தெய்வம் சுட்டும் பெயர்கள் - சொல்லாய்வு

மனிதன் கண்களால் கண்டறிய முடியாத பொருட்களின் வார்த்தைகளின் வரையறைக்கும் நாம் சார்ந்தது இருக்க வேண்டியது  மறைநூல்களாகும். மறைநூல்கள் இல்லையென்றால் அது தொடர்பான சொல்லே நமக்கு கிடைத்து இருக்காது. எனவே வார்த்தையை அதிலிருந்து எடுத்துக் கொண்டு வரையறையை கற்பனை செய்ய முடியாது. 

 தெய்வம் 

தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென அறியும் அந்தந் தமக்கிலவே
உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும். - (தொல்காப்பியம்)

கருத்து: தெய்வம் - பாலினமற்றது ஆனால் உயர்திணை 

எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றிரண்டு பேதமோ
உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே. - (சிவவாக்கியம்-224)

கருத்து: தெய்வம் ஒன்றே ஒன்று தான், பன்மையில் இல்லை 

தன்னில் பிறிதில்லை தெய்வம் நெறி நிற்பில்
ஒன்றானும் தான்நெறி நில்லானேல் - தன்னை
இறைவனாச் செய்வானும் தானேதான் தன்னைச்
சிறுவனாச் செய்வானும் தான். - அறநெறிச்சாரம் 77

விளக்கவுரை ஒருவன் நல்ல நெறியில் நிற்பானாயின் அவனை விட வேறான வேறு ஒரு தெய்வம் இல்லை. அவன் அவ்வித நெறியில் நில்லாது போனால் அவனின் தாழ்ந்தது வேறு ஒன்றும் இல்லை. தன்னைப் பிறர்க்குத் தலைவனாகச் செய்து கொள்பவனும் அவனே ஆவான். தன்னை மற்றவர்க்குத் தாழ்ந்தவனாகச் செய்துகொள்பவனும் தானே ஆவான்

கருத்து: தெய்வம் ஒருவனே, அவன் தன்னை மக்களில் சிலரை தலைவனாக ஏற்க செய்கிறான், மற்றும் சிலரை அவனை பொருட்படுத்தாத அளவுக்கு சிறுவனாகவும் தானே காட்டிக் கொள்கிறான்.    

இறை

தெய்வம் கண்ணுக்குத் தெரியாத இறைவன் - திருக்குறள் 5, 10

தன்னில் பிறிதில்லை தெய்வம் நெறி நிற்பில்
ஒன்றானும் தான்நெறி நில்லானேல் - தன்னை
இறைவனாச் செய்வானும் தானேதான் தன்னைச்
சிறுவனாச் செய்வானும் தான். - அறநெறிச்சாரம் 77

விளக்கவுரை ஒருவன் நல்ல நெறியில் நிற்பானாயின் அவனை விட வேறான வேறு ஒரு தெய்வம் இல்லை. அவன் அவ்வித நெறியில் நில்லாது போனால் அவனின் தாழ்ந்தது வேறு ஒன்றும் இல்லை. தன்னைப் பிறர்க்குத் தலைவனாகச் செய்து கொள்பவனும் அவனே ஆவான். தன்னை மற்றவர்க்குத் தாழ்ந்தவனாகச் செய்துகொள்பவனும் தானே ஆவான் 

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - (குறள் 5)

பொருள்இருள் சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். (குறள் 10)

பொருள்: இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

அரசன் கண்ணுக்குத் தெரியும் இறைவன் - திருக்குறள் அதிகாரம் 39, 432, 436, 564, 778

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும் - (குறள் 388)

பொருள்: நீதிமுறை செய்து குடிமக்களைக்‌ காப்பாற்றும்‌ மன்னவன்‌, மக்களுக்குத்‌ தலைவன்‌ என்று தனியே கருதி மதிக்கப்படுவான்‌.

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு - (குறள் 432)

பொருள்: பொருள்‌ கொடாத தன்மையும்‌, மாட்சியில்லாத மானமும்‌, தகுதியற்ற மகிழ்ச்சியும்‌ தலைவனாக இருப்பவனுக்குக்‌ குற்றங்களாகும்‌.

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு - 436

பொருள்: முன்னே தன்‌ குற்றத்தைக்‌ கண்டு நீக்கிப்‌ பிறகு பிறருடைய குற்றத்தை ஆராயவல்லவனானால்‌ தலைவனுக்கு என்ன குற்றமாகும்‌?

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும் - 564

பொருள்: நம்‌ அரசன்‌ கடுமையானவன்‌ என்று குடிகளால்‌ கூறப்படும்‌ கொடுஞ்‌ சொல்லை உடைய வேந்தன்‌, தன்‌ ஆயுள்‌ குறைந்து விரைவில்‌ கெடுவான்‌

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர். - குறள் 778

பொருள்: போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.

