிறான்.
2:110
2:110 وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّکٰوةَ  ‌ؕ وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَيْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ ‌ؕ اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
وَاَقِيْمُواநிலைநிறுத்துங்கள் الصَّلٰوةَதொழுகையை وَاٰتُواஇன்னும் கொடுங்கள் الزَّکٰوةَஸகாத்தை وَمَاஇன்னும் எதை تُقَدِّمُوْاமுற்படுத்துவீர்கள் لِاَنْفُسِكُمْஉங்களுக்காக مِّنْ خَيْرٍநன்மையில் تَجِدُوْهُஅதை பெறுவீர்கள் عِنْدَஇடத்தில் اللّٰهِ ؕஅல்லாஹ் اِنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் بِمَاஎவற்றை تَعْمَلُوْنَசெய்கிறீர்கள் بَصِيْرٌ‏உற்று நோக்குபவன்
2:110. இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்.
2:111
2:111 وَقَالُوْا لَنْ يَّدْخُلَ الْجَـنَّةَ اِلَّا مَنْ كَانَ هُوْدًا اَوْ نَصٰرٰى‌ؕ تِلْكَ اَمَانِيُّهُمْ‌ؕ قُلْ هَاتُوْا بُرْهَانَکُمْ اِنْ کُنْتُمْ صٰدِقِيْنَ‏
وَقَالُوْاகூறினார்கள் لَنْ يَّدْخُلَநுழையவே மாட்டார் الْجَـنَّةَசொர்க்கத்தில் اِلَّاதவிர مَنْஎவர்(கள்) كَانَஇருக்கிறார்(கள்) هُوْدًاயூதர்களாக اَوْஅல்லது نَصٰرٰى‌ؕகிறித்துவர்களாக تِلْكَஅவை اَمَانِيُّهُمْ‌ؕவீண் நம்பிக்கைகள்/அவர்களுடைய قُلْகூறுவீராக هَاتُوْاகொண்டு வாருங்கள் بُرْهَانَکُمْஆதாரத்தை/உங்கள் اِنْ کُنْتُمْநீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
2:111. “யூதர்கள், கிறிஸ்தவர்களைத் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள்; இது அவர்களின் வீணாசையேயாகும்; “நீங்கள் உண்மையுடையோராக இருந்தால் உங்களுடைய சான்றை சமர்ப்பியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
2:112
2:112 بَلٰى مَنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهٗۤ اَجْرُهٗ عِنْدَ رَبِّهٖ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏‏
بَلٰىஅவ்வாறன்று مَنْஎவர் اَسْلَمَபணியவைத்தார் وَجْهَهٗதன் முகத்தை لِلّٰهِஅல்லாஹ்வுக்கு وَهُوَஅவரோ مُحْسِنٌநன்மை செய்பவர் فَلَهٗۤஅவருக்கு اَجْرُهٗஅவருடைய கூலி عِنْدَ رَبِّهٖஇடம்/இறைவன்/அவருடைய وَلَا خَوْفٌஇன்னும் பயம் இல்லை عَلَيْهِمْஅவர்கள் மீது وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
2:112. அப்படியல்ல! எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
2:113
2:113 وَقَالَتِ الْيَهُوْدُ لَـيْسَتِ النَّصٰرٰى عَلٰى شَىْءٍ وَّقَالَتِ النَّصٰرٰى لَـيْسَتِ الْيَهُوْدُ عَلٰى شَىْءٍۙ وَّهُمْ يَتْلُوْنَ الْكِتٰبَؕ كَذٰلِكَ قَالَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ مِثْلَ قَوْلِهِمْ‌ۚ فَاللّٰهُ يَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ‏
وَقَالَتِஇன்னும் கூறினா(ர்க)ள் الْيَهُوْدُயூதர்கள் لَـيْسَتِஇல்லை النَّصٰرٰىகிறித்துவர்கள் عَلٰى شَىْءٍஎதிலும் وَّقَالَتِகூறினா(ர்க)ள் النَّصٰرٰىகிறித்துவர்கள் لَـيْسَتِஇல்லை الْيَهُوْدُயூதர்கள் عَلٰى شَىْءٍۙஎதிலும் وَّهُمْஅவர்களுமோ يَتْلُوْنَஓதுகிறார்கள் الْكِتٰبَؕவேதத்தை كَذٰلِكَஇப்படியே قَالَகூறினார்(கள்) الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَஎவர்கள்/அறிய மாட்டார்கள் مِثْلَபோன்றே قَوْلِهِمْ‌ۚஇவர்களுடைய கூற்று فَاللّٰهُஆகவே அல்லாஹ் يَحْكُمُதீர்ப்பளிப்பான் بَيْنَهُمْஇவர்களுக்கு மத்தியில் يَوْمَநாளன்று الْقِيٰمَةِமறுமை فِيْمَاஎதில் كَانُوْاஇருந்தார்கள் فِيْهِஅதில் يَخْتَلِفُوْنَ‏தர்க்கிக்கிறார்கள்
2:113. யூதர்கள் கூறுகிறார்கள்: “கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை” என்று; கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்: “யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை” என்று; ஆனால், இவர்கள் (தங்களுக்குரிய) வேதத்தை ஓதிக்கொண்டே (இப்படிக் கூறுகிறார்கள்); இவர்கள் கூறும் சொற்களைப் போலவே ஒன்றும் அறியாதவர்களும் கூறுகிறார்கள்; இறுதித்தீர்ப்பு நாளில் அல்லாஹ் இவர்கள் தர்க்கித்து மாறுபட்டுக் கொண்டிருக்கும் விஷயத்தில் தீர்ப்பளிப்பான்.
2:114
2:114 وَمَنْ اَظْلَمُ مِمَّنْ مَّنَعَ مَسٰجِدَ اللّٰهِ اَنْ يُّذْكَرَ فِيْهَا اسْمُهٗ وَسَعٰـى فِىْ خَرَابِهَا ‌ؕ اُولٰٓٮِٕكَ مَا كَانَ لَهُمْ اَنْ يَّدْخُلُوْهَآ اِلَّا خَآٮِٕفِيْنَ ؕ لَهُمْ فِى الدُّنْيَا خِزْىٌ وَّلَهُمْ فِى الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ‏
وَمَنْஇன்னும் யார் اَظْلَمُமகா அநியாயக்காரன் مِمَّنْஎவனைவிட مَّنَعَதடுத்தான் مَسٰجِدَமஸ்ஜிதுகளை اللّٰهِஅல்லாஹ்வுடைய اَنْ يُّذْكَرَகூறப்படுவதை فِيْهَاஅவற்றில் اسْمُهٗபெயர்/அவனுடைய وَسَعٰـىஇன்னும் முயற்சித்தான் فِىْ خَرَابِهَا ؕபாழாகுவதில் / அவை اُولٰٓٮِٕكَஅவர்கள் مَا كَانَஇருக்கவில்லை لَهُمْஅவர்களுக்கு(அனுமதி) اَنْ يَّدْخُلُوْهَآஅவற்றில் அவர்கள் நுழைய اِلَّاதவிர خَآٮِٕفِيْنَ ؕபயந்தவர்களாக لَهُمْஅவர்களுக்கு فِى الدُّنْيَاஇவ்வுலகில் خِزْىٌஇழிவு وَّلَهُمْஇன்னும் அவர்களுக்கு فِى الْاٰخِرَةِமறுமையில் عَذَابٌவேதனை عَظِيْمٌ‏பெரியது
2:114. இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
2:115
2:115 وَلِلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ‌ فَاَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ وَاسِعٌ عَلِيْمٌ‏
وَلِلّٰهِஅல்லாஹ்வுக்கே الْمَشْرِقُகிழக்கு وَالْمَغْرِبُ‌இன்னும் மேற்கு فَاَيْنَمَاஆகவே எங்கெல்லாம் تُوَلُّوْاதிருப்புகிறீர்கள் فَثَمَّஅங்கு وَجْهُமுகம் اللّٰهِ‌ؕஅல்லாஹ்வுடைய اِنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் وَاسِعٌவிசாலமானவன் عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
2:115. கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்); நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; எல்லாம் அறிந்தவன்.
2:116
2:116 وَقَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا ۙ‌ سُبْحٰنَهٗ ‌ؕ بَل لَّهٗ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ كُلٌّ لَّهٗ قَانِتُوْنَ‏
وَقَالُواகூறுகின்றனர் اتَّخَذَஎடுத்துக் கொண்டான் اللّٰهُஅல்லாஹ் وَلَدًا ۙ‌குழந்தையை,சந்ததியை سُبْحٰنَهٗ ؕஅவன் மிகப் பரிசுத்தமானவன் بَلமாறாக لَّهٗஅவனுக்கு مَا فِى السَّمٰوٰتِஎவை/வானங்களில் وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமி كُلٌّஎல்லோரும் لَّهٗஅவனுக்கு قَانِتُوْنَ‏பணிந்தவர்கள்
2:116. இன்னும் கூறுகிறார்கள்: “அல்லாஹ் ஒரு குமாரனைப் பெற்றிருக்கிறான்” என்று. அப்படியல்ல - அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகத் தூய்மையானவன்; வானங்கள், பூமியில் உள்ளவை யாவும் அவனுக்கே உரியவை; இவையனைத்தும் அவனுக்கே அடிபணிந்து வழிபடுகின்றன.
2:117
2:117 بَدِيْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَ اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏
بَدِيْعُபுதுமையான படைப்பாளன் السَّمٰوٰتِவானங்கள் وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமி وَ اِذَا قَضٰٓىஇன்னும் அவன் முடிவு செய்தால் اَمْرًاஒரு காரியத்தை فَاِنَّمَاஅவன் கூறுவதெல்லாம் يَقُوْلُ لَهٗஅதற்கு كُنْஆகு! فَيَكُوْنُ‏உடனே அது ஆகிவிடும்
2:117. (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.
2:118
2:118 وَقَالَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ لَوْلَا يُكَلِّمُنَا اللّٰهُ اَوْ تَاْتِيْنَآ اٰيَةٌ ‌ ؕ كَذٰلِكَ قَالَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ مِّثْلَ قَوْلِهِمْؕ‌ تَشَابَهَتْ قُلُوْبُهُمْ‌ؕ قَدْ بَيَّنَّا الْاٰيٰتِ لِقَوْمٍ يُّوْقِنُوْنَ‏
وَقَالَஇன்னும் கூறினார்(கள்) الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَஎவர்கள்/அறிய மாட்டார்கள் لَوْلَا يُكَلِّمُنَاபேச வேண்டாமா / நம்மிடம் اللّٰهُஅல்லாஹ் اَوْஅல்லது تَاْتِيْنَآவரவேண்டாமா/நமக்கு اٰيَةٌ  ؕஒரு வசனம் كَذٰلِكَஇப்படியே قَالَகூறினார்(கள்) الَّذِيْنَஎவர்கள் مِنْ قَبْلِهِمْமுன்னர் / இவர்களுக்கு مِّثْلَபோன்றே قَوْلِهِمْؕ‌கூற்றை/இவர்களின் تَشَابَهَتْஒப்பாகி விட்டன قُلُوْبُهُمْ‌ؕஉள்ளங்கள்/இவர்களுடைய قَدْ بَيَّنَّاதிட்டமாக தெளிவாக்கினோம் الْاٰيٰتِவசனங்களை لِقَوْمٍசமுதாயத்திற்கு يُّوْقِنُوْنَ‏உறுதி கொள்வார்கள்
2:118. இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ் ஏன் நம்மிடம் பேசவில்லை; மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?” என்று; இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்.
2:119
2:119 اِنَّاۤ اَرْسَلْنٰكَ بِالْحَـقِّ بَشِيْرًا وَّنَذِيْرًا ۙ‌ وَّلَاتُسْــٴَــلُ عَنْ اَصْحٰبِ الْجَحِيْمِ‏
اِنَّاۤநிச்சயமாக நாம் اَرْسَلْنٰكَஅனுப்பினோம்/ உம்மை بِالْحَـقِّஉண்மையைக் கொண்டு بَشِيْرًاநற்செய்தி கூறுபவராக وَّنَذِيْرًا ۙ‌இன்னும் எச்சரிப்பவராக وَّلَاتُسْـَٔلُஇன்னும் விசாரிக்கப்பட மாட்டீர் عَنْபற்றி اَصْحٰبِ الْجَحِيْمِ‏நரகவாசிகள்
2:119. (நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர்.
2:120
2:120 وَلَنْ تَرْضٰى عَنْكَ الْيَهُوْدُ وَلَا النَّصٰرٰى حَتّٰى تَتَّبِعَ مِلَّتَهُمْ‌ؕ قُلْ اِنَّ هُدَى اللّٰهِ هُوَ الْهُدٰى‌ؕ وَلَٮِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَ الَّذِىْ جَآءَكَ مِنَ الْعِلْمِ‌ۙ مَا لَـكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍؔ‏
وَلَنْ تَرْضٰىதிருப்தியடையவே மாட்டா(ர்க)ள் عَنْكَஉம்மைப் பற்றி الْيَهُوْدُயூதர்கள் وَلَا النَّصٰرٰىஇன்னும் கிறித்துவர்கள் حَتّٰى تَتَّبِعَநீர்பின்பற்றும்வரை مِلَّتَهُمْ‌ؕமார்க்கத்தை/அவர்களுடைய قُلْகூறுவீராக اِنَّநிச்சயமாக هُدَىநேர்வழி اللّٰهِஅல்லாஹ்வுடைய هُوَஅதுதான் الْهُدٰى‌ؕநேர்வழி وَلَٮِٕنِ اتَّبَعْتَநீர் பின்பற்றினால் اَهْوَآءَமன விருப்பங்களை هُمْஅவர்களுடைய بَعْدَபின்னர் الَّذِىْஎது جَآءَكَவந்தது/உமக்கு مِنَஇருந்து الْعِلْمِ‌ۙஞானத்தில் مَاஇல்லை لَـكَஉமக்கு مِنَ اللّٰهِஅல்லாஹ்விடம் مِنْ وَّلِىٍّபொறுப்பாளர் وَّلَا نَصِيْرٍؔ‏இன்னும் உதவியாளர் இல்லை
2:120. (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.
2:121
2:121 اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يَتْلُوْنَهٗ حَقَّ تِلَاوَتِهٖؕ اُولٰٓٮِٕكَ يُؤْمِنُوْنَ بِهٖ‌ ؕ وَمَنْ يَّكْفُرْ بِهٖ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ
اَلَّذِيْنَஎவர்கள் اٰتَيْنٰهُمُகொடுத்தோம்/அவர்களுக்கு الْكِتٰبَவேதத்தை يَتْلُوْنَهٗஓதுகிறார்கள்/அதை حَقَّமுறைப்படி تِلَاوَتِهٖؕஓதுவதின்/அதை اُولٰٓٮِٕكَஅவர்கள் يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்கள் بِهٖ‌ ؕஅதை وَمَنْஎவர்(கள்) يَّكْفُرْநிராகரிப்பார்(கள்) بِهٖஅதை فَاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான் الْخٰسِرُوْنَ‏நஷ்டமடைந்தவர்கள்
2:121. யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்; அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்; யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே!
2:122
2:122 يٰبَنِىْٓ اِسْرَآءِيْلَ اذْكُرُوْا نِعْمَتِىَ الَّتِىْٓ اَنْعَمْتُ عَلَيْكُمْ وَاَنِّىْ فَضَّلْتُكُمْ عَلَى الْعٰلَمِيْنَ‏
يٰبَنِىْٓசந்ததிகளே اِسْرَآءِيْلَஇஸ்ராயீலின் اذْكُرُوْاநினைவு கூறுங்கள் نِعْمَتِىَஎன் அருளை الَّتِىْٓஎது اَنْعَمْتُஅருள் புரிந்தேன் عَلَيْكُمْஉங்கள் மீது وَاَنِّىْஇன்னும் நிச்சயமாக நான் فَضَّلْتُكُمْமேன்மையாக்கினேன்/உங்களை عَلَى الْعٰلَمِيْنَ‏உலகத்தாரைவிட
2:122. (யஃகூப் என்ற) இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்த என் நன்கொடைகளை நினைவு கூறுங்கள்; இன்னும் நிச்சயமாக நான் உங்களை உலக மக்கள் எல்லோரையும்விட மேம்பாடுடையோராகச் செய்தேன்.
2:123
2:123 وَاتَّقُوْا يَوْمًا لَّا تَجْزِىْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَيْئًا وَّلَا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَّلَا تَنْفَعُهَا شَفَاعَةٌ وَّلَا هُمْ يُنْصَرُوْنَ‏
وَاتَّقُوْاஇன்னும் அஞ்சுங்கள் يَوْمًاஒரு நாளை لَّا تَجْزِىْபலனளிக்காது نَفْسٌஓர் ஆன்மா عَنْ نَّفْسٍஓர் ஆன்மாவிற்கு شَيْئًاஎதையும் وَّلَا يُقْبَلُஇன்னும் ஏற்கப்படாது مِنْهَاஅதனிடமிருந்து عَدْلٌபரிகாரம் وَّلَا تَنْفَعُهَاஇன்னும் அதற்குப் பலனளிக்காது شَفَاعَةٌபரிந்துரை وَّلَا هُمْ يُنْصَرُوْنَ‏இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
2:123. இன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது; அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது; எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது; இவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.
2:124
2:124 وَاِذِ ابْتَلٰٓى اِبْرٰهٖمَ رَبُّهٗ بِكَلِمٰتٍ فَاَتَمَّهُنَّ ‌ؕ قَالَ اِنِّىْ جَاعِلُكَ لِلنَّاسِ اِمَامًا ‌ؕ قَالَ وَمِنْ ذُرِّيَّتِىْ ‌ؕ قَالَ لَا يَنَالُ عَهْدِى الظّٰلِمِيْنَ‏
وَاِذِஇன்னும் சமயம் ابْتَلٰٓىசோதித்தான் اِبْرٰهٖمَஇப்ராஹீமை رَبُّهٗஅவருடைய இறைவன் بِكَلِمٰتٍகட்டளைகளைக் கொண்டு فَاَتَمَّهُنَّ ؕஆகவே நிறைவு செய்தார்/அவற்றை قَالَகூறினான் اِنِّىْநிச்சயமாக நான் جَاعِلُكَஆக்குகிறேன்/ உன்னை لِلنَّاسِமனிதர்களுக்கு اِمَامًا ؕதலைவராக قَالَகூறினார் وَمِنْஇன்னும் இருந்து ذُرِّيَّتِىْ ؕஎன் சந்ததிகள் قَالَகூறினான் لَا يَنَالُஅடையாது عَهْدِىஎன் வாக்குறுதி الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களை
2:124. (இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.
2:125
2:125 وَاِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمْنًا ؕ وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّى‌ ؕ وَعَهِدْنَآ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ اَنْ طَهِّرَا بَيْتِىَ لِلطَّآٮِٕفِيْنَ وَالْعٰكِفِيْنَ وَالرُّکَّعِ السُّجُوْدِ‏
وَاِذْஇன்னும் சமயம் جَعَلْنَاஆக்கினோம் الْبَيْتَ(வீடு) கஅபாவை مَثَابَةًஒரு திரும்புமிடமாக لِّلنَّاسِமனிதர்களுக்கு وَاَمْنًا ؕஇன்னும் பாதுகாப்பாக وَاتَّخِذُوْاஇன்னும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள் مِنْ مَّقَامِநின்ற இடத்தில் اِبْرٰهٖمَஇப்ராஹீம் مُصَلًّى‌ ؕதொழுமிடத்தை وَعَهِدْنَآஇன்னும் கட்டளையிட்டோம் اِلٰٓى اِبْرٰهٖمَஇப்ராஹீமுக்கு وَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல் اَنْ طَهِّرَاநீங்கள் இருவரும் சுத்தப்படுத்துங்கள் بَيْتِىَஎன் வீட்டை لِلطَّآٮِٕفِيْنَதவாஃப் சுற்றுபவர்களுக்கு وَالْعٰكِفِيْنَஇன்னும் தங்குபவர்கள் وَالرُّکَّعِஇன்னும் குனிபவர்கள் السُّجُوْدِ‏சிரம் பணிபவர்கள்
2:125. (இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.
2:126
2:126 وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اجْعَلْ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّارْزُقْ اَهْلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنْ اٰمَنَ مِنْهُمْ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ قَالَ وَمَنْ كَفَرَ فَاُمَتِّعُهٗ قَلِيْلًا ثُمَّ اَضْطَرُّهٗۤ اِلٰى عَذَابِ النَّارِ‌ؕ وَبِئْسَ الْمَصِيْرُ‏‏
وَاِذْஇன்னும் சமயம் قَالَகூறினார் اِبْرٰهٖمُஇப்ராஹீம் رَبِّஎன் இறைவா اجْعَلْஆக்கு هٰذَاஇதை بَلَدًاஒரு பட்டணமாக اٰمِنًاபாதுகாப்பளிக்கக் கூடியது وَّارْزُقْஇன்னும் உணவளி اَهْلَهٗஅதனுடையவர்களில் مِنَஇருந்து الثَّمَرٰتِகனிகளில் مَنْஎவர் اٰمَنَநம்பிக்கை கொண்டார் مِنْهُمْஅவர்களில் بِاللّٰهِஅல்லாஹ்வைக் கொண்டு وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕஇன்னும் இறுதி நாளை قَالَகூறினான் وَمَنْஇன்னும் எவர் كَفَرَநிராகரிப்பார் فَاُمَتِّعُهٗசுகம்அனுபவிக்கவைப்பேன்/அவரை قَلِيْلًاகொஞ்சம் ثُمَّபிறகு اَضْطَرُّهٗۤஅவரை நிர்ப்பந்திப்பேன் اِلٰى عَذَابِவேதனையின் பக்கம் النَّارِ‌ؕநரகம் وَبِئْسَஅது கெட்டது الْمَصِيْرُ‏‏செல்லுமிடத்தால்
2:126. (இன்னும் நினைவு கூறுங்கள்:) இப்ராஹீம்: “இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று கூறினார்; அதற்கு இறைவன் கூறினான்: “(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்; பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன் - அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே.”
2:127
2:127 وَاِذْ يَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَاِسْمٰعِيْلُؕ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ‌ؕ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏
وَاِذْஇன்னும் சமயம் يَرْفَعُஉயர்த்தினார் اِبْرٰهٖمُஇப்ராஹீம் الْقَوَاعِدَஅஸ்திவாரங்கள் مِنَ الْبَيْتِவீட்டின் وَاِسْمٰعِيْلُؕஇன்னும் இஸ்மாயீல் رَبَّنَاஎங்கள் இறைவா تَقَبَّلْஏற்றுக் கொள் مِنَّا ؕஎங்களிடமிருந்து اِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான் السَّمِيْعُநன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ‏மிக அறிந்தவன்
2:127. இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினார்)
2:128
2:128 رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَـكَ وَ مِنْ ذُرِّيَّتِنَآ اُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَاَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۚ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ‏
رَبَّنَاஇறைவா/எங்கள் وَاجْعَلْنَاஆக்கு/இன்னும் எங்களை مُسْلِمَيْنِபணிபவர்களாக لَـكَஉனக்கு وَ مِنْஇன்னும் இருந்து ذُرِّيَّتِنَآசந்ததி/எங்கள் اُمَّةًசமுதாயம் مُّسْلِمَةًபணியக்கூடிய لَّكَஉனக்கு وَاَرِنَاஇன்னும் காண்பித்துக் கொடு / எங்களுக்கு مَنَاسِكَنَاஎங்கள் ஹஜ்ஜு கிரியைகளை وَتُبْஇன்னும் மன்னித்திடு عَلَيْنَا ۚஎங்களை اِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான் التَّوَّابُதவ்பாவை அங்கீகரிப்பவன் الرَّحِيْمُ‏பேரன்பாளன்
2:128. “எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக; நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக; எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”
2:129
2:129 رَبَّنَا وَابْعَثْ فِيْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَ يُزَكِّيْهِمْ‌ؕ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
رَبَّنَاஎங்கள் இறைவா وَابْعَثْஇன்னும் அனுப்பு فِيْهِمْஅவர்களில் رَسُوْلًاஒரு தூதரை مِّنْهُمْஅவர்களிலிருந்து يَتْلُوْاஓதுவார் عَلَيْهِمْஅவர்களுக்கு اٰيٰتِكَஉன் வசனங்களை وَيُعَلِّمُهُمُகற்பிப்பார்/இன்னும் அவர்களுக்கு الْكِتٰبَவேதத்தை وَالْحِكْمَةَஇன்னும் ஞானத்தை وَ يُزَكِّيْهِمْ‌ؕபரிசுத்தப்படுத்துவார் / இன்னும் அவர்களை اِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான் الْعَزِيْزُமிகைத்தவன் الْحَكِيْمُ‏மகா ஞானவான்
2:129. “எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.”
2:130
2:130 وَمَنْ يَّرْغَبُ عَنْ مِّلَّةِ اِبْرٰهٖمَ اِلَّا مَنْ سَفِهَ نَفْسَهٗ ‌ؕ وَلَقَدِ اصْطَفَيْنٰهُ فِى الدُّنْيَا ‌ۚ وَاِنَّهٗ فِى الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِيْنَ‏
وَمَنْஇன்னும் யார் يَّرْغَبُவெறுப்பார் عَنْவிட்டு مِّلَّةِமார்க்கத்தை اِبْرٰهٖمَஇப்ராஹீமுடைய اِلَّاதவிர مَنْஎவன் سَفِهَமடையனாக ஆனான் نَفْسَهٗ ؕஅவனே وَلَقَدِதிட்டவட்டமாக اصْطَفَيْنٰهُதேர்ந்தெடுத்தோம்/அவரை فِى الدُّنْيَا ۚஇவ்வுலகில் وَاِنَّهٗநிச்சயமாக அவர் فِى الْاٰخِرَةِமறுமையில் لَمِنَ الصّٰلِحِيْنَ‏நல்லோரில்தான்
2:130. இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.
2:131
2:131 اِذْ قَالَ لَهٗ رَبُّهٗۤ اَسْلِمْ‌ۙ قَالَ اَسْلَمْتُ لِرَبِّ الْعٰلَمِيْنَ‏
اِذْசமயம் قَالَகூறினான் لَهٗஅவருக்கு رَبُّهٗۤஅவருடைய இறைவன் اَسْلِمْ‌ۙபணிந்து (முஸ்லிமாகி) விடு قَالَகூறினார் اَسْلَمْتُபணிந்து (முஸ்லிமாகி)விட்டேன் لِرَبِّஇறைவனுக்கு الْعٰلَمِيْنَ‏அகிலத்தார்களின்
2:131. இன்னும், அவரிடம் அவருடைய இறைவன் “(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்” என்று சொன்னபோது அவர், “அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்” என்று கூறினார்.
2:132
2:132 وَوَصّٰى بِهَآ اِبْرٰهٖمُ بَنِيْهِ وَ يَعْقُوْبُؕ يٰبَنِىَّ اِنَّ اللّٰهَ اصْطَفٰى لَـكُمُ الدِّيْنَ فَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَؕ‏‏
وَوَصّٰىஇன்னும் உபதேசித்தார் بِهَآஅதை اِبْرٰهٖمُஇப்ராஹீம் بَنِيْهِபிள்ளைகளுக்கு/தன் وَ يَعْقُوْبُؕஇன்னும் யஃகூப் يٰبَنِىَّஎன் பிள்ளைகளே اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ் اصْطَفٰىதேர்ந்தெடுத்தான் لَـكُمُஉங்களுக்கு الدِّيْنَமார்க்கத்தை فَلَا تَمُوْتُنَّஎனவே, கண்டிப்பாக நீங்கள் மரணித்து விடாதீர்கள் اِلَّاதவிர وَاَنْـتُمْநீங்கள் இருக்கவே مُّسْلِمُوْنَؕ‏‏முஸ்லிம்களாக
2:132. இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்: “என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.”
2:133
2:133 اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ حَضَرَ يَعْقُوْبَ الْمَوْتُۙ اِذْ قَالَ لِبَنِيْهِ مَا تَعْبُدُوْنَ مِنْۢ بَعْدِىْؕ قَالُوْا نَعْبُدُ اِلٰهَكَ وَاِلٰهَ اٰبَآٮِٕكَ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ اِلٰهًا وَّاحِدًا ۖۚ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏
اَمْஅல்லது كُنْتُمْஇருந்தீர்கள் شُهَدَآءَசாட்சிகளாக اِذْபோது حَضَرَவந்தது يَعْقُوْبَயஃகூபுக்கு الْمَوْتُۙமரணம் اِذْபோது قَالَகூறினார் لِبَنِيْهِபிள்ளைகளை நோக்கி/தன் مَاயாரை تَعْبُدُوْنَநீங்கள் வணங்குவீர்கள் مِنْۢ بَعْدِىْؕஎனக்குப் பின்னர் قَالُوْاகூறினார்கள் نَعْبُدُவணங்குவோம் اِلٰهَكَகடவுளை/உம் وَاِلٰهَஇன்னும் கடவுளை اٰبَآٮِٕكَமூதாதைகளின்/உம் اِبْرٰهٖمَஇப்ராஹீம் وَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக் اِلٰهًاஒரு கடவுளை وَّاحِدًا ۖۚஒரே وَّنَحْنُஇன்னும் நாங்கள் لَهٗஅவனுக்கு مُسْلِمُوْنَ‏முஸ்லிம்கள்
2:133. யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர்.
2:134
2:134 تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ‌ۚ لَهَا مَا كَسَبَتْ وَلَـكُمْ مَّا كَسَبْتُمْ‌ۚ وَلَا تُسْأَلُوْنَ عَمَّا كَانُوْا يَعْمَلُوْنَ‏
تِلْكَஅது اُمَّةٌசமுதாயம் قَدْ خَلَتْ‌ۚசென்றுவிட்டது لَهَاஅதற்கு مَاஎது كَسَبَتْசெய்தது وَلَـكُمْஇன்னும் உங்களுக்கு مَّاஎது كَسَبْتُمْ‌ۚசெய்தீர்கள் وَلَا تُسْأَلُوْنَஇன்னும் விசாரிக்கப்பட மாட்டீர்கள் عَمَّاஎதைப்பற்றி كَانُوْاஇருந்தனர் يَعْمَلُوْنَ‏செய்வார்கள்
2:134. அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது; அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்.
2:135
2:135 وَقَالُوْا کُوْنُوْا هُوْدًا اَوْ نَصٰرٰى تَهْتَدُوْا ‌ؕ قُلْ بَلْ مِلَّةَ اِبْرٰهٖمَ حَنِيْفًا ‌ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ‏
وَقَالُوْاஇன்னும் கூறினார்கள் کُوْنُوْاஆகிவிடுங்கள் هُوْدًاயூதர்களாக اَوْஅல்லது نَصٰرٰىகிறித்துவர்களாக تَهْتَدُوْا ؕநேர்வழி பெறுவீர்கள் قُلْகூறுவீராக بَلْமாறாக مِلَّةَமார்க்கத்தை اِبْرٰهٖمَஇப்ராஹீமின் حَنِيْفًا ؕஇஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியுடையவர் وَمَا كَانَஇன்னும் அவர் இருக்கவில்லை مِنَ الْمُشْرِكِيْنَ‏இணைவைப்பவர்களில்
2:135. “நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் - நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
2:136
2:136 قُوْلُوْٓا اٰمَنَّا بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ اِلَيْنَا وَمَآ اُنْزِلَ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَ الْاَسْبَاطِ وَمَآ اُوْتِىَ مُوْسٰى وَعِيْسٰى وَمَآ اُوْتِىَ النَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْ‌ۚ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏
قُوْلُوْٓاகூறுங்கள் اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம் بِاللّٰهِஅல்லாஹ்வைக் கொண்டு وَمَآஇன்னும் எது اُنْزِلَஇறக்கப்பட்டது اِلَيْنَاநமக்கு وَمَآஇன்னும் எது اُنْزِلَஇறக்கப்பட்டது اِلٰٓى اِبْرٰهٖمَஇப்ராஹீமுக்கு وَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَஇன்னும் யஃகூப் وَ الْاَسْبَاطِஇன்னும் சந்ததிகள் وَمَآஇன்னும் எது اُوْتِىَகொடுக்கப்பட்டார்(கள்) مُوْسٰىமூசா وَعِيْسٰىஇன்னும் ஈஸா وَمَآஇன்னும் எது اُوْتِىَகொடுக்கப்பட்டார்(கள்) النَّبِيُّوْنَநபிமார்களுக்கு مِنْஇருந்து رَّبِّهِمْ‌ۚஇறைவன்/தங்கள் لَا نُفَرِّقُபிரிக்க மாட்டோம் بَيْنَமத்தியில் اَحَدٍஒருவருக்கு مِّنْهُمْஅவர்களில் وَنَحْنُஇன்னும் நாம் لَهٗஅவனுக்கு مُسْلِمُوْنَ‏முஸ்லிம்கள் (முற்றிலும் பணிந்தவர்கள்)
2:136. (முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.
2:137
2:137 فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَآ اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا ‌ۚ وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا هُمْ فِىْ شِقَاقٍ‌ ۚ فَسَيَكْفِيْکَهُمُ اللّٰهُ ‌ۚ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُؕ‏
فَاِنْ اٰمَنُوْاஅவர்கள் நம்பிக்கை கொண்டால் بِمِثْلِபோன்றே مَآஎதை اٰمَنْتُمْநம்பிக்கை கொண்டீர்கள் بِهٖஅதைக் கொண்டு فَقَدِதிட்டமாக اهْتَدَوْا ۚநேர்வழி பெறுவார்கள் وَاِنْ تَوَلَّوْاஅவர்கள் திரும்பினால் فَاِنَّمَا هُمْஅவர்களெல்லாம் فِىْ شِقَاقٍ‌ ۚமுரண்பாட்டில்தான் فَسَيَكْفِيْکَهُمُஆக, பாதுகாப்பான்/உம்மை/அவர்களிடமிருந்து اللّٰهُ ۚஅல்லாஹ் وَهُوَஇன்னும் அவன் السَّمِيْعُநன்கு செவியுறுபவன் الْعَلِيْمُؕ‏நன்கறிந்தவன்
2:137. ஆகவே, நீங்கள் ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்; ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான்.
2:138
2:138 صِبْغَةَ اللّٰهِ ‌ۚ وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ صِبْغَةً  وَّنَحْنُ لَهٗ عٰبِدُوْنَ‏
صِبْغَةَமார்க்கத்தை اللّٰهِ ۚஅல்லாஹ்வுடைய وَمَنْஇன்னும் யார் اَحْسَنُமிக அழகானவன் مِنَ اللّٰهِஅல்லாஹ்வை விட صِبْغَةً மார்க்கம் وَّنَحْنُஇன்னும் நாங்கள் لَهٗஅவனையே عٰبِدُوْنَ‏வணங்கக்கூடியவர்கள்
2:138. “(இதுவே) அல்லாஹ்வின் வர்ணம்(ஞான ஸ்னானம்) ஆகும்; வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார்? அவனையே நாங்கள் வணங்குகிறோம்” (எனக் கூறுவீர்களாக).
2:139
2:139 قُلْ اَ تُحَآجُّوْنَـنَا فِى اللّٰهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّکُمْۚ وَلَنَآ اَعْمَالُـنَا وَلَـكُمْ اَعْمَالُكُمْۚ وَنَحْنُ لَهٗ مُخْلِصُوْنَۙ‏
قُلْகூறுவீராக اَ تُحَآجُّوْنَـنَاதர்க்கிக்கிறீர்களா? / நம்மிடம் فِى اللّٰهِஅல்லாஹ்வின் விசயத்தில் وَهُوَஅவன் رَبُّنَاஇறைவன்/எங்கள் وَرَبُّکُمْۚஇன்னும் இறைவன்/உங்கள் وَلَنَآஇன்னும் எங்களுக்கு اَعْمَالُـنَاசெயல்கள்/எங்கள் وَلَـكُمْஇன்னும் உங்களுக்கு اَعْمَالُكُمْۚசெயல்கள்/உங்கள் وَنَحْنُஇன்னும் நாங்கள் لَهٗஅவனுக்கே مُخْلِصُوْنَۙ‏வழிபாட்டைக் கலப்பின்றி செய்பவர்கள்
2:139. அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் எங்களிடம் தர்க்கிக்கிறீர்களா? அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான்; எங்கள் செய்கைகளின் (பலன்) எங்களுக்கு; உங்கள் செய்கைகளின் (பலன்) உங்களுக்கு; மேலும் நாங்கள் அவனுக்கே கலப்பற்ற (ஈமான் உடைய)வர்களாக இருக்கின்றோம்” என்று (நபியே! அவர்களுக்கு) நீர் கூறுவீராக.
2:140
2:140 اَمْ تَقُوْلُوْنَ اِنَّ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطَ كَانُوْا هُوْدًا اَوْ نَصٰرٰى‌ؕ قُلْ ءَاَنْـتُمْ اَعْلَمُ اَمِ اللّٰهُ‌ ؕ وَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً عِنْدَهٗ مِنَ اللّٰهِ‌ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ‏
اَمْஅல்லது تَقُوْلُوْنَகூறுகிறீர்கள் اِنَّநிச்சயமாக اِبْرٰهٖمَஇப்ராஹீம் وَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَஇன்னும் யஃகூப் وَالْاَسْبَاطَஇன்னும் சந்ததிகள் كَانُوْاஇருந்தார்கள் هُوْدًاயூதர்களாக اَوْஅல்லது نَصٰرٰى‌ؕகிறித்துவர்களாக قُلْகூறுவீராக ءَاَنْتُمْநீங்களா? اَعْلَمُமிக அறிந்தவர்(கள்) اَمِஅல்லது اللّٰهُ‌ ؕஅல்லாஹ்வா? وَمَنْஇன்னும் யார்? اَظْلَمُமகா அநியாயக்காரர் مِمَّنْஎவரைவிட كَتَمَமறைத்தார் شَهَادَةًசாட்சியத்தை عِنْدَهٗதன்னிடத்தில் مِنَ اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின் وَمَاஇல்லை اللّٰهُஅல்லாஹ் بِغَافِلٍகவனமற்றவனாக عَمَّاபற்றி/அல்லாஹ் تَعْمَلُوْنَ‏செய்கிறீர்கள்
2:140. “இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நிச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே” என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக: “(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை.”
2:141
2:141 تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ‌ۚ لَهَا مَا كَسَبَتْ وَلَـكُمْ مَّا كَسَبْتُمْ‌ۚ وَلَا تُسْأَلُوْنَ عَمَّا كَانُوْا يَعْمَلُوْنَ
تِلْكَஅது اُمَّةٌஒரு சமுதாயம் قَدْ خَلَتْ‌ۚசென்றுவிட்டது لَهَاஅதற்கு مَاஎது كَسَبَتْசெய்தது وَلَـكُمْஇன்னும் உங்களுக்கு مَّاஎது كَسَبْتُمْ‌ۚசெய்தீர்கள் وَلَا تُسْأَلُوْنَஇன்னும் விசாரிக்கப்பட மாட்டீர்கள் عَمَّاஎது பற்றி كَانُوْاஇருந்தார்கள் يَعْمَلُوْنَ‏செய்வார்கள்
2:141. அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது. அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்.
2:142
2:142 سَيَقُوْلُ السُّفَهَآءُ مِنَ النَّاسِ مَا وَلّٰٮهُمْ عَنْ قِبْلَتِهِمُ الَّتِىْ كَانُوْا عَلَيْهَا ‌ؕ قُلْ لِّلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ ؕ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
سَيَقُوْلُகூறுவார்கள் السُّفَهَآءُஅறிவீனர்கள் مِنَ النَّاسِமக்களில் مَاஎது وَلّٰٮهُمْதிருப்பியது/அவர்களை عَنْவிட்டு قِبْلَتِهِمُகிப்லா/அவர்களின் الَّتِىْஎது كَانُوْاஇருந்தார்கள் عَلَيْهَا ؕஅதன் மீது قُلْகூறு(வீராக) لِّلّٰهِஅல்லாஹ்வுக்குரியன الْمَشْرِقُகிழக்கு وَالْمَغْرِبُ ؕஇன்னும் மேற்கு يَهْدِىْநேர்வழிகாட்டுகிறான் مَنْஎவர் يَّشَآءُநாடுகிறான் اِلٰى صِرَاطٍபாதைக்கு مُّسْتَقِيْمٍநேரான
2:142. மக்களில் அறிவீனர்கள் கூறுவார்கள்: “(முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பிவிட்டது எது?” என்று. (நபியே!) நீர் கூறும் “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை; தான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான்” என்று.
2:143
2:143 وَكَذٰلِكَ جَعَلْنٰكُمْ اُمَّةً وَّسَطًا لِّتَکُوْنُوْا شُهَدَآءَ عَلَى النَّاسِ وَيَكُوْنَ الرَّسُوْلُ عَلَيْكُمْ شَهِيْدًا ؕ وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِىْ كُنْتَ عَلَيْهَآ اِلَّا لِنَعْلَمَ مَنْ يَّتَّبِعُ الرَّسُوْلَ مِمَّنْ يَّنْقَلِبُ عَلٰى عَقِبَيْهِ ‌ؕ وَاِنْ كَانَتْ لَكَبِيْرَةً اِلَّا عَلَى الَّذِيْنَ هَدَى اللّٰهُ ؕ وَمَا كَانَ اللّٰهُ لِيُضِيْعَ اِيْمَانَكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِيْمٌ‏
وَكَذٰلِكَஇன்னும் அவ்வாறுதான் جَعَلْنٰكُمْஆக்கினோம்/உங்களை اُمَّةًசமுதாயமாக وَّسَطًاநடுநிலையான لِّتَکُوْنُوْاநீங்கள் இருப்பதற்காக شُهَدَآءَசாட்சிகளாக عَلَى النَّاسِமக்களுக்கு وَيَكُوْنَஇன்னும் இருப்பார் الرَّسُوْلُதூதர் عَلَيْكُمْஉங்களுக்கு شَهِيْدًا ؕசாட்சியாக وَمَا جَعَلْنَاஇன்னும் நாம்ஆக்கவில்லை الْقِبْلَةَகிப்லாவை الَّتِىْஎது كُنْتَநீர் இருந்தீர் عَلَيْهَآஅதன் மீது اِلَّاதவிர لِنَعْلَمَநாம் அறிவதற்காக مَنْஎவர் يَّتَّبِعُபின்பற்றுவார் الرَّسُوْلَதூதரை مِمَّنْஎவரிலிருந்து يَّنْقَلِبُதிரும்பி விடுகிறார் عَلٰىமீது عَقِبَيْهِ ؕஅவருடைய (இரு) குதிங்கால்கள் وَاِنْ كَانَتْஇன்னும் நிச்சயமாக அது இருந்தது لَكَبِيْرَةًபெரிதாக اِلَّاதவிர عَلَىமீது الَّذِيْنَஎவர்கள் هَدَىநேர்வழி நடத்தினான் اللّٰهُ ؕஅல்லாஹ் وَمَا كَانَஇன்னும் இருக்கவில்லை اللّٰهُஅல்லாஹ் لِيُضِيْعَஅவன் வீணாக்குபவனாக اِيْمَانَكُمْ‌ ؕஉங்கள் நம்பிக்கையை اِنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் بِالنَّاسِமக்கள் மீது لَرَءُوْفٌமிக இரக்கமுடையவன்தான் رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
2:143. இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்; யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள் யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்; இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது; அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.
2:144
2:144 قَدْ نَرٰى تَقَلُّبَ وَجْهِكَ فِى السَّمَآءِ‌‌ۚ فَلَـنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضٰٮهَا‌ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِؕ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ‌ؕ وَاِنَّ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ لَيَـعْلَمُوْنَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّهِمْ‌ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُوْنَ‏
قَدْ نَرٰىதிட்டமாக காண்கிறோம் تَقَلُّبَதிரும்புவதை وَجْهِكَஉம் முகம் فِى السَّمَآءِ‌ۚவானத்தின் பக்கம் فَلَـنُوَلِّيَنَّكَஆகவே நிச்சயமாக திருப்புவோம்/உம்மை قِبْلَةًஒரு கிப்லாவிற்கு تَرْضٰٮهَا‌நீர்அதைவிரும்புகிறீர் فَوَلِّஎனவே திருப்புவீராக وَجْهَكَஉம் முகத்தை شَطْرَபக்கம் الْمَسْجِدِஅல் மஸ்ஜிது الْحَـرَامِؕபுனிதமான وَحَيْثُ مَا كُنْتُمْநீங்கள் எங்கிருந்தாலும் فَوَلُّوْاதிருப்புங்கள் وُجُوْهَكُمْஉங்கள் முகங்களை شَطْرَهٗ ؕஅதன் பக்கம் وَاِنَّஇன்னும் நிச்சயமாக الَّذِيْنَஎவர்கள் اُوْتُواகொடுக்கப்பட்டார்கள் الْكِتٰبَவேதம் لَيَـعْلَمُوْنَதிட்டமாக அறிவார்கள் اَنَّهُநிச்சயமாக அது الْحَـقُّஉண்மை مِنْஇருந்து رَّبِّهِمْ‌ؕதங்கள் இறைவன் وَمَاஇன்னும் இல்லை اللّٰهُஅல்லாஹ் بِغَافِلٍகவனமற்றவனாக عَمَّاஎதைப்பற்றி يَعْمَلُوْنَ‏செய்கிறார்கள்
2:144. (நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.
2:145
2:145 وَلَٮِٕنْ اَ تَيْتَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ بِكُلِّ اٰيَةٍ مَّا تَبِعُوْا قِبْلَتَكَ‌ۚ وَمَآ اَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ‌ۚ وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍؕ وَلَٮِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ مِّنْۢ بَعْدِ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ‌ۙ اِنَّكَ اِذًا لَّمِنَ الظّٰلِمِيْنَ‌ۘ‏
وَلَٮِٕنْ اَ تَيْتَநீர் வந்தால் الَّذِيْنَஎவர்கள் اُوْتُواகொடுக்கப்பட்டார்கள் الْكِتٰبَவேதம் بِكُلِّஎல்லாவற்றையும் கொண்டு اٰيَةٍஅத்தாட்சி مَّا تَبِعُوْاஅவர்கள் பின்பற்ற மாட்டார்கள் قِبْلَتَكَ‌ۚஉமது கிப்லாவை وَمَآஇன்னும் இல்லை اَنْتَநீர் بِتَابِعٍபின்பற்றுபவராக قِبْلَتَهُمْ‌ۚஅவர்களின்கிப்லாவை وَمَاஇன்னும் இல்லை بَعْضُهُمْஅவர்களில் சிலர் بِتَابِعٍபின்பற்றுபவராக قِبْلَةَகிப்லாவை بَعْضٍؕசிலரின் وَلَٮِٕنِ اتَّبَعْتَநீர் பின்பற்றினால் اَهْوَآءَவிருப்பங்களை هُمْஅவர்களுடைய مِّنْۢ بَعْدِபின்னர் مَاஎது جَآءَكَவந்தது/உமக்கு مِنَ الْعِلْمِ‌ۙகல்வியிலிருந்து اِنَّكَநிச்சயமாக நீர் اِذًاஅப்போது لَّمِنَதான்/இல் الظّٰلِمِيْنَ‌ۘ‏அநியாயக்காரர்கள்
2:145. வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்;; நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர்; இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்; எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.
2:146
2:146 اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يَعْرِفُوْنَهٗ كَمَا يَعْرِفُوْنَ اَبْنَآءَهُمْؕ وَاِنَّ فَرِيْقًا مِّنْهُمْ لَيَكْتُمُوْنَ الْحَـقَّ وَهُمْ يَعْلَمُوْنَؔ‏
اَلَّذِيْنَஎவர்கள் اٰتَيْنٰهُمُகொடுத்தோம்/அவர்களுக்கு الْكِتٰبَவேதத்தை يَعْرِفُوْنَهٗஅறிவார்கள்/அதை كَمَاபோன்று يَعْرِفُوْنَஅறிகிறார்கள் اَبْنَآءَபிள்ளைகளை هُمْؕதங்கள் وَاِنَّஇன்னும் நிச்சயமாக فَرِيْقًاஒரு பிரிவினர் مِّنْهُمْஅவர்களிலிருந்து لَيَكْتُمُوْنَதிட்டமாக மறைக்கிறார்கள் الْحَـقَّஉண்மையை وَهُمْஅவர்கள் يَعْلَمُوْنَؔ‏அறிகிறார்கள்
2:146. எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்: ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.
2:147
2:147 اَلْحَـقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِيْنَ
اَلْحَـقُّஉண்மை مِنْஇருந்து رَّبِّكَஉம் இறைவன் فَلَا تَكُوْنَنَّஎனவே, நீர் ஆகிவிட வேண்டாம் مِنَ الْمُمْتَرِيْنَ‏சந்தேகிப்பவர்களில்
2:147. (கிப்லாவைப் பற்றிய) இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்; ஆகவே (அதனைச்) சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்.
2:148
2:148 وَلِكُلٍّ وِّجْهَةٌ هُوَ مُوَلِّيْهَا ‌ۚ فَاسْتَبِقُوا الْخَيْرٰتِؕؔ اَيْنَ مَا تَكُوْنُوْا يَاْتِ بِكُمُ اللّٰهُ جَمِيْعًا ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
وَلِكُلٍّஒவ்வொருவருக்கும் وِّجْهَةٌஒரு திசை هُوَ مُوَلِّيْهَا ۚஅவர் அதை முன்னோக்கக்கூடியவர் فَاسْتَبِقُواஎனவே, முந்திச் செல்லுங்கள் الْخَيْرٰتِؕؔநன்மைகளில் اَيْنَ مَاஎங்கே تَكُوْنُوْاநீங்கள்இருந்தாலும் يَاْتِவருவான் بِكُمُஉங்களைக் கொண்டு اللّٰهُஅல்லாஹ் جَمِيْعًا ؕஅனைவரையும் اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ் عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாப் பொருள் மீது قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
2:148. ஓவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான) ஒரு திசையுண்டு; அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான்- நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான்.
2:149
2:149 وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِؕ وَاِنَّهٗ لَـلْحَقُّ مِنْ رَّبِّكَؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ‏
وَمِنْ حَيْثُ خَرَجْتَநீர் எங்கிருந்து புறப்பட்டாலும் فَوَلِّதிருப்புவீராக وَجْهَكَஉம் முகத்தை شَطْرَபக்கம் الْمَسْجِدِஅல் மஸ்ஜிது الْحَـرَامِؕபுனிதமான وَاِنَّهٗஇன்னும் நிச்சயமாக இது لَـلْحَقُّ(உ) உண்மைதான் مِنْஇருந்து رَّبِّكَؕஉம் இறைவன் وَمَاஇன்னும் இல்லை اللّٰهُஅல்லாஹ் بِغَافِلٍகவனமற்றவனாக عَمَّاஎது பற்றி تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்கிறீர்கள்
2:149. ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக; நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை-அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை.
2:150
2:150 وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِؕ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَڪُمْ شَطْرَهٗ ۙ لِئَلَّا يَكُوْنَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ اِلَّا الَّذِيْنَ ظَلَمُوْا مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِىْ وَلِاُتِمَّ نِعْمَتِىْ عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۙ‌ۛ‏
وَمِنْ حَيْثُ خَرَجْتَஇன்னும் நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் فَوَلِّதிருப்புவீராக وَجْهَكَஉம் முகத்தை شَطْرَபக்கம் الْمَسْجِدِஅல் மஸ்ஜிது الْحَـرَامِؕபுனிதமான وَحَيْثُ مَا كُنْتُمْநீங்கள் எங்கிருந்தாலும் فَوَلُّوْاதிருப்புங்கள் وُجُوْهَڪُمْஉங்கள் முகங்களை شَطْرَهٗ ۙஅதன் பக்கம் لِئَلَّا يَكُوْنَஆகாமல் இருப்பதற்காக لِلنَّاسِமக்களுக்கு عَلَيْكُمْஉங்களுக்கெதிராக حُجَّةٌஓர் ஆதாரம் اِلَّاதவிர الَّذِيْنَஎவர்கள் ظَلَمُوْاஅநியாயம் செய்தார்கள் مِنْهُمْஅவர்களில் فَلَا تَخْشَوْهُمْஆகவே, அவர்களைப் பயப்படாதீர்கள் وَاخْشَوْنِىْஇன்னும் என்னைப் பயப்படுங்கள் وَلِاُتِمَّஇன்னும் நான் முழுமைப்படுத்துவதற்காக نِعْمَتِىْஎன் அருட்கொடையை عَلَيْكُمْஉங்கள் மீது وَلَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۙ‌ۛ‏இன்னும் நீங்கள் நேர்வழி அடைவதற்கு
2:150. ஆகவே(நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்ளும்; (முஃமின்களே!) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள்; எனவே, அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்; இன்னும், என்னுடைய நிஃமத்களை(அருட் கொடைகளை) உங்கள் மீது முழுமையாக்கி வைப்பதற்கும், நீங்கள் நேர்வழியினைப் பெறுவதற்கும் (பிறருக்கு அஞ்சாது, எனக்கே அஞ்சுங்கள்).
2:151
2:151 كَمَآ اَرْسَلْنَا فِيْکُمْ رَسُوْلًا مِّنْکُمْ يَتْلُوْا عَلَيْكُمْ اٰيٰتِنَا وَيُزَكِّيْکُمْ وَيُعَلِّمُکُمُ الْكِتٰبَ وَالْحِکْمَةَ وَيُعَلِّمُكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَ ؕ‌ۛ‏
كَمَآ اَرْسَلْنَاநாம் அனுப்பியதற்காக فِيْکُمْஉங்களுக்கு رَسُوْلًاஒரு தூதரை مِّنْکُمْஉங்களிலிருந்தே يَتْلُوْاஅவர் ஓதுகிறார் عَلَيْكُمْஉங்கள் மீது اٰيٰتِنَاநம் வசனங்களை وَيُزَكِّيْکُمْஇன்னும் உங்களைத் தூய்மைப்படுத்துகிறார் وَيُعَلِّمُکُمُஇன்னும் உங்களுக்குக் கற்பிக்கிறார் الْكِتٰبَவேதத்தை وَالْحِکْمَةَஇன்னும் ஞானத்தை وَيُعَلِّمُكُمْஇன்னும் உங்களுக்கு கற்பிக்கிறார் مَّاஎதை لَمْ تَكُوْنُوْاநீங்கள்இருக்கவில்லை تَعْلَمُوْنَ ؕ‌ۛ‏அறிவீர்கள்
2:151. இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.
2:152
2:152 فَاذْكُرُوْنِىْٓ اَذْكُرْكُمْ وَاشْکُرُوْا لِىْ وَلَا تَكْفُرُوْنِ
فَاذْكُرُوْஆகவே நினைவு கூருங்கள் نِىْٓஎன்னை اَذْكُرْكُمْநினைவு கூருவேன்/உங்களை وَاشْکُرُوْاஇன்னும் நன்றி செலுத்துங்கள் لِىْஎனக்கு وَلَا تَكْفُرُوْنِ‏இன்னும் மாறுசெய்யாதீர்கள் / எனக்கு
2:152. ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.
2:153
2:153 يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‏
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கையாளர்களே! اسْتَعِيْنُوْاஉதவி கோருங்கள் بِالصَّبْرِபொறுமையைக் கொண்டு وَالصَّلٰوةِ ؕஇன்னும் தொழுகை اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ் مَعَஉடன் الصّٰبِرِيْنَ‏பொறுமையாளர்கள்
2:153. நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
2:154
2:154 وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتٌ ؕ بَلْ اَحْيَآءٌ وَّلٰـكِنْ لَّا تَشْعُرُوْنَ‏
وَلَا تَقُوْلُوْاஇன்னும் கூறாதீர்கள் لِمَنْஎவரை يُّقْتَلُகொல்லப்படுவார்கள் فِىْ سَبِيْلِபாதையில் اللّٰهِஅல்லாஹ்வுடைய اَمْوَاتٌ ؕஇறந்தவர்கள் بَلْமாறாக اَحْيَآءٌஉயிருள்ளவர்கள் وَّلٰـكِنْஎனினும் لَّا تَشْعُرُوْنَ‏அறிய மாட்டீர்கள்
2:154. இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “(அவர்கள்) இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.
2:155
2:155 وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِؕ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ‏
وَلَـنَبْلُوَنَّكُمْநிச்சயமாக சோதிப்போம்/உங்களை بِشَىْءٍகொஞ்சத்தைக் கொண்டு مِّنَ الْخَـوْفِபயத்திலிருந்து وَالْجُـوْعِஇன்னும் பசி وَنَقْصٍஇன்னும் நஷ்டம் مِّنَ الْاَمْوَالِசெல்வங்களிலிருந்து وَالْاَنْفُسِஇன்னும் உயிர்கள் وَالثَّمَرٰتِؕஇன்னும் விளைச்சல்கள் وَبَشِّرِஇன்னும் நற்செய்தி கூறுவீராக الصّٰبِرِيْنَۙ‏பொறுமையாளர்களுக்கு
2:155. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
2:156
2:156 الَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ  ۙ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَؕ‏
الَّذِيْنَஎவர்கள் اِذَآ اَصَابَتْهُمْஏற்பட்டால் / அவர்களுக்கு مُّصِيْبَةٌ  ۙஒரு சோதனை قَالُوْٓاகூறுவார்கள் اِنَّاநிச்சயமாக நாம் لِلّٰهِஅல்லாஹ்விற்காக وَاِنَّـآஇன்னும் நிச்சயமாக நாம் اِلَيْهِஅவனிடமே رٰجِعُوْنَؕ‏திரும்புகிறவர்கள்
2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
2:157
2:157 اُولٰٓٮِٕكَ عَلَيْهِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّهِمْ وَرَحْمَةٌ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُهْتَدُوْنَ‏
اُولٰٓٮِٕكَஅவர்கள் عَلَيْهِمْஅவர்கள் மீது صَلَوٰتٌமன்னிப்பு مِّنْஇருந்து رَّبِّهِمْஅவர்களின் இறைவன் وَرَحْمَةٌ‌இன்னும் கருணை وَاُولٰٓٮِٕكَ هُمُஇன்னும் அவர்கள்தான் الْمُهْتَدُوْنَ‏நேர்வழி பெற்றவர்கள்
2:157. இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.
2:158
2:158 اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَآٮِٕرِ اللّٰهِۚ فَمَنْ حَجَّ الْبَيْتَ اَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ اَنْ يَّطَّوَّفَ بِهِمَا ؕ وَمَنْ تَطَوَّعَ خَيْرًا ۙ فَاِنَّ اللّٰهَ شَاكِرٌ عَلِيْمٌ‏
اِنَّநிச்சயமாக الصَّفَاஸஃபா وَالْمَرْوَةَஇன்னும் மர்வா مِنْஇருந்து شَعَآٮِٕرِஅடையாளங்கள் اللّٰهِۚஅல்லாஹ்வுடைய فَمَنْஆகவே எவர் حَجَّஹஜ்ஜு செய்தார் الْبَيْتَகஅபாவை اَوِஅல்லது اعْتَمَرَஉம்றா செய்தார் فَلَا جُنَاحَஅறவே குற்றமில்லை عَلَيْهِஅவர் மீது اَنْ يَّطَّوَّفَசுற்றி வருவது بِهِمَا ؕஅவ்விரண்டையும் وَمَنْஇன்னும் எவர் تَطَوَّعَஉபரியாகச் செய்தார் خَيْرًا ۙநன்மையை فَاِنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் شَاكِرٌநன்றி பாராட்டுபவன் عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
2:158. நிச்சயமாக “ஸஃபா”, “மர்வா” (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன; எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்வார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல; இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
2:159
2:159 اِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَآ اَنْزَلْنَا مِنَ الْبَيِّنٰتِ وَالْهُدٰى مِنْۢ بَعْدِ مَا بَيَّنّٰهُ لِلنَّاسِ فِى الْكِتٰبِۙ اُولٰٓٮِٕكَ يَلْعَنُهُمُ اللّٰهُ وَ يَلْعَنُهُمُ اللّٰعِنُوْنَۙ‏
اِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள் يَكْتُمُوْنَமறைக்கிறார்கள் مَآஎவற்றை اَنْزَلْنَاஇறக்கினோம் مِنَஇருந்து الْبَيِّنٰتِதெளிவான சான்றுகள் وَالْهُدٰىஇன்னும் நேர்வழி مِنْۢ بَعْدِபின்னர் مَاஅவற்றை بَيَّنّٰهُநாம் தெளிவுபடுத்தினோம் لِلنَّاسِமக்களுக்கு فِى الْكِتٰبِۙவேதத்தில் اُولٰٓٮِٕكَஅவர்கள் يَلْعَنُهُمُசபிக்கிறான்/அவர்களை اللّٰهُஅல்லாஹ் وَ يَلْعَنُهُمُஇன்னும் சபிக்கிறார்(கள்) / அவர்களை اللّٰعِنُوْنَۙ‏சபிப்பவர்கள்
2:159. நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.
2:160
2:160 اِلَّا الَّذِيْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَبَيَّـنُوْا فَاُولٰٓٮِٕكَ اَ تُوْبُ عَلَيْهِمْۚ وَاَنَا التَّوَّابُ الرَّحِيْمُ‏
اِلَّاதவிர الَّذِيْنَஎவர்கள் تَابُوْاமன்னிப்புக் கோரினார்கள் وَاَصْلَحُوْاஇன்னும் சீர்திருத்தினார்கள் وَبَيَّـنُوْاஇன்னும் தெளிவுபடுத்தினார்கள் فَاُولٰٓٮِٕكَஇன்னும் அவர்கள் اَ تُوْبُமன்னிப்பேன் عَلَيْهِمْۚஅவர்களை وَاَنَاநான் التَّوَّابُமகா மன்னிப்பாளன் الرَّحِيْمُ‏மகா கருணையாளன்
2:160. எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.
2:161
2:161 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ اُولٰٓٮِٕكَ عَلَيْهِمْ لَعْنَةُ اللّٰهِ وَالْمَلٰٓٮِٕكَةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَۙ‏
اِنَّநிச்சயமாக الَّذِيْنَஎவர்கள் كَفَرُوْاநிராகரித்தார்கள் وَمَاتُوْاஇன்னும் இறந்தார்கள் وَهُمْஅவர்கள் كُفَّارٌநிராகரிப்பாளர்கள் اُولٰٓٮِٕكَஅவர்கள் عَلَيْهِمْஅவர்கள் மீதுதான் لَعْنَةُ اللّٰهِஅல்லாஹ்வின் சாபம் وَالْمَلٰٓٮِٕكَةِஇன்னும் வானவர்கள் وَالنَّاسِஇன்னும் மக்கள் اَجْمَعِيْنَۙ‏அனைவர்
2:161. யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்.
2:162
2:162 خٰلِدِيْنَ فِيْهَا ۚ لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْظَرُوْنَ‏
خٰلِدِيْنَநிரந்தரமானவர்கள் فِيْهَا ۚஅதில் لَا يُخَفَّفُஇலேசாக்கப்படாது عَنْهُمُஅவர்களை விட்டு الْعَذَابُவேதனை وَلَا هُمْ يُنْظَرُوْنَ‏இன்னும் அவகாசம் கொடுக்கப்பட மாட்டார்கள்
2:162. அவர்கள் அ(ச் சாபத்)திலேயே என்றென்றும் இருப்பார்கள்; அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படமாட்டாது; மேலும், (மன்னிப்புக் கோர) அவர்களுக்கு அவகாசமும் கொடுக்கப்படமாட்டாது.
2:163
2:163 وَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ  ۚ لَآ اِلٰهَ اِلَّا هُوَ الرَّحْمٰنُ الرَّحِيْمُ
وَاِلٰهُكُمْஇன்னும் உங்கள்இறைவன் اِلٰهٌஓர் இறைவன் وَّاحِدٌ  ۚஒரே لَآஅறவே இல்லை اِلٰهَஇறைவன் اِلَّاஅவனைத் தவிர هُوَ الرَّحْمٰنُபேரருளாளன் الرَّحِيْمُ‏பேரன்பாளன்
2:163. மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
2:164
2:164 اِنَّ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِىْ تَجْرِىْ فِى الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَآ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ مَّآءٍ فَاَحْيَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيْهَا مِنْ کُلِّ دَآ بَّةٍ وَّتَصْرِيْفِ الرِّيٰحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَآءِ وَالْاَرْضِ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ‏
اِنَّநிச்சயமாக فِىْ خَلْقِபடைத்திருப்பதில் السَّمٰوٰتِவானங்களை وَالْاَرْضِஇன்னும் பூமியை وَاخْتِلَافِஇன்னும் மாறுவதில் الَّيْلِஇரவு وَالنَّهَارِஇன்னும் பகல் وَالْفُلْكِஇன்னும் கப்பல்கள் الَّتِىْஎவை تَجْرِىْஓடுகின்றன فِى الْبَحْرِகடலில் بِمَاஎவற்றைக் கொண்டு يَنْفَعُபலன் தருகின்றன النَّاسَமக்களுக்கு وَمَآஇன்னும் எது اَنْزَلَஇறக்கினான் اللّٰهُஅல்லாஹ் مِنَஇருந்து السَّمَآءِவானம்/மேகம் مِنْஇருந்து مَّآءٍதண்ணீர் فَاَحْيَاஉயிர்ப்பித்தான் بِهِஅதன் மூலம் الْاَرْضَபூமியை بَعْدَபின்னர் مَوْتِهَاஅது இறந்த وَبَثَّஇன்னும் பரப்பினான் فِيْهَاஅதில் مِنْஇருந்து کُلِّஎல்லாம் دَآ بَّةٍகால்நடைகள் وَّتَصْرِيْفِஇன்னும் திருப்பிவிடுதல் الرِّيٰحِகாற்றுகளை وَالسَّحَابِஇன்னும் மேகம் الْمُسَخَّرِகட்டுப்படுத்தப்பட்ட بَيْنَஇடையில் السَّمَآءِவானம் وَالْاَرْضِஇன்னும் பூமி لَاٰيٰتٍதிட்டமாக அத்தாட்சிகள் لِّقَوْمٍமக்களுக்கு يَّعْقِلُوْنَ‏சிந்தித்து புரிகிறார்கள்
2:164. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.
2:165
2:165 وَمِنَ النَّاسِ مَنْ يَّتَّخِذُ مِنْ دُوْنِ اللّٰهِ اَنْدَادًا يُّحِبُّوْنَهُمْ كَحُبِّ اللّٰهِؕ وَالَّذِيْنَ اٰمَنُوْٓا اَشَدُّ حُبًّا لِّلّٰهِ ؕ وَلَوْ يَرَى الَّذِيْنَ ظَلَمُوْٓا اِذْ يَرَوْنَ الْعَذَابَۙ اَنَّ الْقُوَّةَ لِلّٰهِ جَمِيْعًا ۙ وَّاَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعَذَابِ‏
وَمِنَ النَّاسِமக்களிலிருந்து مَنْஎவர் يَّتَّخِذُஎடுத்துக் கொள்கிறார் مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றி اَنْدَادًاஇணைகளை يُّحِبُّوْنَهُمْஅவற்றை நேசிக்கிறார்கள் كَحُبِّநேசிப்பது/போல اللّٰهِؕஅல்லாஹ்வை وَالَّذِيْنَ اٰمَنُوْٓاநம்பிக்கையாளர்கள் اَشَدُّமிகக் கடுமையானவர்கள் حُبًّاநேசிப்பதில் لِّلّٰهِ ؕஅல்லாஹ்வை وَلَوْபார்த்தால் يَرَى الَّذِيْنَஎவர்கள் ظَلَمُوْٓاஅநியாயம்செய்தார்கள் اِذْபோது يَرَوْنَகாண்பார்கள் الْعَذَابَۙவேதனையை اَنَّநிச்சயமாக الْقُوَّةَபலம் لِلّٰهِஅல்லாஹ்வுக்கே جَمِيْعًا ۙஅனைத்தும் وَّاَنَّஇன்னும் நிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் شَدِيْدُகடினமானவன் الْعَذَابِ‏வேதனை செய்வதில்
2:165. அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்; ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்; இன்னும் (இணை வைக்கும்) அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள்; அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது; நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்).
2:166
2:166 اِذْ تَبَرَّاَ الَّذِيْنَ اتُّبِعُوْا مِنَ الَّذِيْنَ اتَّبَعُوْا وَرَاَوُا الْعَذَابَ وَ تَقَطَّعَتْ بِهِمُ الْاَسْبَابُ‏
اِذْபோது تَبَرَّاَவிலகிக்கொண்டார்(கள்) الَّذِيْنَஎவர்கள் اتُّبِعُوْاபின்பற்றப்பட்டார்கள் مِنَஇருந்து الَّذِيْنَஎவர்கள் اتَّبَعُوْاபின்பற்றினார்கள் وَرَاَوُاஇன்னும் கண்டார்கள் الْعَذَابَவேதனையை وَ تَقَطَّعَتْஇன்னும் அறுந்தது بِهِمُஅவர்களுக்கிடையில் الْاَسْبَابُ‏தொடர்புகள்
2:166. (இத்தவறான வழியில்) யாரைப் பின்பற்றினார்களோ அ(த்தலை)வர்கள் தம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள், இன்னும் அவர்கள் வேதனையைக் காண்பார்கள்; அவர்களிடையேயிருந்த தொடர்புகள் யாவும் அறுபட்டுவிடும்.
2:167
2:167 وَقَالَ الَّذِيْنَ اتَّبَعُوْا لَوْ اَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّاَ مِنْهُمْ كَمَا تَبَرَّءُوْا مِنَّا ؕ كَذٰلِكَ يُرِيْهِمُ اللّٰهُ اَعْمَالَهُمْ حَسَرٰتٍ عَلَيْهِمْؕ وَمَا هُمْ بِخٰرِجِيْنَ مِنَ النَّارِ
وَقَالَஇன்னும் கூறுவார்(கள்) الَّذِيْنَஎவர்கள் اتَّبَعُوْاபின்பற்றினார்கள் لَوْ اَنَّ لَنَاநிச்சயமாக நமக்கு முடிந்தால் كَرَّةًதிரும்பச்செல்வது فَنَتَبَرَّاَவிலகிக் கொள்வோம் مِنْهُمْஅவர்களை விட்டு كَمَاபோல تَبَرَّءُوْاவிலகிக்கொண்டார்கள் مِنَّا ؕஎங்களைவிட்டு كَذٰلِكَஇவ்வாறே يُرِيْهِمُகாண்பிப்பான்/ அவர்களுக்கு اللّٰهُஅல்லாஹ் اَعْمَالَهُمْஅவர்களின் செயல்களை حَسَرٰتٍமனவேதனைகளாக عَلَيْهِمْؕஅவர்களுக்கு وَمَاஇன்னும் இல்லை هُمْஅவர்கள் بِخٰرِجِيْنَவெளியேறுபவர்களாக مِنَ النَّارِ‏நெருப்பிலிருந்து
2:167. (அத்தலைவர்களைப்) பின்பற்றியவர்கள் கூறுவார்கள்: “நமக்கு (உலகில் வாழ) இன்னொரு வாய்ப்புக் கிடைக்குமானால், அ(த்தலை)வர்கள் நம்மைக் கைவிட்டு விட்டதைப் போல் நாமும் அவர்களைக் கைவிட்டு விடுவோம்.” இவ்வாறே அல்லாஹ் அவர்கள் செய்த செயல்களை அவர்களுக்குப் பெருந்துக்கம் அளிப்பதாக எடுத்துக் காட்டுவான்; அன்றியும், அவர்கள் நரக நெருப்பினின்றும் வெளியேறுகிறவர்களும் அல்லர்.
2:168
2:168 يٰٓاَيُّهَا النَّاسُ كُلُوْا مِمَّا فِى الْاَرْضِ حَلٰلًا طَيِّبًا  ۖ وَّلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِؕ اِنَّهٗ لَـكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ‏
يٰٓاَيُّهَا النَّاسُமக்களே كُلُوْاஉண்ணுங்கள் مِمَّاஎவற்றில் فِى الْاَرْضِபூமியில் حَلٰلًاஅனுமதிக்கப்பட்டதை طَيِّبًا  ۖநல்லது وَّلَا تَتَّبِعُوْاஇன்னும் பின்பற்றாதீர்கள் خُطُوٰتِஅடிச்சுவடுகளை الشَّيْطٰنِؕஷைத்தானின் اِنَّهٗநிச்சயமாக அவன் لَـكُمْஉங்களுக்கு عَدُوٌّஎதிரி مُّبِيْنٌ‏பகிரங்கமான
2:168. மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்; ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.
2:169
2:169 اِنَّمَا يَاْمُرُكُمْ بِالسُّوْٓءِ وَالْفَحْشَآءِ وَاَنْ تَقُوْلُوْا عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ‏
اِنَّمَا يَاْمُرُكُمْஉங்களுக்கு அவன் ஏவுவதெல்லாம் بِالسُّوْٓءِதீமையை وَالْفَحْشَآءِஇன்னும் மானக்கேடானதை وَاَنْ تَقُوْلُوْاஇன்னும் நீங்கள் கூறுவதை عَلَىமீது اللّٰهِஅல்லாஹ் مَا لَا تَعْلَمُوْنَ‏நீங்கள் அறியாதவற்றை
2:169. நிச்சயமாக அவன் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும்; அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான்.
2:170
2:170 وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَـتَّبِعُ مَآ اَلْفَيْنَا عَلَيْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْقِلُوْنَ شَيْئًا وَّلَا يَهْتَدُوْنَ‏
وَاِذَا قِيْلَகூறப்பட்டால் لَهُمُஅவர்களுக்கு اتَّبِعُوْاபின்பற்றுங்கள் مَآஎதை اَنْزَلَஇறக்கினான் اللّٰهُஅல்லாஹ் قَالُوْاகூறுகிறார்கள் بَلْமாறாக نَـتَّبِعُபின்பற்றுவோம் مَآஎதை اَلْفَيْنَاபெற்றோம் عَلَيْهِஅதன் மீது اٰبَآءَنَا ؕஎங்கள் மூதாதைகளை اَوَلَوْ كَانَஇருந்தாலுமா? اٰبَآؤُமூதாதைகள் هُمْஅவர்களுடைய لَا يَعْقِلُوْنَஅறியமாட்டார்கள் شَيْئًاஎதையும் وَّلَا يَهْتَدُوْنَ‏இன்னும் நேர்வழி பெறமாட்டார்கள்
2:170. மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?
2:171
2:171 وَمَثَلُ الَّذِيْنَ کَفَرُوْا كَمَثَلِ الَّذِىْ يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ اِلَّا دُعَآءً وَّنِدَآءً ؕ صُمٌّۢ بُكْمٌ عُمْـىٌ فَهُمْ لَا يَعْقِلُوْنَ‏
وَمَثَلُஇன்னும் உதாரணம் الَّذِيْنَஎவர்கள் کَفَرُوْاநிராகரித்தார்கள் كَمَثَلِஉதாரணத்தைப்போன்று الَّذِىْஎவர் يَنْعِقُகூவி அழைக்கிறார் بِمَاஎதை لَا يَسْمَعُகேட்காது اِلَّاதவிர دُعَآءًஅழைப்பை وَّنِدَآءً ؕஇன்னும் சப்தத்தை صُمٌّۢசெவிடர்கள் بُكْمٌஊமைகள் عُمْـىٌகுருடர்கள் فَهُمْஎனவே, அவர்கள் لَا يَعْقِلُوْنَ‏புரிய மாட்டார்கள்
2:171. அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால்; ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையம் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்; அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.
2:172
2:172 يٰٓاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا کُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ کُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ‏
يٰٓاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களே! کُلُوْاஉண்ணுங்கள் مِنْ طَيِّبٰتِநல்லவற்றிலிருந்து مَاஎவை رَزَقْنٰكُمْஉங்களுக்கு வழங்கினோம் وَاشْكُرُوْاஇன்னும் நன்றி செலுத்துங்கள் لِلّٰهِஅல்லாஹ்வுக்கு اِنْ کُنْتُمْநீங்கள் இருந்தால் اِيَّاهُஅவனையே تَعْبُدُوْنَ‏வணங்குகிறீர்கள்
2:172. நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.
2:173
2:173 اِنَّمَا حَرَّمَ عَلَيْکُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ بِهٖ لِغَيْرِ اللّٰهِ‌ۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
اِنَّمَا حَرَّمَஅவன் தடுத்ததெல்லாம் عَلَيْکُمُஉங்கள் மீது الْمَيْتَةَசெத்ததை وَالدَّمَஇன்னும் இரத்தம் وَلَحْمَஇன்னும் இறைச்சி الْخِنْزِيْرِபன்றியின் وَمَآஇன்னும் எது اُهِلَّகூறப்பட்டது بِهٖஅதை لِغَيْرِஅல்லாதவருக்காக اللّٰهِ‌ۚஅல்லாஹ் فَمَنِஆகவே, எவர் اضْطُرَّநிர்ப்பந்திக்கப்பட்டார் غَيْرَ بَاغٍபாவத்தை நாடாதவராக وَّلَا عَادٍஇன்னும் வரம்பு மீறாதவராக فَلَاۤஅறவே இல்லை اِثْمَகுற்றம் عَلَيْهِ‌ؕஅவர் மீது اِنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் غَفُوْرٌமகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
2:173. தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.
2:174
2:174 اِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَآ اَنْزَلَ اللّٰهُ مِنَ الْکِتٰبِ وَ يَشْتَرُوْنَ بِهٖ ثَمَنًا قَلِيْلًا ۙ اُولٰٓٮِٕكَ مَا يَاْكُلُوْنَ فِىْ بُطُوْنِهِمْ اِلَّا النَّارَ وَلَا يُکَلِّمُهُمُ اللّٰهُ يَوْمَ الْقِيٰمَةِ وَلَا يُزَکِّيْهِمْ ۖۚ وَلَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
اِنَّநிச்சயமாக الَّذِيْنَஎவர்கள் يَكْتُمُوْنَமறைக்கிறார்கள் مَآஎவற்றை اَنْزَلَஇறக்கினான் اللّٰهُஅல்லாஹ் مِنَ الْکِتٰبِவேதத்தில் وَ يَشْتَرُوْنَஇன்னும் வாங்குகிறார்கள் بِهٖஅதன் மூலம் ثَمَنًاதொகை قَلِيْلًا ۙசொற்பம் اُولٰٓٮِٕكَஅவர்கள் مَا يَاْكُلُوْنَஅவர்கள் சாப்பிடுவதில்லை فِىْ بُطُوْنِهِمْதங்கள் வயிறுகளில் اِلَّاதவிர النَّارَநெருப்பை وَلَا يُکَلِّمُهُمُஇன்னும் அவர்களிடம் பேசமாட்டான் اللّٰهُஅல்லாஹ் يَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில் وَلَا يُزَکِّيْهِمْ ۖۚஇன்னும் அவர்களைப் பரிசுத்தமாக்க மாட்டான் وَلَهُمْஇன்னும் அவர்களுக்கு عَذَابٌவேதனை اَ لِيْمٌ‏துன்புறுத்தக் கூடியது
2:174. எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
2:175
2:175 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰى وَالْعَذَابَ بِالْمَغْفِرَةِ‌ ۚ فَمَآ اَصْبَرَهُمْ عَلَى النَّارِ‏
اُولٰٓٮِٕكَஇவர்கள்(தான்) الَّذِيْنَஎவர்கள் اشْتَرَوُاவாங்கினார்கள் الضَّلٰلَةَவழிகேட்டை بِالْهُدٰىநேர்வழிக்குப் பதிலாக وَالْعَذَابَஇன்னும் தண்டனை بِالْمَغْفِرَةِ‌ ۚமன்னிப்புக்குப்பதிலாக فَمَآஎது اَصْبَرَهُمْஅவர்களைத் துணிவுகொள்ளும்படி செய்தது عَلَىமீது النَّارِ‏(நரக) நெருப்பு
2:175. அவர்கள்தாம் நேர்வழிக்கு பதிலாக வழிகேட்டையும்; மன்னிப்பிற்கு பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். இவர்களை நரக நெருப்பைச் சகித்துக் கொள்ளச் செய்தது எது?
2:176
2:176 ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ نَزَّلَ الْکِتٰبَ بِالْحَـقِّؕ وَاِنَّ الَّذِيْنَ اخْتَلَفُوْا فِى الْكِتٰبِ لَفِىْ شِقَاقٍۢ بَعِيْدٍ
ذٰلِكَஅது بِاَنَّகாரணம்/நிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் نَزَّلَஇறக்கினான் الْکِتٰبَவேதத்தை بِالْحَـقِّؕஉண்மையுடன் وَاِنَّஇன்னும் நிச்சயமாக الَّذِيْنَஎவர்கள் اخْتَلَفُوْاமுரண்பட்டார்கள் فِى الْكِتٰبِவேதத்தில் لَفِىْ شِقَاقٍۢபகைமையில்தான் بَعِيْدٍ‏தூரமான
2:176. இதற்குக் காரணம்; நிச்சயமாக அல்லாஹ் இவ்வேதத்தை உண்மையுடன் அருள் செய்தான்; நிச்சயமாக இன்னும் இவ்வேதத்திலே கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) பெரும் பிளவிலேயே இருக்கின்றனர்.
2:177
2:177 لَيْسَ الْبِرَّ اَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَ الْمَغْرِبِ وَلٰـكِنَّ الْبِرَّ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَالْمَلٰٓٮِٕکَةِ وَالْكِتٰبِ وَالنَّبِيّٖنَ‌ۚ وَاٰتَى الْمَالَ عَلٰى حُبِّهٖ ذَوِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنَ وَابْنَ السَّبِيْلِۙ وَالسَّآٮِٕلِيْنَ وَفِى الرِّقَابِ‌ۚ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّکٰوةَ ‌ ۚ وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عٰهَدُوْا ۚ وَالصّٰبِرِيْنَ فِى الْبَاْسَآءِ وَالضَّرَّآءِ وَحِيْنَ الْبَاْسِؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ صَدَقُوْا ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ‏
لَيْسَஅல்ல الْبِرَّநன்மை اَنْ تُوَلُّوْاநீங்கள் திருப்புவது وُجُوْهَكُمْஉங்கள் முகங்களை قِبَلَநோக்கி الْمَشْرِقِகிழக்கு وَ الْمَغْرِبِஇன்னும் மேற்கு وَلٰـكِنَّஎனினும் الْبِرَّநன்மை مَنْஎவர் اٰمَنَநம்பிக்கை கொண்டார் بِاللّٰهِஅல்லாஹ்வை وَالْيَوْمِ الْاٰخِرِஇன்னும் இறுதி நாள் وَالْمَلٰٓٮِٕکَةِஇன்னும் வானவர்கள் وَالْكِتٰبِஇன்னும் வேதம் وَالنَّبِيّٖنَ‌ۚஇன்னும் நபிமார்கள் وَاٰتَىஇன்னும் கொடுத்தார் الْمَالَசெல்வத்தை عَلٰىஉடன் حُبِّهٖஅதன் விருப்பம் ذَوِى الْقُرْبٰىஉறவினர்களுக்கு وَالْيَتٰمٰىஇன்னும் அநாதைகளுக்கு وَالْمَسٰكِيْنَஇன்னும் ஏழைகளுக்கு وَابْنَ السَّبِيْلِۙஇன்னும் வழிப்போக்கருக்கு وَالسَّآٮِٕلِيْنَஇன்னும் யாசகர்களுக்கு وَفِى الرِّقَابِ‌ۚஇன்னும் அடிமைகளுக்கு وَاَقَامَஇன்னும் நிலைநிறுத்தினார் الصَّلٰوةَதொழுகையை وَاٰتَىஇன்னும் கொடுத்தார் الزَّکٰوةَஸகாத்தை ۚ وَالْمُوْفُوْنَஇன்னும் நிறைவேற்றுபவர்கள் بِعَهْدِஒப்பந்தத்தை هِمْதங்கள் اِذَا عٰهَدُوْا ۚஅவர்கள் ஒப்பந்தம் செய்தால் وَالصّٰبِرِيْنَஇன்னும் பொறுமையாளர்கள் فِى الْبَاْسَآءِகொடிய வறுமையில் وَالضَّرَّآءِஇன்னும் நோய் وَحِيْنَ الْبَاْسِؕஇன்னும் போர் சமயத்தில் اُولٰٓٮِٕكَஅவர்கள் الَّذِيْنَ صَدَقُوْا ؕஉண்மையாளர்கள் وَاُولٰٓٮِٕكَ هُمُஇன்னும் அவர்கள்தான் الْمُتَّقُوْنَ‏அல்லாஹ்வை அஞ்சுபவர்கள்
2:177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).
2:178
2:178 يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِى الْقَتْلٰى  ؕ الْحُرُّ بِالْحُـرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْاُنْثَىٰ بِالْاُنْثٰىؕ فَمَنْ عُفِىَ لَهٗ مِنْ اَخِيْهِ شَىْءٌ فَاتِّبَاعٌۢ بِالْمَعْرُوْفِ وَاَدَآءٌ اِلَيْهِ بِاِحْسَانٍؕ ذٰلِكَ تَخْفِيْفٌ مِّنْ رَّبِّكُمْ وَرَحْمَةٌ  ؕ فَمَنِ اعْتَدٰى بَعْدَ ذٰلِكَ فَلَهٗ عَذَابٌ اَلِيْمٌۚ‏
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களே! كُتِبَகடமையாக்கப் பட்டுள்ளது عَلَيْكُمُஉங்கள் மீது الْقِصَاصُபழிவாங்குதல் فِى الْقَتْلٰى  ؕகொலை செய்யப்பட்டவர்களுக்காக الْحُرُّசுதந்திரமானவன் بِالْحُـرِّசுதந்திரமான வனுக்குப் பதிலாக وَالْعَبْدُஇன்னும் அடிமை بِالْعَبْدِஅடிமைக்குப்பதிலாக وَالْاُنْثَىٰஇன்னும் பெண் بِالْاُنْثٰىؕபெண்ணுக்குப்பதிலாக فَمَنْஎவர் عُفِىَமன்னிக்கப்பட்டது لَهٗஅவருக்கு مِنْஇருந்து اَخِيْهِதன் சகோதரன் شَىْءٌஏதேனும் فَاتِّبَاعٌۢபின்பற்றுதல் بِالْمَعْرُوْفِகண்ணியமான முறையில் وَاَدَآءٌஇன்னும் நிறைவேற்றுதல் اِلَيْهِஅவரிடம் بِاِحْسَانٍؕநன்றி அறிதலுடன் ذٰلِكَஅது تَخْفِيْفٌசலுகை مِّنْஇருந்து رَّبِّكُمْஉங்கள் இறைவன் وَرَحْمَةٌ  ؕஇன்னும் அருள் فَمَنِஇன்னும் எவர் اعْتَدٰىவரம்பு மீறினார் بَعْدَ ذٰلِكَஅதற்குப் பின்னர் فَلَهٗஅவருக்கு عَذَابٌவேதனை اَلِيْمٌۚ‏துன்புறுத்தக் கூடியது
2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.
2:179
2:179 وَ لَـكُمْ فِى الْقِصَاصِ حَيٰوةٌ يّٰٓـاُولِىْ الْاَلْبَابِ لَعَلَّکُمْ تَتَّقُوْنَ‏
وَ لَـكُمْஉங்களுக்கு فِى الْقِصَاصِபழிவாங்குவதில் حَيٰوةٌவாழ்க்கை يّٰٓـاُولِىْ الْاَلْبَابِஅறிவாளிகளே لَعَلَّکُمْ تَتَّقُوْنَ‏நீங்கள் பயந்து கொள்ளவேண்டுமே
2:179. நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.
2:180
2:180 كُتِبَ عَلَيْكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ اِنْ تَرَكَ خَيْرَا  ۖۚ اۨلْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ بِالْمَعْرُوْفِۚ حَقًّا عَلَى الْمُتَّقِيْنَؕ‏
كُتِبَகடமையாக்கப்பட்டது عَلَيْكُمْஉங்கள் மீது اِذَا حَضَرَவந்தால் اَحَدَكُمُஉங்களில் ஒருவருக்கு الْمَوْتُமரணம் اِنْ تَرَكَஅவர் விட்டுச் சென்றால் خَيْرَا  ۖۚசெல்வத்தை اۨلْوَصِيَّةُமரணசாசனம் لِلْوَالِدَيْنِபெற்றோருக்கு وَالْاَقْرَبِيْنَஇன்னும் உறவினர்களுக்கு بِالْمَعْرُوْفِۚநல்ல முறையில் حَقًّاஅவசியமாக عَلَىமீது الْمُتَّقِيْنَؕ‏அல்லாஹ்வை அஞ்சுபவர்கள்
2:180. உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின், அவர் (தம்) பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத்து (மரண சாஸனம்)செய்வது விதியாக்கப்பட்டிருக்கிறது; (இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது) முத்தகீன்கள்(பயபக்தியுடையோர்) மீது கடமையாகும்.
2:181
2:181 فَمَنْۢ بَدَّلَهٗ بَعْدَمَا سَمِعَهٗ فَاِنَّمَآ اِثْمُهٗ عَلَى الَّذِيْنَ يُبَدِّلُوْنَهٗؕ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌؕ‏
فَمَنْۢஎவர் بَدَّلَهٗஅதை மாற்றுவார் بَعْدَمَا سَمِعَهٗஅதைக் கேட்டதற்குப் பின்னர் فَاِنَّمَآ اِثْمُهٗஅதன் பாவமெல்லாம் عَلَىமீது الَّذِيْنَஎவர்கள் يُبَدِّلُوْنَهٗؕமாற்றுகிறார்கள்/அதை اِنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் سَمِيْعٌநன்கு செவியுறுபவன் عَلِيْمٌؕ‏மிக அறிந்தவன்
2:181. வஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர், எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
2:182
2:182 فَمَنْ خَافَ مِنْ مُّوْصٍ جَنَفًا اَوْ اِثْمًا فَاَصْلَحَ بَيْنَهُمْ فَلَاۤ اِثْمَ عَلَيْهِؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
فَمَنْஎவர் خَافَபயந்தார் مِنْ مُّوْصٍமரணசாசனம்கூறுபவரிடத்தில் جَنَفًاஅநீதியை اَوْஅல்லது اِثْمًاதவறை فَاَصْلَحَசீர்திருத்தம் செய்தார் بَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில் فَلَاۤ اِثْمَஅறவே குற்றமில்லை عَلَيْهِؕஅவர் மீது اِنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் غَفُوْرٌமகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
2:182. ஆனால் வஸிய்யத்து செய்பவரிடம்(பாரபட்சம் போன்ற) தவறோ அல்லது மன முரண்டான அநீதமோ இருப்பதையஞ்சி ஒருவர் (சம்பந்தப்பட்டவர்களிடையே) சமாதானம் செய்து (அந்த வஸிய்யத்தை) சீர் செய்தால் அ(ப்படிச் செய்ப)வர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனுமாகவும் இருக்கிறான்.
2:183
2:183 يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏
يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களே كُتِبَகடமையாக்கப்பட்டது عَلَيْکُمُஉங்கள் மீது الصِّيَامُநோன்பு کَمَاபோன்று كُتِبَகடமையாக்கப்பட்டது عَلَىமீது الَّذِيْنَஎவர்கள் مِنْ قَبْلِکُمْஉங்களுக்கு முன்னர் لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக
2:183. ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்
2:184
2:184 اَيَّامًا مَّعْدُوْدٰتٍؕ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ‌ؕ وَعَلَى الَّذِيْنَ يُطِيْقُوْنَهٗ فِدْيَةٌ طَعَامُ مِسْكِيْنٍؕ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهٗ ؕ وَاَنْ تَصُوْمُوْا خَيْرٌ لَّـکُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏
اَيَّامًاநாட்களில் مَّعْدُوْدٰتٍؕஎண்ணப்பட்ட(வை) فَمَنْஎவர் كَانَஇருந்தார் مِنْكُمْஉங்களில் مَّرِيْضًاநோயாளியாக اَوْஅல்லது عَلٰى سَفَرٍபயணத்தில் فَعِدَّةٌகணக்கிடவும் مِّنْ اَيَّامٍநாட்களில் اُخَرَ‌ؕமற்ற(வை) وَعَلَىஇன்னும் மீது الَّذِيْنَஎவர்கள் يُطِيْقُوْنَهٗஅதற்கு சிரமப்படுகிறார்கள் فِدْيَةٌபரிகாரம் طَعَامُஉணவு مِسْكِيْنٍؕஓர் ஏழையின் فَمَنْஎவர் تَطَوَّعَஉபரியாகச் செய்வார் خَيْرًاநன்மையை فَهُوَஅது خَيْرٌநன்மை لَّهٗ ؕஅவருக்கு وَاَنْ تَصُوْمُوْاஇன்னும் நீங்கள் நோன்பு நோற்பது خَيْرٌமிகச் சிறந்தது لَّـکُمْஉங்களுக்கு اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால் تَعْلَمُوْنَ‏அறிந்தவர்களாக (அறிவீர்கள்)
2:184. (இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்; எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).
2:185
2:185 شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ ؕ وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَؕ يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ وَلِتُکْمِلُوا الْعِدَّةَ وَلِتُکَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏
شَهْرُமாதம் رَمَضَانَரமழான் الَّذِىْٓஎது اُنْزِلَஇறக்கப்பட்டது فِيْهِஅதில் الْقُرْاٰنُஅல்குர்ஆன் هُدًىநேர்வழியாக لِّلنَّاسِமக்களுக்கு وَ بَيِّنٰتٍஇன்னும் சான்றுகளாக مِّنَ الْهُدٰىநேர்வழியின் وَالْفُرْقَانِۚஇன்னும் பிரித்தறிவிப்பது فَمَنْஎவர் شَهِدَதங்கி இருப்பார் مِنْكُمُஉங்களிலிருந்து الشَّهْرَஅம்மாதத்தில் فَلْيَـصُمْهُ ؕஅவர் அதில் நோன்பிருக்கவும் وَمَنْஇன்னும் எவர் کَانَஇருப்பார் مَرِيْضًاநோயாளியாக اَوْஅல்லது عَلٰى سَفَرٍபயணத்தில் فَعِدَّةٌகணக்கிடவும் مِّنْஇருந்து اَيَّامٍநாட்கள் اُخَرَؕமற்ற(வை) يُرِيْدُநாடுவான் اللّٰهُஅல்லாஹ் بِکُمُஉங்களுக்கு الْيُسْرَஇலகுவை وَلَا يُرِيْدُஇன்னும் நாடமாட்டான் بِکُمُஉங்களுக்கு الْعُسْرَசிரமத்தை وَلِتُکْمِلُواஇன்னும் நீங்கள் முழுமைப்படுத்துவதற்காக الْعِدَّةَஎண்ணிக்கையை وَلِتُکَبِّرُواஇன்னும் நீங்கள் பெருமைப்படுத்துவதற்காக اللّٰهَஅல்லாஹ்வை عَلٰى مَا هَدٰٮكُمْஉங்களை நேர்வழி நடத்தியதற்காக وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏இன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
2:185. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).
2:186
2:186 وَاِذَا سَاَلَـكَ عِبَادِىْ عَنِّىْ فَاِنِّىْ قَرِيْبٌؕ اُجِيْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ فَلْيَسْتَجِيْبُوْا لِىْ وَلْيُؤْمِنُوْا بِىْ لَعَلَّهُمْ يَرْشُدُوْنَ‏
وَاِذَا سَاَلَـكَகேட்டால் / உம்மிடம் عِبَادِىْஎன் அடியார்கள் عَنِّىْஎன்னைப் பற்றி فَاِنِّىْநிச்சயமாக நான் قَرِيْبٌؕசமீபமானவன் اُجِيْبُபதிலளிக்கிறேன் دَعْوَةَஅழைப்புக்கு الدَّاعِஅழைப்பாளரின் اِذَا دَعَانِஅவர் என்னை அழைத்தால் فَلْيَسْتَجِيْبُوْا لِىْஆகவே எனக்கு அவர்கள் பதிலளிக்கவும் وَلْيُؤْمِنُوْا بِىْஇன்னும் அவர்கள் என்னை நம்பிக்கை கொள்ளவும் لَعَلَّهُمْ يَرْشُدُوْنَ‏அவர்கள் நேர்வழி அடைவதற்காக
2:186. (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.
2:187
2:187 اُحِلَّ لَـکُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ اِلٰى نِسَآٮِٕكُمْ‌ؕ هُنَّ لِبَاسٌ لَّـكُمْ وَاَنْـتُمْ لِبَاسٌ لَّهُنَّ ؕ عَلِمَ اللّٰهُ اَنَّکُمْ كُنْتُمْ تَخْتَانُوْنَ اَنْفُسَکُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنْكُمْۚ فَالْـــٰٔنَ بَاشِرُوْهُنَّ وَابْتَغُوْا مَا کَتَبَ اللّٰهُ لَـكُمْ وَكُلُوْا وَاشْرَبُوْا حَتّٰى يَتَبَيَّنَ لَـكُمُ الْخَـيْطُ الْاَبْيَضُ مِنَ الْخَـيْطِ الْاَسْوَدِ مِنَ الْفَجْرِ‌ؕ ثُمَّ اَتِمُّوا الصِّيَامَ اِلَى الَّيْلِ‌ۚ وَلَا تُبَاشِرُوْهُنَّ وَاَنْـتُمْ عٰكِفُوْنَ فِى الْمَسٰجِدِؕ تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَقْرَبُوْهَا ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُوْنَ‏
اُحِلَّஅனுமதிக்கப்பட்டுள்ளது لَـکُمْஉங்களுக்கு لَيْلَةَஇரவில் الصِّيَامِநோன்பு الرَّفَثُசேர்வது اِلٰى نِسَآٮِٕكُمْ‌ؕஉங்கள் மனைவிகளுடன் هُنَّஅவர்கள் (பெண்கள்) لِبَاسٌஆடை لَّـكُمْஉங்களுக்கு وَاَنْـتُمْஇன்னும் நீங்கள்(ஆண்கள்) لِبَاسٌஆடை لَّهُنَّ ؕஅவர்களுக்கு (பெண்களுக்கு) عَلِمَஅறிவான் اللّٰهُஅல்லாஹ் اَنَّکُمْநிச்சயமாக நீங்கள் كُنْتُمْஇருந்தீர்கள் تَخْتَانُوْنَஏமாற்றுகிறீர்கள் اَنْفُسَکُمْஉங்களை فَتَابَ عَلَيْكُمْஆகவே உங்கள் பிழை பொறுப்பை ஏற்றான் وَعَفَاஇன்னும் மன்னித்தான் عَنْكُمْۚஉங்களை فَالْـــٰٔنَஆகவே இப்போது بَاشِرُوْهُنَّஅவர்களுடன் சேருங்கள் وَابْتَغُوْاஇன்னும் தேடுங்கள் مَاஎதை کَتَبَவிதித்தான் اللّٰهُஅல்லாஹ் لَـكُمْஉங்களுக்கு وَكُلُوْاஇன்னும் உண்ணுங்கள் وَاشْرَبُوْاஇன்னும் பருகுங்கள் حَتّٰى يَتَبَيَّنَதெளிவாகும் வரை لَـكُمُஉங்களுக்கு الْخَـيْطُநூல் الْاَبْيَضُவெள்ளை مِنَஇருந்து الْخَـيْطِநூல் الْاَسْوَدِகருப்பு مِنَ الْفَجْرِ‌ؕஅதிகாலையில் ثُمَّபிறகு اَتِمُّواமுழுமையாக்குங்கள் الصِّيَامَநோன்பை اِلَى الَّيْلِ‌ۚஇரவு வரை وَلَا تُبَاشِرُوْهُنَّஅவர்களுடன் சேராதீர்கள் وَاَنْـتُمْபோது/நீங்கள் عٰكِفُوْنَதங்கியிருக்கிறீர்கள் فِى الْمَسٰجِدِؕமஸ்ஜிதுகளில் تِلْكَஇவை حُدُوْدُசட்டங்கள் اللّٰهِஅல்லாஹ்வுடைய فَلَا تَقْرَبُوْهَا ؕஎனவே அவற்றை நெருங்காதீர்கள் كَذٰلِكَஅவ்வாறே يُبَيِّنُதெளிவுபடுத்துகிறான் اللّٰهُஅல்லாஹ் اٰيٰتِهٖதன் வசனங்களை لِلنَّاسِமக்களுக்கு لَعَلَّهُمْ يَتَّقُوْنَ‏அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக
2:187. நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்; அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.
2:188
2:188 وَلَا تَاْكُلُوْٓا اَمْوَالَـكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوْا بِهَآ اِلَى الْحُـکَّامِ لِتَاْکُلُوْا فَرِيْقًا مِّنْ اَمْوَالِ النَّاسِ بِالْاِثْمِ وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ
وَلَا تَاْكُلُوْٓاஉண்ணாதீர்கள் اَمْوَالَـكُمْஉங்கள் செல்வங்களை بَيْنَكُمْஉங்களுக்கு மத்தியில் بِالْبَاطِلِதவறாக وَتُدْلُوْاஇன்னும் கொடுக்காதீர்கள் بِهَآஅவற்றை اِلَى الْحُـکَّامِஅதிகாரிகளிடம் لِتَاْکُلُوْاநீங்கள்உண்பதற்காக فَرِيْقًاஒரு பகுதியை مِّنْஇருந்து اَمْوَالِசெல்வங்கள் النَّاسِமக்களுடைய بِالْاِثْمِபாவமாக وَاَنْـتُمْநீங்கள் تَعْلَمُوْنَ‏அறிந்திருந்தும்
2:188. அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.
2:189
2:189 يَسْـــٴَــلُوْنَكَ عَنِ الْاَهِلَّةِ ‌ؕ قُلْ هِىَ مَوَاقِيْتُ لِلنَّاسِ وَالْحَجِّ ؕ وَلَيْسَ الْبِرُّ بِاَنْ تَاْتُوا الْبُيُوْتَ مِنْ ظُهُوْرِهَا وَلٰـكِنَّ الْبِرَّ مَنِ اتَّقٰى‌ۚ وَاْتُوا الْبُيُوْتَ مِنْ اَبْوَابِهَا وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّکُمْ تُفْلِحُوْنَ‏‏‏
یَسْـَٔلُوْنَكَஉம்மிடம் கேட்கிறார்கள் عَنِபற்றி الْاَهِلَّةِ ؕபிறைகள் قُلْகூறுவீராக هِىَஅவை مَوَاقِيْتُகாலங்களை அறிவிக்கக்கூடியவை لِلنَّاسِமக்களுக்கு وَالْحَجِّ ؕஇன்னும் ஹஜ்ஜு وَلَيْسَஇன்னும் இல்லை الْبِرُّநன்மை بِاَنْ تَاْتُواநீங்கள் வருவது الْبُيُوْتَவீடுகளுக்கு مِنْஇருந்து ظُهُوْرِهَاஅவற்றின்பின்வழிகள் وَلٰـكِنَّஎனினும் الْبِرَّநன்மை مَنِஎவர் اتَّقٰى‌ۚஅல்லாஹ்வை அஞ்சினார் وَاْتُواவாருங்கள் الْبُيُوْتَவீடுகளுக்கு مِنْ اَبْوَابِهَاஅவற்றின் தலைவாசல்களிலிருந்து وَاتَّقُوا اللّٰهَஇன்னும் அல்லாஹ்வை அஞ்சுங்கள் لَعَلَّکُمْ تُفْلِحُوْنَ‏‏‏நீங்கள் வெற்றி அடைவதற்காக
2:189. (நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை; ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்; நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
2:190
2:190 وَقَاتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ الَّذِيْنَ يُقَاتِلُوْنَكُمْ وَلَا تَعْتَدُوْا ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ‏
وَقَاتِلُوْاபோர் புரியுங்கள் فِىْ سَبِيْلِபாதையில் اللّٰهِஅல்லாஹ்வுடைய الَّذِيْنَஎவர்கள் يُقَاتِلُوْنَكُمْபோர் புரிகிறார்கள்/உங்களிடம் وَلَا تَعْتَدُوْا ؕவரம்பு மீறாதீர்கள் اِنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் لَا يُحِبُّஅவன் நேசிப்பதில்லை الْمُعْتَدِيْنَ‏வரம்பு மீறுபவர்களை
2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
2:191
2:191 وَاقْتُلُوْهُمْ حَيْثُ ثَقِفْتُمُوْهُمْ وَاَخْرِجُوْهُمْ مِّنْ حَيْثُ اَخْرَجُوْكُمْ‌ وَالْفِتْنَةُ اَشَدُّ مِنَ الْقَتْلِۚ وَلَا تُقٰتِلُوْهُمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَـرَامِ حَتّٰى يُقٰتِلُوْكُمْ فِيْهِ‌ۚ فَاِنْ قٰتَلُوْكُمْ فَاقْتُلُوْهُمْؕ كَذٰلِكَ جَزَآءُ الْكٰفِرِيْنَ‏
وَاقْتُلُوْهُمْஇன்னும் அவர்களைக் கொல்லுங்கள் حَيْثُஇடம் ثَقِفْتُمُوْهُمْஅவர்களைப் பார்த்தீர்கள் وَاَخْرِجُوْهُمْஇன்னும் அவர்களை வெளியேற்றுங்கள் مِّنْ حَيْثُ اَخْرَجُوْكُمْ‌அவர்கள் உங்களை வெளியேற்றியவாறே وَالْفِتْنَةُஇன்னும் இணைவைத்தல் (குழப்பம்) اَشَدُّமிகக் கடுமையானது مِنَவிட الْقَتْلِۚகொலை وَلَا تُقٰتِلُوْهُمْபோர் புரியாதீர்கள் / அவர்களிடம் عِنْدَ الْمَسْجِدِமஸ்ஜிதின் அருகில் الْحَـرَامِபுனிதமான حَتّٰى يُقٰتِلُوْكُمْஅவர்கள் உங்களிடம் போர் புரியும் வரை فِيْهِ‌ۚ فَاِنْ قٰتَلُوْكُمْஅதில்/அவர்கள் உங்களிடம் போரிட்டால் فَاقْتُلُوْهُمْؕஅவர்களைக் கொல்லுங்கள் كَذٰلِكَஇப்படித்தான் جَزَآءُகூலி الْكٰفِرِيْنَ‏நிராகரிப்பவர்களின்
2:191. (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.
2:192
2:192 فَاِنِ انْـتَهَوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
فَاِنِ انْـتَهَوْاஅவர்கள் விலகிக் கொண்டால் فَاِنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் غَفُوْرٌமகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
2:192. எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்); நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
2:193
2:193 وَقٰتِلُوْهُمْ حَتّٰى لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّيَكُوْنَ الدِّيْنُ لِلّٰهِ‌ؕ فَاِنِ انْتَهَوْا فَلَا عُدْوَانَ اِلَّا عَلَى الظّٰلِمِيْنَ‏
وَقٰتِلُوْهُمْஇன்னும் அவர்களிடம் போர் புரியுங்கள் حَتّٰى لَا تَكُوْنَநீங்கும் வரை فِتْنَةٌஇணைவைத்தல் وَّيَكُوْنَஇன்னும் ஆகும் الدِّيْنُவழிபாடு لِلّٰهِ‌ؕஅல்லாஹ்வுக்கு فَاِنِ انْتَهَوْاஅவர்கள் விலகிக் கொண்டால் فَلَاஅறவே இல்லை عُدْوَانَஅத்துமீறல் اِلَّاதவிர عَلَىமீது الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்கள்
2:193. ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்; ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.
2:194
2:194 اَلشَّهْرُ الْحَـرَامُ بِالشَّهْرِ الْحَـرَامِ وَالْحُرُمٰتُ قِصَاصٌ‌ؕ فَمَنِ اعْتَدٰى عَلَيْكُمْ فَاعْتَدُوْا عَلَيْهِ بِمِثْلِ مَا اعْتَدٰى عَلَيْكُمْ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ‏
اَلشَّهْرُமாதம் الْحَـرَامُபுனித(மான) بِالشَّهْرِமாதத்திற்குப்பதிலாகும் الْحَـرَامِபுனித(மான) وَالْحُرُمٰتُஇன்னும் புனிதங்கள் قِصَاصٌ‌ؕபழிதீர்க்கப்பட வேண்டும் فَمَنِஆகவே யார் اعْتَدٰىவரம்பு மீறினார் عَلَيْكُمْஉங்கள் மீது فَاعْتَدُوْاவரம்பு மீறுங்கள் عَلَيْهِஅவர் மீது بِمِثْلِ مَا اعْتَدٰىஅவர் வரம்பு மீறியது போன்று عَلَيْكُمْஉங்கள் மீது وَاتَّقُواஇன்னும் அஞ்சுங்கள் اللّٰهَஅல்லாஹ்வை وَاعْلَمُوْٓاஇன்னும் அறிந்து கொள்ளுங்கள் اَنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் مَعَஉடன் الْمُتَّقِيْنَ‏இறையச்சமுடையவர்கள்
2:194. (போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும்; இதே போன்று, எல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு - ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்பு மீறுங்கள்; அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
2:195
2:195 وَاَنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ ۖ  ۛۚ وَاَحْسِنُوْا  ۛۚ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‏
وَاَنْفِقُوْاஇன்னும் தர்மம் புரியுங்கள் فِىْ سَبِيْلِ اللّٰهِஅல்லாஹ்வின் பாதையில் وَلَا تُلْقُوْاஇன்னும் போடாதீர்கள் بِاَيْدِيْكُمْஉங்கள் கரங்களை اِلَى التَّهْلُكَةِ ۖ  ۛۚஅழிவில் وَاَحْسِنُوْا  ۛۚஇன்னும் நல்லறம் புரியுங்கள் اِنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் يُحِبُّநேசிக்கிறான் الْمُحْسِنِيْنَ‏நல்லறம் புரிவோரை
2:195. அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.
2:196
2:196 وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِؕ فَاِنْ اُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ‌ۚ وَلَا تَحْلِقُوْا رُءُوْسَكُمْ حَتّٰى يَبْلُغَ الْهَدْىُ مَحِلَّهٗ ؕ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ بِهٖۤ اَذًى مِّنْ رَّاْسِهٖ فَفِدْيَةٌ مِّنْ صِيَامٍ اَوْ صَدَقَةٍ اَوْ نُسُكٍۚ فَاِذَآ اَمِنْتُمْ فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ اِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ‌ۚ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ فِى الْحَجِّ وَسَبْعَةٍ اِذَا رَجَعْتُمْؕ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ  ؕ ذٰ لِكَ لِمَنْ لَّمْ يَكُنْ اَهْلُهٗ حَاضِرِىْ الْمَسْجِدِ الْحَـرَامِ‌ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ
وَاَتِمُّواஇன்னும் முழுமையாக்குங்கள் الْحَجَّஹஜ்ஜை وَالْعُمْرَةَஇன்னும் உம்றாவை لِلّٰهِؕஅல்லாஹ்வுக்காக فَاِنْ اُحْصِرْتُمْநீங்கள் தடுக்கப்பட்டால் فَمَاஎது اسْتَيْسَرَசாத்தியமாகியது مِنَஇருந்து الْهَدْىِ‌ۚபலி(கள்) وَلَا تَحْلِقُوْاஇன்னும் சிரைக்காதீர்கள் رُءُوْسَكُمْஉங்கள் தலைகளை حَتّٰىவரை يَبْلُغَஅடைகிறது الْهَدْىُபலி مَحِلَّهٗ ؕதன் இடத்தை فَمَنْஇன்னும் எவர் كَانَஇருக்கிறார் مِنْكُمْஉங்களில் مَّرِيْضًاநோயாளியாக اَوْஅல்லது بِهٖۤஅவருக்கு اَذًىஓர் இடையூறு/காயம், சிரங்கு مِّنْ رَّاْسِهٖஅவருடையதலையில் فَفِدْيَةٌஆகவே பரிகாரம் مِّنْஇருந்து صِيَامٍநோன்பு اَوْஅல்லது صَدَقَةٍதர்மம் اَوْ نُسُكٍۚஅல்லது பலி فَاِذَآ اَمِنْتُمْநீங்கள் பாதுகாப்புப் பெற்றால் فَمَنْஇன்னும் எவர் تَمَتَّعَசுகம் அனுபவித்தார் بِالْعُمْرَةِஉம்றாவைக் கொண்டு اِلَى الْحَجِّஹஜ்ஜு வரை فَمَاஎது اسْتَيْسَرَசாத்தியமானது مِنَ الْهَدْىِ‌ۚபலியிலிருந்து فَمَنْஎனவே எவர் لَّمْ يَجِدْபெறவில்லை فَصِيَامُஆகவே நோன்பு ثَلٰثَةِ اَيَّامٍமூன்று நாள்கள் فِى الْحَجِّஹஜ்ஜில் وَسَبْعَةٍஇன்னும் ஏழு اِذَا رَجَعْتُمْؕநீங்கள் திரும்பினால் تِلْكَஅவை عَشَرَةٌபத்து كَامِلَةٌ  ؕமுழுமையான ذٰ لِكَ لِمَنْஇது/எவருக்கு لَّمْ يَكُنْஇருக்கவில்லை اَهْلُهٗஅவருடைய குடும்பம் حَاضِرِىْவசிப்பவர்களாக الْمَسْجِدِஅல் மஸ்ஜிது الْحَـرَامِ‌ؕபுனிதமான وَاتَّقُواஇன்னும் அஞ்சுங்கள் اللّٰهَஅல்லாஹ்வை وَاعْلَمُوْٓاஇன்னும் அறிந்துகொள்ளுங்கள் اَنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் شَدِيْدُமிகக்கடுமையானவன் الْعِقَابِ‏தண்டிப்பதில்
2:196. ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள்; அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள்; ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ(தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானி கொடுத்தல் வேண்டும் பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானி கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானி கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
2:197
2:197 اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ ‌ۚ فَمَنْ فَرَضَ فِيْهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوْقَۙ وَلَا جِدَالَ فِى الْحَجِّ ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ يَّعْلَمْهُ اللّٰهُ ‌ؕؔ وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوٰى وَاتَّقُوْنِ يٰٓاُولِى الْاَلْبَابِ‏
اَلْحَجُّஹஜ்ஜு اَشْهُرٌமாதங்கள் مَّعْلُوْمٰتٌ ۚஅறியப்பட்டவை فَمَنْஆகவே எவர் فَرَضَகடமையாக்கினார் فِيْهِنَّ الْحَجَّஅவற்றில் ஹஜ்ஜை فَلَاஅறவே இல்லை رَفَثَதாம்பத்திய உறவு وَلَاஇன்னும் அறவே இல்லை فُسُوْقَۙதீச்சொல் பேசுதல் وَلَاஇன்னும் அறவே இல்லை جِدَالَதர்க்கம் فِى الْحَجِّ ؕஹஜ்ஜில் وَمَا تَفْعَلُوْاநீங்கள் எதைச் செய்தாலும் مِنْ خَيْرٍநன்மையில் يَّعْلَمْهُஅதை அறிவான் اللّٰهُ ؕؔஅல்லாஹ் وَتَزَوَّدُوْاஇன்னும் கட்டுச்சாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள் فَاِنَّஆகவே நிச்சயமாக خَيْرَசிறந்தது الزَّادِகட்டுச்சாதத்தில் التَّقْوٰىஅல்லாஹ்வை அஞ்சுவதுதான் وَاتَّقُوْنِஇன்னும் என்னை அஞ்சுங்கள் يٰٓاُولِى الْاَلْبَابِ‏அறிவாளிகளே
2:197. ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.
2:198
2:198 ‌لَيْسَ عَلَيْکُمْ جُنَاحٌ اَنْ تَبْتَغُوْا فَضْلًا مِّنْ رَّبِّکُمْؕ فَاِذَآ اَفَضْتُمْ مِّنْ عَرَفٰتٍ فَاذْکُرُوا اللّٰهَ عِنْدَ الْمَشْعَرِ الْحَـرَامِ وَاذْکُرُوْهُ کَمَا هَدٰٮکُمْ‌ۚ وَاِنْ کُنْتُمْ مِّنْ قَبْلِهٖ لَمِنَ الضَّآ لِّيْنَ‏
لَيْسَஇல்லை عَلَيْکُمْஉங்கள் மீது جُنَاحٌகுற்றம் اَنْ تَبْتَغُوْاநீங்கள் தேடிக் கொள்வது فَضْلًاஅருளை مِّنْஇருந்து رَّبِّکُمْؕஉங்கள் இறைவன் فَاِذَآ اَفَضْتُمْநீங்கள் புறப்பட்டால் مِّنْஇருந்து عَرَفٰتٍஅரஃபாத் فَاذْکُرُواநினைவு கூருங்கள் اللّٰهَஅல்லாஹ்வை عِنْدَஅருகில் الْمَشْعَرِ الْحَـرَامِஅல்மஷ்அருல்ஹராம் وَاذْکُرُوْهُஇன்னும் அவனை நினைவு கூருங்கள் کَمَا هَدٰٮکُمْ‌ۚஉங்களை அவன் நேர்வழிப்படுத்தியதற்காக وَاِنْஇன்னும் நிச்சயமாக کُنْتُمْஇருந்தீர்கள் مِّنْ قَبْلِهٖஇதற்கு முன்னர் لَمِنَ الضَّآ لِّيْنَ‏வழி தவறியவர்களில்தான்
2:198. (ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது; பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது “மஷ்அருள் ஹராம்” என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்; உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.
2:199
2:199 ثُمَّ اَفِيْضُوْا مِنْ حَيْثُ اَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللّٰهَ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
ثُمَّபிறகு اَفِيْضُوْاபுறப்படுங்கள் مِنْ حَيْثُஇடத்திலிருந்து اَفَاضَபுறப்பட்டார்(கள்) النَّاسُமக்கள் وَاسْتَغْفِرُواஇன்னும் மன்னிப்புக்கோருங்கள் اللّٰهَ‌ؕஅல்லாஹ்விடம் اِنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் غَفُوْرٌமகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
2:199. பிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்புப் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
2:200
2:200  فَاِذَا قَضَيْتُمْ مَّنَاسِكَکُمْ فَاذْکُرُوا اللّٰهَ كَذِكْرِكُمْ اٰبَآءَکُمْ اَوْ اَشَدَّ ذِکْرًا ؕ فَمِنَ النَّاسِ مَنْ يَّقُوْلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا وَمَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ‏
فَاِذَا قَضَيْتُمْநீங்கள் நிறைவேற்றிவிட்டால் مَّنَاسِكَکُمْஉங்கள் ஹஜ்ஜு கடமைகளை فَاذْکُرُواநினைவு கூருங்கள் اللّٰهَஅல்லாஹ்வை كَذِكْرِكُمْநீங்கள் நினைவு கூர்ந்ததைப் போல اٰبَآءَکُمْமூதாதைகளை/உங்கள் اَوْஅல்லது اَشَدَّகடுமையாக ذِکْرًا ؕநினைவு கூர்தல் فَمِنَஇன்னும் இருந்து النَّاسِமக்கள் مَنْஎவர் يَّقُوْلُகூறுகிறார் رَبَّنَآஎங்கள் இறைவா اٰتِنَاஎங்களுக்குத் தா فِى الدُّنْيَاஇம்மையில் وَمَاஇல்லை لَهٗஅவருக்கு فِى الْاٰخِرَةِமறுமையில் مِنْஇருந்து خَلَاقٍ‏பாக்கியம்
2:200. ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள்(இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல்-இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்; மனிதர்களில் சிலர், “எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு” என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை.
2:201
2:201 وَمِنْهُمْ مَّنْ يَّقُوْلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ‏
وَمِنْهُمْஅவர்களில் مَّنْஎவர் يَّقُوْلُகூறுகிறார் رَبَّنَآஎங்கள் இறைவா اٰتِنَاஎங்களுக்குத் தா فِى الدُّنْيَاஇம்மையில் حَسَنَةًஅழகியதை وَّفِى الْاٰخِرَةِஇன்னும் மறுமையில் حَسَنَةًஅழகியதை وَّ قِنَاஇன்னும் காத்துக்கொள் / எங்களை عَذَابَவேதனையிலிருந்து النَّارِ‏(நரக) நெருப்பின்
2:201. இன்னும் அவர்களில் சிலர், “ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” எனக் கேட்போரும் அவர்களில் உண்டு.
2:202
2:202 اُولٰٓٮِٕكَ لَهُمْ نَصِيْبٌ مِّمَّا كَسَبُوْا ‌ؕ وَاللّٰهُ سَرِيْعُ الْحِسَابِ‏
اُولٰٓٮِٕكَஅவர்கள் لَهُمْஅவர்களுக்கு نَصِيْبٌபங்கு مِّمَّاஎதிலிருந்து كَسَبُوْا ؕசெய்தார்கள் وَاللّٰهُஇன்னும் அல்லாஹ் سَرِيْعُவிரைவானவன் الْحِسَابِ‏கணக்கிடுவதில்/ விசாரணையில்
2:202. இவ்வாறு, (இம்மை-மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு; தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன்.
2:203
2:203 وَاذْكُرُوا اللّٰهَ فِىْٓ اَيَّامٍ مَّعْدُوْدٰتٍ‌ؕ فَمَنْ تَعَجَّلَ فِىْ يَوْمَيْنِ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ ۚ وَمَنْ تَاَخَّرَ فَلَاۤ اِثْمَ عَلَيْه‌ِ ۙ لِمَنِ اتَّقٰى ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّکُمْ اِلَيْهِ تُحْشَرُوْنَ‏
وَاذْكُرُواஇன்னும் நினைவு கூருங்கள் اللّٰهَஅல்லாஹ்வை فِىْٓ اَيَّامٍநாள்களில் مَّعْدُوْدٰتٍ‌ؕஎண்ணப்பட்டவை فَمَنْஇன்னும் எவர் تَعَجَّلَஅவசரப்பட்டார் فِىْ يَوْمَيْنِஇரண்டு நாள்களில் فَلَاۤ اِثْمَஅறவே பாவமில்லை عَلَيْهِ ۚஅவர் மீது وَمَنْஇன்னும் எவர் تَاَخَّرَதாமதித்தார் فَلَاۤ اِثْمَஅறவே பாவமில்லை عَلَيْه‌ِ ۙஅவர் மீது لِمَنِஎவருக்கு اتَّقٰى ؕஅஞ்சினார் وَاتَّقُواஇன்னும் அஞ்சுங்கள் اللّٰهَஅல்லாஹ்வை وَاعْلَمُوْٓاஇன்னும் அறிந்துகொள்ளுங்கள் اَنَّکُمْநிச்சயமாக நீங்கள் اِلَيْهِஅவனிடமே تُحْشَرُوْنَ‏ஒன்று திரட்டப்படுவீர்கள்
2:203. குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை; யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை; (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது); அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
2:204
2:204 وَمِنَ النَّاسِ مَنْ يُّعْجِبُكَ قَوْلُهٗ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللّٰهَ عَلٰى مَا فِىْ قَلْبِهٖۙ وَهُوَ اَلَدُّ الْخِصَامِ‏
وَمِنَ النَّاسِஇன்னும் மக்களில் مَنْஎவர் يُّعْجِبُكَவியக்க வைக்கிறது/உம்மை قَوْلُهٗஅவனுடைய பேச்சு فِى الْحَيٰوةِவாழ்க்கையைப் பற்றி الدُّنْيَاஇவ்வுலகம் وَيُشْهِدُஇன்னும் சாட்சியாக்குவான் اللّٰهَஅல்லாஹ்வை عَلٰىமீது مَا فِىْ قَلْبِهٖۙஎது/அவனுடைய உள்ளத்தில் وَهُوَஅவன் اَلَدُّகடுமையான வாதி الْخِصَامِ‏வாதிகளில்
2:204. (நபியே!) மனிதர்களில் ஒரு வ(கையின)ன் இருக்கிறான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி(சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாகக் கூறுவான்; (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான்.
2:205
2:205 وَاِذَا تَوَلّٰى سَعٰى فِى الْاَرْضِ لِيُفْسِدَ فِيْهَا وَيُهْلِكَ الْحَـرْثَ وَالنَّسْلَ‌ؕ وَاللّٰهُ لَا يُحِبُّ الْفَسَادَ‏
وَاِذَا تَوَلّٰىஇன்னும் அவன் திரும்பிச் சென்றால் سَعٰىமுயற்சிக்கிறான் فِى الْاَرْضِபூமியில் لِيُفْسِدَஅவன் விஷமம் செய்வதற்காக فِيْهَاஅதில் وَيُهْلِكَஇன்னும் அழிக்கிறான் الْحَـرْثَவிளை நிலத்தை وَالنَّسْلَ‌ؕஇன்னும் கால்நடையை وَاللّٰهُஅல்லாஹ் لَا يُحِبُّவிரும்ப மாட்டான் الْفَسَادَ‏விஷமத்தை
2:205. அவன் (உம்மை விட்டுத்)திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்; கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
2:206
2:206 وَاِذَا قِيْلَ لَهُ اتَّقِ اللّٰهَ اَخَذَتْهُ الْعِزَّةُ بِالْاِثْمِ‌ فَحَسْبُهٗ جَهَنَّمُ‌ؕ وَلَبِئْسَ الْمِهَادُ‏
وَاِذَا قِيْلَகூறப்பட்டால் لَهُஅவனுக்கு اتَّقِஅஞ்சிக்கொள் اللّٰهَஅல்லாஹ்வை اَخَذَتْهُஅவனைப் பிடித்துக் கொள்கிறது الْعِزَّةُபெருமை بِالْاِثْمِ‌பாவத்தைக் கொண்டு فَحَسْبُهٗஎனவே அவனுக்குப்போதும் جَهَنَّمُ‌ؕநரகம் وَلَبِئْسَஇன்னும் திட்டமாக கெட்டுவிட்டது الْمِهَادُ‏தங்குமிடம்
2:206. “அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்” என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது; அவனுக்கு நரகமே போதுமானது நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்.
2:207
2:207 وَمِنَ النَّاسِ مَنْ يَّشْرِىْ نَفْسَهُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ‌ؕ وَ اللّٰهُ رَءُوْفٌ ۢ بِالْعِبَادِ‏
وَمِنَ النَّاسِஇன்னும் மக்களில் مَنْஎவர் يَّشْرِىْவிற்கிறார் نَفْسَهُதன் உயிரை ابْتِغَآءَதேடுதல் مَرْضَاتِபொருத்தம் اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின் وَ اللّٰهُஅல்லாஹ் رَءُوْفٌ ۢமிக இரக்கமுடையவன் بِالْعِبَادِ‏அடியார்கள் மீது
2:207. இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்; அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.
2:208
2:208 يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِى السِّلْمِ کَآفَّةً  وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ؕ اِنَّهٗ لَـکُمْ عَدُوٌّ مُّبِيْنٌ‏
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கையாளர்களே! ادْخُلُوْاநுழையுங்கள் فِى السِّلْمِஇஸ்லாமில் کَآفَّةً முழுமையாக وَلَا تَتَّبِعُوْاஇன்னும் பின்பற்றாதீர்கள் خُطُوٰتِஅடிச்சுவடுகளை الشَّيْطٰنِ‌ؕஷைத்தானின் اِنَّهٗநிச்சயமாக அவன் لَـکُمْஉங்களுக்கு عَدُوٌّஎதிரி مُّبِيْنٌ‏பகிரங்கமான
2:208. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,
2:209
2:209 فَاِنْ زَلَـلْتُمْ مِّنْۢ بَعْدِ مَا جَآءَتْکُمُ الْبَيِّنٰتُ فَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَکِيْمٌ‏
فَاِنْ زَلَـلْتُمْநீங்கள் சறுகினால் مِّنْۢ بَعْدِ مَا جَآءَتْکُمُபின்னர்/வந்தது/உங்களிடம் الْبَيِّنٰتُதெளிவான சான்றுகள் فَاعْلَمُوْٓاஅறிந்து கொள்ளுங்கள் اَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ் عَزِيْزٌமிகைத்தவன் حَکِيْمٌ‏மகா ஞானவான்
2:209. தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால்- நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்; பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
2:210
2:210 هَلْ يَنْظُرُوْنَ اِلَّاۤ اَنْ يَّاْتِيَهُمُ اللّٰهُ فِىْ ظُلَلٍ مِّنَ الْغَمَامِ وَالْمَلٰٓٮِٕکَةُ وَقُضِىَ الْاَمْرُ‌ؕ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ
هَلْ يَنْظُرُوْنَஎதிர்பார்க்கிறார்களா? اِلَّاۤதவிர اَنْ يَّاْتِيَهُمُஅவர்களிடம்வருவதை اللّٰهُஅல்லாஹ் فِىْ ظُلَلٍநிழல்களில் مِّنَ الْغَمَامِமேகங்களின் وَالْمَلٰٓٮِٕکَةُஇன்னும் வானவர்கள் وَقُضِىَஇன்னும் முடிக்கப்பட்டது الْاَمْرُ‌ؕகாரியம் وَاِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கமே تُرْجَعُதிருப்பப்படும் الْاُمُوْرُ‏காரியங்கள்
2:210. அல்லாஹ்வும், (அவனுடைய) மலக்குகளும் மேக நிழல்களின் வழியாக (தண்டனையை)க் கொண்டு வந்து, (அவர்களுடைய) காரியத்தைத் தீர்த்து வைத்தல் வேண்டும் என்பதைத் தவிர (வேறு எதனையும் ஷைத்தானின் அடிச் சுவட்டைப் பின்பற்றுவோர்) எதிர் பார்க்கிறார்களா? (மறுமையில்) அவர்களுடைய சகல காரியங்களும் அல்லாஹ்விடமே (அவன் தீர்ப்புக்குக்)கொண்டுவரப்படும்.
2:211
2:211 سَلْ بَنِىْٓ اِسْرَآءِيْلَ كَمْ اٰتَيْنٰهُمْ مِّنْ اٰيَةٍۢ بَيِّنَةٍ ‌ؕ وَمَنْ يُّبَدِّلْ نِعْمَةَ اللّٰهِ مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُ فَاِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‏
سَلْகேட்பீராக بَنِىْٓ اِسْرَآءِيْلَஇஸ்ராயீலின் சந்ததிகளை كَمْஎத்தனை اٰتَيْنٰهُمْகொடுத்தோம்/அவர்களுக்கு مِّنْஇருந்து اٰيَةٍۢஅத்தாட்சி بَيِّنَةٍ ؕதெளிவான وَمَنْஇன்னும் எவர் يُّبَدِّلْமாற்றுகிறார் نِعْمَةَஅருட்கொடையை اللّٰهِஅல்லாஹ்வுடைய مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُதம்மிடம் அது வந்த பின்னர் فَاِنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் شَدِيْدُகடுமையானவன் الْعِقَابِ‏தண்டிப்பதில்
2:211. (நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (யஹூதிகளிடம்) நீர் கேளும்: “நாம் எத்தனை தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் அனுப்பினோம்” என்று; அல்லாஹ்வின் அருள் கொடைகள் தம்மிடம் வந்த பின்னர், யார் அதை மாற்றுகிறார்களோ, (அத்தகையோருக்கு) தண்டனை கொடுப்பதில் நிச்சயமாக அல்லாஹ் கடுமையானவன்.
2:212
2:212 زُيِّنَ لِلَّذِيْنَ كَفَرُوا الْحَيٰوةُ الدُّنْيَا وَيَسْخَرُوْنَ مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا ‌ ۘ وَالَّذِيْنَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ ؕ وَاللّٰهُ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏
زُيِّنَஅலங்கரிக்கப்பட்டுள்ளது لِلَّذِيْنَஎவர்களுக்கு كَفَرُواநிராகரித்தார்கள் الْحَيٰوةُவாழ்க்கை الدُّنْيَاஉலகம் وَيَسْخَرُوْنَஇன்னும் பரிகசிக்கிறார்கள் مِنَ الَّذِيْنَஎவர்களை اٰمَنُوْا  ۘநம்பிக்கை கொண்டார்கள் وَالَّذِيْنَஇன்னும் எவர்கள் اتَّقَوْاஅல்லாஹ்வை அஞ்சினார்கள் فَوْقَهُمْஅவர்களுக்கு மேல் يَوْمَ الْقِيٰمَةِ ؕமறுமை நாளில் وَاللّٰهُஇன்னும் அல்லாஹ் يَرْزُقُவழங்குவான் مَنْஎவர் يَّشَآءُநாடுகிறான் بِغَيْرِ حِسَابٍ‏கணக்கின்றி
2:212. நிராகரிப்போருக்கு(காஃபிர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது; இதனால் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோரை ஏளனம் செய்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையோர் மறுமையில் அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பார்கள்; இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான்.
2:213
2:213 كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً  فَبَعَثَ اللّٰهُ النَّبِيّٖنَ مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ وَاَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَـقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيْمَا اخْتَلَفُوْا فِيْهِ ‌ؕ وَمَا اخْتَلَفَ فِيْهِ اِلَّا الَّذِيْنَ اُوْتُوْهُ مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ بَغْيًا ۢ بَيْنَهُمْ‌ۚ فَهَدَى اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا لِمَا اخْتَلَفُوْا فِيْهِ مِنَ الْحَـقِّ بِاِذْنِهٖ‌ ؕ وَاللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
كَانَஇருந்தார் النَّاسُமக்கள் اُمَّةًஒரு சமுதாயமாக وَّاحِدَةً ஒரே فَبَعَثَஆகவே அனுப்பினான் اللّٰهُஅல்லாஹ் النَّبِيّٖنَநபிமார்களை مُبَشِّرِيْنَநற்செய்தியாளர்களாக وَمُنْذِرِيْنَஇன்னும் எச்சரிப்பவர்களாக وَاَنْزَلَஇன்னும் இறக்கினான் مَعَهُمُஅவர்களுடன் الْكِتٰبَவேதத்தை بِالْحَـقِّஉண்மையான لِيَحْكُمَஅது தீர்ப்பளிப்பதற்காக بَيْنَமத்தியில் النَّاسِமக்களுக்கு فِيْمَاஎதில் اخْتَلَفُوْاகருத்து வேறுபட்டார்கள் فِيْهِ ؕஅதில் وَمَا اخْتَلَفَகருத்து வேறுபடவில்லை فِيْهِஅதில் اِلَّاதவிர الَّذِيْنَஎவர்கள் اُوْتُوْهُஅதைக் கொடுக்கப்பட்டார்கள் مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُஅவர்களிடம் வந்த பின்னர் الْبَيِّنٰتُதெளிவான சான்றுகள் بَغْيًا ۢபொறாமையினால் بَيْنَهُمْ‌ۚஅவர்களுக்கு மத்தியில் فَهَدَىஆகவே நேர்வழிப்படுத்தினான் اللّٰهُஅல்லாஹ் الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களை لِمَا اخْتَلَفُوْاஅவர்கள் கருத்து வேறுபட்டதற்கு فِيْهِஅதில் مِنَ الْحَـقِّஉண்மையிலிருந்து بِاِذْنِهٖ‌ ؕதனது கட்டளையினால் وَاللّٰهُஇன்னும் அல்லாஹ் يَهْدِىْநேர்வழி காட்டுகிறான் مَنْஎவரை يَّشَآءُநாடுகிறான் اِلٰىபக்கம் صِرَاطٍபாதையின் مُّسْتَقِيْمٍ‏நேரான
2:213. (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்.
2:214
2:214 اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَـنَّةَ وَ لَمَّا يَاْتِكُمْ مَّثَلُ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْؕ مَسَّتْهُمُ الْبَاْسَآءُ وَالضَّرَّآءُ وَزُلْزِلُوْا حَتّٰى يَقُوْلَ الرَّسُوْلُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ مَتٰى نَصْرُ اللّٰهِؕ اَلَاۤ اِنَّ نَصْرَ اللّٰهِ قَرِيْبٌ‏
اَمْஅல்லது حَسِبْتُمْநினைத்துக் கொண்டீர்கள் اَنْ تَدْخُلُواநீங்கள் நுழையலாம் الْجَـنَّةَசொர்க்கத்தில் وَ لَمَّا يَاْتِكُمْஉங்களுக்கு வராத நிலையில் مَّثَلُபோன்று الَّذِيْنَஎவர்கள் خَلَوْاசென்றார்கள் مِنْ قَبْلِكُمْؕஉங்களுக்குமுன் مَسَّتْهُمُஅவர்களை பீடித்தன الْبَاْسَآءُகொடிய வறுமை وَالضَّرَّآءُஇன்னும் நோய் وَزُلْزِلُوْاஇன்னும் அச்சுறுத்தப்பட்டார்கள் حَتّٰىவரை يَقُوْلَகூறுவார் الرَّسُوْلُதூதர் وَالَّذِيْنَஇன்னும் எவர்கள் اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள் مَعَهٗஅவருடன் مَتٰىஎப்போது نَصْرُஉதவி اللّٰهِؕஅல்லாஹ்வுடைய اَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்! اِنَّநிச்சயமாக نَصْرَஉதவி اللّٰهِஅல்லாஹ்வுடைய قَرِيْبٌ‏சமீபமானது
2:214. உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)
2:215
2:215 يَسْــٴَــلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَ ؕ قُلْ مَآ اَنْفَقْتُمْ مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ‌ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ‏
یَسْـَٔلُوْنَكَஉம்மிடம் கேட்கிறார்கள் مَاذَاஎதை يُنْفِقُوْنَ ؕஅவர்கள் தர்மம் புரியவேண்டும் قُلْகூறு(வீராக) مَآஎதை اَنْفَقْتُمْநீங்கள் தர்மம் புரிந்தாலும் مِّنْஇருந்து خَيْرٍசெல்வம் فَلِلْوَالِدَيْنِபெற்றோருக்கு وَالْاَقْرَبِيْنَஇன்னும் உறவினர்கள் وَالْيَتٰمٰىஇன்னும் அநாதைகள் وَالْمَسٰكِيْنِஇன்னும் ஏழைகள் وَابْنِ السَّبِيْلِ‌ؕஇன்னும் வழிப்போக்கர்(கள்) وَمَاஇன்னும் எதை تَفْعَلُوْاநீங்கள் செய்தாலும் مِنْ خَيْرٍநன்மையிலிருந்து فَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ் بِهٖஅதை عَلِيْمٌ‏மிக அறிபவன்
2:215. அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.”
2:216
2:216 كُتِبَ عَلَيْکُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّـكُمْ‌ۚ وَعَسٰۤى اَنْ تَكْرَهُوْا شَيْئًا وَّهُوَ خَيْرٌ لَّـکُمْ‌ۚ وَعَسٰۤى اَنْ تُحِبُّوْا شَيْئًا وَّهُوَ شَرٌّ لَّـكُمْؕ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ
كُتِبَகடமையாக்கப்பட்டது عَلَيْکُمُஉங்கள் மீது الْقِتَالُபோர் وَهُوَஅதுவோ كُرْهٌசிரமமானது لَّـكُمْ‌ۚஉங்களுக்கு وَعَسٰۤى اَنْ تَكْرَهُوْاஇன்னும் நீங்கள் வெறுக்கலாம் شَيْئًاஒன்றை وَّهُوَஅதுவோ خَيْرٌசிறந்தது لَّـکُمْ‌ۚஉங்களுக்கு وَعَسٰۤى اَنْ تُحِبُّوْاஇன்னும் நீங்கள் விரும்பலாம் شَيْئًاஒன்றை وَّهُوَஅதுவோ شَرٌّதீமையாகும் لَّـكُمْؕஉங்களுக்கு وَاللّٰهُஅல்லாஹ்தான் يَعْلَمُஅறிவான் وَاَنْـتُمْநீங்கள் لَا تَعْلَمُوْنَ‏அறியமாட்டீர்கள்
2:216. போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது; நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.
2:217
2:217 يَسْــٴَــلُوْنَكَ عَنِ الشَّهْرِ الْحَـرَامِ قِتَالٍ فِيْهِ‌ؕ قُلْ قِتَالٌ فِيْهِ كَبِيْرٌ ‌ؕ وَصَدٌّ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَ کُفْرٌ ۢ بِهٖ وَالْمَسْجِدِ الْحَـرَامِ وَاِخْرَاجُ اَهْلِهٖ مِنْهُ اَكْبَرُ عِنْدَ اللّٰهِ ‌‌ۚ وَالْفِتْنَةُ اَکْبَرُ مِنَ الْقَتْلِ‌ؕ وَلَا يَزَالُوْنَ يُقَاتِلُوْنَكُمْ حَتّٰى يَرُدُّوْكُمْ عَنْ دِيْـنِکُمْ اِنِ اسْتَطَاعُوْا ‌ؕ وَمَنْ يَّرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِيْـنِهٖ فَيَمُتْ وَهُوَ کَافِرٌ فَاُولٰٓٮِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ ‌‌ۚ وَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
یَسْـَٔلُوْنَكَஉம்மிடம் கேட்கிறார்கள் عَنِ الشَّهْرِமாதம் பற்றி الْحَـرَامِபுனிதமான قِتَالٍபோர் புரிவது فِيْهِ‌ؕஅதில் قُلْகூறுவீராக قِتَالٌபோர் புரிவது فِيْهِஅதில் كَبِيْرٌ ؕபெரியது وَصَدٌّஇன்னும் தடுப்பது عَنْவிட்டு سَبِيْلِபாதை اللّٰهِஅல்லாஹ்வுடைய وَ کُفْرٌ ۢஇன்னும் நிராகரிப்பது بِهٖஅவனை وَالْمَسْجِدِஇன்னும் அல்மஸ்ஜிது الْحَـرَامِபுனிதமான وَاِخْرَاجُஇன்னும் வெளியேற்றுவது اَهْلِهٖஅதில் வசிப்போரை مِنْهُஅதிலிருந்து اَكْبَرُமிகப் பெரியது عِنْدَ اللّٰهِ ۚஅல்லாஹ்விடத்தில் وَالْفِتْنَةُஇன்னும் இணைவைத்தல் اَکْبَرُமிகப் பெரியது مِنَ الْقَتْلِ‌ؕகொலையை விட وَلَا يَزَالُوْنَ يُقَاتِلُوْنَكُمْஉங்களிடம் ஓயாது போர் புரிந்துகொண்டே இருப்பார்கள் حَتّٰىவரை يَرُدُّوْكُمْஉங்களைத் திருப்புவார்கள் عَنْவிட்டு دِيْـنِکُمْஉங்கள் மார்க்கம் اِنِ اسْتَطَاعُوْا ؕஅவர்கள் சக்தி பெற்றால் وَمَنْஇன்னும் எவர் يَّرْتَدِدْமாறிவிடுகிறார்(கள்) مِنْكُمْஉங்களிலிருந்து عَنْவிட்டு دِيْـنِهٖஅவருடைய மார்க்கம் فَيَمُتْஅவர் இறக்கிறார் وَهُوَஅவர்(கள்) کَافِرٌநிராகரிப்பாளர்(கள்) فَاُولٰٓٮِٕكَஅவர்கள் حَبِطَتْஅழிந்துவிடும் اَعْمَالُهُمْஅவர்களின் செயல்கள் فِى الدُّنْيَاஇம்மையில் وَالْاٰخِرَةِ ۚஇன்னும் மறுமை وَاُولٰٓٮِٕكَஇன்னும் அவர்கள் اَصْحٰبُ النَّارِ‌ۚநரகவாசிகள் هُمْஅவர்கள் فِيْهَاஅதில் خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
2:217. (நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்; ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது; அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்; உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்; இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.”
2:218
2:218 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَاجَرُوْا وَجَاهَدُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِۙ اُولٰٓٮِٕكَ يَرْجُوْنَ رَحْمَتَ اللّٰهِؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
اِنَّநிச்சயமாக الَّذِيْنَஎவர்கள் اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள் وَالَّذِيْنَஇன்னும் எவர்கள் هَاجَرُوْاஹிஜ்ரத் செய்தார்கள் وَجَاهَدُوْاஇன்னும் ஜிஹாது செய்தார்கள் فِىْ سَبِيْلِபாதையில் اللّٰهِۙஅல்லாஹ்வுடைய اُولٰٓٮِٕكَஅவர்கள் يَرْجُوْنَஆதரவு வைக்கிறார்கள் رَحْمَتَகருணையை اللّٰهِؕஅல்லாஹ்வுடைய وَاللّٰهُஇன்னும் அல்லாஹ் غَفُوْرٌமகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
2:218. நம்பிக்கை கொண்டோரும், (காஃபிர்களின் கொடுமைகளால் நாட்டை விட்டு) துறந்தவர்களும், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தோரும் அல்லாஹ்வின் (கருணையை) - ரஹ்மத்தை - நிச்சயமாக எதிர்பார்க்கிறார்கள்; மேலும், அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், பேரன்புடையோனாகவும் இருக்கின்றான்.
2:219
2:219 يَسْــٴَــلُوْنَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ‌ؕ قُلْ فِيْهِمَآ اِثْمٌ کَبِيْرٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَاِثْمُهُمَآ اَکْبَرُ مِنْ نَّفْعِهِمَا ؕ وَيَسْــٴَــلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَؕ  قُلِ الْعَفْوَ‌ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ لَعَلَّکُمْ تَتَفَكَّرُوْنَۙ‏
یَسْـَٔلُوْنَكَஉம்மிடம் கேட்கிறார்கள் عَنِ الْخَمْرِமதுவைப் பற்றி وَالْمَيْسِرِ‌ؕஇன்னும் சூதாட்டம் قُلْகூறுவீராக فِيْهِمَآஅவ்விரண்டிலும் اِثْمٌபாவம் کَبِيْرٌபெரியது وَّمَنَافِعُஇன்னும் பலன்கள் لِلنَّاسِமக்களுக்கு وَاِثْمُهُمَآஅவ்விரண்டின்பாவம் اَکْبَرُமிகப் பெரியது مِنْவிட نَّفْعِهِمَا ؕஅவ்விரண்டின் பலன் وَيَسْــٴَــلُوْنَكَஇன்னும் உம்மிடம் கேட்கிறார்கள் مَاذَاஎது يُنْفِقُوْنَؕதர்மம் செய்வார்கள் قُلِகூறுவீராக الْعَفْوَ‌ؕமீதமுள்ளதை كَذٰلِكَஇவ்வாறே يُبَيِّنُவிவரிக்கிறான் اللّٰهُஅல்லாஹ் لَـكُمُஉங்களுக்கு الْاٰيٰتِவசனங்களை لَعَلَّکُمْ تَتَفَكَّرُوْنَۙ‏நீங்கள் சிந்திப்பதற்காக
2:219. (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (நபியே! “தர்மத்திற்காக) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் “(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக; நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்.
2:220
2:220 فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِؕ وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الْيَتٰمٰىؕ قُلْ اِصْلَاحٌ لَّهُمْ خَيْرٌ ؕ وَاِنْ تُخَالِطُوْهُمْ فَاِخْوَانُكُمْ‌ؕ وَاللّٰهُ يَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِ‌ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَاَعْنَتَكُمْؕ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ‏
فِى الدُّنْيَاஇம்மையில் وَالْاٰخِرَةِؕஇன்னும் மறுமை وَ یَسْـَٔلُوْنَكَஇன்னும் உம்மிடம் கேட்கிறார்கள் عَنِ الْيَتٰمٰىؕஅநாதைகள் பற்றி قُلْகூறுவீராக اِصْلَاحٌசீர்திருத்துவது لَّهُمْஅவர்களை خَيْرٌ ؕமிக நன்றே وَاِنْ تُخَالِطُوْهُمْஇன்னும் அவர்களை நீங்கள் சேர்த்துக் கொண்டால் فَاِخْوَانُكُمْ‌ؕஉங்கள் சகோதரர்கள் وَاللّٰهُஇன்னும் அல்லாஹ் يَعْلَمُஅறிவான் الْمُفْسِدَசீர்கெடுப்பவனை مِنَஇருந்து الْمُصْلِحِ‌ؕசீர்செய்பவன் وَلَوْ شَآءَ(அவன்) நாடினால் اللّٰهُஅல்லாஹ் لَاَعْنَتَكُمْؕசிரமப்படுத்தி இருப்பான்/உங்களை اِنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் عَزِيْزٌமிகைத்தவன் حَكِيْمٌ‏ஞானவான்
2:220. (மேல்கூறிய இரண்டும்) இவ்வுலகிலும், மறுமையிலும் (என்ன பலன்களைத் தரும் என்பதைப் பற்றி நீங்கள் தெளிவு பெறுவதற்காக தன் வசனங்களை அவ்வாறு விளக்குகிறான்.) “அநாதைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;” நீர் கூறுவீராக: “அவர்களுடைய காரியங்களைச் சீராக்கி வைத்தல் மிகவும் நல்லது; நீங்கள் அவர்களுடன் கலந்து வசிக்க நேரிட்டால் அவர்கள் உங்கள் சகோதரர்களேயாவார்கள்; இன்னும் அல்லாஹ் குழப்பம் உண்டாக்குபவனைச் சரி செய்பவனின்றும் பிரித்தறிகிறான்; அல்லாஹ் நாடியிருந்தால் உங்களைக் கஷ்டத்திற்குள்ளாக்கியிருப்பான்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.”
2:221
2:221 وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰى يُؤْمِنَّ‌ؕ وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْ‌ۚ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِيْنَ حَتّٰى يُؤْمِنُوْا ‌ؕ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْؕ اُولٰٓٮِٕكَ يَدْعُوْنَ اِلَى النَّارِ  ۖۚ وَاللّٰهُ يَدْعُوْٓا اِلَى الْجَـنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖ‌ۚ وَيُبَيِّنُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ 
وَلَا تَنْكِحُواமணக்காதீர்கள் الْمُشْرِكٰتِஇணைவைக்கும் பெண்களை حَتّٰىவரை يُؤْمِنَّ‌ؕஅவர்கள் நம்பிக்கை கொள்வார்கள் وَلَاَمَةٌதிட்டமாக ஓர் அடிமைப் பெண் مُّؤْمِنَةٌ(பெண்) நம்பிக்கையாளர் خَيْرٌசிறந்தவள் مِّنْவிட مُّشْرِكَةٍஇணைவைப்பவள் وَّلَوْ اَعْجَبَتْكُمْ‌ۚஅவள் உங்களைக் கவர்ந்தாலும் சரியே! وَلَا تُنْكِحُواஇன்னும் மணமுடித்துக் கொடுக்காதீர்கள் الْمُشْرِكِيْنَஇணை வைப்பவர்களுக்கு حَتّٰى يُؤْمِنُوْا ‌ؕஅவர்கள் நம்பிக்கை கொள்கிறவரை وَلَعَبْدٌதிட்டமாக ஓர்அடிமை مُّؤْمِنٌநம்பிக்கையாளர் خَيْرٌசிறந்தவர் مِّنْவிட مُّشْرِكٍஇணைவைப்பவன் وَّلَوْ اَعْجَبَكُمْؕஅவன் கவர்ந்தாலும் சரியே / உங்களை اُولٰٓٮِٕكَஅவர்கள் يَدْعُوْنَஅழைக்கிறார்கள் اِلَى النَّارِ  ۖۚநரகத்திற்கு وَاللّٰهُஇன்னும் அல்லாஹ் يَدْعُوْٓاஅழைக்கிறான் اِلَى الْجَـنَّةِசொர்க்கத்திற்கு وَالْمَغْفِرَةِஇன்னும் மன்னிப்பு بِاِذْنِهٖ‌ۚஅவனின் கட்டளைக் கொண்டு وَيُبَيِّنُஇன்னும் விவரிக்கிறான் اٰيٰتِهٖதன் வசனங்களை لِلنَّاسِமக்களுக்கு لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ ‏அவர்கள் உபதேசம் பெறுவதற்காக
2:221. (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.
2:222
2:222 وَ يَسْــٴَــلُوْنَكَ عَنِ الْمَحِيْضِ‌ۙ قُلْ هُوَ اَذًى فَاعْتَزِلُوْا النِّسَآءَ فِى الْمَحِيْضِ‌ۙ وَلَا تَقْرَبُوْهُنَّ حَتّٰى يَطْهُرْنَ‌‌ۚ فَاِذَا تَطَهَّرْنَ فَاْتُوْهُنَّ مِنْ حَيْثُ اَمَرَكُمُ اللّٰهُ‌ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ التَّوَّابِيْنَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِيْنَ‏
وَ یَسْـَٔلُوْنَكَஇன்னும் உம்மிடம் கேட்கிறார்கள் عَنِ الْمَحِيْضِ‌ۙமாதவிடாய் பற்றி قُلْகூறுவீராக هُوَஅது اَذًىஓர் இடையூறு فَاعْتَزِلُوْاஎனவே விலகிவிடுங்கள் النِّسَآءَபெண்களைவிட்டு فِى الْمَحِيْضِ‌ۙமாதவிடாயில் وَلَا تَقْرَبُوْهُنَّஇன்னும் அவர்களுடன் உறவுகொள்ளாதீர்கள் حَتّٰى يَطْهُرْنَ‌ۚஅவர்கள் தூய்மையாகும் வரை فَاِذَا تَطَهَّرْنَஅவர்கள் முழுமையாக சுத்தமாகிவிட்டால் فَاْتُوْهُنَّஅவர்களிடம் வாருங்கள் مِنْ حَيْثُமுறைப்படி اَمَرَكُمُஉங்களை ஏவினான் اللّٰهُ‌ؕஅல்லாஹ் اِنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் يُحِبُّநேசிக்கிறான் التَّوَّابِيْنَபாவத்திலிருந்து மீளுபவர்களை وَيُحِبُّஇன்னும் நேசிக்கிறான் الْمُتَطَهِّرِيْنَ‏பரிசுத்தமானவர்களை
2:222. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.”
2:223
2:223 نِسَآؤُكُمْ حَرْثٌ لَّـكُمْ فَاْتُوْا حَرْثَكُمْ اَنّٰى شِئْتُمْ‌  وَقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ‌ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّکُمْ مُّلٰقُوْهُ ‌ؕ وَ بَشِّرِ الْمُؤْمِنِيْنَ‏
نِسَآؤُكُمْஉங்கள் மனைவிகள் حَرْثٌவிளை நிலங்கள் لَّـكُمْஉங்களுக்கு فَاْتُوْاஆகவே வாருங்கள் حَرْثَكُمْஉங்கள் விளை நிலங்களுக்கு اَنّٰىஎவ்வாறு شِئْتُمْ‌ நாடினீர்கள் وَقَدِّمُوْاஇன்னும் முற்படுத்துங்கள் لِاَنْفُسِكُمْ‌ؕஉங்களுக்காக وَاتَّقُواஇன்னும் அஞ்சுங்கள் اللّٰهَஅல்லாஹ்வை وَاعْلَمُوْٓاஇன்னும் அறியுங்கள் اَنَّکُمْநிச்சயமாக நீங்கள் مُّلٰقُوْهُ ؕஅவனைச் சந்திக்கக் கூடியவர்கள் وَ بَشِّرِஇன்னும் நற்செய்தி கூறுவீராக الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களுக்கு
2:223. உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்; உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!
2:224
2:224 وَلَا تَجْعَلُوا اللّٰهَ عُرْضَةً لِّاَيْمَانِکُمْ اَنْ تَبَرُّوْا وَتَتَّقُوْا وَتُصْلِحُوْا بَيْنَ النَّاسِ‌ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏
وَلَا تَجْعَلُواஆக்காதீர்கள் اللّٰهَஅல்லாஹ்வை عُرْضَةًவலுவாக لِّاَيْمَانِکُمْஉங்கள் சத்தியங்களுக்கு اَنْ تَبَرُّوْاநீங்கள் நன்மைசெய்ய மாட்டீர்கள் وَتَتَّقُوْاஇன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சமாட்டீர்கள் وَتُصْلِحُوْاஇன்னும் நீங்கள் சீர்திருத்தம் செய்ய மாட்டீர்கள் بَيْنَ النَّاسِ‌ؕமக்களுக்கு மத்தியில் وَاللّٰهُஅல்லாஹ் سَمِيْعٌசெவியுறுபவன் عَلِيْمٌ‏மிக அறிபவன்
2:224. இன்னும், நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்வதனால், நீங்கள் நற்கருமங்கள் செய்தல், இறைபக்தியுடன் நடத்தல், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைத்தல் போன்றவற்றில் அவனை ஒரு தடையாகச் செய்துவிடாதீர்கள்; அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
2:225
2:225 لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِىْٓ اَيْمَانِكُمْ وَلٰـكِنْ يُّؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوْبُكُمْ‌ؕ وَاللّٰهُ غَفُوْرٌ حَلِيْمٌ‏
لَاமாட்டான் يُؤَاخِذُكُمُஉங்களை தண்டிக்க اللّٰهُஅல்லாஹ் بِاللَّغْوِவீணானவற்றிற்காக فِىْٓ اَيْمَانِكُمْஉங்கள் சத்தியங்களில் وَلٰـكِنْஎனினும் يُّؤَاخِذُكُمْதண்டிப்பான்/உங்களை بِمَاஎதற்காக كَسَبَتْசெய்தவற்றிற்காக قُلُوْبُكُمْ‌ؕஉங்கள் உள்ளங்கள் وَاللّٰهُ غَفُوْرٌஅல்லாஹ் மகா மன்னிப்பாளன் حَلِيْمٌ‏பெரும் சகிப்பாளன்
2:225. (யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; ஆனால் உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப் பற்றி உங்களைக் குற்றம் பிடிப்பான்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்; மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
2:226
2:226 لِّـلَّذِيْنَ يُؤْلُوْنَ مِنْ نِّسَآٮِٕهِمْ تَرَبُّصُ اَرْبَعَةِ اَشْهُرٍ‌‌ۚ فَاِنْ فَآءُوْ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
لِّـلَّذِيْنَஎவர்களுக்கு يُؤْلُوْنَஈலா செய்கிறார்கள் مِنْ نِّسَآٮِٕهِمْதங்கள் மனைவிகளிடம் تَرَبُّصُஎதிர்பார்ப்பது اَرْبَعَةِநான்கு اَشْهُرٍ‌ۚமாதங்கள் فَاِنْ فَآءُوْஅவர்கள் மீண்டுவிட்டால் فَاِنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் غَفُوْرٌமகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
2:226. தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது; எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
2:227
2:227 وَاِنْ عَزَمُوا الطَّلَاقَ فَاِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ‏
وَاِنْ عَزَمُواஅவர்கள் உறுதிப்படுத்தினால் الطَّلَاقَவிவாகரத்தை فَاِنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் سَمِيْعٌசெவியுறுபவன் عَلِيْمٌ‏மிக அறிபவன்
2:227. ஆனால், அவர்கள் (தலாக்) விவாகவிலக்கு செய்து கொள்ள உறுதி கொண்டார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
2:228
2:228 وَالْمُطَلَّقٰتُ يَتَرَ بَّصْنَ بِاَنْفُسِهِنَّ ثَلٰثَةَ قُرُوْٓءٍ ‌ؕ وَلَا يَحِلُّ لَهُنَّ اَنْ يَّكْتُمْنَ مَا خَلَقَ اللّٰهُ فِىْٓ اَرْحَامِهِنَّ اِنْ كُنَّ يُؤْمِنَّ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ وَبُعُوْلَتُهُنَّ اَحَقُّ بِرَدِّهِنَّ فِىْ ذٰ لِكَ اِنْ اَرَادُوْٓا اِصْلَاحًا ‌ؕ وَلَهُنَّ مِثْلُ الَّذِىْ عَلَيْهِنَّ بِالْمَعْرُوْفِ‌ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ ‌ ؕ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ
وَالْمُطَلَّقٰتُவிவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் يَتَرَ بَّصْنَஅவர்கள் எதிர்பார்ப்பார்கள் بِاَنْفُسِهِنَّதங்களுக்கு ثَلٰثَةَமூன்று قُرُوْٓءٍ ؕமாதவிடாய்களை وَلَا يَحِلُّஇன்னும் ஆகுமானதில்லை لَهُنَّஅவர்களுக்கு اَنْ يَّكْتُمْنَஅவர்கள் மறைப்பது مَاஎது خَلَقَபடைத்தான் اللّٰهُஅல்லாஹ் فِىْٓ اَرْحَامِهِنَّஅவர்களுடைய கர்ப்பப்பைகளில் اِنْ كُنَّஅவர்கள் இருந்தால் يُؤْمِنَّநம்பிக்கை கொள்கிறார்கள் بِاللّٰهِஅல்லாஹ்வை وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕஇன்னும் இறுதி நாள் وَبُعُوْلَتُهُنَّஇன்னும் அவர்களின் கணவர்கள் اَحَقُّமிக உரிமை உடையவர்(கள்) بِرَدِّهِنَّஅவர்களை மீட்டிக் கொள்வதற்கு فِىْ ذٰ لِكَஅதில் اِنْ اَرَادُوْٓاஅவர்கள் விரும்பினால் اِصْلَاحًا ؕஇணக்கத்தை وَلَهُنَّஇன்னும் அவர்களுக்கு مِثْلُபோன்றே الَّذِىْஎது عَلَيْهِنَّஅவர்கள் மீது بِالْمَعْرُوْفِ‌நல்ல முறையில் وَلِلرِّجَالِஇன்னும் ஆண்களுக்கு عَلَيْهِنَّஅவர்கள் மீது دَرَجَةٌ  ؕஓர் உயர்வு وَاللّٰهُஅல்லாஹ் عَزِيْزٌமிகைத்தவன் حَكِيْمٌ‏ஞானவான்
2:228. தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு, கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு; மேலும் அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான்.
2:229
2:229 اَلطَّلَاقُ مَرَّتٰنِ‌ فَاِمْسَاكٌ ۢ بِمَعْرُوْفٍ اَوْ تَسْرِيْحٌ ۢ بِاِحْسَانٍ‌ ؕوَلَا يَحِلُّ لَـکُمْ اَنْ تَاْخُذُوْا مِمَّآ اٰتَيْتُمُوْهُنَّ شَيْئًا اِلَّاۤ اَنْ يَّخَافَآ اَ لَّا يُقِيْمَا حُدُوْدَ اللّٰهِ‌ؕ فَاِنْ خِفْتُمْ اَ لَّا يُقِيْمَا حُدُوْدَ اللّٰهِۙ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيْمَا افْتَدَتْ بِهٖؕ‌ تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَعْتَدُوْهَا ‌ۚ‌ وَمَنْ يَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏
اَلطَّلَاقُவிவாகரத்து مَرَّتٰنِ‌இருமுறை فَاِمْسَاكٌ ۢதடுத்து வைத்தல் بِمَعْرُوْفٍநல்ல முறையில் اَوْஅல்லது تَسْرِيْحٌ ۢவிட்டுவிடுதல் بِاِحْسَانٍ‌ ؕஅழகிய முறையில் وَلَا يَحِلُّஆகுமானதல்ல لَـکُمْஉங்களுக்கு اَنْ تَاْخُذُوْاநீங்கள் எடுத்துக்கொள்வது مِمَّآஎவற்றிலிருந்து اٰتَيْتُمُوْهُنَّஅவர்களுக்கு கொடுத்தீர்கள் شَيْئًاஎதையும் اِلَّاۤதவிர اَنْ يَّخَافَآஇருவரும் அஞ்சுவது اَ لَّا يُقِيْمَا(இருவர்) நிலைநிறுத்த மாட்டார்கள் என حُدُوْدَசட்டங்களை اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின் فَاِنْ خِفْتُمْநீங்கள் பயந்தால் اَ لَّا يُقِيْمَاஇருவரும் நிலைநிறுத்த மாட்டார்கள் حُدُوْدَசட்டங்களை اللّٰهِۙஅல்லாஹ்வின் فَلَا جُنَاحَகுற்றமே இல்லை عَلَيْهِمَاஅவ்விருவர் மீது فِيْمَاஎதில் افْتَدَتْவிடுவித்தாள் بِهٖؕ‌அதன் மூலம் تِلْكَஇவை حُدُوْدُசட்டங்கள் اللّٰهِஅல்லாஹ்வின் فَلَا تَعْتَدُوْهَا ‌ۚ‌எனவே இவற்றை மீறாதீர்கள் وَمَنْஇன்னும் எவர்(கள்) يَّتَعَدَّமீறுகிறார்(கள்) حُدُوْدَசட்டங்களை اللّٰهِஅல்லாஹ்வின் فَاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான் الظّٰلِمُوْنَ‏அநியாயக்காரர்கள்
2:229. (இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் - பின் (தவணைக்குள் முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;; அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர, நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை; இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்; ஆகையால் அவற்றை மீறாதீர்கள்; எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.
2:230
2:230 فَاِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهٗ مِنْۢ بَعْدُ حَتّٰى تَنْكِحَ زَوْجًا غَيْرَهٗ ‌ؕ فَاِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ اَنْ يَّتَرَاجَعَآ اِنْ ظَنَّآ اَنْ يُّقِيْمَا حُدُوْدَ اللّٰهِ‌ؕ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَّعْلَمُوْنَ‏
فَاِنْ طَلَّقَهَاஅடுத்து அவளை அவன் விவாகரத்து செய்தால் فَلَا تَحِلُّஆகுமாக மாட்டாள் لَهٗஅவனுக்கு مِنْۢ بَعْدُ(அதன்) பிறகு حَتّٰى تَنْكِحَஅவள் மணம் புரியும் வரை زَوْجًاஒரு கணவனை غَيْرَهٗ ؕஅவனல்லாதவன் فَاِنْ طَلَّقَهَاஅவன் அவளை விவாகரத்து செய்தால் فَلَا جُنَاحَகுற்றமே இல்லை عَلَيْهِمَآஅவ்விருவரின் மீது اَنْ يَّتَرَاجَعَآஅவ்விருவரும் மீளுவது اِنْ ظَنَّآஅவ்விருவரும் எண்ணினால் اَنْ يُّقِيْمَاஇருவரும் நிலை நாட்டுவார்கள் حُدُوْدَசட்டங்களை اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின் وَتِلْكَஇன்னும் இவை حُدُوْدُசட்டங்கள் اللّٰهِஅல்லாஹ்வின் يُبَيِّنُهَاஅவற்றைவிவரிக்கிறான் لِقَوْمٍமக்களுக்கு يَّعْلَمُوْنَ‏அறிவார்கள்
2:230. மீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது; ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தலாக் சொன்னால், அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.
2:231
2:231 وَاِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَبَلَغْنَ اَجَلَهُنَّ فَاَمْسِكُوْهُنَّ بِمَعْرُوْفٍ اَوْ سَرِّحُوْهُنَّ بِمَعْرُوْفٍ‌ وَلَا تُمْسِكُوْهُنَّ ضِرَارًا لِّتَعْتَدُوْا‌ ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ ‌ؕ وَلَا تَتَّخِذُوْٓا اٰيٰتِ اللّٰهِ هُزُوًا‌ وَّاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ وَمَآ اَنْزَلَ عَلَيْكُمْ مِّنَ الْكِتٰبِ وَالْحِكْمَةِ يَعِظُكُمْ بِهٖ‌ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
وَاِذَا طَلَّقْتُمُநீங்கள் விவாகரத்து செய்தால் النِّسَآءَபெண்களை فَبَلَغْنَஅவர்கள் அடைந்தார்கள் اَجَلَهُنَّதங்கள் தவணையை فَاَمْسِكُوْهُنَّஅவர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள் بِمَعْرُوْفٍநல்ல முறையில் اَوْஅல்லது سَرِّحُوْهُنَّஅவர்களை விட்டுவிடுங்கள் بِمَعْرُوْفٍ‌நல்ல முறையில் وَلَا تُمْسِكُوْهُنَّஅவர்களைத் தடுக்காதீர்கள் ضِرَارًاதீங்கிழைத்தல் لِّتَعْتَدُوْا‌ ۚநீங்கள் அநியாயம் செய்வதற்காக وَمَنْயார் يَّفْعَلْசெய்வார் ذٰ لِكَஅதை فَقَدْதிட்டமாக ظَلَمَஅநீதி இழைத்தார் نَفْسَهٗ ؕதனக்கே وَلَا تَتَّخِذُوْٓاஇன்னும் எடுத்துக் கொள்ளாதீர்கள் اٰيٰتِவசனங்களை اللّٰهِஅல்லாஹ்வின் هُزُوًا‌கேலியாக وَّاذْكُرُوْاஇன்னும் நினைவு கூருங்கள் نِعْمَتَஅருளை اللّٰهِஅல்லாஹ்வின் عَلَيْكُمْஉங்கள் மீது وَمَآஇன்னும் எது اَنْزَلَஇறக்கினான் عَلَيْكُمْஉங்கள் மீது مِّنَஇருந்து الْكِتٰبِவேதம் وَالْحِكْمَةِஇன்னும் ஞானம் يَعِظُكُمْஉங்களுக்கு உபதேசிக்கிறான் بِهٖ‌ؕஇதன் மூலம் وَاتَّقُواஇன்னும் அஞ்சுங்கள் اللّٰهَஅல்லாஹ்வை وَاعْلَمُوْٓاஇன்னும் அறியுங்கள் اَنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் بِكُلِّஎல்லாவற்றையும் شَىْءٍபொருள் عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
2:231. (மீளக்கூடிய) தலாக் கூறித் தவணை-இத்தா-முடிவதற்குள் முறைப்படி அவர்களை(உங்களுடன்) நிறுத்திக் கொள்ளுங்கள்; அல்லது (இத்தாவின்) தவணை முடிந்ததும் முறைப்படி அவர்களை விடுவித்து விடுங்கள்; ஆனால் அவர்களை உங்களுடன் வைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்; அவர்களிடம் வரம்பு மீறி நடவாதீர்கள்; இவ்வாறு ஒருவர் நடந்து கொள்வாரானால், அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்; எனவே, அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக ஆக்கிவிடாதீர்கள்; அவன் உங்களுக்கு அளித்த அருள் கொடைகளையும், உங்கள் மீது இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தித்துப் பாருங்கள். இவற்றைக் கொண்டு அவன் உங்களுக்கு நற்போதனை செய்கிறான்; அல்லாஹ்வை அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
2:232
2:232 وَاِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَبَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوْهُنَّ اَنْ يَّنْكِحْنَ اَزْوَاجَهُنَّ اِذَا تَرَاضَوْا بَيْنَهُمْ بِالْمَعْرُوْفِ‌ؕ ذٰ لِكَ يُوْعَظُ بِهٖ مَنْ كَانَ مِنْكُمْ يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِؕ ذٰ لِكُمْ اَزْکٰى لَـكُمْ وَاَطْهَرُؕ‌ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏
وَاِذَا طَلَّقْتُمُநீங்கள் விவாகரத்து செய்தால் النِّسَآءَபெண்களை فَبَلَغْنَஅடைந்தார்கள் اَجَلَهُنَّதங்கள் தவணையை فَلَا تَعْضُلُوْهُنَّஅவர்களைத் தடுக்காதீர்கள் اَنْ يَّنْكِحْنَஅவர்கள் மணப்பதை اَزْوَاجَهُنَّதங்கள் கணவர்களை اِذَا تَرَاضَوْاஅவர்கள் திருப்தியடைந்தால் بَيْنَهُمْதங்களுக்கு மத்தியில் بِالْمَعْرُوْفِ‌ؕநல்ல முறையில் ذٰ لِكَஇது يُوْعَظُஉபதேசிக்கப்படுகிறார் بِهٖஇதன் மூலம் مَنْஎவர் كَانَஆகிவிட்டார் مِنْكُمْஉங்களிலிருந்து يُؤْمِنُநம்பிக்கைகொள்கிறார் بِاللّٰهِஅல்லாஹ்வை وَالْيَوْمِ الْاٰخِرِؕஇன்னும் இறுதி நாள் ذٰ لِكُمْஇதுதான் اَزْکٰىமிகத் தூய்மையானது لَـكُمْஉங்களுக்கு وَاَطْهَرُؕ‌இன்னும் மிகப்பரிசுத்தமானது وَاللّٰهُஅல்லாஹ் يَعْلَمُஅறிவான் وَاَنْـتُمْநீங்கள் لَا تَعْلَمُوْنَ‏அறியமாட்டீர்கள்
2:232. இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள்; உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது; இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.
2:233
2:233 وَالْوَالِدٰتُ يُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ‌ لِمَنْ اَرَادَ اَنْ يُّتِمَّ الرَّضَاعَةَ ‌ ؕ وَعَلَى الْمَوْلُوْدِ لَهٗ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوْفِ‌ؕ لَا تُكَلَّفُ نَفْسٌ اِلَّا وُسْعَهَا ۚ لَا تُضَآرَّ وَالِدَةٌ ۢ بِوَلَدِهَا وَلَا مَوْلُوْدٌ لَّهٗ بِوَلَدِهٖ وَعَلَى الْوَارِثِ مِثْلُ ذٰ لِكَ ۚ فَاِنْ اَرَادَا فِصَالًا عَنْ تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا ‌ؕ وَاِنْ اَرَدْتُّمْ اَنْ تَسْتَرْضِعُوْٓا اَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ اِذَا سَلَّمْتُمْ مَّآ اٰتَيْتُمْ بِالْمَعْرُوْفِ‌ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
وَالْوَالِدٰتُதாய்மார்கள் يُرْضِعْنَபாலூட்டுவார்கள் اَوْلَادَهُنَّதங்கள் குழந்தைகளுக்கு حَوْلَيْنِஈராண்டுகள் كَامِلَيْنِ‌(இரு) முழுமையான لِمَنْயாருக்கு اَرَادَநாடினார் اَنْ يُّتِمَّஅவர் முழுமைப்படுத்துவதை الرَّضَاعَةَ  ؕபாலூட்டுதலை وَعَلَىமீது الْمَوْلُوْدِ لَهٗஎவருக்காக குழந்தை பெற்றெடுக்கப்பட்டதோ அவர் (தந்தை) رِزْقُهُنَّஅவர்களுக்கு உணவளிப்பது وَكِسْوَتُهُنَّஇன்னும் அவர்களுக்கு ஆடை கொடுப்பது بِالْمَعْرُوْفِ‌ؕநல்ல முறையில் لَا تُكَلَّفُநிர்ப்பந்திக்கப்படாது نَفْسٌஓர் ஆத்மா اِلَّاதவிர وُسْعَهَا ۚஅதன் வசதி لَا تُضَآرَّதுன்புறுத்தப்பட மாட்டாள் وَالِدَةٌ ۢஒரு தாய் بِوَلَدِهَاதன் குழந்தைக்காக وَلَا مَوْلُوْدٌ لَّهٗஇன்னும் இல்லை/ தந்தை بِوَلَدِهٖஅவருடைய குழந்தை மூலம் وَعَلَى الْوَارِثِவாரிசுதாரர் மீது مِثْلُபோன்றே ذٰ لِكَ ۚஅது فَاِنْ اَرَادَاஅவ்விருவரும் நாடினால் فِصَالًاபால்குடி நிறுத்த عَنْ تَرَاضٍபரஸ்பர திருப்தியுடன் مِّنْهُمَاஅவ்விருவரின்/ (தங்கள்) وَتَشَاوُرٍஇன்னும் பரஸ்பர ஆலோசனை فَلَا جُنَاحَகுற்றமே இல்லை عَلَيْهِمَا ؕஅவ்விருவர் மீது وَاِنْ اَرَدْتُّمْநீங்கள் விரும்பினால் اَنْ تَسْتَرْضِعُوْٓاநீங்கள் பாலூட்டத் தேடுவது اَوْلَادَكُمْஉங்கள் குழந்தைகளுக்கு فَلَا جُنَاحَகுற்றமே இல்லை عَلَيْكُمْஉங்கள் மீது اِذَا سَلَّمْتُمْநீங்கள் ஒப்படைத்தால் مَّآஎதை اٰتَيْتُمْநீங்கள் கொடுத்தீர்கள் بِالْمَعْرُوْفِ‌ؕநல்ல முறையில் وَاتَّقُواஇன்னும் அஞ்சுங்கள் اللّٰهَஅல்லாஹ்வை وَاعْلَمُوْٓاஇன்னும் அறியுங்கள் اَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ் بِمَاஎதை تَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்கள் بَصِيْرٌ‏உற்று நோக்குபவன்
2:233. (தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது; (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது; தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை; ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
2:234
2:234 وَالَّذِيْنَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُوْنَ اَزْوَاجًا يَّتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّعَشْرًا ‌‌ۚ فَاِذَا بَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا فَعَلْنَ فِىْٓ اَنْفُسِهِنَّ بِالْمَعْرُوْفِؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏
وَالَّذِيْنَஎவர்கள் يُتَوَفَّوْنَஇறந்து விடுகிறார்கள் مِنْكُمْஉங்களில் وَيَذَرُوْنَஇன்னும் விட்டுவிடுகிறார்கள் اَزْوَاجًاமனைவிகளை يَّتَرَبَّصْنَஎதிர்பார்ப்பார்கள் بِاَنْفُسِهِنَّதங்களுக்கு اَرْبَعَةَநான்கு اَشْهُرٍமாதங்கள் وَّعَشْرًا ۚஇன்னும் பத்து (நாள்கள்) فَاِذَا بَلَغْنَஅவர்கள் அடைந்து விட்டால் اَجَلَهُنَّதங்கள் தவணையை فَلَا جُنَاحَகுற்றமே இல்லை عَلَيْكُمْஉங்கள் மீது فِيْمَاஎதில் فَعَلْنَசெய்கிறார்கள் فِىْٓ اَنْفُسِهِنَّதங்களுக்கு بِالْمَعْرُوْفِؕநல்ல முறையில் وَاللّٰهُஅல்லாஹ் بِمَاஎதை تَعْمَلُوْنَசெய்கிறீர்கள் خَبِيْرٌ‏ஆழ்ந்தறிபவன்
2:234. உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாள் பொறுத்திருக்க வேண்டும்; (இந்த இத்தத்)தவணை பூர்த்தியானதும், அவர்கள் (தங்கள் நாட்டத்துக்கு ஒப்ப) தங்கள் காரியத்தில் ஒழுங்கான முறையில் எதுவும் செய்துகொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை; அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
2:235
2:235 وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا عَرَّضْتُمْ بِهٖ مِنْ خِطْبَةِ النِّسَآءِ اَوْ اَکْنَنْتُمْ فِىْٓ اَنْفُسِكُمْ‌ؕ عَلِمَ اللّٰهُ اَنَّكُمْ سَتَذْكُرُوْنَهُنَّ وَلٰـكِنْ لَّا تُوَاعِدُوْهُنَّ سِرًّا اِلَّاۤ اَنْ تَقُوْلُوْا قَوْلًا مَّعْرُوْفًا ‌ؕ وَلَا تَعْزِمُوْا عُقْدَةَ النِّکَاحِ حَتّٰى يَبْلُغَ الْكِتٰبُ اَجَلَهٗ ‌ؕ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِىْٓ اَنْفُسِكُمْ فَاحْذَرُوْهُ ‌ؕ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِيْمٌ
وَلَا جُنَاحَஇன்னும் குற்றமில்லை عَلَيْكُمْஉங்கள் மீது فِيْمَاஎதில் عَرَّضْتُمْசூசகமாக எடுத்துக் கூறினீர்கள் بِهٖஅதை مِنْஇருந்து خِطْبَةِ النِّسَآءِபெண் பேசுவது اَوْஅல்லது اَکْنَنْتُمْமறைத்தீர்கள் فِىْٓ اَنْفُسِكُمْ‌ؕஉங்கள் உள்ளங்களில் عَلِمَஅறிவான் اللّٰهُஅல்லாஹ் اَنَّكُمْநிச்சயமாக நீங்கள் سَتَذْكُرُوْنَهُنَّஅவர்களை நினைப்பீர்கள் وَلٰـكِنْஎனினும் لَّا تُوَاعِدُوْهُنَّஅவர்களுக்கு வாக்குறுதி அளிக்காதீர்கள் سِرًّاஇரகசியமாக اِلَّاۤதவிர اَنْ تَقُوْلُوْاநீங்கள் கூறுவது قَوْلًاகூற்று مَّعْرُوْفًا ؕநல்ல وَلَا تَعْزِمُوْاஉறுதி செய்யாதீர்கள் عُقْدَةَஒப்பந்தத்தை النِّکَاحِதிருமணம் حَتّٰى يَبْلُغَஅடையும் வரை الْكِتٰبُவிதிக்கப்பட்ட சட்டம் اَجَلَهٗ ؕஅதனுடைய தவணை وَاعْلَمُوْٓاஇன்னும் அறியுங்கள் اَنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் يَعْلَمُஅறிவான் مَاஎவற்றை فِىْٓ اَنْفُسِكُمْஉங்கள் உள்ளங்களில் فَاحْذَرُوْهُ ؕஎனவே, அவனைப் பயப்படுங்கள் وَاعْلَمُوْٓاஇன்னும் அறியுங்கள் اَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ் غَفُوْرٌமகா மன்னிப்பாளன் حَلِيْمٌ‏பெரும் சகிப்பாளன்
2:235. (இவ்வாறு இத்தா இருக்கும்) பெண்ணுடன் திருமணம் செய்யக் கருதி (அது பற்றிக்) குறிப்பாக அறிவிப்பதிலோ, அல்லது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை நீங்கள் அவர்களைப்பற்றி எண்ணுகிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான்; ஆனால் இரகசியமாக அவர்களிடம் (திருமணம் பற்றி) வாக்குறுதி செய்து கொள்ளாதீர்கள்; ஆனால் இது பற்றி வழக்கத்திற்கு ஒத்த (மார்க்கத்திற்கு உகந்த) சொல்லை நீங்கள் சொல்லலாம்; இன்னும் (இத்தாவின்) கெடு முடியும் வரை திருமண பந்தத்தைப் பற்றித் தீர்மானித்து விடாதீர்கள்; அல்லாஹ் உங்கள் உள்ளங்களிலுள்ளதை நிச்சயமாக அறிகின்றான் என்பதை நீங்கள் அறிந்து அவனுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பொறுமையாளனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
2:236
2:236 لَا جُنَاحَ عَلَيْكُمْ اِنْ طَلَّقْتُمُ النِّسَآءَ مَا لَمْ تَمَسُّوْهُنَّ اَوْ تَفْرِضُوْا لَهُنَّ فَرِيْضَةً  ۖۚ وَّمَتِّعُوْهُنَّ ‌ۚ عَلَى الْمُوْسِعِ قَدَرُهٗ وَ عَلَى الْمُقْتِرِ قَدَرُهٗ ‌ۚ مَتَاعًا ۢ بِالْمَعْرُوْفِ‌‌ۚ حَقًّا عَلَى الْمُحْسِنِيْنَ‏
لَا جُنَاحَகுற்றமே இல்லை عَلَيْكُمْஉங்கள் மீது اِنْ طَلَّقْتُمُநீங்கள் விவாகரத்து செய்தால் النِّسَآءَபெண்களை مَا لَمْ تَمَسُّوْهُنَّஅவர்களை நீங்கள் தொடாமல் اَوْஅல்லது تَفْرِضُوْاநீங்கள் நிர்ணயிக்காமல் لَهُنَّஅவர்களுக்கு فَرِيْضَةً  ۖۚமஹ்ரை وَّمَتِّعُوْபொருள் கொடுங்கள் هُنَّ ۚஅவர்களுக்கு عَلَىமீது الْمُوْسِعِசெல்வந்தர் قَدَرُهٗஅவருடைய அளவு وَ عَلَىஇன்னும் மீது الْمُقْتِرِஏழை قَدَرُهٗ ۚஅவருடைய அளவு مَتَاعًا ۢபொருள் بِالْمَعْرُوْفِ‌ۚநல்ல முறையில் حَقًّاகடமை عَلَىமீது الْمُحْسِنِيْنَ‏நல்லறம் புரிவோர்
2:236. பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடு(த்து உதவு)ங்கள் - அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும்; இது நல்லோர் மீது கடமையாகும்.
2:237
2:237 وَاِنْ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ تَمَسُّوْهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيْضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ اِلَّاۤ اَنْ يَّعْفُوْنَ اَوْ يَعْفُوَا الَّذِىْ بِيَدِهٖ عُقْدَةُ النِّكَاحِ ‌ؕ وَاَنْ تَعْفُوْٓا اَقْرَبُ لِلتَّقْوٰى‌ؕ وَ لَا تَنْسَوُا الْفَضْلَ بَيْنَكُمْ‌ؕ اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
وَاِنْ طَلَّقْتُمُوْهُنَّஅவர்களை நீங்கள் விவாகரத்து செய்தால் مِنْ قَبْلِமுன்னர் اَنْ تَمَسُّوْநீங்கள் தொடுவதற்கு هُنَّஅவர்களை وَقَدْ فَرَضْتُمْநிர்ணயித்துவிட்டீர்கள் لَهُنَّஅவர்களுக்கு فَرِيْضَةًமஹ்ரை فَنِصْفُஆகவே, பாதி مَا فَرَضْتُمْநீங்கள் நிர்ணயித்ததில் اِلَّاۤதவிர اَنْ يَّعْفُوْنَஅவர்கள் மன்னிப்பது اَوْஅல்லது يَعْفُوَاமன்னிப்பான் الَّذِىْஎவன் بِيَدِهٖஅவனுடைய கையில் عُقْدَةُஒப்பந்தம் النِّكَاحِ ؕதிருமணம் وَاَنْ تَعْفُوْٓاநீங்கள் மன்னிப்பது اَقْرَبُமிக நெருக்கமானது لِلتَّقْوٰى‌ؕஅல்லாஹ்வை அஞ்சுவதற்கு وَ لَا تَنْسَوُاமறக்காதீர்கள் الْفَضْلَசிறப்பு உபகாரம் செய்வதை بَيْنَكُمْ‌ؕஉங்களுக்கு மத்தியில் اِنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் بِمَا تَعْمَلُوْنَநீங்கள் செய்வதை بَصِيْرٌ‏உற்று நோக்குபவன்
2:237. ஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன் - ஆனால் மஹர் நிச்சயித்த பின் நீங்கள் தலாக் சொல்வீர்களாயின், நீங்கள் குறிப்பட்டிருந்த மஹர் தொகையில் பாதி(அவர்களுக்கு) உண்டு- அப்பெண்களோ அல்லது எவர் கையில் (அத்)திருமணம் பற்றிய பிடி இருக்கிறதோ அவர்களோ முழுமையும்) மன்னித்து விட்டாலன்றி; - ஆனால், (இவ்விஷயத்தில்) விட்டுக் கொடுப்பது தக்வாவுக்கு (பயபக்திக்கு) மிக்க நெருக்கமானதாகும்; இன்னும், உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உபகாரம் செய்து கொள்வதையும் மறவாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்(த்துக் கூலி கொடு)ப்பவனாக இருக்கின்றான்.
2:238
2:238 حَافِظُوْا عَلَى الصَّلَوٰتِ وَالصَّلٰوةِ الْوُسْطٰى وَقُوْمُوْا لِلّٰهِ قٰنِتِيْنَ‏
حَافِظُوْاபேணுங்கள் عَلَى الصَّلَوٰتِதொழுகைகளை وَالصَّلٰوةِஇன்னும் தொழுகையை الْوُسْطٰىநடு وَقُوْمُوْاஇன்னும் நில்லுங்கள் لِلّٰهِஅல்லாஹ்வுக்கு قٰنِتِيْنَ‏பணிந்தவர்களாக
2:238. தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்.
2:239
2:239 فَاِنْ خِفْتُمْ فَرِجَالًا اَوْ رُكْبَانًا ‌‌ ۚ فَاِذَآ اَمِنْتُمْ فَاذْکُرُوا اللّٰهَ کَمَا عَلَّمَکُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَ‏
فَاِنْ خِفْتُمْநீங்கள் பயந்தால் فَرِجَالًاநடந்தவர்களாக اَوْஅல்லது رُكْبَانًا  ۚவாகனித்தவர்களாக فَاِذَآ اَمِنْتُمْநீங்கள் பாதுகாப்புப் பெற்றால் فَاذْکُرُواநினைவு கூருங்கள் اللّٰهَஅல்லாஹ்வை کَمَا عَلَّمَکُمْஅவன் உங்களுக்கு கற்பிப்பதற்காக مَّا لَمْ تَكُوْنُوْاஎவற்றை/நீங்கள்இல்லை تَعْلَمُوْنَ‏அறிகிறீர்கள்
2:239. ஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்; பின்னர் நீங்கள் அச்சம் தீர்ந்ததும், நீங்கள் அறியாமல் இருந்ததை அவன் உங்களுக்கு அறிவித்ததைப் போன்று, (நிறைவுடன் தொழுது) அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்.
2:240
2:240 وَالَّذِيْنَ يُتَوَفَّوْنَ مِنْکُمْ وَيَذَرُوْنَ اَزْوَاجًا  ۖۚ وَّصِيَّةً لِّاَزْوَاجِهِمْ مَّتَاعًا اِلَى الْحَـوْلِ غَيْرَ اِخْرَاجٍ‌‌ ۚ فَاِنْ خَرَجْنَ فَلَا جُنَاحَ عَلَيْکُمْ فِىْ مَا فَعَلْنَ فِىْٓ اَنْفُسِهِنَّ مِنْ مَّعْرُوْفٍؕ وَاللّٰهُ عَزِيْزٌ حَکِيْمٌ‏
وَالَّذِيْنَஎவர்கள் يُتَوَفَّوْنَமரணிக்கிறார்கள் مِنْکُمْஉங்களிலிருந்து وَيَذَرُوْنَஇன்னும் விட்டுவிடுகிறார்கள் اَزْوَاجًا  ۖۚமனைவிகளை وَّصِيَّةًமரணசாசனம் கூறவும் لِّاَزْوَاجِهِمْதங்கள் மனைவிகளுக்கு مَّتَاعًاபொருள் வழங்குமாறு اِلَى الْحَـوْلِஓராண்டு வரை غَيْرَ اِخْرَاجٍ‌ ۚவெளியேற்றாமல் فَاِنْ خَرَجْنَஅவர்கள் வெளியேறினால் فَلَا جُنَاحَகுற்றமே இல்லை عَلَيْکُمْஉங்கள் மீது فِىْ مَا فَعَلْنَஅவர்கள் செய்வதில் فِىْٓ اَنْفُسِهِنَّஅவர்களுக்கு مِنْ مَّعْرُوْفٍؕநல்லதிலிருந்து وَاللّٰهُஅல்லாஹ் عَزِيْزٌமிகைத்தவன் حَکِيْمٌ‏ஞானவான்
2:240. உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறக்கும் நிலையில் இருப்பார்களானால், தங்கள் மனைவியருக்கு ஓராண்டு வரை (உணவு, உடை போன்ற தேவைகளைக் கொடுத்து) ஆதரித்து, (வீட்டை விட்டு அவர்கள்) வெளியேற்றப்படாதபடி (வாரிசுகளுக்கு) அவர்கள் மரண சாசனம் கூறுதல் வேண்டும்; ஆனால், அப்பெண்கள் தாங்களே வெளியே சென்று முறைப்படி தங்கள் காரியங்களைச் செய்து கொண்டார்களானால், (அதில்) உங்கள் மீது குற்றமில்லை - மேலும் அல்லாஹ் வல்லமையுடையவனும், அறிவாற்றல் உடையோனும் ஆவான்.
2:241
2:241 وَلِلْمُطَلَّقٰتِ مَتَاعٌ ۢ بِالْمَعْرُوْفِ ‌ؕ حَقًّا عَلَى الْمُتَّقِيْنَ‏
وَلِلْمُطَلَّقٰتِவிவாகரத்து செய்யப்பட்டவர்களுக்கு مَتَاعٌ ۢபொருள் بِالْمَعْرُوْفِ ؕநல்ல முறையில் حَقًّاகடமையாகும் عَلَىமீது الْمُتَّقِيْنَ‏அல்லாஹ்வை அஞ்சுபவர்கள்
2:241. மேலும், தலாக் கொடுக்கப்பட்ட பெண்களுக்கு நியாயமான முறையில் சம்ரட்சணை பெறுவதற்குப் பாத்தியமுண்டு (இது) முத்தகீன்(பயபக்தியுடையவர்)கள் மீது கடமையாகும்.
2:242
2:242 كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـکُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ
كَذٰلِكَஇவ்வாறு يُبَيِّنُவிவரிக்கிறான் اللّٰهُஅல்லாஹ் لَـکُمْஉங்களுக்கு اٰيٰتِهٖதன் வசனங்களை لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏நீங்கள் அறிந்து கொள்வதற்காக
2:242. நீங்கள் தெளிவாக உணர்ந்து (அதன்படி நடந்து வருமாறு) அல்லாஹ் உங்களுக்குத் தன்னுடைய வசனங்களை இவ்வாறு விளக்குகிறான்.
2:243
2:243 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ خَرَجُوْا مِنْ دِيَارِهِمْ وَهُمْ اُلُوْفٌ حَذَرَ الْمَوْتِ فَقَالَ لَهُمُ اللّٰهُ مُوْتُوْا ثُمَّ اَحْيَاھُمْ‌ؕ اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَى النَّاسِ وَلٰـكِنَّ اَکْثَرَ النَّاسِ لَا يَشْکُرُوْنَ‏
اَلَمْ تَرَநீர் கவனிக்கவில்லையா? اِلَى الَّذِيْنَஎவர்களை خَرَجُوْاவெளியேறினார்கள் مِنْஇருந்து دِيَارِهِمْஅவர்களுடைய இல்லங்கள் وَهُمْஅவர்களோ اُلُوْفٌபல ஆயிரங்கள் حَذَرَபயத்தால் الْمَوْتِமரணத்தின் فَقَالَஆகவே கூறினான் لَهُمُஅவர்களை நோக்கி اللّٰهُஅல்லாஹ் مُوْتُوْاஇறந்து விடுங்கள் ثُمَّபிறகு اَحْيَاھُمْ‌ؕஅவர்களை உயிர்ப்பித்தான் اِنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் لَذُوْ فَضْلٍஅருளுடையவனே عَلَىமீது النَّاسِமக்கள் وَلٰـكِنَّஎனினும் اَکْثَرَஅதிகமானவர்கள் النَّاسِமக்களில் لَا يَشْکُرُوْنَ‏நன்றி செலுத்தமாட்டார்கள்
2:243. (நபியே!) மரண பயத்தால் தம் வீடுகளைவிட்டும், ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் அவர்களிடம் “இறந்து விடுங்கள்” என்று கூறினான்; மீண்டும் அவர்களை உயிர்ப்பித்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
2:244
2:244 وَقَاتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ‏
وَقَاتِلُوْاபோரிடுங்கள் فِىْ سَبِيْلِபாதையில் اللّٰهِஅல்லாஹ்வுடைய وَاعْلَمُوْٓاஇன்னும் அறியுங்கள் اَنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் سَمِيْعٌநன்கு செவியுறுபவன் عَلِيْمٌ‏மிக அறிபவன்
2:244. (முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவிமடுப்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
2:245
2:245 مَنْ ذَا الَّذِىْ يُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا فَيُضٰعِفَهٗ لَهٗۤ اَضْعَافًا کَثِيْرَةً  ‌ؕ وَاللّٰهُ يَقْبِضُ وَيَبْصُۜطُ وَ اِلَيْهِ تُرْجَعُوْنَ‏
مَنْஎவர் ذَاஅவர் الَّذِىْஎப்படிப்பட்டவர் يُقْرِضُகடன் கொடுப்பார் اللّٰهَஅல்லாஹ்விற்கு قَرْضًاகடன் حَسَنًاஅழகிய فَيُضٰعِفَهٗஅதை பெருக்குவான் لَهٗۤஅவனுக்கு اَضْعَافًاமடங்குகள் کَثِيْرَةً  ؕபல وَاللّٰهُஇன்னும் அல்லாஹ் يَقْبِضُசுருக்கிக் கொள்கிறான் وَيَبْصُۜطُஇன்னும் விசாலமாக கொடுக்கிறான் وَ اِلَيْهِஇன்னும் அவனிடமே تُرْجَعُوْنَ‏மீட்கப்படுவீர்கள்
2:245. (கஷ்டத்திலிருப்போருக்காக) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் - அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான்; (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான்; அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள்.
2:246
2:246 اَلَمْ تَرَ اِلَى الْمَلَاِ مِنْۢ بَنِىْٓ اِسْرَآءِيْلَ مِنْۢ بَعْدِ مُوْسٰى‌ۘ اِذْ قَالُوْا لِنَبِىٍّ لَّهُمُ ابْعَثْ لَنَا مَلِکًا نُّقَاتِلْ فِىْ سَبِيْلِ اللّٰهِ‌ؕ قَالَ هَلْ عَسَيْتُمْ اِنْ کُتِبَ عَلَيْکُمُ الْقِتَالُ اَلَّا تُقَاتِلُوْا ؕ قَالُوْا وَمَا لَنَآ اَلَّا نُقَاتِلَ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَقَدْ اُخْرِجْنَا مِنْ دِيَارِنَا وَاَبْنَآٮِٕنَا ‌ؕ فَلَمَّا کُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ تَوَلَّوْا اِلَّا قَلِيْلًا مِّنْهُمْ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِالظّٰلِمِيْنَ‏
اَلَمْ تَرَநீர் கவனிக்கவில்லையா? اِلَى الْمَلَاِதலைவர்களை مِنْۢசேர்ந்த بَنِىْٓ اِسْرَآءِيْلَஇஸ்ராயீலின் சந்ததிகள் مِنْۢ بَعْدِ مُوْسٰى‌ۘமூஸாவிற்குப் பின்னர் اِذْ قَالُوْاஅவர்கள் கூறியபோது لِنَبِىٍّநபிக்கு لَّهُمُதங்களுக்குரிய ابْعَثْஅனுப்புவீராக لَنَاஎங்களுக்கு مَلِکًاஓர் அரசரை نُّقَاتِلْபோர் புரிவோம் فِىْ سَبِيْلِபாதையில் اللّٰهِ‌ؕஅல்லாஹ்வுடைய قَالَகூறினார் هَلْ عَسَيْتُمْநீங்கள் இருக்கக் கூடுமா? اِنْ کُتِبَகடமையாக்கப்பட்டால் عَلَيْکُمُஉங்கள் மீது الْقِتَالُபோர் اَلَّا تُقَاتِلُوْا ؕநீங்கள் போர் புரியாமல் قَالُوْاகூறினார்கள் وَمَا لَنَآஎங்களுக்கு என்ன اَلَّا نُقَاتِلَநாங்கள் போர் புரியாமல் இருக்க فِىْ سَبِيْلِபாதையில் اللّٰهِஅல்லாஹ்வுடைய وَقَدْதிட்டமாக اُخْرِجْنَاவெளியேற்றப் பட்டோம் مِنْஇருந்து دِيَارِنَاஎங்கள் இல்லங்கள் وَاَبْنَآٮِٕنَا ؕஇன்னும் எங்கள் சந்ததிகள் فَلَمَّا کُتِبَகடமையாக்கப்பட்ட போது عَلَيْهِمُஅவர்கள் மீது الْقِتَالُபோர் تَوَلَّوْاவிலகினார்கள் اِلَّاதவிர قَلِيْلًاகுறைவானவர்கள் مِّنْهُمْ‌ؕஅவர்களில் وَاللّٰهُஇன்னும் அல்லாஹ் عَلِيْمٌۢநன்கறிந்தவன் بِالظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களை
2:246. (நபியே!) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம்: “நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்ப்படுத்துங்கள்” என்று கூறிய பொழுது அவர், “போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?” என்று கேட்டார்; அதற்கவர்கள்: “எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?” எனக் கூறினார்கள்; எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.
2:247
2:247 وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ اِنَّ اللّٰهَ قَدْ بَعَثَ لَـکُمْ طَالُوْتَ مَلِكًا ‌ؕ قَالُوْٓا اَنّٰى يَكُوْنُ لَهُ الْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ اَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِّنَ الْمَالِ‌ؕ قَالَ اِنَّ اللّٰهَ اصْطَفٰٮهُ عَلَيْکُمْ وَزَادَهٗ بَسْطَةً فِى الْعِلْمِ وَ الْجِسْمِ‌ؕ وَاللّٰهُ يُؤْتِىْ مُلْکَهٗ مَنْ يَّشَآءُ ‌ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏
وَقَالَஇன்னும் கூறினார் لَهُمْஅவர்களுக்கு نَبِيُّهُمْஅவர்களுடைய நபி اِنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் قَدْ بَعَثَஅனுப்பி இருக்கிறான் لَـکُمْஉங்களுக்கு طَالُوْتَதாலூத்தை مَلِكًا ؕஅரசராக قَالُوْٓاகூறினார்கள் اَنّٰىஎப்படி? يَكُوْنُஇருக்கும் لَهُஅவருக்கு الْمُلْكُஆட்சி عَلَيْنَاஎங்கள் மீது وَنَحْنُநாங்கள் اَحَقُّமிகவும் தகுதியுடையவர்(கள்) بِالْمُلْكِஆட்சிக்கு مِنْهُஅவரைவிட وَلَمْ يُؤْتَஅவர் கொடுக்கப்படவில்லையே سَعَةًவசதி مِّنَ الْمَالِ‌ؕசெல்வத்தின் قَالَகூறினார் اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ் اصْطَفٰٮهُஅவரைத் தேர்ந்தெடுத்தான் عَلَيْکُمْஉங்கள் மீது وَزَادَهٗஇன்னும் அவருக்கு அதிகம் கொடுத்திருக்கிறான் بَسْطَةًஆற்றலை فِى الْعِلْمِகல்வியில் وَ الْجِسْمِ‌ؕஇன்னும் உடல் وَاللّٰهُஇன்னும் அல்லாஹ் يُؤْتِىْதருவான் مُلْکَهٗதனது ஆட்சியை مَنْஎவர் يَّشَآءُ ؕநாடுகிறான் وَاللّٰهُஇன்னும் அல்லாஹ் وَاسِعٌவிசாலமானவன் عَلِيْمٌ‏மிக அறிபவன்
2:247. அவர்களுடைய நபி அவர்களிடம் “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்” என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், “எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே!” என்று கூறினார்கள்; அதற்கவர், “நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்” என்று கூறினார்.
2:248
2:248 وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ اِنَّ اٰيَةَ مُلْکِهٖۤ اَنْ يَّاْتِيَکُمُ التَّابُوْتُ فِيْهِ سَکِيْنَةٌ مِّنْ رَّبِّکُمْ وَبَقِيَّةٌ مِّمَّا تَرَكَ اٰلُ مُوْسٰى وَاٰلُ هٰرُوْنَ تَحْمِلُهُ الْمَلٰٓٮِٕكَةُ‌ ؕ اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيَةً لَّـکُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
وَقَالَஇன்னும் கூறினார் لَهُمْஅவர்களுக்கு نَبِيُّهُمْஅவர்களுடைய நபி اِنَّநிச்சயமாக اٰيَةَஅத்தாட்சி مُلْکِهٖۤஅவருடைய ஆட்சிக்கு اَنْ يَّاْتِيَکُمُஉங்களிடம் வருவது التَّابُوْتُபேழை فِيْهِஅதில் سَکِيْنَةٌஆறுதல் مِّنْ رَّبِّکُمْஉங்கள் இறைவனிடமிருந்து وَبَقِيَّةٌஇன்னும் மீதப் பொருட்கள் مِّمَّاஎதிலிருந்து تَرَكَவிட்டுச் சென்றார் اٰلُ مُوْسٰىமூஸாவின்குடும்பத்தார் وَاٰلُஇன்னும் குடும்பத்தார் هٰرُوْنَஹாரூனுடைய تَحْمِلُهُஅதைச் சுமப்பா(ர்க)ள் الْمَلٰٓٮِٕكَةُ‌ ؕவானவர்கள் اِنَّ فِىْ ذٰلِكَநிச்சயமாக/அதில் لَاٰيَةًதிட்டமாக ஓர் அத்தாட்சி لَّـکُمْஉங்களுக்கு اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
2:248. இன்னும், அவர்களுடைய நபி அவர்களிடம், “நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்கு அடையாளமாக உங்களிடம் ஒரு தாபூத் (பேழை) வரும்; அதில் உங்களுக்கு, உங்கள் இறைவனிடம் இருந்து ஆறுதல் (கொடுக்கக் கூடியவை) இருக்கும்; இன்னும், மூஸாவின் சந்ததியினரும்; ஹாரூனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும்; அதை மலக்குகள் (வானவர்கள்) சுமந்து வருவார்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது“ என்று கூறினார்.
2:249
2:249 فَلَمَّا فَصَلَ طَالُوْتُ بِالْجُـنُوْدِۙ قَالَ اِنَّ اللّٰهَ مُبْتَلِيْکُمْ بِنَهَرٍ‌ۚ فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّىْ‌ۚ وَمَنْ لَّمْ يَطْعَمْهُ فَاِنَّهٗ مِنِّىْٓ اِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً ۢ بِيَدِهٖ‌‌ۚ فَشَرِبُوْا مِنْهُ اِلَّا قَلِيْلًا مِّنْهُمْ‌ؕ فَلَمَّا جَاوَزَهٗ هُوَ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ ۙ قَالُوْا لَا طَاقَةَ لَنَا الْيَوْمَ بِجَالُوْتَ وَجُنُوْدِهٖ‌ؕ قَالَ الَّذِيْنَ يَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوا اللّٰهِۙ کَمْ مِّنْ فِئَةٍ قَلِيْلَةٍ غَلَبَتْ فِئَةً کَثِيْرَةً ۢ بِاِذْنِ اللّٰهِ‌ؕ وَاللّٰهُ مَعَ الصّٰبِرِيْنَ‏
فَلَمَّاபோது فَصَلَபுறப்பட்டார் طَالُوْتُதாலூத் بِالْجُـنُوْدِۙபடைகளுடன் قَالَகூறினார் اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ் مُبْتَلِيْکُمْஉங்களைச்சோதிப்பான் بِنَهَرٍ‌ۚஓர் ஆற்றின் மூலம் فَمَنْஆகவே எவர் شَرِبَ مِنْهُஅதிலிருந்து குடித்தார் فَلَيْسَஅவர் இல்லை مِنِّىْ‌ۚஎன்னை சேர்ந்த وَمَنْஇன்னும் எவர் لَّمْ يَطْعَمْهُஅதைச் சுவைக்கவில்லை فَاِنَّهٗநிச்சயமாக அவர் مِنِّىْٓஎன்னைச் சேர்ந்த اِلَّاதவிர مَنِஎவர் اغْتَرَفَகையளவு நீர் அள்ளினார் غُرْفَةً ۢகையளவு நீர் بِيَدِهٖ‌ۚதன் கரத்தால் فَشَرِبُوْاகுடித்தார்கள் مِنْهُஅதிலிருந்து اِلَّاதவிர قَلِيْلًاகுறைவானவர்கள் مِّنْهُمْ‌ؕஅவர்களில் فَلَمَّا جَاوَزَهٗஅதை அவர் கடந்தபோது هُوَஅவர் وَالَّذِيْنَஇன்னும் எவர்கள் اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள் مَعَهٗ ۙஅவருடன் قَالُوْاகூறினார்கள் لَا طَاقَةَஅறவே சக்தியில்லை لَنَاஎங்களுக்கு الْيَوْمَஇன்று بِجَالُوْتَஜாலூத்துடன் وَجُنُوْدِهٖ‌ؕஇன்னும் அவனுடைய படைகள் قَالَகூறினார்(கள்) الَّذِيْنَஎவர்கள் يَظُنُّوْنَஅறிகிறார்கள் اَنَّهُمْநிச்சயமாக தாங்கள் مُّلٰقُواசந்திப்பவர்கள் اللّٰهِۙஅல்லாஹ்வை کَمْஎத்தனை مِّنْஇருந்து فِئَةٍகூட்டம் قَلِيْلَةٍகுறைவான غَلَبَتْவென்றுள்ளன فِئَةًகூட்டத்தை کَثِيْرَةً ۢஅதிகமான بِاِذْنِஅனுமதி கொண்டு اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின் وَاللّٰهُஇன்னும் அல்லாஹ் مَعَஉடன் الصّٰبِرِيْنَ‏பொறுமையாளர்கள்
2:249. பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது அவர் “நிச்சயமாக அல்லாஹ் உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்; யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர்; தவிர, ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதில் நின்றும் (அதிகமாக) நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர்” என்று கூறினார் அவர்களில் ஒரு சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள்; பின்னர் தாலூத்தும், அவருடன் ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர்) “ஜாலூத்துடனும், அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்லை” என்று கூறிவிட்டனர்; ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், “எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்; மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்” என்று கூறினார்கள்.
2:250
2:250 وَلَمَّا بَرَزُوْا لِجَـالُوْتَ وَجُنُوْدِهٖ قَالُوْا رَبَّنَآ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْکٰفِرِيْنَؕ‏
وَلَمَّا بَرَزُوْاஅவர்கள் முன்னால் வந்தபோது لِجَـالُوْتَஜாலூத்திற்கு وَجُنُوْدِهٖஇன்னும் அவனுடைய படைகள் قَالُوْاகூறினார்கள் رَبَّنَآஎங்கள் இறைவா اَفْرِغْஇறக்கு عَلَيْنَاஎங்கள் மீது صَبْرًاபொறுமையை وَّثَبِّتْஇன்னும் உறுதிப்படுத்து اَقْدَامَنَاஎங்கள் பாதங்களை وَانْصُرْنَاஇன்னும் எங்களுக்கு உதவு عَلَىஎதிராக الْقَوْمِமக்களுக்கு الْکٰفِرِيْنَؕ‏நிராகரிப்பாளர்கள்
2:250. மேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் முன்னேறிச் சென்ற போது, “எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!” எனக் கூறி(ப் பிரார்த்தனை செய்த)னர்.
2:251
2:251 فَهَزَمُوْهُمْ بِاِذْنِ اللّٰهِ ۙ وَقَتَلَ دَاوٗدُ جَالُوْتَ وَاٰتٰٮهُ اللّٰهُ الْمُلْكَ وَالْحِکْمَةَ وَعَلَّمَهٗ مِمَّا يَشَآءُ ‌ؕ وَلَوْلَا دَفْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَّفَسَدَتِ الْاَرْضُ وَلٰـکِنَّ اللّٰهَ ذُوْ فَضْلٍ عَلَى الْعٰلَمِيْنَ‏
فَهَزَمُوْهُمْஆகவே அவர்களைத் தோற்கடித்தார்கள் بِاِذْنِஅனுமதி கொண்டு اللّٰهِ ۙஅல்லாஹ்வின் وَقَتَلَஇன்னும் கொன்றார் دَاوٗدُதாவூது جَالُوْتَஜாலூத்தை وَاٰتٰٮهُஇன்னும் அவருக்குக் கொடுத்தான் اللّٰهُஅல்லாஹ் الْمُلْكَஆட்சியை وَالْحِکْمَةَஇன்னும் ஞானம் وَعَلَّمَهٗஇன்னும் அவருக்குக் கற்பித்தான் مِمَّاஎதிலிருந்து يَشَآءُ ؕநாடுகிறான் وَلَوْلَاஇல்லையென்றால் دَفْعُதடுப்பது اللّٰهِஅல்லாஹ்வின் النَّاسَமக்களை بَعْضَهُمْஅவர்களில் சிலரை விட்டு بِبَعْضٍசிலரைக் கொண்டு لَّفَسَدَتِஉறுதியாக அழிந்து விடும் الْاَرْضُபூமி وَلٰـکِنَّஎனினும் اللّٰهَஅல்லாஹ் ذُوْ فَضْلٍஅருளுடையவன் عَلَىமீது الْعٰلَمِيْنَ‏உலகத்தார்கள்
2:251. இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள்; தாவூது ஜாலூத்தைக் கொன்றார்; அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்; தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; (இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு, (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான்.
2:252
2:252 تِلْكَ اٰيٰتُ اللّٰهِ نَـتْلُوْهَا عَلَيْكَ بِالْحَـقِّ‌ؕ وَاِنَّكَ لَمِنَ الْمُرْسَلِيْنَ‏
تِلْكَ(அவை) இவை اٰيٰتُவசனங்கள் اللّٰهِஅல்லாஹ்வுடைய نَـتْلُوْهَاஅவற்றை ஓதுகிறோம் عَلَيْكَஉம்மீது بِالْحَـقِّ‌ؕஉண்மையுடன் وَاِنَّكَஇன்னும் நிச்சயமாக நீர் لَمِنَ الْمُرْسَلِيْنَ‏தூதர்களில்
2:252. (நபியே!) இவை அல்லாஹ்வின் வசனங்களாகும்; இவற்றை நாம் உண்மையைக் கொண்டு உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம்; நிச்சயமாக நீர் (நம்மால் அனுப்பப்பட்ட) தூதர்களில் ஒருவர் தாம்.
2:253
2:253 تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ‌ۘ مِنْهُمْ مَّنْ كَلَّمَ اللّٰهُ‌ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجٰتٍ‌ؕ وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنٰتِ وَاَيَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ‌ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلَ الَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْ مِّنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ وَلٰـكِنِ اخْتَلَفُوْا فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ وَمِنْهُمْ مَّنْ كَفَرَ‌ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلُوْا وَلٰـكِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يُرِيْدُ
تِلْكَஅந்த الرُّسُلُதூதர்கள் فَضَّلْنَاமேன்மையாக்கினோம் بَعْضَهُمْஅவர்களில் சிலரை عَلٰىவிட بَعْضٍ‌ۘசிலரை مِنْهُمْஅவர்களில் مَّنْஎவர் كَلَّمَபேசினான் اللّٰهُ‌அல்லாஹ் وَرَفَعَஇன்னும் உயர்த்தினான் بَعْضَهُمْஅவர்களில் சிலரை دَرَجٰتٍ‌ؕபதவிகளால் وَاٰتَيْنَاஇன்னும் கொடுத்தோம் عِيْسَىஈஸாவிற்கு ابْنَ مَرْيَمَமர்யமுடைய மகன் الْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளை وَاَيَّدْنٰهُஇன்னும் அவருக்கு உதவினோம் بِرُوْحِஆத்மாவைக்கொண்டு الْقُدُسِ‌ؕபரிசுத்த(மான) وَلَوْ شَآءَநாடியிருந்தால் اللّٰهُஅல்லாஹ் مَا اقْتَتَلَசண்டையிட்டிருக்க மாட்டார்(கள்) الَّذِيْنَஎவர்கள் مِنْۢ بَعْدِهِمْஅவர்களுக்குப் பின் مِّنْۢ بَعْدِபின்னர் مَا جَآءَتْهُمُஅவர்களிடம் வந்தது الْبَيِّنٰتُதெளிவான அத்தாட்சிகள் وَلٰـكِنِஎன்றாலும் اخْتَلَفُوْاவேறுபட்டார்கள் فَمِنْهُمْஅவர்களில் مَّنْஎவர் اٰمَنَநம்பிக்கை கொண்டார் وَمِنْهُمْஇன்னும் அவர்களில் مَّنْஎவர் كَفَرَ‌ؕநிராகரித்தார் وَلَوْ شَآءَஇன்னும் நாடியிருந்தால் اللّٰهُஅல்லாஹ் مَا اقْتَتَلُوْاஅவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள் وَلٰـكِنَّஎன்றாலும் اللّٰهَஅல்லாஹ் يَفْعَلُசெய்தே ஆவான் مَاஎதை يُرِيْدُ‏நாடுவான்
2:253. அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்; அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.
2:254
2:254 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْفِقُوْا مِمَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيْهِ وَلَا خُلَّةٌ وَّلَا شَفَاعَةٌ ‌ ؕ وَالْكٰفِرُوْنَ هُمُ الظّٰلِمُوْنَ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களே اَنْفِقُوْاதர்மம் புரியுங்கள் مِمَّاஎதிலிருந்து رَزَقْنٰكُمْஉங்களுக்கு வழங்கினோம் مِّنْ قَبْلِமுன்னர் اَنْ يَّاْتِىَவருவதற்கு يَوْمٌஒரு நாள் لَّا بَيْعٌவியாபாரம் இல்லை فِيْهِஅதில் وَلَا خُلَّةٌஇன்னும் நட்பு இல்லை وَّلَا شَفَاعَةٌ  ؕஇன்னும் பரிந்துரைஇல்லை وَالْكٰفِرُوْنَ هُمُநிராகரிப்பவர்கள்தான் الظّٰلِمُوْنَ‏அநியாயக்காரர்கள்
2:254. நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த(இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள்; இன்னும், காஃபிர்களாக இருக்கின்றார்களே அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்.
2:255
2:255 اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُۚ  لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ‌ؕ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖ‌ؕ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ‌ۚ وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ‌‌ۚ وَلَا يَــــٴُـوْدُهٗ حِفْظُهُمَا ‌ۚ وَ هُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ‏
اللّٰهُஅல்லாஹ் لَاۤஅறவே இல்லை اِلٰهَஇறைவன் اِلَّا هُوَஅவனைத் தவிர الْحَـىُّஉயிருள்ளவன் الْقَيُّوْمُۚநிலையானவன் لَا تَاْخُذُهٗஅவனைப் பீடிக்காது سِنَةٌசிறு உறக்கம் وَّلَا نَوْمٌ‌ؕஇன்னும் பெரும் நித்திரை لَهٗஅவனுக்கு مَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவை وَمَا فِى الْاَرْضِ‌ؕஇன்னும் பூமியில்உள்ளவை مَنْயார் ذَاஅவர் الَّذِىْஎவர் يَشْفَعُபரிந்துரைப்பார் عِنْدَهٗۤஅவனிடத்தில் اِلَّاதவிர بِاِذْنِهٖ‌ؕஅவனுடைய அனுமதியுடனே يَعْلَمُஅறிவான் مَاஎது بَيْنَ اَيْدِيْهِمْஅவர்களுக்கு முன்னால் وَمَاஇன்னும் எது خَلْفَهُمْ‌ۚஅவர்களுக்குப் பின்னால் وَلَا يُحِيْطُوْنَஇன்னும் அவர்கள் சூழ மாட்டார்கள் بِشَىْءٍஎதையும் مِّنْ عِلْمِهٖۤஅவனுடைய அறிவிலிருந்து اِلَّاதவிர بِمَاஎதை شَآءَ ۚநாடினான் وَسِعَவிசாலமாகஇருக்கிறது كُرْسِيُّهُஅவனுடைய பாதத்தலம் السَّمٰوٰتِவானங்களை وَالْاَرْضَ‌ۚஇன்னும் பூமி وَلَا یَـُٔوْدُهٗஇன்னும் அவனுக்குச் சிரமமளிக்காது حِفْظُهُمَا ۚ وَ هُوَஅவ்விரண்டைப் பாதுகாப்பது/இன்னும் அவன் الْعَلِىُّமிக உயர்வானவன் الْعَظِيْمُ‏மிக மகத்தானவன்
2:255. அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.
2:256
2:256 لَاۤ اِكْرَاهَ فِى الدِّيْنِ‌ۙ  قَدْ تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَىِّ‌ۚ فَمَنْ يَّكْفُرْ بِالطَّاغُوْتِ وَيُؤْمِنْۢ بِاللّٰهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰى لَا انْفِصَامَ لَهَا‌‌ ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏
لَاۤ اِكْرَاهَஅறவே நிர்பந்தமில்லை فِى الدِّيْنِ‌ۙ இஸ்லாமில் قَدْ تَّبَيَّنَதெளிவாகி விட்டது الرُّشْدُசத்தியவழி مِنَ الْغَىِّ‌ۚவழிகேட்டிலிருந்து فَمَنْஎனவே எவர் يَّكْفُرْநிராகரிக்கிறார் بِالطَّاغُوْتِஷைத்தானை وَيُؤْمِنْۢஇன்னும் நம்பிக்கை கொள்கிறார் بِاللّٰهِஅல்லாஹ்வை فَقَدِ اسْتَمْسَكَபற்றிப் பிடித்துக் கொண்டார் بِالْعُرْوَةِவளையத்தை الْوُثْقٰىமிக உறுதியானது لَا انْفِصَامَஅறவே துண்டிப்பு இல்லை لَهَا‌ ؕஅதற்கு وَاللّٰهُஇன்னும் அல்லாஹ் سَمِيْعٌநன்கு செவியுறுபவன் عَلِيْمٌ‏மிக அறிந்தவன்
2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
2:257
2:257 اَللّٰهُ وَلِىُّ الَّذِيْنَ اٰمَنُوْا يُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ‌ؕ  وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَوْلِيٰٓــــٴُـهُمُ الطَّاغُوْتُۙ يُخْرِجُوْنَهُمْ مِّنَ النُّوْرِ اِلَى الظُّلُمٰتِ‌ؕ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
اَللّٰهُஅல்லாஹ் وَلِىُّபொறுப்பாளன் الَّذِيْنَஎவர்கள் اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள் يُخْرِجُهُمْஅவர்களை வெளியேற்றுகிறான் مِّنَஇருந்து الظُّلُمٰتِஇருள்கள் اِلَىநோக்கி النُّوْرِ‌ؕஒளியை وَالَّذِيْنَஇன்னும் எவர்கள் كَفَرُوْۤاநிராகரித்தார்கள் اَوْلِیٰٓـُٔهُمُஅவர்களின்தோழர்கள் الطَّاغُوْتُۙஷைத்தான்(கள்)தான் يُخْرِجُوْنَهُمْவெளியேற்றுகிறார்கள்/அவர்களை مِّنَ النُّوْرِஒளியிலிருந்து اِلَى الظُّلُمٰتِ‌ؕஇருள்களை நோக்கி اُولٰٓٮِٕكَஅவர்கள் اَصْحٰبُ النَّارِ‌ۚநரகவாசிகள் هُمْஅவர்கள் فِيْهَاஅதில் خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
2:257. அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்; அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.
2:258
2:258 اَلَمْ تَرَ اِلَى الَّذِىْ حَآجَّ اِبْرٰهٖمَ فِىْ رَبِّهٖۤ اَنْ اٰتٰٮهُ اللّٰهُ الْمُلْكَ‌ۘ اِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّىَ الَّذِىْ يُحْىٖ وَيُمِيْتُۙ قَالَ اَنَا اُحْىٖ وَاُمِيْتُ‌ؕ قَالَ اِبْرٰهٖمُ فَاِنَّ اللّٰهَ يَاْتِىْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَاْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِىْ كَفَرَ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‌ۚ‏
اَلَمْ تَرَநீர் கவனிக்கவில்லையா? اِلَى الَّذِىْஎவனை حَآجَّதர்க்கித்தான் اِبْرٰهٖمَஇப்ராஹீமிடம் فِىْ رَبِّهٖۤஅவருடைய இறைவன் விசயத்தில் اَنْ اٰتٰٮهُ اللّٰهُஅல்லாஹ் அவனுக்குக் கொடுத்தால் الْمُلْكَ‌ۘஆட்சியை اِذْ قَالَகூறியபோது اِبْرٰهٖمُஇப்றாஹீம் رَبِّىَஎன் இறைவன் الَّذِىْஎவன் يُحْىٖஉயிர்ப்பிக்கிறான் وَيُمِيْتُۙஇன்னும் மரணிக்கச் செய்கிறான் قَالَகூறினான் اَنَاநான் اُحْىٖஉயிர்ப்பிப்பேன் وَاُمِيْتُ‌ؕஇன்னும் மரணிக்கச் செய்வேன் قَالَகூறினார் اِبْرٰهٖمُஇப்றாஹீம் فَاِنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் يَاْتِىْவருகிறான் بِالشَّمْسِசூரியனைக் கொண்டு مِنَ الْمَشْرِقِகிழக்கிலிருந்து فَاْتِஎனவே நீ வா بِهَاஅதைக் கொண்டு مِنَ الْمَغْرِبِமேற்கிலிருந்து فَبُهِتَஆகவே வாயடைக்கப்பட்டான் الَّذِىْஎவன் كَفَرَ‌ؕநிராகரித்தான் وَاللّٰهُஅல்லாஹ் لَا يَهْدِىநேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَமக்களை الظّٰلِمِيْنَ‌ۚ‏அநியாயக்காரர்கள்
2:258. அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.
2:259
2:259 اَوْ كَالَّذِىْ مَرَّ عَلٰى قَرْيَةٍ وَّ هِىَ خَاوِيَةٌ عَلٰى عُرُوْشِهَا ‌ۚ قَالَ اَنّٰى يُحْىٖ هٰذِهِ اللّٰهُ بَعْدَ مَوْتِهَا ‌ۚ فَاَمَاتَهُ اللّٰهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَهٗ ‌ؕ قَالَ كَمْ لَبِثْتَ‌ؕ قَالَ لَبِثْتُ يَوْمًا اَوْ بَعْضَ يَوْمٍ‌ؕ قَالَ بَلْ لَّبِثْتَ مِائَةَ عَامٍ فَانْظُرْ اِلٰى طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ يَتَسَنَّهْ‌ۚ وَانْظُرْ اِلٰى حِمَارِكَ وَلِنَجْعَلَكَ اٰيَةً لِّلنَّاسِ‌ وَانْظُرْ اِلَى الْعِظَامِ كَيْفَ نُـنْشِزُهَا ثُمَّ نَكْسُوْهَا لَحْمًا ‌ؕ فَلَمَّا تَبَيَّنَ لَهٗ ۙ قَالَ اَعْلَمُ اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
اَوْஅல்லது كَالَّذِىْஎவரைப் போன்று مَرَّகடந்தார் عَلٰى قَرْيَةٍஒரு கிராமத்தை وَّ هِىَஅது خَاوِيَةٌவிழுந்திருக்கிறது عَلٰىமீது عُرُوْشِهَا ۚஅதன் முகடுகள் قَالَகூறினார் اَنّٰىஎவ்வாறு يُحْىٖஉயிர்ப்பிப்பான் هٰذِهِஇதை اللّٰهُஅல்லாஹ் بَعْدَபின்னர் مَوْتِهَا ۚஅது இறந்த فَاَمَاتَهُஎனவே அவருக்கு மரணத்தைக் கொடுத்தான் اللّٰهُஅல்லாஹ் مِائَةَநூறு عَامٍஆண்டுகள் (வரை) ثُمَّபிறகு بَعَثَهٗ ؕஅவரைஉயிர்ப்பித்தான் قَالَகூறினான் كَمْஎத்தனை(காலம்) لَبِثْتَ‌ؕதங்கினீர் قَالَகூறினார் لَبِثْتُதங்கினேன் يَوْمًاஒரு நாள் اَوْஅல்லது بَعْضَசிறிதளவு يَوْمٍ‌ؕஒரு நாள் قَالَகூறினான் بَلْமாறாக لَّبِثْتَதங்கினீர் مِائَةَநூறு عَامٍஆண்டு(கள்) فَانْظُرْபார் اِلٰى طَعَامِكَஉன் உணவை وَشَرَابِكَஇன்னும் உன் பானத்தை لَمْ يَتَسَنَّهْ‌ۚஅது கெட்டுப் போகவில்லை وَانْظُرْஇன்னும் பார் اِلٰى حِمَارِكَஉன் கழுதையை وَلِنَجْعَلَكَஇன்னும் நாம் உம்மை ஆக்குவதற்காக اٰيَةًஓர் அத்தாட்சியாக لِّلنَّاسِ‌மக்களுக்கு وَانْظُرْஇன்னும் பார் اِلَى الْعِظَامِஎலும்புகளை كَيْفَஎப்படி نُـنْشِزُهَاஅவற்றை அசைத்து உயர்த்துகிறோம் ثُمَّபிறகு نَكْسُوْهَاஅதற்கு போர்த்துகிறோம் لَحْمًا ؕமாமிசத்தை فَلَمَّا تَبَيَّنَதெளிவான போது لَهٗ ۙஅவருக்கு قَالَகூறினார் اَعْلَمُஅறிகிறேன் اَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ் عَلٰىமீது كُلِّஎல்லா شَىْءٍபொருள் قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
2:259. அல்லது, ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் - (அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து, விழுந்து) பாழடைந்து கிடந்தன; (இதைப் பார்த்த அவர்) “இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்று (வியந்து) கூறினார்; ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழும்படிச் செய்து, “எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?” என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்” என்று கூறினார்; “இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்! இதோ பாரும் உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை; ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு மரணிக்கச் செய்து உயிர் பெறச் செய்கிறோம்; இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும்; அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின்மேல் சதையைப் போர்த்துகிறோம்” எனக்கூறி (அதனை உயிர் பெறச் செய்தான்- இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவான போது: அவர், “நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று கூறினார்.
2:260
2:260 وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِىْ كَيْفَ تُحْىِ الْمَوْتٰى ؕ قَالَ اَوَلَمْ تُؤْمِنْ‌ؕ قَالَ بَلٰى وَلٰـكِنْ لِّيَطْمَٮِٕنَّ قَلْبِىْ‌ؕ قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّيْرِ فَصُرْهُنَّ اِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلٰى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَاْتِيْنَكَ سَعْيًا ‌ؕ وَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ
وَاِذْ قَالَகூறிய சமயத்தை اِبْرٰهٖمُஇப்றாஹீம் رَبِّஎன் இறைவா! اَرِنِىْஎனக்குக் காட்டு كَيْفَஎப்படி تُحْىِஉயிர்ப்பிக்கிறாய் الْمَوْتٰى ؕஇறந்தவர்களை قَالَகூறினான் اَوَلَمْ تُؤْمِنْ‌ؕநீர் நம்பிக்கை கொள்ளவில்லையா? قَالَகூறினார் بَلٰىஅவ்வாறில்லை وَلٰـكِنْஎனினும் لِّيَطْمَٮِٕنَّநிம்மதி பெறுவதற்காக قَلْبِىْ‌ؕஎன் உள்ளம் قَالَகூறினான் فَخُذْஎனவே பிடிப்பீராக اَرْبَعَةًநான்கை مِّنَஇல் الطَّيْرِபறவைகள் فَصُرْهُنَّஅவற்றைப் பழக்குவீராக اِلَيْكَஉம் பக்கம் ثُمَّபிறகு اجْعَلْஆக்குவீராக عَلٰىமீது كُلِّஎல்லா جَبَلٍமலை مِّنْهُنَّஅவற்றிலிருந்து جُزْءًاஒரு பாகத்தை ثُمَّபிறகு ادْعُهُنَّஅவற்றை கூப்பிடுவீராக يَاْتِيْنَكَஅவை உம்மிடம் வரும் سَعْيًا ؕவிரைந்து وَاعْلَمْஇன்னும் அறிந்துகொள்வீராக اَنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் عَزِيْزٌமிகைத்தவன் حَكِيْمٌ‏ஞானவான்
2:260. இன்னும், இப்ராஹீம்: “என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!” எனக் கோரியபோது, அவன்,“நீர் (இதை) நம்ப வில்லையா?” எனக் கேட்டான்; “மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)” என்று கூறினார் “(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்; பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்” என்று (அல்லாஹ்) கூறினான்.
2:261
2:261 مَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِىْ كُلِّ سُنْۢبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ‌ؕ وَاللّٰهُ يُضٰعِفُ لِمَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏
مَثَلُஉதாரணம் الَّذِيْنَ يُنْفِقُوْنَதர்மம் புரிபவர்கள் اَمْوَالَهُمْதங்கள் செல்வங்களை فِىْ سَبِيْلِபாதையில் اللّٰهِஅல்லாஹ்வின் كَمَثَلِஉதாரணத்தைப் போன்று حَبَّةٍஒரு விதை اَنْۢبَتَتْஅது முளைக்க வைத்தது سَبْعَஏழு سَنَابِلَகதிர்களை فِىْ كُلِّஒவ்வொன்றிலும் سُنْۢبُلَةٍகதிர் مِّائَةُநூறு حَبَّةٍ‌ؕவிதை وَاللّٰهُஇன்னும் அல்லாஹ் يُضٰعِفُபன்மடங்காக்குகிறான் لِمَنْஎவருக்கு يَّشَآءُ‌ ؕநாடுவான் وَاللّٰهُஇன்னும் அல்லாஹ் وَاسِعٌவிசாலமானவன் عَلِيْمٌ‏மிக அறிந்தவன்
2:261. அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.
2:262
2:262 اَلَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ ثُمَّ لَا يُتْبِعُوْنَ مَاۤ اَنْفَقُوْا مَنًّا وَّلَاۤ اَذًى‌ۙ لَّهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ‌ۚ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏
اَلَّذِيْنَஎவர்கள் يُنْفِقُوْنَதர்மம் புரிகிறார்கள் اَمْوَالَهُمْதங்கள் செல்வங்களை فِىْ سَبِيْلِபாதையில் اللّٰهِஅல்லாஹ்வின் ثُمَّ لَا يُتْبِعُوْنَபிறகு தொடர்ந்து செய்யமாட்டார்கள் مَاۤஎதை اَنْفَقُوْاதர்மம் புரிந்தார்கள் مَنًّاசொல்லிக் காட்டுவது وَّلَاۤ اَذًى‌ۙஇன்னும் துன்புறுத்துவதில்லை لَّهُمْஅவர்களுக்கு اَجْرُهُمْஅவர்களின் கூலி عِنْدَஇடம் رَبِّهِمْ‌ۚஅவர்களின் இறைவன் وَلَا خَوْفٌஇன்னும் பயம் இல்லை عَلَيْهِمْஅவர்கள் மீது وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்
2:262. அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு; இன்னும் - அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்,
2:263
2:263 قَوْلٌ مَّعْرُوْفٌ وَّمَغْفِرَةٌ خَيْرٌ مِّنْ صَدَقَةٍ يَّتْبَعُهَاۤ اَذًى‌ؕ وَاللّٰهُ غَنِىٌّ حَلِيْمٌ‏
قَوْلٌசொல் مَّعْرُوْفٌநல்லது وَّمَغْفِرَةٌஇன்னும் மன்னிப்பு خَيْرٌசிறந்தது مِّنْவிட صَدَقَةٍதர்மம் يَّتْبَعُهَاۤஅதைத் தொடர்கிறது اَذًى‌ؕதுன்புறுத்துவது وَاللّٰهُஅல்லாஹ் غَنِىٌّமகா செல்வன் حَلِيْمٌ‏பெரும் சகிப்பாளன்
2:263. கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் தொடர்ந்து தொல்லை கொடுப்பதை விட மேலானவையாகும்; தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்; மிக்க பொறுமையாளன்.
2:264
2:264 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُبْطِلُوْا صَدَقٰتِكُمْ بِالْمَنِّ وَالْاَذٰىۙ كَالَّذِىْ يُنْفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ فَمَثَلُهٗ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلْدًا ‌ؕ لَا يَقْدِرُوْنَ عَلٰى شَىْءٍ مِّمَّا كَسَبُوْا ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْـكٰفِرِيْنَ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களே لَا تُبْطِلُوْاபாழாக்காதீர்கள் صَدَقٰتِكُمْஉங்கள் தர்மங்களை بِالْمَنِّசொல்லிக் காட்டுவது وَالْاَذٰىۙஇன்னும் துன்புறுத்துவது كَالَّذِىْஎவரைப் போன்று يُنْفِقُதர்மம் செய்கிறான் مَالَهٗதனது செல்வத்தை رِئَآءَகாட்டுவதற்காக النَّاسِமக்களுக்கு وَلَا يُؤْمِنُஇன்னும் நம்பிக்கை கொள்ளமாட்டான் بِاللّٰهِஅல்லாஹ்வை وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕஇன்னும் இறுதி நாள் فَمَثَلُهٗஅவனின் உதாரணம் كَمَثَلِஉதாரணத்தைப்போன்று صَفْوَانٍவழுக்கைப் பாறையின் عَلَيْهِஅதன் மீது تُرَابٌமண் فَاَصَابَهٗஅதை அடைந்தது وَابِلٌஅடை மழை فَتَرَكَهٗஅதை விட்டுவிட்டது صَلْدًا ؕவெறும் பாறையாக لَا يَقْدِرُوْنَஆற்றல் பெறமாட்டார்கள் عَلٰى شَىْءٍஎதையும் مِّمَّاஎதிலிருந்து كَسَبُوْا ؕசெய்தார்கள் وَاللّٰهُஅல்லாஹ் لَا يَهْدِىநேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَகூட்டத்தை الْـكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்கள்
2:264. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை.
2:265
2:265 وَمَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ وَ تَثْبِيْتًا مِّنْ اَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍۢ بِرَبْوَةٍ اَصَابَهَا وَابِلٌ فَاٰتَتْ اُكُلَهَا ضِعْفَيْنِ‌ۚ فَاِنْ لَّمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
وَمَثَلُஇன்னும் உதாரணம் الَّذِيْنَஎவர்களின் يُنْفِقُوْنَதர்மம் புரிகிறார்கள் اَمْوَالَهُمُதங்கள்செல்வங்களை ابْتِغَآءَதேடி مَرْضَاتِதிருப்தியை اللّٰهِஅல்லாஹ்வின் وَ تَثْبِيْتًاஇன்னும் உறுதிப்படுத்துவது مِّنْ اَنْفُسِهِمْதங்கள் உள்ளங்களில் كَمَثَلِஉதாரணத்தைப்போன்று جَنَّةٍۢஒரு தோட்டம் بِرَبْوَةٍஉயர்ந்த பூமியில் اَصَابَهَاஅதை அடைந்தது وَابِلٌஅடை மழை فَاٰتَتْஆகவே அது கொடுத்தது اُكُلَهَاஅதனுடைய பலனை ضِعْفَيْنِ‌ۚஇரு மடங்குகளாக فَاِنْ لَّمْ يُصِبْهَاஅதை அடையாவிட்டால் وَابِلٌஅடை மழை فَطَلٌّ‌ؕசிறுதூறல் وَاللّٰهُஅல்லாஹ் بِمَا تَعْمَلُوْنَநீங்கள் செய்பவற்றை بَصِيْرٌ‏உற்று நோக்குபவன்
2:265. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது: உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்.
