ஊழி தோறூழி - சொல்லாய்வு

ஊழி
(பெ) 1. நெடுங்காலம், 
2. வாழ்நாள், 
3. யுகம், 
4. விதி 
 
ūḻi n. ஊழ்²-. 
1. Time of universaldeluge and destruction of all things, end of theworld; பிரளயத்தால் உலகம் முடியுங் காலம் (சீவக.1157.) 
2. Aeon; யுகம் பண்டை யூழியிற் பார்மலிவுற்றதே (சீவக. 2581). 
3. Very long time; நெடுங்காலம் ஊழிவாழ்கென்று (பு. வெ 8, 7). 
4. Life-time; வாழ்நாள் அன்ன வாக நின்னூழி (புறநா. 135). 
5. [M. ūḻi.] World; உலகம் ஊழியேழான வொருவா போற்றி (தேவா. 1160, 8). 
6. Fate; விதி நல்லூழிச் செல்வம்போல் (கலித். 130). 
7. Regularorder; முறைமை தீந்தேனூழி வாய்க்கொண்ட தொக்கும் பாடலும் (சீவக. 2974). 
 
 1. s. a long period of time, eternity, நெடுங்காலம்; 
2. the end of the world, யுகமுடிவு; 
3. a demon, பிசாசம்; 
4. world, உலகம்; 
5. fate, விதி. 
 
1. நீடூழி வாழ்க, may you live long.
2. உனக்கூழிவர, may you die of a pestilence.
3. ஊழிக்காய்ச்சல், ஊழிநோய், pestilence, an epidemic supposed to be produced by a malignant demon. 
 
1. ஊழிக்காற்று, ஊழிக்கால், a destructive wind that prevails at the end of the world; 
2. a demon that causes pestilence. ஊழித்தீ, submarine fire, வடவை.


1. s. The periodical termination of a great age, or the time of the univer sal deluge and destruction of all things, the end of the world, உகமுடிவு. 
2. A very long time, நெடுங்காலம். 
3. (p.) Life time, உறைகாலம். 
4. The earth, பூமி. ஊழிபெயரினுங்கலங்காருரவோர். Though the world should come to an end, the sages will not deviate from their purposes.  

 

1. ஊழியுள்ளளவும். Through all eternity, lit. to the end of an age.  
உனக்கூழிவர. may you die--an impre cation.  
2. நீடுழிவாழ்க. May you live long.
3. ஊழிகாலம், s. A very long time, ages without number, நெடுங்காலம். (சத. 2.)
4. ஊழிக்காய்ச்சல், s. An epidemic fever, or pestilence supposed to be produced by a malignant demon, தொத்து சுரம்.
5. ஊழிக்காற்று, s. A destructive wind that prevails at the end of the world, யுகமுடிவிலுண்டாகுங்காற்று. 
6. A de mon, or bad vapor that causes epidemic diseases, pestilence, &c., விஷக்காற்று.  
7. ஊழித்தீ, s. The deluge, or sub marine fire, usually described as a mare dwelling in the sea and breath ing fire, by which, at the end of every quadruple age, the fire is consumed, வட வைத்தீ. 
8. ஊழிநீர், s. The water which pre vails at the last deluge, described as rain poured down from the seven species of clouds united, also as the water of the circumfluent sea, உலகமுடிவிலுண்டாகுஞ்ச லப்பிரளயம்.
9. ஊழிநோய், s. A pestilence in duced by a malignant demon, தொத்து வியாதி.
10. ஊழியூழிகாலம், s. From age to age, eternity

 

ஊழி தோறூழி - இவ்வாறு சில பொழிப்புரைகள் கொடுக்கப்பட்டுள்ளது - சரியா பிழையா?  

பாடல் #1458: ஐந்தாம் தந்திரம் – 7. யோகம் (இறைவனை அடைவதற்கு அசையாத மனதுடன் செய்வதே யோகம் ஆகும்

ஊழி தோறூழி யுணர்ந்தவர்க் கல்லது
யூழி தோறூழி யுணரவுந் தானொட்டா
ராழி யமரு மரியய னென்றுளோ
ரூழி முயன்று மோருச்சியுள் ளானே. 
 
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஊழி தொறூழி யுணரநதவரக கலலது
யூழி தொறூழி யுணரவுந தானொடடா
ராழி யமரு மரியய னெனறுளொ
ரூழி முயனறு மொருசசியுள ளானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஊழி தோறும் ஊழி உணர்ந்தவர்க்கு அல்லது
ஊழி தோறும் ஊழி உணரவும் தான் ஒட்டார்
ஆழி அமரும் அரி அயன் என்று உளோர்
ஊழி முயன்றும் ஓர் உச்சி உள்ளானே.