கருத்து: தெய்வம் ஒருவனே, ஆனால் இறைவன் (அரசன்/தலைவன்) ஒருவன் அல்ல என்பது இந்த பாடல் மூலம் புலப்படுகிறது. தெய்வத்தை இறைவனாக வைக்க முடியும், ஆனால் இறைவனெல்லாம் தெய்வமாக முடியாது

மேலும் இறை என்பதற்கு பல்வேறு பொருள் உள்ளது, 

 அரசனாகிய இறைவனுக்கு நாம் தரும் வரி இறை எனப்படும். அவன் அதனை நமக்கு இறைப்பதனாலும் அதற்குப் பெயர் இறை: இறைவற்கு இறை ஒருங்கு ஈவது நாடு - திருக்குறள் 733

இறை என்னும் சொல் தோளைக் குறிக்கும். நமக்குத் தோள் கொடுப்பவனை இறைவன் என்கிறோம்: இறை இறவா நின்ற வளை - திருக்குறள் 1157

  • காப்பாற்றுதல் : இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறை காக்கும் முட்டாச் செயின் 547
  • முறைசெய்து காப்பாற்றுதல் : இறையென்று வைக்கப் படும் - குறள் 388
  • குற்றத்துக்குத் தண்டனை வழங்குதல் : ஓர்ந்து கண்ணோடாது யார்மாட்டும் இறை புரிந்து - திருக்குறள் 541

போன்ற செயல்களைப் புரிந்து தலைவனாக விளங்கிவதால் கடவுளும், அரசனும் இறைவன் எனப் போற்றப்படுகின்றனர்.

இறைவனைத் தலை தாழ்த்தி வணங்குகிறோம். இப்படித் தலை தாழ்த்துவதை இறைஞ்சுதல் என்கிறோம். (இறை – இறைஞ்சு) -  நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் - திருக்குறள் 1093

கடவுள்  

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன முன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. (தொல். புறத்திணைவியல்: 85)
      • வழிபடும் கடவுளின் ஏற்றம் கூறுவது கொடிநிலை
      • பெரும்பொருள் என்பது கந்தழி-யின் பொருள் 
      • வள்ளண்மையைக் கூறுவது வள்ளி
(பொருள்) கொடிநிலை கந்தழி வள்ளி முதலியனவற்றில் குற்றம் நீங்கி சிறப்பாக கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும்.

ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை! - 




சாமி 


ஆண்டவர் 


கர்த்தர் 


தேவன் 


புத்தகம் - சொல்லாய்வு

பொத்தகம் - புத்தகம் - புஸ்தகம் 

பலவின் இயைந்தவும் ஒன்றெனப் படுமே
அடிசில் பொத்தகம் சேனை அமைந்த
கதவம் மாலை கம்பலம் அனைய (அகத்தியம் 259)

நூற்பா விளக்கம் சமைத்த உணவிலும், எழுதிய ஓலைகளைப் பொத்தல் போட்டுக் கட்டிய சுவடியிலும், பலர் சேர்ந்திருக்கும் படையிலும், தாழ்ப்பாள் முதலானவற்றுடன் கூடிய கதவிலும், மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையிலும், மயிர்நூலால் நெய்யப்பட்ட கம்பலத்திலும் பல பொருள்கள் இயைந்திருந்தாலும் அவை ஒன்று எனவே கொள்ளப்படும்.

கொன்றை வேந்தன் - ஔவையார்

கடவுள் வாழ்த்து

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

நூல்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
8. ஏவா மக்கள் மூவா மருந்து
9. ஐயம் புகினும் செய்வன செய்
10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
14. கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை
15. காவல் தானே பாவையர்க்கு அழகு
16. கிட்டாதாயின் வெட்டென மற
17. கீழோர் ஆயினும் தாழ உரை
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
22. கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை
26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை
27. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு
28. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
31. சூதும் வாதும் வேதனை செய்யும்
32. செய்தவம் மறந்தால் கைத்தவம் ஆளும்
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்
37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
39. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு
40. தீராக் கோபம் போராய் முடியும்
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்
43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு
46. தொழுது ஊண் சுவையின் உழுது ஊண் இனிது
47. தோழனோடும் ஏழைமை பேசேல்
48. நல் இணக்கம் அல்லது அல்லல் படுத்தும்
49. நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை
51. நீர் அகம் பொருந்திய ஊர் அகத்திரு
52. நுண்ணிய கருமமும் எண்ணித்துணி
53. நூல் முறை தெரிந்து சீலத்து ஒழுகு
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை
55. நேரா நோன்பு சீர் ஆகாது
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்
58. நோன்பு என்பது கொன்று தின்னாமை
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்
62. பீரம் பேணில் பாரம் தாங்கும்
63. புலையும் கொலையும் களவும் தவிர்
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்
65. பெற்றோர்க்கு இல்லை செற்றமும் சினமும்
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்
67. பையச் சென்றால் வையம் தாங்கும்
68. பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர்
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
71. மாரி அல்லது காரியம் இல்லை
72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு
77. மேழிச் செல்வம் கோழை படாது
78. மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்
80. மோனம் என்பது ஞான வரம்பு
81. வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண்
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்
83. விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்
84. வீரன் கேண்மை கூர் அம்பாகும்
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை
88. வேந்தன் சீரின் ஆம் துணை இல்லை
89. வைகல் தோறும் தெய்வம் தொழு
90. ஒத்த இடத்து நித்திரை கொள்
91. ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்