2:266
2:266 اَيَوَدُّ اَحَدُكُمْ اَنْ تَكُوْنَ لَهٗ جَنَّةٌ مِّنْ نَّخِيْلٍ وَّاَعْنَابٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُۙ لَهٗ فِيْهَا مِنْ كُلِّ الثَّمَرٰتِۙ وَاَصَابَهُ الْكِبَرُ وَلَهٗ ذُرِّيَّةٌ ضُعَفَآءُ ۖۚ فَاَصَابَهَاۤ اِعْصَارٌ فِيْهِ نَارٌ فَاحْتَرَقَتْ‌ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُوْنَ
اَيَوَدُّவிரும்புவாரா? اَحَدُكُمْஉங்களில் ஒருவர் اَنْ تَكُوْنَஇருப்பது لَهٗஅவருக்கு جَنَّةٌஒரு தோட்டம் مِّنْ نَّخِيْلٍபேரிச்சங்கனிகளின் وَّاَعْنَابٍஇன்னும் திராட்சைகள் تَجْرِىْஓடுகின்றன مِنْ تَحْتِهَاஅதன் கீழிருந்து الْاَنْهٰرُۙஆறுகள் لَهٗஅவருக்கு فِيْهَاஅதில் مِنْஇருந்து كُلِّஎல்லா الثَّمَرٰتِۙபழங்கள் وَاَصَابَهُஇன்னும் அவரை அடைந்தது الْكِبَرُமுதுமை وَلَهٗஇன்னும் அவருக்கு ذُرِّيَّةٌகுழந்தைகள் ضُعَفَآءُ ۖۚஇயலாதவர்கள் فَاَصَابَهَاۤஅதை அடைந்தது اِعْصَارٌபுயல் காற்று فِيْهِஅதில் نَارٌநெருப்பு فَاحْتَرَقَتْ‌ؕஎரிந்து விட்டது كَذٰلِكَஅவ்வாறே يُبَيِّنُவிவரிக்கிறான் اللّٰهُஅல்லாஹ் لَـكُمُஉங்களுக்கு الْاٰيٰتِஅத்தாட்சிகளை لَعَلَّكُمْ تَتَفَكَّرُوْنَ‏நீங்கள்சிந்திப்பதற்காக
2:266. உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன; அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன; (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது; அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்.
2:267
2:267 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْفِقُوْا مِنْ طَيِّبٰتِ مَا كَسَبْتُمْ وَمِمَّاۤ اَخْرَجْنَا لَـكُمْ مِّنَ الْاَرْضِ وَلَا تَيَمَّمُوا الْخَبِيْثَ مِنْهُ تُنْفِقُوْنَ وَلَسْتُمْ بِاٰخِذِيْهِ اِلَّاۤ اَنْ تُغْمِضُوْا فِيْهِ‌ؕ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَنِىٌّ حَمِيْدٌ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களே اَنْفِقُوْاதர்மம் புரியுங்கள் مِنْ طَيِّبٰتِநல்லவற்றிலிருந்து مَاஎது كَسَبْتُمْசம்பாதித்தீர்கள் وَمِمَّاۤஇன்னும் எதிலிருந்து اَخْرَجْنَاவெளியாக்கினோம் لَـكُمْஉங்களுக்கு مِّنَஇருந்து الْاَرْضِபூமி وَلَا تَيَمَّمُواஇன்னும் நாடாதீர்கள் الْخَبِيْثَகெட்டதை مِنْهُஅதில் تُنْفِقُوْنَதர்மம் புரிகிறீர்கள் وَلَسْتُمْநீங்கள் இல்லை بِاٰخِذِيْهِஅதை வாங்குபவர்களாக اِلَّاۤதவிர اَنْ تُغْمِضُوْاநீங்கள்கண்மூடியவர்களாக فِيْهِ‌ؕஅதில் وَاعْلَمُوْۤاஇன்னும் அறியுங்கள் اَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ் غَنِىٌّமகா செல்வன் حَمِيْدٌ‏பெரும் புகழாளன்
2:267. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்; அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்; ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்.
2:268
2:268 اَلشَّيْطٰنُ يَعِدُكُمُ الْـفَقْرَ وَيَاْمُرُكُمْ بِالْفَحْشَآءِ‌ ۚ وَاللّٰهُ يَعِدُكُمْ مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌۚ  ۙۖ‏
اَلشَّيْطٰنُஷைத்தான் يَعِدُكُمُஉங்களுக்கு அச்சுறுத்துகிறான் الْـفَقْرَவறுமையை وَيَاْمُرُكُمْஇன்னும் உங்களுக்கு ஏவுகிறான் بِالْفَحْشَآءِ‌ ۚமானக்கேடானதை وَاللّٰهُஅல்லாஹ் يَعِدُكُمْஉங்களுக்கு வாக்களிக்கிறான் مَّغْفِرَةًமன்னிப்பை مِّنْهُதன்னிடமிருந்து وَفَضْلًا ؕஇன்னும் அருளை وَاللّٰهُஇன்னும் அல்லாஹ் وَاسِعٌவிசாலமானவன் عَلِيْمٌۚ ۙۖ‏மிக அறிந்தவன்
2:268. (தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.
2:269
2:269 يُؤْتِى الْحِكْمَةَ مَنْ يَّشَآءُ‌‌ ۚ وَمَنْ يُّؤْتَ الْحِكْمَةَ فَقَدْ اُوْتِىَ خَيْرًا كَثِيْرًا‌ ؕ وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ‏
يُؤْتِىதருகிறான் الْحِكْمَةَஞானத்தை مَنْ يَّشَآءُ‌ ۚஎவர்/நாடுகிறான் وَمَنْஇன்னும் எவர் يُّؤْتَதரப்படுவார் الْحِكْمَةَஞானம் فَقَدْதிட்டமாக اُوْتِىَதரப்பட்டார் خَيْرًا كَثِيْرًا‌ ؕநன்மை/அதிகமான وَمَا يَذَّكَّرُஉபதேசம் பெறமாட்டார் اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ‏தவிர/அறிவாளிகள்
2:269. தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
2:270
2:270 وَمَاۤ اَنْفَقْتُمْ مِّنْ نَّفَقَةٍ اَوْ نَذَرْتُمْ مِّنْ نَّذْرٍ فَاِنَّ اللّٰهَ يَعْلَمُهٗ ؕ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ‏
وَمَاۤ اَنْفَقْتُمْநீங்கள் எதை தர்மம் புரிந்தாலும் مِّنْ نَّفَقَةٍதர்மத்தில் اَوْஅல்லது نَذَرْتُمْநேர்ந்து கொண்டீர்கள் مِّنْ نَّذْرٍநேர்ச்சையில் فَاِنَّநிச்சயமாக اللّٰهَஅல்லாஹ் يَعْلَمُهٗ ؕஅதை நன்கறிவான் وَمَاஇல்லை لِلظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களுக்கு مِنْ اَنْصَارٍ‏உதவியாளர்களில்
2:270. இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர்.
2:271
2:271 اِنْ تُبْدُوا الصَّدَقٰتِ فَنِعِمَّا هِىَ‌ۚ وَاِنْ تُخْفُوْهَا وَ تُؤْتُوْهَا الْفُقَرَآءَ فَهُوَ خَيْرٌ لَّكُمْ‌ؕ وَيُكَفِّرُ عَنْكُمْ مِّنْ سَيِّاٰتِكُمْ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏
اِنْ تُبْدُواநீங்கள் வெளிப்படுத்தினால் الصَّدَقٰتِதர்மங்களை فَنِعِمَّاநன்றே هِىَ‌ۚ وَاِنْ تُخْفُوْهَاஅவை/நீங்கள் அவற்றை மறைத்தால் وَ تُؤْتُوْهَاஇன்னும் அவற்றை நீங்கள் கொடுத்தால் الْفُقَرَآءَஏழைகளுக்கு فَهُوَஅது خَيْرٌசிறந்தது لَّكُمْ‌ؕஉங்களுக்கு وَيُكَفِّرُஅது அகற்றிவிடும் عَنْكُمْஉங்களை விட்டு مِّنْ سَيِّاٰتِكُمْ‌ؕஉங்கள் பாவங்களில் சிலவற்றை وَاللّٰهُஅல்லாஹ் بِمَاஎவற்றை تَعْمَلُوْنَசெய்கிறீர்கள் خَبِيْرٌ‏ஆழ்ந்தறிபவன்
2:271. தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
2:272
2:272 لَيْسَ عَلَيْكَ هُدٰٮهُمْ وَلٰـكِنَّ اللّٰهَ يَهْدِىْ مَنْ يَّشَآءُ‌ ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ فَلِاَنْفُسِكُمْ‌ؕ وَمَا تُنْفِقُوْنَ اِلَّا ابْتِغَآءَ وَجْهِ اللّٰهِ‌ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ يُّوَفَّ اِلَيْكُمْ وَاَنْـتُمْ لَا تُظْلَمُوْنَ‏
لَيْسَஇல்லை عَلَيْكَஉம்மீது هُدٰٮهُمْஅவர்களை நேர்வழி செலுத்துதல் وَلٰـكِنَّஎன்றாலும் اللّٰهَஅல்லாஹ் يَهْدِىْநேர்வழி செலுத்துகிறான் مَنْஎவரை يَّشَآءُ‌ ؕநாடுகிறான் وَمَا تُنْفِقُوْاநீங்கள் எதை தர்மம் புரிந்தாலும் مِنْ خَيْرٍசெல்வத்தில் فَلِاَنْفُسِكُمْ‌ؕஉங்களுக்குத்தான் وَمَا تُنْفِقُوْنَஇன்னும் தர்மம் புரியாதீர்கள் اِلَّاதவிர ابْتِغَآءَநாடியே وَجْهِமுகத்தை اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின் وَمَا تُنْفِقُوْاநீங்கள் எதை தர்மம் புரிந்தாலும் مِنْ خَيْرٍசெல்வத்தில் يُّوَفَّமுழுமையாக நிறைவேற்றப்படும் اِلَيْكُمْஉங்களுக்கு وَاَنْـتُمْநீங்கள் لَا تُظْلَمُوْنَ‏அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்
2:272. (நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல; ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்; இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்; அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்; நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப் -படமாட்டீர்கள்.
2:273
2:273 لِلْفُقَرَآءِ الَّذِيْنَ اُحْصِرُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ لَا يَسْتَطِيْعُوْنَ ضَرْبًا فِى الْاَرْضِ يَحْسَبُهُمُ الْجَاهِلُ اَغْنِيَآءَ مِنَ التَّعَفُّفِ‌ۚ تَعْرِفُهُمْ بِسِيْمٰهُمْ‌ۚ لَا يَسْــٴَــلُوْنَ النَّاسَ اِلْحَــافًا ‌ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ
لِلْفُقَرَآءِஏழைகளுக்கு الَّذِيْنَஎவர்கள் اُحْصِرُوْاதடுக்கப்பட்டார்கள் فِىْ سَبِيْلِபாதையில் اللّٰهِஅல்லாஹ்வின் لَا يَسْتَطِيْعُوْنَஇயலமாட்டார்கள் ضَرْبًاபயணிக்க فِى الْاَرْضِபூமியில் يَحْسَبُهُمُஅவர்களை நினைக்கிறார் الْجَاهِلُஅறியாதவர் اَغْنِيَآءَசெல்வந்தர்களாக مِنَ التَّعَفُّفِ‌ۚஒழுக்கத்தால் تَعْرِفُهُمْநீர் அவர்களை புரியலாம் بِسِيْمٰهُمْ‌ۚஅவர்களின் அடையாளத்தால் لَا یَسْـَٔلُوْنَயாசிக்க மாட்டார்கள் النَّاسَமக்களிடம் اِلْحَــافًا ؕவலியுறுத்திக் கேட்பது وَمَاஎதை تُنْفِقُوْاநீங்கள் தர்மம் புரிந்தாலும் مِنْ خَيْرٍசெல்வத்திலிருந்து فَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ் بِهٖஅதை عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
2:273. பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்.
2:274
2:274 اَلَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ بِالَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَّعَلَانِيَةً فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ‌ۚ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَؔ‏
اَلَّذِيْنَஎவர்கள் يُنْفِقُوْنَதர்மம் புரிகிறார்கள் اَمْوَالَهُمْதங்கள் செல்வங்களை بِالَّيْلِஇரவில் وَالنَّهَارِஇன்னும் பகல் سِرًّاஇரகசியமாக وَّعَلَانِيَةًஇன்னும் வெளிப்படையாக فَلَهُمْஅவர்களுக்கு اَجْرُهُمْஅவர்களின் கூலி عِنْدَஇடம் رَبِّهِمْ‌ۚஅவர்களின் இறைவன் وَلَا خَوْفٌஇன்னும் பயம் இல்லை عَلَيْهِمْஅவர்கள் மீது وَلَا هُمْ يَحْزَنُوْنَؔ‏இன்னும் அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்
2:274. யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
2:275
2:275 اَلَّذِيْنَ يَاْكُلُوْنَ الرِّبٰوا لَا يَقُوْمُوْنَ اِلَّا كَمَا يَقُوْمُ الَّذِىْ يَتَخَبَّطُهُ الشَّيْطٰنُ مِنَ الْمَسِّ‌ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبٰوا‌ ۘ‌ وَاَحَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبٰوا‌ ؕ فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰى فَلَهٗ مَا سَلَفَؕ وَاَمْرُهٗۤ اِلَى اللّٰهِ‌ؕ وَمَنْ عَادَ فَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
اَلَّذِيْنَஎவர்கள் يَاْكُلُوْنَதிண்கிறார்கள் الرِّبٰواவட்டியை لَا يَقُوْمُوْنَஎழமாட்டார்கள் اِلَّاதவிர كَمَاபோன்றே يَقُوْمُஎழுவார் الَّذِىْஎவர் يَتَخَبَّطُهُஅவனைத் தாக்குகிறான் الشَّيْطٰنُஷைத்தான் مِنَ الْمَسِّ‌ؕபைத்தியத்தால் ذٰ لِكَ بِاَنَّهُمْஅதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள் قَالُوْۤاகூறினார்கள் اِنَّمَا الْبَيْعُவியாபாரமெல்லாம் مِثْلُபோன்று الرِّبٰوا ۘ‌வட்டியை وَاَحَلَّஇன்னும் ஆகுமாக்கினான் اللّٰهُஅல்லாஹ் الْبَيْعَவியாபாரத்தை وَحَرَّمَஇன்னும் தடுத்தான் الرِّبٰوا‌ ؕவட்டியை فَمَنْஎனவே எவர் جَآءَهٗஅவரிடம் வந்தது مَوْعِظَةٌஉபதேசம் مِّنْஇருந்து رَّبِّهٖதன் இறைவன் فَانْتَهٰىவிலகினார் فَلَهٗஅவருக்கு مَا سَلَفَؕமுன்சென்றது وَاَمْرُهٗۤஇன்னும் அவருடைய காரியம் اِلَى اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின் பக்கம் وَمَنْஇன்னும் எவர் عَادَதிரும்புவார்(கள்) فَاُولٰٓٮِٕكَஅவர்கள் اَصْحٰبُ النَّارِ‌ۚநரகவாசிகள்தான் هُمْஅவர்கள் فِيْهَاஅதில் خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
2:275. யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
2:276
2:276 يَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَيُرْبِى الصَّدَقٰتِ‌ؕ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِيْمٍ‏
يَمْحَقُஅழிப்பான் اللّٰهُஅல்லாஹ் الرِّبٰواவட்டியை وَيُرْبِىஇன்னும் வளர்ப்பான் الصَّدَقٰتِ‌ؕதர்மங்களை وَاللّٰهُஇன்னும் அல்லாஹ் لَا يُحِبُّவிரும்ப மாட்டான் كُلَّஎல்லோர் كَفَّارٍமகா நிராகரிப்பாளன் اَثِيْمٍ‏பெரும் பாவி
2:276. அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
2:277
2:277 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ‌ۚ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏
اِنَّநிச்சயமாக الَّذِيْنَஎவர்கள் اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள் وَعَمِلُواஇன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِநற்செயல்களை وَاَقَامُواஇன்னும் நிலைநிறுத்தினார்கள் الصَّلٰوةَதொழுகையை وَاٰتَوُاஇன்னும் கொடுத்தார்கள் الزَّكٰوةَஸகாத்தை لَهُمْஅவர்களுக்கு اَجْرُهُمْஅவர்களுடைய கூலி عِنْدَ رَبِّهِمْ‌ۚஅவர்களின் இறைவனிடம் وَلَا خَوْفٌஇன்னும் பயம் இல்லை عَلَيْهِمْஅவர்கள் மீது وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏இன்னும் அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்
2:277. யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
2:278
2:278 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِىَ مِنَ الرِّبٰٓوا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கையாளர்களே اتَّقُواஅஞ்சுங்கள் اللّٰهَஅல்லாஹ்வை وَذَرُوْاஇன்னும் விடுங்கள் مَاஎது بَقِىَமீதமானது مِنَ الرِّبٰٓواவட்டியில் اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
2:278. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.
2:279
2:279 فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَاْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ‌ۚ وَاِنْ تُبْتُمْ فَلَـكُمْ رُءُوْسُ اَمْوَالِكُمْ‌ۚ لَا تَظْلِمُوْنَ وَلَا تُظْلَمُوْنَ‏
فَاِنْ لَّمْ تَفْعَلُوْاநீங்கள் செய்யவில்லையென்றால் فَاْذَنُوْاஅறியுங்கள் بِحَرْبٍபோரை مِّنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்து وَرَسُوْلِهٖ‌ۚஇன்னும் அவனுடைய தூதர் وَاِنْ تُبْتُمْநீங்கள் திருந்தினால் فَلَـكُمْஉங்களுக்கு رُءُوْسُமுதல்கள் اَمْوَالِكُمْ‌ۚஉங்கள்செல்வங்களின் لَا تَظْلِمُوْنَஅநீதி இழைக்க மாட்டீர்கள் وَلَا تُظْلَمُوْنَ‏அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்
2:279. இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள், - நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.
2:280
2:280 وَاِنْ كَانَ ذُوْ عُسْرَةٍ فَنَظِرَةٌ اِلٰى مَيْسَرَةٍ ‌ؕ وَاَنْ تَصَدَّقُوْا خَيْرٌ لَّـكُمْ‌ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏
وَاِنْ كَانَஇருந்தால் ذُوْ عُسْرَةٍவறியவன் فَنَظِرَةٌஅவகாசமளித்தல் اِلٰى مَيْسَرَةٍ ؕவசதி ஏற்படும் வரை وَاَنْ تَصَدَّقُوْاஇன்னும் நீங்கள் தர்மம் செய்வது خَيْرٌமிகச் சிறந்தது لَّـكُمْ‌உங்களுக்கு اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏நீங்கள் அறிந்திருந்தால்
2:280. அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்; இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும்.
2:281
2:281 وَاتَّقُوْا يَوْمًا تُرْجَعُوْنَ فِيْهِ اِلَى اللّٰهِ ثُمَّ تُوَفّٰى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ
وَاتَّقُوْاஇன்னும் அஞ்சுங்கள் يَوْمًاஒரு நாளை تُرْجَعُوْنَமீட்கப்படுவீர்கள் فِيْهِஅதில் اِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கம் ثُمَّபிறகு تُوَفّٰىமுழுமையாக நிறைவேற்றப்படும் كُلُّ نَفْسٍஎல்லா ஆன்மாக்களுக்கும் مَّاஎவற்றை كَسَبَتْசெய்தன وَهُمْஇன்னும் அவர்கள் لَا يُظْلَمُوْنَ‏அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
2:281. தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா.
2:282
2:282 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوْهُ ؕ وَلْيَكْتُبْ بَّيْنَكُمْ كَاتِبٌۢ بِالْعَدْلِ‌ وَلَا يَاْبَ كَاتِبٌ اَنْ يَّكْتُبَ كَمَا عَلَّمَهُ اللّٰهُ‌ فَلْيَكْتُبْ ۚوَلْيُمْلِلِ الَّذِىْ عَلَيْهِ الْحَـقُّ وَلْيَتَّقِ اللّٰهَ رَبَّهٗ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْئًا ؕ فَاِنْ كَانَ الَّذِىْ عَلَيْهِ الْحَـقُّ سَفِيْهًا اَوْ ضَعِيْفًا اَوْ لَا يَسْتَطِيْعُ اَنْ يُّمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهٗ بِالْعَدْلِ‌ؕ وَاسْتَشْهِدُوْا شَهِيْدَيْنِ مِنْ رِّجَالِكُمْ‌ۚ فَاِنْ لَّمْ يَكُوْنَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَّامْرَاَتٰنِ مِمَّنْ تَرْضَوْنَ مِنَ الشُّهَدَآءِ اَنْ تَضِلَّ اِحْدٰٮهُمَا فَتُذَكِّرَ اِحْدٰٮهُمَا الْاُخْرٰى‌ؕ وَ لَا يَاْبَ الشُّهَدَآءُ اِذَا مَا دُعُوْا ؕ وَلَا تَسْــٴَــمُوْۤا اَنْ تَكْتُبُوْهُ صَغِيْرًا اَوْ كَبِيْرًا اِلٰٓى اَجَلِهٖ‌ؕ ذٰ لِكُمْ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ وَاَقْوَمُ لِلشَّهَادَةِ وَاَدْنٰۤى اَلَّا تَرْتَابُوْٓا اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً حَاضِرَةً تُدِيْرُوْنَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَلَّا تَكْتُبُوْهَا ؕ وَاَشْهِدُوْۤا اِذَا تَبَايَعْتُمْ وَلَا يُضَآرَّ كَاتِبٌ وَّلَا شَهِيْدٌ  ؕ وَاِنْ تَفْعَلُوْا فَاِنَّهٗ فُسُوْقٌ ۢ بِكُمْ ؕ وَ اتَّقُوا اللّٰهَ‌ ؕ وَيُعَلِّمُكُمُ اللّٰهُ‌ ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களே اِذَا تَدَايَنْتُمْநீங்கள் வியாபாரம் செய்தால் بِدَيْنٍகடனுக்கு اِلٰٓى اَجَلٍஒரு தவணை வரை مُّسَمًّىகுறிப்பிட்ட فَاكْتُبُوْهُ ؕஅதை எழுதுங்கள் وَلْيَكْتُبْஇன்னும் எழுதவும் بَّيْنَكُمْஉங்களுக்கு மத்தியில் كَاتِبٌۢஎழுதுபவர் بِالْعَدْلِ‌நீதியாக وَلَا يَاْبَமறுக்க வேண்டாம் كَاتِبٌஎழுதுபவர் اَنْ يَّكْتُبَஅவர் எழுத كَمَا عَلَّمَهُஅதை கற்பித்துள்ளதால் اللّٰهُ‌அல்லாஹ் فَلْيَكْتُبْஆகவே அவர் எழுதவும் ۚوَلْيُمْلِلِஇன்னும் வாசகம் கூறவும் الَّذِىْஎவர் عَلَيْهِஅவர் மீது الْحَـقُّகடமை (கடன்) وَلْيَتَّقِஇன்னும் அவர் அஞ்சவும் اللّٰهَஅல்லாஹ்வை رَبَّهٗஅவருடைய இறைவன் وَلَا يَبْخَسْஇன்னும் அவர் குறைக்க வேண்டாம் مِنْهُஅதிலிருந்து شَیْـًٔا ؕஎதையும் فَاِنْ كَانَஇருந்தால் الَّذِىْஎவர் عَلَيْهِஅவர் மீது الْحَـقُّகடமை (கடன்) سَفِيْهًاஅறிவு முதிர்ச்சியற்றவராக اَوْஅல்லது ضَعِيْفًاபலவீனராக اَوْஅல்லது لَا يَسْتَطِيْعُஇயலமாட்டார் اَنْ يُّمِلَّவாசகம் கூற هُوَஅவர் فَلْيُمْلِلْவாசகம் கூறவும் وَلِيُّهٗஅவருடைய பொறுப்பாளர் بِالْعَدْلِ‌ؕநீதியாக وَاسْتَشْهِدُوْاஇன்னும் சாட்சியாக்கத் தேடுங்கள் شَهِيْدَيْنِஇரண்டு சாட்சிகளை مِنْஇருந்து رِّجَالِكُمْ‌ۚஉங்கள் ஆண்கள் فَاِنْ لَّمْ يَكُوْنَاஅவ்விருவரும் இல்லையென்றால் رَجُلَيْنِஇரண்டு ஆண்களாக فَرَجُلٌஓர் ஆண் وَّامْرَاَتٰنِஇன்னும் இரண்டுபெண்கள் مِمَّنْஎவர்களில் تَرْضَوْنَதிருப்தியடைகிறீர்கள் مِنَ الشُّهَدَآءِசாட்சிகளிலிருந்து اَنْ تَضِلَّமறந்து விடுவாள் اِحْدٰٮهُمَاஅவ்விருவரில் ஒருத்தி فَتُذَكِّرَஎனவே நினைவூட்டுவாள் اِحْدٰٮهُمَاஅவ்விருவரில் ஒருத்தி الْاُخْرٰى‌ؕமற்றொருத்திக்கு وَ لَا يَاْبَஇன்னும் மறுக்கவேண்டாம் الشُّهَدَآءُசாட்சிகள் اِذَا مَا دُعُوْا ؕஅவர்கள் அழைக்கப்படும் போது وَلَا تَسْــٴَــمُوْۤاஇன்னும் சோம்பல்படாதீர்கள் اَنْ تَكْتُبُوْهُஅதை நீங்கள் எழுத صَغِيْرًاசிறியது اَوْஅல்லது كَبِيْرًاபெரியது اِلٰٓىவரை اَجَلِهٖ‌ؕஅதனுடைய தவணை ذٰ لِكُمْஅது اَقْسَطُமிக நீதியானது عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம் وَاَقْوَمُஇன்னும் அதிகம் உறுதியானது لِلشَّهَادَةِசாட்சியத்திற்கு وَاَدْنٰۤىஇன்னும் நெருக்கமானது اَلَّا تَرْتَابُوْٓاநீங்கள் சந்தேகப்படாமலிருக்க اِلَّاۤ اَنْ تَكُوْنَதவிர/இருப்பது تِجَارَةًவியாபாரமாக حَاضِرَةًரொக்கமான تُدِيْرُوْنَهَاஅதை நடத்துகிறீர்கள் بَيْنَكُمْஉங்கள் மத்தியில் فَلَيْسَஇல்லை عَلَيْكُمْஉங்கள் மீது جُنَاحٌகுற்றம் اَلَّا تَكْتُبُوْهَا ؕஅதை நீங்கள் எழுதாமலிருப்பது وَاَشْهِدُوْۤاஇன்னும் சாட்சியை ஏற்படுத்துங்கள் اِذَا تَبَايَعْتُمْநீங்கள் வியாபாரம் செய்தால் وَلَا يُضَآرَّஇன்னும் துன்புறுத்தப்பட மாட்டார் كَاتِبٌஎழுதுபவர் وَّلَا شَهِيْدٌ  ؕஇன்னும் சாட்சி وَاِنْ تَفْعَلُوْاநீங்கள் செய்தால் فَاِنَّهٗநிச்சயமாக அது فُسُوْقٌ ۢபெரும் பாவம் بِكُمْ ؕஉங்களுக்கு وَ اتَّقُواஇன்னும் அஞ்சுங்கள் اللّٰهَ‌ ؕஅல்லாஹ்வை وَيُعَلِّمُكُمُஉங்களுக்குக் கற்பிப்பான் اللّٰهُ‌ ؕஅல்லாஹ் وَاللّٰهُஇன்னும் அல்லாஹ் بِكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும் عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
2:282. ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.
2:283
2:283 وَاِنْ كُنْتُمْ عَلٰى سَفَرٍ وَّلَمْ تَجِدُوْا كَاتِبًا فَرِهٰنٌ مَّقْبُوْضَةٌ ‌ ؕ فَاِنْ اَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِى اؤْتُمِنَ اَمَانَـتَهٗ وَلْيَتَّقِ اللّٰهَ رَبَّهٗ‌ؕ وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ ‌ ؕ وَمَنْ يَّكْتُمْهَا فَاِنَّهٗۤ اٰثِمٌ قَلْبُهٗ‌ؕ وَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ
وَاِنْ كُنْتُمْஇன்னும் நீங்கள்இருந்தால் عَلٰى سَفَرٍபயணத்தில் وَّلَمْ تَجِدُوْاஇன்னும் நீங்கள்பெறவில்லை كَاتِبًاஓர் எழுதுபவரை فَرِهٰنٌஅடமானங்கள் مَّقْبُوْضَةٌ  ؕகைப்பற்றப்பட்டது فَاِنْ اَمِنَநம்பினால் بَعْضُكُمْஉங்களில் சிலர் بَعْضًاசிலரை فَلْيُؤَدِّநிறைவேற்றவும் الَّذِىஎவர் اؤْتُمِنَநம்பப்பட்டார் اَمَانَـتَهٗஅவருடைய நம்பிக்கையை وَلْيَتَّقِஇன்னும் அவர் அஞ்சவும் اللّٰهَஅல்லாஹ்வை رَبَّهٗ‌ؕஅவருடையஇறைவன் وَلَا تَكْتُمُواஇன்னும் மறைக்காதீர்கள் الشَّهَادَةَ  ؕசாட்சியத்தை وَمَنْஇன்னும் யார் يَّكْتُمْهَاஅதை மறைப்பார் فَاِنَّهٗۤநிச்சயமாக அவர் اٰثِمٌபாவியாகிவிடும் قَلْبُهٗ‌ؕஅவனுடைய உள்ளம் وَ اللّٰهُஅல்லாஹ் بِمَاஎதை تَعْمَلُوْنَசெய்கிறீர்கள் عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
2:283. இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்பட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்; அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்.
2:284
2:284 لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ وَاِنْ تُبْدُوْا مَا فِىْۤ اَنْفُسِكُمْ اَوْ تُخْفُوْهُ يُحَاسِبْكُمْ بِهِ اللّٰهُ‌ؕ فَيَـغْفِرُ لِمَنْ يَّشَآءُ وَيُعَذِّبُ مَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
لِلّٰهِஅல்லாஹ்வுக்கே مَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவை وَمَا فِى الْاَرْضِ‌ؕஇன்னும் பூமியில்உள்ளவை وَاِنْ تُبْدُوْاஇன்னும் நீங்கள் வெளிப்படுத்தினால் مَا فِىْۤ اَنْفُسِكُمْஉங்கள் உள்ளங்களில் உள்ளதை اَوْ تُخْفُوْهُஅல்லது அதை நீங்கள் மறைத்தால் يُحَاسِبْكُمْஉங்களுக்கு கூலி கொடுப்பான் بِهِஅதற்காக اللّٰهُ‌ؕஅல்லாஹ் فَيَـغْفِرُஆகவே மன்னிப்பான் لِمَنْஎவருக்கு يَّشَآءُநாடுகிறான் وَيُعَذِّبُஇன்னும் வேதனை செய்வான் مَنْஎவரை يَّشَآءُ‌ ؕநாடுகிறான் وَاللّٰهُஅல்லாஹ் عَلٰىமீது كُلِّ شَىْءٍஎல்லாப் பொருள் قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
2:284. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.
2:285
2:285 اٰمَنَ الرَّسُوْلُ بِمَاۤ اُنْزِلَ اِلَيْهِ مِنْ رَّبِّهٖ وَ الْمُؤْمِنُوْنَ‌ؕ كُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْ رُّسُلِهٖ‌ وَقَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا‌ غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ‏
اٰمَنَநம்பிக்கை கொண்டார் الرَّسُوْلُதூதர் بِمَاۤ اُنْزِلَஇறக்கப்பட்டதை اِلَيْهِதமக்கு مِنْஇருந்து رَّبِّهٖதமது இறைவன் وَ الْمُؤْمِنُوْنَ‌ؕஇன்னும் நம்பிக்கையாளர்கள் كُلٌّஎல்லோரும் اٰمَنَநம்பிக்கை கொண்டார் بِاللّٰهِஅல்லாஹ்வை وَمَلٰٓٮِٕكَتِهٖஇன்னும் அவனுடைய வானவர்கள் وَكُتُبِهٖஇன்னும் அவனுடைய வேதங்கள் وَرُسُلِهٖஇன்னும் அவனுடைய தூதர்கள் لَا نُفَرِّقُபிரிவினை காட்டமாட்டோம் بَيْنَ اَحَدٍஎவருக்கு மத்தியிலும் مِّنْஇருந்து رُّسُلِهٖ‌அவனுடையதூதர்கள் وَقَالُوْاஇன்னும் கூறினார்கள் سَمِعْنَاசெவியுற்றோம் وَاَطَعْنَا‌இன்னும் கட்டுப்பட்டோம் غُفْرَانَكَஉன் மன்னிப்பை رَبَّنَاஎங்கள் இறைவா وَاِلَيْكَஇன்னும் உன் பக்கமே الْمَصِيْرُ‏மீளுமிடம்
2:285. (இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.
2:286
2:286 لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا ‌ؕ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ‌ؕ رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ اِنْ نَّسِيْنَاۤ اَوْ اَخْطَاْنَا ‌ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَاۤ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا ‌‌ۚرَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ‌ ۚ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا اَنْتَ مَوْلٰٮنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ
لَا يُكَلِّفُசிரமப்படுத்தமாட்டான் اللّٰهُஅல்லாஹ் نَفْسًاஓர் ஆன்மாவை اِلَّاதவிர وُسْعَهَا ؕஅதன் வசதி/சக்தி لَهَاஅதற்கு مَا كَسَبَتْஅது செய்தது وَعَلَيْهَاஇன்னும் அதன் மீது مَا اكْتَسَبَتْ‌ؕஅது செய்தது رَبَّنَاஎங்கள் இறைவா لَا تُؤَاخِذْنَاۤஎங்களைத் தண்டிக்காதே اِنْ نَّسِيْنَاۤநாங்கள் மறந்தால் اَوْஅல்லது اَخْطَاْنَا ۚநாங்கள் தவறிழைத்தால் رَبَّنَاஎங்கள் இறைவா وَلَا تَحْمِلْஇன்னும் சுமத்தாதே عَلَيْنَاۤஎங்கள் மீது اِصْرًاகடினமான சுமையை كَمَاபோன்று حَمَلْتَهٗஅதைச் சுமத்தினாய் عَلَىமீது الَّذِيْنَஎவர்கள் مِنْ قَبْلِنَاஎங்களுக்கு முன்  ۚرَبَّنَاஎங்கள் இறைவா وَلَا تُحَمِّلْنَاஇன்னும் எங்களை சுமக்க வைக்காதே مَاஎது لَا طَاقَةَஅறவே ஆற்றல் இல்லை لَنَاஎங்களுக்கு بِهٖ‌ ۚஅதற்கு وَاعْفُஇன்னும் (பிழைகளை) அழித்தருள் عَنَّاஎங்களை விட்டு وَاغْفِرْஇன்னும் மன்னித்தருள் لَنَاஎங்களுக்கு وَارْحَمْنَاஇன்னும் எங்களுக்கு கருணைபுரி اَنْتَநீ مَوْلٰٮنَاஎங்கள் தலைவன் فَانْصُرْنَاஆகவே நீஎங்களுக்கு உதவு عَلَى الْقَوْمِகூட்டத்திற்கு எதிராக الْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்கள்
2:286. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”