பதப்பொருள்
ஊழி (ஊழிக்காலம்) தோறும் (ஒவ்வொன்றிலும்) ஊழி (ஊழியாக இருந்து அனைத்தையும் அழித்து மீண்டும் உருவாக்குகின்ற இறைவனை) உணர்ந்தவர்க்கு (யோகத்தின் வழியால் சென்று தமக்குள் உணர்ந்தவர்களை) அல்லது (தவிர வேறு யாராலும் உணர இயலாது) ஊழி (ஊழிக்காலம்) தோறும் (ஒவ்வொன்றிலும்) ஊழி (ஊழியாக இருந்து அனைத்தையும் அழித்து மீண்டும் உருவாக்குகின்ற இறைவனை) உணரவும் (தமக்குள் உணர்ந்து கொண்ட யோகியர்கள்) தான் (அந்த ஊழிக்காலத்தோடு தானும்) ஒட்டார் (ஒட்டாமல் விலகி இறைவனை மட்டுமே சார்ந்து இருப்பார்கள்) ஆழி (பாற் கடலில்) அமரும் (பள்ளி கொண்டு அமர்ந்து இருக்கும்) அரி (திருமால்) அயன் (அவரது தொப்புள் கொடியில் இருக்கும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மன்) என்று (என்று இருக்கின்ற) உளோர் (தெய்வங்களும் ஊழிக்காலத்தோடு ஒட்டாமல் இருக்கின்றார்கள்) ஊழி (ஊழிக்காலம்) முயன்றும் (எவ்வளவுதான் இவர்களை அழிக்க முயற்சி செய்தாலும்) ஓர் (அதனால் அழிக்க முடியாத ஒரு மாபெரும்) உச்சி (உயரத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கின்ற அரனாக) உள்ளானே (இறைவன் இருக்கின்றான்).

விளக்கம்: ஊழிக்காலம் ஒவ்வொன்றிலும் ஊழியாக இருந்து அனைத்தையும் அழித்து மீண்டும் உருவாக்குகின்ற இறைவனை யோகத்தின் வழியால் சென்று தமக்குள் உணர்ந்தவர்களை தவிர வேறு யாராலும் உணர இயலாது. ஊழிக்காலம் ஒவ்வொன்றிலும் ஊழியாக இருந்து அனைத்தையும் அழித்து மீண்டும் உருவாக்குகின்ற இறைவனை தமக்குள் உணர்ந்து கொண்ட யோகியர்கள் அந்த ஊழிக்காலத்தோடு தானும் ஒட்டாமல் விலகி இறைவனை மட்டுமே சார்ந்து இருப்பார்கள். பாற் கடலில் பள்ளி கொண்டு அமர்ந்து இருக்கும் திருமால் அவரது தொப்புள் கொடியில் இருக்கும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மன் என்று இருக்கின்ற தெய்வங்களும் ஊழிக்காலத்தோடு ஒட்டாமல் இருக்கின்றார்கள். ஊழிக்காலம் எவ்வளவுதான் இவர்களை அழிக்க முயற்சி செய்தாலும் அதனால் அழிக்க முடியாத ஒரு மாபெரும் உயரத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கின்ற அரனாக இறைவன் இருக்கின்றான்.

கருத்து: பாடல் #1457 இல் உள்ளபடி யோகம் செய்து தமக்குள் இறைவனை உணர்ந்து அவனை மட்டுமே சார்ந்து இருக்கின்றவர்களை ஊழிக்காலம் எவ்வளவு முயன்று பார்த்தாலும் அழிக்க முடியாத அளவு பாதுகாக்கின்றான் இறைவன். 
 
ஒன்றா வுலகனைத்து மானார் தாமே
ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே
நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே
நீர்வளிதீ யாகாச மானார் தாமே
கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே
கோலப் பழனை உடையார் தாமே
சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே 
 
பொருள்: தாமே கலந்து உலகங்கள் யாவும் ஆனவரும், ஊழிகள் தோறும் பல உயிர்களை வீடேற்றி உயர்ந்தவரும், ஒருநிலையே நின்று எல்லா இடங்கட்கும் உரியவராய்ப் பரந்தவரும், நீரும் வளியும் தீயும் ஆகாசமுமாகி நின்றவரும், கொன்று திரிகின்ற கூற்றுவனை உதைத்தவரும், அழகிய பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், தேடிச்சென்று மூழ்கும் தீர்த்தங்கள் ஆனவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக